Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சி.வி. விக்னேஸ்வரன் TNAயின் அங்கத்தவர் பட்டியலை ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம் கையளித்துள்ளார். 30 செப்டம்பர் 2013 இணைப்பு 2 வடக்கு மாகாணசபையின் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் பெயர் பட்டியலை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம் இன்று கையளித்துள்ளார்.அதை தொடர்ந்து இருவரும் அமையவுள்ள மாகாணசபை மற்றும் அதனது காரியாலயம் பற்றி ஆராய்ந்திருந்ததாக கூறப்படுகின்றது. சி.வி. விக்னேஸ்வரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையில் முக்கியசந்திப்பு நடைபெறுகிறது வடமாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வசிப்பிடத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற்றது. வட மாகாணசபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரனுடன் நாடாளுமன்ற…

  2. சப்தநாடியும் ஒடுங்கிய மிருகம்! புகழேந்தி தங்கராஜ் சாத்தான் வேதம் ஓதுமா? என்று கேட்கிறார் அப்புசாமி. கேள்வியே தவறு. இப்போதெல்லாம் சாத்தான்கள் தான் அதை ஓதுகின்றன. இந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்துக்குப் பின்வாசல் வழியாகவே சென்று, பின்வாசல் வழியாகவே திரும்பிய மகிந்த மிருகம் அதை நிரூபித்திருக்கிறது. (முன் வாசல் வழியாகப் போகிற பழக்கமே இலங்கை மிருகங்களுக்கு இல்லையா?) வேறுவிதமான கலாச்சாரங்கள் உள்ள நாடுகளில், ஒரு குறிப்பிட்ட விதமான ஜனநாயகத்தைத் திணிக்க முயல்வது பெருங்குழப்பத்தை ஏற்படுத்துமாம்.... ஐ.நா. கூட்டத்தில் மகிந்த மிருகம் இப்படிப் பேசியிருக்கிறது. அது என்ன வேறுவிதமான கலாச்சாரம்? ஐ.நா.வுக்குள் கூட பின் வாசல் வழியாக நுழைவதா? ஈழத் தமிழ் இனத்துக்…

  3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாண முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள சி.வீ.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் யாழ்ப்பாணத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை யாழ்ப்பாணம் வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அமெரிக்கா பயணித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நாடு திரும்பியதும், இதுகுறித்து பேச்சு நடத்த தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுகுறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண ஆளுநர் முன்னிலையிலா, ஜனாதிபதி முன்னிலையிலா, கட்சித் தலைவர் முன்னிலையிலா வடக்கு மாகாண முதலமை…

  4. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தின் நீதிபதியொருவரின் 15 வயது மகன் கடத்தப்பட்டுள்ளார். பிரத்தியேக வகுப்பொன்றுக்கு செல்லும்போது இவர் கடத்தப்பட்டு பின்னர் வாத்துவ பிரதேசத்தில் விட்டுச் செல்லப்பட்டுள்ளார். வான் ஒன்றில் வந்த இனந்தெரியாத சிலர் மொரட்டுவ, ராவதாவத்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் குறித்த நீதிபதியின் மகனைக் கடத்திச் சென்றுள்ளனர். முன்னதாக கிரிபத்கொட பிரதேசத்திற்கு கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் வாத்துவ பிரதேசத்தில் வைத்து விட்டுச் சென்றுள்ளனர். நீதிபதியின் 15 வயதான மகன் எந்தவொரு சித்திரவதைக்கும் ஆளாகியிருக்கவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளதுடன், இதுகுறித்த விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மே…

    • 0 replies
    • 383 views
  5. இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் எந்­த­வொரு பிர­ஜைக் கும் நாட்டில் எப்­ப­கு­தி­யிலும் வசிப்­ப­தற்­கான உரிமை இருக்­கி­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­ மைப்பைச் சேர்ந்த பலர் கொழும்பு உள்­ளிட்ட நாட்டின் பல பகு­தி­களில் வசிக்­கின்­றார்கள். இவ்­வாறு அவர்கள் சகல பகு­தி­ க­ளிலும் வசிப்­பதை நாம் ஒரு போதும் தவறு என்று கூறி­ய­ தில்லை. அதே­போன்றுஇ வடக் கில் சிங்­க­ள­வர்கள் குடி­யே­று­வதை அவர்­களால் தடுக்க முடி­யாது என ஜாதிக ஹெல உறு­ம­யவின் உறு ப்­பி­னரும் மேல் மாகாண சபை அமைச்­ச­ரு­மான உத­ய­ கம்மன்பில தெரி­வித்தார். வட­மா­கா­ணத்­திற்­கான தேர்­தலில் வெற்றி பெற்­றுள்ள கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் தேவை­யற்ற முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தாமல் இணைந்து செயல்­ப­டு­வ­தற்கு முன்­வர வே…

