Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தவற விட்ட உறவுகளைக் கண்டுபிடிக்க தமிழர்களுக்கு கனேடிய செஞ்சிலுவைச் சங்கக் குழு மூலம் வாய்ப்பு! வெள்ளி, 27 ஆகஸ்ட் 2010 14:30 . . கடந்த கால யுத்த நடவடிக்கைகளால் தவற விட்ட உறவுகளைக் கண்டு பிடிக்கின்றமைக்கு ஈழத் தமிழர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் கனேடிய கிளை மூலம் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. யுத்த நடவடிக்கைகள், யுத்த நடவடிக்கைகள் காரணமாக இடம்பெற்றிருக்கும் இடப்பெயர்வுகள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் ஏனைய மனிதாபிமான நெருக்கடிகள் போன்றவற்றால் அன்புக்குரிய உறவுகள் பிரிய நேர்ந்திருந்தால் அவர்களுக்கு இடையில் மீண்டும் இணைப்பை ஏற்படுத்தும் மனிதாபிமான இணையத் தள சேவை ஒன்றை இக்கனேடிய கிளை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. …

  2. இலங்கை கோட்டாபய ராஜபக்ஷ: மக்கள் மாளிகையான அதிபர் மாளிகை - 'எங்கள் பணத்தில் அவர் சொகுசாக இருந்திருக்கிறார்' எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 36 நிமிடங்களுக்கு முன்னர் பதவி விலகப் போவதாக அறிவித்திருக்கும் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எங்கிருக்கிறார் என்று உறுதியாகத் தெரியவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகத் தயார் என்று அறிவித்துவிட்டார். அனைத்துக் கட்சி அரசு அமையுமானால், அதற்கு வழிவிட்டு ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்யப் போவதாக அமைச்சர்களும் கூறியிருக்கிறார்கள். அதே நேரத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசை அமைப்பதற்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கி…

  3. யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த எடிசன் எமில் ஜெனிபர் லண்டனிலிருந்து அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு மீண்டும் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் வலுக்கட்டாயமாக ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் சுயவிருப்பத்திற்கு மாறாக மனிதாபிமானம் இல்லாமல் தாக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான ஆவணங்களில் வலுக்கட்டாயத்தின் பெயரில் பலவந்தமாக ஒப்பம் இடப்பட்டு கை,கால்களுக்கு விலங்கு பூட்ட நான்கு குடிவரவு அதிகாரிகளினால் தாக்கப்பட்டு விமானத்தில் ஏற்றி நாட்டிற்கு அனுப்பியுள்ளார்கள்.அதன் பின்னர் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையினால் உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனும…

  4. யாழில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் பதிவை விழிப்பூட்டும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில் யாழ். தபால் நிலையம் முன்பாக ஆரம்பித்த இப் பேரணியானது சத்திர சந்தியூடாக மத்திய பஸ் நிலையத்தை சென்றடைந்தது. இதன் போது வீதிகளில் செல்வோருக்கும் மத்திய பஸ் நிலையத்தில் நின்றவர்களுக்கும் வாக்காளர் பதிவை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படன . அதன் பின்னர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட பேரணி ஆஸ்பத்திரி வீதி வழியாக வேம்படி சந்தியை சென்றடைந்து மீண்டும் தபால் நிலைய முன்றலை சென்றடைந்தது. இப் பேரணியில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் யாழ்.…

