ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143477 topics in this forum
-
பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தற்போது உயிருடன் இல்லை: கோட்டபாய திகதி: 28.05.2010 // தமிழீழம் முள்ளிவாய்க்கால் பகுதியில் முடிவுற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய அரசியல் பிரமுகர்களில் பலர் சிறீலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின்றன. தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என்று சுமார் 10,000 பேரின் பெயர் விபரங்களை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருந்த நிலையில் இந்த பட்டியலில் அரசியல், மற்றும் இராணுவப் பிரிவை சேர்ந்த முன்னணி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. போரின் பின் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த புதுவை இரத்தினது…
-
- 0 replies
- 829 views
-
-
வட்டுக்கோட்டை பகுதி நேற்றிரவு முதல் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று காலை முதல் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. தருமபுரத்தில் ஜெயக்குமாரியின் வீடு சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்ட போது பொலிசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய நபர் வட்டுக்கோட்டையில் மறைந்திருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு தொடக்கம் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து அப்பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர். இரவிரவாக நடைபெற்ற தேடுதலில் இராணுவத்தினர் மதில் பாய்ந்தும் , வேலிகளை வெட்டியும் வீடுகள…
-
- 0 replies
- 162 views
-
-
வடக்கு, கிழக்கு... இணைந்த தாயகத்திலே, தமிழ் மக்களுக்கான உரிமையை... வழங்க வேண்டும் – அரியநேத்திரன் வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியா உட்பட சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கும் புதிய பிரதமருக்கும் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எற்பாட்டில் இடம்பெறும் பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான பேரணியின் இரண்டாம் நாள் மட்டக்களப்பில் ஆரம்பித்த வேளையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் நடத்திய இனப்படுகொலைக்க…
-
- 0 replies
- 93 views
-
-
ராம ராவணன் என்ற மலையாளப் படத்தின் பத்திரிகையாளர் சிறப்புக் காட்சி நேற்று திரையிடப்பட்டது. இப்படம் தமிழ் ஈழப் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று பத்திரிக்கையாளர்கள் கொதித்தனர். இந்த விசயம் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் இந்தப்படத்தை உலகம் முழுவதும் திரையிட விடமாட்டோம் என்று அறிவித்துள்ளார். அவர், ‘’சிங்களத்தையும் புத்தத்தையும் உயர்த்திப் பிடிக்கும், தமிழினத்தைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கும் இந்தப் படத்தை, சமய சகுனிப் படமாகவே கருதுகிறோம். தமிழினத்துக்கும் தமிழீழ விடுதலைக்கும் களங்கம் கற்பிக்கவே இப்படத்தை இங்கு வெளியிட முனைகிறார்கள் என்பது உறுதியாகத் …
-
- 0 replies
- 1.5k views
-
-
சம்பந்தன் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் சபையில் முன்வைத்தார் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் அனுமதி மறுத்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அரசியலமைப்பு சபையின் தலைவர் கரு ஜெயசூரியவிடத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சமயத்தில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், மாவை.சோனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளட்ட எதிர்க்கட்சியான கூட்டமைப்பின் எம்.பி.க்கள் சபையில் பிரசன்னமாகியருந்து அமைதியாக முற…
-
- 6 replies
- 607 views
-
-
