Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போது நாங்கள் உங்களுடன் நூறு வீதமிருக்கிறோம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார் என கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடான சந்திப்பின் போது வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கடிதமொன்றை சம்பந்தன் மோடியிடம் கையளித்தார். விக்கினேஸ்வரனையும் தன்னைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளார் எனவும் மோடி தெரிவித்தார் என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது புதுடில்லியின் நன்கு அறியப்பட்ட 7 ரேஸ்கோர்ஸ் வீதி என்ற முகவரிக்கு முன்னால் கூட்டமைப்பினர் சென்ற அந்த மூன்று வாகனத் தொடரணியை பாதுகா…

  2. அரச நிர்வாகம் கற்க சீனாவுக்குப் பயணமானார் கோத்தா சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று முன்தினம் அதிகாலையில் சீனாவுக்குப் பயணமாகியுள்ளார். சீனாவின் யுனான் பல்கலைக்கழகத்தில் அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார முகாமைத்துவ கற்கைநெறி ஒன்றைத் தொடர்வதற்காகவே, கோத்தாபய ராஜபக்ச சீனா சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. சீனாவின் பல்கலைக்கழகம் ஒன்றில் மூன்றாண்டு அரசியல் கற்கைநெறி ஒன்றைக் கற்பதற்கு கோத்தாபய ராஜபக்சவுக்கு சீன அரசாங்கம் அழைப்பு விடுத்திருப்பதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், யுனான் பல்கலைக்கழகத்தில் கோத்தாபய ராஜபக்ச தொடரவுள்ள கற்கைநெறி எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற விபரங்கள் வெளியாகவ…

    • 3 replies
    • 702 views
  3. உள்ளூராட்சி சபை தேர்தல் திருத்த சட்டமூலம் குறித்து உள்ளூராட்சி சபை அமைச்சருக்கோ, உள்ளூராட்சி சபை பிரதி அமைச்சருக்கோ எதுவும் தெரியாத போது அதனை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளதுமையானது கேலிக் கூத்தென ஜனநாயக தேசிய முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தல் திருத்த சட்டமூல ஆவணம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இச்சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டால் உள்ளூராட்சி சபைகளில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் உறுப்பினர்களது எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி அடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈழ நாதம்

    • 0 replies
    • 439 views
  4. இலங்கையின் முடிக்குரிய இளவரசனாக தன்னை அறிவிக்குமாறு மனுத் தாக்கல். இலங்ககையின் முடிக்குரிய இளவரசன் என தன்னை அறிவிக்க கோரி மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஒன்றை நேற்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தர்மபால திசாநாயக்க என்ற இந்த பாடசாலை அதிபர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அரசியல் யாப்பு விவகார அமைச்சின் செயலாளர் , புத்தசான அமைச்சின் செயலாளர் மற்றும் அஸ்கிரி-மல்வத்து ,மாநாயக்க தேரர்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார். பழம் பெரும் வரலாற்று ரீதியான சன்னஸ் பத்திரத்திற்கு அமைய தான் இலங்கையின் முடிக்குரிய வம்சத்தை சேர்ந்தவர் எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/ind…

    • 14 replies
    • 3.3k views
  5. சீமான் கோரிக்கை: வைகோ பதில் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், ம.தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார். சுமார் 1 1/2 மணி நேரம் அவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நான் சிறையில் இருந்த போது விடுதலையாக வேண்டும் என்று மனப்பூர்வமாக வைகோ அறிக்கை வெளியிட்டார். அதைப்போல நான் விடுதலை செய்யப்பட்டேன் அவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டவன். வருகிற தேர்தலில் காங்கிரசையும், அதன் கூட்டணி கட்சியையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற லட்சிய வெறியோடு பணியாற்றுவோம். வைகோ தேசிய அரசியலில் பல வருடங்கள் இருந்து விட்டார். மாநில அரசியலுக்கு அவர் வர வேண்டும். எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் செல்ல வேண்டும். அங…