  6. தென் பகுதியில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தெற்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக அரசாங்கம் பாதகமான பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளனர். அத்துடன் தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அங்குள்ள தமிழ் மக்களின் ஆதரவைப் பெறவேண்டும் என கூட்டமைப்பு எண்ணுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் …

  7. பெண் ஒருவருக்கு இரண்டாவது போனஸ் இடம்:கூட்டமைப்பு முடிவு கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 செப்டம்பர், 2013 - 14:28 ஜிஎம்டி இலங்கையின் வடமாகாண சபைத் தேர்தலில் கிடைத்த இரண்டு போனஸ் இடங்களில் ஒன்றை சுழற்சி முறையில், முதலாவதாக ஒரு பெண்மணிக்கு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. வடமாகாண சபைக்குரிய போனஸ் இடங்களில் ஒன்றை பல்வேறுபட்ட சமூக நலன்களைக் கருத்திற்கொண்டு வருடாந்த சுழற்சி முறையில் அளிப்பது என்று கூட்டமைப்பு இன்று அதிகாரபூர்வமாக முடிவெடுத்துள்ளது. தொடர்புடைய விடயங்கள் தேர்தல், பெண்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட மேரி கமலா குணசீலன் என்பவருக்கு முதலாம் ஆண்டு அந்த இடத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட…

  8. வடக்கு மாகாண சபையின் அமைச்சுப் பதவிகள் வழங்குவது தொடர்பிலும், போனஸ் ஆசனம் தொடர்பிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் எனத் தெரியவருகின்றது. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு ஆசனங்கள் போனஸாகக் கிடைத்தன. இதில் ஒரு ஆசனத்தை மன்னாரில் முஸ்லிம் பிரதிநிதிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ஒரு ஆசனத்தை வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று மேற் கொள்ளப்படவுள்ளது. அதேபோன்று மாகாண சபையின் 4 அமைச்சுப் பதவிகளையும் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பிலும் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. முக்கிய இரு முடிவுகளையும் எடுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்…

  9. யாழ்ப்பாணத்தில் வைத்து, வடக்கு மாகாணசபை முதல்வர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திடீர் அழைப்பு விடுத்துள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அமெரிக்காவில் இருந்து திரும்பும் சிறிலங்கா அதிபருக்காக காத்திருக்கிறோம். என்று தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதல்வருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்தே சிறிலங்கா அதிபர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மாகாணசபைக்கள் சட்டத்தின்படி, மாகாண முதலமைச்சர், சிறிலங்கா அதிபர் முன்னிலையிலோ ஆளுனர் முன்னிலையிலோ பதவியேற்க முடியும். …

  10. விடுதலைப் புலிகளின் ஆதரவாளருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்? 28 செப்டம்பர் 2013 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர் ஒருவருக்கு அமெரிக்காவில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையச் சேர்ந்த கனேடிய பிரஜையான சுரேஸ் சிறிஸ்கந்தராஜா என்ற நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அமெரிக்க சட்டத்தரணிகள் கோரியுள்ளனர். புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக குறித்த நபர் நீதிமன்றில் ஒப்புகொண்டிருந்தார். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறித்த சர்ச்சையை தற்போது காணப்படுகின்றது. தண்டனைக் காலத்தை குறைக்குமாறு சுரேஸின் சட்டத்தரணிகள் கோரி வருகின்றனர். உச்சபட்ச…

  11. கொழும்பில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தனியார் தொலைகாட்சியில் சிங்கள மொழியிலான நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பு பற்றி பிரஸ்தாபித்த போது, அதற்கு பதிலாக அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வர் எம்பி, இஸ்லாமிய பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என்றும், மனோ கணேசன் கோவிலை பற்றி பேசவேண்டுமே தவிர பள்ளிவாசலை பற்றி பேசக்கூடாது என்றும், தான் சலீம்டீனுக்கு பதில் சொல்லுவேனே தவிர சுப்பையாவுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்றும் பகிரங்கமாக தெரிவித்தார். "பலய" என்ற பெயரில் சிங்கள மொழியிலான நேரடி அரசியல் விவாத …

    • 20 replies
    • 1.5k views
  12. மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் கிடையாது என்று சிறிலங்கா உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். சிறிலங்கா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக் குறித்து பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டு, அங்கு ஜனநாயக முறையிலான ஒரு தீர்ப்பு வந்த சில நாட்களுக்குள் இப்படியான நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு காணி அதிகாரம் முக்கியமானதொரு அடிப்படை காரணம். வடகிழக்கின் இனவிகிதாசாரத்தை மாற்றக்கூடிய வகையில், அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதைத் தடுப்பதற்காக தமிழ்-சிங்களத் தரப்பிடையே பல உடன்பாடுகள் செய்யப்பட்…

