ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
வட மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஐந்து கட்சிகளுக்கும் இடையிலான வேட்பாளர் பங்கீடு பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் வாசிக்க...http://tamilworldtoday.com/?p=23205
-
- 0 replies
- 500 views
-
-
வவுனியா மருத்துவமனையில் அவயவங்களை இழந்த 20 ஆயிரம் மக்கள் உள்ளனர்; அவர்களில் பெரும்பாலானவர்கள் எறிகணைத் தாக்குதல்களில் அவயவங்களை இழந்தவர்கள் என மருத்துவர் தெரிவித்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் 'சனல் - 4' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் இறுதியாக நடைபெற்ற சமரில் 20 ஆயிரம் மக்கள் அவயவங்களை இழந்துள்ளதாக காயமடைந்த மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கிவரும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரச படையினரின் எறிகணை வீச்சுக்களினாலேயே பெருமளவான மக்கள் உயிரிழந்துள்ளதாக கண்ணால் கண்ட சாட்சிகள் எமது ஊடகவியலாளர்களிடம் இரகசியமாக தெரிவித்துள்ளனர். நாம் இந்த ஆய்வுகளை ஒரு வாரமாக மேற்கொண்டிருந்தோம்.…
-
- 4 replies
- 819 views
-
-
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல்: இஷ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு இஷ்ரேலில் உள்ள இலங்கையர்கள் அனைவரையும் விழிப்புடன் இருக்குமாறும் பெரிய கூட்டங்கள் மற்றும் தேவையற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு டெல் அவிவில் (Tel Aviv) உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான கலவரங்கள் மற்றும் மோதல்களால் அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீவிர அவசரநிலை ஏற்பட்டால் இலங்கை சமூகத்தின் தேவைகளுக்கு பதிலளிக்கும் பொருட்டு தூதரகம் துரித எண்களையும் அறிமுகப்படுத்தியது. அதன்படி, இலங்கையர்கள் கே.பி. சந்திரதிலகே, 058 6875764 அல்லது இண்டிகா சேனரத்ன, தொழிலாளர் மற்றும் நலன்புரி 055 9284399 ஆகிய எண்களுடன் தொட…
-
- 0 replies
- 165 views
-
-
23/06/2009, 16:44 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] சிறீலங்காவிற்கு ஒரு பில்லியன் நிதியுதவி – அமெரிக்கெயார்ஸ் நிறுவனம் சிறீலங்காவிற்கு ஒரு பில்லியன் ரூபா நிதியுதவி வழங்குவதற்கு அமெரிக்காவின் அரச சார்பற்ற நிறுவனமான “அமெரிக்கெயார்ஸ்” நிறுவனம் முன்வந்துள்ளது. கொழும்பு “லேடி றிச்வே” சிறுவர் மருத்துவமனையில் இடம்பெற்ற மருத்துவப் பட்டறை ஒன்றில், இந்த அமைப்பின் கொழும்பு பிரதிநிதி வீசா எம்.ஹில்மி இந்தத் தகவலைத் தெரிவித்தார். அமெரிக்க நிறுவனத்தின் இந்த நிதியுதவி மூலம் செய்கைக கால் பொருத்துதல், உட்பட பல்வேறு மருத்துவப் பணிகளை முன்னெடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ள அமெரிக்க அரசு, நிதியுதவி வழங்குவதில்ல…
-
- 0 replies
- 721 views
-
-
சீனாவின் அம்பாந்தோட்டை விவகாரம் : இந்தியா மௌனம் காப்பது வியப்பளிக்கின்றது : கோத்தபாய ராஜபக்ஷ (லியோ நிரோஷ தர்ஷன்) அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதமான பங்குகளை 99 ஆண்டுகளுக்கு சீனாவிற்கு வழங்கவுள்ளது. இந்தியா மௌனம் காப்பது வியப்பாக உள்ளது என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்துவதற்கு யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று நாம் டில்லிக்கு கூறியிருந்தோம். ஆனால் அதனை அன்று இந்தியா நம்பவில்லை. இதற்காக ஆட்சி மாற்றத்திற்காக செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தின் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ…
-
- 1 reply
- 327 views
-
-
