ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
17 நவம்பர் 2007 இன்று, உலக சைவப் பேரவையின் தென்னாபிரிக்க கிளை கார்த்திகை தீபம் விழாவைக் கொண்டாடியது. டேர்பன், சற்ஸ்வொர்த் நகர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நவம்பர் 02 அன்று இலங்கை விமானப் படையால் கொல்லப்பட்ட பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களையும், அவருடன் வீரச்சாவடைந்த போராளிகளையும் நினைவுகூர்ந்து சில மணித்துளி அகவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் வாசிக்க: http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 962 views
-
-
இராணுவப்புலனாய்வாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் கிளிநொச்சியில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. இதில் எஸ்.கரன் என்ற வர்த்தகரே காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வர்த்தகரும், இன்னும் சிலரும் வாகனத்தில் பரந்தன் சந்தியை அண்மித்ததாக பயணம் செய்து கொண்டிருந்தபோது இவர்களை பின் தொடர்ந்து வந்த வாகனத்தினர் முன்செல்ல அனுமதி கேட்டுள்ளனர். எனினும் இதற்கு அவர்கள் வாகனத்திற்கு வழிவிட சிறிது நேரம் எடுத்துள்ளது இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சற்றுத் தூரத்தில் இவர்களை முந்திக் கொண்டு சென்று தமது வாகனத்தை குறுக்கே நிறுத்தி வாகனத்தை நிறுத்தி வாய்த்தர்க்கம் புரிந்துள்ளனர். …
-
- 0 replies
- 821 views
-
-
02 JUL, 2024 | 04:31 PM யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை மருந்தகத்திற்குள் பூட்டி வைத்த கடை உரிமையாளரை எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள மருந்தகமொன்றில் நேற்று திங்கட்கிழமை (01) சுகாதார அமைச்சகத்தின் உணவு கட்டுப்பாடு நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் மருந்தகத்தின் அனுமதி தொடர்பாக சோதனையிட சென்றனர். சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கும் போது அதிகாரிகளை கடை உரிமையாளர் மருந்தகத்திற்குள் வைத்து பூட்டி அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட…
-
- 0 replies
- 199 views
-
-
ஜாதிக ஹெல உறுமயக் கட்சியின் முக்கிய இரு தலைவர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவருக்கும் இடையே முறுகல்நிலை தோன்றியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
வீட்டுச் சின்னம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. தேர்தல் வரும் போது சரியான முடிவு எடுப்போம் - ஜனா
-
- 0 replies
- 161 views
-
-
பயங்கரவாதிகள் அரசியல் கட்சிகளில் இணைந்து செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தளை கொஹொன்வலவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே பாதுகாப்புச் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் வடக்கு கிழக்கில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும், சில பயங்கரவாதிகள் அரசியல் கட்சிகளுடன் இணைந்து நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முனைகின்றார்கள். பயங்கரவாத நடவடிக்கைளில் ஈடுபட்டு காணாமல் போவோர் குறித்து அரசாங்கமோ, இராணுவமோ பொறுப்பு சொல்லாது. சில வெளிநாட்டு நிறுவனங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருகின்றன என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 482 views
-
-
சீயோன் தேவாலய குண்டுவெடிப்பு – மேலும் ஒரு உயிரை காவுகொண்டது! மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அவரது உறவினர்களிடம் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த அருண்பிரசாத் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிசிச்சை பிரிவில் சிசிச்சை பெற்றுவந்தார். இதனையடுத்து அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில், ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி மேலதிக சிசிச்சைக்காக உலங்கு விமானத்தின் மூலம் கண்டி போதனா வைத்த…
-
- 0 replies
- 407 views
-
-
நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொதுமக்களின் அமைதியை பேணும் நோக்கில், முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது. அதற்கமைய இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் சகல உறுப்பினர்களும் நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். நேற்று(22) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/306679
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
சிறிலங்காவில் பெருந்தொகையான தமிழர்கள் உரிய காரணமின்றி கைது செய்யப்பட்டதை எதிர்த்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 655 views
-
-
கந்தளாயில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் இருவர் கைது! வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர் கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள வனவிலங்குகளை நீண்ட காலமாக சுட்டு கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சீகிரியாவை சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் குழு ஒன்று கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு முன்பாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர் கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில்…
