ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக வெளிவந்துள்ள முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல அது தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது வீட்டில் இன்று மாலை 3 மணியளவில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; வடக்கு மாகாண சபைக்கு உரிய அமைச்சர்கள் தெரிவு, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல, தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு. அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக நேற்று மாலை கூட்டம் நடைபெற்றதாகவும் அதன் பின…
-
- 6 replies
- 515 views
-
-
மைத்திரி கூறிய யோசனையை நிராகரித்தார் ராணுவத் தளபதி கூட்டுப்படைகளின் தளபதி பதவியை ஏற்குமாறு இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவிடம் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனையை அவர் நிராகரித்துள்ளார் எனப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டுப் படைகளின் தளபதியாக இருந்த எயார்சீப் மார்ஷல் கோலித குணதிலக்க ஜுன் மாதம் 15ஆம் திகதி ஓய்வு பெற்றுள்ளார். அந்தப் பதவி இன்னும் வெற்றிடமாக உள்ளமைக்கு இராணுவத் தளபதியின் நிராகரிப்பே காரணம் எனக் கூறப்படுகின்றது. இதனால் கூட்டுப் படைகளின் தளபதி அலுவலகத்தை மூடி விடுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி…
-
- 0 replies
- 147 views
-
-
பரம்பரை சொத்தை... தங்களது சொத்து, என்று கூறுபவர்களுக்கு அனுமதிப்பத்திரத்தின் பெயரை மாற்றுவது பெரிய விடயமல்ல – சாணக்கியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் வீட்டையே தங்களது வீடு என்று கூறுகின்றவர்களுக்கு அனுமதிப்பத்திரத்தின் பெயரை மாற்றுவது பெரிய விடயமல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள முதியோர் சங்கம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றுக்கு சாணக்கியனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவ…
-
- 0 replies
- 269 views
-
-
கனடாவின் வன்கூவர் தீவுக் கடலில் படகுடன் பிடிபட்ட 76 இலங்கைத் தமிழர்களை தொடர்ச்சியான தடுப்புக் காவலில் வைக்குமாறு கனடிய குடிவரவு மறுமதிப்பீட்டு சபை உறுப்பினர் லியான் கிங் உத்தரவிட்டுள்ளார். குடியேற்றவாசிகள் அங்கு வந்து சேர்ந்த விதம் பற்றிய விவரங்கள் தெளிவற்றவையாக இருப்பதால் அவர்களைப் பற்றிய சோதனையை பூர்த்தி செய்ய நேரம் நேரம் போதவில்லை என்று தெரிவித்து கனடிய குடிவரவு அமைச்சரின் பிரதிநிதி ஒருவர் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து இந்த தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 76 இலங்கையர்களில் இரண்டு பேர் மீதான விசாரணைகள் பகிரங்கமாக நடைபெறும் என்றும் கிங் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த ஆண்களையோ அல்லது அவர்களது குடும்பத்தினரையோ அடையாளம் காணும் வகையிலான தகவல்கள்…
-
- 0 replies
- 967 views
-
-
அரசியலமைப்பை உருவாக்கும் சகல நடவடிக்கைகளும் இறுதிக்கட்டத்தில் : சந்திரிகா புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சகல நடவடிக்கைகளும் இறுதிக்கட் டத்தில் உள்ளன. பிரதான கட்சிகள் மத்தியில் உள்ளக கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்ற நிலையில் விரைவில் அரசியல் அமைப்பின் இறுதி திட்ட வரைவு கொண்டுவரப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். நல்லிணக்கத்தை உருவாக்குவது கடினமான ஒரு காரியம் அல்ல. ஆனால் அதை உருவாக்குவது அரசியல் தலைமைகளின் கைகளில் மாத்திரமே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம், பண்டாரநாயக்க வெளிநாட்டு கற்கைகளுக்கான நிலையம் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்கள் இணைந்…
-
- 1 reply
- 220 views
-
-
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு October 23, 2021 வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு சார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் ‘புலி’ வந்ததால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு சார் ஆலோசனைக்குழுக் கூட்டம் அமைச்சர் சி.பி ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்படி விடயங்கள் முன்னெடுக்கப்படாமல் வேறு விடயங்கள் கவனத…
