Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதையை நிலைமைகளைக் கருத்திற்கொண்டே தான் மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், தனக்கு பதிலாக கனடாவின் சர்வதேச மனித உரிமைகளுக்கான வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இலங்கை 2013ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அதனை தனது மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்தவும், நல்லிணக்கத்தை நோக்கி பயணிப்பதற்காகவும் இலங்கை பயன்படுத்தும் என்று நம்பியதாக தெரிவித்துள்ள கனடாவின் பிரத…

  2. காணி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் - மாவை 07 அக்டோபர் 2013 வடக்கு மாகாணசபையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தும் என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் காணிகள் அபகரிக்கப்பட்டதாகவும் அதனை மெய்யான உரிமையாளர்களுக்கு மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மேலும் வட மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கை மீளக் கட்டியெழுப்புமாறு சர்வதேச சமூகம் இலங்…

    • 1 reply
    • 457 views
  3. வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து இன்று முற்பகல் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு) http://tamil.dailymirror.lk/--main/84896-2013-10-07-06-53-11.html

  4. 13 ஐ அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துங்கள்;மஹிந்தவிடம் வலியுறுத்துவார் குர்ஷித்; கூட்டமைப்புடனும் இன்று பேச்சு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் முக்கிய செய்தியுடன் இருநாள் பயணம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், அரச தரப்பினரையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேச்சு நடத்தும்போது, 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ள வடக்கு மாகாணசபைக்கான அபிவிருத்தி உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடுவார் என்று அறியமுடிகின்றது. அத்துடன், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொடுத்தனுப்பிய…

    • 3 replies
    • 431 views
  5. 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு TNA இந்தியாவிடம் கோரவுள்ளது:- 07 அக்டோபர் 2013 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தியாவிடம் கோரவுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் நடைபெறும் சந்திப்பின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. அர்த்தமுள்ள வகையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது அவசியமானது என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மீனவர் பிரச்சினை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEd…

  6. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சந்தியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மீது வாள்வெட்டு மேற்கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிசார் இருவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஆனைக்கோட்டைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில ஈடபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பொலிசார் மறிக்க முற்பட்ட வேளையில் பொலிசாருக்கும் குறிப்பிட்ட நபர்களுக்கும் இடையே இடம்பெற்ற இழுபறியைத் தொடர்ந்து குறித்த நபர்கள் பொலிசாரை வாளால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். இச் சம்பவத்தில் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்தளையைச் சேர்ந்த வசந்த அபேயரத்தின (வயது37) என்பவர் அனுமதிக்கப்பட்டார…

  7. வடமாகாண சபையின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்பாக அலரி மாளிகையில் தமிழ் மொழியில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார். இந்த நிகழ்வுக்கு விஷேட அதிதியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்குகொள்வார் எனவும் தெரிய வந்திருக்கின்றது. Thinakural

    • 69 replies
    • 4.6k views
  8. இந்தியாவின் கொங்கிரஸ் அரசுடன் கூட்டுச் சேர்ந்து தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட சிறீலங்கா அரசு, தற்போது பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் கொங்கிரஸ் படுதோல்வியடைந்து, பா.ஜ.க. வெற்றி பெறும் என்று பரவலாக நம்பப்படும் அதேவேளை, கருத்துக் கணிப்புகளும் இதனை உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைத் தமது கைக்குள் போட்டுக்கொள்ளும் நடவடிக்கையில் சிறீலங்காப் பேரினவாத அரசு தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. ஏற்கனவே, பா.ஜ.க. தலைமை மகிந்தவை இந்தியாவிற்கு அழைத்து செங்க…

