ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
18ம் திருத்தச் சட்டம் தவறான முறையில் அமுல் படுத்தப்பட்டுள்ளது – பேராசிரியர் சூரி ரட்னபால:- 20 அக்டோபர் 2014 தவறான முறையிலேயே 18ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக சட்ட பேராசிரியரும், அரசியல் சாசன சட்ட வல்லுனருமான பேராசிரியர் சூரி ரட்னபால தெரிவித்துள்ளார். சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தியதன் பின்னரே 18ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியிருக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதனை தெளிவுபடுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் சூரி ரட்னபாலவிடம் கோரியிருந்தது. இந்தக் கோரிக்கைக்கு அமைய பேராசிரியர் ஜனாதிபதி தேர்தல் மற்றும…
-
- 0 replies
- 467 views
-
-
காணொளி http://vimeo.com/14879911
-
- 0 replies
- 524 views
-
-
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 7, 2010 ஈழ நாதம் புதிய அரசியல் சீர்திருத்தம் நூற்றுக்கு நூறு ஒர் சர்வாதிகார தன்மைக்கு இட்டு செல்கின்றது சட்டத்திருத்தம் பதவியில் உள்ள ஜனாதிபதி இரண்டு தடவைகளுக்கு மேலும் பதவி வகிக்க வகை செய்து சர்வாதிகாரத்துக்கு வழி கோலுகிறது . நிறைவேற்று, நீதி அதிகாரங்கள் சம்பந்தப்பட்ட அலகுகளில் அரசியல் செல்வாக்குக்குவகை செய்யும் பகுதிகளை உள்ளடக்கியதால் ஜனநாயக ஆட்சி முறைக்குக் குந்தகம் ஏற்படுத்துகின்றது. 13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நற்பலன்களையும் ஊறுபடுத்துகின்றது. இதனால் கூட்டமைப்பு இந்த சீர்திருத்தத்தினை எதிர்க்கின்றது என கூறியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாள…
-
- 4 replies
- 1.1k views
-
-
'18வது திருத்தச் சட்டமும் இலங்கை மக்களும்' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் பத்தாவது பகுதி வெள்ளி (17.09.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். குரல்வெப்(kuralweb.com) மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக் கேட்கலாம். (FStream மென்பொருளை தரவிறக்கம் செய்து வானொலி நிகழ்ச்சியை iPhone ஊடாகவும் கேட்கலாம்) கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கூ…
-
- 1 reply
- 745 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்த 19 ஆம் திருத்தம் சிறந்த தீர்வு அல்ல. 19 ஆம் திருத்தம் மூலமாக நிறைவேற்று அதிகாரம் ஒரு சிறியலவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே புதிய அரசியல் அமைப்பின் மூலமாக முழுமையாக நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி இன்று செய்த தவறை இனியொருமுறை செய்யாதிருக்க நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதே ஒரே வழிமுறை எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைபின…
-
- 0 replies
- 359 views
-
-
December 6, 2018 பாராளுமன்ற முறையின் அடிப்படையில் 19 ஆவது அரசியலமைப்பில் இருக்கும் முரண்பாடான அல்லது பிரச்சினைக்குரிய சரத்துகளை திருத்தி மாற்றியமைக்க தாம் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக அறிவித்துள்ளார். இது தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதில், “2015 ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவரது தலைமையிலான அயராத முயற்சியின் பெறுபேறாகவே, மூன்று தசாப்த காலமாக நாட்டில் ஜனநாயகம் தொடர்பில் நிலவிய சிக்கல் நிலைமைக்கு தீர்வாக இலங்கை அரசியலமைப்…
-
- 0 replies
- 352 views
-
-
19 ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் புலிகளின் குரல் வானொலி [வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008, 12:08 மு.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்] தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணித்திற்கு அமைய தாயக விடுதலைப் போராட்டத்துக்கான கருத்துருவாக்கப்பணியை ஆற்றிவரும் புலிகளின் குரல் வானொலி 19 ஆவது ஆண்டில் காலடி பதிக்கின்றது. புலிகளின் குரல் வானொலி 18 ஆண்டுகாலப்பணியை இன்று நிறைவுசெய்து 19 ஆவது ஆண்டில் நாளை வெள்ளிக்கிழமை காலடி வைப்பதனையொட்டிய ஒன்றுகூடல் இன்று நடைபெற்றது. புலிகளின் குரல் வானொலியின் ஒன்றுகூடல் நிகழ்வு மேலாளர் ப.கபிலன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், கலைபண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவ…
-
- 0 replies
- 552 views
-
-
