ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
கிழக்கில் என்ன நடக்கப் போகின்றது? [29 - July - 2007] [Font Size - A - A - A] -சங்கரன் சிவலிங்கம்- ஜனாதிபதி மகிந்தவின் தொப்பிகல திருவிழா ஒருவாறு முடிந்துவிட்டது.இராணுவத் தளபதிகள், அரசியல்வாதிகள் மாறியுள்ள நிலையில் இவ்விழவின் மூலம் பொலிஸ் அலுவலர்களும் அரசியல்வாதிகளாக மாறியிருந்தனர். கொழும்பு வடக்கிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் பொலிஸ் அலுவலர்களே வெற்றிக் கொடியேற்றி பாற்சோறு வழங்கினர். பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்கனவே அச்சடித்து வழங்கப்பட்ட அறிக்கையையும் வாசித்தனர். கிழக்கில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளே அவ்வறிக்கையில் பட்டியலிட்டுக் காட்டப்பட்டன. படையினர் மேற்கொண்ட கூட்டுக்கொலைகள் பற்றி மூச்சே விடப்படவில்லை. அதிபர்களும் ஆசிரியர்களும் தாங்கள் எதுவும் உரையாற…
-
- 1 reply
- 1.4k views
-
-
கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டம் January 26, 2019 முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் இன்றைய தினம் தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த காணியில் அமைந்து இராணுவ முகாமிற்கு முன்னால் மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இம் மாதத்தின் ஆரம்பத்தில் இம்மக்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட போது இம் மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த காணிகளை விடுவிப்பதுதொடர்பில் உரிய பதிலைத் தருவதாக அரச அதிகாரிகள் தெரிவித்திருந்த போதும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டம் இடம்…
-
- 0 replies
- 184 views
-
-
பஸ்ஸுடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து பஸ் வண்டியொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று அதிகாலை 5.00 மணியளவில் ஒலுவில் - பாலமுனை எல்லைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் வண்டியும் தம்பிலுவிலிருந்து மாளிகைக்காடு பிரதேசத்தினை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி விபத்தில் தம்பிலுவில், இர்ணடாம் பிரிவைச் சேர்ந்த 37 வயதுடைய இராஜலிங்கம் கவீந்திரன் என்பரே …
-
- 0 replies
- 303 views
-
-
அமெரிக்க பங்குச் சந்தை நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்திற்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மென்ஹட்டன் நீதிமன்றில் ராஜ் ராஜரடனத்திற்கு எதிரான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன. 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக அமெரிக்க மாவட்ட நீதவான் ரிச்சர்ட் ஹொல்வெல் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப் பாரிய பங்குச் சந்தை நிதி மோசடி இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தரப்பினர் எதிர்பார்த்தனை விடவும் அரை மடங்கிற்கும் குறைவானளவு தண்டனையே விதிக்கப்பட்டுள்ளது. ராஜ் ராஜரட்னத்திற்கு சுமார் 25 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டதுடன், அவ்வாறான தண்டன…
-
- 0 replies
- 630 views
-
-
13 பொது மக்கள் படுகொலை; சாட்சிக்கு நீதிமன்றம் உத்தரவாதம் கிளிநொச்சியில் இருந்து வந்து இங்கு சாட்சியம் அளிப்பதற்கு அல்லைப்பிட்டி, வேலணை, புளியங்கூடல் ஆகிய பகுதிகளில் கடந்த வருடம் மே மாதம் 13ஆம் திகதி பதின்மூன்று பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சிக்கு யாழ். நீதிமன்றம் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கி உள்ளது. கடந்த வருடம் மே 13ஆம் திகதியன்று அல்லைப்பிட்டி, வேலணை, புளியங்கூடல் ஆகிய இடங்களைச் சேர்ந்த பதின் மூன்று பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கின் முக்கிய சாட்சியான பெண்மணி ஒருவர் உயிர் அச்சத்தின் பேரில் கிளிநொச்சி சென்று வசித்து வருகிறார். இந்த வழக்கு விசாரணைகளை ஊர்காவற்றுறை மேலதிக நீதிவான் இ.த.விக்னராஜா முன்னிலையில் நேற்று எடுக்கப்பட்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
