ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142786 topics in this forum
-
-
- 4 replies
- 1.3k views
-
-
12 வயது பாலகன் பாலச்சந்திரனை படுகொலை உலகயே அதிரச் செய்துள்ளது. குறிப்பாக மாணவர்களை வெகுவாகப்பாதித்துள்ளது. லயோலா கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட தமிழினப்படுகொலை, என்பதை ஐ.நா அவை அங்கீகரிக்க வேண்டும். இவ்வினப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட்டு இனக்கொலையாளிகளை தண்டிக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் தங்கள் அரசியில் உரிமைகளை தாங்களே தீர்மானிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் முன்மொழிந்து தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறிய, இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்றிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி மாணவர்கள் பட்டினிப்ப…
-
- 1 reply
- 500 views
-
-
அப்துல் ராசிக் விளக்கமறியலில் சமயங்களுக்கு இடையில் அசாதாரண சூழ்நிலையை அதிகரிக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்களை வௌியிட்டதாக கூறி கைதுசெய்யப்பட்ட, தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபரால் பௌத்த மதம் மற்றும் ஞானசார தேரரை அவமதிக்கும் வகையிலான பிரச்சாரங்கள் சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டிருந்ததாகவும், இதன்மூலம் சமயங்களுக்கு இடையில் அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதன்போது பொலிஸார் நீதிமன்றத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர். விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை எதிர்வ…
-
- 0 replies
- 236 views
-
-
ஓட்டுக்குழுவான கருணாகுழுவினர் கிழக்கு மாகாணத்தில் இருந்து 2000 தமிழ் இளைஞர்களை வன்னிக்களமுனைக்கு அனுப்பவுள்ளதாகவும் அது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்தவுடன் செய்துள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்வதற்காக சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் இருந்து வலுக்கட்டாயமாக கொழும்பு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதா
-
- 3 replies
- 2.2k views
-
-
நினைவேந்தலை நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி 14 Views பொலிஸாரின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால், அவர்களைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணித்த நீதிவான் , நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்க மறுத்து கட்டளை வழங்கினார். நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகளை எதிர்வரும் 27ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உள்ளபட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் நடத்த தடை விதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காங்கேசன்துறை பொலிஸார் மனுத் தாக்கல் செய…
-
- 0 replies
- 424 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 389 views
-
-
'நீலப்படங்களை வரியில் பார்த்தனர்' அழகன் கனகராஜ் இராஜதந்திர நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற, வெளிவிவகார அமைச்சின் பெண் அதிகாரிகள், அங்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்தது மட்டுமன்றி, அங்கு நீலப்படங்களை பார்த்துள்ளனர். அவற்றுக்கெல்லாம் மக்களின் வரிப்பணமே செலுத்தப்பட்டுள்ளது என்று ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்னாயக்க மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…
-
- 4 replies
- 500 views
-
-
சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் கனடாவின் ரொறன்ரோ வாழ் தமிழ் இளையோர்களால் நேற்று முன்நாள் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 395 views
-
-
போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளி வந்திருக்கிறது : அமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி நோக்கும் பார்வை இப்பொழுது மேலோங்கியுள்ளதாக குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமது தனித்துவத்தைப் பேணும் ஆடை அணிகளை முஸ்லிம்கள் அணிந்து வந்துள்ளனர் என்றும் அவ்வாறு அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிக்காட்டுவது புதியதல்லவென்றும் தெரிவித்தார். நிந்தவ+ரில் நடைபெற்ற ஒன்றுகூடலொன்றின் போதே கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம்களுக…
-
- 8 replies
- 901 views
-
-
புதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்- பிரதமர் by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/09/mahindha-1-6.jpg புதிய உத்திகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றும் சவால்களை அரசாங்கம் ஏற்க தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்த 2020ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாட்டில் இணையவழி காணொளி ஊடாக நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த மாநாட்டில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை வர்த்தக சம்மேளத்தினால் ஒழங்கு செய்யப்பட்ட வருடாந்த பொருளாதார மாநாட்டில் கலந்து…