    • 0 replies
    • 345 views
  5. விடுதலைப் புலிகள் - இலங்கை அரசு , மே 17 முதல் மே 18 காலை 8.00 மணிவரை நடந்த தொடர்பாடல் ! 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி காலை 6.50க்கும் 8.00 மணிக்கும் இடையே, புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இவர்களோடு சென்ற சுமார் 40 காயப்பட்ட போராளிகள் மற்றும் பெண்கள் அனைவரும் சுட்டுக்கொல்லபட்டார்கள். இது நடந்த விடையம் பலருக்கு தெரியும். ஆனால் அங்கே என்ன தொடர்பாடல் நடந்தது ? இலங்கை அரசின் உயர்மட்ட தலைவர்கள் யார் யார் , தொடர்பில் இருந்தார்கள் ? எந்த நாடுகளுக்கு இவர்களின் சரணடைவு தெரிந்திருந்தது. இதோ நிமிடத்திற்கு நிமிடம் நடைபெற்ற தொடர்பாடலை இங்கே நாம் தருகிறோம்: இலங்கையில் சந்திரகாந்தன் சந்திரநேரு இவ…

  6. யாழில் சிசு பிறப்புவீதம் அதிகரிப்பு யாழ் போதனா வைத்தியசாலையில் சிசு பிறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையில் 5746 சிசுக்கள் பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பீ. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த பல வருடங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த 2017ஆம் ஆண்டின் சிசு பிறப்பு வீதம் 12 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலையின், சிசு இறப்புவீதம் 1 வீதமாக மாத்திரமே காணப்படுவதமாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழில்-சி…

    • 2 replies
    • 674 views
  7. புலம்பெயர் தமிழர் என்பதன் சூக்குமம் யாதோ? [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-26 06:39:47| யாழ்ப்பாணம்] “புலம்பெயர் தமிழர்கள்” என்பது இன்று அதிகம் உச்சரிக்கப்படும் சொற்பதமாக உள்ளது. இவ் விதம் புலம்பெயர் தமிழர்கள் என்ற பதம் அதிகம் உச்சரிக்கப்படுவதற்கு எங்கள் பொருளாதாரத்திலும், அரசியலிலும் அவர்கள் கொண்டுள்ள வகிபங்கே காரணமாகும். பல வருட யுத்த சூழ்நிலையிலும் இலங்கைத் தமிழர்கள் சீவியம் நடத்தினர் எனில், அதற்கு புலம் பெயர் தமிழர்களே மூல காரணம் என்பது நிராகரிக்க முடியாத உண்மை. அதேநேரம் அரசியல் பங்களிப்பும் அவர்களிடம் நிறையவே உண்டு. இங்கு அவர்களின் அரசியல் பங்களிப்பு என்பது நாடுகடந்த தமிழீழம் என்பதை மட்டும் வைத்துக் கூறப்படுவதல்ல. வன்னிப் பெருநிலப்பரப்பில் பெரும் போர்…

  8. சத்திர சிகிச்சை கூடமில்லாத வைத்திய சாலைகளில் எதற்கு சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டில் சத்திர சிகிச்சை கூடமே இல்லாத வைத்திய சாலைகளில் சத்திர சிகிச்சை நிபுணர்கள் , மயக்க மருந்து நிபுணர்கள் கடமையில் உள்ளனர் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது கருத்து தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கில் மன்னார் , பருத்தித்துறை, தெல்லிப்பளை , சாவகச்சேரி உள்ளிட்ட வைத்திய சாலைகளில் வைத்திய நிபுணர்கள் இல்லை. சில வைத்திய சா…

  9. தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் நிறுவனம் இயங்கிய கிளிநொச்சிப்பகுதியில் தற்போது அந்த நிறுவன கட்டடங்களை முழுமையாக அடித்து நொறுக்கி விட்டு அவ்விடத்தில் புதிய படைமுகாம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இவ்அலுவலகம் இலங்கை விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகளின் வரலாற்று நினைவிடங்கள் மற்றும் அவர்களின் பிரதான அமைவிடங்கள் என்பனவற்றை படையினர் தமது படை முகாமாக மாற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.http://www.tharavu.com/2010/10/blog-post_4051.html

