Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. SLFP – SLPP கட்சிகளுக்கிடையிலான 6ம் கட்ட கலந்துரையாடல் இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சிகளுக்கிடையிலான 6வது கட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று மாலை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கருத்து தெரிவித்துள்ளார். இரு தரப்பினருக்குமிடையில் கடந்த 17ம் திகதி நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/185227/

    • 2 replies
    • 481 views
  2. அமெரிக்காவில் இரண்டு நாளில் 2 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிட்ட மஹிந்த! [ ஞாயிற்றுக்கிழமை, 27 செப்ரெம்பர் 2015, 06:02.28 AM GMT ] முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ச கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக சென்று அமெரிக்காவில் தங்கியிருந்த இரண்டு நாட்களுக்கு மாத்திரம் 2 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. டொலர்களில் செலவிடப்பட்ட இந்த பணம் எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதற்கான சாட்சியம் தற்போது கிடைத்துள்ளது. மஹிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமானவரும், அவரது இணைப்புச் செயலாளராகவும் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய சஜின் வாஸ் குணவர்தன, மஹிந்த ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் செலவாகும் பணத…

  3. ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரனை சுட்டுக்கொன்ற கொலையாளியை கைது செய்திருப்பதாக கொட்டாஞ்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 3.4k views
  4. இலங்கை அரசுக்கு இது வரலாற்றுச் சந்தர்ப்பம் போரின்போதும், போருக்குப் பின்னரும், மோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பதில ளிப்பதற்கு, இலங்கைக்கு ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகப் பேச்சாளர் ரவினா சம்தாசனி தெரிவித்துள்ளார்.ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நேற்று முன்தினம் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் சபை நிறைவேற்றியுள்ளதன் மூலம், நீதி வழங்குவதிலும், மோசமான சர்வதேசச் சூழலில் இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதிலும் சர்வதேசத் தலையீட்டின் மு…

  5. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம் மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவர்ந்துள்ள நிலையில் இன்று நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நடத்தி வாக்கெடுப்பை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பியுடன் பிரதான எதிர்க்கட்சியான மஹிந்த தரப்பினரும் வாக்களிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60159

  6. இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் மத்தியஸ்தம் வகிக்க மலேசியா தயார் [07 - January - 2008] ஐந்து தசாப்த காலமாக நீடிக்கும் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே மத்தியஸ்தம் செய்ய மலேசியா தயாராகின்றது. ஏற்கனவே, பொஸ்னியா ஹரசக்கொவின்னா, முன்னாள் யூகோசிலாவியா, கொங்கோ, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரச்சினைகளுக்கு மத்தியஸ்தம் செய்த நீண்ட கால அனுபவம் மலேசியாவுக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நாடுகளில் ஓர் சில நாடுகளின் பிரச்சினைகள் சுமுகமாக தீர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக வெளியேறியதையடுத்து, உயிரிழப்புகள் பாரிய அளவில் அதிகரிக்கல…

    • 8 replies
    • 2.5k views
  7. (இவரிடம் நான் இரண்டு கேள்விகள் வைக்கபட்டது. ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளித்திருந்தார். டுவிட்டரில் நூற்றி நாற்பது எழுத்துகள் மட்டுமே ஒரு நேரத்தில் எழுதலாம். ஆகவே கேள்விகள் அதற்கமைய சுருக்க பட்டது. ) Question 1- Obama said 'world should not be idle when #genocide happens'. Why no action to save #Tamils not only n 2009 but for 60 yrs? இன அழிப்பு நடக்கும் போல்ழுது உலகம் பார்த்துகொண்டிருக்க மாட்டாது என்று ஒபாமா சொனார், ஆனால் தமிழர் கொல்லப்படும்போது யாரும், காப்பாற்றவில்லையே, 2009 இல் மட்டுமல்ல கடந்த 60 வருடமாக எதற்காக? Answer: US has been very active to encourage reconcilitation and accountability. See http://ow.ly/9kWBt #AskSCA ஐக்கிய அமெரிக்கா, நல்லிணக…

