ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
29 NOV, 2023 | 09:52 AM கடந்த 1756 ஆம் ஆண்டு ஒல்லாந்தரால் கண்டி அரச மாளிகையை தாக்கி அங்கிருந்து சூறையாடப்பட்ட 6 தொல்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து இன்று காலை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட தொல்பொருட்களில் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னரின் திருமண வாள், மன்னரின் தங்கக் கத்தி, இயந்திர துப்பாக்கி மற்றும் இரண்டு பெரிய துப்பாக்கிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த தொல்பொருட்களை நெதர்லாந்தால் இலங்கைக்கு கையளிக்கும் நிகழ்வு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விகவிக்ரமநாயக்க, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பக், புத்…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
Posted on : 2007-06-28 பிரிட்டன் பிடியை இறுக்குவது ஏன்? ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை சர்வதேசம் கையாளும் முறைமைகள் குறித்து இப்பத்தியில் பல தடவைகள் குறை கூறியும் விசனம் தெரிவித்தும் வந்துள்ளோம். அந்த வரிசையில் இப்போது ஈழத் தமிழர் விவகாரம் குறித்து பிரிட்டன் நடந்துகொள்ளும் புதிய போக்குக் குறித்து குறிப்பிட வேண்டியிருக்கின்றது. லண்டனில் உள்ள புலிகளின் பொறுப்பாளர் சாந்தன் நீண்ட காலம் அங்கு தங்கியிருப்பவர். தமது பழைய வழைமையான நடவடிக்கைகளையே தொடர்ந்தும் மேற்கொண்டுவந்த அவரும், அவரது உதவியாளர் ஒருவரும் அங்கு கைதுசெய்யப்பட்டிருக் கின்றார்கள். ஈழத் தமிழர்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த சில அமைப்புகள் பிரித்தானிய அதிகாரிகளால் குடையப்பட…
-
- 1 reply
- 1.8k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் கடைசி கட்டத்தில் பிரிந்து சென்ற நபர்களை கண்டுபிடித்து அவர்களை குடும்பத்துடன் இணைக்க ஒரு முக்கியமான திட்டம்விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக யுனிசெப் என அழைக்கப்படும், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. யுனிசெப்பின் இந்நடவடிக்கை 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பமானது. இந்த வேலைத் திட்டத்தில் முன்னேற்றங்கள் பலவற்றை கண்டுள்ள யுனிசெப், நிர்க்கதியான பல சிறுவர்களை அவர்களது குடும்பத்துடன் ஒன்றிணைத்துள்ளது. எனினும் மேலும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் காணாமல் போயுள்ளதுடன் இளைஞர்கள் பற்றிய விபரங்களும் தெரியவில்லை. காணாமல் போயுள்ள சிறுவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் யுனிசெப் நிறுவனத்தி…
-
- 1 reply
- 414 views
-
-
கொழும்பில் இராஜதந்திர பணிகளை பொறுப்பேற்கும் சந்தோஷ் ஜா 10 DEC, 2023 | 11:32 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வார இறுதியில் கொழும்பில் பணிகளை பொறுப்பேற்கவுள்ளார். இலங்கையுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியிருந்த இராஜதந்திரி சந்தோஷ் ஜா, இலங்கையில் இறுதிப்போர் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு இந்திய திட்டங்களுக்கும் தலைமை தாங்கியுள்ளார். அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில் இலங்கை - இந்திய புதிய இணைப்புகள் குறித்து ட…
-
- 1 reply
- 411 views
- 1 follower
-
-
வாள் வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி; கையில் எடுத்தது வடக்கு மாகாண சபை யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக தலைதூக்கியிருக்கும் வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வடக்கு மாகாண சபை தீவிர நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது. இன்று நடைபெற்று வரும் வடக்கு மாகாண சபையின் 28ஆவது மாதாந்த அமர்வில் அவைத்தலைவரால் குறித்த விடயம் சபைக்கு முன்வைக்கப்பட்டது. தற்போது அதிகரித்துள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தினால் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே வாள்வெட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், இங்கு நடைபெற்று வரும்…
-
- 5 replies
- 837 views
-
-
பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக தமிழ் புலம்பெயர் அமைப்பான உலகதமிழர் பேரவை பௌத்தமதகுருமார்கள் குழுவொன்றுடன் இணைந்து முன்னெடுத்துள்ள இமாலய பிரகடனம் தெளிவற்றது என தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடம் எனினும் முன்னேற்றகரமான விடயங்கள் இடம்பெற்றால் அதற்கு பௌத்தமதகுருமார் ஆதரவளிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் உலக தமிழர் பேரiயும் பௌத்தமதகுருமாரும் இணைந்து இமாலயப்பிரகடனத்தினை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிடம் கையளித்திருந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடத்தின் பேரவைகளின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தேசிய ஐக்கியத்தினையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு எடுக்கப்படும் எந்த முயற்சிகளையும் அஸ்கிரிய பீடம் குழப்பாது என தெரிவித…
