ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
இலங்கை இனநெருக்கடி விவகாரத்தில் இந்தியாவின் அக்கறை தொடர வேண்டும். அவர்கள் மூலம் இதற்கு முடிவொன்று வரவேண்டும் என்றே தாங்கள் எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.தெரிவித்திருக்கின்றார். இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிட நேற்று திங்கட்கிழமை மாலை கொழும்பை வந்தடைந்த எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவின் இலங்கை விஜயத்தை தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.தி.மு.க. வும் அடுத்த பிரதான கட்சியான தி.மு.க.வும் புறக்கணித்திருக்கின்றன. தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளினதும் இந்த புறக்கணிப்பு தீர்மானத்தினால் இந்திய அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவின் இலங்கை விஜயத்த…
-
- 4 replies
- 525 views
-
-
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள், ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச முகவர் அமைப்பு (USAID) மற்றும் அமெரிக்காவின் திறைசேரி துறை ஆகியவற்றின் அமெரிக்க பிரதிநிதிகள் இன்று சனிக்கிழமை (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது அமெரிக்க பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் புதிய நிர்வாகம் குறித்து வாழ்த்து தெரிவித்ததாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சந்திப்பில் இலங்கையின் நிர்வாகம், விவசாயம், பொருளாதார வளர்ச்சி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், ஜனாதிபதி அநுர குமாரவுடன…
-
- 2 replies
- 193 views
-
-
20 புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது – டி.எம். சுவாமிநாதன்: 09 டிசம்பர் 2015 மேலும் 20 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர்கள் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியமை உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ந…
-
- 0 replies
- 500 views
-
-
கோட்டாவின் குடியுரிமை தொடர்பான ஆவணங்கள் இல்லை – அரசாங்க திணைக்களங்கள் கைவிரிப்பு கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான பதிவுகள் எவையும் தம்மிடம் இல்லை என அரசாங்க திணைக்களங்கள் தெரிவித்ததாக குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சும், குடிவரவு குடியகல்வு திணைக்களமும் குறித்த ஆவணங்கள் தம்மிடம் இல்லையென கைவிரித்துள்ளன. கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட, சந்ரகுப்த தெனுவெர ஆகியோர் செய்த முறைப்பாடு குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான ‘பி’ அறிக்கையிலேயே குற்ற விசாரணைத் திணைக்களம் இவ்வாறு கூறியுள்ளது. கோட்…
-
- 1 reply
- 543 views
-
-
இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான சர்வதேச தினமான இன்று (12) மாற்றுத்திறனாளிகளால் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம்ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் உள்வாங்கல் மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக இயலாமையுடையவர்களின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல் எனும் தொனிப்பொருளில் வவுனியா புதியபேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம் வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா நகரசபை கலாசாரமண்டபத்தை அடைந்தது. ஏனைய நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றது. ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் நம்பிக்கை மனதில் உண்டு நம்பி கை கொடுங்கள், தொழில் உரிமை அனைவருக்கும் உண்டு, திறமைக்கு இயலாமைதடைகள் அல்ல போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர். குறித்த நிகழ்வு வவுனியா மாவட்டசெயலக…
-
- 0 replies
- 424 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணை அமைப்பான கலை பண்பாட்டுக் கழகத்தின் மகளிர் இசைக்குழுவின் இசையமைப்பில் உருவான "பூகம்பப்பொறிகள்" குறுவட்டு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 918 views
-
-
கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவரான கலாநிதி வித்துவான் சா.இ.கமலநாதன் காலமானார். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் அதிபராக இருந்து ஓய்வு பெற்ற கமலநாதன் அவர்கள் தமிழ் துறையில் வித்துவான் பட்டம் பெற்றவராவார். இவர் தமிழ் இலக்கிய ஆய்வுத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக கிழக்கு பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்திருந்தது. மட்டக்களப்பின் பூர்வீக வரலாற்றை தேடும் பணியில் இறங்கிய கமலநாதன் அவர்கள் பழைய ஏட்டுச்சுவடிகளை தேடி அதனை அச்சுவடிவில் கொண்டுவந்த பெருமையை பெற்றார். ஓலைச்சுவடிகளில் இருந்த வரலாற்று தடயங்களை தொகுக்கும் மிகப்பெரிய பணியில் இறங்கிய வித்துவான் கமலநாதன் அவர்களும் அவரது துணைவியார் கமலா கமலநாதன் அவர்களும் எடுத்துக்கொண்ட …
-
- 1 reply
- 483 views
-
-