  8. யாழ். முனீஸ்வரா வீதியின் 25 கடைகளுக்கு பூட்டு யாழ். முனீஸ்வரா வீதியில் கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வந்த சுமார் 25 கடைகள் திடீரென மூடப்பட்டு, அவை யாழ். மாநகர சபையினால் பாரமெடுக்கப்பட்டுள்ளது. முனீஸ்வரா வீதியில் அமைந்துள்ள கட்டடத் தொகுதியில் உள்ள கடைகளின் கதவுகளில் ‘முனீஸ்வரா அங்காடி, கடை இலக்கம் குறிப்பிடப்பட்டு அவை மாநகர சபையால் பூட்டி பாரமெடுக்கப்படுகின்றது’ என்ற வாசகம் அடங்கிய அறிவித்தல் யாழ் மாநகர சபை ஆணையாளரின் கையொப்பத்துடன் கடைகளில் கதவுகளில் ஒட்டப்பட்டுள்ளன. இவை நேற்று நள்ளிரவு வேளையில் ஒட்டப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை கடைகளை திறப்பதற்காக அங்கு சென்ற கடை உரிமையாளர்கள், குறித்த அறிவித்தலை கண்டு ஆத்திரமடைந்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்ப…

    • 1 reply
    • 555 views
  9. சரத் பொன்சேகா, சீலரத்ன தேரர், திலகராஜ் பெற்றுக்கொண்ட வாக்குகள்! நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய 5,634,915 (42.31%) வாக்குகளை பெற்றுக்கொண்ட அநுர குமார திசாநாயக்க நாட்டின் ஜனாதிபதியாக இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இவருக்கு அடுத்தப்படியாக 4,363,035 (32.76%) வாக்குகளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்டார். 39 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களிடம் பிரபல்யம் வாய்ந்த சில வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகள் பின்வருமாறு, ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 22,407 வாக்க…

  10. சன் சீ கப்பல் அகதியை நாடு கடத்தும் திட்டத்தை கைவிட்டது கனடா அரசியல் தஞ்சம் கோரி எம்வி சன் சீ கப்பல் மூலமாக கனடாவிவைச் சென்றடைந்த இலங்கையர் ஒருவரை நாடு கடத்தும் முயற்சிகளில் கனேடிய குடிவரவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அது முறியடிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு குறித்த இலங்கையர் அச்சுறுத்தலாக இருக்கிறார் என கனடா அறிவித்துள்ளது. 492 பேருடன் கனடாவை அடைந்த சன் சீ கப்பலில் பயணித்த 35 வயதுடைய சந்தீசன் அழகேந்திரன் என்பவர் கனடாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சன் சீ கப்பலில் கனடா சென்றவர்களில் 15 பேர் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளதாக கனடா அற…

    • 4 replies
    • 1.1k views
  11. இரட்டை வேடத்தை நிறுத்து :தமிழ் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை யாழ்.பேருந்து நிலையத்தில் காலை 10.30 மணியளவில் முன்னெடுத்தது. "பதவிக்கு வரும் வரை வாக்குறுதிகள் பதவியேற்ற பின்னர் மௌனம் ஏன்?, தாமதிக்காதே கைதிகளை உடன் விடுதலை செய்,இரட்டை வேடத்தை நிறுத்து கைதிகளை விடுதலை செய்,காணாமல் போனோருக்கு பதில் கூறு,உண்ணாவிரதம் நியாயமானதே கைதிகளை உடன் விடுதலை செய்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் தாங்கியவாறு குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்றுவரை எட்டப்படாமையே போர் எற்படவும்,…

  12. தலைவர்கள் வெட்கித் தலைகுனிந்து தம்மை மாற்றும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் - விக்னேஸ்வரன் அர­சாங்­கத்­திற்கு நெருக்­குதல் கொடுப்­பதும் எமது நிலையை உல­க­றியச் செய்து எமது நாட்டின் தலை­வர்­களை வெட்கித் தலை­கு­னிந்து தம்மை மாற்றும் ஒரு சூழல் ஏற்­ப­டுத்­து­வ­துமே எமது குறிக்­கோ­ளாக இரு க்க வேண்டும். அத்­துடன் கட்சி சார் செயற்­பா­டு­க­ளிலும், தமிழ்த் தேசி­யத்தைப் பலப்­ப­டுத்தும் பணி­யிலும் கொள்கை ஒரு­மைப்­பாடு கொண்ட அனை­வ­ரையும் எம்­மோடு பய­ணிக்க அன்­பு­ரி­மை­யுடன் அழைத்து நிற்­கின்றேன். தன்­னாட்சி - தற்­சார்பு - தன்­னி­றைவே எமது தாரக மந்­தி­ரங்கள் என்று தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லா­ளரும் முன்னாள் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி.விக்­கி­னேஸ்­வரன்…

