ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143495 topics in this forum
-
திருகோணமலை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 452 views
-
-
யாழ் குடாநாட்டில் மழை வெள்ளத்தினால் சுமார் 1648 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 656 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று மாலை யாழ். மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு கிடைந்த தகவல்களின் அடிப்படையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ் குடாநாட்டில் தொடந்து பெய்துவரும் அடைமழை காரணமாக ஊர்காவற்றுறையில் 1006 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 318 பேரும், பருத்தித்துறையில் 277 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 3 பேரும், வேலணையில் 216 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேரும், சண்டிலிப்பாயில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேரும், கரவெட்டியில் 135 குடும்பங்களைச் சேர்ந்த 571பேரும் பாதிப்படைந்…
-
- 1 reply
- 292 views
-
-
'67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை' என வடமாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, கணக்காய்வு திணைக்கள அறிக்கையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே வடமாகாண எதிர்க் கட்சி தலைவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடமாகாணத்தின் ஐந்து அமைச்சின் கீழ் உள்ள 28 திணைக்களங்களில் 67 கோடியே 44 இலட்சத்து 35 ஆயிரத்து 63 ரூபாய் பணம் தொடர்பில் கொடுக்கல், வாங்கலுக்கான உரிய ஆவணங்கள் எவையும் இல்லை என கணக்காய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்குரிய கணக்காய்வு திணைக்கள அறிகையிலேயே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, 2014ஆம் ஆண்டு வரவு - …
-
- 0 replies
- 354 views
-
-
பிரேமதாஸ யுகத்திற்கு மீண்டும் பயணிக்க மக்களுக்கு எவ்வித அவசியமும் இல்லை அனைத்து இன மக்களும் பயம் சந்தேகமின்றி வாழ கூடிய உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக மூன்றில் இரண்டு அதிகாரம் பெறுவதற்கு தாமரை மொட்டிற்கு வாக்களிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (21) மாலை கண்டி பாததும்பர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு பொருத்தமான அரசியலமைப்பில் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க கூடிய வாய்ப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு அதிகாரம் பெறுவதற்கான சக்தி கொண்ட ஒரே…
-
- 0 replies
- 412 views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவில் பதுங்கியிருக்கிறார். அவரைக் கண்டுபிடித்து உயிருடன் பிடிப்பதே எங்களது நோக்கம் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். கிளிநொச்சி மற்றும் ஆணையிறவை ராணுவம் பிடித்துள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவை குறி வைத்துள்ளனர். புலிகளின் கடைசி புகலிடமாக இது கருதப்படுகிறது. முல்லைத்தீவில்தான் தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. முல்லைத்தீவு வனப்பகுதியில் மிக மிக பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ள 30 அடி ஆழ பதுங்கு குழியில் சகல பாதுகாப்புடன் பிரபாகரன் தங்கியுள்ளார். அவரது இடத்தை அவ்வளவு எளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியாதபடி …
-
- 14 replies
- 3.9k views
- 1 follower
-
-
"சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூல பத்தொன்பது இணையத்தளங்களின் ஊடாக இஸ்லாம் மற்றும் முஸ்லீம் தொடர்பாக அவதூறு பரப்பப்பட்டுள்ளது. இதனை மிகச் சிறிய ஆனால் நன்றாக திட்டமிட்டு நிர்வகிக்கப்படும் சிங்கள குழு ஒன்றே மேற்கொண்டுள்ளது" என முஸ்லீம்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு Gulf News ஊடகத்தின் சிறப்பு செய்தியாளர் Tariq A. Al Maeena எழுதியுள்ள தனது செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதிப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தமிழ்ப் புலிகளுக்கு எதிரான யுத்தம் 2009ல் வெற்றிகொள்ளப்பட்ட போது சிறிலங்காவானது பலம்பெற்ற, ஒற்றுமையான ஒரு நாடாக விளங்கும் என்ற நம்பிக்கை துளிர்த்திருந்தது. மூன்று பத்தாண்டுகளாக இடம்பெற்ற யுத்தத்தின் வடுக்கள் சிறிலங்கா என்கின்ற தேசத்தை அ…
