ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143509 topics in this forum
-
தென்னிலங்கையில் இருந்து வடக்கு நோக்கி சென்ற வான் கொக்காவிலில் விபத்து – ஸ்தலத்திலேயே நால்வர் பலி குளோபல் தமிழ் செய்தியாளர் கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற ஹயஸ் வாகன விபத்தில் சம்பவ இடத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனம் கொக்காவில் பகுதியில் கண்டி நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த நால்வர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 1 reply
- 366 views
-
-
இலங்கையில் மோசமடையும் வானிலை: மூவர் பலி, நால்வரை காணவில்லை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் திடீரென ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. நான்கு பேரின் நிலை தெரியவில்லை. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கடும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலை நிலவி வருகின்றது. இவ்வாறு ஏற்பட்ட சீரற்ற வானிலையினால், 2,911 குடும்பங்களைச் சேர்ந்த 11,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. யாழ்ப்பாணம், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
. 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஐநா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினராகிறது இந்தியா! நியூயார்க்: 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராகிறது இந்தியா. நாளை ஐநாவின் பொது அவையில் நடக்கும் தேர்தல் மூலம் இந்தப் பதவியில் அமர்கிறது இந்தியா. இந்த தேர்தலிலிருந்து கஜகஸ்தான் திடீரென்று விலகிக் கொண்டதால், ஆசிய பிராந்தியத்திலிருந்து இந்தியா உறுப்பினராவது எளிதாகியுள்ளது. இந்த பதவிக்காக ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் ஒரு நாடு தேர்வு செய்யப்படும். ஏற்கெனவே இந்தப் பொறுப்பில் உள்ள நாடுகள்: ஆஸ்திரியா, ஜப்பான், மெக்ஸிகோ, துருக்கி மற்றும் உகான்டா. இவற்றுக்கு பதில்தான் புதிய உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்படுகின்றன. …
-
- 2 replies
- 1.1k views
-
-
கோண்டாவிலில்... சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது குறித்து, யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் யோசனை! யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான கோண்டாவிலில் உள்ள நீர் விநியோக கிணறு அமைந்துள்ள 11 ஏக்கர் காணியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோதே மாநகர முதல்வர் இதனை முன்வைத்தார். கோண்டாவிலில் உள்ள மாநகர சபையின் நீர் விநியோக கிணறு அமைந்துள்ள காணி சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்க பொருத்தமானது என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையோ நன்கொடையாளர்களோ முன்வந்தால் அதற்கான அனுமதியை வழங்கலாமா இல்லைய…
-
- 5 replies
- 489 views
- 1 follower
-
-
யாழ். மானிப்பாயில் சிறிலங்கா இராணுவத்தினரால் பதின்மூன்று வயது மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ளார். மானிப்பாய் கல்லுண்டாய்வெளிப் பகுதியில் வைத்தே இச்சம்பவம் நடந்தது. தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்றுவிட்டு நேற்று திங்கட்கிழமை வீடு திரும்பிக்கொண்டிருந்த போது வழிமறித்த இராணுவத்தினர் மாணவியை கடத்தியுள்ளனர். கடத்தப்பட்டவர் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த கிராமசேவையாளர் ஒருவரின் மகள் என்று தெரிவிக்கப்படுகின்றது. puthinam
-
- 2 replies
- 2k views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 18, 2010 வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் வவுனியாவில் நாளை நடைபெற உள்ள கூட்டத்துக்கு, வட மாகாணத்தில் பெரும் பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கடுமை யாகக் குற்றம்சாட்டி உள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அரசு இவ்வாறு நடந்து கொள்வது தமிழ் மக்களைப் புறக்கணிப்பதற்கு ஒப்பானது எனவும் அவர் தெரிவித்தார். வவுனியா கூட்டுப்படைத் தலைமையகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை இக்கூட்டம் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள், மீள் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது தொடர்பான விட யங்கள் மற்…