  10. ‘விடுதலை என்று பேசுபவர்களின் பின்னாலிருப்பது சுயலாப அரசியலே’ “மார்க்கத்தின் பெயரில், சமூக விடுதலை என்று பேசுபவர்களின் பின்னணியில் இருப்பது சுயலாப அரசியலன்றி வேறெதுவுமில்லை” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் பாலமுனை வேட்பாளர்களை ஆதரித்து, நேற்றிரவு (14) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, “தேர்தல் பிரசாரங்களில் என்னை நோக்கி சில கேள்விகளைத் தெ…

  11. பொலிஸ்மா அதிபர் முல்லைத்தீவிற்கு விஜயம்!!! பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு முல்லைத்தீவு பிரதான பொலிஸ் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்து புதிய பொலிஸ் நிலையத்துக்கான வேலைகளை ஆரம்பித்து வைத்தார். நீண்டகாலமாக பொலிஸ் நிலையம் இல்லாத நிலையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் வாடகை அடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் இயங்கி வந்த நிலையில் இன்றையதினம் அதற்கென காணி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இந்த புதிய பொலிஸ் நிலைய கட்டிடம் 2160சதுர மீட்டர் பரப்பளவில், 145.7 மில்லியன் செலவில் ஒருவருட காலத்தில் அமைக்க திட்டம் வகுக்கப…

  12. மதுரையில்`போர் முகங்கள்`ஓவிய கண்காட்சி தமிழீழத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர், அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், மக்களின் அவல நிலை என்பன பற்றிய ஓவியங்களை உள்ளடக்கிய கண்காட்சி ஒன்று இன்று மதுரையில் இடம் பெற்றது . ஓவியர் புகழேந்தியின் தயாரிப்பில் `போர் முகங்கள்` என்ற இந்த ஓவிய கண்காட்சி . படங்கள் காண: http://meenakam.com/?p=11111

  13. http://eelatamil.com/selfdefence.html

    • 1 reply
    • 1.3k views
  14. வங்காலைப்பாட்டில் பெரும் அட்டூழியம் -நூற்றுக்கணக்கான வாடி வீடுகள், படகுகள் தீக்கிரை; கடலுக்கு சென்ற 400 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை மன்னார் வங்காலைப்பாட்டில் நேற்று சனிக்கிழமை காலை மீனவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வாடி வீடு களும், பேசாலை முதல் வங்காலைப்பாடு வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கண்ணாடி நாரிழைப் படகுகளும் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதேநேரம், நேற்று அதிகாலை தலைமன்னார் முதல் மன்னார் வரையான கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்ற நானூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாலை வரை கரைதிரும்பவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது. பேசாலைக் கடற்பரப்பில் நேற்றுக் காலை கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையே நடைபெற்ற கடற் சமரையடுத்தே கடற்றொழி…

    • 0 replies
    • 988 views
  15. ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010 இந்த நாட்டில் இருக்கும் இப்போதைய தலைவர்களில் சிலருக்கு தே நீர் கடையினை கூட நிர்வகிக்க போதிய அறிவு இல்லை. நாடு தற்போது நிதி , நிர்வாக முகாமைத்து அறிவு இல்லாதவர்களின் கைகளில் சிக்கி தவிக்கின்றது. என மஹிந்த அரசை சடியுள்ளார் அம்மையார். நேற்று சிறிமாவோ பண்டார நாயக்க ஞாபகார்த்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்மையார் மேலும் கூறுகையில்; இந்த நாட்டை நிர்வாகம் செய்யும் தலைவர்களில் 90 விழுக்காடு முகாமைத்துவ அறிவு இல்லை ஊழல், மோசடிகள், பழிவாங்கல்கள் செய்வதிலேயே போதிய அறிவு உள்ளது. எனக்கு என் பதவிக்காலத்தில் ஐந்து வாகங்களை வரியின்றி சொந்தமாக வாங்க அனுமதி இருந்தும் நான் அதனை வாங்கவில்லை அல்லது பேர்மிட்டை விற்கவும் இல்லை. ஆனால் …

  16. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகி, மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ள இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. கடந்த பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 18 ஆவது திருத்தத்தை ஆதரிப்பதற்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் திகதி இணைந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/117928-2014-07-14-02-58-31.html