-
- 2 replies
- 488 views
-
-
காரைநகர் ஊரிக்கிராமத்தின் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (15.01.2013) காரைநகர் பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு ஊடக மாணவர்களாலும் காரைநகர் அமெரிக்கன் மிசன் திருச்சபையாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் வி.பி. சிவநாதன் அவர்கள் 'பல்கலைக்கழக மாணவர்கள் சமுதாயத்திற்கு முன்னோடிகளாக விளங்க வேண்டும். அந்த வகையில் இம்மாணவர்கள் இச்சிறுவர்களுக்கு உதவிசெய்வதற்காக தம்மாலான முயற்சியை செய்து கற்றல் உபகரணங்களை வழங்கியமை பாராட்டத்தக்க விடயம்' என தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வழங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்கள் தமது அறிக்கையிடலுக்காக காரைநக…
-
- 0 replies
- 536 views
-
-
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27981
-
- 2 replies
- 2.4k views
-
-
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் நாளை செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் பவானந்தன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவரான சொலமன் ஆகிய இருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட மேற்படி மாணவர்கள் வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்தனர். இவர்களுக்…
-
- 2 replies
- 464 views
-
-
இனப்படுகொலை பற்றிய ஐ.நா.வின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது-பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை ருவாண்டா சேர்பியா படுகொலைகளுடன் ஐ.நா ஒப்பிட்டுப் பேசுவது உண்மையாகவே அதிர்ச்சியைத் தருவதாக முன்னாள் அமைச்சரும் சமாதானச் செயலகத்தின் முன்னாள்; தலைவருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க விசனம் வெளியிட்டுள்ளார். இலங்கை சம்பவத்தை ருவாண்டா, சேர்பியாவுடன் ஒப்பிடுவது அரிஸ்டோட்டில் வகுத்த முதல் விதிகளில் ஒன்றை மீறுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டு;ளளார். எதைப்பற்றியாவது குறைவான அறிவோடு பேசுவது மிகவும் ஆபத்தானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். எமத…
-
- 1 reply
- 522 views
-
-
தமிழீழத்திலிருந்து உங்கள் தொப்புள்கொடி உறவு இக்கடிதத்தை படித்த பொழுது எனது விழியிலிருந்து என்னையும் அறியாமல் சில கண்ணீர்த்துளிகள் பூமியில் விழுந்தன. அதனால் தான் உங்களிற்கும் இதை அனுப்பி வைக்கிறேன். ஏதோ ஒரு செப்டம்பர் 11 அன்றைக்கு,உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தை இன்னும் மறக்காமல் நாம் விவாதித்துகொண்டிருக்கிறோம். ஆனால் நம் காலடியில் உள்ள தேசத்தில் நம் சொந்தங்களுக்கு தினம் தினம் செப்டம்பர் 11 நடந்து கொண்டிருப்பதை நாம் இன்று வரை கண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும் காணாததுபோல் இருந்துகொண்டிருக்கிறோம். ஒரு சீக்கிய மாணவனின் மயிரை அறுத்ததற்காக வெகுண்டெழுந்த சீக்கிய இனம் எங்கே, உன் தொப்புள் கொடி உறவின் உயிரை அறுத்த பின்னும் வாய் மூடி வேடிக்கை பார்க்கும் நம் தமிழ் இனம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சேர்.பொன்.இராமநாதனை முதலில் விழித்த பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது சம்மேளனத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சேர்.பொன்னம்பலம் இராமநாதனுக்கு முதலில் விழித்ததோடு ஐ.தே.க கடந்த காலத்தில் தவறுகளை இழைத்திருந்தால் அதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது சம்மேளனம் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற போது அங்கு உரையாற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 1915ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற கலவரத்தின் போது அரசியல் தலைவர்கள் கொல்ப்பட்டார்கள். ஆனால் அந்த சந்தர்ப்த்தில் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் துணிந்து செயற்பட்டதால் பல விளைவுகளை தவிர்க்க முடிந்தது. ஒரு தமிழ்த் தலைவர் இவ்வாற…
-
- 5 replies
- 727 views
-
