ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
வடபோர்முனை, வாகரை களமுனைப்பகுதிகளில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதலில் நான்கு போராளிகள் களப்பலியாகியுள்ளார்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடபோர்முனை கிளாலி களமுனையில் சிறீலங்கா படைகளுடன் நிகழ்ந்த மோதலில் அம்பாவை மாவட்டத்தை சேர்ந்த லெப்ரினட் கீதவாணன் என்றழைக்கப்படும் குவேந்திரராசா தயானந்தன், யாழ்மாவட்டத்தை சேர்ந்த வீரவேங்கை அருளன் என்றழைக்கப்படும் டேவிட் பிரேம்குமார் ஆகியோர் வீரச்சாவடைந்துள்ளனர். அதேநாளன்று முகமாலை களமுனையில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்றமோதலில், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த வீரவேங்கை கானகன் அல்லது அறிவுமதி என்றழைக்கப்படும் பாலகிருஷ்ணன் நவரதன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வாகரை களமுனையில் சிறீலங்கா படைகளுடன…
-
- 2 replies
- 1.3k views
-
-
கோர விபத்து; ஐவர் படுகாயம் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து காரணமாக ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற கனரக வாகனமும், கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி வந்த வேன்னொன்றும் புளியங்குளம், இராமனூர் பகுதியில் வைத்து மோதிய குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த இரு வாகனங்களின் சாரதி உட்பட ஐந்து பேரும் வவுனியா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். http:/…
-
- 0 replies
- 250 views
-
-
ஹஸ்பர்_ கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் Khaled nasser Sulaiman al ameri (காலீத் நாஸர் சுலைமான் அல் அமீரி ) ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று (13) மாலை திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் கிளையொன்றை நிறுவி ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலீட்டாளர்களுக்குத் தெரியப்படுத்தி புதிய முறை…
-
- 1 reply
- 528 views
-
-
இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதுடன் கவனமும் செலுத்துகிறோம். இலங்கை சமாதானமும் அமைதியும் நிலவுமேயாயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வர் என உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதி தலைவர் பிரபல் பட்டேல் இன்று தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானத்தை நிலை நிறுத்துவதை தவிர வேறு தேர்வு இல்லை. இலங்கையின் அபிவிருத்தி, புணரமைப்பு பணிகள் சமாதானத்தினை உண்டாக்குவதிலேயே தங்கியுள்ளது. முழு இலங்கையில் அண்மைய மோதல்களால் மக்கள் இடம்பெயர்ந்து வீடுகளை,கல்வி மற்றும் போதியளவு சுகாதார வசதியின்றி சிரமப்படுகிறார்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் போதியளவு பாதிப்பில்லாத போதும் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள…
-
- 15 replies
- 2.2k views
-
-
இராணுவ அடக்கு முறைகளின் மத்தியில் சித்திரை புத்தாண்டை கொண்டாடும் மனநிலையில் தமிழ்மக்கள் இல்லையென தமிழத் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது இராணுவ அடக்கு முறைகள் தொடர்வதால் சித்திரை புத்தாண்டை கொண்டாடும் மனநிலையில் தமிழ்மக்கள் இல்லையென தமிழத் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்தது. யுத்தம் முடிவடைந்து சமாதானம் மலாந்து விட்டதென்று அரசாங்கம் கற்பனையில் பிரசாரம் செய்து வருவதாக அறிக்கை குறை கூறுகிறது. இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் இன்னமும் முழுமையாக மீள் குடியமாத்தப்படவில்லையெனவும், மீளக்குடியமர்ந்த மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளதாகவும், இந்த நிலையில் சித்திரைப் பு…
-
- 0 replies
- 825 views
-
-
4000 ற்கும் மேற்பட்ட இலங்கை சட்டத்தரணிகளை உள்ளடக்கியலோயர்ஸ் கலக்டிவ்(lawyers collective) என்ற அமைப்புஎதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவைஆதரிக்கவுள்ளதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் லால்விஜயநாயக்க தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனா கலந்துகொள்ளவுள்ள பிரச்சாரகூட்டங்களில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நிறைவேற்றுஅதிகார ஜனாதிபதி முறையை நீக்க வேண்டியதன்அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றுவார்கள் என அவர்தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் பிரச்சாரங்களின் போதுபழிவாங்கப்படுவோரிற்கு எதிராக இந்த அமைப்பைசேர்ந்தவர்கள் ஆஜாரவர்கள், முன்னாள் பிரதம நீதியரசரின்பதவிநீக்கத்தை எதிர்த்து ஆரம்பித்த பிரச்சாரத்தையே நாங்கள்முன்னெடுக்கிறோம், சட்டத்தின் ஆட்சியையும், நீதித்துறைiயின்சுத…
-
- 0 replies
- 284 views
-
-