எமது அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தமிழ் மக்களே! சிறீலங்கா அரசும் அதனுடைய சர்வதேச ஆதரவு சக்திகளும் தமிழ் அரசியலின் தேசியவாத சிந்தனையை இல்லாது ஒழித்து 13ம் திருத்தத்திற்குள்ளும் மாகாணசபை முறைக்குள்ளும் முடக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பதான அறிவிப்பை இவ் அறிக்கை ஊடாக வெளிப்படுத்துகின்றது. 1987 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ற பெயரில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு எம்மீது திணிக்கப்பட்ட நாளில் இருந்து அதனை தமிழ் மக்கள் நிராகரித்து வந்துள்ளார்கள். காரணம் மாகாணசபைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை துளியேனும் திருப்திப்படுத்தாத…
-
- 0 replies
- 556 views
-
-
இடைக்கால அறிக்கையில் காலதாமதம் வேண்டாம் புதிய அரசியல் அமைப்பு விவகாரம் தொடர்பில் கூட்டமைப்பு வலியுறுத்தல் (ஆர்.ராம்) அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் இது வரையில் கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்ட விடயங்களை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையினை வெளியிடுவதில் எவ்விதமான கால தாமதங்களும் அவசியமில்லை. இந்த விட யத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கையி…
-
- 0 replies
- 144 views
-
-
30 மே 2021 பட மூலாதாரம்,FACEBOOK/BAKEERMARKAR படக்குறிப்பு, தேரருடன் நாடாளுமுன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இலங்கை நாடாளுமன்றத்துக்கு முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்ட பௌத்த பிக்கு, தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பத்தேகம சமித தேரர், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று தனது 69ஆவது வயதில் காலமானார். மாத்தறையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, காலி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்குத் தெரிவான…
-
- 4 replies
- 862 views
-
-
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை அரசாங்கத்தைப் பொறுத்தவரை சில பிரச்சினைகளைத் தீர்த்திருந்த போதும் புதிய சில பிரச்சினைகளை அல்லது நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உதாரணமாக வெற்றி பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரும் கூட அவசரகால நிலையை தொடர்ந்தும் பேணிக்கொள்ள விரும்புகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது. யுத்தத்தின் எச்சங்களில் இருந்து தோற்றம் பெறக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு அவசரகால நிலை அவசியம் என்று அரசாங்கம் கருதக் கூடும். அல்லது தென்னிலங்கையில் ஏற்படக்கூடிய அரசியல் நெருக்கடிகளை கையாள்வதற்கு சட்டம் அவசியமானது என்று கருதப்படவும் கூடும். எவ்வாறாயினும் தெளிவானது என்னவெனில் அவசரகால நிலையை தளர்த்துவது அரசாங்கத்தின் அல்லது இரா…
-
- 0 replies
- 778 views
-
-
யாழில் ஐ.ம.சு.கூ. காரியாலய திறப்பு விழாவுக்கு பொலிசாரினால் பலவந்தமாக பொது மக்கள் இழுத்து வரப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணத்தில் ஐ.ம.சு.கூ தேர்தல் அலுவலக திறப்பு விழாவுக்கு கிராமத்து மக்களை பலவந்தமாக தமது வாகனங்களில் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியினர் தமது தேர்தல் அலுவலகத்தை நேற்று காலை 9.30 மணியளவில் சோமசுந்தரம் வீதி, சுண்டிக்குழியில் திறந்துள்ளனர். இவ்விழாவுக்கு சமூகமளிப்பதற்காக யாழ் மக்களைப் பலவந்தமாக தமது வாகனத்தில் அந்த இடத்துக்கு கொண்டு செற்றதாக யாழ் தகவல்கள் கூறுகின்றன. போலீஸ் நிலையங்கள் அமைந்துள்ள கிராமங்களில் இருந்து பத்து பத்து கிராமத்தவர்களாக போலீஸ் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு அவர்கள் விருப்பம் இல்லாமலே…
-
- 0 replies
- 551 views
-
-