-
- 9 replies
- 590 views
-
-
மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களை பகிர்வது: இணைத் தலைமைகள் அதிருப்தி மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்வைத்துள்ள தீர்வு யோசனைகள் குறித்து இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையிடம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சமர்பித்துள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை என்றும் அதனை விட கூடுதல் அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கும் வகையிலான திட்டம் ஒன்றை முன்வைக்குமாறும் இணைத்தலைமைகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகளின் மகாநாடு அண்மையில் நோர்வே தலைநகரில் நடைபெற்றது. …
-
- 0 replies
- 774 views
-
-
பிளேக்கிடம் பொல்லைக் கொடுத்து அடி வாங்கினார் டக்ளஸ் [ புதன்கிழமை, 14 செப்ரெம்பர் 2011, 11:14 GMT ] [ கார்வண்ணன் ] வடக்கில் துணை ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் வலியுறுத்தியுள்ளார். மூன்று நாள் சிறிலங்கா பயணத்தின் முடிவில் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து தான் கரிசனை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிளேக், துணை ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள…
-
- 9 replies
- 1.9k views
-
-
வெலிக்கடையில் பெண் அறிவிப்பாளர் உட்பட 9 பேர் கைது [திங்கட்கிழமை, 23 யூலை 2007, 18:28 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகர் கொழும்பு வெலிக்கடை காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் "தாளம்" வானொலியின் அறிவிப்பாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். கரவெட்டியைச் சேர்ந்த மணிவண்ணன் லோகநகயகி (வயது 28 ) என்ற அறிவிப்பாளரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று "தாளம்" வானொலி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மேற்படி அறிவிப்பாளருக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தவர் இராஐகிரியவில் தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற வைபவமொன்றுக்காக சென்றிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர்களும், சிங்கள…
-
- 1 reply
- 940 views
-
-
செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 03:59 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவை கொமன்வெல்த் அமைப்பில் இருந்து இடைநிறுத்தக் கோரும் போராட்டம் ஒன்றை அவுஸ்ரேலியாவின் கிறீன் கட்சி வட்ட மேசை மாநாடு ஒன்றுடன் இன்று ஆரம்பிக்கவுள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படும் வரை சிறிலங்காவை கொமன்வெல்த் அமைப்பில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என்று கிறின் கட்சி கோரியுள்ளது. இன்று நடைபெறவுள்ள வட்டமேசை மாநாட்டில், மனிதஉரிமை செயற்பாட்டார்கள் ,நீதியாளர்கள் போன்றோர் அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கான ஆதரவைத் திரட்டுவது குறித்து கலந்துரையாடவுள்ளனர். தாம் மேற்கொள்ளும் பரப்புரைகளின் மூலம் சிறிலங்க…
-
- 2 replies
- 647 views
-
-
Published By: VISHNU 12 JAN, 2024 | 03:23 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு 2000 இலட்சம் ரூபாவை மேலதிகமாக ஒதுக்குவதன் காரணம் என்ன? நிதி ஒழுக்கத்தை பற்றி பேசும் ஜனாதிபதி முதலில் நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்வதற்காகவே வரி அறவிடப்படுகிறது. நாமல் ராஜபக்ஷக்கு எவ்வாறு அரச இல்லத்தை வழங்க முடியும். ராஜபக்ஷர்கள் இன்றும் அரச இல்லங்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு வெட்கம் என்பதொன்று இல்லையா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) …
-
- 2 replies
- 319 views
- 1 follower
-
-
தொப்பிகல காட்டுப் பகுதிக்குள் ஆயுதக் கிடங்கு கண்டுபிடிப்பு! கொழும்பு, ஜூலை 30 தொப்பிகல பகுதியிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதி ஒன்றினுள் விடுதலைப் புலிகளுக்குச்சொந்தமான ஆயுதக் கிடங்கு ஒன்றினை நேற்றுப் படையினர் கண்டுபிடித்துள்ளனர் என்று பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். நேற்றுப் பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கிடங்கிலிருந்து 120 மில்லிமீற்றர் ரக மோட்டார் துப்பாக்கி01, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் 12, 82 மில்லிமீற்றர் ரக மோட்டார் துப்பாக்கி01, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள்125, 82 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியைக் கட்டுப்படுத்தும் …
-
- 26 replies
- 6.1k views
-
-