இலங்கையின், "கடன் மீள் செலுத்துகை" ஆற்றல்... ‘டி’ நிலைக்குத் தரமிறக்கம்! சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செய்யத்தவறியமையால் ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையைக் கடன்களை மீளச்செலுத்தமுடியாத ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது. வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் இலங்கையை ‘சி’ நிலைக்குத் தரமிறக்கியிருந்துது. இந்நிலையில் தற்போது நாட்டை ‘சி’ நிலையிலிருந்து ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ள ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வெளிநாட்டு கொடுப்பனவு மீளச் செலுத்தப்படாமையே அதற்குக் காரணம் என்றும் விளக்கமளித்துளள…
-
- 0 replies
- 136 views
-
-
Hameed S. Lebbe – “ வியர்வை சிந்தாத உன்னாலும், மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்துவிட முடியாது” எனவே எனது பேனாவை திறக்கின்றேன் கொஞ்சம் மையை சிந்த விட…..! ஐயா சம்மந்தன் அவர்களே ! தமிழர் விடுதலைக்காக போராட களம் கண்ட ஆயுத இயக்கங்களினால் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்பட்டதுடன் முடிவுற்றது என்றே முஸ்லிம்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அம் மக்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போடுவது போல் உள்ளது. கல்முனை மக்களின் கல்முனை உள்ளுராச்சி சபையை 1897 களில் இருந்து 1987 வரை இருந்தது போன்று தனியாக பிரித்து தார…
-
- 7 replies
- 879 views
-
-
தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சியே தமிழ் மக்களது எதிர்பார்ப்பு தேசியம் என்பது, ஒரு இனம், தான் வாழ்வதற்காக நீண்ட கால மாக ஒரு பாரம்பரிய நிலத்தில், தனக்கெனத் தனியான மொழி, பண்பாடு,கலாசாரம், பொருண்மிய வளம் என்பவை கொண்டதாக இயங்குதல் என்பதாகும். அதன் விரிந்த உண்மையான உட்பொருள், இன்னும் விசாலமானது. குறித்த பாரம்பரிய நிலத்தில், அவர்களின் ஆள்புல எல்லை,ஆகாயம் , கடல், வளிமண்டலம், இயல் தாவரங்கள், விலங்குகள், பறவைகள், அவர்தம் பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைமைகள் என்று அத்தனை விசேட அம்சங்களும் தேசியத்தின் அர்த்தக் கூறுகளாகும். அதன் மெய்ப்பொருள் உணர்த்துவது தான், தமிழர்கள் தனிய…
-
- 1 reply
- 467 views
-
-
இந்திய விஜயம் முழுமையான வெற்றியளித்துள்ளது ‐ தமிழ்தேசியகூட்டமைப்பு 11 July 10 01:52 am (BST) தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் முழுமையான வெற்றியளித்திருப்பதாக தமிழ்தேசியகூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருதது தெரிவித்த தமிழ் தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இந்திய பயணம் எதிர்பாராத வெற்றியைத்தந்துள்ளது.இந்தியபிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கைச்சந்தித்து வடகிழக்கு மக்களின் நிலைமையை விளக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததுடன் முழுமையான அரசியல் விருந்தினர்களாகவும் சென்றுள்ளனர். இந்தியஅரசாங்கத்தினால் வடகிழக்கில் முன்னெடுக்கப்கடும் அபிவிருத்திப்பணிகள் யாவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலோசனையுடனேயே மேற்கொள்ளப்படும் எனவும் உ…
-
- 1 reply
- 579 views
-
-
அண்மையில் நாடகபாணியில் கொல்லப்பட்ட, அரசால் அறிவிக்கப்பட்ட "புலிகளின் புதிய தலைவர்" கோபி என்னும் தமிழ் இளைஞன், கிளிநொச்சி கொக்காவில் ராணுவ முகாமில் சமயலறையில் எடுபிடியாக வேலை பார்த்தவர் என்றும், அவருடன் சேர்ந்து கொல்லப்பட்ட தேவியன் மற்றும் அப்பன் ஆகியோர் அதே முகாமில் எடுபிடி வேலைகளுக்காக இராணுவத்தால் அமர்த்தப்பட்டவர்கள்: என்றும் அம்முகாமின் ராணூவ அதிகாரியொருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றிற்கு தெரிவித்திருக்கிறார். அந்த ராணுவ அதிகாரியின் தகவலின்படி கோத்தாபயவின் சதித்திட்டம் ஒன்றிற்கமைய இம்மூவரும் தேடப்படும் புலித்தலைவர்களாக அறிவிக்கப்பட்டு, பின்னர் பெரும் எடுப்பிலான இராணுவ தாக்குதல் ஒன்றின்மூலம் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தெரியவருகிறது. கொல்லப்பட்ட இந்த மூவர…
-
- 7 replies
- 1.2k views
-
-