யுத்தத்திற்கு பின்னரான யாழ். குடாநாட்டின் நிலைமைகளை நேரில் வந்து அறிந்துகொள்வதற்காக ஜக்கிய அமெரிக்க நாடாளுமன்றக்குழுவினர் யாழ். குடாநாட்டிற்கான விஜயமொன்றை இன்று புதன்கிழமை மேற்கொண்டனர். கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் யாழ். சென்ற ஜக்கிய அமெரிக்க நாடாளுமன்றக்குழுவினரை வரவேற்ற யாழ். படைத் தலைமையக அதிகாரிகள் யாழ். கோட்டை மற்றும் யாழ். மாவட்ட செயலகம், யாழ். நகரப்பகுதி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். ஜக்கிய அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினரான கெட்சலர், வன்சான்சலர், ஜக்குயின்ரன்ஸ் ஆகியோரடங்கிய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தை நேரில் வந்து பார்வையிட்டனர். இதேவேளை, யாழ். குடாநாட்டின் மீள்குடியேற்றம், அபிவிருத்திப்பணிகள், மக்களின் வாழ்வாதார நிலைம…
-
- 0 replies
- 830 views
-
-
வீட்டு மின்பாவனையின் ஆரம்ப கட்டணம் 33 சதவீதத்தால் குறைப்பு - முழுமையான விபரம் இதோ! 04 MAR, 2024 | 07:53 PM (இராஜதுரை ஹஷான்) மின்கட்டணத்தை இன்று திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனை மற்றும் செலவுகளுக்கு அமைய 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்சாரத்துறை சட்டத்தின் 30 ஆவது பிரிவு மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மானியங்களுக்கு அமைவாக கண்காணிப்பு மற்றும் மீள்பரிசீலனைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி மாதம் நூற்றுக்கு 3…
-
- 3 replies
- 406 views
- 1 follower
-
-
மசகு எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் திட்டம் அடுத்த ஆண்டு மன்னாரில் ஆரம்பம் வீரகேசரி நாளேடு மன்னாரில் மசகு எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் செயற்றிட்டம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும். 2010ஆம் ஆண்டளவில் நமது நாட்டிலேயே மசகு எண்ணெயை பெற்றுக்கொள்ளமுடியும் என்று பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: மன்னார் கடற்பரப்பில் மசகு எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் செயற்றிட்டம் அடுத்த ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேள்விப்பத்திரங்கள் கோருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 1.2k views
-
-
Man dies at Sydney immigration centre A Sri Lankan has man died at a Sydney immigration centre. The Department of Immigration said the man was discovered in distress at his accommodation in the Sydney Immigration Residential Housing complex early on Wednesday. An ambulance was called and CPR done but the man died shortly after midnight. A department spokesman said police would investigate the circumstances of the man's death. He expected it would also be subject to a coronial inquest. The dead man's family are overseas and the department is seeking to inform them of the event. Refugee Action Coalition spokesman Ian Rintoul said the decea…
-
- 30 replies
- 2.2k views
-
-
கிளிநொச்சியில் காவற்துறையின் ஆசீர்வாதத்துடன் அரங்கேறும் அடாவடிகள் [ சனிக்கிழமை, 13 யூன் 2015, 05:01.03 AM GMT ] கிளிநொச்சியில் காவல்துறையினரின் அனுசரணையுடன் பல்வேறு சட்டவிரோத சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. கடந்த 5ம் திகதி மாலை 4 மணியளவில் கிளிநொச்சி விநாயகபுரம் கிராமத்தில் இல.99 விநாயகபுரம் கிளிநொச்சி என்ற முகவரியை சேர்ந்த சுதா குகானந்தினி என்ற கணவனை இழந்த பெண்ணின் வீட்டினுள் 251-2304 என்ற இலக்க கையேஸ் வாகனத்தில் வந்த ரொசான், கல்விளான், விஜயன், ரஞ்சித், அன்றூ என்பவர்களும் இன்னும் சிலரும் புகுந்து கதவுகளை உடைத்து அச்சுறுத்தி உள்ளனர். அத்துடன் அங்கு நின்ற மேற்படி பெண்ணின் பெறாமகனுடைய NP BAQ 5298 என்ற இலக்கமுடைய மோட்டார் சைக்கிளை கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர…
-
- 0 replies
- 230 views
-
-
நாங்கள் அமைதியைக் கடைப்பிடித்தால் மாதாந்தம் சிறிலங்காப் படையினர் பலர் கொல்லப்படுவது எப்படி?: இளந்திரையன் போர்க்களத்தில் அமைதியைக் கடைப்பிடித்தால் மாதாந்தம் அரச படையினர் பலர் கொல்லப்படுவது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கேள்வி எழுப்பியுள்ளார். சுவிசிலிருந்து வாரமிருமுறை வெளிவரும் "நிலவரம்" (07.09.07) ஏட்டின் 17 ஆவது இதழுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் அளித்துள்ள நேர்காணல்: http://www.eelampage.com/?cn=33340
-
- 2 replies
- 1.4k views
-
-
