Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சரியான அரசியல் தலைமைத்துவமின்மையே அரசியலமைப்பு இழுத்தடிப்புக்கு காரணம்: சுமந்திரன் அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்ற போதும், ஜனாதிபதி அதற்கான சரியான அரசியல் தலைமைத்துவத்தை கொடுத்து நகர்த்தாமல் இருப்பதே இழுத்தடிப்பிற்கு காரணமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பொறுப்புக்கூறல் விடயத்திலும் இதே இழுத்தடிப்புக் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். ஐ.நா. பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றிய உரை தொடர்பாக, எமது ஆதவன் செய்திச் சேவைக்கு இன்று (வியாழக்கிழமை) கருத்துத் தெரிவித்த சுமந்திரன் இவ்விடயத்தை…

  2. அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி, கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செலகத்துக்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்தப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர்த்தாரை வாகனங்களும் பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் குறித்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் பெரும்ப…

  3. “சில இடங்களில் இடம்பெறும் வாள்வெட்டுக்காக வடமாகாணம் முழுவதும் வன்முறையென கூறமுடியாது” வடமாகாணத்தில் சில பிரதேசங்களில் தான் வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதற்காக வடமாகாணம் முழுவதும் வாள் வெட்டு வன்முறைகள் இடம்பெறுவதாக கூற முடியாது என வடக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.கணேசநாதன் தெரிவித்தார். குப்பிளான் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் கல்விபயிலும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட 30 மாணவர்களுக்கு சீருடை துணி வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட சில பிரதேசத்தில் தான் வாள்வெட…

  4. வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற மூவர் சமூகத்துடன் இணைவு வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த ஒரு வருடமாக புனர்வாழ்வு பெற்று வந்த மூவர் இன்று காலை சமூகத்துடன் இணைத்துவைக்கும் நிகழ்வு பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி கப்டன் எதிரிசங்காவின் தலைமையில் இடம்பெற்றது. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணிமனையகத்தினால் கடந்த பல வருடங்களாக சிறையிலிருந்து புனர்வாழ் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு ஒருவருடம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்துகொண்ட ஜீ. புஸ்பராஜ் தலவாக்கலை, கமலநாதன் திருகோணமலை, புருஷோத்மன் யாழ்ப்பாணம் ஆகிய மூன்று பேரும் இன்று சமூகத்துடன் அவர்களது உறவினர்களிடம் இணைத்து வைக்கப்பட்டனர். …

  5. பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவில் ஆலயங்கள் உடைக்கபட்டு கொள்ளை பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டபகுதியில் இரண்டு ஆலயங்கள் இனந்தெரியதாவர்களால் உடைக்கபட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக் கொள்ளை சம்பவம் இன்று அதிகாலையில் இடம் பெற்றதாக தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; பொகந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டபகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றும், ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் ஒன்றும் இவ்வாறு உடைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முருகன் ஆலயத்தில் இருந்து தங்க நகைகள் மற்றும் உண்டியலில் வைக்கபட்டிருந்த பணம் என்பன கொள்ளைய…

  6. பிரமாண்டமாக தேசிய விழாவை நடத்தி பலத்தைக் காண்பித்த சீனா! முன்னெப்போதுமில்லாத வகையில் தனது தேசிய விழாவை நடத்திய சீனா தனது பலத்தை வெளிப்படுத்திக் காண்பித்துள்ளது. நேற்றையதினம் மக்கள் சீனக் குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட 69வது வருடாந்த பூர்த்திவிழா கொழும்பில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. சீனர்களுக்கு சொந்தமான கொழும்பிலுள்ள ஷங்கிரிலா ஹோட்டலில் முதன்முறையாக நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அரசியல்வாதிகள் இராஜதந்திரிகள் ஊடகவியலாளர்கள்பாதுகாப்பு படை அதிகாரிகள் எனப்பலரும் இதில் பங்கேற்றிருந்தனர். இலங்கையில் இதுபோன்று பிரமாண்டமான விழாவை வேறெந்த வெளிநாட்டுத் …

