ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
கூட்டு அரசாங்கம் தொடராது – சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் எச்சரிக்கை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து நீக்கப்படாவிடின், வரும் ஏபரல் 4ஆம் நாளுக்குப் பின்னர் கூட்டு அரசாங்கம் பதவியில் இருக்காது என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்கள் சுசில் பிரேம ஜெயந்த, டிலான் பெரேரா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் இதனைத் தெரிவித்தனர். “ஏப்ரல் 4ஆம் நாளுக்குப் பின்னரும், கூட்டு அரசாங்கம் பதவியில் இருப்பதற்கு, ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது தான் ஒரே வழியாகும். ஐதேகவுடன் இணைந்த…
-
- 1 reply
- 363 views
-
-
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 4, 2011 யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றது போல் வன்னியிலும்ஆயுதமுனையில் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிளிநொச்சி நகருக்கு மிகச் சமீபமாகவுள்ள கனகபுரம் முதலாம் குறுக்குத் தெருவில் இரவு வேளை ஆயுதமுனையில் இளம் குடும்பப் பெண்ணின் தாலிக்கொடி உட்பட மேலும் பல நகைகள் கொள்ளையர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன. இதேவேளை இத் தெருவிலுள்ள பலசரக்குக் கடை ஒன்றை இரவுவேளை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள் பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கடந்த சில மாதங்களாக கிளிநொச்சி கணேசபுரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் நகை, பணம், பொருட்கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வற்றாப்பளை, தண்ணிரூற்…
-
- 0 replies
- 724 views
-
-
மஹிந்தவின் அப்பமும், ரணிலின் தேநீர் விருந்தும்;புகைப்படம் அம்பலம்! நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் பிரதமர் தலைமையில் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள அமைச்சர்களும், உறுப்பினர்களும் நேற்று இந்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டிருந்தனர். இதன்படி அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரஞ்ஜித் மத்தும பண்டார, தலதா அத்துகோரள, நளின் பண்டார, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பலரும் அதில் கலந்துகொண்டிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது இராஜதந்திர செயற்பாடுகள…
-
- 0 replies
- 308 views
-
-
யுத்த வலயத்திலிருந்து இரு வெள்ளையர்களின் உடல்களை மீட்டதாக அரசாங்கம் அறிவிப்பு. யுத்த வலயத்தில் இருந்து இரண்டு வெள்ளையர்களின் உடலங்களை கைப்பற்றி இருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (Hindustan Times) ஹிண்டுஸ்தான் ரைம்ஸ் நாளேட்டிற்கு செவ்வி வழங்கியிருக்கும் சிறீலங்கா பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, தமிழீழ விடுதலைப் புலிகளின் கூலிப் படையினர் எனக் கருதப்படும், இரண்டு வெள்ளையர்களின் உடலங்களை யுத்த வலயத்தில் இருந்து சிறீலங்கா பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவு
-
- 2 replies
- 2k views
-
-
கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு நேற்று 8ஆம் திகதி மன்னாரில் சாட்சியங்களைப்பதிவு செய்து கொண்டுள்ளதோடு இன்று மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் தனது சாட்சியங்களை பதிவு செய்து கொள்ளவுள்ளது. மன்னார் அரசச்செயலகக் கெட்டிடத்தில் நேற்று (8 )காலை 10-30 மணியளவில் ஆரம்பமானது. இதன் போது மன்னார் ஆயர் அதிவணக்கத்திற்குறிய இராயப்பு யோசேப்பு ஆண்டகை முதலில் சாட்சியங்களை வழங்கினார். இதன் போது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மற்றும் முன்னால் குரு முதல்வர் அருட்தந்தை சேவியர் குருஸ் ஆகியோர் இணைந்து முதலில் சாட்சியமளித்தனர். இதன் போது மன்னார் ஆயர் சாட்சியமளிக்கையில் தெரிவித்ததாவது, முதலில் உண்மை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என மன்னாரில் நே…