-
- 2 replies
- 413 views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 42 பேர் எதிர்வரும் 8ம் திகதி சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் – ஓயாமடுவ பகுதியில் இடம்பெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் வைத்து எதிர்வரும் 8ம் திகதி இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் 12 ஆயிரம் பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதில் 10,450 சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் விரைவில் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் கூறியுள்ளது. http://www.ilankathir.com/?p=3917
-
- 0 replies
- 691 views
-
-
இலங்கை இராணுவத்திற்கான பயிற்சிகளை இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூன்று நாள் பயணமாக நேற்று புதுடெல்லியைச் சென்றடைந்தார். இன்று காலை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த அவர், பின்னர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் இரு நாட்டுப் பிரதமர்களும் கூட்டாக ஊடகவியலாளர்களைச் சந்தித்து தமது சந்திப்புத் தொடர்பாக விளக்கமளித்தனர். இதன் போது இந்தியப் பிரதமர் குறிப்பிடுகையில், இந்திய - இலங்கை உறவில் இந்த ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்கது. முதலில் இலங்கை இலங்கை மைத்திரிபால சிறிசேன பதவியேற்பிற்கு பின்னர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்…
-
- 0 replies
- 493 views
-
-
ருஹுனு பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் பெருந்தொகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தெரிவித்துள்ளார். இரண்டு வாளிகள் நிறைந்த ஆணுறைகள் ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அறையினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக உபவேந்தரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ருஹுனு பல்கலைக்கழகத்தில் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு 15 வருடங்களாக எந்தவொரு பீடாதீபதியும், பேராசிரியர்களும் சென்றதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அது ஒரு தடை செய்யப்பட்ட பகுதியாக காணப்பட்டதாகவும், அதனுள் மிகவும் கொடூரமான முறையில் பகிடிவதை செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய மாணவர்களை பலவந்தமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை …
-
- 2 replies
- 514 views
-
-
இலங்கையில் மிகவும் உயிர் அச்சுறுத் தலுக்கு உள்ளான 64 பேர் இந்தோனேசியக் கடற்பரப்பினூடாக நேற்றையதினம் 11ம் திகதி அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றையதினம் இவர்களை அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் கைது செய்த அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் 64 இலங்கைப் பயணிகளுடன் இந்தோனேசியாவிலிருந்து பறப்பட்ட 45அடி நீளமான படகே அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. http://www.saritham.com/?p=50713
-
- 0 replies
- 747 views
-
-
நாட்டில் இரு ஜனாதிபதிகள் இருக்க முடியாது - மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இரு ஜனாதிபதிகள் இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது புதன் கிழமை இடம்பெற்ற வாராந்தர அமைச்சரவை சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது ஜனாதிபதி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இலங்கையில் இரு ஜனாதிபதிகள் இருக்கமுடியாது அவ்வாறான செயற்பாடுகள் முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டும் என்றார் சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி குடும்பத்தினருடன் தங்கியுள்ள பாசிக்குடா சுற்றுலாவிடுதியை சுற்றி முப்படையினர் தீவிரபாது…
-
- 0 replies
- 566 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் இருவரும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். குறித்த இருவரும் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, உடல்நலக் குறைவு காரணமாக தேசிய மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். படத்தின் காப்புரிமை மருத்துவமனையில் அன…
-
- 3 replies
- 686 views
- 1 follower
-
-
கொழும்பில் மட்டக்குழியில் மதுபானக் கடையில் வேலை செய்து வந்த கணவரைக் கடத்திய விவகாரம் தொடர்பில் கணவரைத் தேடச் சென்ற 3 பிள்ளைகளின் தாயாரான காரைநகரைச் சேர்ந்த Ms. Marisan Annachcheli என்பவரை சிறீலங்கா சிங்களப் பொலிஸ் அதிகாரிகள் தவறான பாலியல் நடத்தைக்கு அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் தன்னை தவறான பாலியல் நடவடிக்கைக்கு அழைத்த பொலிஸ்காரர்களில் ஒருவரின் பதிவிலக்கத்தை (28445) வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் வவுனியாவில் நடந்துள்ளது. தற்போது அப்பெண் தவறான பாலியல் நடத்தையுள்ள ஒருவர் என்று சிறீலங்காப் பொலிஸார் கதைகட்டி வருகின்றனராம்..! A police official threatens to kill a woman if she will not come to bed (LeN, 2008 Jan. 01, 9.20 AM) Ms. Marisan…
