ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் 1500 ஏக்கர் காணிகளை மகாவலி அபிவிருத்தி திட்டம் என்னும் போர்வையில் அபகரிக்கப்பட்டு மாற்று சமுகத்தினருக்கு மாகாண காணி ஆணையாளரினால் வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி யுத்தகாலத்தில் தமது காணிகளை அல்லது ஆவணங்களை இழந்த மக்களுக்கு தீர்வை பெற்றுத்தருவதற்காக நடைபெறும் 2 வருட வேலைத்திட்டத்தின் இறுதிமாதமான இம்மாதத்தில் இது தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் தமிழர்களுக்கு பாதகமான இரண்டு முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு மாகாண காணி ஆணையாளர் பொ. தயானந்தன் பிரதேச செயலாளர்களிற்கு உத்தரவிட்டார். குறிப்பாக கரைதுறைப்பற்று கொக்குத்தொ…
-
- 0 replies
- 340 views
-
-
இரு அமைச்சுக்களை ஒன்றாக்கியது இதற்குத்தான்! ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்குரிய திட்டமிடல் அரசாங்கத்தின் 25 வருட அபிவிருத்தி திட்டத்திற்கு உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கொழும்பு – வடக்கு துறைமுகத்தின் 30 வருட அபிவிருத்தி திட்டத்தினை வெளியிடுவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 1 reply
- 310 views
- 1 follower
-
-
சனி 24-02-2007 01:59 மணி தமிழீழம் [மயூரன்] யாழ்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த இளைஞர் கத்திக்குத்தில் பலி மன்னார் பரப்புக்கண்டல் பகுதியில் யாழ்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வசித்து வரும் தமிழ் இளைஞரின் உடலமானது நேற்று வெள்ளிக்கிழமை காலை பாலைக்காட்டு சந்தி நானாட்டான் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் காணப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர் 26 அகவையுடைய மரியதாஸ் கிரிதாஸ் என இனம்காணப்பட்டுள்ளார். இனம் தெரியாத நபர்கள் இவரை கடத்தியுள்ளதாகவும் பின் கூரான ஆயுதங்களால் கழுத்திலும் மார்பிலும் குத்தி பாலைக்காடு சந்தியில் போட்டுச் சென்றுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் காவல்துறையினர் இவரது உடலத்தை மன்னார் பொதுவைத்தியசாலையில் கையளித்துள்ளனர். …
-
- 0 replies
- 1.1k views
-
-
கவலைக்கிடமான நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம்! அம்பலமான அரசின் பொய் வேஷம் சனி, 07 மே 2011 06:39 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கற்பாறைகள் காணப்படுவதனால் பொருட்களை ஏற்றிவரும் கப்பல்களை நிறுத்தி வைக்கமுடியாது என்று விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி கொள்கலன்களை ஏற்றிக் கொண்டு கப்பலொன்று துறைமுகத்தை வந்தடைந்தது. சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த கப்பல் ஒன்று மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி வந்ததாகவும், குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டையில் ஓய்வெடுப்பதாகவும் அரசு ஊடகங்களில் பிரச்சாரம் செய்தது. இந்தக் கப்பல் ஏற்றிக்கொண்டு வந்த 2 ஆயிரம் கொள்கலன்களும் வெற்றுக் கொள்கலன்கள் எனத் தற்போது தெரியவந்துள்ளது. வன்கை -502 என்ற அழைக்கப்பட்ட இந்தக் கப்பல் கொழும்…
-
- 1 reply
- 1.4k views
-
-
வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? – சுமந்திரன் தகவல் வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் சி.வி.விக்னேஸ்வரனையே முன்னிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எமது ஆதவன் செய்திச் சேவை வினவியபோது அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனக் குறிப்பிட்டார். அத்தோடு, வடக்கு மற்றும் கிழக்கு…
-
- 2 replies
- 692 views
-
-
Published By: T. SARANYA 01 MAY, 2023 | 03:49 PM (நா.தனுஜா) தேர்தல்களை உடனடியாக நடத்தாவிட்டால் இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியை ஒத்த சூழ்நிலைக்கு பாகிஸ்தான் முகங்கொடுக்குமென அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் எச்சரித்துள்ளார். 'இது எச்சரிக்கை அல்ல. இது என்னுடைய மதிப்பீடாகும். வெகுவிரைவில் தேர்தல் நடாத்தப்படும் என்ற நம்பிக்கையில் கட்சிக்கூட்டங்களிலும் பேரணிகளிலும் பொதுமக்கள் அமைதியாகச் செயற்படுகின்றார்கள். இருப்பினும் வாக்களிப்பதற்கான அவர்களின் உரிமை மறுக்கப்படும் பட்சத்தில், அவர்கள் அனைவரும் வீதிக்கு இறங்குவார்கள். அப்போது ஏற்படக்கூடிய நெருக்கடிநிலையை யாராலும் கட்டுப்படுத்தமுடியாமல்போகும்' என்று இம்ரான்கான் தெரிவித…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் 13 மே 2011 சென்னை போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் பதவியை ஏற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நான் பலமுறை விளக்கியுள்ளேன். இது ஒரு சர்வதேசப் பிரச்சினை. தமிழக அரசால், ஒரு மாநில அரசால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே செயல்பட முடியும். அதற்கு மேல் செயல்படுவதென்றால் அது மத்திய அரசால் மட்டுமே, இந்திய அரசால் மட்டுமே செய்ய முடியும். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நான் இரண்டு தீர்வுகளை தெரிவிக்க விரும்பு…