-
- 0 replies
- 222 views
-
-
அமெரிக்க தடையை மீறி இரகசியமாக ஈரானிடம் எண்ணெய் வாங்குகிறது சிறிலங்கா [ திங்கட்கிழமை, 21 ஒக்ரோபர் 2013, 07:56 GMT ] ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு, அமெரிக்கா தடைவிதித்துள்ள போதிலும், மூன்றாவது தரப்பு மூலம், சிறிலங்கா தொடர்ந்தும் ஈரானிடம் மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணுவாயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. இந்தநிலையிலேயே, அமெரிக்காவின் தடையையும் மீறி, அனைத்துலக கடற்பரப்பில் வைத்து, ஈரானிய மசகு எண்ணெயை, சிறிலங்கா அரசாங்கம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் ஒன்றின் மூலமாக, வாங்கி வருகிறது. சிறிலங்காவில் உள்ள சபுகஸ்கந்தை எரிபொருள் …
-
- 0 replies
- 393 views
-
-
மீண்டும் விக்கி முதல்வராக ஆதரவு இல்லை; சிவாஜிலிங்கம் அதிரடி அறிவிப்பு October 31, 2021 நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் களமிறங்கினால் ஆதரவளிக்கப்போவதில்லை என, சி.வி.விக்னேஸ்வரன் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. டான் தமிழ் ஒளியில் நேற்று இரவு ஒளிபரப்பான நெற்றிக்கண் நிகழ்ச்சியில், கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனை திட்டவட்டமாகத் தெரிவித்தார். நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வடக்கு முதலமைச்சராக களமிறங்க விருப்பம் தெரிவித்துள்ளமை தொடர்பில் சிவாஜிலிங்கத்திடம் கேள்வி எழுப…
-
- 1 reply
- 406 views
-
-
தடுப்பு முகாம்களில் விடுதலைப்புலிகளின் துண்டு பிரசுரங்கள்! தமிழீழ விடுதலைப்புலிகளால் எழுதி ஒட்டப்பட்டதாக கூறப்படும் துண்டு பிரசுரங்கள் தடுப்பு முகாம்களில் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைவர் பிரபாகரன் இருப்பதாகவும்இ அவர் தலமையில் போராட்டம் தொடரும் எனவும் அத்துடன் இராணுவத்தினருடன் சேர்ந்து யாரையும் செயற்படவேண்டாம் எனவும் வாசகங்களில் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த துண்டுபிரசுரங்களை கண்டபின்னர் அங்கு விடுதலைப்புலிகள் இன்னமும் இருக்கலாம் என பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாத தடுப்பு பிரிவுஇ குற்றதடுப்பு பொலிஸ் பிரிவுஇ இராணுவ புலனாய்வு பிரிவு ஆகியன சேர்ந்து தடுப்பு முகாம்களில் இருக்கு…
-
- 0 replies
- 1.5k views
-
-
சம்பந்தனை காட்டிக்கொடுத்ததாக வெளியான செய்தி குறித்து பதிலளிக்கின்றார் வியாளேந்திரன் எம்.பி
-
- 0 replies
- 356 views
-
-
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட 2 ஆம் ஆண்டு மாணவி பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைதுசெய்யப்பட்டதனை ஜே.வி.பி வன்மையாக கண்டிக்கிறது. அந்த மாணவி பிரபாகரனிடம் சான்றிதழ் பெற்றமைக்காக விசாரணைக்கு உட்படுத்தப்படுவாராயின் மஹிந்த ராஜபக்ஷவினால் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காகவும் அவரை விசாரணைக்கு உட்படுத்தல்வேண்டும் என்று ஜே.வி.பி. கோரியுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு கோரிக்கை விடுத்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது 1988 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் பிறந்து பேராதனை பல்கலைகழகத்தில் கலைப்பீடத்தில் 2 ஆம் ஆண்டில் …
-
- 1 reply
- 1.6k views
-
-
மேற்குலக நாடுகளின் தலையீட்டுடனான அரசியலமைப்புக்கு அனுமதிக்க முடியாது நேர்காணல்: லியோ நிரோஷ தர்ஷன் படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார் புதிய அரசியலமைப்பை எமக்கு விரும்பியவாறு செய்துகொண்டால் அதில் பிரச்சினை இல்லை. மேற்குலக நாடுகளின் தலையீடுகள் ஜெனீவாவில் பேசப்படுகின்ற விடயங்கள் மற்றும் ஜீ.எஸ்.பி. சலுகைக்காக விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள் இவற்றை மையப்படுத்தி புதிய அரசியலமைப்பிற்கு அனுமதியளிக்க முடியாது. ஆகவே ஒற்றையாட்சி மற்றும் பௌத்த முன்னுரிமை இவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்போ அல்லது திருத்தமோ கொண்டுவரப்பட்டால் அதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்…
