ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142758 topics in this forum
-
பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்செய்கை அவிருத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் மேற்கொண்டார். https://www.virakesari.lk/article/91440
-
- 0 replies
- 691 views
-
-
‘சபைக்குள் பாலியல் தொந்தரவுகள்’ 'இலங்கையில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையிலுள்ள அமைச்சர்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும், பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர்" என்று, முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார். அனைத்து நாடாளுமன்றங்களின் ஒன்றியத்தினால் (IPU) நடத்தப்பட்ட புதிய சாதனை எனும் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், “தேவையற்ற அழுத்தங்களை, சிலர் என்மீதும் திணித்தனர். காதலை வளர்த்துக்கொள்ளல், அவர்களுடைய அலுவலகங்களுக்கு அழைத்துக்கொள்ளல், உதவிகளைச் செய்தல், வெள…
-
- 1 reply
- 385 views
-
-
உச்ச நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகளை 20 ஆவது திருத்தச் சட்டத்தினில் உள்ளடக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்றினை நடத்துவதென்பது அவசியமற்றது - கல்வியமைச்சர் ஜி எல் பீரீஸ் 20 ஆவது திருத்தச் சட்டவரைபில் உச்சநீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளைச் சேர்ப்பதுபற்றி பொதுமக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவதற்கான சட்டத் தேவை எதுவும் இல்லையென்று கல்வியமைச்சர் ஜி எல் பீரீஸ் இன்று தெரிவித்திருக்கிறார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வாராந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த பீரீஸ், இந்த சட்டவரைபிற்கான உச்சநீதிமன்றத் திருத்தங்களை அரசாங்கம் சபாநாயகர் ஊடாக இம்மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கும் என்று மேலும் தெரிவித்தா…
-
- 0 replies
- 271 views
-
-
முல்லைத்தீவில் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல் 208 பேர் பலி 270 பேர் காயம் முல்லைத்தீவு இரணைபாலை ஆனந்தபுரம் பகுதியில் இலங்கை விமானப்படையினர் இன்று மதியம் 12.50 அளவில் மேற்கொண்ட க்ளுஸ்டர் விமான குண்டு வீச்சு தாக்குதலில் 100 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 70 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 10 பேர் மத்தாளன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். இலங்கை இராணுவ காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதை தடுக்கும் நோக்கில் கடும் எறிகணை வீச்சுகளை மேற்கொண்டுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் திருகோணமலைக்கோ வேறு இடங்களுக்கோ கொண்டு செல்வதில்லை எனவும் இவர்கள் வைத்தியசாலையிலேயே உயிரிழப்பதாகவும் மருத்துவர்க…
-
- 0 replies
- 515 views
-
-
குமாரபுரம் படுகொலை வழக்கு தீர்ப்பு எதிராக மேன்முறையீடு திருகோணமலை - குமாரபுரம் பகுதியில் 24 பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்ப வம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் இராணுவத்தினர் அறுவர் விடு தலை செய்யப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அறுவரை விடுவித்து அனுராதபுரம் மேல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. இந்தநிலையில் இதற்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்தத் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என, கூறப்பட்ட…
-
- 1 reply
- 356 views
-
-
'ஆவா' சந்தேகநபர்கள் 6பேர் கைது ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் 6பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamilmirror.lk/185472/-ஆவ-சந-த-கநபர-கள-ப-ர-க-த-
-
- 0 replies
- 338 views
-
-
தோல்வியின் விளிம்பில் இருக்கும்?? புலிகள் தெற்கில் எந்நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்த்தன நேற்றுக் கூறினார். இது தொடர்பாக மிக அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: புலிகள் இப்போது தோல்வியின் விளிம்பில் இருக்கின்றனர். அவர்களால் படையினருக்கு எதிராக எந்தவிதமான தாக்குதல்களையும் நடத்த முடியாது. விரக்தியிலும் கடும் கோபத்திலும் உள்ள புலிகள் தெற்கில் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம். இது தொடர்பாகத் தென்பகுதி மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். கொழும்பு மக்களும் மிக வ…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசத் துரோக செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஜெனீவா சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தரப்பினர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் நேரும் வகையில் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டிருந்தால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்…
-
- 2 replies
- 377 views
-
-