இலங்கையின் தலைநகர் கொழும்பின் கிராண்ட் பாஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றை நேற்று பௌத்த கும்பல் ஒன்று தாக்கியதை அடுத்து அப்பகுதியில் மதக் கலவரம் வெடித்திருந்த நிலையில் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் . ஞாயிற்றுக்கிழமை போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது என்றாலும் பதற்றங்கள் நீடிக்கின்றன.இதனிடையே முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் மதப் பிரதிநிதிகள் போன்றோர் பௌத்த சாசன அமைச்சகத்தில் இவ்விவகாரம் தொடர்பில் விவாதித்துவருகின்றனர். அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ரிசாட் பதியுதீன், துணை அமைச்சர் ஃபைசர் முஸ்தஃபா போன்றோர் சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்டுள்ளனர். அமெரிக்க தூதரகம் கண்டனம் …
-
- 0 replies
- 306 views
-
-
யாழ்தேவியில் மோதி ஒருவர் பலி நடராசா கிருஸ்ணகுமார் வவுனியா பொலிஸ் நிலையப்பிரிவில் உள்ள நொச்சி மோட்டைப் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பண்டாரிக்குளம் வீதியைக் கடக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர், ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக, வவுனியா பொலிஸ் நிலையத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், இன்று வியாழக்கிழமை (20) மதியம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி ரயிலுடன் மோதி, வவுனியா நகரசபை விடுதியில் வசிக்கும் நவலிங்கம் ஜீவராஜ் (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ள…
-
- 0 replies
- 299 views
-
-
இலங்கையில் தமிழர்களை அழிக்க சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு உதவினால், இலங்கையில் உள்ள தமிழர்கள் தனிநாடு அமைக்க நாங்கள் உதவுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்திருக்கிறார். இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை நினைவரங்கம் அருகில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்ப…
-
- 54 replies
- 3.1k views
-
-
கிழக்கில் தொடரும் தமிழினக்குறைப்பு வேலைத்திட்டம் – பலப்படுத்தவேண்டிய அவசியம் உணரப்படுமா – மட்டு.நகரான் July 1, 2021 Share 2 Views வடகிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வரும் போதும், அவை தொடர்பில் எந்தளவுக்கு கவனம் செலுத்தப்படுகின்றது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் தமிழர்களின் விகிதாசாரத்தினைக் குறைப்பதற்கு மிகவும் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் நாங்கள் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருந்தோம். ஆனால் அது தொடர்பில் போதுமான கவனத்தினை யார…
-
- 0 replies
- 436 views
-
-
சிறிலங்காவிற்கு ஆயுதங்கள் கொண்டு சென்ற வாகனங்களை தாக்கிய தமிழுணர்வாளர்கள் இராமகிருட்டிணன் லெட்சுமணன் விடுதலை [படங்கள் இணைப்பு] ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்திய இராணுவம் சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் கொண்டுபோவதாக கேள்விப்பட்டு ஆயுத தளவாட வாகனங்களை வழி மறித்து மறியல் செய்ததற்காக, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணனும், பெரியார் திராவிடர் கழக பெரம்பளூர் மாவட்டப் பொறுப்பாளர் லட்சுமணனும் இன்று விடுதலை ஆனார்கள். கோவை நடுவண் சிறையிலிருந்த அவர்களை இன்று காலை (01.08.2009) பெரியார் திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.ஆறுச்சாமி தலைமையில் தமிழுணர்வாளர்கள் பலர் சிறை வாயிலில் திரண்டிருந்து எழ…
-
- 0 replies
- 503 views
-
-