    • 0 replies
    • 284 views
  17. தமிழ்நாட்டில் அவலநிலையில் இலங்கை அகதிகளின் முகாம்கள் விடைகொடு எங்கள் நாடே.... பனைமரக் காடே... பறவைகள் கூடே... மறுமுறை ஒருமுறை பார்ப்போமோ? புலம்பெயர் வாழ்வின் துயரங்களை வலியோடு பதிவு செய்த பாடல் இது. இதோ மறுபடியும் இலங்கையில் யுத்தம் ஆரம்பமாகி விட்டது. உயிர்பயம் உந்தித்துள்ள தங்களின் ஆதி சொந்தங்களைத் தேடி, கள்ளத்தோணியில் கடல் கடந்து, அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள். நாளுக்கு நாள் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. ஆனால், ஏற்கனவே இங்கிருக்கும் அகதிகள் முகாம்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தடுமாறித் தத்தளித்து கொண்டிருக்கின்றன. இதுபற்றி அகதிகள் முகாம்களுக்கு நேரில் சென்று பார்த்து வந்து அறிக்கைக் கொட…

    • 2 replies
    • 1.9k views
  18. -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நெற்காணிகளை மண் இட்டு நிரப்பி மேட்டுக் காணிகளாக மாற்றுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.தயாரூபன் இன்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் ஏராளமான வயல் நிலங்கள் தினமும் சட்ட விரோதமான முறையில் மண் போட்டு நிரப்பி மேட்டுக்காணிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் நெற்செய்கை காணிகளின் அளவு குறைவடைந்து வருவதுடன் நெல் உற்பத்தியும் பாதிக்கும் அபாய நிலை காணப்படுகின்றது. ஆகவே, இந்த விடயம் தொடர்பாக கடுமையாக நடவடிக்கைகளை எதிர்காலங்களில் மேற்கொள்ளவுள்ளோம். அந்த வகையில், இவ்வாறு மேட்டுக் க…

    • 0 replies
    • 386 views
  19. சர்வதேச நீதிப்பொறிமுறை நிலைப்பாட்டில் உறுதி : வீண் கற்பனைகள் அவசியமற்றது - ரெலோ பேச்சாளர் சுரேந்திரன் 07 Sep, 2022 | 10:05 AM சர்வதேச நீதிப் பொறிமுறை சர்வதேச விசாரணை என்பவற்றிற்கு குறைவான எந்த விடயங்களும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தராது என்பதில் உறுதியாக இருப்பதாக ரெலோவின் ஊடகப்பேச்சாளரும்,தேசிய அமைப்பாளருமான சுரேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்இ தமிழ் மக்கள் மீது இழைக்கப் பட்ட யுத்தக் குற்றங்கள்,மனித உரிமை மீறல் மற்றும் அட்டூழிய குற்றங்களுக்கான நீதியைக் கோரி இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்துமாறு மனித உரிமைப் பேரவையின் பிரதான அங்கத்துவ நாடுகளுக்கும் மனித உரிமை …

  20. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும், எந்தச் சர்வதேச நீதிமன்றத்திற்குச் சென்றாலும் அவை எவற்றுக்கும் தான் அஞ்சப் போவதில்லை எனவும், திட்டமிட்டுள்ளபடி தனது இலண்டன் பயணம் கட்டாயமாக இடம்பெறும் என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். சிறிலங்காவின் அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இவ்வாறு கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தனக்கும், பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் சர்வதேச சூழ்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இச் சந்திப்பில் கூறியதாக இந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. ஒக்ஸ்பேர்ட் பல்க…

