ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
பெப்ரவரி 10 இல் தேர்தல் உறுதி எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமென சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/28367
-
- 0 replies
- 337 views
-
-
பிளவுக்குக் காத்திருக்கும் ஜே.வி.பி. சிறிலங்கா உள்ளுராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்று ஜே.வி.பி. முடிவெடுத்துள்ள நிலையில் அக்கட்சியில் பாரிய பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. உள்ளுராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற யோசனையை ஜே.வி.பி.யின் மத்திய குழுவின் சோமவன்ச அமரசிங்க, விமல் வீரவன்ச, நந்த குணதிலக்க மூவரும் முன்வைத்துள்ளனர். இம்மூவரும் முன்னதாக மகிந்தவுடன் நடத்திய ஆலோசனையில் கூட்டாக தேர்தலைச் சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் அது தொடர்பில் மத்தியக் குழுவின் ஒப்புதலைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தீர்மானத்தின் மீது பேசிய ஜே.வி.பி.யினர் கட்சியுடன் செய்து ஒப்பந்தத்துக்கு நேர் எதிராக மக…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஊழல் மோசடிமிக்க காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவை தாக்கிய அரசியல் சூறாவளி இலங்கையை தாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியை விடவும் அமைச்சரான விமல் வீரவன்ஸவிற்கே அதிகம் பயந்து நடுங்குகிறார். முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்காத ராஜபக் ஷ அமைச்சர் விமலுடன் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்குகின்றமையிலிருந்தே அவருடைய பயம் வெளி உலகுக்கு காட்டப்படுகிறது எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. ஐ.தே.கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை தெ…
-
- 1 reply
- 507 views
-
-
ஒற்றுமையை இழந்ததால் தமிழர்கள் தொடர்ந்தும் தோற்றுப்போனவர்கள் தான் ஒற்றுமையை இழந்ததால் தமிழர்கள் தொடர்ந்தும் தோற்றுப்போனவர்கள் தான் தமிழர்கள் ஒற்றுமையாகவும் பலத்துடனும் இல்லாவிட்டால் அவர்கள் ஒட்டுமொத்தமாக அழியும் நிலையே உருவாகும். இவ்வாறு தெரிவித்திருக்கின்றார், அமைச்சர் மனோகணேசன். அவர் யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டுதான் இதனைத் தெரிவித்திருக்கிறார். இந்த அழகிய சிறிய நாட்டில் சுமார் எழுபது வீதமானவர்கள் சிங்கள மொழி பேசுகின்ற மக்களாவர். சிறுபான்மை இனத்தவர்கள் அனைவரும் எஞ்ச…
-
- 2 replies
- 590 views
-
-
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 21, 2010 கடலில் வழியாக தப்பி செல்லும் வேளை கடற்படையினர் எம்மை நோக்கி சுட்டனர் இதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். நானும் எனையோரும் தப்பி விட்டோம். இவ்வாறு சாட்சியம் அளித்துள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த பெண்மணி. கோரமான யுத்தப் பிடிக்குள் சிக்கித் தவித்த மக்கள் தப்பிச்செல்ல முடியாமல் நாளாந்தம் செத்துமடிந்து கொண்டிருந்தனர். நாங்களும் எத்தனையோ தடவை தப்பிச் செல்ல முயன்றும் அது வெற்றியளிக்கவில்லை. இறுதியில் கடல்வழியாகத் தப்பிச்செல்லத் தீர்மானித் தோம். அதன்படி வெள்ளைக் கொடியுடன் ஒரு படகில் 20 பேர் அதிகாலை வேளை புறப்பட்டுச்சென்றோம். பயணம் தொடர்ந்தது. திடீரென எங்கள் படகுமீது கடற் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் எம்முடன் பயணித்த…
-
- 0 replies
- 1k views
-
-
சிவா அய்யாதுறை – தமிழ்நாடு தனி நாட்டிற்கான முதல் இணையதள நேரலைக்கூட்ட தமிழாக்கம் இந்திய நேரப்படி இன்றிரவு (05-சூன்-2014) 8.30 மணிக்குத் தொடங்கவிருந்த அவரது நேரலை ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. இந்த நேரலையின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர் முழுதும் ஆங்கிலத்திலேயே அவரது உரையை தொடர்ந்தார். அதனால் எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக நாம் இதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவிட்டுள்ளோம். அவரது இந்த நேரலை நிகழ்ச்சியானது இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பாதி அவரது தமிழ்நாடு தனிநாடு என்பதற்கான அவசியத்தினையும் அதன் காரணங்களையும் எடுத்துரைத்தார். அதில் சில பின்வருமாறு. “உலகத்தில் எல்லாமும் ஒரு கூட்டாக இயக்கமாகத்தான் செயல்படுகிறது . அதன் கூறுகளாவன 1.இடமாற்றம் (T…
-
- 0 replies
- 2.1k views
-
-
