ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்- கிளிநொச்சியில் கொடூரம்! Wednesday, August 17, 2011, 11:10 கிளிநொச்சி, அக்கராயன் குளம் பகுதியில் பிறந்த குழந்தையை தீமூட்டி எரித்த தாயொருவர் நேற்றுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அக்கராயன் சந்திக்கு அருகில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தான் பெற்றெடுத்த குழந்தையை வீட்டுக் குப்பைக்குள் போட்டுத் தீ மூட்டி எரித்துள்ளார்.இதனைக் கண்ட அயல் வீட்டார் இராணுவத்துக்குத் தகவல் கொடுக்க, இராணுவத்தினர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய தாயைக் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட அந்தப் பெண் கணவனை இழந்தவர் என்று…
-
- 5 replies
- 1k views
-
-
(நா.தனுஜா) நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி சம்மதம் தெரிவித்துள்ளமையாலேயே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. அவ்வாறு நாட்டைப் பிரிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ துணை போயிருந்தால் 113 பேரின் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வது கடினமானதாக அமைந்திருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை மஹிந்த தரப்பு ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 1 reply
- 442 views
-
-
தீபாவளிக்கு விசேட விடுமுறை. தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி கொண்டாடப்படுகின்றமையால் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ்மொழிமூலமான சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மேனக ஹேரத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 13ஆம் திகதி வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு, அந்த வாரத்தில் விடுமுறை தினத்தன்று பாடசாலையை நடத்துமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார். https://athavannews.com/2023/1357825
-
- 3 replies
- 512 views
- 1 follower
-
-
மகிந்த இன்று ஜெனீவா பயணம் [புதன்கிழமை, 13 யூன் 2007, 13:49 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த இன்று புதன்கிழமை முற்பகல் ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். 93 ஆவது அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் கூட்டத்தில் மகிந்த பங்கேற்க உள்ளார். அனைத்துலக தொழில் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஜுவான் செமாமியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் அந்தோனியோ குட்டரேஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை மகிந்த நடத்தவுள்ளார். இச்சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் அவையத்தின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரையும் மகிந்த சந்திக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மகிந்தவுடன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு, ஊக்குவிப்பு மற்றும் நலநோம்புகை அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, டக்ளஸ் தேவானந…
-
- 8 replies
- 1.9k views
-
-
மர்ம மனிதர்கள் விவகாரத்தில் ஜனாதிபதி மிகவும் கவலையுற்றுள்ளாராம்! மக்களது பீதியைவிட ஜனாதிபயின் கவலையில் கவலையடைந்துள்ளார் ஹக்கீம். [Monday, 2011-08-22 17:42:32] மர்ம மனிதர்கள் விவகாரத்தின் பின்னணி மற்றும் உண்மைகள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும். மர்ம மனிதர்கள் விவகாரம் பொதுமக்கள் மத்தியில் விரைவில் பூதாகரமாக பரவுவதில் ஊடகங்களின் பங்களிப்பு கணிசமானதாகும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார். மர்ம மனிதர்கள் விவகாரத்தில் நாட்டு மக்கள் சிந்திக்காதவர்களாக நிதானமற்று நடந்து கொள்கின்றனர். மக்கள் வதந்திகளை விரைவில் நம்பி விடுகின்றனர். இதனால் ஜனாதிபதி மிகவும் கவலையு…
-
- 5 replies
- 807 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டு மண்ணை என்ன செய்வார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை இடித்து அந்த இடத்தில் ஒரு வீடு இருந்ததற்கான அடையாளமே தெரியாது அழித்தவர்கள் அந்த வீடு இருந்த இடத்தில் உள்ள மண்ணை என்னசெய்யப் போகிறார்கள்? என்று வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். வீட்டை இடித்து அழித்து நினைவுச் சின்னங்களை அகற்றுகின்ற ஈனச் செயல்கள் இன நல்லிணக்கத்துக்கு ஒரு போதும் உதவாது. இத்தகைய செயல்கள் தமிழ் மக்கள் மனதில் என்றுமே ஆறாத காயங்களைய…
