Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மொழியால் மக்களை வேறுபடுத்தியோர் யார்? போராட்டங்கள், கறுப்புக்கொடி காட்டல்கள் என்ற பதற்றத்துக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி யாழ்ப்பா ணத்திற்கு நேற்று வந்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. இந்தப் பதற்றமான, அரசியல் சூடான கள நிலவரத்தில் இந்தப் பயணத்தைக் கூடுமான வரையில் தவிர்ப்பதே நல்லது என்று அவரது பாதுகாவலர்கள் அவருக்கு அறிவுறுத்தியிருப் பார்கள் என்பது நிச்சயம். திட்டமிட்டபடி தேசிய தமிழ் மொழித் தின விழா யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறாமல் உள்ளரங்கத்திற்கு இறுதிநேரத்தில் மாற்றப்பட்டதில் இருந்தே அதனை நிச்சயம் புரிந்துகொள்ளமுடியும். அந்தத் தடைகளை எல்லாம் மீறி தமிழ் மக்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தலாக மாட்டார்கள் என்று அவர் நம…

    • 1 reply
    • 729 views
  2. மக்கள் எழுச்சிப் போராட்டம்.... 23ஆவது நாளாகவும், தொடர்கிறது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 23 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. சர்வதேச தொழிலாளர் தினமான இன்று தொழிலாளர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி கறுப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனநாயகம் மற்றும் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்காவின் உருவச்சிலையின் கண்கள் கறுப்பு நிறத்துணியால் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1279293

  3. கிழக்கு மாகாண சபையில் நிதி மோசடியா? பிள்ளையான் மறுப்பு வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 9, 2010 தனது மாகாண முதலமைச்சர் செயலகத்தில் பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கு பிள்ளையான் மறுப்பு தெரிவித்துள்ளார். குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் 2008ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையிலிருந்தே மேற்படி நிதிமோசடி தொடர்பிலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. கிழக்கு மாகாணசபையின் கணக்காய்வு குழுவுக்கு மேற்படி கணக்காய்வு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே முதலமைச்சரினால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D…

    • 0 replies
    • 484 views
  4. சனல்4 வெளியிட்ட போர்க்குற்ற ஆதாரம் ஐ.நாவுக்குத் தெரியாதாம். [Tuesday, 2014-03-11 17:32:31] சனல்-4 வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படத்தை தாம் பார்க்கவில்லை என்று ஐ.நா பொதுச்செயலரின் புதிய பேச்சாளர் ஸ்டிபன் டுஜாரீக் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் சனல்4 ஊடகம் புதிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. உயிரிழந்த பெண் போராளிகளின் சடலங்களை படையினர், பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்வது தொடர்பான காட்சிகள் இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணப்படத்தை பார்க்கவில்லை எனவும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் பான் பான் கீ மூனின் முன்னாள் பேச்சாளர் மார்டின் நெகர்கீ இலங்கை விவகாரம் குறித்து அதிகளவில் பேசியிருப்பதாகவும் புதிய…

  5. தாக்குதலில்... இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, நாமல் அனுதாபம் – வன்முறையை நிறுத்துமாறு... அழைப்பு! பயங்கரமான சூழ்நிலையில் இந்த பயங்கரமான நேரத்தில் இறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், “பயங்கரமான சூழ்நிலையில் இந்த பயங்கரமான நேரத்தில் இறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். குறிப்பாக, அமரகீர்த்தி அத்துகோரல. எல்லா வகையிலும் அவர் ஒரு நல்ல மனிதர். வன்முறையை நிறுத்துவோம்” என பதிவிட்டுள்ளார். https://athavanne…

  6. - One year ago, Sri Lanka ended its battle against the Tamil Tigers after almost 30 years of fighting. The government has promised a new era of national reconciliation and unity and is banking on economic growth to overcome the legacy of decades of bloody conflict. But Sri Lanka is still feeling the effects of the war. Over 80,000 internally displaced people remain in government-run camps. While others that return home are struggling to restore their livelihoods. Critics say that unless grievances for the minority Tamils are addressed, Sri Lanka may lose its fragile peace. On this edition of 101 East we speak with Mahinda Ra…