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18 ஆம் ஆண்டு நினைவுதினம்…. மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18 ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ் கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. http://globaltamilnews.net/2018/59625/
-
- 0 replies
- 184 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்) பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் பாரிய அழிவை நாட்டில் ஏற்படுத்தி இருக்கின்றது. அவ்வாறானதொரு நடவடிக்கையை மீண்டும் ஏற்படுத்தவே போராட்டம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கு நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது. அத்துடன் மக்கள் பலத்துடன் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் இந்த போராட்டத்துக்குள் மறைந்திருக்கின்றன. இது பாரிய நிலைமையாகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். நீதி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மக்கள் ஆணைமூலம் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் போராட்டத்துக்குள் …
-
- 0 replies
- 268 views
-
-
தாயகத்தை நேசித்த தாயகத்துக்காய் இரத்த உறவுகளை உடன் பிறந்த சகோதரர்களையெல்லாம் கொடுத்துவிட்டு இன்று அடுத்த நேரச் சோற்றுக்கே வழியின்றித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் தலைவனின் கதைகளிலிருந்து சிலதுளிகள் நேயர்களே உங்களுக்காக….!
-
- 2 replies
- 1.8k views
-
-
'அளுகோசு' அல்ல 'உயிர் எடுப்பவர்' வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2014 09:24 இதுவரையிலும் அளுகோசு என்று பயன்படுத்தப்பட்ட பதவிக்கான பெயராது உயர் எடுப்பவர் என்று மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியை தூக்கிலிட்டு அந்த மரணத்தண்டனையை நிறைவேற்றுகின்றவரை அளுகோசு என்றே அழைத்தனர். அளுகோசு என்ற பெயருக்கு பதிலாக புதிய பெயர்களை பிரேரிக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் கோரியிருந்தது. அதனடிப்படையில் மக்களிடமிருந்து 200 பெயர்கள் கிடைக்கப்பெற்றன. அந்த பெயர்கள் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் கண்காணிப்பின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவினாலேயே இந்த பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 488 views
-
-
நாட்டில் பொருளாதார, சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான சர்வ கட்சிகளின் தேசிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் அழைப்புக்கு இணங்க அவரைக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சுகவீனம் காரணமாகக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை. அதேவேளை, தவராசா கலையரசன் எம்.பியும் இதில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலு…
-
- 9 replies
- 613 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியிலுள்ள கோவில் போரதீவுக்குளம், பெரிய போரதீவுக்குளம், பழுகாமத்திலுள்ள குளம், வெல்லாவெளிக் குளம் ஆகியன தற்போது நிலவும் வறட்சியால் வற்றிவருகின்றன. இதனால், பல கிராமங்களில் தற்போது தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், கால்நடைகளும் குடிநீருக்காக அலைந்து திரிகின்றன. மேலும் கடுக்காமுனைக்குளம், தும்பங்கேணிக்குளம், கங்காணியார்குளம் ஆகிய பெரிய குளங்களின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளன. இந்நிலையில், பிரதேச சபைகள் பவுசர் மூலமாக மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகின்றன. (படங்கள்: வடிவேல் சக்திவேல்) http://tamil.dailymirror.lk/--main/114984-2014-06-20-09-49-40.html
-
- 0 replies
- 372 views
-
-
மட்டக்களப்பு மாவட்டதில் நாளை 13ஆம் திகதி புதன்கிழமை சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கென சுனாமி தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திருச்செந்தூர் மற்றும் டச்பார் கிராம சேவகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நிலையத்தின் மாவட்ட பதில் இணைப்பாளர் ஏ.எம்.எம்.கசீர் தெரிவித்தார். நாளை மாலை 3.00 மணிக்கு குறித்த இடங்களை மையப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் வழிகாட்டலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது…
-
- 1 reply
- 784 views
-
-
