ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
ஒட்டுசுட்டான் உப காவல்துறை பரிசோதகருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் adminJanuary 21, 2024 ஒட்டுசுட்டான் காவல் நிலையத்தில் கடமையாற்றும் உப காவல்துறை பரிசோதகர் காவல் நிலைய பொறுப்பதிகாரியை தவறாக வழி நடத்தி , அப்பகுதி மக்களை வஞ்சித்து வருவதாக , புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஒட்டுசுட்டான் பகுதியில் பண்ணை ஒன்றினை நடாத்தி வருகிறோம். அதேவேளை பண்ணையில் வைத்து நாம் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகின்றோம். இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி ஒட்டுசுட்டான் காவல…
-
- 0 replies
- 382 views
-
-
ரவிராஜ் படுகொலை - ஐந்து கடற்படையினர் விளக்கமறியல்! [saturday 2015-05-23 08:00] தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபர்கள் ஐவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம் பெற்ற குறித்த வழக்கு விசாரணைகளின் போது கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் துப்பாக்கியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இரத்த மாதிரிகள் டீ.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த நிலையில் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர்கள் கூறினர். தகவல்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக் கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இதன…
-
- 0 replies
- 410 views
-
-
தமிழ்த் தரப்பினர், தமக்கான நீதியை, ஒருமித்த குரலில் ஒரே கோரிக்கையாக முன்வைக்க வேண்டும்.. சுரேஷ் பிரேமச்சந்திரன் February 1, 2019 எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, தமிழ்த் தரப்பினர், தமக்கான நீதியை, ஒருமித்த குரலில் ஒரே கோரிக்கையாக முன்வைக்க வேண்டுமென, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில், நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தரப்பினர், வௌ;வேறான கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது எனத் தெரிவித்த அவர், தமிழ்த் …
-
- 1 reply
- 245 views
-
-
01 FEB, 2024 | 09:05 PM கடந்தகால போராட்டத்தின்போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொட்டதெனிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிபவர் என தல்துவ தெரிவித்தார்.ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீ வைத்தவர் கைது! | Virakesari.lk
-
- 0 replies
- 577 views
-
-
23 சபைகளுக்கு இன்று வாக்கெடுப்பு 6488 பேர் களத்தில் பாதுகாப்பு _ வீரகேசரி நாளிதழ் 10/8/2011 9:17:42 AM கொழும்பு மாநகரசபை உட்பட 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் 420 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 6488 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 23 உள்ளூராட்சி சபைகளிலும் 15 இலட்சத்து 89 ஆயிரத்து 622 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். மூன்றாவது கட்டமாக இன்று நடைபெறும் இந்த தேர்தலில் 1,167 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 21ஆயிரத்து 500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்கெடுப்பு மாலை 4 மணிக்கு நிறைவடையும். இன்று நள்ளிரவுக்கு முன்னர் முதலாவது முட…
-
- 1 reply
- 477 views
-
-
இலங்கையின் வடக்கே உருவாக்கப்பட்டிருக்கும் இராணுவ வெற்றியின் சின்னம் இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையிலும் அங்கு மௌன யுத்தம் ஒன்று தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அமரிக்க ஆய்வு மையமான ஓக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருவதாகக் கூறும் அந்த சுயாதீன அறிக்கை, ஆய்வுகளின் அடிப்படையில் அங்கு தமிழர் நிலங்களில் இராணுவக் குடியிருப்புகள் மற்றும் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறது. 26 ஆண்டுகளாக இலங்கையில் தொடர்ந்த சிவில் யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த பின்னர் முதற் தடவை…
-
- 3 replies
- 914 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நீதியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் ; குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் - டக்ளஸ் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் பொதுமன்னிப்பு என்கின்ற அடிப்படையில், ஓர் ஏற்பாட்டினை நீதி அமைச்சு முன்னெடுக்க வேண்டும். குற்றவாளிகளை ஒப்படைத்தல் தொடர்பில் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் எட்டப்படுவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு விடயம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை ஒப்படைத்தல் தொடர்பில் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் எட்டப்படுவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு விடயம். என்றாலும், நான் ஏற்கனவே இங்கு சுட்டிக்காட்டியதைப் போன்று இந்த நாட்டு…
-
- 0 replies
- 166 views
-
-
Aug 18, 2007 at 09:15 AM இலங்கை செஞ்சிலுவைச்சங்கப்பணியாளர்
-
- 4 replies
- 1.1k views
-
-
இல்லாத ஒரு முகவரியில் (50 Lothian Road, Festival Square, Edinburgh EH3 9WJ) பொய்யாக ஒரு டிரஸ்ட் இருபதாக சொல்லி பொய் கணக்கு காட்டி மாட்டி கொண்டுள்ளார் இந்த ராஜபக்சே கூட்டாளி. இந்த காசில் இலங்கைக்கு அடிக்கடி விடுமுறையில் போய் உல்லாசமாக இருந்தவருக்கு வெகு விரைவில் வைக்கப்படும் ஆப்பு. விசாரணை தொடர்கிறது. BBC New (Summary): http://www.bbc.co.uk...1013_fund.shtml பி.கு.: இது மட்டுமல்ல வேறு பல பிரச்சினைகளிலும் சிக்கியுள்ளார் இவர். இந்த பின்னணியில் இலங்கை பிரச்சினையும் ஒன்று. Daily Mail (Detail): http://www.dailymail...s-Grayling.html
-
- 5 replies
- 1.5k views
-
-