இலங்கையில் மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை குறைக்கும் என்று கருதப்படுகின்ற 19 ஆவது சட்டத் திருத்தத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மாகாண சபைகளுக்கு குறைந்த அளவிலேனும் அதிகாரம் வழங்கும் 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு மாறாக, இந்தப் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்று கூறப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்புகள் எழ ஆரம்பித்துள்ளன. விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த 19 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு, அதிகாரப் பகிர்வு உட்பட பல விஷயங்கள் 19 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் தீர்க்கப்படும் என்று அரச தரப்பு கூறுக…
-
- 0 replies
- 341 views
-
-
19 ஆவது திருத்தத்தில் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை - மஹிந்த மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்திருக்கும் 20 ஆவது திருத்தம் நாட்டுக்கு தேவையற்றதொன்றாகும். அத்துடன் 19 ஆவது திருத்தத்தில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரம் ஜயஸ்ரீ விகாரைக்கு நேற்று வழிபாட்டுக்காக சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழிபாடுகளின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் அரசியல…
-
- 0 replies
- 255 views
-
-
19 ஆவது திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி அதிகாரமற்றவர் – மனுஷ நாணயக்கார In இலங்கை June 18, 2019 11:12 am GMT 0 Comments 1033 by : vithushan 19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் அற்றவர் என பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் கட்டுபடுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை ஜனாதிபதி ந…
-
- 0 replies
- 659 views
-
-
19 ஆவது திருத்தச் சட்டத்தில் முரண்பாடுகள்! சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும்: நிமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19 வது திருத்தச் சட்டத்தில் சில விடயங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவதாக உள்ளது. எனவே சர்வஜன வாக்கெடுப் பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அத்துடன் 19 வது திருத்தச் சட்டத்துடன் தேர்தல் முறைமை மாற்றத்திற்கான திருத்தச் சட்டத்தையும் ஒன்றாக சமர்ப்பித்தால், இரண்டுக்கும் நாம் முழுமையான ஆதரவு வழங்குவதாகவே அறிவித்திருந்தோம் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ப…
-
- 0 replies
- 327 views
-
-
19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் முயற்சியை கூட்டமைப்பு எதிர்க்கும்; சுமந்திரன் அறிவிப்பு September 3, 2020 ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாம் 19 ஆவது திருத்தத்தை உருவாக்கினோம். தற்போதைய அரசு இதை இல்லாதொழிக்க முயல்கிறது. இது நாட்டுக்குக் கேடு, ஜனநாயக விரோத செயல். இதை நாங்கள் எதிர்ப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சியில் தனது அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்- “எமக்கு முன்பாக பாரிய சவால் உள்ளது. எந்த மோசமான ஆட்சியாளர்களை வீழ்த்தினோமென மார்தட்டினோமோ, அவர்கள் அதைவிட மோசமான விதத்தில், அதிக பலத்துடன…
-
- 4 replies
- 593 views
-
-
19 ஆவது திருத்தத்தை நீக்க ஒருபோதும் இடமளியோம் - ஐ.தே.க Published by J Anojan on 2019-12-02 15:04:27 (நா.தனுஜா) நிறைவேற்றதிகாரத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் இடையில் சமநிலையொன்றை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நீக்கவேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதுகுறித்து எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுட்டிக்காட்டும்பட்சத்தில் நாம் அவதானம் செலுத்தத் தயாராக இருக்கின்றோம். ஆனால் அதனை முழுமையாக நீக்குவதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையக…
-
- 0 replies
- 307 views
-
-
19 ஆவது திருத்தத்தை நீக்குவதென்பது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானது : துஷார இந்துனில் Published by R. Kalaichelvan on 2020-01-08 15:54:27 (நா.தனுஜா) அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வதென்பது ஜனநாயகத்திற்கான இடைவெளியைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானதாகும். அதனை இல்லாமல் செய்து மீண்டுமொரு ஏகாதிபத்திய யுகத்திற்குள் உள்நுழைந்து, அனைத்து அதிகாரங்களையும் தனியொரு குடும்பம் தம்வசமாக்குவதற்கு மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அறைகூவல் விடுத்தார். கொழும்பிலுள்ள எதி…