  13. பணத்திற்காக பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்கு சிங்களவர்களில் சிலர் தற்போது முன்னிற்கின்றனர் [21 - January - 2008] * ஹொரணையில் பிரதமர் தெரிவிப்பு சிங்கள மக்களில் சிலர் பணத்துக்காக பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கவும் சேவைகளை செய்யவும் ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, தாய் நாட்டை காட்டிக் கொடுப்பதென்பது பெற்றோரைக் காட்டிக் கொடுப்பதற்கு சமனானதென்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஹொரணையில் வெள்ளிக்கிழமை புதிய பொலிஸ் கட்டிடத்தை திறந்துவைத்து பேசும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவர் இங்கு மேலும் பேசியிருப்பதாவது; "தெற்கில் நிராயுதபாணிகளாகவிருக்கும் பொதுமக்கள் கொலை செய்யப்படுவதை அரசாங்கம் வன்மையா…

  14. வடக்கில் 5 இலட்சம் மரக்கன்றுகளை கார்த்திகையில் நடுவதற்குத் திட்டம் வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை மாதம் முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டம் இடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.10.2015) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அதன்போதே இதனைத் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கில் மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு மிகப்பொருத்தமான மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது. கார் என்பது மழையைக் குறிக்கும். அந்தவகையில், மழ…

    • 4 replies
    • 1.3k views
  15. 08 OCT, 2024 | 10:06 AM மாற்றுத்திறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உள்வாங்கல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் திங்கட்கிழமை (07) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் JICA திட்டத்தின் பணிப்பாளர் திருகோணமலை மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக பாராட்டுக்களை தெரிவித்ததுடன் மாவட்ட அரசாங்க அதிபரும் இத் திட்டத்திற்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கியுள்ளமைக்கு நன்றிகளையும் இதன்போது தெரிவித்துக் கொண்டார். மேலும், இத்திட்டத்தில் உள்ள சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உள்வாங்கும் போது பெண்களைய…

  16. வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படமாட்டாது-ரோஹித போகொல்லாகம 1/27/2008 10:09:42 AM வீரகேசரி இணையம் - வடக்கு - கிழக்கு மீண்டும் இணைக்கப்பட மாட்டாது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய தீர்வு யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும் போது இவ்வாறு இணைக்கப்படவேண்டி வரும் என்ற கதைக்கே இடமில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகள் பிரதிநிதிகள் குழுவின் இனப் பிரச்சினை தீர்வு யோசனைகள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை சுதந்திரமடைந்து அறுபது வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களிடையே கருத்தொருமைப்பாட்டினை ஏற்படுத்தக் கிடைத்தமை வரலாற்று ரீதியான ஒரு நிகழ்வாகும். இந்த தீர்வு யோசனைகள் அதிகார…

  17. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொணடு வரும் தீர்மானத்துக்கு எதிராக கொழும்பில் நேற்று பௌத்த பிக்குகள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். ஹுணுப்பிட்டிய கங்காராமய விகாரையில் இருந்து அமெரிக்கத் தூதரகம் நோக்கி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், மேல் மாகாண பிரிவேனாக்களில் கல்வி கற்கும் சுமார் 2500 பிக்குகள் வரை கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் அமெரிக்கத் தூதரகத்திடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த மனுவில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கண்டித்து இன்று கொழும்பில் மிகப்பெரிய பேரணி ஒ…

  18. இரு தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தப்படாது – மஹிந்த In இலங்கை August 3, 2019 8:35 am GMT 0 Comments 1279 by : vithushan மாகாண சபைத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது தொடர்பாக கவனம் செலுத்தவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தகைய திட்டம் தேர்தல் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (சனிக்கிழமை) ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை அடுத்த வாரம் தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் சந்திப்பு நடக்கவுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலையும் மாகாண சபைத் தேர்தலையும் ஒர…

