Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சென்னை: பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து சென்னையில் இன்று மாலை பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கியது. முதல்வர் கருணாநிதி மனித சங்கிலிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதைக் கண்டித்து இன்று மாலை 3 மணியளவில் சென்னையில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை நகரில் திமுகவினரும், பல்வேறு கூட்டணிக் கட்சிகள், தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குவிந்தனர். மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கவிருந்த நிலையில், வானம் இருண்டு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும் கன மழையைப் பொருட்படு…

  2. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தானேதெரிவு செய்யப்பட்டுள்ளதாக கோத்தாபய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது. வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/69123

    • 32 replies
    • 5.8k views
  3. கொரோனாவிற்காக ஆலய வழிபாடுகளை தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது - சர்வதேச இந்து இளைஞர் பேரவை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அனைவரும் அறிவோம். அதனால் ஒவ்வொருவரும் தாங்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அதனால் அதற்கான முன்னேற்பாடுகளை நாம் செய்ய வேண்டிய தேவைகளும் உள்ளது. அதற்காக ஆலய வழிபாடுகளை தடுக்கவோ அவற்றை நிறுத்தவோ முடியாது. இது பற்றி சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ. ஜெ.மயூரக்குருக்கள் இன்று ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கின்ற போது, ஆலயங்கள் ஆகம வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் அவை காலாகாலமாக அவ்வாறே நடந்தும் வருகின்றது. நித்திய பூஜைகள், நைமித்திய பூஜைகள் என்பன தவறாது நடைபெற வேண்டுமென ஆகமங்கள் கூறுகின்றது. …

  4. காரணம் எதுவும் கூறாமல் காலம் சில களங்களை தன் போக்கில் உருவாக்கிவிட்டுப் போகிறது. இரு கட்டுரைகளோடு நிறைவுற்றிருக்க வேண்டிய இத்தொடர் முப்பது இதழ்கள் கடந்தும் வளர்கிறது. உள்ளபடியே, உண்மையான உணர்வாளர்களின் திருப்பள்ளியாகவும், பொய்மைகளை எதிர்கொள்ளும் போர்க்களமாகவும் தன்னையே தருவித்து நக்கீரன், தகர்ந்துபோன தமிழர் நம்பிக்கைகள் முற்றிலுமாய் பட்டுப் போகாமல் உயிர்நீர் ஊற்றி வருகிறதென்பதே உண்மை. முல்லைத்தீவு வெற்றிக்குப்பின் தறிகெட்டு ஆடிய சிங்களப் பேரினவாதத்தின் இரைச்சல் எதிர்பார்த்ததை விட வேகமாகவே சுரத்து குறைந்துவிட்டதாக கொழும் பிலிருந்து வரும் நம்பகமான செய்திகள் கூறுகின்றன. விடுதலைப்புலிகள் வெற்றிகளின் உச்சத்தில் நின்ற நாட்களில் கூட இல்லாத "தமிழ் இனப் பேரெழுச்சி' …

  5. இலண்டன் போல் மால் மாளிகையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகிழூர்தி ஈழத்தமிழர்களின் கூழ்முட்டை வீச்சுக்கு இலக்காகியுள்ளது. விருந்துண்ணும் நிமித்தம் இன்று மதியம் 12:00 மணியளவில் போல் மால் மாளிகையை நோக்கி விரைந்து கொண்டிருந்த மகிந்தரின் மகிழூர்தியை இலக்கு வைத்து ஈழத்தமிழ் போராட்டவாதிகளால் சரமாரியாக கூழ்முட்டைகள் வீசப்பட்டன. இதில் சில கூழ்முட்டைகள் மகிந்தர் பயணித்த மகிழூர்தி மீது வீழ்ந்து சிதறியுள்ளன.இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் மாளிகைக்குள் மகிந்தர் அழைத்துச் செல்லப்பட்டதாக செய்தியாளர் அறியத் தந்துள்ளார். எதிரிகளின் பொய் பரப்புரையை முறியடித்து. தேசியத் தலைவர் அவர்களால் கட்டமைக்கப்பட்ட அனைதுலக தமிழர் ஒரிங்கினைப்புக்குழு பெரும் திரளான …