-
- 0 replies
- 209 views
-
-
வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அரசமைப்பில் கைவைத்தால் அது பொதுநலவாய மாநாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவேதான், இவ்விரண்டு நிகழ்வுகளும் முடிவடைந்த பின்னர் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவருவது சம்பந்தமாக பரிசீலிக்கப்படவுள்ளது. அரசமைப்பில் உடனடியாகத் திருத்தங்களை மேற்கொள்ளாதிருக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு நேற்று தீர்மானித்துள்ளது என நம்பகரமாக அறியமுடிகின்றது. இதன்படி வடமாகாணசபைத் தேர்தல், பொதுநலவாய மாநாடு ஆகியன முடிவடைந்த பின்னரே அரசமைப்பில் மாற்றம் கொண்டு வருவது சம்பந்தமாக அரசு பரிசீலிக்கவுள்ளது. வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அரசமைப்பில் சிற்சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசு முன்னதாகத் தீர்மானித்திருந்த போதிலும் …
-
- 0 replies
- 586 views
-
-
19 ஆவது திருத்தத்தை முழுமையாக ஒழிப்பேன்; யாருக்கும் அடிபணியப்போவதில்லை: அலி சப்ரி August 13, 2020 19 ஆவது சட்ட திருத்தினை முழுமையாக ஒழிப்பேன்; யாருக்கும் நான் அஞ்ச மாட்டேன் என்று நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்து உள்ளார். கண்டி தலதா மாளிகையில் நேற்று புதன்கிழமை ஏற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: அனைத்து மக்களின் நம்பிக்கையையும் நிறைவேற்ற நான் தயாராக உள்ளேன். 19 ஆவது திருத்தச் சட்டம் முற்றாக ஒழித்து அந்தக் குழப்பத்தில் இருந்து நாட்டை காப்பாற்றுவேன். இதற்கு தேவையான சட்ட வரைபுகள் விரைவில் தயாரிக்கப்படும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை தண்டிப்பதற்…
-
- 1 reply
- 624 views
-
-
19 ஆவது திருத்தத்தை... நடைமுறைப்படுத்தினால், சர்வதேசம் முழுமையாக ஒத்துழைக்கும் என்கின்றார் மைத்திரி 20 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தால் சர்வதேசம் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனநாயக்த்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் 19 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேசத்தின் மத்தியில் அரசாங்கத்திற்கு நன்மதிப்பு கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தியுள்ளதுடன் பல யோசனைகளையும் முன்வைத்துள்ளதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும…
-
- 0 replies
- 232 views
-
-
19 ஆவது திருத்தத்தை... மீண்டும் அமுல்படுத்துங்கள் : 20 ற்கு ஆதரவளித்த மைத்திரி கோரிக்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை நீக்கிவிட்டு 19வது திருத்தத்தை திருத்தங்களுடன் அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இனிமேல் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தத்திற்கு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சி ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/127510…
-
- 0 replies
- 123 views
-
-
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நேற்று 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக சரத் வீரசேக எம்.பியும் வாக்களித்தனர். ஜனநாயக தேசிய முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார எம்.பி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த சட்டமூலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் 27ஆம் திகதி சமர்ப்பித்து விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். நேற்று செவ்வாய்க்கிழமையும் விவாதம் நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் விவாதத்தின் பின்னர், வாக்கெடுப்பு நேற்று மாலை 6 மணிக்கு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அ…
-
- 11 replies
- 1.1k views
-
-