-
- 0 replies
- 302 views
-
-
யாழில் மீட்கப்பட்ட சடலம் அர்ச்சகருடையது: மனைவி அடையாளம் காட்டினார் யாழ். கைதடிப் பாலம் அருகே இன்று செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட சடலம், காணாமல் போன அர்ச்சகரின் சடலம்தான் என்று அவரது மனைவி அடையாளம் காட்டியுள்ளார். கோப்பாய்-கைதடி பகுதியில் கடந்த 26 ஆம் நாள் அர்ச்சகர் வெங்கட கிருஸ்ண சர்மா காணாமல் போனார். கோப்பாயைச் சேர்ந்த அவர் 4 குழந்தைகளின் தந்தையாவார். கைதடி பிள்ளையார் ஆலய அர்ச்சகராக இருந்து வந்தார். கடந்த மே 26 ஆம் நாள் ஆலயத்துக்குச் சென்ற அவர் வீடு திரும்பாததையடுத்து யாழ். போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடமும் மனித உரிமைகள் ஆணையக் குழுவினரிடமும் சர்மாவின் மனைவி முறைப்பாடு செய்தார். அர்ச்சகர் காணமல் போன பகுதி முழுமையாக சிறிலங்கா இராணுவக் கட்டு…
-
- 0 replies
- 1k views
-
-
கடந்த ஒக்தோபர் 13 இல் நாம் (TCWA - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) விடுத்த ஊடக அறிக்கை வாயிலாக -- ரொறன்ரோ மாநகர அவைக்கு வட்டாரம் 42 இல் போட்டியிடும் நீதன் சண் அவர்களுக்கும்; -- ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியத்துக்கு வட்டாரம் 22 இல் போட்டியிடும் அஷ்வின் பாலமோகன் அவர்களுக்கும்; வாக்களித்து அவர்களை வெற்றிபெற வைக்குமாறு கேட்டிருந்தோம். இப்போது மார்க்கம் நகரஅவைக்கும் ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியத்துக்கும் போட்டியிடும் கீழ்க்கண்ட வேட்பாளர்களுக்கும் உங்கள் வாக்குகளை அளித்த அவர்களை வெற்றிவாகை சூட வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தீபன் விக்னேஸ்வரன் - ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியம் (வட்டாரம் 21) பார்த்தி கந்தவேள…
-
- 17 replies
- 1.6k views
-
-
(இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்க நாட்டு மக்கள் எந்த அரசாங்கத்திற்கும் அதிகாரம் வழங்கவில்லை. நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது நாட்டை காட்டிக்கொடுக்கும் ஒரு செயற்பாடாக கருதப்படும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இலங்கை கம்யூனிச கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிக உணவு பண வீக்கம் உள்ள நாடுகளின…
-
- 0 replies
- 305 views
-
-
இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிடப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதனை ஆதரிக்கவில்லை என இந்தியா அறிவித்துள்ளது. அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸிடம், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என கொழும்பு ஊடகமொன்று கேள்வி எழுப்பியிருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்…
-
- 1 reply
- 380 views
-
-
குற்றவாளிக் கூண்டில் TNAஐ நிறுத்த வேண்டும் அமெரிக்க புலம்பெயர் அமைப்பு கோருகிறது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்று இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. ட்ராம்பிற்கான தமிழர் என்ற புலம்பெயர் அமைப்பினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து சமஸ்டி முறைமை ஆட்சியை கொண்டு வரும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மக்கள் அதிகாரத்தில் அமர்த்தியதாகவும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி …
-
- 0 replies
- 267 views
-
-
தேர்தல் முடிவின் எதிரொலி! பதவி விலகுகிறார் ரணில்? 1 பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகுவதாக, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ராகீத ராஜபக்ச முகநூலில் பதிவிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போது இவ்வாறு பதிவிட்டுள்ளார். உத்தியோகப்பற்றற்ற வகையிலான தகவல் கிடைத்துள்ளது என பிரதமர் பதவி விலகுகின்றார் என ராகீத ராஜபக்ச பதிவிட்டிருந்தார். அவரின் இந்தக் கருத்தால் சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/politics/01/173997?ref=home-latest
-
- 7 replies
- 1k views
-
-