-
கிளிநொச்சியில் கிணறு வெட்டும் போது ஆர்.பி.ஜி. ஷெல்கள் மீட்பு (காணொளி இணைப்பு) (எஸ்.என்.நிபோஜன்) கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்.பி.ஜி. ரக ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்வம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றுப் பிற்பகல் ஆறு முப்பது மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் பணி இடம்பெற்றது. இதன் போது அந்தக் குழியிலிருந்து ஒன்பது ஆர்.பி.ஜி. ரக ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியினுள் வேலைசெய்கின்ற ஒப்பந்தக்காரரினால் இன்றையதினம் காலை …
-
- 0 replies
- 837 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகி மரணத்தின் வாசலில் நிற்கும் தமிழ் மக்களை காப்பதற்கான அவசரகால ஒன்றுகூடல் நேற்று சுவிற்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 514 views
-
-
1000 கைதிகளை சுதந்திரதினத்தை முன்னிட்டு விடுவிக்க தீர்மானம்! [sunday, 2013-02-03 09:18:58] சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் 65ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் கைதிகளுக்கு பொது ம்னிப்பு அளிக்கப்பட உள்ளது. பாலியல் வன்கொடுமை, சிறுவர் துஸ்பிரயோகம், சுங்க மோசடி, பயங்கரவாத தடைச் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 27 குற்றச் செயல்களுடன் தொடர்புபடாத ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர். இரண்டாண்டு கால சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலம் இரண்டு வாரங்களிலும், மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலம் மூன்று வாரங்களினாலும் குறைக்கப்பட உள்ளத…
-
- 1 reply
- 285 views
-
-
விதியின் சதியா? மதியின் பிழையா? இலங்கைப் போர் தானாகவே ஓயும் வரை பிரச்னையைக் காலதாமதம் செய்வதென்பது உண்மையிலேயே மிகப் பெரிய ராஜதந்திரம்தான்! முல்லைத்தீவைத் தங்கள் ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. தங்கள் வெற்றியைக் காட்டுவதற்காக பத்திரிகையாளர் குழுவை அழைத்துச் செல்லவும் இலங்கை அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தங்கள் நாட்டின் ஒரு பகுதியைத் தாங்களே மீட்டெடுத்து வெற்றிக்கொடி ஏற்றியுள்ள இன்றைய சூழலில், இலங்கை ராணுவம் தன் பீரங்கிகளுக்கு ஓய்வு கொடுப்பது இயல்பானது. இதைப் போர் நிறுத்தம் என்று சொல்ல முடியாது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பகுதிகளை இழந்தாலும்கூட அவர்கள் மீண்டும் கொரில்லா போரை நடத்தவே செய்வார்கள். ஆகையால் வி…
-
- 0 replies
- 795 views
-
-
தேசிய விளையாட்டுவிழாவில் வடக்கு முதல்வர் பங்குபற்றாமைக்கு வயிற்றுக் கோளாறு காரணமாம்-அமைச்சர் ஹரிசன் கண்டுபிடிப்பு வடக்கு முதலமைச்சர் தேசிய விளையாட்டு விழாவில் கலந்துகொள்ளாமைக்கு வயிற்றுக் கோளாறு காரணமாக இருந்திருக்கலாம் என அமைச்சர் பி. ஹரிஸன் தெரிவித்தார். வடக்கு முதலமைச்சர் தேசிய விளையாட்டு விழாவைப் புறக்கணித்திருந்தார். இது அரசாங்கத்தைப் புறக்கணித்ததாக கொள்ள முடியும் அல்லவா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். வடக்கிலுள்ள மாணவர்கள், அரச நிறுவனங்களின் அதிகாரிகள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு இந்த விழாவுக்குச் செல்லக் கூடாது என முதலமைச்சர் …
-
- 1 reply
- 268 views
-
-
உத்தேச அரசியமைப்பு யாப்பு ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் 19 ஆவது திருத்தச் சட்டத்தினை முற்றாக நீக்கி 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மாற்ற வேண்டியது காலத்தின் அவசியம். இதனுடாக நிறைவான ஒரு அரசியமைப்பு அபிலாசைகளை எதிர்வரும் காலங்களில் கண்டுகொள்ள முடியும் என பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் பிரதித் தலைவரும்,யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும் ஆகிய அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைமை அலுவகத்தில் பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் பிரதித் தலைவரும்,யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும் ஆகிய அங்கஐன் இராமநாதன் தலைமையில் இன்று இக்கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து க…