  7. சிறிலங்காவில் போரின் போதான சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்பதில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் உறுதியாக இருப்பதாக, அவரது பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நேற்று நியுயோர்க்கில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், சிறிலங்கா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை, நிலுவையில் உள்ள தீர்மானத்தின் மூலம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மனிதஉரிமைகள் சட்டவாளர் யஸ்மின் சூகா, மற்றும் பிரித்தானிய மனிதஉரிமை சட்டவாளர் குழுவின் அறிக்கை தொடர்பான கேள்விக்கு பர்ஹான் ஹக் நேரடியாகப் பதிலளிக்க மறுத்து விட்டார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உள்ள உறுப்பு நாடுகள் நிலு…

  8. ஆட்சியாளர்கள் மீதான நம்பிககையீனத்தால் புதிய அரசியலமைப்பை எதிர்க்கிறோம் கலா­நிதி நாலக்க கொட­ஹேவா கேச­ரிக்கு செவ்வி நேர்­காணல்: ஆர்.ராம்– படப்­பி­டிப்பு: உதேஷ் இந்­திக்க தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கு­வ­தற்கு நாம் எதி­ரா­ன­வர்கள் இல்லை. ஆனால் ஆட்­சியில் உள்ள தலை­வர்கள் மீதான நம்­பிக்கை கேள்விக் குறி­யா­க­வுள்­ளது. அதன் கார­ணத்­தி­னா­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டு­களை எதிர்க்க வேண்­டி­யுள்­ளது என வியத்­மக என்னும் தொழில்­வாண்­மை­யா­ளர்கள் அமைப்பின் ஏற்­பாட்­டாளர் கலா­நிதி நாலக்க கொட­ஹேவா தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, கேள்வி:- ஐ.நா.வில் புலம்­பெயர் அமைப் ப…

  9. தமிழர்கள் நலன் குறித்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பு திருப்பி அளிக்கவில்லை என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். டில்லி சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை, 14 பேர் கொண்ட தமிழக எம்பிக்கள் குழு, டி.ஆர்.பாலு தலைமையில் இன்று சந்தித்தது. இதன்போது, இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களை, அவர்களின் சொந்த இடத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழர் மறுவாழ்வு பணிகளை விரைவுப்படுத்துமாறும், தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண வேண்டும் எனவும் குழுவினர் கோரிக்கை விடுத்தனர். இச்சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த டி.ஆர்.பாலு கூறுகையில், "ராஜபக்ஷவுடனான சந்திப்பு ஒரு முன்னேற்றம் மட்டுமே…

  10. இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் இழைத்து வருகின்றது. இலங்கையின் மிரட்டலுக்கு அடிபணிந்தே இந்தியா வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டது என்று "உதயனுக்குத்' தெரிவித்தார் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன். ஐ.நா மனித உரிமைகள் சபையில் இந்தியா, அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் இந்தியா ஒதுங்கிக் கொண்டது. இது தொடர்பில் பழ.நெடுமாறனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இந்திய மத்திய காங்கிரஸ் அரசு நேற்று (நேற்று முன்தினம்) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இலங்கைப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் ஏனைய சர்வதேச நாடுகளுடன் இணைந்து விசாரணை நடத்த வழிசெய்ய…

  11. வா­ள்­வெட்­டு ஜவர் கொண்ட வாள்­வெட்­டுக் குழு­வி­னர் வீதி­யால் சென்­ற­வரை வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். இந்தச் சம்­ப­வம் நேற்று நெல்­லி­யடி – மாலுசந்­தியில் நடந்­துள்­ள­து. 50 வயது மதிக்­கத்­தக்க ஒரு­வரே காயத்­துக்கு இலக்­கான நிலை­யில் மந்­திகை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். விசா­ர­ணை­களை நெல்­லி­ய­டிப் பொலி­ஸார் மேற்­கொண்டுள்ள­னர் http://newuthayan.com/story/42657.html

  12. விழுப்புரம் தண்டவாள அதிர்வுகளே இன்னும் அடங்காத நிலையில் சந்திரகுமார், அருள் செல்வம், பாலா, செல்வம் என்கிற புனைப் பெயர்களைக்கொண்ட 'சிரஞ்சீவி மாஸ்டரை' வளைத் திருக்கிறது தமிழக உளவுத் துறை போலீஸ்! சிரஞ்சீவி மாஸ்டர், புலிகளின் உளவுத் துறையில் பொட்டு அம்மானின் அடுத்த கட்டத் தலைவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. 12 வருடங்களுக்கும் மேலாக மத்திய, மாநில உளவுத் துறைகளால் தேடப்பட்டு வந்த சிரஞ்சீவி மாஸ்டர், ஈழப் போரின் இறுதிக் காலத்தில் களத்தில் நின்றவர். கடைசிக்கட்ட நேரத்தில் கை, கால்களில் பலத்த காயமடைந்தவர், அதன் பிறகு என்ன ஆனார் என்பது தமிழீழ ஆர்வலர்களாலேயே நேற்று வரை யூகிக்க முடியாத விஷயம். தமிழீழ ஆர்வலர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்த போது, நம் தகவலையே முதல் செய்தியாக…