    • 41 replies
    • 5.8k views
  6. சீமான் விவரிக்கும் தமிழீழத்தேசியத்தலைவருடனான சிலிர்ப்பான சந்திப்பு இயக்குநர் சீமான் அவர்கள் தமிழீழத்தில் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களை சந்தித்ததைப்பற்றி ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய பேட்டி. சீமான்-முள்வேலிக்குள் மூன்று லட்சம் தமிழர் படும் துயரம் பற்றிப் பேசும்போது கூடியிருப்போரைக் கலங்கி அழ வைக்கிறார். ‘பிரபாகரன் விரைவில் வருவார்!’ என்று அடித்துச் சொல்லி மிரளவைக்கிறார். என்ன பேசினாலும், எது கேட்டாலும் படபட பட்டாசு பொறிதான். மதுரை, தூத்துக்குடியில் முழங்கிவிட்டு திருப்பூர் ஆரவாரத்துக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறார். சீமானின் ‘நாம் தமிழர் இயக்கம்’ அடுத்த மே மாதம் மாநில மாநாட்டை அரங்கேற்றுவதற்கான முனைப்பில் இருக்கிறது. ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் அறிய செ…

  7. Heavy fighting erupts in Kugnchup-paranthan [TamilNet, Wednesday, 24 December 2008, 08:14 GMT] The Liberation Tigers of Tamileelam (LTTE) fighting formations were engaged in a heavy fighting with the Sri Lanka Army (SLA) in Kugnchup-paranthan, where the SLA suffered a debacle a few weeks ago, according to initial reports from the area. Heavy fighting was reported from 4:00 a.m. in the village, which the SLA claimed it had occupied on Tuesday.

  8. (தி.சோபிதன்) யாழ்ப்பாணம், அாியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் பழகிய 346 போ் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இவா்கள் எவரும் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை எனவே ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவாா்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளாா். இது குறித்து மேலும் அவா் கூறுகையில், அாியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் பழகிய 346 போ் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் தாவடியில் 163 குடும்பங்கள் மற்றும் காங்கேசன்துறை தனிமை…

  9. ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது - இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிக அதிகாரங்கள் கொண்ட தீர்வையே நாம் வலியுறுத்தி வருகின்றோம் எனக் கூறியுள்ளார். நாங்கள் பெரும்பாண்மை சிங்கள சகோதரருக்கு மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். ஒருபோதும் நாங்கள் எவ்விதமான தீங்கையும் …

    • 85 replies
    • 5.8k views
  10. இலங்கைத் தமிழருக்குத் தமிழ்நாட்டில் நிதி திரட்டுவதைப் பதிவர்கள் சிலர் இது என்ன பிச்சையா எனக் கேட்டுக் கோபமாகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்தனர். ஆனால் தற்போது நடிகர்கள் தாங்கள் அளித்துள்ள நிதியின் மூலம் தாங்கள் யார் என்பதைத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டிக் கொண்டு விட்டனர். 01-11-2008 அன்று அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தமிழ் திரையுலகை சார்ந்த நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர். மத்திய அரசின் நேரடி எச்சரிக்கையைத் தொடர்ந்து இங்கு வந்து இனி அப்பாவித் தமிழர்களின் மீது குண்டு வீசமாட்டோம் என்று இலங்கை அமைச்சர் கூறிச் சென்ற பின்பும், இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு சாதகமான எந்த ஒரு நல்ல மாற்றமும் நிகழ்வதற்கான அறிகுறிகள் எது…

  11. தாய் மண்ணை காப்பதற்கும் மீட்பதற்கும் முன்னாள் போர் வீரர்களுக்கு அவசரமானதும் அவசியமானதுமான அழைப்பை தமிழீழ அரசியற்துறை விடுத்துள்ளது. முன்னாள் விடுதலை வீரர்களான நீங்கள் உங்கள் தாய் தேசம் முகம் கொடுத்திருக்கும் போர் நெருக்கடிக்கிடையில் தாய் நாட்டிற்கு நீங்கள் புரிய வேண்டிய கடமைக்கு முன்னுரிமை அளித்து விரைந்து வருவீர்கள் என்று நம்புகின்றோம். இந்த தேசத்தின் மைந்தர்களான நீங்கள் எமது மக்களும் மண்ணும் எதிரியின் பேரவலத்துக்குள்ளளாவதை ஒரு போதும் விரும்பமாட்டீர்கள் மானமுள்ள வீரமுள்ள எந்த தூய வீரனும் இதை விரும்பமாட்டான் உங்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உணர்வும் குருதியில் ஓடும் ஓர்மமும் தேச விடுதலையை நோக்கி தள்ளவே செய்யும் இதன் முலம் நீங்கள் உயிரினும் மேலாக அன்பு செய்யும் தாய்…

  12. (ஆர்.யசி) விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று வடக்கு -கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார், வடக்கு கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் கூட யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது எனவும் அவர் கூறினார். முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விடுதலைப்புலிகளுடனான போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், விடுதலைப் புலிகளின் தலை…