  6. மிதிவெடி பூமி: பளையில் எஜமானைக் காப்பாற்றிய நாய் 11 செப்டம்பர் 2014 மிதிவெடியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தனது எஜமானின் உயிரை சமயோசிதமாகச் செயற்பட்டுக் காப்பாற்றியுள்ளது ஒரு நாய். உடனே எங்கோ வெளிநாட்டில் நடந்த சம்பவம் என்று எண்ணிவிடாதீகள். இந்தச் சம்பவம் பளை, இத்தாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மிதிவெடியில் இத்தாவில் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய சு.செல்வராஜா தனது வளர்ப்பு நாயுடன் கடந்த திங்கட்கிழமை மதியம் முயல் வேட்டைக்குக் கிளம்பியுள்ளார். முன்னால் சென்ற அவரது நாய் முயல் ஒன்றைக் கண்டுவிட்டு, அதனைத் துரத்தத் தொடங்கியது. செல்வராஜாவும் நாயின் பின்னால் ஓடியுள்ளார். முயலைத் துரத்திக் கொண்டு செல்வராஜாவும் அவரது நாயும் வள்ளிமனை தோட்டப் பகுதிக்கு …

  7. சம்பந்தனும், அனுராவும் பதவிகளை இழப்பார்களா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் வரிசையில் அமர்ந்த பின்னர், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சியின் அமைப்பாளர் பதவி என்பன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைக்கும் என தெரியவருகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகின்றனர். மேலும் 16 பேர் அவர்களுடன் இணைவதன் மூலம் இந்த எண்ணிக்கை 70 ஆக அதிகரிக்கும். இதனடிப்படையில், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 96 உறுப்பினர்களில் பெரும்பான்…

  8. அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்றைய பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த விசேட வழிபாட்டிற்கு அங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகள் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைதிகள் இந்த வழிபாட்டிற்காக முன்கூட்டியே சிறைச்சாலைகள் ஆணையாளரிடமிருந்து அனுமதியைப் பெற்றிருந்தார்கள். ஆனால், சிறைச்சாலையிலுள்ள அதிகாரிகள் இந்த வழிபாட்டிற்கு அனுமதி வழங்க முடியாதெனக் கூறி தடை விதித்துள்ளனர். நேற்றைய தினம் கைதிகளின் அறைகளைத் திறக்காது பூட்டிவைத்ததுடன், உறவினர்கள் அவர்களைப் பார்வையிடவும் தடைவிதித்தனர். ஈழ நாதம்

  9. தெற்கிலிருந்து வடக்கிற்கு சென்ற சிங்கள இளைஞர்கள் விரட்டியடிப்பு: தமிழ் மக்கள் கவலை முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் நில விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்கச் சென்ற தென்பகுதி இளைஞர்களை படையினர் விரட்டியடித்துள்ளனர். தென்பகுதியில் இருந்து, கிறிஸ்தவ மதகுரு ஒருவரின் தலைமையில் இரு பஸ் வண்டிகளில் சிங்கள மக்கள் கேப்பாப்புலவில் போராடும் மக்களை சந்திக்கச் சென்றுள்ளனர். எனினும் இதற்கு படையினர் அனுமதி வழங்காததுடன், அவர்களை விரட்டியடித்துள்ளனர் என கேப்பாப்புலவு போராட்டத்திற்கு தலைமை தாங்கும் ஆறுமுகம் வேலாயுத பிள்ளை தெரிவித்துள்ளார். தமது போராட்டத்தின் நியாயத்தை அறிந்து கொண்டு எமக்கு ஆதரவாக செயற்படவும், எமது துயரங்களை அறிந்து கொள…

  10. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2& http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

    • 7 replies
    • 4.5k views
  11. டொரொன்டோ மொன்றியல் வாழ் தமிழர்களே! இன்றுகாலை10 மணிக்கு ஆரம்பமாகும் மகிந்தாவை கைதுசெய் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு வேண்டி நிற்கிறோம் இடம்:-அமெரிக்க தூதரக முன்றல் மொன்றியல்:- RUE ALEXANDRIA டொரன்டொ :-360 UNIVERSITY