-
- 0 replies
- 315 views
-
-
அமைச்சர் கூற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் விளக்கம் நண்பர் கௌரவ விஜேதாச இராஜபக்ச அவர்கள் கூறியதாக ஒரு செய்தி 09.12.2016ந் திகதிய தினக்குரல் முதற் பக்கத்தில் ‘பௌத்த சிங்கள மக்களை விக்னேஸ்வரன் ஆத்திரமூட்டக் கூடாது’ என்றும் வீரகேசரியில் ‘வடமாகாணசபைக்கு அதிகாரம் இல்லை’ என்றும் காலைக்கதிரில் ‘புத்தர் சிலை அமைக்கக் கூடாது என கூறுவதற்கு விக்னேஸ்வரன் யார்’ என்ற தலையங்கங்களின் கீழும் வெளிவந்தன. வலம்புரியில் ‘வடக்கின் தீர்மானம் குப்பைத் தொட்டிக்குள்’ என்ற தலையங்கத்தின் கீழும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றில் வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கக்கூடாது என்று நாங்கள் தீர்மானம் கொண்டு வந்ததாகக் கூறப்பட்டது. இது முற்றிலுந் தவறு. எனக்…
-
- 1 reply
- 374 views
-
-
ரணில், சந்திரிக்கா இரகசிய சந்திப்பு - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு! [sunday, 2013-04-07 08:09:32] முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு 7ல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்திலேயே இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும், அச்சந்திப்பில் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு அதிகமாக இருவரும் பல்வேறு அரசியல் விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இந்த …
-
- 2 replies
- 731 views
-
-
பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் இலங்கையிலும் பரவும் அபாயம் பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே இது குறித்து தீவிர அவதானத்துடன் இருக்க வேண்டும் என அரச வைத்திய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மிகவும் வேகமாகப் பரவிவரும் இந்த வைரஸின் புதிய உருமாற்றம் விசேடமானது என சிரேஷ்ட வைத்திய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் கீர்த்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். குறிப்பாக பிரித்தானியா போன்ற நாட்டிலிருந்து நபர்கள் வருகைத்தரும்போதும் அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும்போதும் அந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் உள்ளதா…
-
- 0 replies
- 317 views
-
-
நோர்வேயின் பாராளுமன்றம் முன்பாக இன்றும் (11.04.2009) தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நோர்வே பிரதமரின் இல்லைத்தை முற்றுகையிட்டுள்ளதாக எமது நிருபர் தெரிவித்தார். பிரதமரின் இல்லம் முற்றுகையில் ஈடுபட்ட மக்கள் பிரதமர் இல்லம் முன்பாக அமைதியாக நிலத்தில் அமர்ந்துள்ளதாக மேலும் தெரியவருகின்றது. நோர்வே பிரதமர் இல்லம் தமிழ் மக்களினால் முற்றுகையிட்டுள்ளமையினால், இல்லைத்தைச் சுற்றி நோர்வே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளதாகவும், முற்றுகைப் போராட்டத்தில் 1000ற்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் எமது நிருபர் தெரிவித்தார். போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என எற்பாட்டாளர்கள் தெ…
-
- 1 reply
- 939 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதிகளைப் பிடிக்க சிறிலங்கா படையினர் இன்று அதிகாலையில் இருந்து தொடர் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மந்துவிலில் உள்ள முல்லைத்தீவு - பரந்தன் வீதி பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்-மண் அரணைப் பிடிக்க இன்று புதன்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் பெரும் எடுப்பில் சிறிலங்கா படையினர் முயற்சித்தனர். இவர்களின் நகர்வினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தி அவர்களின் நகர்வினைத் தாமதப்படுத்தி - தொடர் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிறிலங்கா படையினருக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனவும், தொடர்ந்தும் சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்…
-
- 4 replies
- 2k views
-
-
வடக்கு உட்பட இலங்கையில் மூன்று பயிற்சி முகாம்கள் அவுஸ்திரேலிய ஒத்துழைப்பு அமைப்பு நடத்துகின்றது 2016-12-29 21:34:10 அவுஸ்திரேலிய அரசின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிய விளையாட்டுத்துறை ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கையில் மெய்வல்லுநர்துறை சார்ந்த மூன்று பயிற்சி முகாம்கள் நடத்தப்படவுள்ளன. வட மாகாணத்துக்கான பயிற்சி முகாம் துரையப்பா விளயாட்டரங்கில் நடத்தப்படவுள்ளது. உள்ளூர் பயிற்றுநர்களுக்கு வெளிநாட்டு பயற்றுநர்களைக்கொண்டு பயிற்சி முகாம்களை நடத்தும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் தூரநோக்கு திடடத்திற்கு அமைய இந்தப் பயிற்ச…
-
- 0 replies
- 234 views
-
-