விக்னேஸ்வரன் தலைமையில் விசேட குழுவொன்று ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் – அனந்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தலைமையில் விசேட குழு ஒன்று பங்குகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமது வழிகாட்டலின் கீழ் இயங்கும் குழு ஒன்றை உருவாக்கி ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கவேண்டும். அவர்கள் தாயக தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும், தமிழக தமிழர்க…
-
- 13 replies
- 1.4k views
-
-
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்காமல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றுவது பற்றி கருத்தாடல் இடம்பெறுவது நாட்டில் மீண்டும் பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். ஜனாதிபதி முறைமை மாற்றம் பற்றி பேசுவதற்குத் தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மேலும் கூறியதாவது, ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யவேண்டுமெனில் அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம். ஆளுநர் நியமனம் நாட்டில் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடிய விடயம் இதுவாகும் என்பதால் எடுத்த எடுப்பிலேயே எதனையும் செய்துவிட முடியாது. ஜனாத…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
செவ்வாய் 28-08-2007 03:47 மணி தமிழீழம் [செந்தமிழ்] அத்தாசின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீளவும் பழையநிலைக்கு கொண்டுவரகோரிக்கை சிறீலங்காவில் பத்திரிகையாளர்களாக தொழில்புரியும் ஊழியர்கள் சங்கம் நேற்று சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலருக்கு சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் ஆலோசகராகவும் பாதுகாப்பு பத்தி எழுத்தாளருமான இத்பால் அத்தாசிற்கு மறுபடியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. அவரது பாதுகாப்பு எதுவித முன்அறிவிப்பு ஏதுமின்றி தீடீரென குறைக்கப்பட்டுள்ளதாகவம் இனம்தெரியாத நபர்கள் உந்துருளியில் அவரை தொடர்பதாகவும் இதனால் அவரது பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுவதாகவும் சிறீலங்காவின் பாதுகாப்பு செயலருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாக …
-
- 2 replies
- 980 views
-
-
நான் முஸ்லிம் இனத்துக்கான அமைச்சரல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாதம் பேசி தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடாது. மீள்குடியேற்ற அமைச்சில் ஒரு பகுதியே எனக்குத் தரப்பட்டுள்ளது. நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பொறுப்பே என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனாலே நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்துக்கு முதலிடம் அளிக்கிறேன்’ என கைத்தொழில் வர்த்தகம் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் நீண்ட காலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக…
-
- 0 replies
- 676 views
-
-
இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது - மானியங்கள் தேவையில்லை - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் 04 MAR, 2024 | 11:59 AM இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது என மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித்குமாரசுவாமி கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை மானியங்களை வழங்கும் பழைய நிலைக்கு திரும்பக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள், மின்சாரம், உரம் போன்றவைகளை மீண்டும் மானிய அடிப்படையில் வழங்குவது இலங்கையை பின்னோக்கி இழுக்கும் ஒரு நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர் இது ஒரு நீடித்து நிலைக்க முடியாத செயற்பாடு எனவும் தெரிவித்துள்ளார். மானியங்களை வழங்குவது தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நடவடிக்கை என குறிப்பி…
-
- 1 reply
- 439 views
- 1 follower
-
-
சபாநாயகர் சமால் ராஜபக்ஸவை பிரதமராகக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமொன்றை அமைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண கோரியுள்ளார். பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னதாக நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய ஆட்சி மாற்றம் செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். சமால் ராஜபக்ஸவை பிரதமராக தற்காலிக அடிப்படையில் நியமிப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனவும் கட்சியை ஐக்கியப்படுத்தவும் இது உதவும் எனவும்அவர் தெரிவித்துள்ளார். நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் இதிலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கும், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் …
-
- 0 replies
- 297 views
-
-
யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. கீரிமலை, ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று (26) வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன், நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்ததால் சற்றுநேரம் பதற்றநிலை ஏற்பட்டது. பின்னர் காணி உரிமையாளர்களின் நீண்ட நேர எதிர்ப்பினை அடுத்து, காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதிக் கையொப்பமிட்…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