இறுதித் தறுவாயில் இறுதி முடிவு ! ஆதரவு எவருக்கு ! ஜனாதிபதி முடிவெடுப்பார் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அக்கட்சி யாருக்கு தனது ஆதரவை வழங்கும் என்ற தீர்மானத்தை அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன எடுக்கவுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று இரவு கூடவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக நேற்று காலை 11 மணியளவில் விஷேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி…
-
- 1 reply
- 580 views
-
-
அனலைதீவை அபிவிருத்தி செய்வோம் adminDecember 22, 2024 கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதனால் , அனலைதீவையும் அபிவிருத்தி செய்வோம் என அப்பகுதி மக்களுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி அளித்துள்ளார். அனலைதீவுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உ இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்றிருந்தனர். அதன் போது அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது, கடற்தொழிலாளர்கள் , விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவும், சமூக மட்டங்களில் நிலவும் ஏனைய பிரச்சனை தொடர்பாகவும் மக்களால் அமைச்சரிடம் எடுத்து கூறப்பட்டது. அதன் போது , அனலைதீவு மக்கள் எதி…
-
-
- 11 replies
- 783 views
-
-
விகாரைகளில் பணியில் இருந்த இராணுவத்தினர் நீக்கம்: பொதுஜன பெரமுன கட்சி கண்டனம் December 31, 2024 விகாரைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினரை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளது. இராணுவத்தினர் விகாரைகளின் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தே இராணுவத்தினர் விகாரைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பௌத்த விகாரைகளில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினரை அங்கிருந்து நீக்கியது தவறான நடவடிக்கையாகும் என பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் விமர்சித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுண கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலு…
-
-
- 7 replies
- 801 views
-
-
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு! எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்பட உள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1415833
-
- 1 reply
- 299 views
-
-
‘பயங்கரவாதம் ஒரு குற்றச் செயலைப்போல தவறுகளை மட்டுமே உள்ளடக்கியது அல்ல.அது அரசியற் பிரச்சினைகளை உள்ளடக்கியது. அந்தப் பிரச்சினைகளை செவிமடுக்கும் உரையாடலைச் செவிமடுக்காமல், வெறும் இராணுவ பலத்தால் பயங்கரவாதத்தை அழித்து விட முடியாது’- மீனா. (தீராநதி) போரிலே வெற்றி பெற்றவர் மகிந்த ராஜபக்ஷ. போரிலே வெற்றியீட்டிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் இன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம். போரின் வெற்றிக்காக உழைத்த முக்கியமானவர்களில் முதன்மையானவர் ஜெனரல் சரத் பொன்சேகா. 2009 மே மாதத்தில் வெற்றிப் பெருமிதத்தில் மிதந்தவர்கள் இவர்கள் அனைவரும். ஆனால் இன்று? இன்று அதிகமதிகம் நிம்மதியிழந்தவர்களாக, பதற்றத்துக்குள்ளாகியுள்ளவர்களாக இருப்பது மேற்குறிப்பிட்டோரே. ஒ…
-
- 0 replies
- 856 views
-
-
தமிழ் மக்கள் பேரவையினை பின்கதவால் கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்துவது ஜனநாயக விரோதச் செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் இன்று நடைபெற்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ‘தமிழ் மக்கள் பேரவையோ வேறு எந்த அமைப்புக்களையோ யாரும் உருவாக்கினால் அதற்கு எதிர்மறையான கருத்துக்களை கூற முடியாது. மக்கள் தங்களை ஒருங்கிணைத்து சில கருத்துக்களை பரிமாறிக் கொள்வது முக்கியமான ஒரு விடயம். தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக தொடர்ச்சியாக 6 வருடங்களாக மக்கள்…
-
- 2 replies
- 834 views
-
-
சுமந்திரனுக்கு பாடம் புகட்ட முல்லைத்தீவில் குடியேறப் போவதாக ஞானசார தேரர் எச்சரிக்கை கொழும்பில் நேற்று பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுமந்திரனுக்கும் நந்திக்கடல் போன்று ஒரு பதில் வேண்டுமெனில் ஒரு மாதத்தில் அந்த பதிலை வழங்க இந்த நாட்டு மக்கள் தயார் என எச்சரித்துள்ள அவர் தாம் முல்லைத்தீவில் குடியேறப் போவதாக தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் பிரிவினைவாதத்திற்கு இன்று வடக்கு முழுமையாக உள்வாங்கப்பட்டுள்ளது. நாம் வணங்கிக் கேட்டுக்கொள்கின்றோம். இந்த பிரிவினைவாதம் வடக்கில் கடந்த மூன்று வருடங்களில் மிக வேகமான வளர்ச்சியடைந்துள்ளது. அதனை முற்றாக இல்லாதொழிக…
-
- 21 replies
- 1.9k views
-
-
ஒருவருடகாலத்துக்கு நீடியுங்கள்; ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிக அலுவலக அதிகாரிகளிடம் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 18 JAN, 2025 | 10:05 PM (நா.தனுஜா) ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிக்கப்படவேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ள வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அதற்குச் சமாந்தரமாக இலங்கை தொடர்பில் சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளனர். …