  7. ’வடக்கு, கிழக்கு அதிகாரப் பகிர்வு வந்தால் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்’ வடக்குக்கும் கிழக்குக்கும் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே, நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று காணப்படும் கருத்தியல், தவறானது எனக் குறிப்பிட்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவ்வாறு நடந்தால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மிரரின் சகோதரப் பத்திரிகையான டெய்லி மிரருக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதேபோல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் தான், அபிவிருத்தியைக் கொண்டுவர முடியுமென்பதும், தவறான நோக்கமெனவும், அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பி…

  8. இந்திய முக்கியஸ்தர்களுடன் மாவை சேனாதிராஜா முக்கிய சந்திப்பு இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த முக்கிய பிரதிநிதிகளுடன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இரகசிய சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் சட்டத்தரணி ராதாகிருஸ்ணன், கவிஞர் இனியபாரதி, தினமணி பத்திரிகையின் ஆசிரியர் ஆகியோருடன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்த நிலையில் ஊடகவியலாளர்களுக்கு தகவல் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பில் வட மாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வட மாகாணசபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம்,…

  9. இலங்கையர்கள் இதயத்தில் சீனா! – அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கையோடு அனைத்து சூழ்நிலையிலும் தோளுக்கு தோளாக நிற்கின்ற நண்பனாக சீனாவை கருதுவதாக இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அந்தவகையில் இலங்கையர்கள் சீனாவை இதயத்தில் வைத்திருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இலங்கை ஒரு சுதந்திர நாடு என்பதை சர்வதேசம் மதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி ஐ.நா.வில் முன்வைத்ததாக குறிப்பிட்ட அவர், போர் நிறைவுபெற்று பத்து வருடங்கள் ஆகின்ற நிலையில் முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த கடுமையாக உழைக்கும் இலங்கை, எஞ்சியுள்ள தூரத்தை கடக்கும் விடயத்தில் ஏனைய சர்வதேச மாதிரிகளைத் திணிக்க முற்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மக்கள…

  10. மன்னார் மனித புதைகுழி மனித எச்சங்கள் பாதிக்கப்படலாம் என அச்சம் மன்னார் சதொச வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தோகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் சதொச வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப்பபடுத்தப்படும் மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி இடம் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்ட அகழ்வு பணியானது அதன் பிறகு இன்று வரை இடம் பெறவில…

  11. கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்: செல்வம் அடைக்கலநாதன் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டுவரும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அனுராதபுரத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் அரசியல் கைதிகளை இன்று (புதன்கிழமை) மாலை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “கடந்த 13 நாட்களாக அநுராதபுரம் சிறையிலே அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார்கள். தமக்கு புனர்வாழ்வளிக்க வேண்…

  12. 4 அடி நீளமான கூரிய வாளினை மறைத்து வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இளைஞனுக்கு விளக்கமறியல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுமார் 4 அடி நீளம் கொண்ட கூரிய வாள் ஒன்றை வீட்டில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மகனின் அச்சுறுத்தல் தொடர்பில் தாயார் வழங்கிய முறைப்பாடு தொடர்பில் அவரது வீட்டுக்குச் சென்றிருந்த காவல்துறையினர் வாளை மீட்டதுடன், சந்தேகநபரையும் கைது செய்தனர் என்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்ற…

  13. பலாலி விமான நிலையத்தை எந்தவொரு நாட்டுக்கும் வழங்கப்போவதில்லை – நிமல் யாழ் பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்தவொரு வௌிநாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். நாட்டில் உள்ள ஆறு விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். திகன விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக ஒரு நிபுணர் குழுவை அமித்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் கூறினார். இந்த குழுவானது அபிவிருத்தி முயற்சிகளை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மதிப்பீடு செய்ய…

  14. இலங்கை ஐ. நா சபைக்கு பயந்த காலம் இப்போது இல்லை ; இராதாகிருஸ்ணன் இலங்கை ஒரு காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை என்று சொன்னாலே பயந்து கொண்டிருந்த காலம் மாறி இன்று அங்கே சென்று துணிச்சலாக எங்களுடைய கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் நல்லாட்சி அரசாங்கம் படிப்படியாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக…

