Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எம்.எஸ்.எம்.நூர்தீன், ஜவ்பர்கான் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியரின் வீட்டின் மீது கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காத்தான்குடி 4ஆம் குறிச்சி மின்சார நிலைய ஒழுங்கையிலுள்ள வீடே இவ்வாறு தாக்கதலுக்குள்ளாகியுள்ளது. அளுத்கம சம்பவத்தை கண்டித்து காத்தான்குடியில் வியாழக்கிழமை(19) அனுஷ்டிக்கப்படவிருந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படமாட்டாது எனவும் வர்த்தகர்கள் வழமைப்போன்று கடைகளை திறக்கலாமென இவர், தனது தலைமையிலான வர்த்தக அமைப்பின் அங்கத்தவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் வழங்கியுள்ளார். குறித்த தகவல் அனுப்பபட்டு சில நிமிடங்களிலேயே இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்…

    • 1 reply
    • 539 views
  2. ஐ.நா. குழுவுக்கு அனுமதி இல்லை news இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவ லகத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் தீர்மான வரைவு நேற்று நாடாளுமன்றில் 134 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக் கப்பட்டிருந்த குறித்த பிரேரணை மீதான விவாதம் நேற்று முன்தினமும், நேற்றும் நாடாளுமன்றில் நடைபெற்றது. அதன்பின்னர் நேற்று பிற்பகல் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பிரேரணைக்கு ஆதரவாகவாக்க ளித்திருந…

  3. முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து எதிர்வரும் 20ம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை யாழ்.நகரில் நடத்தவுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும்; தெரிவிக்கையில், முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி யாழ்.நகரில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம் காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பினை வழங்குமாறு யாழ்.மாவட்டத்திலுள்ள முஸ்லிம் தரப்பு…

    • 4 replies
    • 583 views
  4. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பேருவளைக்கு விஜயத்தை மேற்கொண்டு அங்கு தற்போதைய நிலைமைகளை அறிந்து கொண்டார். பேருவளை பிரதேசத்தின் சமயத் தலைவர்களையும் அவர் சந்தித்து உரையாடியுள்ளார். அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்த அவர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வழமை நிலைமையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதேவேளை, களுத்துறை மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி அளுத்கமை, பேருவளை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாம் பாரபட்சமற்ற விசாரணையை நடத்தப் போவதாகத் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இராணுவத் தளபதி லெப்டினன்ட ஜெனரல் தயா ரத்னாயக்க, பொலிஸ்மா அதிபர் என்.கே இலங்ககோன் ஆகியோர…

  5. தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணை, ஐ.நாசபையின் தலைமையில் பொது வாக்கெடுப்பு என தமிழ்நாடு அரசு முன்வைத்த கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிக்கான ஒன்று கூடலாக தமிழக மாணவர்கள் இன்று கவன்யீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சென்னையில் தலைமை தபால் நிலையம் பாரிமுனை, முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர். காலை,11.30 மணியளவில் திரண்ட மாணவர்கள். இந்திய அரசே! ஈழத்தமிழர்கள் மீது நடக்கும் திட்டமிட்ட இன அழிப்பு மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரியும் இலங்கை அரசு மீது ஐ.நா முன்னிலையில் சர்வதேச சுயாதீன விசாரணை உடனே நடத்து. ஈழத்தமிழர்களின் நிலத்தை இலங்கை அரசு ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்து! ஐ.நா முன்னிலையில் பொது வாக்கெடுப்பை நடத…

  6. BTF condemns recent attacks on Muslims in Sri Lanka admin | Tuesday, June 17th, 2014 | Comments Off British Tamils Forum joins the international community in condemning the violence that is currently being targeted at the Muslim community in Sri Lanka. A Sri Lankan state supported organisation, the Bodu Bala Sena, which has very close links with the Defence Secretary Mr Gotabaya Rajapakse, is directly involved in the violence. On 15 June, the General Secretary of this organisation delivered an openly racist speech citing Muslims as a threat to the Sri Lanka’s Sinhala identity. Consequently, Sinhala thugs have attacked Muslim owned shops and houses in southern tow…

  7. யாழில் எத வெட்டுவது எதை அனுமதிப்பது என்னும் விவஸ்தை இன்மையால் இந்த வீடியோ பற்றிய விபரங்கள் தமிழாக்கம் செய்யவில்லை.