19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் முடிவு எடுக்க வேண்டும் என்ற நெருக்கடியான நிலைக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஜனாதிபதி தலைமையில்அமைச்சரவை கூடுகின்றது. கடந்த வியாழக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 19 ஆவது திருத்தச் சட்டம் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என முக்கிய அமைச்சர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் முடிவு காணப்படாமல் கூட்டம் முடிந்திருந்தது. இதையடுத்து நடந்த தேசிய நிறைவேற்று சபையின் கூட்டத்திலும் 19 ஆவது திருத்தம் தொடர்பில் முடிவு எட்டப்படவில்லை. இந்த சமயத்தில் ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என ஐ.தே.க உறுதியாக இருக்கிறது. பாராளுமன்றம் கலைக்கப்படாமல் தேசிய அரசாங்கத்தை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயற்சிக்கிறது. இதற்காக பல தனியான…
-
- 1 reply
- 308 views
-
-
19 இலங்கையர்களை நாடு கடத்தும் முயற்சியை கைவிட்டது துபாய் விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை லண்டனிலுள்ள அவர்களின் வழக்கறிஞர் குலசேகரம் கீதார்த்தனன் உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் அபுதாபிலுள்ள ஐ நா மன்ற அகதிகளுக்கான அமைப்பின்( யு என் எச் சி ஆர்)அதிகாரியிடமிருந்து எழுத்துபூர்வமான தகவல் வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். புகலிடம் தேடி வருபவர்களுக்கு அகதி தஞ்சம் அளிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மற்றும் பாதுகாப்ப…
-
- 0 replies
- 433 views
-
-
19 ஐ நிறைவேற்றும் பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிக்கே உள்ளது Thu, 04/23/2015 - 09:28 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றிக் கொடுக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது. எமக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு அமைய 19ஆவது திருத்தத்தினை நிறைவேற்றவேண்டும். இல்லையேல், அவரே பிரதான பொறுப்பாளி ஆவார் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார். 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாவிடின் அடுத்த கணமே பாராளுமன்றம் கலைக்கப்படும். எதற்கும் முகங்கொடுக்கத் தயாராகவே உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த …
-
- 0 replies
- 470 views
-
-
19 ஐ போன்று, 21 ஐ கொண்டு வர... அரசாங்கம் திட்டம் !! அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கும் 19 ஆவது திருத்தத்தை 21 ஆவது திருத்தமாக மீண்டும் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் இணங்கியுள்ளது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நீதி, நிர்வாகம், நிறைவேற்றுத்துறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை அமைச்சரவையில் முன்வைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். சபாநாயகர் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் பொதுநிர்வாக அமைச்சர் தினேஸ் குணவர்தன, கட்சித் தலைவர்களுக்கு இது குறித்து அறிவித்தார் என மனோ கணேசன் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிகவும் பொறுப்பான அரசாங்கத்தை பொதுமக…
-
- 0 replies
- 140 views
-
-
தற்போதைய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக, இந்த நாட்டில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் இதனைத் தெரிவித்தார். தற்போதைய கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டின் ஊடாக இந்நாட்டின் கல்வித் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என நாம் நம்புகின்றோம். குறிப்பாக தொழிற் சந்தையை இலக்காகக் கொண்டு, ஐநூறுக்கும் மேற்பட்ட கொரிய, ஜெர்மன், பிரெஞ்சு, ஹிந்தி, சீன மற்றும் ஜப்பானிய மொழி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த நாட்டில் உள்ள 19 கல்வியியல் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்ற எதிர…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
19 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது யாழ். பருத்தித்துறைப் பகுதியில் சுமார் 19 கிலோ எடையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர். சுப்பர்மடம் கடற்கரைப் பகுதியில் பாரியளவு கஞ்சா கடத்தல் இடம்பெறவுள்ளதாக தமக்கு கிடைத்த தகவலை அடுத்து வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் உள்ளடங்கிய விசேட குழுவினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர். குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டினை சோதனையிடுகையில் அங்கு அன்னளவாக 19 கிலோ எடையுள்ள கேரள கஞ்சா கைப்பற்றப் பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளா…
-
- 5 replies
- 645 views
-