ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
நுகர்வோர்... பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஓகஸ்ட் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதற்கமைய, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு உணவை விற்பனை செய்வார்களாயின், அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒ…
-
- 0 replies
- 231 views
-
-
வவுனியா முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பராமரிக்கப்படும் முறை தொடர்பாக ஐ.நா. சபையால் அண்மைக்காலத்தில் தெரிவிக்கப்படும் விமர்சனங்களில் பெரும்பாலானவற்றை தாம் ஏற்றுக்கொள்வதாக சிறிலங்கா தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 645 views
-
-
https://www.youtube.com/watch?v=WKPXiaoubj0
-
- 0 replies
- 395 views
-
-
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரண் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நிதிமன்றில் சரணடைந்தார். http://www.virakesari.lk/article/21096
-
- 10 replies
- 598 views
-
-
இலங்கையில் உணவுக்கு சிக்கல்? ஐ.நா எச்சரிக்கை கடுமையான வரட்சி மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட அதிக மழைவீழச்சியினால், இந்நாட்டின் வயல்நிலங்கள் பல அழிவடைந்துள்ளன. இதனால், இலங்கையில் 9 இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள், உணவுப் பாதுகாப்புத் தொடர்பான அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்று, ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியன வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இவ்வாண்டின் நெல் அறுவடை, 2.7 மில்லியன் தொன்களாக மாத்திரமே காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளன. இது, கடந்த வருட அறுவடையுடன் ஒப்பிடப்படுமிடத்து, 40 சதவீத வீழ்ச்சியாகும் எ…
-
- 0 replies
- 233 views
-
-
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற குழு அதிருப்தி 17 அக்டோபர் 2013 இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மற்றும் அரசியல் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டமைக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடையாது என பிரித்தானிய பாராளுமன்றின் வெளிவிவகார குழுப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பிரித்தானியா பங்கேற்பதனை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனம் செய்துள்ளனர். கொள்கை அடிப்படையில் அமர்வுகளுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர். மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரதமர் கமரூன் நேரில் பார…
-
- 1 reply
- 458 views
-
-
சுமந்திரன் நாடாளுமன்றத்தை விட மாகாணசபைக்கே பொருத்தமானவர் – சுரேஸ் பிரேமச்சந்திரன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது நாடாளுமன்றக் கடமைகளைவிட மாகாண சபைக்குள்ளேயே அதிக தலையீடுகளை மேற்கொள்வதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால், அவர் நடாளுமன்றப் பதவியைத் துறந்துவிட்டு, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதே பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சுமந்திரன் தனக்கும், விக்னேஸ்வரனுக்குமிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, முதலமைச்சர் சி.வி.வக்னேஸ்வரனுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி முதலமைச்சர் பதவியைப் பறிக்கவேண்டுமென்பதற்காகவே இக்குழப்பங்களை ஏற்படுத்தி வரு…
-
- 3 replies
- 602 views
-
-
விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான். 1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம். எப்படியோ திருகோணமலையை நெருங்கியபோது எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது. கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர். அதி…
-
- 1 reply
- 1.8k views
-
-
"நீங்கள் யாழ்ப்பாணத்தை விட்டு லலித்தை வேறு இடத்திற்கு அனுப்பப் போகிறீர்களா அல்லது நாங்கள் அவனை கடத்த வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா?" என லலித்தினுடைய அப்பாவான ஆறுமுகம் வீரராஜாவிடம் 2011 நவம்பரில் தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டது. தொலைபேசி இலக்கம் புதிதாகவும் இருந்தது. "நான் ஒரு தொழிலாளியாக உள்ளேன். தயவுசெய்து எனது மகனை கடத்த வேண்டாம்" என லலித்தின் தந்தையார் இறைஞ்சினார். இவரது வேண்டுகோள் வீணாகியது. தொலைபேசி மிரட்டல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர், 28 வயதான தமிழரான, மனித உரிமைச் செயற்பாட்டாளருமான லலித் கடத்தப்பட்டார். ஆயுதம் தரித்த சிலர் லலித் மற்றும் இவரது நண்பர் ஒருவரையும் யாழ்ப்பாணத்தில் வைத்து வெள்ளை வாள் ஒன்றில் கடத்திச் சென்றனர். இந்தக் கடத்தல் சம்பவ…
-
- 0 replies
- 237 views
-
-
புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கையில் ஒருமித்த நாடு; பௌத்தத்திற்கான முதலிடம் நீக்கம் எனக் கூறி கூட்டு எதிர்க்கட்சியினர் போர்க்கொடி;சபையில் பாரிய சர்ச்சை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அரசியலமைப்பு தொடர்பாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் அரசியலமைப்பு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஐக்கிய இலங்கை என்ற பதம் மாற்றப்பட்டு ஒருமித்த நாடு என்றுள்ளது. பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் முதலிடத்தினை நீக்குவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிர்க்கட்சி உறுப்…