  9. ஆயுதப் பலத்தால் தோற்கடிக்கப்பட்ட அமைப்பொன்றுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியமையானது அரசாங்கம் செய்த மிகப் பெரிய தவறு என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அனுராதபுரத்தில் நடைபெற்ற அந்த அமைப்பின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் ஒரு மிகப் பெரிய தவறை செய்துள்ளது. உலகில் எங்கும் நடைபெறாத வகையில் தூரநோக்கற்ற முட்டாள்தனமான தீர்மானத்தை இந்த அரசாங்கம் எடுத்துள்ளளது. எதிர்காலத்தில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் இந்த அரசாங்கம் கட்டாயம் அதற்கு பொறுப்புக் கூறவேண்டும். உலகில் எங்கும் ஆயுதத்தினால் தோற்கடிக்கப்பட்ட எந்த அமைப்புக்கும் அரசியலில் ஈடுபட அனுமதி வழங்கப்படவில்லை. பிரிவினைவ…

  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறும் அனைத்துக் கட்சிகளும் பிரதேச ரீதியிலான வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். இதுவே தமிழ் மக்களின் நலனைக் கொண்ட எதிர்கால நடவடிக்கையாகவும் அமையும். இதுவே சிவில் சமூகத்தின் நிலைப்பாடுமாகும் என மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். தமிழர்களின் நலன், அவர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறும் கட்சிகள் ஒரு சின்னத்திலேயே செயற்படுவதும் காலத்தின் தேவையாகவுள்ளது. எனவே, தற்போது எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறும் அனைத்துக் கடசிகளும் கலந்துரையாடல்களை நடத்தி, விட்டுக் கொடுப்புடன் ஒரு நல்லிணக்கத் தீர்வினைக் க…

    • 2 replies
    • 698 views
  11. வடமாகாணசபைக்கான முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனது பதவியேற்பை புறக்கணிக்கப்போவதாக டெலோ இயக்கம் அறிவித்துள்ளது.போர்க்குற்றவாளியாக கூட்டமைப்பினால் தேர்தல் காலத்தினில் முன்மொழியப்பட்டவர் மஹிந்த ராஜபக்ஸ.அவர் முன்னிலையினில் தமிழ் மக்களினால் ஏகோபித்த ஆதரவினால் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சீ.வி.விக்கினேஸ்வரன் பதவி பிரமாணம் செய்வதென்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.அதனாலேயே டெலோவின் பொதுக்குழு நேற்று வவுனியாவினில் ஒன்று கூடி பதவியேற்பு நிகழ்வை புறக்கணிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இதனிடையே கூட்டமைப்பிலுள்ள ஏனைய பங்காளிக்கட்சிகளும் இவ்விடயத்தினில் கடுமையான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.தன்னிச்சையாக சம்பந்தன் மஹிந்தரை சந்த…

    • 12 replies
    • 857 views
  12. புகழேந்தி மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி கடல் பிரதேசத்தில் கரைவலை மீன் பிடியின் போது பெருமளவு பாரை மீன்கள் பிடிப்பட்டுள்ளன. இன்று காலை கரைவலைத் தொழில் ஈடுபட்டிருந்த போது சுமார் 35 ஆயிரம் கிலோ கிராம் பாரை மீன்கள் பிடிக்கப்பட்டுளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். இதனை பார்வையிட அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்ரையில் கூடி நின்றனர். http://www.virakesari.lk/article/local.php?vid=7538

    • 8 replies
    • 863 views
  13. தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் அமரர் ரவிவர்மாவுக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலி தெரிவித்துள்ளது. அவ் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தினக்குரல் பத்திரிகையின் பிரபல ஊடகவியலாளர் ரவிவர்மன் என்கின்ற பரமகுட்டி மகேந்திரராஜா மரணமடைந்த செய்தி எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1980களில் புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட ரவிவர்மன், கழக ஊடகங்களின் வாயிலாகவும், புத்தகங்கள் வடிவிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தி வந்தார். பின்னர் கழகத்திலிருந்து விலகி பத்திரிகைத் துறையில் தன்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். ரவிவர்மாவுக்கு தனது இளம்வயதில் இயல்பிலேயே வாய்த்த அறிந்துகொள்ளும் ஆர்வமும், எழுத்தாற்றலும், சிநேகமனப்பாங்கு…