முகக்கவசம் அணிவது... கட்டாயமில்லை – சுகாதார அமைச்சு நாட்டில் இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் நாளை (10) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கு இந்த பாதுகாப்பு உத்தியை பயன்படுத்த வேண்டியது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணார்தன தெரிவித்துள்ளார். சுவாசக் கோளாறுகள் மற்றும் அது தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் சாதாரண முகமூடிகளை அணியலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார். https://athavannews.com/2022/1286321
-
- 0 replies
- 190 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும் என்று தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளரும், மகளிர் பொறுப்பாளருமாகிய ஜான்சிராணி சலீம் வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்து உள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் முஸ்லிம்கள் மீது வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருப்பது தொடர்பாக இவர் விடுத்து உள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். இவரின் அறிக்கை வருமாறு:- காலி ஹிந்தோட்டையில் முஸ்லிம்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்குள் கடந்த சனிக்கிழமை இரவு காடையர்கள் புகுந்து வீடுகளுக்கு தீ வைத்ததுடன் வாகனங்களுக்கும் தீ மூட்டி சென்று உள்ளனர். இதனால் ஏற்பட…
-
- 5 replies
- 789 views
-
-
Jul 26, 2010 / பகுதி: செய்தி / யாதவன் சுவரொட்டிகளை ஒட்டிய 6 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரினால் கைது றுகுணு பல்கலைக்கழக மாணவரின் உயிரிழப்புத் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு கோரும் சுவரொட்டிகளை ஒட்டிய பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் உதுல் பிரேமரட்ன, இவர்கள் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த வேளையில் நுகேகொடைப் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கூறினார். ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்ககலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கிருளைப்பனை பொலிஸாரினாலும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட…
-
- 1 reply
- 632 views
-
-
மஹிந்தவின் சிங்கள குடியேற்றம் - சண்டே லீடர் எச்சரித்துள்ளது நடுவன் தமிழீழமான முறிகண்டியில் 12ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றப்படுவதானது - மீண்டும் ஓர் இனக்கலவரம் ஏற்படுவதற்கு இந்த திட்டம் அடித்தளம் இடுகின்றது என்று சண்டே லீடர் எச்சரித்துள்ளது. தெற்கில் தமிழர்கள் காணிகளை தமது சொந்தப் பணத்தில் வாங்கி குடியேறுகின்றனர். ஆனால் வடக்கில் ஸ்ரீலங்கா அரசு அவர்களின் காணிகளைப் பறித்து சிங்களவர்களைக் குடியேற்றுகின்றது. முறிகண்டி பகுதியில் ஐந்தாயிரம் ஏக்கர் தமிழர் நிலம் பறிக்கப்பட்டு அங்கு 12 ஆயிரம் சிங்கள இராணுவ குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்கப்படுகின்றன, என சண்டே லீடர் ஆங்கில ஏடு ‘மஹிந்தவின் சிங்கள குடியேற்றம்' எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. 12 ஆயிரம் இராணுவ குடு…
-
- 5 replies
- 1.5k views
-
-
சாவகச்சேரி நகர சபை தேர்தலுக்கு மஹிந்த அணியும் கட்டுப்பணம் செலுத்தியது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவத்றகாக மகிந்த ராஐபக்ச அணியின் கட்சியான சிறிலங்கா பொதுஐன முன்னணி யாழ்ப்பாண தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் கட்டுப்பணத்தைச் செலுத்தியது. தாமரை மொட்டு சின்னத்தில் அந்தக் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. ஈபிடிபியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்களே மகிந்த ஆதரவு இந்தக் கட்சியில் இணைந்து யாழ்ப்பபாண மாவட்டத்தின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளனர். இதேவேளை, சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக ஈபிடிபி முதன்முதலாக கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்…
-
- 0 replies
- 200 views
-
-