சர்வதேச மனித நேய அமைப்புகள் அனைத்தும் சிறி லங்காவில் இந்த மாநாட்டை நடாத்த வேண்டாம் என்று பொதுநலவாயா நாடுகளின் அரசுகளுக்கு தமது அதிர்ப்தியை தெரிவித்து இருக்கும் நிலையில், தமிழ் நாடு எங்கும் இந்த மாநாட்டில் இந்திய கலந்து கொல்ல கூடாது என்ற குரலும், தமிழ்நாட்டு முதல் அமைச்சர் சிறி லங்காவை நட்பு நாடு அல்ல என்று இந்தியா அறிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கும் நிலையில் புலம்பெயர் தமிழ் மக்களும் பொதுநலவாயா மாநாடு சிறி லங்காவில் நடப்பது 'சர்வதேசத்திலில் இனவாதத்தை வளர்க்கவும், சர்வதேச சட்டங்களை எல்லோரும் மீராளாம், சர்வதேச சட்டங்களை எந்த நாடும் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்பதை வலியுறுத்துவது போலாகும். சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் அதில் பொதுநலவாயா நாடுகள் உ…
-
- 1 reply
- 250 views
-
-
யாழ், வவுனியா, மற்றும் ஊவா மாநகர உள்ளூராட்சி தேர்தல்,நடைபெற்று முடிந்துள்ளது. யாழ் தேர்தல் 70 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற்ற போதும் சுமார் 18 சதவீத வாக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளன. யாழ் வாக்களிப்பு நிலையங்களில் அடையாள அட்டை விடயத்தில் கடுமையான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதுடன், வாக்களிப்பு பிரதேசங்களில் அதிகமான இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தனர். எனினும், மக்கள் மத்தியில் நிலவும் விரக்தி மனோநிலை, மற்றும், அடையாள அட்டை, வாக்காளர் அட்டை பிரச்சினையினால் மிக மிக மந்த கதியிலேயே வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. இதேவேளை தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் யாழ் மாநகர சபை தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெ…
-
- 0 replies
- 620 views
-
-
வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்ற இடமளியோம் – மங்கள சமரவீர வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த இடமளிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சில வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த முயற்சிக்கின்றனர் என குற்றம் சுமத்தியுள்ள அவர் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் ஈடுபட கிடைத்தமை ஓர் புனிதமான தருணம் என குறிப்பிட்டுள்ளார். இந்த தருணத்தை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது என குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றிய அமரர் லக்ஸ்மன் கதிர்காமரின் …
-
- 1 reply
- 218 views
-
-
புலிகளால் சேர்க்கப்பட்ட சிறுவர்களை நினைவுகூருவது தவறா? – பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி விடுதலைப் புலிகள் சிறுவர்களை பலவந்தமாக அவர்களது இயக்கத்தில் சேர்த்தார்கள். ஆனால் மரணமான அச்சிறுவர்களின் பெற்றோர் அவர்களை ஏன் நினைவு கூர முடியாது? ஒரு நாடு, ஒரு சட்டம் என்றால், தெற்கில் ஜே.வி.பி காலத்தில் படையினரால் கொல்லப்பட்ட ஜே.வி.பியினரை நினைவு கூர முடியுமென்றால், ஏன் தமிழ் மக்களால் அவ்வாறு முடியாது? இவ்வாறு மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய மூன்றாவது அமர்வில் சாட்சியமளித்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி எழுப்பினார். ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய மூன்றாவது விசாரணை அமர்வு கடந்த 14 ஆம் திகதி அன்று பி.எம்.ஐ.சி.எச் மண்டபத்தின் துலிப் கூட்ட அறையில் …
-
- 1 reply
- 318 views
-
-
சிங்களப் பேரினவாததால் வதைபடும் தமிழர்களும் மறுக்கப்படும் மானிட உரிமைகளும் [படங்கள் இணைப்பு] ‘சிங்களப் பேரினவாததால் வதைபடும் தமிழர்களும் மறுக்கப்படும் மானிட உரிமைகளும்’ என்ற தலைப்பில் மதுரையில் 13.08.2009 வியாழக்கிழமை காலை கருத்தரங்கமும், அன்று மாலை மாநாடும் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் துவக்கவுரை நிகழ்த்திய இலங்கையில் Platform for Freedom என்ற அமைப்பைச் சேர்ந்த நிமல்கா பெர்ணான்டோ, வன்னியில் ஈழத் தமிழர்களை அடைத்து வைக்கப்ட்டுள்ள முகாம்கள் திறந்தவெளிச் சிறைச் சாலைகளாகவே உள்ளன என்று கூறினார். 18 பேருக்கு ஒரு கழிப்பரை வசதி இருக்க வேண்டிய இடத்தில் 800 பேருக்கு ஒரு கழிப்பரை வீதம் உள்ளது என்றும், அவைகள் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கின்றன என்றும் முகாம்க…
