Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று யாழ்ப்­பா­ணத்­திற்கு செல்கிறார் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று யாழ்ப்­பா­ணத்­திற்கு பயணம் செய்­கின்றார் . இன்றும் நாளையும் அங்கு தங்­கி­யி­ருக்கும் பிர­தமர் பல்­வேறு நிகழ்­வு­க­ளிலும் பங்­கேற்­க­வுள்ளார்மேலும் ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளிலும் பிர­தமர் பங்­கேற்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இத­னை­விட ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ்க்­கட்­சி­களின் ஆத­ரவைப் பெறு­வது தொடர்பில் கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.அத்துடன் நாளை யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலைய திறப்பு விழா­விலும் பிர­தமர் பங்­கேற்­க­வுள்ளார். இன்­றைய தினம் வட­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சின் ஏற்­பாட்டில் இடம்…

  2. முல்லைத்தீவு – நீராவியடி விகாரை பகுதியில் கண்காணிப்பு கெமராக்களை பொருத்த பொலிஸார் தடை முல்லைத்தீவு – நீராவியடி குருகந்த ரஜமஹா விகாரையின் பாதுகாப்பு கருதி அந்த விகாரையின் விஹராதிபதி மினிதுபுர ரத்தனதேவ கீர்த்தி தேரர் சி.சி.ரி.வி கண்காணிப்பு கெமராக்களை பொருத்துவதற்கு எடுத்த நடவடிக்கைக்கு பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.விகாரைகளில்கண்காணிப்பு கமராக்களை பொருத்த அனுமதிக்க முடியாது எனவும் அதனால் அதனை அகற்றுமாறும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தாக விகாரையின் தற்காலிக பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் சி.சி.டி.வி கெமராக்களை பொருத்த வெலிஓயாவிலிருந்து இரண்டு பேர் வருவதாக விகாரையின் தலைமை தேரர் தன்னிடம் கூறியதாக குறித்த தற்காலிக பாதுகாவலர் கெலும் பண்டார தெரிவித்துள்ளார். …

  3. யாழில் கிளைமோருடன் 19 வயது இளைஞன் கைது! யாழ்ப்பாணத்தில் கிளைமோர் குண்டு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – இராசாவின் தோட்டம் பகுதியில் வைத்தே நேற்றிரவு(செவ்வாய்கிழமை) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள சந்தே நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. http://athavannews.com/யாழில்-கிளைமோருடன்-19-வயது/

  4. (இரா.செல்வராஜா) தோட்ட நிர்வாககங்களும் இலங்கை தேயிலை சபையும் இணைந்து முதல் முறையாக தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களுக்கு வழமையாக பத்தாயிரம் ரூபாவையே தீபாவளி முற்பணமாக தோட்ட நிர்வாகங்கள் வழங்கி வந்தன. இதுவும் பெரும் போராட்டத்தின் மத்தியிலேயே தொழிலாளர்களுக்கு இப்பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. தோட்ட உட்கட்டமைப்பு , மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேயிலை சபையிடமிருந்து ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க அனுமதி அளிக்கப…

  5. சஜித்தே அனைத்து இனத்­த­வ­ரையும் இலங்­கை­ய­ராக கரு­து­கிறார் ஜனா­தி­பதி தேர்­தலில் முப்பத்­தைந்து வேட்­பா­ளர்கள் இடம் ­பெற்று தேர்தல் ஆணை க்­கு­ழு­வுக்கும், அதன்­மூலம் திறை­சே­ரிக்கும், மேல­திக செலவை ஏற்­ப­டுத்தி இருந்­தாலும், இறுதி சுற்­றுக்கு வரப்­போ­வது இரண்டு பேர்தான். அந்த இரண்டு இறு­திச்­சுற்று வேட்­பா­ளர்­களில் முத­லா­மவர் சஜித் பிரே­ம­தாச ஆவார். அந்த இரண்டு இறு­திச்­சுற்று வேட்­பா­ளர்­களில் சஜித்தே அனைத்து இனத்­த­வ­ரையும் இலங்­கை­ய­ராக கரு­துகிறார் என்­பதை என்னால் உறு­தி­யாக கூற முடியும். இந்­நாட்டின் சிங்­கள மக்­க­ளுடன், தமிழ், முஸ்லிம் மக்­களும் நம்­பிக்­கை­யுடன் இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் கரம் கோர்த்­துக்­கொண்டு, அவ­ருடன் பய­ணிக்க ம…