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயைக் கொலை செய்தவரை அடையாளம் காண்பதற்காக தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் நேரடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட வீடியோவை அந்நாட்டின் குற்றப் புலனாய்வுத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 912 views
-
-
யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 5 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது. கடந்த 22.01.2025.அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் 26.01.2025 அன்று ஜந்தாம் நாள் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.. யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 5 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது. கடந்த 22.01.2025.அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் 26.01.2025 அன்று ஜந்தாம் நாள் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.. இங்கு விசேட அபிசேக ஆராதனை த…
-
-
- 2 replies
- 392 views
-
-
சிறுவர்களை தடுத்து வைத்திருக்கும் துணைப்படைப் பிள்ளையான் குழு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடக்கூடாது என, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட வொச்லிஸ்ட் ஆயுதப் போராட்டமும், சிறுவர்களும் என்ற அனைத்துலக அமைப்பு,.................................................. தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3397.html
-
- 1 reply
- 752 views
-
-
சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறிலங்காவுடன் அதி உயர்மட்ட இருதரப்புச் சந்திப்புகளை நடத்துவதில் இந்தியா பாராமுகமாக இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. http://www.puthinapp...?20120531106302
-
- 2 replies
- 965 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையின் 8வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இதன்படி, நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் தற்போது கொண்டு செல்லப்படுகின்றன. நாடு முழுவதும் 12,845 வாக்கெடுப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. முதல் முறையாக கார்டு போர்டுகளினால…
-
- 0 replies
- 249 views
-
-
11 FEB, 2025 | 05:22 PM (எம்.மனோசித்ரா) அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளுக்கமைய 7,456 பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அது தொடர்பாக கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவை அடையாளங் கண்டு அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்த…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் - இலங்கை இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா கடந்த வார முற்பகுதியில் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் உள்ளடக்கப்பட்ட முக்கிய செய்தி ஒன்றை நாம் எமது வாசகர்களாகிய உங்களுக்கு கடந்த வாரம் வழங்கி இருந்தது ஞாபகம் இருக்கும்! . அந்த செய்தியை ஆதாரமாக கொண்டு யாழ். போர் முன்னரங்குகளில் பூதாரமாக வெடித்து பிசுபிசுத்துப்போன மும்முனைச் சமரை ஆய்வுக்குட்படுத்துவோம் . தளபதி சரத் பொன் சேகா அன்று வழங்கி இருந்த அந்த செய்தி : இம் மாத முற்பகுதியில் கம்பஹா வெலிவேரிய பகுதியில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் தாக்குதலுடன் சர்வதேச சமூகம் ஜனாதிபதியையும், பிரதமரையும் மீண்டும் புலிகளுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு தேசத்தின் தலைவர் இன்னொரு தேசத்திற்கு செல்லும் போது வழங்கப்படும் வரவேற்புக்கள் பல விதமானவை. யார் அந்தத் தலைவராக இருந்தாலும் அந்த இரு நாடுகளிற்கும் இடையிலான மக்களிடையே ஒரு உண்மையான நட்புணர்வு இருக்குமாயின் அந்த வரவேற்பே உன்னதமானதாக இருக்கும். இந்த நட்புணர்வு இன, மொழி, கலை, கலாசார மற்றும் அரசியற் கொள்கை ரீதியானதாகவோ அன்றில் வர்த்தக பொருளாதார இராணுவ தொடர்பானதாகவோ அமையலாம். பங்களாதேஷை இந்தியா விடுவித்த போதும், இன்று ஒரு இந்தியத் தலைமை அங்கு செல்லும் போது அந்த நன்றி உணர்வு அங்கு பொங்கி வெடிப்பதில்லை. ஆனாலும் உலகானது “அமெரிக்கா- ரஷ்யா” என்ற இரு முனைத் துருவங்களின் கீழ் ஒரு சமபல பரஸ்பர எதிர்ப்புடன் விளங்கிய ஆரோக்கியமான உலக ஒழுங்கிருந்த காலத்தில், இந்தியாவிலிருந…
-
- 0 replies
- 965 views
-
-
சிங்களஅரசு தான் மாறியிருக்கிறது சிங்கள அரசாங்கம் மாறவில்லை. எனவே தெற்கிலிருந்து நீதியான தீர்வு வரும் என்று நம்ப முடியாத நிலையில் சர்வதேசத்திடமிருந்தே தீர்வினை பெறவேண்டிய நிலையில் இருக்கிறோம் என வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1005 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், ஜனநாயக ரீதியிலே புதிய ஜனாதிபதியாக கோத்தாபய தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நாமும் ஜனநாயக முறையிலேயே சுதந்திரமானதும், பாதுகாப்பானதுமான தீர்வுக்காக தெருவில் இருந்து தொடர்ந்து போராட…
-
- 8 replies
- 1.1k views
-
-
தமிழர் தாயகம் எங்கும் இன்று வியாழக்கிழமை மே நாள் நிகழ்வுகள் பேரெழுச்சியோடு நடைபெற்றுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 778 views
-