பதிந்தவர்: ஈழப்பிரியா திங்கள், 26 செப்டெம்ப்ர், 2011 தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளை, தமிழக தமிழ் அமைப்புகள் ஆகியவை இணைந்து இலங்கை தமிழர் ஆதரவு ஊர்திப் பயணத்தை தொடங்கியுள்ளன. ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் தொடங்கிய இலங்கை தமிழர் ஆதரவு ஊர்திப்பயணம் நேற்று மதுரை வந்தது. இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ததற்காக, அதிபர் ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை செயல்படுத்த, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது, இந்த ஊர்திப் பயணத…
-
- 0 replies
- 501 views
-
-
Posted on : 2007-08-06 சர்வதேசக் கருத்து நிலைப்பாடு கொழும்புக்கு எதிராகத் திரும்புகிறது இராணுவ நடவடிக்கைப் போக்கில் - யுத்த முனைப்பில் - தீவிரமாக இருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச அழுத்தம் கழுத்தை நெரிக்கும் சுருக்குக் கயிறாக இறுகி வருவதை அறிய முடிகின்றது. வரும் வாரங்களிலும் மாதங்களிலும் அது இன்னும் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால் அந்தப் புறநிலை யதார்த்தத்தை இலங்கை அரசுத் தலைமை புரிந்து கொண்டிருப்பதாக - உணர்ந்துகொண்டிருப்பதாக - தெரியவில்லை. இலங்கையில் சீர்குலைந்துபோயுள்ள மனித உரிமைகள் விவகாரத்தை அடிப்படையாகச் சுட்டிக்காட்டி, இலங்கைக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் முடக்குவது குறித்து அமெரிக்க செனட்சபை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகின்றது. 2…
-
- 1 reply
- 1.7k views
-
-
வடக்கை ஆக்கிரமித்த கேரள கஞ்சா…. February 2, 2019 வடக்கில் இவ் ஆண்டின் முதல் மாதத்தில் மாத்திரம் சுமார் 400 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக 111 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வடக்கு சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் ரொசான் பொர்னான்டோ தெரிவித்துள்ளார். இன்று காலை காங்கேசன்துறையில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் கடந்த ஆண்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் அதனோடு தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnew…
-
- 0 replies
- 274 views
-
-
Aug 12, 2007 at 03:41 PM யாழ்ப்பாணக்குடாநாட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களும் இனிமேல் பாதுகாப்பு அனுமதி பெறவேண்டும். இந்த நடைமுறை இன்று தொடக்கம் அமுல் செய்யப்படுகின்றது. பலாலி பாதுகாப்பு நடவடிக்கைத் தலைமையகம் நேற்றிரவு இத்தகவல்களை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தலைமையகம் நேற்றிரவு விடுத்த செய்திக்குறிப்பில் தெவிக்கப்பட்டுள்ளதாவது: 55 வயதுக்கு மேற்பட்டோரும் 10 வயதுக்கு குறைந்தவர்களும் வெளிமாவட்டங்களுக்குச் செல்ல பாதுகாப்பு அனுமதி பெறத்தேவையில்லை என கடந்த மாதம் 30ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு நிலைமையைக்கருத்திற்கொண்டு மீண்டும் பாதுகாப்பு அனுமதி பெறுவதற்கான வயதெல்லையை மாற்றியமைக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது…
-
- 0 replies
- 873 views
-
-
வவுனியா வடக்கில்- திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்!! பதிவேற்றிய காலம்: Feb 7, 2019 வவுனியா வடக்கு கச்சல் சமளங்குளத்தில் நடைபெறும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தையும், பௌத்த மத ஆக்கிரமிப்பையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா மாவட்டத்தின் ஒரு பகுதியான வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவு எல்லைக்குட்பட்ட கச்சல் சமளன்குளம் சீரமைக்கப்படுவதாகவும், அக்குளத்தின் கீழ் உள்ள காணிகள் அப்பிரதேசத்திற்கு வெளியேயிருந்து கொண்டு வந்து குடியேற்றப்படும் மக்களுக்கு ப…
-
- 1 reply
- 715 views
-
-
அரசியல் தீர்வு யோசனையை ஜனாதிபதி ஐ.நாவில் முன்வைத்து உரையாற்றுவார் சர்வதேச ஆதரவைக் கோரும் நோக்குடன் அடுத்த மாதம் 23ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 62ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் இலங்கை ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வைத்து இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகத் தமது அரசு முன்வைக்கும் திட்டம் குறித்து சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைப்பார் எனக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த யோசனைத் திட்டத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, சம்பந்தப்பட்ட தரப்புகளை பேச்சு மேசைக்குக் கூட்டி வருவதற்கு ஒத்துழைக்குமாறு சர்வதேச சமூகத்தை அவர் கோருவார் என்றும் கூறப்படுகின்றது. மாகாண மட்டத்துக்கு அதிகாரப்பகிர்வு உட்பட …
-
- 0 replies
- 734 views
-
-
எம். றொசாந்த் / 2019 பெப்ரவரி 14 வியாழக்கிழமை, பி.ப. 02:25 நெடுந்தீவு வைத்தியசாலைகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக நிரந்தர வைத்தியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று (14) வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது. …