    • 2 replies
    • 1.2k views
  12. வடக்கு மாகாண சபைக்கு சொந்தமான 236 வாகனங்கள் பழுது!! வடக்கு மாகாண சபைக்கு சொந்தமான 236 வாகனங்கள் பழுது!! வடக்கு மாகாண சபைக்கு சொந்தமான 236 வாகனங்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலமையில் உள்ளன. அதேவேளை ஆயிரத்து 719 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து முகாமைத்துவ சுற்றறிக்கையின் விதப்புரைகளுக்கு அமைவாக சேகரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு உரித்தான வாகனங்கள் தொடர்பில், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச…

  13. வீடொன்றின் பின்புறத்தில் நிலம் வெடித்து பாரிய குழி:நிந்தவூர் பகுதியில் பெரும் பரபரப்பு! [ பிரசுரித்த திகதி : 2011-01-27 05:09:12 AM GMT ] நிந்தவூர் 2 ஆம் பிரிவிலுள்ள வீடொன்றின் பின்புறமாக நிலம் வெடித்து பாரிய குழி ஒன்று சதுப்பு நிறைந்ததாக ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவு முழுவதும் பெய்த அடைமழையைத் தொடர்ந்தே இவ்வாறு நிலத்தில் வெடிப்புடன் கூடிய குழி ஏற்பட்டுள்ளது. சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் நிதி உதவியாளராகக் கடமையாற்றும் நிந்தவூர் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த எஸ்.எம்.தாஹிர் என்பவரது வீட்டிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் பின்புறமாகத் தானாக நிலவெடிப்பு ஏற்பட்டு சுமார் இரண்டு அடி அகலமான குழி ஏற்பட்டுள்ளதுடன், எட்டு அடிக்கு மேல்…

  14. எதிர்வரும் ஜனாதிபதி, பொது தேர்தல்களில் வாக்களிக்க உங்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா? - மனோ கணேசன் அவசர வேண்டுகோள் [Friday 2014-09-26 16:00] இந்த நாட்டில் எங்கு வாழ்ந்தாலும் நீங்கள் ஒரு வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளீர்களா? நீங்கள் வாக்காளர் விண்ணப்ப படிவத்தை நிரப்பி அளித்தீர்களா? அப்படியாயின் http://www.slelections.gov.lk/id/index.aspx என்ற இணையதளத்துக்கு உடனடியாக சென்று உங்கள் வசிப்பிட மாவட்டம் மற்றும் அடையாள அட்டை எண் ஆகிய இரண்டு விபரங்களையும் தந்து உங்கள் பெயர் பதிவில் இருக்கின்றதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள். உங்களிடம் இணைய தள வசதி இல்லாவிட்டால் அருகில் உள்ள இணைய நிலையம் (நெட் கபே) ஒன்றிற்கு சென்று சரி பார்த்து கொள்ளுங்கள். …

  15. நான்காம் ஈழப்போரில் தென்னிலங்கை விடுதலைப் புலிகளின் முக்கிய போரியல் அரங்காக திறக்கப்பட போகின்றதா? காலத்தின் தேவை அறிந்து செயற்பட வேண்டிய தார்மீகத் தேவை இயல்பாகவே தமிழ் இனத்திற்கு எழுகின்றது. சிங்கள மக்கள் இனச்சிக்கல் விடயத்தை புரிந்து கொள்ளும் விதம் தொடர்பாக நாம் கூர்ந்து நோக்க வேண்டி இருக்கின்றது. (இன்றைய தமிழ்ஓசையின் சிறப்புக் கட்டுரை) சிங்களப் பேரினவாத மேலாண்மைவாத சிந்தனையினால் சிங்கள மக்களின் இயல்பான நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் தமிழர்களின் நியாயமான போராட்டவியலை எவ்விதம் நோக்குகின்றார்கள் அவர்களிடம் இயல்பாக எழுகின்ற கருத்தியல்கள் மற்றும் செயலாக்கற்திறன் எல்லாம்; தமிழர் தரப்பை இனவாத சிந்தனையுடனே சிந்திக்க பழக்கப்பட்டவர்களாக இர…