அச்சுறுத்தும் கடற்புலிகள்! -விதுரன் முழு அளவிலான போரில் புலிகள் குதிக்காத நிலையில் இன்று முப்படைகளையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் புலிகளுக்குள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வடக்கில் இராணுவத்தினர் புலிகளிடம் பல தோல்விகளைச் சந்தித்துள்ள அதேநேரம், கிழக்கில் புலிகள் வசமுள்ள பெரும்பாலான பகுதிகளை படையினர் கைப்பற்றி வருவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமாயிருந்த போதிலும் கிழக்கில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள படைவலுச் சமநிலையிலான மாற்றங்கள், கிழக்கில் புலிகள் மரபு வழிச் சமரிலிருந்து மீண்டும் கெரில்லாப் பாணியிலான போர் முறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது. கிழக்கில் தற்போது தொடரும் படை நடவடிக்கைக…
-
- 17 replies
- 6k views
-
-
விக்கியே குழப்ப நிலைக்கு காரணம் - சுமந்திரன் (ரி.விரூஷன்) வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைச்சரவை தொடர்பான பிரச்சனைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அப்படியே அமுல்படுத்தினால் தீர்வுகாண முடியும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுமென்றே விளங்கவில்லை என்பது போல பாசாங்கு செய்வது தான் குழப்ப நிலைக்கு காரணம் எனவும் தெரிவித்தார். மேலும் மாகாண சபையில் பேசப்படும் விடயங்கள் தொடர்பாக எவரும் விமர்சிக்கவோ அல்லது விசாரணை செய்யவோ அதிகாரம் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 715 views
-
-
பூநகரி பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு தகுதி இல்லை என்று தான் நினைத்தவர்களை நீக்குவதற்கு உதவித்தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பூநகரி பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 6 பேரையும் கட்சித்தலைமை நீக்கியுள்ளமை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் வேட்பு மனுவில் இடம்பெற்ற பிரச்சனைகள் காரணமாக உடனடியாக தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டியிருந்தது.கடந்த மூன்று வருடங்களாக சபை இயங்கிவந்தது. ஆனால் சில உறுப்பினர்களின் மேல் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் சபையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காததன் காரணமாகவும் …
-
- 0 replies
- 369 views
-
-
எதிர்பார்க்கும் வேகத்தில் புதிய அரசியலமைப்பு வராது (எம்.எம்.மின்ஹாஜ்) தேசிய பிரச்சினை நாம் நினைக்கும் அளவுக்கு பயங்கரமானது அல்ல. நினைக்கும் அளவுக்கும் பூதம் கறுப்பல்ல. அதனை விளங்கிக்கொள்ள வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் "தெரிந்தால் கற்பியுங்கள் தெரியாவிட்டால் கற்றுக்கொள்ளுங்கள்"" என்ற 2017 ஆம் ஆண்டுக்கான வானொலி நிகழ்ச்சியின் சிறப்பு பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவ,மாணவியரை பாராட்டும் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிற…
-
- 0 replies
- 210 views
-
-
ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்கும் பொறுப்பை இலங்கைக்கு மீள நினைவூட்டுகிறது ஐ.நா. மே முதலாம் திகதி கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தையொட்டி, இலங்கையிலுள்ள ஐ.நா. ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய கடப்பாட்டை இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் நினைவுபடுத்தியுள்ளதாக ஐ.நா. நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் நியூயோர்க்கில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இதைத் தெரிவித்துள்ளார். ஐ.நா. அமைப்பின் பணிகள் எவ்வித தடங்கல்களும் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இன்றி தொடர்வதை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா. ஊழியர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது என அவர் தெ…
-
- 0 replies
- 772 views
-
-
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பீடமேறினால், தமிழீழம் மலரும் சாத்தியக்கூறுகளே உள்ளன. அதனால் அரசைப் பாதுகாப்பவே மீண்டும் அதில் இணைகின்றேன் எனத் தான் கட்சி தாவியமைக்கு காரணம் கற்பித்தார் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில. "எமது கொள்கைகளை மறந்து பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஹெல உறுமய கைக்கோர்த்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதில் ஹெல உறுமயவுக்கு உடன்பாடில்லை. கட்சிக் கொள்கையை விட தாய் நாட்டின் ஸ்திரத்தன்மை முக்கியம் என்பதற்காக ஆளும் தரப்புடன் இணைந்து கொண்டேன்" என்றும் அவர் தெரிவித்தார். அண்மையில் அரசிலிருந்து எதிர்க்கட்சியில் இணைந்த உதய கம்மன்ப…
-
- 0 replies
- 364 views
-
-