வரவு செலவுத் திட்டத்தால் பாதிக்கப்படும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து இலங்கை தனியார் தொலைக்காட்சி சேவைகள் கவலை வெளியிட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றிற்கு பின்னணி குரல் கொடுத்து ஒளிப்பரப்பு செய்யப்படுமாயின் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் வரியானது 90 ஆயிரம் ரூபாவில் இருந்து 3 இலட்சத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணமென இலங்கை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன. 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாசிப்பின் போதே இவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளா…
-
- 0 replies
- 207 views
-
-
இந்தியா புல்மோட்டையில் வைத்தியசாலை கட்டப்போகிறதாம் Indian forces will set up hospital in Lanka India is likely to soon establish a field hospital at Pulmodi in northeastern Sri Lanka to provide medical treatment for civilians injured in the bloody conflict raging in that country. The hospital will be established at Pulmodi which is on the northeastern coast and the security will be provided by the Sri Lankan Navy. The field hospital will be staffed by 52 Indian armed forces personnel comprising doctors and nurses. There will also be five specialists as part of the Indian medical contingent. India is likely to provide medicines worth about Rs 3 crores for the h…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும், எனக் கோரி இன்று சென்னை சேப்பாக்கம் அரச விருந்தினர் விடுதி முன்பாக உண்ணாவிரதமிருந்த அதிமுக பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா, உண்ணாவிரத மேடையில் ஆற்றிய உரையின் முழுவடிவம்: அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. டி. ஜெயக்குமார் அவர்களே, வரவேற்புரை ஆற்றிய தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. வி.பி. கலைராஜன் அவர்களே, வாழ்த்துரை வழங்க உள்ள வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. சேகர்பாபு அவர்களே, சி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் அன்புச் சகோதரர் தா. பாண்டியன் அவர்களே, திரு. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களே, தோழமைக் கட்சித் …
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே அமெரிக்கா தீர்மானத்தைப் பயன்படுத்துகின்றது - இதயச்சந்திரன் மார் 17, 2013 பிரித்தானியாவிலிருந்து ஊடகவியலாளர் இதயச்சந்திரன்.... http://www.sankathi24.com/news/28075/64//d,fullart.aspx
-
- 0 replies
- 354 views
-
-
மென்வலுவால் தாங்கள் சாதித்திருப்பதாக பொய் பேச சளைக்காத திரு சுமந்திரன் மீண்டும் பொய் பேசி இருக்கிறார். எல்லா விடயங்களையும் சாதித்து விட முடியாது என்பது உண்மை. ஆனால் எந்த விடயத்தில் நேர்மையாக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என தெரியளளவில்லை. மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு மென்வலு வன்வலு என வசனம் பேச வேண்டியதில்லை . உண்மையாகப் பேசினால் போதும் 1. சர்வதேச ரீதியாக நடந்த தரவு சேகரிப்பை ஒரு சட்டத்தரணி எந்த அடிப்படையில் சரவதேச விசராணை முடிந்து விட்டது என பொய் சொல்லி மக்களை ஏமாற்றியது தான் மென்வலுவா ? 2. ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்கிற விடயத்தை அரசாங்கம் தெளிவாக சொல்லிவிட்ட பிறகும் அதனை ரகசியமாக சிங்கப்பூரில் வைத்து ஒப்பு கொண்டு விட்டு எந்த அடிப்படையில் சமஸ்ட…
-
- 0 replies
- 471 views
-
-
'எங்களிடம் துப்பாக்கி இருந்தும் அதனை நாம் பாவிக்கவில்லை' செல்வநாயகம் கபிலன் “ஊர்காவற்றுறையில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியபோது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மெய்ப் பாதுகாவலர்களாக இருந்த எம்மிடமும் துப்பாக்கிகள் இருந்தன. அதனை நாம் பயன்படுத்தியிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும். ஆனால், அதனை பாவிக்க வேண்டாம் என மாவை சேனாதிராஜா எம்மைத் தடுத்துவிட்டார்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்றுறையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 15ஆவது சாட்சியான மாவை சேனாதிராஜாவின் அப்போதைய மெய்ப் பாதுகாவலராக இருந்த தர்மரட்…
-
- 0 replies
- 312 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறைக்கு விஜயம் செய்துள்ளார். சம்மாந்துறை அல் - அஸ்ஹர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன 'ஈ' கல்விமைய கட்டிடத்தினையே திறந்துவைப்பதற்காகவே அவர் சம்மாந்துறைக்கு விஜம் மேற்கொண்டுள்ளனார். மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு முன்னெடுப்பு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக சம்மாந்துறை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் நவீன 'ஈ' கல்விமைய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம் நௌஷhட் அவர்களின் அழைப்பின் பேரிலே ஜனாதிபதி இங்கு விஜயம் செய்துள்ளார். இந்நிகழ்வில்…
-
- 0 replies
- 340 views
-
-
200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை ஒன்றை அமைத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என என ராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த அரசா…
-
- 18 replies
- 2k views
-
-
தற்போதைய நிலைமைகள் குறித்து பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். எந்த விதவிதமான முன் அறிவிப்பு எதுவும் இன்றி கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்புக் கடிதங்கள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 386 views