-
- 3 replies
- 1.8k views
-
-
தொல்பொருள் திணைக்களம், வனவள பாதுகாப்புத் திணைக்களம், வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் என்பன வடக்கில் காணிகளை ஆக்கிரமிக்கின்றன. அவற்றை அரசின் நிர்வாகப் பணிப்புரை ஊடாகத் தடுக்க முடியும். அதற்குரிய நடவடிக்கைகளை எடுங்கள். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், வடக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களம் மத ரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றது. இந்துமத அடையாளங்களை அழித்து பௌத்…
-
- 0 replies
- 367 views
-
-
10 DEC, 2023 | 09:04 AM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பிராந்தியத்தில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இரு படகுகளுடன் 25 இந்திய மீனவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171352
-
-
- 102 replies
- 5.6k views
- 2 followers
-
-
குடும்பிமலைப் பகுதியில் கடும் சமர்- 6 இராணுவத்தினர் பலி: பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க [வெள்ளிக்கிழமை, 6 யூலை 2007, 14:53 ஈழம்] [கொழும்பு நிருபர்] மட்டக்களப்பு மாவட்டம் குடும்பிமலையை (தொப்பிக்கல) நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் இன்று காலை மேற்கொண்ட சிறப்பு இராணுவ நடவடிக்கையில் மேஐர் தர அதிகாரி ஒருவர் உட்பட 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: இன்று காலை மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர். அப்பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. முன்னேறிச்செல்ல முயன…
-
- 9 replies
- 2.4k views
-
-
நிரந்தர அரசியல் தீர்வுக்கான எமது பயணம் தொடரும்! - இரா. சம்பந்தன் [Thursday 2015-04-30 08:00] 19ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சாதாரண மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டுமல்லாமல், ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். அவரின் முன்னேற்றகரமான பாதைக்கு இது நல்ல உதாரணமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலின்போது மக்களிடம் இருந்து வழங்கப்பட்ட ஆணையை ஜனாதிபதி மைத்திரிபால நிறைவேற்றியுள்ளார். அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றியே தீருவேன் என்று ஜனாதிபதி…
-
- 1 reply
- 352 views
-
-
(இராஜதுரை ஹஷான்) பழி தீர்த்துக் கொள்ளும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க தீவிர அரசியலுக்குள் நுழைந்து சுதந்திர கட்சியினை கைப்பற்ற சூழ்ச்சிகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குற்றஞ்சாட்டினார். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு வலு சேர்க்கவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாத்து தனது அரசியல் பிரவேசத்தை மீண்டு;ம் உறுதிப்படுத்திக் கொள்வதே இவரது நோக்கம். ஆகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க அரசியலு;குள் பிரவேசிப்பது எவ்வித தடைகளையும் எமக்கு ஏற்படுத்தாது. அவரே விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார். பொது…
-
- 0 replies
- 357 views
-
-
அம்பலாந்துவையில் நடந்தது என்ன? என்.ஜீவேந்திரன் பாணந்துறை அம்பலாந்துவை பிரதேசத்தில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைகளின் விளைவாக முஸ்லிம், சிங்கள மக்களிடையே பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டார். உண்மையில் இப்பிரச்சினைக்கான காரணமும் அதற்கான பின்னணியும் என்ன? இப்பிரதேசவாசிகளின் கருத்துப்படி கிராமத்தில் மதுபானம் விற்கின்ற தனிநபர் ஒருவரினால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பிரச்சினை இனக்கலவரமாக மாறியதாக கூறப்படுகின்றது. இதுபற்றி அம்மக்கள் கூறும்போது.... ??z-v?? ?? & A?-?-??-x?? Q??-?-??]: "பிரச்சினை நடக்குது என்று எல்லோரும் அந்த வீட்டுல நின்றோம். அவ்வாறு நிற்கும்போது எமக்கு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. யாராவது வந்தால்தான்…
-
- 1 reply
- 1.5k views
-
-
யாழ் பல்கலைக்கழகம் சிங்களமயமாகும் அபாயம்! சட்டக்கல்வி தமிழிலும் வேண்டும்- விரிவுரையாளர் இளம்பிறையன் யாழ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி தமிழிலும் வேண்டும்!