யாழில் அதிக ஒலி எழுப்ப கூடிய சைலன்சர் பூட்டியவருக்கு 50000 + 23000 = 73000 தண்டம்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… மோட்டார் சைக்கிள் புகைபோக்கியை (சைலன்சரை) அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்து வீதியில் செலுத்திச் சென்ற நபருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் மேலதிக நீதிவான் வி.இராமகமலன் இன்று உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் நகரில் ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமின்றி பயணித்த இருவரை பின் தொடர்ந்த காவற்துறையினர், அவர்களது வீடுவரை சென்று வீதி விதிமீறல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வீதியில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற போது, சாரதி…
-
- 1 reply
- 430 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு! உலகத்தையே அதிர்வுக்குள்ளாக்கிய ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நான்கு வருடங்கள் கடந்துள்ளன. உலக வாழ் கிறிஸ்தவ மக்கள், சமாதானத்தின் இறைவனாம் இயேசு கிறிஸ்த்துவின் உயிர்ப்பை கொண்டாடிக் கொண்டிந்த, இன்று போன்றதொரு தினத்தில் தான் அந்தக் கொடியச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது. 8.45 மணி முதல் 9 மணிவரையான அந்த நேரப்பகுதிக்குள் இலங்கைத் தீவின் 8 இடங்கள் குண்டுச் சத்தங்களினால் அதிர்ந்தன. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கத்தோலிக்க – கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் 269 பேர் க…
-
- 18 replies
- 1k views
-
-
யாழில் சொந்தமாக காணி வாங்கிய பிக்கு – காணிக்குள் விகாரை அமைப்பதற்கு விண்ணப்பம்! யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தனியார் காணி ஒன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் கந்தரோடை பகுதியில் தமிழ் – பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும், அதன் எச்சங்களும் காணப்படுகின்றன. அவை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. தமிழ் – பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான சுமார் 06 பரப்பு காணியினை தென்னிலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் பணம் கொடுத்து வாங்கி…
-
- 38 replies
- 2.7k views
- 1 follower
-
-
மௌபின பத்திரிகையின் நிதி பணிப்பாளர் துசாந்த பசநாயக்க நேற்று மாலை கைது முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு சொந்தமானதாக கருதப்படும் மௌபின பத்திரிகையின் நிதி பணிப்பாளர் துசாந்த பசநாயக்க நேற்று மாலை பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைப்பிரிவனால் கைது செய்யப்பட்டுள்ளார் நேற்று மாலை அவருடைய அலுவலகத்திற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் அவரை கைது செய்துள்ளனர் ஏற்கனவே இந்த பத்திரிகை அலுவலத்திற்கு சென்ற புலனாய்வு பிரிவினரும் வரி திணைக்கள அதிகாரிகளும் தீவிர தேடுதலை மேற்கொண்டதோடு முக்கிய ஆவணங்களை தமமுடன் எடுத்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது கடந்த சனிக்கிழமை தேசிய தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற மகிந்த ராஜபக்சவுடனான நேரடி உரையாடல் நிகழ்ச்சியின்…
-
- 0 replies
- 681 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவின் இணைப்பாளரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இனியபாரதி என்ற நபர் சிறுவர்களை கடத்திச்சென்றதாகவும், பாலியல் வல்லுறவு மற்றும் கொலைச்சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு சிறார்கள் மற்றும் ஆயுதமோதல்கள் தொடர்பான ஐ.நா. பொதுச்செயலாளரின் பிரதிநிதி நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற சிறுவர் கடத்தல் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் சிறார்கள் மற்றும் ஆயுதமோதல்கள் தொடர்பான பிரதிநிதி ராதிகா குமாரசாமி தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ளனர். இந்த அறிக்கை நேற்று ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதி…
-
- 2 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை. 8.30 மணிவரையான கடந்த 24 மணிநேரத்துக்குள், வாகனேரியில் அதிகளவு மழை வீழ்ச்சியாக 145.2 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார். இதன்படி தும்பங்கேணி -104.7 மி.மீ, மட்டக்களப்பு -65.4 மி.மீ, நவகிரி -19.0 மி.மீ, வாகரை -72.2 மி.மீ, உன்னிச்சை -51.0 மி.மீ, றூகம் -64.4 மி.மீ, மயிலம்பாவெளி -59.8 மி.மீ, பாசிக்குடா - 107.3 மி.மீ என மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு நகரம், தாழங்குடா மற்றும் புதுக்குடியிருப்பு மற்றும் கிரான்குளம் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 225 கிராம சேவையாளர் பிரிவுகளில்…
-
- 1 reply
- 304 views
-
-