-
- 1 reply
- 715 views
-
-
சீனாவுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்:- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- சீனாவின் கிழக்கு கடற்பகுதி விவாரத்தில் ஜப்பானிற்க்கு ஆதரவான நிலைப்பாட்டை இலங்கை எடுத்துள்ளதால் சீனாவுடனான அந்த நாட்டின் உறவுகள் பாதிக்கப்படலாம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயின் சமீபத்திய விஜயத்தின் போது கிழக்கு சீனா கடலில் ஏனைய நாடுகள் மீதான சீனாவின் வான்வெளி மற்றும் கடல்ப்பகுதி தடைவிவகாரத்தில் ஜப்பானின் நிலைப்பாட்டை இலங்கை ஆதரித்திருந்தது. சீனாவுடன் நெருக்கமான உறவுகள் உள்ள நிலையிலும் கொழும்பு குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இரு நாட்டு தலைவர்கள் மத்தியிலான சந்திப்பி;ற்க்கு…
-
- 0 replies
- 231 views
-
-
தேசிய இன விகிதாசார அடிப்படையில்காணிகள் பிரிக்கப்படாவிட்டால் சட்ட சடவடிக்கை – சாணக்கியன் தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட ஒழுங்குப்பிரச்சினையினை எழுப்பி கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார், இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படவேண்டும். ஆனால் 94 சதவீதமான காணிகள் பெரும்பான்மையினருக்கு பிரிக்கப்படுள்ள நிலையில் மிகுதிக் காணிகள் சிறுபான்மை ம…
-
- 0 replies
- 228 views
-
-
யாழ். இருபாலையில் டெங்கு தொற்றிய ஒருவர் மரணம்! [ பிரசுரித்த திகதி : 2011-01-15 07:38:30 AM GMT ] யாழ். இருபாலை தெற்கு பகுதியில் டெங்கு நோயினால் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. தவராசா சுரேஸ் (வயது 27) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமாகியுள்ளார் tamilulakam.com
-
- 0 replies
- 411 views
-
-
தமிழீழ நீதித்துறை தமிழீழத்தில் வாழும் சிறுவர்களின் உரிமைகளை பேணும் பொருட்டு "சிறுவர் பாதுகாப்பு சட்டத்தை" உருவாக்கி வெளியிட்டுள்ளது. 83 பிரிவுகளை அடக்கிய இச் சட்டமூலத்தில் சிறுவர் தொழில், சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள், சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்ற மிக முக்கிய விடயங்கள் அடங்குகின்றன. இச் சட்டத்தை தமிழீழ நீதித்துறை உருவாக்கி இருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என கொள்ளத்தக்கது. தமிழீழத்தின் இறமையை இச் சட்டம் காத்து நிற்கிறது. இச் சட்டம் படையில் சிறுவர்களை சேர்ப்பதற்கான வயது எல்லைகளை நிர்ணயிக்கிறது. 17 வயதிற்கு உட்பட்டவர்களை படையில் சேர்த்துக் கொள்வதும், 18 வயதிற்கு உட்பட்டவர்களை சண்டைகளில் ஈடுபடுத்துவதும் இச் சட்டத்தின்படி குற்றங்கள் ஆகின்றன. தமிழீழ விடுதலைப்ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
புத்திசுவாதீனம் அற்றவர் போல் பேசுகிறார் அமைச்சர் ரம்புக்வெல்ல! - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சாடல். [sunday 2014-09-21 06:00] அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல புத்திசுவாதீனம் அற்றவர் போல் பேசுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார். செட்டிபாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை அரசியலில் இவ்வளவு அமர்களம் நடந்தும் இவ்வளவு ஆராவாரம் நடந்தும் இவ்வளவு இன சம்ஹாரம் நடந்தும் எதுவுமே நடவாதது போலவும், வேற்றுக்கிரகம் இருந்து நேற்று வந்தவர் போலவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல என்ன பிரச்சினை என்று வினவுவது அவரது புத்திசுவாதீனத…
-
- 2 replies
- 360 views
-
-