உண்ணாவிரதம் கைவிடப்பட்டாலும் ஹர்த்தாலை முழுமையாக கடைப்பிடியுங்கள் - யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் தெரிவித்துள்ளார். அத்தோடு "போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்" எனவும் இ.அனுசன் மேலும் தெரிவித்துள்ளார். இன்று (11.01.2021) யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இ.அனுசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.... யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட…
-
- 0 replies
- 341 views
-
-
மியாமி விமான நிலையம் வழியாக வெனிசுலா செல்ல முயன்ற சிறிலங்கா அமைச்சர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்த சிறிலங்கா அமைச்சர் ஒருவருக்கு, வெனிசுலா தலைநகர் கராகஸ் செல்லும் படி கொழும்பில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது. வெனிசுலா அதிபராக நிக்கலஸ் மடுரோ பதவியேற்கும் நிகழ்வில் சிறிலங்கா அரசின் பிரதிநிதியாக பங்கேற்கும்படி அவர் அறிவுறுத்தப்பட்டிருந்தார். வெனிசுலா அதிபர் சாவேசின் மரணத்தை அடுத்து நடத்தப்பட்ட தேர்தலில் இவர் அதிபராகத் தெரிவாகியிருந்தார். கோர்ட், ரையுடன் சிறிலங்கா அமைச்சர் விமானத்தைப் பிடிக்க மியாமி அனைத்துலக விமான நிலைய…
-
- 3 replies
- 500 views
-
-
வவுனியாவில் மதுபோதையில் வந்த இராணுவ வீரர்: முச்சக்கரவண்டி சாரதி மீது தாக்குதல் வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று ( 01) காலை 10.30மணியளவில் முச்சக்கர வண்டி சாரதி மீது மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்ட இரண்டு இராணுவ வீரர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று காலை மூன்று முறிப்பு பகுதியிலுள்ள இராணுவ வீரர்கள் இருவர் மதுபோதையில் அப்பகுதியிலிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர். முச்சக்கரவண்டியில் ஏறும்போது 150 ரூபா முச்சக்கரவண்டிக் கட்டணம் என்று முச்சக்கரவண்டி சாரதி தெரிவித்துள்ளார். பேரூந்து நிலையத்தில வந்து இறங்கியது…
-
- 1 reply
- 298 views
-
-
Norway calls both party to avoid further civilian losses “It is unacceptable that hundreds of civilians have been killed or wounded in the latest stages of the fighting in Sri Lanka. This could have been avoided,” said Minister of the Environment and International Development, Mr Erik Solheim. More than 60 000 civilians have fled the war zone in the north of the country during the past few days. But there are still tens of thousands left in the area controlled by the Tamil Tigers. The International Committee of the Red Cross warns of the danger of mass casualties among civilians. They call the situation in the past few days, where additional hundreds of …
-
- 0 replies
- 689 views
-
-
தமிழ் வர்த்தர் ஒருவரின் மூக்கை கடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்தவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் வைத்து வர்த்தகரான நடராஜா திவாகரனின் மூக்கை நாடாளுமன்ற உறுப்பினர் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி கடித்து காயப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முறைப்பாட்டிற்கு அமைவாகவே கொள்ளுப்பிட்டி பொலிஸார் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வழக்குத்தாக்கல் செய்தனர். சம்பவத்தையடுத்து சில நாட்களுக்கு பின்னர் ஐ…
-
- 0 replies
- 216 views
-
-
இலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான் இலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும் என்பதோடு அபிவிருத்தியையும் சமமாக கொண்டு செல்ல வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். அமரர் அருணாசலம் குமாரதுரை அவர்களுடைய இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போத அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு மாற்றம் ஏற்படும். மேலும் நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலி…
-
- 21 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவில் அதிகளவு சனத் தொகையைக் கொண்டுள்ளதும் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததுமான மேல் மாகாண சபைக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 393 views
-
-
Sri Lanka news Jaffna players in Sri Lanka squads for tri-series Andrew Fidel Fernando May 7, 2013 Comments: 5 | Login via | Text size: A | A File photo - The teams include two players from Jaffna © ESPNcricinfo Ltd Enlarge Related Links Players/Officials: Ravindra Pushpakumara Series/Tournaments: ICC Champions Trophy Teams: Sri Lanka Three young cricketers from Sri Lanka's war-affected regions have been named in the squads scheduled to participate in a one-day tri-series, which aims to prepare Sri Lanka's national side for the Champions Trophy. Fast bowler S Silojen and wicketkeeper Rishan Tudor, both 19, have been named in the Sri Lanka and Sri Lanka…
-
- 3 replies
- 619 views
-
-
இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 405 views
-