http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 2.2k views
-
-
எங்கள் இயக்கம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்த சந்தர்ப்பம் அளித்த வேண்டும் என்று ஐ.நா.விடம் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை தாம் வரவேற்பதாகவும், அதே நேரம் தம் மீதுசுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக தமது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்த ஐ.நா சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கை: அன்பான தமிழ் மக்களே, காலங்காலமாகத் தமிழர் தேசத்தின் மீது அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் எம்மினம் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தமிழின அழிப்பின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த …
-
- 1 reply
- 1.1k views
-
-
[வியாழக்கிழமை, 8 மார்ச் 2007, 07:11 ஈழம்] [க.திருக்குமார்] ஊடகத்துறையின் உரிமைகளுக்கான குழுவினால் 'சிறிலங்காவில் ஊடகத்துறையின் நிலை' என்ற அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஊடகத்துறையினருக்கும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெலவிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு நிலமைகள் தொடர்பான வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறிலங்கா காவல்துறை மா அதிபர் விக்டர் பெரெராவினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை சில ஊடகங்கள் தவறாக வெளியிட்டுள்ளதாக ஊடகங்களின் பெயர்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழத் தேசிய அட்டை வழங்கும் நிகழ்வு சிட்னி ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலையில் 22 மே 2011 அன்று சிறப்புற நடைபெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தர்சன் குணசிங்கம் பொதுச் சுடரை ஏற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அவுஸ்திரேலியக் கொடியை மருத்துவர் ராகவன் அவர்களும் தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஸ்கந்தகுமார் அவர்களும் ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மக்கள் தொடர்பாளர் திரு. யோகராசா தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப்பிரதமரும் நிதியமைச்சருமாகிய பேராசிரியர் செல்வநாதன், துணை வெளியுறவு அமைச்சர் மாணிக்கவாசகர், நாடுகடந்த …
-
- 5 replies
- 1.2k views
-
-
அடுத்த கூட்டம் தமிழீழத்தில் என்று இலங் கைத் தமிழரசுக் கட்சியினர் அந்தக் காலத்தில் முற்றவெளியில் கூற, அதற்கு கூடியிருந்தவர் கள் அத்தனை பேரும் ஆர்ப்பரித்துக் கரகோசம் செய்து எங்கள் வாக்கு உங்களுக்கே என்று ரைத்தது மட்டுமன்றி அதனை நிறைவேற்றியும் வைத்தனர். ஆனால் அடுத்த கூட்டம் தமிழீழத்தில் என்று ஓங்கு குரலில் கூறியவர்கள் தங்கள் தேர்தல் விளம்பரம் தமிழ் மக்களிடம் சிறப்பாகச் சென்ற டைந்தது என்றளவில் தங்கள் நலனோடு அரசியலை மட்டுப்படுத்திக் கொண்டனர். இது அன்று நடந்தது என்றால் பேசாமல் விட்டுவிடலாம். ஆனால் இன்றும் அதே தேர் தல் விளம்பரம் தொடர்கிறது. என்ன செய்வது எங்கள் மக்கள் இன்ன மும் உண்மையைக் கண்டறியமுடியாதவர் களாக இருப்பதால், அவர்கள் தங்கள் தேர்தல் விளம்பரத்தை சிறப்பாகச் …
-
- 1 reply
- 565 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள தாயார் – சீ.வீ.கே.சிவஞானம் சமகால நிலைமைகள் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அனைவரும் ஏகமனதாக தன்னை தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினை ஏற்கத் தயாராக இருப்பதாக அந்த கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன் பதவிக்காக கட்சிக்குள் போகவில்லை எனவும் போட்டியில்லாமல் அனைவரினதும் ஒத்துழைப்போடும் இணக்கப்பாட்டோடும் தான் தெரிவு செய்யபட்டால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள தாயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/இலங்கைத்-தமிழரசுக்-கட…
-
- 2 replies
- 210 views
-
-
யாழில் நலன்புரி நிலையங்களில் பதற்றம். யாழ்ப்பாணம் உடுவில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களிடத்தில் பெரும் பதட்டமான நிலமை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடுவில் ஆலடிப் பகுதியில் உள்ள நலன்புரி நிலையத்தில் உள்ள திருமணமாண இளம்குடும்பஸ்தர் ஒருவர் நள்ளிரவு நேரம் வெள்ளை வானில் வந்த இராணுவப் புலனாய்வாளர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவர் இளம் குடும்பஸ்தரான நடனசிகாமணி வசந்தராஐன் வயது 30 என்பவராகும் இதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடுவில் சபாபதிப்பிள்ளை முகாமின் தலைவராக இருந்த மோகன் என்பவர் இராணுவப் புலனாய்வாளர்களினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட…
-
- 0 replies
- 766 views
-