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் - கனடா தமிழ் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் By RAJEEBAN 13 SEP, 2022 | 03:30 PM ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். கனடாவின் தமிழ் அமைப்புகளும் ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதியும் கூட்டாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடிதமொன்றை எழுதியுள்ளனர். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்க…
-
- 3 replies
- 260 views
- 1 follower
-
-
சர்வதேச எழுத்தாளர் மாநாடின் பின்னணியில் .. : சபா நாவலன் தகவல் தொழில்நுட்பம் ஒவ்வொரு தனி மனிதனதும் படுக்கையறைவரை நுளைந்து தனிமனித விவகாரங்கள் வரை விபரம் திரட்டுகின்ற இந்த நூற்றாண்டில் ஒரு பிரதேசத்து மக்களையே சாட்சியின்றிக் கொன்றொழித்த கோரம் இலங்கையில் நடந்தேறியிருப்பதை மறுபடி மறுபடி தமிழ்ப்பேசும் மக்களுக்குச் சொல்லத் தேவையில்லை. ஆயிரமாயிரமாய்ச் செத்துப்போன அப்பாவிகளின் குருதியுறைந்து போகும் முன்னமே எஞ்சியவர்களை சிறுகச் சிறுகக் கொலைசெய்து கொண்டிருக்கிறது ராஜபக்ச குடும்ப ஆட்சி. சாட்சியின்றி இலங்கையின் இதயப் பகுதியில் பேரினவாதம் நிகழ்த்திய கோரத்தாண்டவம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என்று கூறி பாசிசத்தின் வேர்களை மனிதகுலத்தின் வாழ்விடங்களிலெல்லாம் படரவிடுகிறது …
-
- 50 replies
- 4k views
-
-
சுமந்திரனின் ஆதங்க வாதம்.! அடங்கிப்போன நாடாளுமன்றம். ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கை சிங்களத்தில் மட்டுமே உள்ள காரணத்தினால் சபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஊழல் மோசடி குறித்த அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பான அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றது. இதன்போது, குறித்த அறிக்கைகள் சிங்களத்தில் மட்டுமே உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதையடுத்து குறித்த அறிக்கைகள் மீதான விவாதம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையின் தமி…
-
- 0 replies
- 402 views
-
-
எதிர்காலத்தில் ரயில் தடம் புரள்வுகள் அதிகரிக்கும் : காரணத்தை கூறுகிறது ரயில் நிலைய அதிபர் சங்கம் By T YUWARAJ 20 SEP, 2022 | 10:01 PM (எம்.மனோசித்ரா) ரயில்களை முறையாக பராமறிப்பதற்கு தேவையான உதிரிப்பாகங்களுக்கு நிலவும் கடுமையான தட்டுப்பாடு காரணமாக பெருமளவான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் ரயில் தடம் புரள்வுகள் அதிகரிக்கும் என்று ரயில் நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்களில…
-
- 1 reply
- 231 views
- 1 follower
-
-
ஞாயிறு 06-08-2006 13:32 மணி தமிழீழம் [மகான்] பிலியந்தல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கைக்குண்டு வீச்சு: 7 பொதுமக்கள் படுகாயம். கொழும்பு பிலியந்தல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் சனி இரவு 8மணியளவில் கைக்குண்டு வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்
-
- 0 replies
- 858 views
-
-
பயங்கரவாத சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் 12 வருடங்களின் பின் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் முத்தலிப், ஜெனரல் பாரமி குலதுங்க ஆகிய இருவரையும் சதித்திட்டம் தீட்டி கொலை செய்வதற்கு பயன்படுத்துவதற்காக ரி–56 ரக தன்னியக்க ஆயுதத்தை உடமையில் வைத்திருந்ததாக 2006ஆம் ஆண்டு பயங்கரவாத புலனாய்வுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட வாசுகோபால் தஜரூபன் என்பவர் 12 வருடங்களின் பின்னர் நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுதலை செய்யப்பட்டார். 2005ஆம் ஆண்டு மேஜர் முத்தலிப், ஜெனரல் பாரமி குலதுங்க ஆகிய இருவரையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக விடுதலைப்புலி உறுப்பின…
-
- 0 replies
- 240 views
-
-
இனியும் பொறுமை காக்க முடியாது; ரணிலை சுற்றிவளைப்போம் – மரிக்கார் எம்.பி. எச்சரிக்கை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 2024 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்க ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், நாட்டில் நிலவும் பட்டினி நிலை மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறினால் ஜனாதிபதி விக்ரமசிங்கவை அவர் எங்கிருந்தாலும் சுற்றி வளைக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். . “நாங்கள் இன்னும் சில நாட்கள் மட்டுமே காத்திருப்போம், அவர் வசிக்கும் பகுதியை சுற்றி வளைப்போம், அவரை நகர அனுமதிக்காமல் ஒரு இடத்தில் அடைத்து வைப்போம்” என்று மரிக்கார் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். குட…