    • 0 replies
    • 305 views
  6. தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு! தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி) கையொப்பமிட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த ஆவணம் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் முன்வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மற்ற…

    • 6 replies
    • 1.9k views
  7. மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட மயிலவெட்டுவானில் ஆற்று மணல் அகழ்வதுற்கு அனுமதி வழங்கக் கூடாதெனக் கோரி, இன்று (15) கவனயீரப்புப் போராட்டம் நடைபெற்றது. மயிலவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மயிலவெட்டுவான், உப்போடை வீதியில் நடைபெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில், பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர். மயிலவெட்டுவான் வீரக்கட்டு பகுதியில் ஆற்று மணல் அகழ்வதற்கு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் 10 பேர் உட்பட 25 பேருக்கு விசேட அனுமதி நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கியுள்ளமையைக் கண்டித்து, இந்தக் கவனயீர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மணல-அகழவதறக-அனமத-வழஙகக-கடதன-பரடடம…

    • 0 replies
    • 263 views
  8. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது . புதுக்குடியிருப்பு கோம்பாவில் இரண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த விஜயரட்ணம் தனுசன் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தர் கடந்த 07.10.2019 இரவு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று சாப்பாடு வாங்கிவருவதாக மனைவிக்கு சொல்லிவிட்டு சென்ற நிலையில் வீடுதிரும்பவில்லை இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசம் என்பன அருகில் உள்ள ஒழுங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன . தனது கணவர் காணாமல் போனது பற்றி கருத்து தெரிவித்த மனைவி கராத்தே வகுப்புகள…

  9. Tuesday, October 15, 2019 - 8:58am கடந்த அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் போசணைமிக்க பகல் உணவை தாம் ஜனாதிபதியானதும் நாட்டின் சகல பாடசாலைகளிலுமுள்ள மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சீருடை மற்றும் பகலுணவு வழங்கும் திட்டத்தை கடந்த அரசாங்கம் நிறுத்தியதாக குறிப்பிட்ட அவர், அதனை தாம் மீண்டும் வழங்கப் போவதாக தெரிவித்துள்ளார். பலாங்கொடை நகரில் நேற்று (14) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்ட…

    • 0 replies
    • 449 views
  10. ரீ.எல்.ஜவ்பர்கான் / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 04:53 22 வருடங்களாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதியின் பிரதம அமைப்பாளராகச் செயற்பட்ட வாகரை பிரதேச சபை பிரதித் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான டி.எம்.சந்திரபாலன், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார். புதிய ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் இணைந்துள்ளதாக, அவர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மட்டு-கல்குடா-சு-க-அமைப்பாளர்-சஜித்துக்கு-ஆதரவு/73-240043

  11. ரஞ்ஜன் அருண் பிரசாத் Image caption அஜந்தா பெரேரா இலங்கையில் இந்த ஆண்டு (2019) நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில், சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார். அரசியலில் பெண்களின் பிரவேசம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக கடந்த காலங்களில் பெரிதும் பேசப்பட்ட பின்னணியிலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச கட்சி சார்பில் சூழலியலாளர் கலாநிதி அஜந்தா பெரேரா போட்டியிடவுள்ளதாக அந்த கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க…

    • 5 replies
    • 1.1k views
  12. (எம்.எப்.எம்.பஸீர்) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு மாத்திரம் 668.2 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களம் இந்த நிதியை சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரியுள்ளதாகவும் அதில் தற்போதுவரை 368.65 மில்லியன் ரூபாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இவ்வாறு ஆணைக் குழு அனுமதியளித்துள்ள நிதியில், சட்ட விரோத சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற பொலிஸாருக்கு தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள 45.8 மில்லியன் ரூபா நிதியும் உள்ளடங்கியுள்ளது. எவ்வாறாயினும் சட்ட விரோத சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற பொலிஸாருக்கு தேவை…