திருக்கேதீஸ்வர சம்பவம் – சர்வமத பேரவையில் இருந்து மன்னார் மாவட்ட இந்துக் குருமார்கள் வெளியேற்றம் March 4, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு அமைக்கும் பணி இடம் பெற்ற போது இரு மதத்தினருக்கிடையில் இடம் பெற்ற முரண்பாடுகளைத்தொடாந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மன்னார் காவல்துறையினர்; வழக்குத்தாக்கல் செய்யவுள்ளனர். பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த குறித்த வளைவு துருப்பிடித்திருந்த நிலையில் அதனை மாற்றி புதிய வளைவு அமைக்கும் பணியில் சில …
-
- 3 replies
- 816 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஜே.வி.பி. முடிவு செய்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 649 views
-
-
வவுனியா மாவட்டச் செயலரை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளாதென தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று தெரிவித்துள்ளனர். கூட்டமைப்புப் பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியபோது வவுனியா மாவட்டச் செயலருக்கு எதிராக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் போர்க் கொடி தூக்கியுள்ள விவகாரம் குறித்து பிரதமருக்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் எடுத்து விளக்கியதாக கூட்டமைப்பின் சாதனையாக அது தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக கடிதம் மூலம் பிரதமருக்கு நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தியிருந்தனர். இதனடிப்படையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ப…
-
- 1 reply
- 327 views
-
-
05 APR, 2024 | 04:12 PM அரசாங்க மருத்துவமனையில் கண்புரை அறுவைசிசிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருந்து காரணமாக கண்பார்வையை இழந்த நோயாளியொருவர் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடமிருந்து 100 மில்லியன் நஷ்டஈட்டை கோரியுள்ளார். கந்தபொலவை சேர்ந்த மகரி ராஜரட்ணம் என்ற நபர் சட்டநிறுவனம் ஊடாக நஷ்டஈட்டை கோரியுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தேசிய மருந்துகட்டுப்பாட்டு அதிகார சபையின் அதிகாரிகள் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக நஸ்டஈட்டை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ராஜரட்ணம் இழப்பீடு வழங்கப்படாவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எச…
-
- 0 replies
- 122 views
-
-
சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அமெரிக்காவுக்கு ஒரே வானூர்தியில் பயணம் செய்யவிருந்ததாகவும் ஆனால் பின்னர் சந்திரிகா தனது பயணத்திட்டத்தை மாற்றிக்கொண்டதாகவும் தெரியவருகிறது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 575 views
-
-
சமாதான முயற்சிகளின் பிரசன்னம் அற்ற புறநிலையில் நோர்வே வெளியேறியிருக்க வேண்டும்! - மதிப்பீட்டுக் குழுத் தலைவர் Gunnar Sørbø 2006ஆம் ஆண்டு மீண்டும் போர் வெடித்த காலப் பகுதியில் இலங்கைத் தீவின் சமாதான முயற்சிகளில் இருந்து நோர்வே முற்றாக வெளியேறி இருக்க வேண்டும் என நோர்வேயின் சமாதான முயற்சி தொடர்பான மதிப்பீட்டுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய ஆய்வாளர் Gunnar Sorbo தெரிவித்துள்ளார். சீனாவின் ஆசீர்வாதத்துடன் மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆசிர்வாதத்துடனும் சிறிலங்கா அரசாங்கம் இராணுவத் தீர்விற்கான முனைப்புடன் நின்ற போது, சமாதான முயற்சிகளில் நோர்வேயை ஈடுபடுத்தும் தோரணை அவர்களுக்கு இலகுவாக இருந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங…
-
- 2 replies
- 1.4k views
-
-
யுத்தத்தின் பின்னரே இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது: பொன்சேகா யுத்தத்தின் பின்னரே இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் இடம்பெற்றபோது இராணுவத்தினர் சட்டவிரோத குற்றங்களிலோ, மனித உரிமை மீறல் செயற்பாடுகளிலோ ஈடுபடவில்லை. யுத்த காலத்தில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இராணுவத் தலைமை மற்றும் அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை. ஆனால் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில், அதாவது யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சில சட்டவிரோதச் செயல்கள் இராணுவத்தால் மேற்க…
-
- 1 reply
- 866 views
-
-