-
- 1 reply
- 2.9k views
-
-
பந்து இப்போது இந்தியாவிடம் "தி வீக்என்ட் லீடர்' என்ற ஆங்கில ஊடகத்தில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. இதில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்கா தலைமையில் மேற்குலகு முயற்சிக்கிறது, இந்திய அரசு இந்த விடயத்தில் தீர்மானத்துக்குச் சாதகமான நிலைப்பாட்டையே எடுக்கும் என அவதானிகள் கருதுகின்றனர். மே 2009 இல் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 11 ஆவது கூட்டத் தொடரிலும் இலங்கைக்கு எதிராக 17 நாடுகள் பிரேரணை ஒன்றை முன்வைத்தன. அதனை எதிர்ப்பதில் இந்தியா விடாப்பிடியாக நின்றது. அதனால் அந்தப் பிரேரணை பின்னர் இலங்கைக்கு ஆதரவு தெரிவி…
-
- 20 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணம் வருகிறார் போக்குவரத்து அமைச்சர் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்றைய தினம் வடக்கிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். இன்று காலை 5.30மணியளவில் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து விசேட ரயில் மூலம் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் அமைச்சர் நண்பகல் 12.30 மணியளவில் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. யாழ். புகையிரத நிலையத்தில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலில் பங்கெடுக்கும் அமைச்சர் தொடர்ந்து காங்கேசன்துறை ரயில் நிலையம் வரை பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் யாழ். கோண்டாவில் பிரதான பஸ் டிப்போவிற்கு விஜயம் செய்யும் அமைச்சர் நிமால் யாழ்ப்பாணத்து அரச பேரு…
-
- 0 replies
- 308 views
-
-
வேள்வித் தடை மீதான மேன்முறையீட்டுத் தீர்ப்பு ஒத்திவைப்பு இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 18ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனுவை மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ். கணேசராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார். மனுவின் எதிர்மனுதாரர்களாக சட்ட மா அதிபர், சைவ மகா சபையினர் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த மனு மீதான விவாதம், சமர்ப்பணங்கள் நிறைவடைந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இன…
-
- 0 replies
- 291 views
-
-
Published By: VISHNU 14 SEP, 2024 | 02:02 AM தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. அந்நிலையில், யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க கோரி யாழ், நீதவான் நீதிமன்றில் பொலிஸார் வெள்ளிக்கிழமை (13) மனு தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 18ஆம் திகதி முன்னெடுப்பதாகவும் அன்றைய தினம் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள செல்வராசா கஜ…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
போர் நிறுத்தத்தை நிராகரித்து அரசு சர்வதேச வெறுப்பைத் தேடியுள்ளது கடுமையாகக் கண்டிக்கிறது ஐ.தே.க போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறும் பொறுப்பை ஒருதலைப்பட்சமாகத் தனது தோளில் போட்டுக்கொண்டிருப்பதன் மூலம் இலங்கைக்கு எஞ்சியிருப்பது சர்வதேச வெறுப்பாகும். இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை அரசின் முடிவை கடும் விசனத்துடன் கண்டித்திருக்கின்றது. போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் தீர்மானம் குறித்து ஐ.தே.கட்சி நேற்று விடுத்த விசேட செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 1 reply
- 3.7k views
-
-
நமது மக்கள் கொல்லப்படுவதை அனுமதித்த அதே உலகத்திடம் நீதி கேட்டுக் கூடியுள்ளோம்! - ஜெனீவா கவனயீர்ப்பு நிகழ்வில் ருத்ரகுமாரன் உரை மக்கள் உயிர்களைவிட அரசியல் நலன்களை பெரிதென மதிக்கும் இந்த சர்வதேச ஒழுங்கின் அறமுறை அற்ற அணுகுமுறைகள் நமது மக்கள் கொல்லப்படுவதனை அனுமதித்து நின்றன. நமது மக்கள் கொல்லப்படுவதை அனுமதித்த அதே உலக சமுதாயத்திடம் நமது மக்களுக்கான நீதியினைக் கோருவதற்கு நமக்கு எல்லாவித தார்மீக உரிமைகளும் உள்ளன. இந்தத் தார்மீக உரிமையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், நியாயத்தின் அடிப்படையில், தர்மத்தின் அடிப்படையில் நாம் இங்கு நீதி கேட்டுக் கூடியுள்ளோம். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் …
-
- 3 replies
- 1.2k views
-
-
சம்பந்தர் ஐயா மற்றும் சுரேஸ் பிறேமசந்திரனின் செவ்வி
-
- 0 replies
- 686 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றேன் - ஜனாதிபதி ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான காலத்தில் அரசாங்கம் தனது அனைத்து கடமைகளையும் நிறைவேற்றியுள்ளதுடன், அத்தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பினை இலங்கையிலிருந்து ஒழித்தது மாத்திரமன்றி, அத்தாக்குதல் இடம்பெறுவதற்கு ஏதுவாக அமைந்த சகல விடயங்கள் தொடர்பாகவும் தற்போது பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி ஸ்ரீ தெரிவித்தார். இத…
-
- 1 reply
- 458 views
-