  16. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க முனைகிறார் எனக் குற்றம்சாட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் மனைவி சர்மிளா வெளிநாடு செல்வதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். சுவிற்சர்லாந்துக்கு செல்வதற்காக கோபியின் மனைவி சர்மிளா நேற்று ஞாயிற்றுக்கிழமை உரிய ஆவணங்களுடன் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு சென்றார் என்றும் அங்கு வைத்தே அதிகாரிகள் சுவிஸுக்கு செல்ல விடாமல் அவரைத் தடுத்து நிறுத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவரிடம் சுவிஸ் செல்வதற்கான நுழைவிசைவு (விஸா) இருந்த போதிலும் அவரது கணவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதனாலேயே அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. சர்மிளாவை விமான நிலையத்திலேயே சிற…

  17. எரிபொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு By RAJEEBAN 02 JAN, 2023 | 09:38 PM நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளன. ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினாலும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் விலைக் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, புதிய விலையாக ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 415 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 355 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பெற்றோல் உள்ளிட்ட ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள…

  18. இந்த ஆண்டு முடிவதற்குள் கணனிமயப்படுத்தப்பட்ட புதிய தேசிய அடையாள அட்டைகளை வழங்க சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது. புதிய அடையாள அட்டைகள் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படவுள்ளது. அதனால் போலி அடையாள அட்டைகளைத் தயாரிப்பது மிகக் கடினமானதாகும். தற்போது அடையாள அட்டையை வைத்திருப்பவர் அனைவரும் புதிய அடையாள அட்டைகளைப் பெறுவர். புதிய அட்டையில், உரியவரின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும் விவரங்கள் மாற்றக்கூடியதாகவும் இருக்கும். உதாரணமாக கணனிமயப்படுத்தப்பட்ட இந்தப் புதிய அட்டையில் முகவரி மாற்றத்தை எளிதாகச் செய்யலாம். அதே நேரத்தில் போலி அட்டைகளைத் தயாரிக்க முடியாது. அடையாள அட்டை பெறுபவர்களின் முழு விவரங்களும் கணனியில் சேகரிக்கப்ப…

  19. பாதுகாப்பு உறுதிப்பட வேண்டும் என யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புகின்றனர் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவிப்பு Friday, 18 February 2011 06:05 யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தல் வேண்டுமெனவும் அதற்காக அவர்கள் குடியிருப்புகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டுமெனவும் விரும்புவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பிரித்தானிய தூதரக அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பு முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்றபோதே இவ்விடயத்தைக் கவனத்தில் கொண்டு வந்தனர். இச்சந்திப்பில் முன்னணியின் சார்பாக மு…

    • 0 replies
    • 821 views
  20. கொட்டாஞ்சேனையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு கொழும்பு - கொட்டாஞ்சேனை ஆறாம் ஒழுங்கைப் பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மோட்டார்சைக்கிளில் வந்தவர்களே இந்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. காரில் பயணித்தவர் காயம் சம்பவத்தில் காரில் பயணித்த நபரொருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்துள்ளதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர். கொட்டாஞ்சேனையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு - தமிழ்வின் (tamilwin.com)

    • 0 replies
    • 606 views
  21. சிறிலங்கா அரசு மீது போர்நிறுத்த கண்காணிப்புக்குழு குற்றச்சாட்டு [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 18:51 ஈழம்] [கொழும்பு நிருபர்] தங்களது உரிமைக்குள் செயற்பட விடுவதில்லை, ஆயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டுள்ள சண்டை நடைபெறும் கிழக்குப் பகுதிக்குள் செல்ல அனுமதிப்பதில்லை என சிறிலங்கா அரசு மீது இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது. கிழக்குப் பகுதியின் நிலைமையை தங்களால் கண்காணிக்க முடியவில்லை என்றும் அந்தப் பகுதிகளுக்குள் சிறிலங்கா இராணுவம் தங்களை அனுமதிப்பதில்லை என்றும் அது கூறியுள்ளது. எண்ணற்ற முறை வாகரைப் பகுதிக்குள் செல்வதற்கு முயற்சி செய்தோம். அண்மையில் கல்லாறு பகுதிக்கு செல்ல முயற்சி செய்தோம். சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டினால்…