  13. கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டார் சிறிசேன – சந்திரிகா குற்றச்சாட்டு Oct 15, 2019 | 2:50by கி.தவசீலன் in செய்திகள் தனிப்பட்ட நலன்களுக்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று கட்சியின் முன்னாள் தலைவியான சந்திரிகா குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுக்கு அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “நாட்டின் அதிபர் உள்ளிட்ட சந்தர்ப்பவாத தலைவர்கள், கட்சியின் 95 வீதமான அமைப்பாளர்களின் கருத்துக்களை நிராகரித்து, தனிப்பட்ட இலாபத்துக்காக சதிகாரர்களுடன் ஒரு உடன்பாட்டுக்குச் சென்றுள்ளனர். …

    • 2 replies
    • 519 views
  14. கோத்தா, மகிந்தவுடன் சுமந்திரன் நடத்திய பேச்சு தோல்வி Oct 15, 2019 | 2:39by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுக்கள் தோல்வியில் முடிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கோத்தாபய ராஜபக்சவிடம் கோரப்பட்டிருந்தது. எனினும், இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றிருந்த மகிந்த ராஜபக்ச, இடையில் தலையிட்டு,தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை …

    • 3 replies
    • 415 views
  15. (நா.தனுஜா) ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களை மையப்படுத்தி பொதுமக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திருக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய, வேட்பாளர்களும் நடைமுறைச் சாத்தியமான தேர்தல் விஞ்ஞாபனங்களை முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் திகதி நெருங்கும் நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் நன்கு சிந்தித்துத் தீர்மானிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை மேற்கொண்டிருக்கின்றார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது: 'எதிர்வரும் தேர்தலில் வாக்காளர்கள் வேட்பாளர்களின் தேர்தல் வ…

  16. (நா.தனுஜா) வேறொருவரால் அதிகாரம் செலுத்தப்படக்கூடிய, பிறிதொருவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு செயற்படக்கூடிய கைப்பொம்மை ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்படும் போது என்னைக் கட்டுப்படுத்தக்கூடிய, என்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய வல்லமை அன்றாடம் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடத்துகின்ற சாதாரண மக்களாகிய உங்களுக்கு மாத்திரமே இருக்கின்றது என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரணியகல மக்கள் முன்நிலையில் தெரிவித்தார். நாட்டை ஆட்சி செய்யும் குடும்பத்தின் பிள்ளைகளுக்கு ஒரு சட்டமும், சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கு வேறொரு சட்டமும் இருக்க முடியாது. அவ்வாறானதொரு யுகம் காணப்பட்டது. ஆனால் என்னை ந…

    • 0 replies
    • 261 views
  17. ஐந்து தமிழ்க் கட்சிகள் கையெழுத்திட்ட பொது உடன்பாட்டு ஆவணம் Oct 15, 2019by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள் ஐந்து தமிழ் கட்சிகளால் கையெழுத்திடப்பட்டுள்ள பொது இணக்க ஆவணம்- தமிழ் தேசம், அதன் இறைமை, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, சமஷ்டித் தீர்வு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைத்து, தயாரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களால் ஒழுங்கமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த பொது உடன்பாட்டு ஆவணத்தில் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட் மற்றும் ஈபிஆர்எல்எப் ஆகிய 5 தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நேற்று கையொப்பமிட்டனர். இந்த ஆவ…

  18. யார் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய நீதியை வழங்கப் போவதில்லை. எனவே தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ் மாவட்ட சங்கத் தலைவி சுகந்தினி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்தே போராடி வந்தோம். நாம் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. இந்நிலையில் ஏனைய பகுதிகளிலுள்ள 8 தலைவிகளும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக அதிகாரிகளைச் சந்திக்க கொழும்பிற்கு சென்றார்கள் அதற்கான ஆதாரங்கள் …