-
-
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு பல கோரிக்கைகளை நடுவண் அரசுக்கும் சன் குழுமத்திற்கும் வைத்துள்ளது . முதல் கட்டமாக சன் தொ.கா. வின் உரிமையாளரின் அணியான ஐதராபாத் ஐ பி எல் அணியில் இருந்து இலங்கை ஆட்டக் காரர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் , வரும் வெள்ளிக் கிழமை இரவிற்குள் சன் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், அப்படி இலங்கை விளையாட்டாளர்களை வெளியேற்றாத பட்சத்தில் மாணவர்கள் தமிழகமெங்கும் உள்ள சன் குழும அலுவலகங்களை முற்றுகையிடுவதாக தெரிவித்தனர் . மேலும் நடுவண் அரசுக்கு சில கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர் 1. தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை உடனான ராஜதந்திர உறவுகளை இந்திய இத்துடன் முறித்துக் க…
-
- 2 replies
- 724 views
-
-
வடகிழக்கு இணைப்பு பிழை என்று கடந்த ஆட்சிக்காலத்தின்போது திர்ப்பளித்த நீதிபதியே தான் வழங்கிய தீர்ப்பு பிழை என்று பகிரங்கமாக கூறியிருந்தார் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார். லண்டன் சைவ முன்னேற்ற சங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட அறநெறிப் பாடசாலை கட்டட திறப்பு விழாவும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையில் சைவநெறி அறப்பணி மன்றம் நடாத்தும் சிவதொண்டர் மாநாடும் நிந்தவூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதை தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 18 வருட காலமாக வடகிழக்கு மாகாணம் இணைந்திருந்தது. ஆனால் கடந்த அரசாங்கத்தின் ஆட்ச…
-
- 0 replies
- 542 views
-
-
புரட்டி எடுத்த புரவி சூறாவளி! திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சியின் தற்போதைய நிலை புரவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து திருகோணமலையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இரவு பலத்த காற்றுடன் ஓரளவு மழை பெய்தமையும் திருகோணமலை மாவட்டத்தில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இருப்பினும் பல பிரதேசங்களில் அடித்த பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் சேதங்களும் விளைவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் திருகோணமலையை அண்டிய கடற் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பும் பாரிய அலையும் வழமைக்கு மாறாக உள்ளது. பொது மக்களின் பாதுகாப்பு கருதி திருகோணமலை மாவட்ட செயலகம் ஊடாக பல முன்னெடுப்புக்கள் தற்போது வரை இடம…
-
- 6 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் முரண்பாட்டு நிலமை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் காரணமாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு கட்சிகளும் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கட்சியை பதிவு செய்வது குறித்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய கூட்டணி கட்சிகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலமை ஏற்பட்ட…
-
- 4 replies
- 677 views
-
-
அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட எமது பிரதேசங்களை தொடர்ந்து இவ்வாறு தானா வைத்திருக்கப் போகின்றீர்கள்?: கலையரன் எம்.பி. எமது பிரதேசங்கள் தொடர்ந்து முப்பது வருடங்களாக யுத்தம் நடந்த பிரதேசங்கள், முப்பது வருடங்களாக அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட பிரதேசங்கள். அந்தப் பிரதேசங்களைத் தொடர்ச்சியாக இவ்வாறான நிலைமையில் தானா வைத்திருக்கப் போகின்றீர்கள்? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நெடுஞ்சாலைகள், கிராமிய வீதிகள், ஏனைய உட்கட்டமைப்பு, போக்குவரத்து, கூட்டுறவு அமைச்சுகளின் குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக…
-
- 0 replies
- 616 views
-
-
Every Tamil Should listen to this and WORK TOWARDS TO FREE TAMILEELAM http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...al/Net24/KP.mp3
-
- 0 replies
- 641 views
-
-
அமெரிக்க படையினர் இலங்கையில் தங்கிருக்கும் வகையில் பாரிய கட்டடத்தொகுதி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க மரைன் (Marine) இராணுவத்தினரின் தங்குமிட வசதி, துணை கட்டடங்கள் மற்றும் தூதரகம் ஊழியர்களுக்கு அவசியமான ஏனைய வசதிகளை கொண்டுள்ளதாக தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பு அமெரிக்க தூதரக அலுவலகத்தினால் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5.7 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த புதிய கட்டட தொகுதி அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் தூதரக அலுவலக ஊழியர் சபைக்கு பாதுகாப்பான, நிலையான மற்றும் நவீன அலுவலக தொகுதி ஒன்று கிடைக்கவுள்ளதாக அமெரிக்க தூ…
-
- 1 reply
- 421 views
-
-
முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கைது பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதொஷவிற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை – கிண்ணியா பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (15) காலை 6.30க்கு அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கைது (adaderana.lk)
-
- 6 replies
- 1.3k views
-