  13. இக்கரும்புலிகள் சொல்லிச் சென்ற செய்தி:- கடற்கரும்புலி மேஜர் நிரஞ்சினி தனது கருத்தில் எமது அண்ணாவிற்கு தோளோடு தோளாக நின்று எவ்வளவுக்கு தங்களால் இயன்றளவு செய்யமுடியுமோ அவ்வளவுக்கு செய்து அண்ணாவின் காலப்பகுதிக்குள் தமிழீழத்தைப் பெற்றெடுக்கவேண்டும் என்றார். லெப்.கேணல் அன்புமாறன் தனது கருத்தில் எனது அன்பான மக்களுக்கு நீங்கள் இதைப்பார்க்கும் நேரம் நான் உங்களைவிட்டு நீண்டதூரம் வந்திருப்பன். அதாவது நான் வீரச்சாவடைந்திருப்பேன். மக்களுக்கு சொல்லிவிட்டுப் போகவிரும்புவது என்னவென்றால் கரும்புலிகளால் தகர்க்க ஏலாது என்று சொல்லி எதுவுமேயில்லை. கரும்புலிகள் தான் எங்கள் போராட்டப்பாதையில் தடையாக இருந்தவற்றையெல்லாம் தடைகளை நீக்கி தடைக்கற்களை உடைத்தெறிந்து காட்டியுள்ளனர். …

    • 15 replies
    • 5.8k views
  14. விமானப்படைக்கு இறுதி எச்சரிக்கை- தமிழ்ச்செல்வன் ஏப்ரல் 24, 2007 கிளிநொச்சி: காட்டுநாயகே மற்றும் பலாலி விமான தளங்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய விமான தாக்குதல்கள் 100 சதவீத வெற்றி பெற்றுள்ளன. இது இலங்கை விமானப் படைக்கு விடப்பட்ட இறுதி எச்சரிக்கை என புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இதுகுறித்து கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியில், காட்டு நாயகே விமான தளம் மீது நாங்கள் நடத்திய விமான தாக்குதல் 100 சதவீத வெற்றியைப் பெற்றது. தற்போது பலாலி விமான தளம் மீதும் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் பூமி மீது இலங்கை விமானப்படை நடத்தி வந்த தொடர் தாக்குதலை நிறுத்தும் வகையில் இந்த வான்வழி…

    • 6 replies
    • 5.8k views
  15. தென் தமிழீழத்தில் திருமலையில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புப் படையான சிறீலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய தலைமையகம் மீதான வான் புலிகளின் வெற்றிகர தாக்குதலில் பங்கெடுத்த வான்புலிகளும் தேசிய தலைவரும். தாக்குதலின் பின் போராளிகள் வெற்றிகரமாக தளம் திரும்பி இருக்கின்றனர். தாக்குதலில் பங்கேற்ற வேங்கைகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக..! http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26765

    • 24 replies
    • 5.8k views
  16. 'குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் - போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை எந்தநேரமும் வெளியாகலாம் என்ற நிலையே தற்போதுள்ளது. நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியாக முன்னரே, அது இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் என்று, பலர் கருதுகின்றனர். மேற்குலக நாட்டு இராஜதந்திரிகள் இந்த அறிக்கை இலங்கைக்கு கடுமையானதொன்றாக அமையலாம் என்றே கருதுகின்றனர். அத்துடன் அரசாங்கத் தரப்பும் இது சாதகமற்றதாக அமையும் என்றே கருதுகிறது. சித்திரைப் புத்த…

  17. உயிருடன் உள்ளார் பிரபாகரன்! ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது. களத்…

  18. மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்! மாகாண சபைத் தேர்தலைக் கால தாமதமின்றி அரசாங்கம் நடத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். அடுத்த வருட இறுதி வரை காத்திருக்காமல், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிந்த பிறகு, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னதாக மாகாண சபைகளை முழு அதிகாரத்துடன் இயங்கச் செய்வது முக்கியமானதாகும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவர…

      • Sad
      • Thanks
      • Like
      • Haha
    • 113 replies
    • 5.8k views
  19. இலங்கை அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய வன்னியிலிருந்து வெளியேற முடியாதென ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்று அறிவித்துள்ளது. யுத்தம் காரணமாக வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களின் எதிர்ப்புகளை மீறி தமது பணியாளர்களை குறித்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற முடியாதென தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 160,000 சிவிலியன்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 70,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய கடந்த வியாழக்கிழமை முதல் ஐக்கிய நாடுகள் அமைப்பு தனது பணியாளர்களை அகற்றும் பணிகளில் ஈட…