எனக்கு வந்த ஊடக நண்பர் ஒருவரின் மின்னஞ்சலிலிருந்து... 'இவரேதான் அவரே..அவரேதான் இவரே'. இது ஒரு பழைய பாட்டு. கே.பீ. அண்ணனை காப்பற்றவே, இத்தனை காலமும் காஸ்ட்ரோவின் மீது செறடித்தார்களோ என்று தோணுது. அண்ணனுக்கும்,அரசியலுக்கும் தொலைதூர இடைவெளி. ''இருக்கிறார் இல்லை. வருவார் வரமாட்டார். வரும் ஆனால் வராது. மௌனிக்கப்பட்டுள்ளது ...இனி சாத்தியமில்லை. கோத்தபாயா சகோதரய, பணிஸ் கொடுத்த சீதக்காதி. ''' இப்படியே இழுபட்டுச் செல்லும் அண்ணனின் பொன்மொழிகள். அண்ணனை 'LIE DETECTOR ' கொண்டு சத்திய சோதனைக்கு உட்படுத்தினால் ,வெளிவரும் உண்மைகள் சில.... [ஆழ்மனத் தூக்கத்தில் நிறுத்தி, உண்மைகளை உளறவைக்கும் அற்புதமான அறிவியல் கருவி.- LIE DETECTOR ] ''நான்தான் தலைவர். …
-
- 0 replies
- 1.6k views
-
-
முஸ்லிம்களைப் பற்றிச் சிந்திக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது! வடக்கு மாகாண சபையின் துர்ப்பாக்கிய முதலமைச்சர் இருக்கும் வரை சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு விடிவு என்பது வெறும் கானல் நீராகத்தான் இருக்கும். அதேவேளை முஸ்லிம்களைப் பற்றிச் சிந்திக்காத வரை தமிழர்களுக்கும் விமோசனம் இல்லை என்று தெரிவித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெனோபர். முல்லைத்தீவு கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிச்சிராபுரத்தில் நேற்று இடம்பெற்ற முஸ்லிம் குடும்பங்க ளுக்கான வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார…
-
- 2 replies
- 556 views
-
-
ஆக 19, 2010 / பகுதி: செய்தி / பலவந்தமாக மக்களைக் குடியேற்றும் முயற்சி செட்டிக்குளத்தில் முறியடிப்பு செட்டிக்குள வலயம் 04 நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1600 குடும்பங்களைச் சேர்ந்த 5000 பேர் புதன்கிழமை பலவந்தமான செட்டிக்குளம் கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றப்பட இருந்தனர். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கத்தின் தலையீட்டை அடுத்து, மாற்றம் நிறுத்தப்பட்டது. செட்டிக்குள வலயம் 04 நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களை கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றி, பின்னர் ஒரு மாத காலத்தினுள் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றுவதாக இராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால் மேற்படி …
-
- 0 replies
- 669 views
-
-
மத்திய மாகாண கல்வியமைச்சர் கைது மு.இராமச்சந்திரன் மத்திய மாகாண கல்வியமைச்சர் ராமேஷ்வரன், அம்பேகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வௌ்ளையன் தினேஷ் உட்பட, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இந்த நால்வரையும், ஹட்டன் நீதவான் நீதமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/மத்திய-மாகாண-கல்வியமைச்சர்-கைது/175-208685
-
- 0 replies
- 305 views
-
-
நம்மிடமிருந்து எடுக்கப்பட்ட காணிகளைப் பற்றி நாம் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை ‐ பிரதியமைச்சர் விநாயகர்த்தி முரளிதரன்‐ 27 August 10 01:52 am (BST) நம்மிடமிருந்து எடுக்கப்பட்ட காணிகளைப் பற்றி நாம் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பின் மூலம் உங்களுக்கான எல்லா விதமான வசதிகளையும் ஏற்பாடு செய்து மழைக்காலத்திற்கு முன்னர் குடியமர்த்த வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். அதற்கு ஏற்ற வகையில் உங்களுக்கு ஏற்ற பிரதேசங்களை நீங்களே பதிவு செய்து கொள்ளுங்கள் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகர்த்தி முரளிதரன் தெரிவித்தார். சம்பூர் கிழக்கு மற்றும் மேற்கு, நவரெட்ணபுரம், கடற்கரைச்சேனை, கூனித்தீவு உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து …
-
- 2 replies
- 1k views
-
-