  13. எமக்கு களங்கம் ஏற்படுத்த முனைகிறது இலங்கை அரசு! – அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் குற்றச்சாட்டு. [Thursday, 2014-04-03 07:58:08] தமது அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முனைப்புடன் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினர் சாம் பாரி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் நற்பெயருக்கு களங்கத்தை உண்டு பண்ணும் நோக்கில் இவ்வாறு போலிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. நாம் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் மிகச் சிறந்த உறவினை பேணி வருகிறோம். அதனை சீர்குலைக்கும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங…

  14. பிள்ளையானின் வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் 07 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்புடைய சந்தேக நபரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசன்துரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதடன் சந்தேகம் தெரிவிக்கப்பட்டதில் ஒருவர் தேடப்பட்டுவரும் நிலையில் ஒருவர் மரணம்அடைந்துள்ள…

  15. 21 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு? அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்படுவது மற்றும் ஜனாதிபதி அதிகாரங்களில் ஒரு பகுதியை பிரதமருக்கு பகிர்வது தொடர்பிலேயே இவ்வாறு முரண்பாடு உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும், ஏற்பாட்டை பஸில் ராஜபக்ஷவிற்கு மிகவும் நெருக்கமான…

  16. இலங்­கைக்கு மீண்டும் ஜெனீ­வாவில் கண்டம் விஷேட குழுவை தூது அனுப்­பி­யது அர­சாங்கம் லியோ நிரோஷ தர்ஷன் இலங்­கையின் மனித உரி­மைகள் தொடர்­பான நிலை­மைகள் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் புதன் கிழமை மீளாய்வு செய்­யப்­பட உள்­ளன. ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 28 ஆவது பூகோள கால மீளாய்வு கூட்­டத்­தொடர் கடந்த திங்கட் கிழமை ஜெனீ­வாவில் ஆரம்­ப­மா­கி­யது. சுயா­தீன மனித உரிமை நிபு­ணர்கள் மற்றும் அமைப்­புகள், சிறப்பு அறிக்­கை­யா­ளர்கள், ஐ.நா அமைப்­பு­களின் தக­வல்­களை உள்­ள­டக்­கிய அறிக்­கைகள் மற்றும் அர­சாங்­கத்­தினால் கைய­ளிக்­கப்­பட்ட அறிக்கை உள்­ளிட்ட சிவில் அமைப்­பு­களை உள்­ள­டக்­கிய பங்­கா­ளர்­களின் அறிக்­கைகள் என்­ப­ன­வற்றின் அடிப்­ப­டையி…

  17. ‘இறுதி யுத்தத்தின் போது நேட்டோப் படையினரைப் போன்றே செயற்பட்டோம்’- மகிந்தா திகதி: 12.07.2010 // தமிழீழம் ஆப்கானிஸ்தானில் நேட்டோ மற்றும் அமெரிக்க இராணுவம் எந்த அணுகுமுறையை பின்பற்றி வருகின்றதோ அதையே ஸ்ரீலங்காப் படையினரும், இறுதி யுத்தத்தில் பின்பற்றியதாக மகிந்தா தெரிவித்தார் என திவயின சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. உலகின் கொடூரமான பயங்கரவாதிகளுடன் போர் நடத்தும் போது சர்வதேச போர் விதிமுறைகளை முழுமையாக பாதுகாக்க முடியாதென ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறியதாக அச்செய்தி தெரிவிக்கின்றது. பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முன்னெடுத்ததாகவும், அவ்வாறான ஓர் பின்னணியில் சனநாயக அரசாங்கமொன்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியதென ம…

  18. ஐ.நா சாட்சியங்களை அச்சுறுத்தவா செல்வதீபன் மீது தாக்குதல்!? சாட்சியம் இணைப்பு! ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த ஊடகவியலாளர் ஒருவர் கொலை முயற்சிக்கு உட்படுத்தப்பட்டு படுகாயம் அடைந்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘தினக்குரல்’ மற்றும் ‘வலம்புரி’ பத்திரிகைகளின் கரவெட்டிப் பகுதிச் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபன் கடந்த இரவு வழிமறித்துத் தாக்கப்பட்டுள்ளார். நெல்லியடிப் பகுதியிலிருந்து சிறுப்பிட்டியிலுள்ள தனது வீட்…