-
- 2 replies
- 506 views
-
-
சர்வதேச நெருக்கடிகளில் இருந்து அரசாங்கத்தைக் காப்பாற்ற கூட்டமைப்பு முயற்சி! - தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு!! சர்வதேச நெருக்கடிகளில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்குச் சென்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் மகாநாடு நேற்று முன்தினம் (17-09-2011) யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே, அக்கட்சியின் உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 16ஆம் திகதி மீண்டு…
-
- 1 reply
- 498 views
-
-
யாழ்ப்பாணம் மூளாய் கொத்தத்துறைப் பகுதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை மாட்டு வண்டிச் சவாரித் திடலைக் கடந்து கொத்தத்துறை இந்து மயாணத்திற்குச் செல்லும் வழியில் மயாணத்திலிருந்து சுமார் 200m தூரத்திலேயே மேற்படி சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலையுண்ட இளம் பெண் வட்டுக்கோட்டை தெற்கு இன்பச்சோலையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் யோகேஸ்வரி (வசந்தி) என அடையாளங்காணப்பட்டுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு இவரின் கணவர் பாலசுப்பிரமணியம் வீதிவிபத்தில் இறந்ததைத் தொடர்ந்து தன்னைவிட பத்து வயதுக்கும் குறைந்த அதே இடத்தைச்சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். சில நாட்களின்முன் இருவரும் காணாமற்போயிருந்த நிலையில் …
-
- 0 replies
- 381 views
-
-
உயிருக்குப் போராடும் ஜெகதீஸ்வரனுக்கு உதவுங்கள் அவசரம் ஒரு உயிர்காக்க வேண்டிய அவசியம் நேற்று முதல் ஒரு உயிரைக்காக்குமாறு வேண்டுதல்கள் ஊடகங்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடைசி யுத்தத்தில் முதுகுப்பகுதியில் காயமடைந்து மருத்துவம் பெற்றுக்கொண்ட நேரம் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர் ஜெகதீஸ்வரன். இந்த ஜெகதீஸ்வரன் என்ற முன்னாள்போராளி கொழும்பு வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் தனது உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த 33வயது இளைஞனின் 2சிறுநீரகங்களும் பாதிப்புற்றுள்ள நிலமையில் மாற்றுச்சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலமையில் இருக்கிறார். எதிர்வரும் 3மாதங்களுக்குள் சி…
-
- 16 replies
- 2.4k views
-
-
சிறிலங்காவுக்கு மேலதிக ராடார்களை அனுப்பியது இந்தியா: "இந்து" சிறிலங்காவுக்கு ஓராண்டுக்குப் பின்ன்ர் மேஎலதிகமாக ராடார்களை இந்தியா அனுப்பியுள்ளதாக சென்னையிலிருந்து வெளிவரும் "இந்து" நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஓராண்டுக்குப் பின்னர் மேலதிகமான ராடார்களை சிறிலங்காவுக்கு இந்தியா அனுப்பியுள்ளதாக புதுடில்லியில் உள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2005ஆம் ஆண்டு இரண்டு ராடார்களை இந்தியா சிறிலங்காவுக்கு அளித்திருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் ஒரு இரணுவ ராடாரை சிறிலங்காவுக்கு அனுப்பியது. அதே வகையான ராடார் கடந்த ஜுன் மாதமும் அனுப்பி …
-
- 4 replies
- 1.7k views
-
-
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். வித்தியாவிற்கு நேர்ந்த கொடுமை இந்நாட்டில் இனி எந்தவொரு யுவதிக்கும் நேரக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். http://www.pathivu.com/news/40350/57//d,article_full.aspx
-
- 41 replies
- 2.6k views
-
-
கிளிநொச்சியில், போதைப் பொருட்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்… February 2, 2019 போதைப் பொருட்களுக்கு எதிராகவும், தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று 02-02-2019 கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்தியிலிருந்து ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி காவல் நிலையம் வரை சென்றடைந்து. அங்கு கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி காவற்துறை மா அதிபருக்கான மகஜரும் கையளிக்கப்பட்டது. போதையை ஒழிக்கும் பாதையை வளர்ப்போம், போதைப் பொருட்களிலிருந்து எம் மாணவர்களை பாதுகாப்…
-
- 0 replies