-
- 3 replies
- 310 views
-
-
வடமாகாண, வீதிகளில்... நடைமுறைக்கு வரவுள்ள புதிய நடமுறை! வடமாகாணத்தின் ஏ9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பளிஹக்கார விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளார். அந்த அறிவிப்பில் வன்னி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிரிவுகளிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் பொருத்தமான வாகனத் தரிப்பிடங்களை அடையாளம் கண்டு இது தொடர்பில் அறிவிக்குமாறு சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளது. பணி முடியும் வரை சாரதிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பலகைகள் வைக்க வேண்டுமென்றும் இப்பணியை உரிய…
-
- 0 replies
- 161 views
-
-
இலங்கையின் தென்பகுதி மற்றும் மத்திய பிரதேசங்களில் இன்று காலை 7.45 மணியளவில் நில அதிர்வு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அம்பாந்தோட்டை. பதுளை, திஸ்ஸ்மகரகம, லுஙுனுவெவ ஆகிய மாவட்டங்களில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அனர்த்த முகாமை நிலையம் தெரிவித்துள்ளது.http://www.eelanatham.net/news/important
-
- 2 replies
- 899 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ் மக்கள் மீது திடீர் அக்கறையும் அன்பும் ஏற்பட்டுள்ளதாக கூறும் இடதுசாரி முன்னணி அந்த அக்கறையும் அன்பும் தேர்தலை நோக்காக கொண்டதேயன்றி உண்மையானதல்ல எனவும் தெவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் எமக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், அதன் மூலம் மாத்திரம் ஜனநாயகம் மலரப்போவதில்லை. மாறாக தமிழ் மக்களுக்கு சுயநிர்ணயத்துடன் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அதன் மூலமே அனைத்து மக்களும் ஐக்கியத்துடன் வாழும் ஜனநாயகம் மலரும் என்று இடதுசா முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெவித்தார். நிப்போன் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் ம…
-
- 0 replies
- 582 views
-
-
இது தொடர்பான செய்திகள் கிடைத்தால் இத்திரியில் இணையுங்கள். William Hague Meeting members of the Tamil National Alliance to discuss and support #humanrights and reconciliation in Sri Lanka (twitter)
-
- 2 replies
- 623 views
-
-
வியாழேந்திரனின் தம்பியோடு இணைந்தே எனது மகனை கொன்றனர் ; கதறும் தாய் -திடுக்கிடும் தகவல் பேரினவாத சிங்கள அரசுக்கான இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் பாலசுந்தரத்தின் கொலையை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பியான மயூரனும் சேர்ந்தே செய்ததாக கொலை செய்யப்பட்டவரின் தாயார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஸ்வான் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பெற்றோர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், எனது மகனை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பியான மய…
-
- 0 replies
- 348 views
-
-
ஈழத் தமிழர்களை திட்டமிட்டு இனப் படுகொலை செய்துவரும் சிறிலங்க அரசை ‘இனப் படுகொலை’ அரசாக அறிவித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று 'மே 17 இயக்கம்' கோரிக்கை விடுத்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e24KOJlaccaeoOAd4deKKMMM0a3cdlYOed4dBTnB32022m4BZ4e
-
- 0 replies
- 655 views
-
-
மூவின மக்களுக்கும் பாகுபாடின்றித் தீர்வு ரணில் நேற்று உறுதி தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்குத் துளியளவேனும் பாகுபாடு காட்டாத வகையிலான அரசியல் தீர்வொன்றை இந்த நாடாளுமன்றத்துக்குள் அடையவேண்டும் எனத் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசியல் வாழ்வில் 40 வருடங்களை நிறைவு செய்த தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இந்தப் பிரேரணைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:என…
-
- 6 replies
- 545 views