-
- 2 replies
- 1.8k views
-
-
முன்னாள் போராளிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் இலங்கை அரசாங்கம்! Vhg மே 09, 2023 விசாரணைகள் என்ற பெயரில் முன்னாள் போராளிகளை அச்சம் கொள்ளச் செய்யலாம், அவர்களின் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை முடக்கி விடலாம் என்று அரசு நினைக்குமாயின் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே தரும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில், வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிருக்கு எதிர…
-
- 2 replies
- 315 views
-
-
அன்பான தமிழீழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களே! இன்று தமிழீழத் தேசிய துக்கநாள்! சிறிலங்கா அரசு ஈழத் தமிழர் தேசத்தின் மீது நடத்திய இனஅழிப்புக் கொடூரங்களின் வெளிப்பாடாய், ஈழத் தமிழர்களை மட்டுமன்றி உலகின் அனைத்துத் தமிழர்களையும் ஆழ்ந்த சோகத்தில் உறைய வைத்த நிகழ்வுகளின் குறியீடாய் அமைந்து விட்ட நாள். தென் தமிழீழத்தில் ஆரம்பித்து வன்னிப் பெருநிலமெங்கும் படர்ந்து விரிந்த சிங்களத்தின் கொடுங்கரங்கள் முள்ளி வாய்க்கால் மூலைக்குள் வைத்து நமது மக்களைக் கொன்றொழித்து இனப்டுகொலை புரிந்த பெரும் கொடுமையின் இரத்த சாட்சிமாய் அமைந்து விட்ட நாள். தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரனின் வழிநடத்தலாலும் மாவீரர்களின் ஈகத்தாலும் வீரத்தாலும் உருவாக்கப்பட்ட நிகழ்வுபூர்வமான தம…
-
- 2 replies
- 629 views
-
-
இளம் அரசியல்வாதிகளின் சமூக நல திட்டங்களை தடுக்கும் ஈபிடிபி
-
- 0 replies
- 370 views
-
-
வட மாகாணத்தின் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவர் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றுவதோடு யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இக்கடமையை ஆற்றுவார் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/254601
-
- 1 reply
- 316 views
- 1 follower
-
-
தமிழர்களுக்குப் புரியாத நீதி! ` "நீதி நிலைநாட்டப்படுவது மட்டுமல்லாமல் நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்.' என்ற ஒரு மகாவாக்கியம் நீதித்துறையில் உள்ளது. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பொதுவாக நீதி நிலைநாட்டப்படுகிறதோ இல்லையோ, நீதி நிலைநாட்டப்படுவதாக அவர்களது மனதில் திருப்தி ஏற்படக்கூடிய விதத்தில் நிகழ்வுகள் இடம்பெறுவதில்லை என்பதே உண்மை. இலங்கையின் நீதித்துறையையோ அல்லது நீதிமன்றங்களையோ அல்லது அவற்றின் தீர்ப்புகளையோ இழிவுபடுத்தும் விதத்தில் இங்கு விமர்சிப்பதல்ல எமது நோக்கம். விமர்சன விலக்களிப்பு விசேடமாக வழங்கப்பட்டுள்ள நீதித்துறைக்கு எதிராகப் பகிரங்கமாகக் கருத்துக் கூறும் உரிமை ஊடகவியலாளனுக்கு இந்நாட்டில் அதிகம் இல்லை, அது மட்டுப்படுத்தப்பட்டதே என்பதும் …
-
- 0 replies
- 961 views
-
-
தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்ததற்கு ஈழத்தமிழர் பிரச்னையும் முக்கியக் காரணம் என்பதை மத்திய அரசு புரிந்து கொண்டிருக்க வே ண்டும். ‘‘ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்’’ என டெல்லி தலைவர்கள் இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் திருப்பித் திருப்பிச் சொன்னது இதைத் தான் உணர்த்துகிறது. தமிழகத் தேர்தல் முடிவுகள் இந்தமுறை இலங்கையில் ஆர்வமாக கவனிக்கப்பட்டது. இனப்படுகொலையை வேடிக்கை பார்த்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் தோல்வியும், ஜெயலலிதாவின் வெற்றியும் இலங்கைத் தமிழர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. இந்த உற்சாகம் வழக்கம்போல் இலங்கை அரசுக்கு எரிச்சலை ஏற்படு த்தி இருக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு இந்திய அரசு அவ்வளவாக முக்கியத்துவம் த…
-
- 1 reply
- 542 views
-
-