  15. புலிகள் அமைப்பின் தலைவர் பிர­பா­க­ரன் விஷ­ ஜந்து- டக்ளஸ் தேவா­னந்தா!! தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வே.பிர­பா­க­ரன் தமிழ் மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல மனித குலத்­துக்கே விஷ­ஜந்து. அவரை நான் அப்­ப­டித்­தான் பார்க்­கின்­றேன். இவ்­வாறு ஈழ மக்­கள் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­துள்­ளார். இந்­தி­யா­வுக்கு அண்­மை­யில் சென்­றி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா, அங்­குள்ள தொலைக்­காட்­சிக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே இவ்­வாறு கூறி­யுள்­ளார்.அவர் தெரி­வித்­த­தா­வது, – தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளி…

  16. முப்படையினரின் பங்குபற்றலுடன் ‘நீர்த்தாகம் தாக்குதல்’ எதிரியால் கைப்பற்றப்பட்ட பிரதேசம் ஒன்றை, முழுமையாக இராணுவ நடவடிக்கை மூலம் மீட்டு எடுப்பது தொடர்பான “நீர்த்தாகம் தாக்குதல் பயிற்சி”, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் தலைமையில், திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில், இன்று (26) இடம்பெற்றது. இலங்கை உட்பட சர்வதேச நாடுகளின் முப்படையினரின் பங்குபற்றலுடன், மேஜர் ஜெனரல் நிஸங்க ரணவண்ணவின் முழுமையான வழிகாட்டலில் நடைபெற்ற இப்பயிற்சி நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகி, இலங்கையின் பல்வேறு பகு…

  17. வெளிநாட்டு தலையீடு வேண்டாம் – எமது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள்! – ஜனாதிபதி மைத்திரி இலங்கை பிரச்சினைகளில் வெளிநாடுகளின் தலையீடு அவசியமில்லையென்றும், நாட்டிற்குள்ளேயே பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் சுயாதீனத் தன்மையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தான் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபையின் 73ஆவது அமர்வு நியுயோர்க்கில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில் இலங்கை நேரப்படி இன்று (புதன்கிழமை) அதிகாலை உரையாற்றிய ஜனாதிபதி மேற்குறித்த வேண்டுகோளை முன்வைத்தார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகை…

  18. கூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் ஆர்.ராம் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி. சம்­பந்­த­னுடன் எனக்­கென்ன பிணக்கு? கூட்­ட­மைப்பபை பதிவு செய்ய வேண்டும் இந்­தி­யா­வுடன் நல்­லு­றவு உள்­ளது முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்­கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனம் செலுத்­துவேன். கட்­சி­க­ளிலும் பார்க்க மக்­களை ஒன்­றி­ணைத்து எமது மக்­களின் தேவை­களை உல­கிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்­த­வற்றை செய்வேன் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். தற்­போ­தைய தலை­மைகள் போய் கூட்­ட­மைப்பு பதிவு பெற்று மாற்­றுத்­த­லைமை உதித்…

  19. வடக்கில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மந்தகதியில் இடம்பெறுவது வேதனையளிக்கிறது - விக்கி இலங்கைக்கு மிகக்கூடிய வருவாயைத் தேடித் தருகின்ற சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி பணிகள் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி அடைந்துள்ளபோதும் வட பகுதிக்கான சுற்றுலா அபிவிருத்தி செயற்பாடுகள் மந்த கதியிலே உள்ளன என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையும், வடக்கு மாகாண சுற்றுலா பணியகமும் மற்றும் யாழ் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் உலக சுற்றுலாத் தினம் - 2018 இன்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு …

  20. தமிழர் தாயகமெங்கும் இன்று தியாகி திலீபன் நினைவேந்தல்! தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நல்லூரில் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை, தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும் புலம்பெயர் தேசங்களிலும் இன்று திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் எழுச்சிபூர்வமாக இடம்பெறவுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். http://www.newsuthanthiran.com/2018/09/26/தமிழர்-தாயகமெங்கும்-இன்ற/

  21. 'சிங்கள இராணுவத்தினர் பேய்கள்" என நினைத்தோம் : தமிழினி எழுதிய புத்தகத்தை ஆதாரமாக எடுங்கள் என்கிறார் பிரசன்ன புற்றுநோயால் பீடிக்கப்பட்டு மரணித்த விடுதலை புலிகள் அமைப்பின் பெண்கள் அமைப்பின் தலைவி தமிழினி தான் உயிருடன் இருக்கும்போது நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள விடங்களை நோக்கும் போது இராணுவத்தினர் யுத்தக் குற்றம் புரியவில்லை என்பது புலனாகிறது என சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார். “தாய் நாட்டுக்காக இராணுவத்தினர்” அமைப்பு ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் ம…