- 610 views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 12 ஓகஸ்ட் 2007, 17:13 ஈழம்] யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டுவரப்பட்ட கீரிமலையில் ஆடி அமாவாசை நிகழ்வுகளில் கலந்து கொண்ட மக்கள் கடும் சோதனைகளுக்கும் கண்காணிப்புக்கும் உள்ளாக்கப்பட்டனர். கீரிமலை தீர்த்தக் கேணியில் இன்று ஆடி அமாவசையை முன்னிட்டு மக்கள் நீண்ட காலத்தின் பின்னர் பிதிர்க் கடன்களை மேற்கொண்டனர். கீரிமலைக்கு ஆடி அமாவாசை நிகழ்வுகளுக்காக சென்றவர்களை விடவும் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெயர்ந்த மக்கள் தங்களது இருப்பிடங்களைப் பார்க்கச் சென்றோர் அதிகமாக இருந்தனர். பலரது இருப்பிடங்கள் மற்றும் வளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு மனம் குமுறினர். அதேபோல் மாவிட்டபுரம் கந்தசாம…
-
- 0 replies
- 820 views
-
-
படையினர் வசமிருந்த கட்டடங்கள் விடுவிப்பு!! பதிவேற்றிய காலம்: Feb 8, 2019 மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் படையினர் வசமிருந்த சைவமங்கையர் கழகத்தின் கட்டடங்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. மன்னார் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்புவால், சைவமங்கையர் கழகத்தின் தலைவி திருமதி யோகேஸ்வரா சிவாநந்தினியிடம் விடுவிப்புப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன. 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் சைவமங்கையர் கழகம், பெண்களின் வாழ்வியலை பாதுகாத்து முன்னேற்றும் நோக்கில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள், பெற்றோரால் கைவிடப்பட்ட சிறு பெண்குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தது. போர் காரணமாக கழகக் கட்டிடம் மருத்துவ சேவை நிலையமாக இயங்கி வந்த…
-
- 1 reply
- 501 views
-
-
புலிகளுக்கு உந்து சக்தியளிப்பதற்க்குஅமைச்சர் திஸ்ஸ வித்தாரண முயற்சி வீரகேசரி நாளேடு ஹெல உறுமய குற்றச்சாட்டு; மன்னிப்பு கோரவும் வலியுறுத்தல் சர்வகட்சி ஆலோசனைக் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண தொடர்பில் எமக்கு நம்பிக்கையில்லை. மாவட்ட ரீதியாக அதிகாரங்களை பகிர்வதற்கு சர்வ கட்சி ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக திஸ்ஸ விதாரண வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அவர் மன்னிப்புக்கோர வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். விடுதலைப் புலிகள் தோல்வியடைந்துள்ளனர். இந்த நிலையில் புலிகளுக்கு உந்து சக்தியளிப்பதற்கு அமைச்சர் திஸ்ஸ விதாரணவும் அவர் பின்னணியில் செயற்படும் வெளிநாட்டு சக்தியி…
-
- 1 reply
- 992 views
-
-
துரியோதனன் அமைத்த அரக்கு மாளிகையும் வன்னியின் அபிவிருத்திக் காட்சியும் வெளியழகும் அகோரமான உட்பகுதியும் கொண்டமைந்த மெழுகிலான கட்டிடத்தை அரக்கு மாளிகை என்று கூறுவர். பாண்டவர்கள் வனவாசம் செல்லும் கால் அவர்களை தீயிட்டு அழிக்கும் நோக்குடன் துரியோதனன் அமைத்துக் கொடுத்தது அரக்குமாளிகை என்பது இதிகாசம் கூறும் கதை. யாழ்.குடாநாட்டில் டெங்கு பரவுவது கூட எங்கள் அரக்கு நிலைத் தூய்மை என்பது உணர்தற்குரியது. வீட்டு முற்றம் தூய்மையாக இருக்க, கோடிகள் நுளம்பின் உற்பத்தி மையங்களாக இருக்கும். இதன் காரணமாக நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இங்கு அரக்குமாளிகை என்ற விடயம் பிரஸ்தாபிக்கப்படுவதன் நோக்கம், வன்னிப் பெருநிலப்பரப்பின் சமகால நிலைமையை வெளிப்படுத்துவதாகும். வன்னி…
-
- 1 reply
- 860 views
-
-
போதைப்பொருள் கடத்தல், சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களது பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். இன்று முற்பகல் அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்ற சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுராதபுர மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம் என்பது இன்று ஒரு முக்கிய விடயமாக அறியப்பட்டாலும் இது இன்னும் உரிய முறையில் நடைமுறை ரீதியாக மக்கள் மத்தியில் அமுல்படுத்தப்படவில்லை என்று ஜனா…
-
- 2 replies
- 482 views
-
-
வெளிநாட்டு மோகம் : யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு மக்கள் குடிபெயர்வது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாமென யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் விசாந்த கோரியுள்ளார். யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி போலி முகவர் நிறுவனங்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான போலி முகவர்களுள் பலர் கொழும்பை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார். போலி முகவர்கள் கனடாவுக்கு அனுப்புவதாக கூறி யாழ் மக்கள் உள்ளிட்ட பலரிடம் போலி முகவர்கள் பணம் பெ…
-
- 0 replies
- 328 views
-