யாழ். ஊர்காவற்துறை கடல் கோட்டையைப் பாதுகாக்க நடவடிக்கை! யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஐநூறு ஆண்டுகள் பழமை மிக்க கடல் கோட்டையான ஊர்காவற்துறை டச்சு கோட்டையை பாதுகாக்க இலங்கை தொல்பொருளியல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான விசேட குழுவொன்று யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேற்படி தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நெடுங்காலமாக இலங்கைக் கடற்படையின் கட்டுப்பாட்டிலிருந்துவரும் ஊர்காவற்துறை கடற்கோட்டையானது ஆயிரத்து ஐநூறுகளில் போர்த்துக்கேயர்களால் நிர்மாணிக்கப்பட்டது. இதன்பின்னர் போர்த்துக்கேயரிடமிருந்து கோட்டையை மீட்ட ஒல்லாந்தர் எனப்படும் டச்சுக்காரர் அதனைச் சற்றுப் பெர…
-
- 1 reply
- 897 views
-
-
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவினை புறக்கணிக்கக் கோரி நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட முயன்ற 20 பேரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியது:- நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபட்ச கலந்து கொள்ள உள்ளார். இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழார்வ அமைப்புகளைச் சேர்ந்தவரகள் எதிóர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக பல்வேறு அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என்று கோரிக்கைகளும் வைககப்படுகின்றன. இந்நிலையில நடிகர் ரஜினிகாந்த் அந்த விழாவினைப் புறக்கணிக்கக் கோரி அவரது வீட்டை பாலச்சந்திரன் மாணவர் இயக…
-
- 0 replies
- 600 views
-
-
பாகிஸ்தானைச் சேர்ந்த எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இலங்கையில் பயிற்சி பெறவே இல்லை என்று இலங்கையின் பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோட்டாபய தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் பயிற்சி முகாம் ஒன்றில் இராணுவ பயிற்சிகளைப் பெற்றார் என்று அவ்வியக்கத்தின் தீவிரவாதி ஒருவர் இந்தியாவின் மராட்டிய மாநில பொலிஸாருக்கு வழங்கி இருக்கும் வாக்குமூலத்தை கோட்டாபய முற்றாக நிராகரித்துள்ளார். இலங்கையில் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இயங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10116:2010-09-10-10-29-13&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410 பின் குறிப்பு-- இலங்கையில் அரச பயங்கரவாதத…
-
- 1 reply
- 1k views
-
-
குருவில்வான் கிராம மக்களை வெளியேற்ற நடவடிக்கை! காணி அபகரிப்பின் ஓர் அங்கமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குருவில்வான் கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த குடியிருப்பாளர்களை முன் அறிவித்தல் எதுவுமின்றி உடனே வெளியேறும்படி வனவள ஜீவராசிகள் திணைக்களத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இப்பிரதேச மக்கள் இது குறித்து மன்னார் பிரஜைகள் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து மன்னார் பிரஜைகள் குழுவின் உபதலைவர் எஸ்.சகாயம் தலைமையிலான குழு, சமூகசேவகர் சாள்ஸ் நிமலநாதன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மார்டீன் டயஸ் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை குறித்த பகுதிக்குச் சென்று பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, மாந்தை மே…
-
- 0 replies
- 390 views
-
-
ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் "புலி" வீடுகள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்காக ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் விடுதலைப் புலிகள் வீடுகளை அமைத்து வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மன் ஜி.ரி.இசட் நிறுவனத்தின் ஆதரவுடனே இந்த வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத் தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த போராளிகளின் குடும்பத்தினருக்காக இராணுவ முகாம் இருந்த இடத்தில் வீடுகளை அமைக்க ஜெர்மன் தொண்டர் நிறுவனம் உதவியது சட்டவிரோதமானது. அவர்கள் இதுபற்றி பாதுகாப்புப் படையினருக்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-
- 13 replies
- 2.4k views
-