செயலணியில் பங்கேற்பதால் தீர்வுக்கு குந்தகம் ஏற்படாது - சம்பந்தன் (ஆர்.ராம்) வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதானது அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் எவ்விதமான குந்தகத்தினையும் ஏற்படுத்தாதென எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அக்கூட்டத்தில் பங்கேற்க கூடாதென முக்கிய சில காரணங்களை சுட்டிக்காட்டி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடத்தில் கடித…
-
- 8 replies
- 782 views
-
-
[saturday, 2011-05-28 05:43:59] மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தன்குடா பிரதேச வீடொன்றில் இருந்து வெடிபொருட்கள் சில மீ்ட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த வீட்டில் இருந்த சந்தேக நபர் ஒருவரை வவுணதீவு பொலிஸாரும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும் இணைந்து கைது செய்துள்ளனர். குறித்த வீட்டில் இருந்து ரீ-56 ரக ரவைகள் 41, ரீ 6 மெகஸீன் 2 மற்றும் வீதிப் பரிசோதனை உபகரணம் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். source:seithy.
-
- 0 replies
- 352 views
-
-
NSW போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதியாக 25 வயது இலங்கையர் பயங்கரவாதத் தொடர்புடைய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். முஹமட் நிஜாம்டன் என்ற இளைஜர் சிட்னியின் கென்சிங்டன் நகரில் நேற்று கைது செய்யப்பட்டார். மேலதிக விபரங்களை இன்று போலீசார் பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளியிடவுள்ளனர் NSW Joint Counter-Terrorism Team charge 25-year-old man with terror offences A 25-year-old Sri Lankan man has been charged with terrorism-related offences as part of an investigation conducted by the NSW Joint Counter-Terrorism Team (JCTT). Mohamed Nizamdeen was arrested yesterday at Kensington, in Sydney's south-east. He appeared in Waverley Local Court today …
-
- 9 replies
- 1.2k views
-
-
புதன், 01 ஜூன் 2011 20:30 . தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் கடந்த கால செயல்பாடுகளையும் கட்டமைப்பு வளர்ச்சியினையும் போற்றிப் புகழ்ந்து உரையாற்றினார் இலங்கை தேசிய பாதுகாப்பு பிரிவின் தற்போதைய பணிப்பாளர் நாயகமாக திகழும் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் கபில கெந்தவிதாரண. தான் கடந்த 30 வருடங்களுக்கு முன்னார் சாதாரண ஒரு சிப்பாயாக இலங்கை படையில் இணைத்ததாகவும் இன்று இந்த பதவி உயர்வுகளை பெற்று பல ஜனாதிபதிகள், பல அமைச்சர்கள், பல பாராளுமன்ற உறுப்பினர்கள், பல அரசியல்வாதிகளை கடந்து தான் இந் நிலைக்கு வளர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். தனது இந்த அபார வளர்ச்சிக்கு மிகப் பெரிய காரணமாக அமைந்தது புலிகளின் வளர்ச்சியே என ஆணித்தரமாகத் தெரிவித்து தன்னிறைவடைந்தார். …
-
- 3 replies
- 1.2k views
-
-
Published By: RAJEEBAN 10 JUN, 2023 | 09:42 AM விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும் என்று எனக்கு தெரியவில்லை என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட இதனை தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கான நீண்ட பேட்டியொன்றின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார் அனுபவம் மிக்க அரசியல்வாதியொருவர் சமீபத்தில் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என தெரிவித்தார் என்ற கேள்விக்கு என்னால் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் என தெரியவில்லை என மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/157383
-
- 3 replies
- 384 views
- 1 follower
-
-
கொழும்பு, மார்ச் 23 இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தென்னிலங்கைத் தரப்பினால் முன் வைக்கப்படத் திட்டமிடப்பட்டிருக்கும் யோசனையைத் தயாரித்து இறுதி செய்வதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் பிடிக்கும். மேற்படி தீர்வுத்திட்ட யோசனையைத் தயாரிப்பதற்காக அமைக் கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் திஸ்ஸ விதாரண இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றார். இவ்வார இறுதியில் மூன்று நாள் பயண மாகப் புதுடில்லிக்குப் புறப்படு முன்னர் தாம் வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே இத்தகவலை அவர் வெளியிட்டிருக்கின்றார். தாம் ஆட்சிக்கு வந்தால், இனப்பிரச் சினைத்தீர்வு தொடர்பாக தென்னிலங்கை யில் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்து வதற்கான பேச்சுகளை மூன்று மாதங்களுக் குள் பூர்த்தி செய்வார் என்று…
-
- 7 replies
- 1.5k views
-
-