    • 0 replies
    • 850 views
  21. இன்றைய தினம் ஈகைத் திருநாளாம் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உறவுகளுக்கும் என்னுடைய உளமார்ந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் உவகையடைகின்றேன். றம்ழான் மாதம் முழுவதும் பகல் வேளைகளில் உண்ணாமல், பருகாமல் பசித்திருந்து, இரவு வேளைகளில் இறைவனை நின்று வணங்கி ஒரு உன்னதமான கடமையினை நீங்கள் எல்லோரும் நிறைவேற்றி அதன் இறுதியில் பெருநாளைக் கொண்டாடுகின்றீர்கள். இந்துக்களும் கிறீஸ்தவர்களும் கூட விரதங்களுக்கு முக்கிய இடம் அளிக்கின்றார்கள்.வருடத்தில் சில நாட்களை ஒதுக்கி வைத்து வாழ்தல் கிறீஸ்தவ பண்பு.நாற்பது ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் எதுவும் உண்ணாமல் நீராகாரம் மட்டும் சிலகுறிப்பிட்ட வேளைகளில் அருந்தி நவராத்திரி ஒன்பது நாட்களையும் கந்த சஷ்ட…

    • 0 replies
    • 686 views
  22. போதைப்பொருள் பாவனையும் அது தொடர்பான சமுதாய சீர்கேடுகளும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்று வடமாகாணத்திலும் துரிதமாகப் பரவி வருவது அண்மைய நாட்களில் மிக வேதனையுடன் அவதானிக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், போதைப்பொருள் பாவனை பாடசாலைகளினுள் மாத்திரமன்றி, வைத்தியசாலைகள் வளாகங்ககளினுள்ளும் உள்நுழைய தொடங்கி உள்ளது. காலத்தில் தனிமனித ஒழுக்கத்திலும் நற்பண்புகளிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்த வடபிரதேசம் இன்று போ…

  23. http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bctid=693375798001 என்ன கொடும்மையா இது எத்தன மக்கள் இப்படியே மரிக்கிறது அந்த வீடியோவ பாக்ககிகே மவன சும்மா விட கூடாது, நண்பர்களே ஒரு வேண்டுகோள் இது தான் நமக்கு வாய்த நல்ல சந்தர்ப்பம் பிணம்திண்ணி மகிந்தாவை இங்கிலாந்தை விட்டு வெளியேற விடாமல் சுற்றி வளையுங்கள் அவன் இருக்கும் இடம் விட்டு நகர விடாமல் கேரோ செயுங்கள், அவனை இங்கிலாந்திலே கைது செய்ய வைப்போம் ஆக்ஸ்போர்ட் யூனியன் போவதை ரத்து செய்து நாட்டை விட்டு தப்பி ஓட பார்க்கிறான் விடாதீர்கள் நண்பர்களே

  24. நட்சத்­திர விடு­தி­யா­கி­றது கீரி­மலை அரச தலை­வர் மாளிகை நட்சத்­திர விடு­தி­யா­கி­றது கீரி­மலை அரச தலை­வர் மாளிகை பொது­மக்­க­ளும் சாதா­ரண கட்­ட­ணத்­தில் 5 நட்­சத்­திர விடு­தி­யில் தங்­கு­வ­தற்கு ஏற்ற வகை­யி­லேயே, காங்­கே­சன் து­றை­யில் உள்ள அரச தலை­வர் மாளிகை மாற்­றி­ய­மைக்­கப்­ப­டும் என மீன்­பிடி அமைச்­சர் மகிந்த அம­ர­வீர தெரி­வித்­துள்­ளார். முன்­னைய அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, காங்­கே­சன்­து­றை­யில், கீரி­ம­லைக்கு அண்­மை­யாக 3.5 பில்­லி­யன் ரூபா செல­வின் ஆ…

  25. இலங்கை குறித்த பிரேரணை – ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று வாக்கெடுப்பு! ஐக்கிய நாடுகள் சபையின் 51ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொடர்பான பொருத்தமான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா உள்ளிட்ட பல நாடுகளின் முன்முயற்சியில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டதுடன், குறித்த பிரேரணை இதுவரை சுமார் 30 நாடுகளின் ஆதரவைப் பெற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.