  8. சகல இலங்கையர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு பான் கீ மூன் கோரிக்கை:- 17 ஜூன் 2014 சகல இலங்கையர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் தென் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் சகல பிரஜைகளினதும் பாதுகாப்பை உறுதி செய்தவற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவர் மீளவும் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுபான்மை மதங்கள் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள் மற்றும் தாக்குதல்களை தடுத்து நிறுத…

    • 7 replies
    • 572 views
  9. -வடமலை ராஜ்குமார் திருகோணமலை, சல்லிக் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சல்லியம்பதி ஸ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது திருகோணமலையின் பெரும்பாலான ஆலயங்களிலிருந்து கும்பம், கரகம், காவடி, பாற்செம்பு ஆகியவற்றை பக்தர்கள் எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். tamilmirror

    • 1 reply
    • 438 views
  10. சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்கான விருதோடு கலவர பூமிக்கு திரும்பினார் இலங்கை ஜனாதிபதி- 18 ஜூன் 2014 பொலிவியா நாடு வழங்கிய சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்காக வழங்கிய ஒத்துழைப்புக்களை வரவேற்கும் வகையிலான அதியுயர் விருதை பெற்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலவர பூமியாக காணப்படும் தனது நாட்டிற்குத் திரும்பினார். பொலிவியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நேற்று நாடு திரும்பியுள்ளனர். நேற்றிரவு 10.30 மணியளவில் விசேட விமானமொன்றின் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்காக வழங்கிய ஒத்துழைப்புக்களை வரவேற்கும் வகையில் பொலிவியா அரசாங்கத்தினால்இ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு விசேட அதி…

    • 1 reply
    • 439 views
  11. தெற்கு இலங்கையில் அளுத்கமையில் நேற்று முதல் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பிக்குகள் மற்றும் சிங்கள காட்டுமிராண்டிகளின் தாக்குதல்களில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அஸ்லம் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தற்சமயம் தர்ஹாநகர் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அஸ்லம் எம்பியும் சென்றுள்ளார். இந்நிலையில் களநிலவரம் பற்றி எம்முடன் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், 25இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களுக்கு சொந்தமா…

    • 27 replies
    • 3.3k views
  12. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மோடிக்கு கடிதம். வடமாகாண தமிழ் மீனவர்கள், இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடியினால் பாதிக்கப்படுவது தொடர்பிலும், மேலும் 10 ஆயிரம் வீடுகள் வடபகுதியில் அமைத்துத் தரும்படி கோரியும் இந்திய பிரதமர் தாமோதரதாஸ் நரேந்திர மோடிக்கு முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த் கடிதம் ஒன்றை புதன்கிழமை (18) அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இலங்கையின் வடமாகாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் செலயாளர் நாயகம் மற்றும் உறுப்பினர்கள் என்ற ரீதியில் முதற்கண் எமது வாழ்த்துக்களை இந்திய நாட்டின் பிரதமராகிய தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். வரலாற்று ரீதி…

  13. தர்ஹா நகரில் 10 கடைகள் தீ வைத்து எறிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகன தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பினரால் தர்ஹாநகரில் இன்று மாலை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினையடுத்தே மேற்படி பதற்ற நிலை அங்கு உருவாகியுள்ளது. இதேவேளை அளுத்கம மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. அளுதகம பொலிஸ் பிரிவுக்கு மாலை 6.45 மணி முதலும் பேருவளைக்கு 7.45 மணிக்கு பின்னரும் இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கானது மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன, ஊரடங்கு காலப்பகுதியில் பாதைகளில் பயணிப்பது, ஒன்று கூடுவது நடமாடுவது என…

    • 59 replies
    • 4.8k views
  14. வவுனியா ஓமந்தை சோதனைச்சாவடியில் கெடுபிடி அதிகரித்துள்ளமையால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரியவருகின்றது. வடக்கிற்கும் தெற்கிற்குமான சோதனைச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ள ஓமந்தை சோதனைச்சாவடி பல ஆண்டுகாலமாக இயங்கி வரும் நிலையில், யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் எவ்வித மாறுபாடுகளும் இன்றி இயங்கி வருகின்றது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இச் சோதனைச்சாவடியில் சோதனை நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் வாகனங்கள் மாத்திரம் பதிவு செய்து செல்ல வேண்டும் எனவும் பஸ்ஸில் செல்லும் பயணிகள் சோதனையிடப்படமாட்டார்கள் எனவும் ஊடகவியலாளர் மாநாடு நடத்தி அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஒரு சில மாதத்தினுள்ளேயே மீண்டும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டு பஸ்களில் …