  19. ஜெனிவா பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­துங்கள் அமெ­ரிக்கா அறி­விப்பு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள பிரே­ ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த இலங்கை நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்பில் பாது­காப்பு படைகள் மற்றும் அரச அதி­கா­ரிகள் பொறுப்­புக்­கூறும் நிலையை உரு­வாக்­க­வேண்டும் என்று அமெ­ரிக்கா ஜெனி­வாவில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அத்­துடன் தற்­போது பாது­காப்பு படை­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக அறிக்­கை­யி­டப்­பட்­டு­வ­ரு­கின்ற துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்பில் நாங்கள் கவ­லை­ய­டைந்­தி­ருக்­கின்றோம் என்றும் அமெ­ரிக்கா குறிப்­பிட்­டுள்­…

  20. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பாலகுமாரன், யோகி படுகொலை - உறுதிப்படுத்துகிறார் சிறிலங்கா அமைச்சர் [ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 03:26 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினர் யோகரட்ணம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறிலங்கா அமைச்சர் டியூ.குணசேகர இதனை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவருமான க.வே. பாலகுமாரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமராய்வுப் பொறுப்பாளராக இருந்தவருமா…

    • 29 replies
    • 4.6k views
  21. ஆளும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மீள்குடியேற்றத்துறைப் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகாணத்தில் காணிகள் படையினரால் அபகரிக்கப்படுகின்றமையைத் தடுக்க முடியாத நிலையில் இருக்கின்றார். அதே போல் கிழக்கு மாகாணத்துக்கு முதலமைச்சராக முடிசூடப்பட்டிருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தனால் பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்பாக அரசின் ஊதுகுழலுக்கு ஏற்ப ஆடத்தான் முடிகிறதே தவிர கிழக்கு மாகாண தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பாதுகாத்திட முடியாமல் இருக்கின்றமையும் உறுதியாகிறதுஎன்று கிழக்கு மாகாண சபையின் ஈ.பி.ஆர்.எல்.எப் -பத்மநாபா கட்சி உறுப்பினரான இரா.துரைரட்ணம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்குரிய 1400 …

  22. அடுத்த 3 நாட்களுக்கு... எரிபொருள் வரிசையில், நிற்க வேண்டாம்! அடுத்த 3 நாட்களுக்கு (20, 21, 22) எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜூன் 23 அன்று பெட்ரோல் மற்றும் ஜூன் 24 அன்று டீசல் இறக்குமதிக்காக 90 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெட்ரோலுக்கு அதிக தேவையை ஏற்படுத்த வேண்டாம், அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். முச்சக்கர வண்டி சாரதிகள் போன்ற எரிபொருளை நம்பி…

  23. லண்டனில் இருந்து சுமார் 400 கிலோமீற்றர்கள் நடந்து பரிஸ் நகரை அடைந்திருந்த சிவந்தன், பரிஸ் நகரில் இருந்து 600 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஜெனீவா நோக்கி இன்று பிற்பகல் 4:00 மணியளவில் புறப்பட்டுள்ளார். தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி சிவந்தன் இன்று 11வது நாளாக தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். நேற்று செவ்றோனைச் சென்றடைந்திருந்த சிவந்தன் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களிற்காக நகரசபையால் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் அக வணக்கம் செலுத்தியதுடன், அங்கு நடைபெற்ற மக்கள் ஒன்றுகூடலிலும் கலந்துகொண்டிருந்தார். இன்று காலை அதே இடத்தில் இடம்பெற்ற அக வணக்கத்தைத் தொடர்ந்து சிவந்தனும், பொதுமக்களும் லாக்கூர்னோவ், ஒபவில்லியே, லா …

  24. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் குண்டு புரளியை கிளப்பிய பிரித்தானியருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை! [Thursday, 2014-05-01 09:35:15] லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் குண்டு புரளியை கிளப்பிய பிரித்தானிய பிரஜைக்கு மூன்று ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20ம் திகதி கொழும்பில் இருந்து லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் குண்டு இருப்பதாக புரளியை கிளப்பியமைக்காக எலன் படேய் என்ற பிரித்தானியரும், மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் எலன் படேய் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது, மற்றையவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். குறித்த அவரது வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்ட போதே மேற்கூறியவாறு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.