-
-
“விவசாய உபகரணங்களினால் அரசாங்கத்துக்கு எதிராக யுத்தம் செய்யுங்கள்” December 23, 2021 நாட்டு மக்களுக்காக அரசாங்கத்தை கவிழ்க்கும் நிலைக்கு வந்துள்ளதாகவும், அனைத்து மக்களும் அடுத்த வருடம் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பத் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, அந்த பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி எடுக்க தயாராகவுள்ளது என தெரிவித்தார். விவசாயிகள் தத்தமது கைகளிலுள்ள விவசாய உபகரணங்களை எடுத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக யுத்தம் செய்யுங்கள் என தெரிவித்த அவர், அதேபோல் இல்லத்தரசிகள் சமையலறையிலிருக்கும் உரல், கத்தி, சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீதியில் இறங்குங்க…
-
- 0 replies
- 269 views
-
-
கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் மீது சிங்களக் கைதிகள் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdz04a40mA45ff2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 491 views
-
-
வவுனியாவில் ரயிலினை மறித்து மக்கள் போராட்டம் : பொலிஸார் குவிப்பு வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தினை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல முற்பட்டவேளை, முச்சக்கர வண்டி புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்தார். எனவே, இவ்விடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவையினை அமைக்கக்கோரி அக்கிராம மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரத்தினை இன்று காலை 8.30 மணியளவில் மற…
-
- 0 replies
- 266 views
-
-
Published by T. Saranya on 2022-01-10 12:49:37 (எம்.எப்.எம்.பஸீர்) சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி கோரிக்கை முன் வைத்துள்ளது. கடன் கடிதத்திற்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகத்துக்கு அறிவித்தே மக்கள் வங்கி தன்னை கறுப்புப் பட்டியலில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான கோரிக்கையை முன் வைத்துள்ளது. இந்நிலையில் இன்று (10) குறித்த கறுப்புப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது. முன்னதாக ஒப்பந்தத்தை மீறி கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் மக்கள் வங்கியை கறுப்புப் பட்…
-
- 2 replies
- 297 views
-
-
நாடாளுமன்றத்தில் மேல்சபை உருவாக்கப்படும் - இலங்கை ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அங்கு உரையாற்றிய பொதுச் கூட்டத்தில் இலங்கை அரசியலமைப்பின் கீழ் மேல்சபை(செனட்) ஒன்று உருவாக்கப்படும் என்றும், அதில் மாகாண சபையின் உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மக்களுக்கு நியாயமான கெளரவமான அரசியல் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் எவ்வகையான அரசியல் தீர்வு என்று அவர் விளக்கமளிக்கவில்லை. இதன் பின்னர் மட்டக்களப்பிற்கு சென்ற அவர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார். ஆனால் இனப் பிரச்சினை தொடர்பாக மட்டுமன்றி அரசியல் தொடர்பாகவோ எதுவும் குறிப்பிடாமல் பொதுவாகவே ஜனாதிபதி உரையாற்றினார…
-
- 0 replies
- 500 views
-
-
ஜெர்மனியினில் வசித்து வரும் புலம்பெயர் சொந்தங்களான சிவகுமார் - பேரின்பவதனி தம்பதியினர் தமது 50 ஆவது பிறந்த தினத்தினை வன்னியினில் யுத்த அவலங்களுடன் வாழ்ந்த குடும்பமொன்றிற்கு கைகொடுத்து உதவியுள்ளனர் . . கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையினில் தள்ளுவண்டில் மூலமே தமது வாழ்வை தொடரும் இம்முன்னாள் போராளிக்கு கைகொடுக்கும் வகையினில் அவர்கள் தமது அன்பளிப்பினை ஹெல்பிங் ஹேட்ஸ் அமைப்பினூடாக வழங்கியிருந்தனர் . அவ்வுதவியினை பொறுப்பேற்று கைகளினில் சேர்ப்பித்திருந்தார் வலி . வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு குழுவின் தலைவரான ச . சஜீவன் . தமது பிறந்த நாளிற்கென நட்சத்திரவிடுதிகளினில் தண்ணீராக அள்ளிக்கொட்டும் தாயகம் மற்றும் புலம்பெயர் சொந்தங்களிற்கு இதுவோர் நல்லுதாரணம் .…
-
- 2 replies
- 1.1k views
-