பூநகரி மீது எறிகணைத் தாக்குதல்: கண்காணிப்புக் குழுத் தலைவர் உயிர் தப்பினார் [புதன்கிழமை, 8 நவம்பர் 2006, 17:51 ஈழம்] [தெ.சந்திரநாதன்] பூநகரி இறங்குதுறையைப் பரிசீலிப்பதற்காக உத்தியோகபூர்வமாக சென்ற கண்காணிப்புக் குழுவினரை நோக்கி சிறிலங்கா இராணுவம் எறிகணை வீச்சுத் தாக்குதலை இன்று புதன்கிழமை நடத்தியுள்ளது. ஏ-9 பாதைக்குப் பதிலாக பூநகரி இறங்குதுறையைப் பயன்படுத்தலாம் என்று சிறிலங்கா அரசு யோசனை தெரிவித்திருந்தது. ஆனால் அரசின் தாக்குதல்களால் பூநகரி இறங்குதுறை ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது எனவும் இவ்வாறான போக்குவரத்திற்கு அது உகந்ததல்ல எனவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பூநகரி இறங்குதுறையைப் பரிசீலிப்பதற்காக, சிறிலங்கா அரசின் முன்கூட்டிய அனும…
-
- 10 replies
- 2.2k views
-
-
புதன்கிழமை, ஜனவரி 26, 2011 யாழ்.கொட்டடிப்பகுதியில் பனை மரத்தில் கட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. பண்ணையில் ரெலிகொம் கட்டிடத்துக்குப் பின்புறமாக உள்ள கூழாவடி வயிரவர் ஆலய வீதியிலுள்ள வீடு ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கழுத்தில் கயிறு சுருக்கிட்டவாறும் கால்கள் நிலத்தில் தொங்கிய நிலையிலும் இச்சடலம் காணப்பட்டது. யாழ்.நீதிவான் ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைகள் நடைபெற்றது. ஐந்து பிள்ளைகளின் தந்தையான க.தவச்செல்வம் (42 வயது) என்பவரின் சடலமே இதுவென அடையாளம் காட்டப்பட்டது. இவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காணாமல் போயிருந்தார் எனவும் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீட்டின் பின்புறமாக பனை மரத்தில் கட்ட…
-
- 1 reply
- 795 views
-
-
மாகாணசபைக்கு அரசு நிதி ஒதுக்குவதில்லை! – புலம்புகிறார் வடமேல் மாகாண முதலமைச்சர் [Friday 2014-09-26 10:00] மாகாணசபைகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்குவதில்லை என்று வடமத்திய மாகாணசபையின் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மாகாணசபை அமர்வுகளின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் அமைப்பிற்கு அமைவாக மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை அமுல்படுத்த பணம் இருக்க வேண்டும். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் எமக்கு தேவைப்படுவது பணமாகும். நாம் எவ்வளவு பணம் கேட்டாலும் கிடைப்பதில்லை. அன்றும் அவ்வாறே இன்றும் அவ்வாறே.மூன்று மடங்கு பணம் கோரினால் ஒரு பகுதியே கிடைக்கப்பெறும். வேறும் வழிகளில் எமக்கு பணம் கிடைத்தால் நன்று. எந்த வகையிலாவத…
-
- 0 replies
- 225 views
-
-
உலக சிறுவர்கள் தினம் இன்று ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சிறுவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது . இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். நாளைய எதிர்காலம் நன்றாக அமைய இன்றைய சிறுவர்களை நல்ல ஒரு பிரஜையாக உருவாக்க வேண்டும். இன்று அதிகமாக உலகில் கஷ்டப்படுபவர்கள் சிறுவர்கள் தான். பல சிறுவர்கள் பட்டினியால் வாடுகிறார்கள். தாய், தந்தையை இழந்து அனாதைகளாக நிற்கும் சிறுவர்கள் ஏராளம். அன்றாடம் உணவுண்ண பிச்சை ஏந்தி பிழைக்கும் நிலைமை. அடியாட்கள் சொல்லும் வேலைகளை செய்து அவர்கள் கொடுப்பதை உண்ணும் நிலைமை இப்படி நீண்டு கொண்டே செல்கிறது சிறுவர்களின் இன்றைய நிலைமை. சிறுவர்கள் துன்புறும் சம்பவங்கள் எல்லா நாடுகளிலும் நடக்கிறது தான். ஆனால், சில வெளிச்சத்துக்கு வருகின்றன. …
-
- 0 replies
- 500 views
-
-
ஏரோ லங்கா என்ற தனியார் விமான நிறுவனம் நாளை முதல் யாழ்பாணத்துக்கு புதிய சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. இவ்வானூர்தி நிறுவனம் 45 ஆசனங்களை கொண்டுள்ளதோடு ஒருவழிக்கட்டணமாக எண்ணாயிரத்து 200 ஐ ஒரு வழிகட்டணமாக அறவிடவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...rom=&ucat=1&
-
- 4 replies
- 1.2k views
-
-