  14. சிறீலங்காவின் கிழக்கு பகுதியில் முகாமிட்டுள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பு 50 சிங்கள இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானை புகலிடமாக கொண்டு இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு சிறீலங்காவின் கிழக்கு பகுதியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த முகாமில் சிங்களவர்கள் 50 பேருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். பாகிஸ்தானிலிருந்து ராணுவ அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் போல் வந்து இங்கு இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இங்கு பயிற்சி பெறுபவர்கள்மூலம் இந்தியாவுக்குள் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லஷ்கர் அமைப்பின் முயற்சிகளை ஆ…

  15. சிறிலங்கா அரசாங்கம் கிழக்கில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறினால், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிக்கப் போவதாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலர் ஹசன் அலி கருத்து வெளியிடுகையில், “2012இல் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், அரசாங்கத்துக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில், பல விடயங்களை உள்ளடக்கிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது. அந்த இணக்கப்பாட்டில், மாகாணசபை அமைக்கப்பட்டதும், மாகாண முதல்வர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகள், இரண்டரை ஆண்டுகளுக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படும் என்பதையும் உள்ளடக்கியிருந்தது. சபை அம…

    • 1 reply
    • 544 views
  16. பாடசாலைகளுக்கிடையிலான தேசிய போட்டியில் பதக்கம் வென்ற வவுனியா மாணவி! [saturday, 2013-10-05 14:11:01] நடைபெற்று வரும் தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் 21 வயதிற்குட்பட்ட 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கமலநாதன் லேகாஜினி மூன்றாம் இடத்தை பெற்று வெங்கலப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இப்போட்டிகள் நேற்று முன்தினம் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றன. வவுனியா சைவப்பிரகாச இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான கமலநாதன் லேகாஜினி இந்தவருடம் நடைபெற்ற 55ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள், வவுனியா மாவட்ட தேசிய விளையாட்டு விழா, வடமாகாண தேசிய விளையாட்டு விழா என்பவற…

  17. வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு சாமானியனின் சவால் மடல்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும் வட மாகாணசபைக்கு தெரிவாகிய கட்சிகளின் அங்கத்தவர்களுக்கும், தங்களின் வெற்றிக்காய் பணி செய்த சாமானியனின் அன்புமடல் அல்லது ஆவேசத்துடன் கூடிய சவால்… எனது மடலை வாசிக்கும் சூழல் தங்களுக்கு இருக்கும் என்று அடியேன் கருதவில்லை ஆனாலும் இன்று ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் மனங்களை வாட்டும் ஒரு விடயம் பற்றி எவரும் நேரடியாக தங்களது கவனத்துக்கு கொண்டு வந்ததாக யான் இந்நேரம் வரை அறியவில்லை ஆதலால் இம்மடலை வரைகின்றேன். வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நீங்களும் உங்களைப் போன்றசிலரும் அதிகாரங்கள் பிடுங்கப்பட்ட மாகாண சபைய…

  18. தமிழர்கள் பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே இந்தியாவின் தெரிவாகவுள்ளது. கூட்டமைப்புடனான சந்திப்புகளின்போதும் சரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனான சந்திப்புகளின்போதும் சரி, ஏனைய சிவில் அமைப்புகள் மற்றும் திருச்சபைப் பிரதிநிதிகளைச் சந்திக்கும்போதும் சரி இந்தியத் தூதுவர்களும், ராஜதந்திரிகளும், கொள்கை வகுப்பாளர்களும் அதைத்தான் வற்புறுத்தி வருகிறார்கள். இந்தியா மட்டுமல்ல, இந்தியாவின் பூகோளப் பங்காளியாகவுள்ள அமெரிக்காவும் பெரும்பாலான மேற்கு நாடுகளும்கூட அவ்வாறுதான் கூறி வருகின்றன. குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியுடனான சந்திப்புக்களின்போது மேற்கத்தைய ராஜதந்திரிகளும், கொள்கை வகுப்பாளர்களும் ஒரு விசயத்தைத் தொடர்ச்சியாக வற்புறுத்த முற்படுவதாகக் கூறப்…