  22. யாழ்ப்பாணத்தில் மாம்பழ உற்பத்தி வலயம்! இலங்கையில் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயங்களை யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேசங்களில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த மாம்பழ உற்பத்தி வலயங்கள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. உலக வங்கியின் நிதியுதவியுடன், நடைமுறைப்படுத்தப்படும் நவீன விவசாய திட்டத்தின் கீழ் இந்த மாம்பழ உற்பத்தி வலயம் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் ஒரு இலட்சம் சிறந்த ரக மாங்கன்றுகள் செய்கை பண்ணப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://athavannews.com/யாழ்ப்பாணத்தில்-ம…

    • 8 replies
    • 1.9k views
  23. சரத் பொன்­சே­கா­விடம் 4 மணி நேரம் விசா­ரணை (எம்.எப்.எம்.பஸீர்) த நேஷன் பத்­தி­ரி­கையின் முன்னாள் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்டு சட்ட விரோ­த­மாக தடுத்து வைக்­கப்­பட்­டமை, சித்­தி­ர­ வதை செய்­யப்­பட்­டமை, ஆயு­தத்தால் தாக்­கப்­பட்­டமை, கொலை செய்ய முயற்­சிக்­கப் பட்­டமை தொடர்பில் முன்னாள் இரா­ணு வத் தள­பதி சரத் பொன்­சே­கா­விடம் சி.ஐ.டி. நேற்று விசா­ரணை செய்து வாக்கு மூலம் பெற்­றது. நேற்று நண்­பகல் 12.00 மணிக்கு கோட்­டையில் உள்ள சி.ஐ.டி. தல­மை­ய­கத்தில் ஆஜ­ரா­கிய அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விடம் மாலை 4.00 மணி வரை நான்கு மணி நேரம் விசா­ரணை செய்து விஷேட வாக்கு மூலம் பதிவு செய்­து­கொண்­ட­தாக சி.ஐ.டி.யின் உயர் அ…

  24. தமிழரசுக்கட்சிக்கு எதிரான வழக்கு வாபஸ்! | Tamil Page தமிழரசுக்கட்சியில் இருந்தும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தன்னை விலக்கி கொண்டமைக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை, தி.பிரகாஷ் இன்று வாபஸ் பெற்றுக்கொண்டார். சுன்னாகம் பிரதேசசபை தவிசாளர் பதவிக்கு கட்சி கட்டுப்பாட்டை மீறி தி.பிரகாஷ் போட்டியிட்டிருந்தார். தவிசாளர் பதவிக்காக எந்த எல்லை வரையும் செல்வேன் என அவர் காண்பித்தது கூட்டமைப்பிற்குள் அதிரச்சியையும், விசனத்தையும் ஏற்படுத்தியிருந்தது. உள்ளூராட்சி தேர்தல் முடிந்ததற்கு மறுநாள் யாழ் நகரிலுள்ள சிங்கள பெண் பாலியல் தொழிலாளி ஒருவரை மருதனார்மடத்திலிருந்த விடுதிக்கு அழைத்து வந்து, அவருக்கு பேசிய தொகை பணத்தை க…

  25. வடமராட்சி கிழக்கில் தொழில் புரிந்த 850 வெளிமாவட்ட மீனவர்களும் வெளியேறுகின்றனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி கிழக்கில் அனுமதியின்றி வாடி அமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபட்ட எட்டு நிறுவனங்களை அங்கிருந்து வெளியேறுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதனையடுத்து குறித்த நிறுவனங்களின் 32 வாடிகள் அகற்றப்படவுள்ளதுடன் அவற்றில் பணி புரிந்த 850 வெளிமாவட்ட மீனவர்களும் வெளியேறுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது வடமராட்சி கிழக்கில் அனுமதியின்றி வாடி அமைத்து கடலட்டை வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிக்கும் தொழில் செய்வதற்கு மத்திய அரசின் அனுமதியை எட்டு நிறுவனங்கள் பெற்றிருந்தன. அவைகள் பிரதேச செயலாளரின் அனுமதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.