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 4, 2011 "அரசியல் ரீதியில் நான் உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறேன்" என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்று வரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். சில சக்திகள் அரசியல் ரீதியில் பிரிவினைவாதங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி பொய் கூறி, களவு செய்து ஆட்சியை கைப்பற்ற முயல்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவ்வாறானவர்களுக்கு அரசியல் காய்ச்சல் எனவும், தான் அரசியல் ரீதியில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரமன்றி வேறு குழுக்களும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கூறியுள்ளார். ஈ…
-
- 1 reply
- 1.4k views
-
-
பிரித்தனியரான ஜி.சி மென்டிஸ் வின்சன் சிகள - சிங்கள என்று அழைக்கப்படும் நாட்டுப் பெயர்கள.; ஜாதகக் கதைகளுக்குப் புனைந்து வழங்கப்பட்ட ஐதீகமேயாகும் எனக் கூறியுள்ளார். இவற்றை நிருபிக்கத்தக்க சான்றுகளில்லை என்கிறார் பௌத்த சிங்கள அறிஞர் எஸ்.பி.எவ் சேனாரெத்தினா இவர் ஒரு மானிடவியளாளராவார். ஷஷபுத்த சமயம் ஏற்படுத்திய முதல்மையானசெல்வாக்கினால் ஈழம் சம்பந்தமான நீண்ட காலமாக பௌத்த இலக்கியமும் மொழியும் சம்பந்தமான ஆய்வு, அவற்றுக்கான பொருள் தேடலுமே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சாசன தொல்லியல் சான்றுகள் போன்ற இதர சான்றுகள் பௌத்த இலக்கியக் கண்ணோட்டத்தில் அணுகப்பட்டன. அல்லது முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டன. இத்தகைய அணுகுமுறையின் பயனாகவே வரலாற்று ஆசிரியர்கள் ஈழத்தின் வரலாற்றைப் பெரும்பா…
-
- 0 replies
- 1.2k views
-
-
அரச வங்கிகள் இன்று நன்பகல் முதல் அரைநாள் பணிப் பகிப்பகிஷ்கரிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளன. 1995ம் ஆண்டின் பின் நியமனம் பெற்ற வங்கி ஊழியர்களது ஓய்வூதியம் தொடர்பாகப் பல பிரச்சினைகள் இருப்பதாகவும் அவை தொடர்பாக மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் பயனளிக்க வில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சுமார் 15 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக இன்று பி.ப. 12.30. முதல் அரை நாள் பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=30021
-
- 0 replies
- 525 views
-
-
மகிந்த வரவில்லை: வீணாகின நீலச்சேலைகள் வடக்குக்கு பயணம் செய்யவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சில பாடசாலைகளின் ஆசிரியைகள் கட்டாயம் நீலநிற சேலைகள் அணிந்தே வர வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் சேலைகளையும் ஆசிரியைகளின் பணத்தில் கொள்வனவு செய்தனர். எனினும் யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் பாடசாலை ஒன்றிலும் ஜனாதிபதி மகிந்தோதய ஆய்வு கூடத்தை திறந்து வைப்பார் என்று கூறப்பட்டது.அதையடுத்து அங்குள்ள ஆசிரியைகளும் கட்டாயம் நீலச் சேலைதான் அணிய வேண்டும் என்று பணிக்கப்பட்டது. ஆசிரியைகளின் சொந்தப் பணத்தில் சேலையை வாங்க வேண்டும் என்றும் அதுவும் 2,500ரூபா பெறுமதியான நீலச்சேலைகளைத் தான் வாங்க வேண்டும…
-
- 30 replies
- 2.3k views
-
-
மீண்டும் இருண்ட யுகத்துக்கு பயணிக்க வேண்டி வரலாம் – கடுந்தொனியில் கூறுகிறார் அமைச்சர் விஜயதாச !! வடக்குக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் எதையுமே செய்யாவிடின் மக்கள் இன்னும் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் நிலமை ஏற்படும், மீண்டும் ஒரு இருண்ட யுகத்துக்கு நாம் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். வவுனியாவில் பாரம்பரிய உற்பத்தி…
-
- 0 replies
- 632 views
-
-