  19. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிற்கென கொழும்பு நகரை அலங்கரிப்பதற்கு மாத்திரம் 100 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகர சபையின் நம்பகமான வட்டாரங்களிலிருந்தே இந்தத் தகவல் தெரியவருகிறது, கொழும்பு மாநகர சபையினாலேயே இந்த அலங்கார வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை, தற்போது 80 கோடி ரூபாய்க்கான வேலைகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களை வரவேற்பதற்காக அமைக்கப்படும் வரவேற்பு அலங்காரப் பணிகளுக்கு மாத்திரம் 46 கோடி ரூபா செலவாகும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=7527

  20. இலங்கையில் தமிழர்கள் அமைதியாகவும், சிங்களர்களுடன் ஒற்றுமையாகவும் வாழ்ந்துவிடக் கூடாது என்பதிலும், அமைதி தொடரக் கூடாது என்பதிலும் அதிபர் ராஜபட்ச தீர்மானமாக இருக்கிறார் என்று தோன்றுகிறது. இலங்கையில் வடக்கு மாகாணத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண அரசு அமைய இருக்கிறது. இந்த வேளையில், அந்த அரசுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதும், அதிக உரிமைகளுடன் விக்னேஸ்வரன் தலைமையிலான அரசு இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டு செயல்பட உதவுவதும்தானே, அதிபர் மகிந்த ராஜபட்சவிடம் எல்லோரும் எதிர்பார்க்கும் பண்பு. ஒரு தேசத்தின் அதிபர், தமிழர்களும் எனது நாட்டவர்களே என்று உலக அரங்கில் கிளிப்…

  21. வடக்கு மாகாண முதல்வராக நாளை பதவியேற்கவுள்ள, சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் தனக்கு நடத்தவிருந்த வரவேற்பு விழாவை நிராகரித்துள்ளார். நாளை வடக்கு மாகாண முதல்வராக பதவியேற்ற பின்னர், கொழும்பில் அவருக்கு முறைப்படியான வரவேற்பு விழா ஒன்றை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டன. ஆனால், இந்த விழாவை அவர் நிராகரித்து விட்டதாக, இந்து கல்வி சமூகத்தின் செயலர் கந்தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார். தனது தெரிவை கொண்டாட வேண்டிய தேவையில்லை என்றும், இது கொண்டாட்டம் நடத்துவதற்கு உகந்த நேரம் இல்லை என்றும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், விழா அமைப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், பதவியேற்பு முடிந்தவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தைச் சந்திப்பதற்கான ஏற்ப…

  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை அமைச்சர் தெரிவும் முடிவின்றித் முடியும் கூட்டங்களும் - 05 அக்டோபர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை அமைச்சர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இன்றிரவு கொழும்பில் இடம்பெற்ற கூட்டம் விரைவாக முடிவடைந்து உள்ளதாக தமிழத்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். வடமாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பாக பேசப்பட்டது ஆனால் அமைச்சர்களை நியமிக்கும் விடயத்தில் முடிடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். அடுத்த கூட்டத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார். எனினும் மாகாண சபை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக தமிழ்த் தேசி…

  23. தமிழ் மக்களின் வீரம் செறிந்த போராட்ட ஆதாரங்களைக் குண்டு வைத்து தகர்க்கலாம். ஆனால் எமது மக்கள் மனங்களிலுள்ள தமிழ் உணர்வையும் விடுதலை வேட்கையையும் எவராலும் அழிக்கமுடியாது - அடக்கி விடமுடியாது என்று தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சி இளைஞர் அணித் தலைவருமான பா.கஜதீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முல்லைத்தீவு இல்லம் இராணுவத்தால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டமையை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சுதந்திரத்துக்காக அன்று தொடக்கம் இன்றுவரை போராடிய அனைத்துத் தலைவர்களையும் மக்கள் தமது மனத்திலேயே ஆழமாகப் பதிய வைத்துள்ளனர்.…

  24. ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளர் சேனரத் கப்புகொட்டுவ தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். கட்சியின் மீளமைப்புகளுக்கு இடம் தரும் வகையில் தாம் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இந்தநிலையில் தலைமை பதவிக்கு தகுதியானவர் வரும் போது தாம் பதவி விலகத்தயார் என்று கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=94323&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.