    • 0 replies
    • 563 views
  15. இந்தியாவிலிருந்து 175 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடத்த முற்பட்டதாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைகள் மூவரை கற்பிட்டி கடற்பரப்புக்கு அப்பால் வைத்து நேற்றிரவு இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர்.(படங்கள்: ஹிரான் பிரியங்கர ஜயசிங்க) tamilmirror

    • 0 replies
    • 364 views
  16. இம்மாதம் அதாவது ஜூன் மாதம் 21 ஆம் திகதி வரை 2014 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு திருத்தப்படிவத்தைப் பெற்றுக் கொள்ளாத குடியிருப்பாளர்கள் தமது பகுதி தேர்தல் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு குறித்த படிவத்தைப் பெற்று உரியபடி பூர்த்தி செய்து கையளிக்க வேண்டும். தவறின் 2014 ஆம் ஆண்டுக்கான புதிதாகத் தயாரிக்கப்படும் வாக்காளர் இடாப்பில் பெயர்கள் இடம்பெறமாட்டாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வோராண்டும் ஜூன் மாதம் 1 ஆம் திகதியன்று 18 வயதைப் பூர்த்தி செய்துள்ள இலங்கைப் பிரஜையொருவருக்கு தான் வசிக்கும் குடியிருப்பின் முகவரியில் தன்னை ஒரு வாக்காளராகப் பதிவு செய்து கொள்வதற்கு சட்டரீதியான உரிமை தேர்தல்கள் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதை எவராலும் மறுக்கவோ தடுக்கவோ முட…

    • 0 replies
    • 286 views
  17. பயங்­க­ர­வா­தத்தை தோல்­வி­யுறச் செய்­ததன் பின்னர் இலங்கை அடைந்­துள்ள முன்­னேற்றம் தொடர்­பாக விப­ரித்த ஜனா­தி­பதி ராஜ­பக்ஷ அந்த முன்­னேற்­றத்தை பொரு ட்­ப­டுத்­தாமல் மனித உரி­மை­களை ஆயு­த­மாகக் கொண்டு சில நாடுகள் தாக்கம் ஏற்­ப­டுத்­து­வ­தாக குறிப்­பிட்டார். ஜி - 77 குழுவின் பொன்­விழா ஞாப­கார்த்த அரச மற்றும் அர­சாங்க தலை­வர்­களின் மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக பொலி­வியா சென்­றுள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நேற்று முன்­தினம் பொலி­வியா ஜனா­தி­பதி மாளி­கையில் அந்­நாட்டு ஜனா­தி­பதி ஈவோ மொரலெஸ் ஐமாவை சந்­தித்து இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். இந்த சந்­திப்­பின்­ போது இலங்­கைக்கு ஒத்­து­ழைப்பு நல்க தான் தயா­ரா…

    • 0 replies
    • 521 views
  18. வட­மா­காண சபை திறம்­பட செயற்­ப­டு­வதை தடுப்­ப­தையே நோக்­க­மாகக் கொண்டு மத்­திய அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது. வடக்கு மாகாண சபைக்கு வெளி­நாட்டு உத­விகள் கிடைக்­க­வி­டாது தடுத்து நாங்கள் செய­லற்­ற­வர்கள் என்­பதை உல­கிற்கு காட்­டு­வ­தையே மத்­திய அர­சாங்கம் தொடர்ந்து செய்து வரு­கின்­றது என வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். முல்­லைத்­தீவு மாவட்ட மேற்குப் பகு­தி­க­ளான துணுக்காய், மல்­லாவி பகு­திக்கு நேற்று விஜயம் செய்த வட­மா­காண முத­ல­மைச்சர் துணுக்காய் பிர­தேச சபை மண்­ட­பத்தில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில், வட­மா­காண சபைக்கு பல நாடு…

    • 0 replies
    • 352 views
  19. -எஸ்.றொசேரியன் லெம்பேட், நவரத்தினம் கபில்நாத் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பான விசேட கருத்தமர்வு செவ்வாய்க்கிழமை (17) காலை மன்னார் ஞானோதயத்தில் இடம்பெற்றது. சட்ட மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இவ்விசேட கருத்தமர்வு இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் அந்தோணி சகாயம் தலைமை தாங்கினார். சட்ட மற்றும் நம்பிக்கை நிதியத்தின் சார்பாக சட்டத்தரணி எஸ்.ஐங்கரன், ஆலோசனைகள் வழங்கினார். அத்துடன், வடமாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்துகொண்டு, மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடிய…