12 இலட்சம் ரூபாய் வாடகையாக செலுத்துகிறோம் – திருவாய் மலர்ந்தார் விக்கி! வடக்கு மாகாணத் திணைக்களங்கள், அமைச்சுக்கள், அமைச்சர்களின் வதிவிடங்கள் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் என்பவற்றின் வாடகைக்காக மாதாந்தம் செலவிடப்படும் தொகை 12 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாவெனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். 25.09.2013 ஆம் திகதியிலிருந்து வடக்கு மாகாணசபை மற்றும் சபை சார்ந்த அமைச்சுக்களின் காரியாலயங்கள், முதலமைச்சரின் காரியாலயம், ஏனைய திணைக்களங்கள் மற்றும் இதர அலுவலகங்களுக்கும் முதலமைச்சர், அவைத் தலைவர், அமைச்சர்களது வதிவிடங்களுக்கும் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கட்டங்கள், வீடுகள் தொடர்பான விடயங்கள், அந்தக் கட்டங்கள், வீடுகளின் விலாசங்கள், உரிமையாளர்களின் ப…
-
- 4 replies
- 543 views
-
-
அடையாளம் தெரியா நபரிடமிருந்து ரெட்டாவின் கணக்குக்கு 50 இலட்சம் ! Posted on August 14, 2022 by தென்னவள் 14 0 மக்கள் தன்னெழுச்சி போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளரான ரெட்டா என பரவலாக அறியப்படும் ரனிந்து சேனாரத்னவின் வங்கிக் கணக்குக்கு, அடையாளம் தெரியா நபர் ஒருவர் ஊடாக 50 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது வங்கிக் கணக்கு உள்ள தனியார் வங்கிக்கு முறைப்பாடளித்துள்ளதாகவும், இன்று உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ரெட்டா எனும் ரனிந்து சேனாரத்ன குறிப்பிட்டார். ‘நான் CIMA தகுதிமிக்க கணக்காளர் இவ்வாறான அடிப்படையற்ற பண வைப்புக்கள் தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து…
-
- 1 reply
- 349 views
-
-
பால்மா விலை மீண்டும் அதிகரிக்கும் பால்மாவின் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவித்தல் இவ்வார இறுதிக்குள் சிறிலங்காவில் வெளியிடப்படும் எனத்தெரிவிக்கப்படுகின்றது. பால்மா உற்பத்தி மற்றும் இறக்குமதி நிறுவனங்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த ஜூன் மாதம் பால்மா பக்கட் ஒன்றின் விலை 48 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. புதிதாக விலை அதிகரிப்பு எவ்வகையில் அமையும் என்பது இதுவரையில் அரசினால் வெளியிடப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைக்குறைப்பு மிகைப்படுத்தப்பட்ட விளப்பரங்களுடன் நடைபெறும் வேளையில் விலை அதிகரிப்பு மிகவும் அமைதியாக நள்ளிரவு வேளைகளில் நடைபெறுகின்றது. http://meenakam.com/?p=11262
-
- 2 replies
- 624 views
-
-
இலங்கையில் அதிகரிக்கும் வறுமை; உணவு கிடைக்காத குழந்தைகள்; ஊட்டச்சத்து குறைந்த தலைமுறை உருவாகிறதா? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பொருட்களின் விலை அதிகரிப்பு பவாஸ் ஓர் அரச உத்தியோகத்தராக பணியாற்றுகின்ற போதும், மாதாந்த வருமானத்தைக் கொண்டு - அவரின் குடும்பத்துக்கான வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார். மாதாந்தம் 22,500 ரூபாயை அவர் சம்பளமாகப் பெறுகிறார். ஆனாலும் 5 பேர் கொண்ட அவருடைய குடும்பத்தின் செலவுகளை இந்தத் தொகைக்குள் ஈடுகட்ட முடியவில்லை என்பது அவரின் பிரச்சினையாக உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொ…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
நாதியற்ற தமிழர்கள் [09 - June - 2006] [Font Size - A - A - A] தெ.சுந்தர மகாலிங்கம் கிழக்குப் பாகிஸ்தானில் நிகழ்ந்ததை `இனப் படுகொலை' என அறிவித்து உலக நாடுகளுக்கெல்லாம் பறையறைந்த கையோடு இந்திய இராணுவத்தை அனுப்பி பங்களாதேஷ் உருவாக முழு மூச்சாக ஈடுபட்டார் இந்திரா காந்தி. சிங்களக் காடையர்களால் இலங்கைத் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட போது, இனப் படுகொலை என்று கூற டில்லியில் யாருக்கும் மனம் வரவில்லை. நேரு - கொத்தலாவல, சாஸ்திரி - சிறிமோவோ காலத்திலிருந்தே இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையை அணுகிய போதெல்லாம் பேரிழப்புக்குள்ளாவோர் தமிழர்களே என்பதை மறந்துவிட முடியாது. யசிர் அரபாத்துக்குத் தூதரகம் அமைக்க அனுமதியும் ஐ.நா.சபையில் அங்கம் வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக முதல் தடவையாக இந்தியா அறிவித்துள்ளது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக முதல் தடவையாக இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்திய புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைகளுக்கு அமைய தடா நீதிமன்றம் பிரபாகரனுக்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களையும் நீக்கிக் கொண்டுள்ளது. ராஜீவ் படுகொலை வழக்குடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களான பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்க…
-
- 9 replies
- 1.7k views
-
-