    • 0 replies
    • 828 views
  22. வடக்கில் வறுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தமிழர் சமூகம்: உலோகங்களை விற்பதற்காக வெடிபொருட்களை தேடி ஆபத்தில் மாட்டும் பரிதாபம் [saturday, 2011-02-26 03:26:00] வடக்கில் உலோகங்களை விற்பதற்காக வறியவர்கள் ஆபத்தான வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய முனைவதாக கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சுவிஸ் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான சுவிஸ் பவுண்டேசன் என்ற அமைப்பின் இலங்கைக்கான முகாமையாளர் நைஜல் றொபின்சன் இதுகுறித்து தகவல் வெளியிடுகையில் வடக்கில் அண்மையில் மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட பல பகுதிகளில் ஆபத்தான வெடிபொருட்கள் உள்ளன. இவற்றை வறியவர்கள் சிலர் உலோகத்தை விற்பதற்காக தேடுகின்றனர். இந்த வெடிபொருட்களை அவர்கள் செயலிழக்கச் செய்யும் போது ஆபத்தில் …

  23. விடுதலைப்புலிகளை நினைக்க வைக்கும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்கின்றன. விடுதலைப் புலிகள், கடந்த காலத்தில் செய்தவைகள் நல்ல செயல்களா? தீமையான செயல்களா என பட்டிமன்றம் போட்டு வாதிட்டால் புலிகள் நல்லதே செய்தார்கள் என்ற பக்கத்தில் வாதிடுபவா்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பது புலிகளால் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட ரவுடிகளின் சாம்ராஜ்யமே ஆகும். அத்துடன் புலிகளின் காலத்தில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் கொலை கொள்ளை போன்றவைகளும் மிகச் சொற்ப வீதத்திலேயே காணப்பட்டன. இது யாழ்ப்பாணம் மாத்திரமல்லாது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து இடங்களிலும் இவ்வாறான நிலை இருந்தது. இதே வேளை புலிகள் இல்லாத காலப்பகுதியிலும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் யாழ்ப்பாணத்தில் அட…

    • 10 replies
    • 3.1k views
  24. இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தமிழ் அகதிகள் 254 போ் கடந்த 2009ம் ஆண்டு அவுஸ்திரேலியா நோக்கிச் செல்லும் வழியில் இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதன் பின் அவர்கள் 2009ம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரை இந்தோனேசியாவின் பின்டான் எனும் இடத்தில் தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ளனர். தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த காலத்தில் அவர்கள் பல தடவைகள் பல்வேறு கோரிக்கைளை விடுத்திருந்ததுடன், போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர். அவுஸ்திரேலியப் பிரதமர் யூலியா கில்லார்ட் இந்தோனேசிய ஜனாதிபதி சுசில பம்பாங் யுதாயனோவுடன் நடைபெற்ற க…

  25. இலங்கையின் இரு மாகாணங்களுக்கும் தனியான கர்தினால் ஒருவரை நியமிக்குமாறு வத்திக்கானிடம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையின் சிறுபான்மை தமிழ் கத்தோலிக்கர்கள் இலங்கை கத்தோலிக்க திருச்சபையால் வஞ்சிக்கப்படுவதாக உணர்ந்ததன் காரணமாகவே இந்த கோரிக்கையை முன்வைத்ததாக அருட்தந்தை ஜோசப் பத்திநாதர் ஜெபரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு நீதி கேட்கவில்லை மேலும் கூறுகையில்,“உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கொழும்பு பேராயர் நீதி கேட்பதில் தவறில்லை, ஆனால் வடக்கு கிழக்கு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு நீதி வழங்க எவரும் முன்வராத காரணத்தினால் தான்…

    • 8 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.