    • 0 replies
    • 271 views
  19. யாழில் அண்மைக்காலமாக குழுமோதல்களும் வாள்வெட்டுச் சம்வங்களும் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதனை தடுப்பதற்கோ கட்டுப்படுத்துவதற்கோ முறையான நடவடிக்கைகள் அற்ற நிலையே காணப்படுகின்றது. இதனால் பொது மக்கள் இரவு வேளைகளில் தங்கள் தேவைகளுக்காக வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சாவகச்சேரி, சங்கானை .கொக்குவில் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். அண்மையில் சங்கானை பஸ் நிலையம் முன்பாக இரு குழுக்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. நீண்ட வாள்கள் , பொல்லுகளுடன் இரு குழுக்களிடையே மோதல் சம்வம் நடைபெற்றபோது அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந…

    • 0 replies
    • 242 views
  20. (எம் நியூட்டன்) மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் நாட்­டி­லுள்ள அனைத்துப் பிரச்­சி­னை­க­ளையும் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் தீர்த்து வைப்போம். எங்­களைப் பொறுத்­த­வரை வடக்கு, தெற்கு என்ற பிரி­வினை கிடை­யாது. நாங்கள் எல்­லோரும் இலங்­கையைச் சார்ந்த மக்கள்.அர­சி­ய­லுக்­காக இனங்­களைப் பிரிக்­க­மு­டி­யாது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்தார். ஈழ­மக்கள் ஜன­நாயக் கட்­சியின் ஏற்­பாட்டில் பொது­ஜ­ன ­பெ­ர­மு­னவின் ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சா­ரக்­கூட்டம் யாழ்ப்­பாணம் இலங்கை வேந்தன் கல்­லூரி மண்­ட­பத்தில் நேற்­று­மாலை இடம்­பெற்­ற­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் நாட்­டி­லுள்ள அனைத்த…

    • 0 replies
    • 181 views
  21. எமது நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில், எமது நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது.எமது மேக்கப் போடுகிறார்கள் , செலுனூக்கு செல்கிறார்கள் அதற்காக பணம் செலவிடுகிறார்கள் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. வீதியில் சென்று பாருங்கள் பெண் நவநாகரீக உடை அணிந்து ஹைஹீல் செருப்பு அணிகிறார்கள் என அவர் குறிப்பிட்டார் https://www.madawalaenews.com/2019/10/blog-post_378.html

  22. விலகுகிறார் சிவாஜிலிங்கம் டெலோ கட்சி தொடர்ந்து தன்மீது முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தான் தயாரில்லை என்பதனால் கட்சியிலிருந்து விலகி சுயேட்சை உறுப்பினராக அரசியலில் செயற்பட தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கட்சியின் செயலாளரை சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தான் அரசியலுக்கு பிரவேசித்தது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கே அன்றி பணம் சம்பாதிப்பதற்கு அல்ல என தெர…

  23. கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு ஜனாதிபதி தேர்தலின் பின் 2020 வரை ஒத்திவைப்பு… October 15, 2019 டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழங்கு இன்று (15.10.19) சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகீ ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், இந்த வழக்கின் பிரதிவாதி கோத்தாபய ராஜபக்ஸ சமர்ப்பித்த மனு…

  24. நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் தேரர் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை மீறியமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீ ஸ்கந்தராஜா, இந்த மனுவினை இன்று (14) தாக்கல் செய்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/நரவயட-வவகரம-மனமறயடட-நதமனறல-மன/175-239981

  25. இந்த அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகையும் பெற்றுக் கொடுக்க வில்லை. எனவே மலையக மக்கள் தேவைக்காக மாத்திரம் பயன்படுத்தும் ஊறுகாயோ கறிவேப்பிலையோ அல்ல என அருனலு மக்கள் முன்னணியின் தலைவரும் அரச சேவை ஆணைக்குழுவின் உறுப்பினருமான வைத்தியர் கே.ஆர் கிசான் தெரிவித்தார். நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று பகல் டிக்கோயா அருனலு மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கினை எடுத்துக்கொண்டாலும் சரி மலையகத்தினை எடுத்துக்கொண்டாலும் சரி எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. மாறாக தோட்டங்கள் காடாக மாறியுள்ளன. பல தோட்டங்கள்…

    • 2 replies
    • 476 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.