யாழ். வடமராட்சி பருத்தித்துறை திக்கம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர்கள் வாக்கு ரணிலுக்கே; ஐ.தே.க. உறுதி! ஆதவன். எதிர்வரும் அரசதலாவைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எந்தப்பக்கத்தில் நின்று களமிறங்கினாலும், எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவருக்கே வடக்கு- கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்: சஜித்பிரேமதாஸவையோ அல்லது அநுரகுமார திஸாநாயக்க வையோ நம்புவதற்குத் தமிழ் மக்கள் தயாரில்லை. கடந்த அரசதலாவைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்கவே சஜித் பிரேமதாஸவுக்குத் தமிழ்மக்கள் ஆதரவு வழங்கினார்கள். எனினும், அவரால் வெற்றிபெற முடியவில்லை…
-
- 0 replies
- 253 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசார குழுத் தலைவராக மகிந்தராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள் ளார். அந்த கூட்டணியின் சிரேஷ்ட்ட உறுப்பினர்கள் இன்று ஒன்று கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த கூட்டம் இடம்பெற்ற போது மகிந்த ராஜபக்ஷவே அந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி இருந்தார். இதில் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருக்கவில்லை. மகிந்தவுக்கு வேட்புரிமை வழங்கப்படும் போது, அவர் பிரசார குழுவின் தலைவராக நியமிக்கப்பட மாட்டார் என்று மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.http://www.pathivu.com/news/41594/57//d,article_full.aspx
-
- 1 reply
- 380 views
-
-
கடந்த வாரம் 24 பேரை குடாநாட்டில் காணவில்லை யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் 24 பேர் காணாமல்போயுள்ளதாக யாழ். மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. கடந்த 5ஆம் திகதி வடமராட்சி கரணவாய் தெற்குப் பதியைச்சேர்ந்த தியாகராஜா கணேஸ் என்பவரை காணவில்லையென்று மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை, உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக நேற்று 3 பேர் யாழ். “மனித உரிமை ஆணைக்குழு அலுவலத்தில் சரணடைந்துள்ளனர். கடந்த வாரம் மட்டும் 75 பேர் இவ்வாறு சரணடைந்துள்ளனர். -வீரகேசரி
-
- 0 replies
- 663 views
-
-
தமிழ்நாடு காஞ்சிபுரத்தின் செங்கொடியூரில் மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வு காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் எழுச்சியோடு இடம்பெற்றது. முன்னர் காஞ்சிபுரத்தின் மங்கல் பாடி எனும் கிராமமே தற்போது செங்கொடியூர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கு வீரமங்கை செங்கொடியின் திருவுருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. . நேற்று முந்தினம் (27-11-2011) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், மறுமலர்ச்ச்இ திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. வைகோ, தமிழ் உனர்வாளரும், தமிழீழ ஆதரவாளருமான திரு. கொளத்தூர் மணி, தோழர்.தியாகு, மற்றும் அற்புதம் அம்மாள், திருச்சி செளந்தராசன், சி.மகேந்திரன், வேல்முருகன், பேராசிரியர் சரசுவதி, பார்வேந்தன்…
-
- 0 replies
- 724 views
-
-
20 ஆசனங்களைப் பெறுவதன் மூலம் தீர்வுக்கான பேரம்பேசும் சக்தியை பெறமுடியும் – இரா.சம்பந்தன்JUL 20, 2015 | 0:03by திருக்கோணமலைச் செய்தியாளர்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால், ஏனைய இனத்தவர்களும், ஆட்சியாளர்களும் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை, சேருவில தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சியின் தொகுதிக் கிளை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் தமிழரசுக் கட்சி…
-
- 18 replies
- 2.5k views
-
-
கடந்த வாரம் ஏமாற்றித் தன்னிடம் தங்கச் சங்கிலியை அபகரித்த நபரை நேற்று காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்த மூதாட்டி, அம்மனின் கிருபையால் தான் திருடனை பிடிக்க முடிந்தது என கூறினார். கடந்த பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்துக்காக அச்சுவேலியிலிருந்து மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் கோவிலுக்கு மூதாட்டி ஒருவர் தனது மகனுடன் சென்றுள்ளார். அங்கு ஆலய வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருண்ந்த வேளை அவரை உடனடியாக அறிவித்தல் பந்தலுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் அங்கு சென்றபோது, அங்கு நின்ற ஒருவர் உங்களின் மகன் விபத்தில் சிக்கி காயமடைந்து சாவகச்சேரி மருத்துவமனைக்குகொண்ட…
-
- 0 replies
- 392 views
-