-
- 0 replies
- 252 views
-
-
Published By: DIGITAL DESK 3 24 FEB, 2024 | 03:21 PM இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றினை இந்திய - இலங்கை கடல் எல்லையில் நடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. இன்று சனிக்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலுயே, அந்த அமைப்பின் பிரதிநிதி பாக்கியநாதன் றேகன் அவர்கள் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய இழுவை படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் முதல்களை அழித்து வந்த வேளை, எமதா கடற்படையினரால் அந்த இந்திய இழுவைப்படகுகள் கைப்பற்றப்பட்டு அதில…
-
- 1 reply
- 296 views
- 1 follower
-
-
வன்னியில் பருவமழை ஆரம்பித்து விட்ட தால் மீளக்குடியமர்ந்த மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்ற னர். நிரந்தர வீடுகள் இல்லாத நிலையில் தற்காலிக கொட்டில்களில் வசித்து வரும் மக்கள் நாளாந்தம் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். வன்னியில் பருவமழை ஆரம்பித்து விட்ட தால் மீளக்குடியமர்ந்த மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்ற னர். நிரந்தர வீடுகள் இல்லாத நிலையில் தற்காலிக கொட்டில்களில் வசித்து வரும் மக்கள் நாளாந்தம் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். குழந்தைப் பிள்ளைகளைக் கொண்ட குடும் பங் கள், நுளம்பாலும், மழைக் குளிராலும் தம்மைப் பாது காத்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். தாழ்வான பகுதிகளில் தற்காலிகக் கொட்டில்களை அமைத்து இருக்கும் மக்கள் மழை தொடர…
-
- 1 reply
- 753 views
-
-
கனடா, செக் குடியரசின் இராணுத் தளபதிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர் கனடா மற்றும் செக் குடியரசின் மூத்த இராணுவத் தளபதிகள் யாழ்ப்பாண குடாநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலவரம் மற்றும் அமைதியைப் பேணுவதற்கு நடைபெற்றுவரும் முயற்சிகள் குறித்து, யாழ்ப்பாணக் குடாநாட்டு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியுடன் கலந்துரையாடியுள்ளனர். இந்தியா, சிறிலங்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் பாதுகாப்பு விடயம் குறித்து ஆலோசனைகளை வழங்கும் செக் குடியரசின் இராணுவத் தளபதியான கேர்ணல், ஜின்றிச் ஹக்கரும்(Colonel Jindrich Hacker) கொழும்பிலுள்ள கனடியத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் கேர்ணல் ஹரி…
-
- 1 reply
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகளில் இருந்து கருணா பிரியும்போது பெருந்தொகையான ஆயுதங்கள் வேறு அணிக்கு கைமாறியுள்ளதாகவும் அதுதான் நாட்டில் வன்செயல்களுக்கு காரனம் எனவும் கோத்தாபாய கூறியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வாறாயின் யார் அந்த வேறு அணி. கருணா அல்லது பிள்ளையான் இருவரும்தான் விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்து செல்கையில் ஆயுதங்களுடன் சென்றனர். அந்த ஆயுதங்களை வைத்துக்கொண்டு தாம் தனித்து இயங்கப்போவதாக பல்வேறு புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர். இதற்கான வீடியோ ஆதாரங்களும் உள்ளன. ஆகவே கருணா பிள்ளையானிடம் தான் ஆயுதங்கள் இருக்கின்றது அதனால்தான் நாட்டில் பிரச்சினை என சொல்லாமல் சொல்கிறார் கோத்தாபாய . http://ww…
-
- 3 replies
- 1.7k views
-
-
உண்மை நல்லிணக்க ஆணைக்குழு யோசனை – இழுத்தடிக்கும் பாதுகாப்பு அமைச்சு உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சு தாமதித்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனை அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை இரண்டு வாரங்களுக்கு முன்னர், அமைச்சரவையில் முன்மொழிந்திருந்தார். பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளுக்காக, இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒத்திவைத்திருந்தார். எனினும், பாதுகாப்பு அமைச்சு இன்னமும் தமது கருத்தை அமைச்சரவைக்கு அனுப்ப…
-
- 0 replies
- 187 views
-
-
[ புதன்கிழமை, 02 நவம்பர் 2011, 03:34 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] கொலன்னாவில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் படுகாயமடைந்த ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்படுவதற்காக சிறி ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளார். நேற்றிரவு 9 மணியளவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் நோயாளர் காவுவண்டி மூலம் மருத்துவமனையில் இருந்து கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அவுஸ்ரேலியாவில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும், நேற்றிரவே சிறப்பு விமானம் மூலம் மருத்துவர்கள், தாதிகள் அடங்கிய குழு ஒன்றுடன் அவரை கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 731 views
-