-
- 0 replies
- 185 views
-
-
மாவை – அனந்தி – சுமந்திரன் அமெரிக்கா பயணமாகின்றனர்:- 28 அக்டோபர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகிய இருவருமே இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். அமெரிக்கத் தமிழ்;ப் பேரவையினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றுக் கொண்டு குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளனர். இதேவேளை, அமெரிக்க அரசாங்கத் தரப்பினரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பார்களா என்பது உற…
-
- 31 replies
- 2.4k views
-
-
11 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம்: முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு சிக்கல் 2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், சந்தேகநபராக, முன்னாள் கடற்படைப் பேச்சாளர் ஒருவர் பெயரிடப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகாது தவித்து வரும், கடற்படையின் லுத்தினல் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை கைதுசெய்யுமாறு, கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல், குறித்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிர…
-
- 3 replies
- 860 views
-
-
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணிக்கு... தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமனம்! ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே இவ்வாறு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2021/1249093
-
- 4 replies
- 695 views
-
-
வெள்ளிக் கிழமை (20/11/2009) இரவு பத்து மணிக்கு "இன அழிப்பின் பின்னணியில்" என்ற தலைப்பில் சூரியோதயம் (http://firstaudio.net/) வானொலியில் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது. 'புதிய திசைகள்' அமைப்பினர் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளனர். http://kuralweb.com/200911/discussion.aspx
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழர்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் பூர்வாங்க ஆய்வைக்கோரும் அறிக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு (நா.தனுஜா) ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நீதிநிலைநாட்டப்படுவதை வலியுறுத்தியும் இலங்கையில் தண்டனையின்மைக்கு எதிராகப்போராடுகின்ற முக்கியமானதோர் சர்வதேச நடவடிக்கையாகவும் ரோமசாசனத்தின் 15 ஆவது பிரிவின்கீழ் பூர்வாங்க ஆய்வொன்றினை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் தகவல் அறிக்கையொன்று கனடாவைத் தளமாகக்கொண்டியங்கும் தமிழர் உரிமைக்கான குழுமத்தினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ…
-
- 0 replies
- 126 views
-
-
புலம் பெயர் தமிழர் மாநாடு - பிரத்யேக காட்சிகள் https://www.youtube.com/watch?v=oQFJwITt6Nc#t=130
-
- 0 replies
- 548 views
-
-
வட-கிழக்கை இணைப்பதற்கான எதிர்ப்பும் இனப்பிரச்சினைத்தீர்வும் “வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது காலாவதியாகிப் போன ஒன்று. இனிமேல் அதுபற்றிப் பேசுவதற்கே இடமில்லை.” என்று மகிந்த ராஜபக்ஸ கூறியிருக்கிறார். தமிழ் பத்திரிகை ஒன்றின் ஆசிரியருடனான சந்திப்பின் போதே அவர் இதை வெளி;ப்படையாகக் கூறியிருக்கிறார். “வடக்கு-கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. அது காலாவதியான விவகாரம். புலிகளின் அரசியலுடன் அதுவும் செத்துவிட்டது. புலிகளின் அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக் கொண்டு வராதீர்கள். கிழக்கில் இன்று பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அப்படியிருக்க அவர்களின் விருப்பை மீறி நாம் வடக்கு-கிழக்கை இணைத்து, அவர்களுக்கு அநீதி இழைக்க முடியாது. ஒரு பிரதேசத்துக்கு ஒ…
-
- 0 replies
- 1.4k views
-
-
'பொதுநலவாய அமைப்பின் ஆரம்ப நாடாக இலங்கை விளங்குகின்றது' என்று பொதுநலவாய அமைப்பின் தலைவி இரண்டாம் எலிசபெத் மகாராணியை பிரதிநிதித்துவப்படுத்தி மாநாட்டில் கலந்துகொண்ட பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்தார். 'தமது மக்களின் நலனுக்காக சேவையாற்றி நீதி, சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதும் பொதுநலவாய அமைப்பின் கொள்கைகளைப் பாதுகாப்பதும் அமைப்பின் உறுப்பினர்களது கடமையும் பொறுப்பும் ஆகும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எலிசபெத் மகாராணியால் கடந்த 60 வருட காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை ஞாபகப்படுத்திய இளவரசர் சார்ள்ஸ், மகாராணியின் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். சுனாமி அனர்த்தத்தின் பின் 2005ஆம் ஆண்டில் தான் இறுதியாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும் இக்கால …
-
- 0 replies
- 430 views
-
-