  19. "நான் அரசியல்வாதியல்ல உயர்நீதிமன்ற நீதியரசர்" - சி.வி.விக்னேஸ்வரன்:- உலகின் வலுவான நாடான அமெரிக்காவுடன் போரிட்டு மீண்டெழுந்துள்ள வியாட்நாம் மக்களிடம் இருந்து நாம் பலதை கற்றுக்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது வாசஸ்தலத்தில் திங்கள் கிழமை காலை வியாட்நாம் தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு சில அரசியல் காரணத்தால் கடந்த காலத்தில் வர முடியாது போனதாகவும் இங்கு வந்தால் பிரச்சனைகள் ஏற்படும் என தமக்கு கூறப்பட்டதாகவும் அதனாலையே கடந்த காலத்தில் வர முடியாது போனதாக வியாட்நாம் தூதுவர் தெரிவித்தார். உலகில் வலுவான நாடான அமெ…

  20. சுற்றுலா பயணிகளின் வானில் ஆயுதமா? -பொலிஸாரின் சோதனையால் மட்டு.வில் பதற்றம்! பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வாகனம், மட்டக்களப்பில் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இன்று (சனிக்கிழமை) காலை இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இனந்தெரியாத நபரினால், 119 அவசர இலக்கத்தினூடாக குறித்த வானின் இலக்கம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு, அந்த வானில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த வ…

  21. கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவரால் புதிய விளையாட்டுத்திடல் இன்று வழங்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

  22. ராஜபக்சவிடம் பிரமதர் மன்னிப்புக் கேட்டதற்காக வெட்கப்படுகிறேன் மனித உரிமைப் போராளி கவிதா சிறிவஸ்றவா 25 மார்ச் 2012 தமிழகத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- "ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றிய மனித உரிமைகள் தீர்மானத்தில் வாக்களித்தமைக்காக இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் எமது நாட்டின் பிரமதர் மன்னிப்புக் கேட்டார் என்பதற்காக நான் வெட்கப்படுகிறேன்" என்று ராஜஸ்தான் ஜெயப்பூரைச் சேர்ந்த மனித உரிமைப் போராளியான கவிதா சிறிவஸ்றவா தெரிவித்தார். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் சட்டமின்மையும் அரசின் தப்பிக்கும் போக்கும் மிதிபடும் ஜனநாகயமும் மனித உரிமைகளும் என்ற…

  23. தங்கள் சினிமா கதாநாயகனின் திரைப்படம் வெளியாகும் போது தீபாவளி, புதுவருடக் கொண்டாட்டங்கள் போல, பாலபிஷேசம் செய்து பட்டையக் கிளப்பும் ரசிகர்கள் பட்டாளத்திற்கு நடுவில் தீபாவளித்தி திருநாளன்று வெளியாகிய தங்கள் சினிமா கதாநாயகனின் புதுப்படத்தைக் கொண்டாடப்போன யாழ்ப்பாண ரசிகர்கள் திரையரங்கு வாயியில் புதியதோர் தொடக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். யாழ் செல்லா திரையரங்கில் விசேட தேவையுடையோரை அழைத்த ரசிகர்கள் அவர்களிற்கு உபகரணங்கள் வழங்கி உதவி செய்த நிகழ்வு நின்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருக்கிறது. பால் ஊற்றுகிறார்கள், கட்டவுட் வைக்கிறாரை்கள் என சினிமா ரசிகர்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற சூழலில் தலை ரசிகர்களின் இந்த முயற்சி எதிர்மறை விமர்சகர்க…

  24. அலரி மாளிகையில் இன்று விசேட கூட்டம்! - அரசியல் கைதிகள் விடுதலை குறித்து முக்கிய முடிவு [Monday 2015-11-16 08:00] பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய ஜனாதிபதி, பிரதமர்,சட்டமா அதிபர், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் விசேட கூட்டம் இன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய ஜனாதிபதி, பிரதமர்,சட்டமா அதிபர், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் விசேட கூட்டம் இன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சட்…

  25. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பொலன்னறுவை, மொனராகலை மற்றும் களுத்துறை ஆகிய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் ஒரே நெடுவரிசையிலும், ஏனைய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் இரண்டு பத்திகளிலும் அச்சிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் விநியோகிக்கப்படும் வேட்பாளர்களின் பட்டியலில் ஒவ்வொரு தொகுதிக்கான மாதிரி வாக்குச் சீட்டு அச்சிடப்படும். வாக்காளர்கள் வாக்களிப்பதற்கும் விருப்பங்களை குறிப்பதற்கும் புள்ளடியை (X) மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்களிக்கும் போது வாக்காளர்கள் பின்வரும் வாக்களிப்பு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.