    • 0 replies
    • 319 views
  20. -எம்.றொசாந்த் தென்னிலங்கை கட்டுமான நிறுவனமொன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பன்றிவெட்டி பிரதேசத்தில் மேற்கொண்டு வரும் கருங்கல் அகழ்வு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலதிகமாக காணப்படுமாயின் குறித்த அகழ்வினை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பணிப்புரை விடுத்தார். மேற்படி பகுதியில் அனுமதிகப்பட்டதற்கு மேலதிகமாக கருங்கல் அகழப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலினை தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சுற்றுச் சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (17) நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு பணிப்புரை விடுத்தார். குறித்த பகுதியில் 12 மீற்றர் ஆழத்திற்கு மட்டுமே கல் அகழ்வதற்க…

  21. சிங்கள காடையர்களால் அப்பாவி தமிழ் தொழிலாளி படு கொலை. தொடர்ந்து இடம் பெற்று வரும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒரு அப்பாவி தமிழ் மகன் படு கொலை செய்யப்பட்டு உள்ளார். மத்துகம பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமான கோழி, கால்நடை பண்ணை ஒன்றை குறி வைத்து சிங்கள குண்டர் படை ஒன்று கை வரிசை காட்டி உள்ளது. கடும் போதையில் இந்த இனத்துவேசிகள் இரவு நேரத்தில் பண்ணையை தாக்கி, சொத்துக்களை சூறையாடும் நோக்கில் உள்ளே புகுந்துள்ளார்கள். அங்கே காவல் கடமையில் ஒரு தமிழரும், ஒரு சிங்கள இனத்தவரும் இருந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் கடமையை செய்து பண்ணையை பாதுகாக்க முற்பட்ட போது மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உள்ளார்கள். இந்த பாதுகாவலரில் ஒருவர் சிங்களவர் என அறிந்து…

  22. ஏ.எச்.ஏ. ஹுஸைன் கிழக்கு மாகாண சபை அமர்வின் போது முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு வந்த அவசர கவன ஈர்ப்பு பிரேரணை விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படாததை அடுத்து ஏற்பட்ட அமளிதுமளியினால் சபையமர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அளுத்கம, பேருவளை, தர்ஹா மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சரான நஸீர் அஹமட் உள்ளிட்ட உறுப்பினர்கள் அவசர கவன ஈர்ப்பு பிரேரணை ஒன்றைக் கிழக்கு மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தனர். அந்த அவசரப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துகொள்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. இதனையடுத்தே முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் செங்கோலைக் கைப்பற்றி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்…

    • 6 replies
    • 673 views
  23. அளுத்கம வன்முறையில் மூவர் கொல்லப்பட்டனர், பிக்குகள் பணயக் கைதிகளாக சில முஸ்லிம்களை பிடித்து வைத்திருக்கின்றனர் போன்ற செய்திகள் பொய்யானவை எனத் தெரிவித்திருக்கின்றார் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன். அளுத்கம வன்முறை தொடர்பாக பொலிஸ்மா அதிபர் நேற்று ஆங்கில இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த தகவல்களின் போதே இவ்வாறு தெரிவித்திருக்கிறார். களுத்துறை மாவட்டம் அளுத்கம பிரதேசத்தில் கடும்போக்கு சிங்கள - பெளத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வெரும் வன்முறையாக வெடித்திருந்தது. இதையடுத்து இப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் மூவர் கொல்லப்பட்டனர்; 80 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். அத்துடன் இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாகவு…

    • 4 replies
    • 930 views
  24. கனடாவில் சிறீலங்கா அரசாங்கத்தின் பண முதலீட்டில் நடைபெற்ற கனடிய தமிழ் இளையோருக்கான "ஆட்டம்" நிகழ்வு!! சிறீலங்கா அரசாங்கம் பாரிய பண முதலீட்டின் மூலம் கனடிய மண்ணில் தமிழீழ விடுதலை சாந்த நிகழ்வுகளை குழப்பும் முகமாகவும் மற்றும் தமிழ் இளையோரின் எழுச்சியை சிதைக்கும் முகமாகவும் சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களைக் கருவறுக்கின்ற செயற்பாட்டை தீவிரப்படுத்தியிருக்கின்றது - இதன் ஓர் அங்கமாகவே சில தமிழர்கள் சிறீலங்கா சென்று பின்னர் கனடிய மண்ணில் சிறீலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு செயல்பட்டு வருகின்றனர். கடந்த 2009 ஆண்டு நடந்த போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட பின்னர் சிறீலங்கா அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களின் தமிழீழ விடுதலை சாந்த செயற்பாடு…

  25. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது 14 ஜூன் 2014 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஐந்து விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களுக்காக இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு 10 முதல் 16 ஆண்டு வரையிலான காலப்பகுதி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள், பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை அச்சு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.