‘சாப்பிட்டுவிட்டு முடிவெடுத்தால் அடிபணியோம்’ அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்... ? நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை விவகாரம் முட்டாள்தனமான முடிவு என்கின்றனரே? ராஜித: முட்டாள்தனமான முடிவு குறித்து எனக்குத் தெரியாது. வைத்தியசாலையை அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். தேநீர் கடையைக் கூட நடத்தாதவர்களுக்கு அது பற்றித் தெரியாது. ? நன்கொடை செய்தது ஏன்? ராஜித: அவரிடம் கேளுங்கள். ? ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது? ராஜித: அவை அமைச்சரவைப் பத்திர…
-
- 0 replies
- 234 views
-
-
எறிகணையை வெட்டமுயன்ற இளைஞர் உடல் சிதறிப் பலி;சிறுவன் படுகாயம்! கிளிநொச்சி, உமையாள்புரத்தில் நேற்று மாலை நடந்த வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயமடைந்தார். உமையாள்புரம், சோலைநகர் பகுதியில் இடம்பெற்றஇந்தச் சம்பவத்தில் சிவலிங்கம் யுவராஜ் (வயது-25) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். அவரது சகோதரரான சிவலிங்கம் நிலக்சன் (வயது-13) படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வெடிக்காத நிலையில் இருந்த எறிகணை ஒன்றைக் கண்டெடுத்த இளைஞர், அதைக் கிரைண்டரால் வெட்ட முற்பட்டபோது அது வெடித்தது என்று தெரியவருகின்றது. அந்தப் பகுதியில் பல ஆபத்தான வெடிபொருள்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பழைய இரும்பு…
-
- 4 replies
- 483 views
-
-
வட மாகாணசபைக்கு மேலதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யுமாறு வடமாகாணசபை கோரிக்கை விடுத்துள்ளது. கட்டிட நிர்மாணம் மற்றும் வாகன கொள்வனவு ஆகியவற்றுக்காகவே இந்த மேலதிக நிதி கோரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். வட மாகாண சபையினால் தேசிய நிதி ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய நிதி ஆணைக்குழுவே மாகாண சபைகளுக்கான நிதியொதுக்கீட்டினை தீர்மானிப்பது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் கீழ் வட மாகாண சபைக்கு 17 பில்லியன் ரூபா நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே வட மாகாண சபையினால் மேலதிக நிதிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை திறைசேரியின் அன…
-
- 1 reply
- 567 views
-
-
தமிழர்கள் வாழ்கின்ற தாயகப் பிரதேசத்தில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தாமாக உருவானதாக நாம் கருதவில்லை. திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதொன்றாகவே காணப்படுகிறது என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார். இதனை வலுப்படுத்தும் முகமாகத் தான் யாழ். குடாநாட்டிற்கு வருகை தந்த இலங்கையின் பொலிஸ்மா அதிபர் கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலுடன் முன்னாள் போராளிகளைத் தொடர்புபடுத்திக் கருத்துக்கள் கூறியிருக்கின்றார். இன்று செவ்வாய்க்கிழமை (01) முற்பகல் யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் எமது செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவித்…
-
- 1 reply
- 253 views
-
-
அவுஸ்ரேலியா செல்லும் வளியில் இந்தோனேசிய கடற்படையால் மேரக் துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையாக நோய்வயப்பட்ட நிலையில் உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காததால் 29 அகவையுடைய ஜேக்கப் கிறிஸ்டியன் என்ற இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 வாரங்களாக கப்பலில் தங்கியுள்ள அகதிகளில் பலர் மிகவும்மோசமான பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்கப்பலில் இருந்த ஜேக்கப் கிறிஸ்டியன் என்ற தமிழ் வாலிபருக்கு உடல் நலம் குன்றியது. அவரை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யுமாறு கப்பலில் இருந்து தமிழர்கள், இந்தோனேசிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் உதவ…
-
- 0 replies
- 590 views
-
-
-சுமித்தி தங்கராசா நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவரது சடலம் தற்போது நெடுந்தீவு வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/91040-2013-11-26-16-12-28.html நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளர் ரஜீவ் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார் இன்று மாலை புங்குடுதீவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது இவரது சடலம் புங்குடுதீவு வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது . 2011 ம் ஆண்டு நட…
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கை அரசியல்: "5 பிள்ளைகளை பெற்றெடுக்கும் சட்டம் வேண்டும்" - முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, இலங்கையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கையில் திருமணமான தம்பதிகள் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்து வளர்க்கக்கூடிய வகையில், சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என தான் யோசனை முன்வைப்பதாக முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவிக்கின்றார். நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் நிலைமை உருவாகியுள்ள பின…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-