-
- 0 replies
- 220 views
-
-
Channel 4 News uncovers a WikiLeaks cable which appears to show the United States believes responsibility for alleged war crimes in Sri Lanka rests with its leaders, including President Rajapakse. http://www.channel4.com/news/wikileaks-sri-lanka-leadership-responsible-for-crimes
-
- 5 replies
- 1.5k views
-
-
இலங்கை மீதான ஐ.நா விசாரணை ஆரம்பம் வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014 08:44 இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நியமித்த ஆணைக்குழு, தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக தகவல் மற்றும் ஆதாரங்கள் வைத்திருப்பவர்கள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/120986-2014-08-07-03-24-35.html
-
- 0 replies
- 322 views
-
-
வடக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் மீது இலங்கை அரசு சந்தேகம் கொண்டுள்ளதாக அரச அமைச்சர் ஹெகலிய அண்மையில் கருத்து தெரிவித்திருக்க அந்த ஊடகவியலாளர்களிற்கு கற்பிப்பிப்பதற்கு நேரடியாகவே களமிறங்கியுள்ளார் மற்றொரு அமைச்சரான அஸ்வர். அத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவர் மஹிந்த என்று பான்கீமூன் தம்மிடம் கூறினாரெனவும் ஊடகவியலாளர்களிடம் அஸ்வர் தெரிவித்திருக்கிறார். யாழ்.மாவட்ட செயலகத்தினல் ஊடகவியலாளர்களிற்கான பயிற்சி நெறி எனும் பெயரில் இன்று (11.08.14) பட்டறையொன்று நடத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் அரசு செய்த சாதனைகளை விளக்கி கூறுவதே இப்பயிற்சி பட்டறையின் நோக்கமாகும். தமிழ் ஊடகவியலாளர்களிற்கான பயிற்சி பட்டறைகளை தடுத்து வரும் அரசு மறுபுறத்தே இத்தகைய மூளை சலவை கருத்தரங்குகளை அண்மைக்காலமா…
-
- 1 reply
- 265 views
-
-
யாழ்நகரத்தில் கட்டடமொன்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு ; 10 இளைஞர்கள் தடுத்து வைத்து விசாரணை By T. SARANYA 14 OCT, 2022 | 11:04 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியை சேர்ந்த மிராஜ் என அழைக்கப்படும் 31 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் அருகில் உள்ள விருந்தினர் விடுதி பணியாளர்கள் 10 பேரை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பில்…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
பளையில் வீடுகள் மீது கடும் விமானத் தாக்குதல் பளை மற்றும் பச்சிலைப் பள்ளி பகுதிகளில் நேற்று புதன்கிழமை நண்பகல் விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. நண்பகல் 12 மணியளவில் பளை மற்றும் பச்சிலைப் பள்ளி பகுதிகளில் `கிபிர்' விமானங்கள் நடத்திய மிகக் கடும் தாக்குதலில் பல வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. படையினரின் தொடர்ச்சியான தாக்குதல்களையடுத்து மக்கள் வெளியேறிய வீடுகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் பல வீடுகள் அழிந்தன. இதேநேரம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளிலிருந்து பளை மற்றும் பச்சிலைப் பள்ளி பகுதிகளை நோக்கி ஆட்லறி ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
-
- 0 replies
- 912 views
-
-
தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் : 12 டிசம்பர் 2010 Bookmark and Share தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் : எதிர்வரும் காலங்களில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மட்டும் இசைப்பதென அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, அரச நிகழ்வுகள் மற்றும் வைபவங்களில் தமிழ் மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா மாதா என்ற இலங்கையின் தேசிய கீதம் சகல பிரதேசங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு கிழக்கில் தமிழ் மொழி மூலம் தேசிய க…
-
- 28 replies
- 2.2k views
-