உலகில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 22 ஆம் இடம் கிடைக்கப் பெற்றுள்ளது. அமெரிக்க பொருளாதார கூட்டுறவுத் திணைக்களம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வலிமை, மகிழ்ச்சியான வாழ்கைக்கான உத்தரவாதம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த பட்டியலில் 35ம் இடத்தை இந்தியா பெற்றுள்ளதுடன் பாகிஸ்தான் 24ம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முதலிடம்: டென்மார்க் இரண்டாமிடம்: கனடா மூன்றாமிடம்: நோர்வே நான்காமிடம்:அவுஸ்ரேலியா ஐந்தாமிடம்: நெதர்லாந்து ஆறாமிடம்: சுவீடன் ஏழாமிடம்: சுவுஸ்லாந்து எட்டாமிடம்: பின்லாந்து ஒன்பதாமிடம்: இஸ்ரேல் பத்தாமிடம…
-
- 0 replies
- 741 views
-
-
ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுக்கும் சட்டமூலம்! - 21ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது [sunday 2015-01-18 09:00] நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுக்கும் சட்டமூலம் எதிர்வரும் 21ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அத்துடன் 17வது திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்தவும் 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவும் நாடாளுமன்றில் பிரேரணைகள் முன்வைக்கப்பட உள்ளன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்து நாடாளுமன்றுக்கு பொறுப்பு சொல்லக்கூடிய பிரதமர் ஆட்சி முறைமையை ஒன்று நிறுவப்பட உள்ளது. சுயாதீன நீதிமன்ற ஆணைக்குழு, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு, சுயாதீன அரச சேவை ஆணைக்குழு, சுயாதீன லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு போன்றனவற்…
-
- 0 replies
- 203 views
-
-
இலங்கையுடன் இனி பேச்சு கிடையாது: புலிகள் ஏப்ரல் 01, 2007 கொழும்பு: இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. அதை முழுமையாக கைவிட தீர்மானித்துள்ளது. எனேவ இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வன் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்காமல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இலங்கை அரசு திட்டமிட்டால், இலங்கையுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை. முழு அளவிலான போருக்கான அழைப்பே இது. மிகப் பெரிய அளவிலான போருக்கு அரசு விரும்புவதாகவ…
-
- 2 replies
- 2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் ஓட்டுவெளிப்பகுதியில் வயல்வேலை செய்வதற்காக உழவு இயந்திரத்தில் பயணித்த இரு விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர் மீராவோடை பாடசாலை வீதியை சேர்ந்த 30 அகவையுடைய அக்பர் அனீஸ் எனவும் இவரை முதலில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பின்னர் மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலைக்கு மாற்றம் செய்ததாகவும் அறியமுடிகிறது. வியாழக்கிழமை காலை அந்த இடத்தில் கருணா குழுவினர் விடுதலைப்புலிகளுடன் துப்பாக்கி பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் அவ் இடத்தால் சென்ற விவசாயிகள் மீது ஆயுததாரிகள் துப்பாக்கி சூடு நடாத்தியதாகவும் வாழைச்சேனை கா…
-
- 2 replies
- 1k views
-
-
Sunday, June 19, 2011, 19:24சிறீலங்கா திருகோணமலை நிலாவெளி கோபாலபுரம் பகுதி கால்வாயிலிருந்து இரு சடலங்கள் உச்சவெளி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு வீட்டிலிருந்து சென்ற காணமல் போனவர் என்று சந்தேகிக்கப்பட்ட 25 வயது தாயார் ஒருவருடையதும் 14 வயது மகனுடைய சடலுமுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை உச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilthai.com/?p=19658
-
- 0 replies
- 425 views
-
-
மிலேனியம் சவால்களுக்கான நிதியுதவி பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம். மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் பேச்சுச் சுதந்திரத்துக்கு எதிரான ஒடுக்கு முறைகள் அதிகரித்துச் செல்வதையடுத்து மிலேனியம் சவால்களுக்காக நிதியுதவி பெறும் நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்படுவதாக பிரீடம் ஹவுஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான ஒப்பந்தம் மற்றும் சமாதான நடவடிக்கைகள் காரணமாக 2004ஆம் ஆண்டு மிலேனியம் சவால்களுக்கான உதவிபெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டது. எனினும் இந்நிலைமைகள் சீர்குலைந்து விடுதலைப் புலிகள் மீண்டும் சிவில் யுத்தத்தின்பால் திரும்ப தொடங்கியமை மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும்…
-
- 1 reply
- 1.8k views
-