கனடாவிலிருந்து தமிழகம் வந்திருந்த யாழ். தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் [Thursday, 2011-02-17 12:09:27] சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் போலீஸ் உடையில் இருந்த சிலர் இலங்கை தமிழ் மாணவர்கள் இருவரை அடித்து உதைத்து, அவர்களிடம் இருந்த செயினையும், செல்போனையும் பறித்துக் கொண்டதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் சுதன் (25), கவா (24). அவர்கள் உறவுமுறையில் அண்ணன், தம்பி ஆகும். அவர்கள் இருவரும் கனடாவில் என்ஜினீயரிங் படிக்கிறார்கள். சுதனின் பெற்றோர்கள் சென்னை வில்லிவாக்கத்தில் வசிக்கின்றனர். அவர்களைப் பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன் தான் சென்னை வந்துள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை ஆடுகளம் படம் பார்ப்பதற்…
-
- 1 reply
- 2k views
-
-
நேரில் நன்றி கூறிவில்லை என்பதற்காக மக்களை உதாசீனம் செய்த அமைச்சர் சுவாமிநாதன் ( காணொளி ஆதாரம் ) யுத்தத்தினால் பேரழிவை சந்தித்த முல்லைத்தீவு,கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கேப்பாப்புலவு கிராமத்தை பூர்வீகமாகக்கொண்ட மக்கள் தமது காணிகளை விடுவித்துக்கொடுக்குமாறு மன்றாடடத்துடன் விடுத்த கோரிக்கையைஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சரான மீள்குடியேற்ற அமைச்சர்டி.எம் சுவாமிநாதன் பொருட்படுத்தாது அங்கிருந்து வெளியேறியுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவுகடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வொன்று மே மாதம் 26 ஆம்திகதியான இன்றைய தினம் இட…
-
- 4 replies
- 706 views
-
-
இலங்கையின் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படத் தயார் - சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் சென் ஸோ By VISHNU 16 JAN, 2023 | 08:54 PM (ஆர்.ராம்) சீனா, இலங்கையின் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படத்தயாராக இருப்பதாகவும் வளரும் நாடுகள் சீனாவுடன் ஒத்துழைப்பதன் மூலம் பாரிய நன்மைகளை அடையலாம் எனவும் சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சரும் சீனக் கம்னியூஸக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சென் ஸோ தெரிவித்தார். சீன கம்னியூஸக் கட்சியின் 20ஆவது மாநாடு தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று இன்று (16) திங்கட்கிழமை ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்…
-
- 0 replies
- 563 views
- 1 follower
-
-
மன்னார் முருங்கனில் கிளேமோர்த் தாக்குதல்:- 2 படையினர் பலி. மன்னார் முருங்கனில் இன்று காலை வீதிச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிறிலங்காப் படையினரை இலக்குவைத்து கிளேமோர்த் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இக் கிளேமோர்த் தாக்குதலில் இரண்டு சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் ஒரு படைச்சிப்பாய் படுகாயமடைந்துள்ளதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களின் பின்னர் குறிப்பிட்ட பிரதேசங்களை சுற்றிவளைத்த படையினர் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. www.sankathi.com
-
- 0 replies
- 726 views
-
-
பெண் போராளிகள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதில் சமூகமெனும் பெரும் கற்சுவரை எதிர் கொள்கிறார்கள்:- 25 பெப்ரவரி 2011 முன்னாள் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதிலும், மணம் முடிப்பதிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களிலும் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டு வருவதாக உதவிப் பணியாளர்களும் செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர். முன்னாள் பெண் குழந்தைப் போராளிகள் சமூகத்தால் இன்னமும் சரியாக உள்வாங்கப்படாத நிலைமையே காணப்படுகிறது என்று தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் மறை மாவட்ட சிரேஷ்ட அலுவலர் ஒருவர் தெரிவித்தார். அவர்கள் மீள தம்மை சமூகத்துடன் ஒருங்கிணைத்துக் கொள்வதில் சமூக கலாசாரத் தடைகள் எவ்வளவு பெரிய தடைகளாக அவர்கள் முன் உள்ளன என…
-
- 0 replies
- 450 views
-