வடக்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து பெரும் மகிழ்வும் வியப்பும் தெரிவித்தார் இன்று மாலை யாழ்ப்பாணத்துக்கு குறுகிய நேர விஜயமாக வந்து திரும்பிய ஆஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு விவகார அமைச்சர் ஸ்கொட் மொரிஸன். கொழும்பில் இன்று காலை முதல் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசிய அவர், இன்று மாலை யாழ்ப்பாணத்துக்கு சுமார் அரை மணி நேர விஜயமாக வந்து திரும்பினார். வடக்கு மாகாண ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை அவர் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களுடன் குறுகிய நேரம் உரையாடிய சமயமே இங்கு ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து அவர் வியப்புத் தெரிவித்தார். அப்போது அவர் கூறியவை வருமாறு: …
-
- 3 replies
- 569 views
-
-
கூட்டமைப்பு தீர்வு விடயத்தில் அவதானத்துடன் செயற்படவேண்டியதன் அவசியம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட்டு அவர்களுக்கான அரசியல் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பது தொடர்பான கோரிக்கைக்கு எவ்வாறான பதில் கிடைக்கும் என்பதும் அது எவ்வாறு அதிகாரத்தில் இருப்போரினால் அணுகப்படும் என்பதுமே தற்போதைய கட்டத்தில் பேசப்படுகின்ற ஒரு முக்கிய விடயமாக காணப்படுகின்றது. தென்னிலங்கையானது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மிகவும் முனைப்புடன் செயற்பட்டபோதிலும் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் கூட அவர்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்…
-
- 0 replies
- 236 views
-
-
தடுப்பு முகாம்களில் இலங்கையின் தேசிய கீதத்தைச் சரியான முறையில் சிங்களத்தில் பாடத் தவறியவர்களை இலங்கைப் படையினர் தாக்கிச் சித்திரவதை செய்தார்களென ஒஸ்ரேலிய இணையத்தளம் ஒன்று குறிப்பிடுகிறது. வன்னிப் போரின் இறுதியில், இலங்கைப் படையினரிடம் சரணடைந்த மற்றும் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் நடத்தப்படும் முறை குறித்து கிறீன் லெஃப்ட் (Green Left) என்ற அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது, இலங்கையின் தேசிய கீதத்தைச் சிங்களத்தில் சரியான முறையில் பாடாத சிறுவன் ஒருவன் நாள் முழுவதும் வெய்யியில் முழந்தாளில் இருக்குமாறு பணிக்கப்பட்டாரெனவும், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது இருமிய மற்றொரு சிறுவன் உதைக்கப்பட்டானெனவும் முகாமில் இருந்து விடுதலையான ஒருவர் கூறியதாக இணையத்தளம் தெரிவிக…
-
- 2 replies
- 1k views
-
-
ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சி முறையை குறிப்பதல்ல. – இரா.சம்பந்தன்…. ஏக்கிய இராச்சிய என்பதன் பொருள் பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாடு. ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சிமுறையை குறிக்கும் சொல் இல்லை. அது பிரதேசத்தை குறிக்கிறது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அதரவு தெரிவித்து யாழ்.சங்கிலியன் பூங்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இடைக்கால அறிக்கையில் ஒன்றும் இல்லை என கூறுகிறார்கள். இடைக்கால அறிக்கையி…
-
- 3 replies
- 1k views
-
-
கொழும்பு நகரத்தை சூதாட்ட நகரமாக மாற்ற அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக ஜே.வி.பி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பு நகரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் சூதாட்ட நகரத்தைப் போன்று உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள சூதாட்ட சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு நகரம் சூதாட்ட புரியாக மாற்றமடைந்து விடும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு மாநகரசபையை அதிகாரசபையாக உருவாக்கி அதன் மூலம் அரசாங்கம் தமது இலக்குகளை எட்டுவதற்கு முயற்சிப்பதாக கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்தத் திட்டத்திற்கு எதிராக கட்சி பேதம் பாராட்டாது வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பி.யின…
-
- 0 replies
- 488 views
-
-
கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற்று முடிந்த உள்ளூட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெறும் 13 வீதமாக வாக்குகளையே பெற்றுக்கொண்டுள்ளது. சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்து ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த ஒரு தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவும், மற்றுமொரு தரப்பினர் மஹிந்தவுடன் இணைந்து கொள்ளவும் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ச…
-
- 0 replies
- 202 views
-