-
- 3 replies
- 797 views
-
-
சிறிலங்காவுக்க திருப்பி அனுப்பிய சிப்பாய்கள் சிறிலங்காவுக்கு செல்லவில்லை பெங்களூரில் இறங்கியுள்ளனர். சிறிலங்காவிலிருந்து தமிழகத்திற்கு பயிற்சிக்காக சென்ற 8 சிறிலங்கா விமானப்படையைச் சிப்பாய்கள் தமிழக முதலவரின் தலையீட்டையடுத்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வந்தது. ஆனால் இந்த எட்டு சிறிலங்கா விமானப்படை சிப்பாய்களும் தற்பொழுது பெங்களூரிலுள்ள ஏலங்கா இந்திய விமானப்படை தளத்தில் இறக்கப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்செய்தியை அடுத்து பெங்களூரிலுள்ள தமிழின உணர்வார்கள் ஏலங்கா விமானப்படை தளத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த எண்ணியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிப்பாய்கள் திருப்பி அனுப்பும் விடயத்தில் இந்திய அரசு, தமிழக முதல்வருக்கு உற…
-
- 0 replies
- 1k views
-
-
பிரபாகரன் இறந்துவிட்டதாக சரத் பொன்சேகாவே எனக்கு கூறினார் இறுதி யுத்தத்தின்போது புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவே என்னிடம் தெரிவித்தார் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த செவ்வியின் விபரம் வருமாறு: கேள்வி: நாட்டின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அவதானத்துடன் இருகின்றீர்களா? பதில்: நாட்டின் அரசியலில் தற்போது வரையில் நான் நேரடியாக தொடர்புபடவில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் இடம்பெறும் நிகழ்…
-
- 0 replies
- 825 views
-
-
திருமலை எண்ணெய் குதங்களை மீள ஒப்படைக்குமா இந்தியா? ஆரம்பமானது பேச்சு திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை மீளவும் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். “திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது குறித்து இப்போது பேசுவது பொருத்தமில்லை. இது பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது. இந்திய தூதர…
-
- 2 replies
- 650 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த அமரேசன் உடலம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரின் வணக்கத்துடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 559 views
-
-
பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்செய்கை அவிருத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் மேற்கொண்டார். https://www.virakesari.lk/article/91440
-
- 0 replies
- 698 views
-
-
‘சபைக்குள் பாலியல் தொந்தரவுகள்’ 'இலங்கையில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையிலுள்ள அமைச்சர்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும், பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர்" என்று, முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார். அனைத்து நாடாளுமன்றங்களின் ஒன்றியத்தினால் (IPU) நடத்தப்பட்ட புதிய சாதனை எனும் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், “தேவையற்ற அழுத்தங்களை, சிலர் என்மீதும் திணித்தனர். காதலை வளர்த்துக்கொள்ளல், அவர்களுடைய அலுவலகங்களுக்கு அழைத்துக்கொள்ளல், உதவிகளைச் செய்தல், வெள…
-
- 1 reply
- 390 views
-
-
உச்ச நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகளை 20 ஆவது திருத்தச் சட்டத்தினில் உள்ளடக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்றினை நடத்துவதென்பது அவசியமற்றது - கல்வியமைச்சர் ஜி எல் பீரீஸ் 20 ஆவது திருத்தச் சட்டவரைபில் உச்சநீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளைச் சேர்ப்பதுபற்றி பொதுமக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவதற்கான சட்டத் தேவை எதுவும் இல்லையென்று கல்வியமைச்சர் ஜி எல் பீரீஸ் இன்று தெரிவித்திருக்கிறார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வாராந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த பீரீஸ், இந்த சட்டவரைபிற்கான உச்சநீதிமன்றத் திருத்தங்களை அரசாங்கம் சபாநாயகர் ஊடாக இம்மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கும் என்று மேலும் தெரிவித்தா…
-
- 0 replies
- 276 views
-