இலங்கையில் இப்பொழுது முரண்நிலைகள் வரவர அதிகரித்தே செல்கின்றன. கடந்த வாரத்தில் இலங்கைக்கு பயணம் செய்திருந்த ஐ.நா. வின் பிரதிநிதிக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் முரண்பாடுகள் தோன்றி அது இப்பொழுது விவகாரமாக வளர்ந்து செல்கிறது. இதேமாதிரி முன்னர் ஐ.நா.வின் இன்னொரு பிரதிநிதியான அலன் றொக்குக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் வாதப்பிரதிவாதங்களும் கடுமையான கருத்து மோதல்களும் நிகழ்ந்தன. அலன் றொக் தன்னுடைய நிலைப்பாட்டில் சற்றும் தளர்வின்றி நின்றபடியால் அவரால் முடிந்தளவுக்கு உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட்டன. அலன் றொக்கின் அறிக்கை சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரத்தை சர்வதேச அளவிற் கொண்டு போனது. அவர் அதற்கேற்ற வகையில் புத்திபூர்வமாகவும் துணிச்சலாகவும் தகவல்களைத் திரட்டியிருந…
-
- 0 replies
- 919 views
-
-
ஜெனிவாவில் இன்று சிறிலங்கா தொடர்பான மற்றொரு உப மாநாடு! [Thursday 2015-06-25 07:00] ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவினை மையப்படுத்திய மற்றுமொரு உப மாநாடொன்று இன்று இடம்பெறுகின்றது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் Association Brukinabé pour la Survie de l'Enfance ,Collectif la Paix au Sri Lanka. International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG) and ஆகிய அமைப்புக்களின் கூட்டிணைவில் இடம்பெறுகின்ற இந்த உப மாநாடு 9ம் இலக்க மண்டபத்தில் மதியம் 15.30மணிக்கு இடம்பெறுகின்றது. Hybrid பொறிமுறையென விழிக்கப்படுகின்ற வெளிநாடும் உள்நாடும் இணைந்ததான கலப்பு விசாரணை பொறிமுறைக்கு சிறிலங்கா விவகாரத்தினை கையாள்வதற்கு பல்வேறு உலகத் தரப்பு…
-
- 0 replies
- 281 views
-
-
March 10, 2019 தேர்தல் ஒன்றின் மூலம் தீர்மானம் எடுக்கப்படும் வரை எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ஸ பொறுமையாக காத்திருக்க வேண்டுமென, பாராளுளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசமைப்பைக்கு எதிராக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தால் அது வெற்றியடையாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். வத்தளையில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/115660/
-
- 0 replies
- 563 views
-
-
அனைத்துலக சமாதான நாளை முன்னிட்டு மன்னாரில் நேற்று சனிக்கிழமை பேரணி நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 669 views
-
-
ஹெரோயின் போதைப் பொருளைப் பயன்படுத்தினார்கள் மற்றும் நண்பர்களுக்கு அவற்றை விற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன் சிகேரா தெரிவித்துள்ளார் இவர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்த வலைப் பின்னலை மடக்குவதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த வலைப் பின்னலைச் சேர்ந்த ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். யாழ். நகரில் மாணவர்கள் மத்தியில் ஹெரோயின் பயன்பாடு குறித்த தகவல் கல்விச் சமூகத்தைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மாவட்டத்தின் ஒரே சொத்தான கல்வியை அடியோடு பாழாக்கி வ…
-
- 1 reply
- 918 views
-
-
ரணிலுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை! Published on November 17, 2011-11:06 pm ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் எதிராக செயற்படுவதுடன் கட்சியின் யாப்பையும் மீறி செயற்படுவதாக இன்று குற்றப்பத்திரிகையொன்று தாக்கல் செய்யப்பட்டது.அக்கட்சியின் தென்மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி மைத்திரி குணரத்னவினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பத்திரிகை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றப் பத்திரிகையில் 20 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறித்த 20 விடயங்களிலும் தலைமைத்துவம் ஐக்கிய தேசியக்…
-
- 0 replies
- 484 views
-
-
அரசியல் தீர்வை எட்ட தெரிவுக்குழு அமைப்பு இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் அரசமைப்பிலுள்ள விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கக் கோரும் பிரேரணை நாடாளுமன்றில் நேற்று முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இந்தப் பிரேரணை நேற்று சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வாவினால் நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது. பின்னர் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. 6 மாதங்களுக்குள் தீர்வை முன்வைக்கும் வகையில் இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனவும், இக்குழுவில் ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் 19 பேரும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் 12 பேரும் உள்ளடங்குகின்றனர் எனவும் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் அனைத்து இனம…
-
- 4 replies
- 642 views
-
-
கருணா அம்மானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லை – சார்ள்ஸ் கேள்வி தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லையென கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். மிக முக்கியமாக இலங்கையில் யுத்தம் ஏற்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தம் முடிந்து …
-
- 15 replies
- 1.7k views
-
-
சர்வதேச பாராளுமன்ற ஒன்றிய அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் 192 ஆவது அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் ரவிராஜ் எம்.பி.யின் படுகொலை அது தொடர்பில் நடைபெறும் விசாரணைகள் குறித்து ஆராயப்படவுள்ளன. சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் அமர்வு திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. நான்கு தினங்கள் நடைபெறவுள்ள இவ்வமர்வில் கலந்துகொள்ளும் இலங்கைக் குழு ஞாயிற்றுக்கிழமை ஜெனீவாவைச் சென்றடைந்தது. இக் குழுவில் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்த்தன, ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா மற்றும் சந்திராணி பண்டார எம்.பி.ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர். சர்வதேச பாராள…
-
- 0 replies
- 626 views
-