-
- 0 replies
- 605 views
-
-
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தமாக இடம்பெற்ற போரில், சகல இனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பதாக மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார். போரின் இறுதிக்கட்டத்தில் மட்டுமின்றி, யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதும் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என திருகோணமலை சிவில் அமைப்புகள் விடுத்த கோரிக்கையின் போது நவீபிள்ளையின் பிரதிநிதி ரோரி முங்கவன் நேற்று இந்த உறுதிமொழியை வழங்கினார். முக்கியமாக கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த காலத்தில் பௌத்த பிக்குகள் கொலை செய்யப்பட்மை, சிறார்கள் கடத்திச் செல்லப்பட்டமை ஆகியன தொடர்பிலும் விசாரணைக…
-
- 2 replies
- 411 views
-
-
யாழ்ப்பாண நகரில் மழை யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று மாலை மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரமாக மழை தொடர்ந்து பொழிகின்றமை குறிப்பிடத்தக்கது. http://uthayandaily.com/story/2134.html
-
- 2 replies
- 549 views
-
-
செங்கல்பட்டு சிறப்புமுகாம்(சிறை)வாசிகள் விடுக்கும் அறிவித்தல் விடுநர் முகாம்வாசிகள் சிறப்பு முகாம் செங்கல்பட்டு. செங்கல்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும் இம்முகாம் ஆனது1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, இப்பொழுது இங்கு 67 ஈழத் தமிழர்கள் வாடிவருகின்றோம். நாங்கள் எங்களது குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளோம். ஈழத் தமிழராகிய எங்களது இவ்விடுதலை போராட்டம் முடிவில்லாத தொடர் போராட்டமாக நீடிக்கிறது, இங்குள்ள பெரும்பாலான நாங்கள் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து சென்ற போது சட்ட விரோதம், சந்தேகம் என்ற பெயர்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்,பின்பு நீதிமன்றத்தின் மூலமாக ஜாமீன் பெற்று விடுதலையான போது சிறைவாயினில் வைத்து ம…
-
- 1 reply
- 739 views
-
-
'நல்லாட்சி அரசாங்கம் தீர்வுக்கு தயாரில்லை' -எஸ்.நிதர்ஷன் “நல்லாட்சி என்று கூறப்படுகின்ற அரசாங்கம் தம்மை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றதே தவிர, வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய தமிழ் மக்களுக்கான தீர்வைப்பெற்றுத்தர எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு நான்காம் நாளான இன்று, நெடுந்தீவில் குமுதினி படகில் இடம்பெற்ற படுகொலைகளை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றபோது அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் படுகொலைகள் ஒவ்வொன்றும் வரலாறு. தமிழ் மக்களின் படுகொலைகள் அனைத்தும் அவர்களின் உர…
-
- 2 replies
- 865 views
-
-
நவநீதம்பிள்ளை இலங்கை சென்ற போது றோ அவரை பின்தொடர்ந்ததா? 08 செப்டம்பர் 2013 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்த காலப்பகுதியில் இந்தியாவின் உளவு பிரிவான றோ, அவரை பின்தொடர்ந்ததாக தெரியவருகிறது என திவயின தெரிவித்துள்ளது. மனித உரிமை ஆணையாளர் இலங்கையில் தெரிவித்த கருத்துகள் மற்றும் சந்தித்த நபர்கள் குறித்து ஆராய்வதற்காக இந்திய உளவு பிரிவு இலங்கைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆணையாளர் இலங்கைக்கு வந்த நாள் முதல் அவர் இலங்கையில் இருந்து வெளியேறும் நாள் வரை அவரது சகல நடவடிக்கைகள் குறித்தும் றோ தகவல்களை திரட்டியுள்ளது. கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் றோ புலனாய்வாளர்கள் அதிகளவான காலத்தை இலங்கையின் வடக்கில் செலவிட்டுள்ளதாக தெரியவருக…
-
- 0 replies
- 833 views
-