  20. இயக்குநர் சீமான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது. முன்னதாக அவர் புதுக்கோட்டை மாரீஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், ’’தேசிய இனத்தின் அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தைத்தான் பிரபாகரன் நடத்திவந்தார்.அதைத்தான் நாங்களும் செய்து வருகிறோம். இனி போராடி பலனில்லை என்று சில அமைப்புகள் கொஞ்சம் அமைதி காக்கின்றன. ஆனால் நாம் தமிழர் இயக்கம் அமைதியாக இருக்காது. பொதுவாக நேற்று வரை நடந்து வந்த ஈழ போராட்டத்தில் இப்போது சிறிது இடைவெளி இருக்கு. இன்னும் நான்கு மாதங்கள் அல்லது நான்கு வருடங்களில் ஈழ போராட்டம் முன்…

  21. “கோத்தாபய வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து கொள்ளமாட்டார் என்றே தோன்றுகின்றது. அந்த அளவுக்கு உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர் வந்தால் சர்வதேச ரீதியாக எமக்கு நன்மையே அல்லாது தீமையில்லை”என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் கேள்வி ஒன்றிற்கான பதில் என அவர் அனுப்பிவைத்த அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேள்வி:- உங்கள் கருத்துப்படி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? பதில்:- இம்முறை ஜனாதி…

    • 67 replies
    • 5.8k views
  22. 'தொல் தமிழர் முருகனிலிருந்து - நல்லூர்க் கந்தன் வரை" -.சபேசன் (அவுஸ்திரேலியா)- ஈழச் சைவத் தமிழ் மக்களிடையே மிகப் பிரபல்யமான, புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான - நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் தேர்த் திருவிழா ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் கொடியேற்ற நாளில் இருந்து இறுதி நாள் உற்சவமான, பூங்காவனத் திருநாள் வரை, உலவுகின்ற அந்த உற்சாகமான, குதூகலப் பக்தி கலந்த நாட்கள், எம்மவர் மனதில் என்றென்றும் நினைவில் நின்று நிழலாடுகின்ற விடயமாகும். ஆனால் அன்று மயிலேறி, மூன்று உலகமும் வலம் வந்ததாகச் சொல்லப்பட்ட முருகன், பின்னர் சிங்கள இராணுவ அடக்குமுறையின் கீழ் - ஊரடங்குச் சட்டத்தின் கீழ் - அமலாக்கப்பட்ட…

  23. வடபோர் முனையில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான ஒளிப்பதிவு. வடபோர் முனையில் நேற்று இடம்பெற்ற சிறீலங்காப் படையினரின் வலிந்த படையெடுப்பு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் போது எடுக்கப்பட்ட ஒளிப்பதிவுக் காட்சிகள் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  24. இலங்கையில் நாடுதழுவிய அளவில் முஸ்லீம் மக்கள் மீது சிங்கள பெளத்த பேரினவாத இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் இன்று கடும் அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுபல சேன, ஜாதி கெல உறுமய, ராவண பலய என்னும் அமைப்புகளில் சிலவற்றை இலங்கை அரசே உருவாக்கியும் மற்றவற்றிற்கு முழு ஆதரவளித்தும் முஸ்லீம் மக்கள் மீதான இவ்வொடுக்குமுறையை காவல் துறை மற்றும் இராணுவ பிரிவுகளின் நேரடி ஆதரவுடன் பகிரங்கமாக நிறைவேற்றி வருகிறது. முஸ்லீம் மக்கள் இலங்கை தீவின் ஒரு மக்கள் அல்லர் என்னும் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது, அவர்களது இன, மத கலாச்சார அடையாளங்களை இழிவுபடுத்துவது என்னும் வகையில் ஓர் சமூக, இன அழிப்பு நடவடிக்கைகள் தூண்டிவிடப்பட்டுள்ளன. அவர்களது குடியிருப்பு, விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன, பள்ள…

  25. "இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைROBERT NICKELSBERG தான் ஒரு "தேச துரோகி" என்று ஒப்புக்கொள்கிறார் திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்னம். இவர் ஒரு தமிழர். எனினும் இலங்கைப் போரின் போது நடந்த பல அட்டூழியங்களுக்கு காரணம் விடுதலை புலிகள் அமைப்புதான் என்று குற்றஞ்சாட்டுகிறார் இ…

    • 40 replies
    • 5.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.