  13. முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் சிறீலங்கா காவல்துறையினரின் திட்டமிட்ட செயற்பாட்டினால் யுவதிஒருவரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது தமிழர்களின் கலாச்சாரத்தை சிரழிக்கும் வகையில் படையினரும் படைபுலனாய்வாளர்களும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். யுவதி ஒருவர் தன்னை மானபங்கப்படுத்தும் முயற்சிக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் காவல்துறையினரின் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததன் காரணமாக குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று மாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது.. மாங்குளம் காவல்துறையினரும் படை புலனாய்வாளர்களும் சேர்ந்து இயங்குகின்ற கூட்டு நடவடிக்கை மூலம் தமிழர்களுடைய கலாசாரங்களுக்கும் இயல்பு வாழ்க்கைக்கும் ஒரு சில தமிழ் …

  14. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் சந்திப்பை தவிர்த்தார் மன்மோகன் சிங் - காத்திருந்து இலங்கை திரும்பினார் மகிந்த:- ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சந்திப்பை தவிர்த்தார் எனக் கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங். நேற்று முன்தினம் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற ராஜபக்ச, இலங்கை திரும்புவதற்கு முன்னதாக, மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசலாம் என்று அவரது வருகைக்காக நியூயார்க்கில் காத்திருந்தார். ஆனால், வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துவிட்டு நியூயார்க் புறப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங், குறிப்பிட்ட நேரத்துக்கு 3 மணி நேரம் தாமதமாக சென்றதால், வேறுவழியில்லாமல…

  15. காணொளி : நவநீதம் பிள்ளை இலங்கை அகதிகள் தொடர்பாக அவுஸ்ரேலிய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி பேட்டியை பார்வையிட,,, http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9411:2013-09-29-07-05-49&catid=1:latest-news&Itemid=18

  16. பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்துகொண்டு வாருங்கள் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என்றும், மனோ கணேசன் கோவிலை பற்றி பேசவேண்டுமே தவிர பள்ளிவாசலை பற்றி பேசக்கூடாது என்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தெரிவித்தார். கொழும்பில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தனியார் தொலைகாட்சியில் சிங்கள மொழியிலான நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பு பற்றி பிரஸ்தாபித்த போது, அதற்கு பதிலாக அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வர் எம்பி, இஸ்லாமிய பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால…

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த போனஸ் ஆசனங்கள் இரண்டில் ஒன்றை முஸ்ஸிம் வேட்பாளர் அயூப் அஸ்மீனுக்கும் மற்றையதை சுழற்சி முறையில் ஐந்து வேட்பாளர்களுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இரண்டு போனஸ் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் ஒன்றை முஸ்லிம் வோட்பாளர் ஒருவருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட முஸ்ஸிம் வேட்பாளர் அயூப் அஸ்மீன் என்பருக்கே அந்த போனஸ் ஆசனங்…

  18. இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையின் வடமாகாணத்தில் நடந்த தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்று முதல்வராக பதவியேற்கும் நாளுக்காகக் காத்திருக்கிறார் விக்னேஸ்வரன். அமைச்சர்களைத் தேர்வுசெய்வதில் கூட்டமைப்​புக்குள் முரண்பாடுகள் நிலவி வரும் நிலையில், ஆரம்பகால ஈழப் போராளியான கவிஞர் காசி ஆனந்தன், கூட்டமைப்புக்கு எதிராகவும் இந்தத் தேர்தல் வெற்றிக்கு எதிராகவும் கொந்தளிக்கிறார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ''மூன்றில் ஒருபங்கு இடத்தில் கூட்டமைப்பு வென்றிருப்பது, மக்களிடம் இருக்கும் செல்வாக்கைத்தானே காட்டுகிறது?'' ''இல்லை. ஏற்கெனவே நான்கு திசைகளிலும் ராணுவத்தின் பிடி. இன்னொரு பக்கம் சிங்களக் குடியேற்றம், பாலியல் வன்கொடுமைகள் எனத் தொடர்ந்து துன்பங்களை அன…

  19. இந்த தலைமுறையை தியாகத் தலைமுறை ஆக்குவோம்... அடுத்த தலைமுறை விடுதலைத் தலைமுறை ஆகட்டும்....- பழ.நீலவேந்தன் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக போராடிய தமிழீழ ஆதரவாளர் பெரியார் சிந்தனைப்பற்றாளர் தோழர் பழ.நீலவேந்தன் மரணம் தமிழீழ ஈகைச்சுடர் திலீபனின் நினைவு போற்றியும் தமிழகத்தமிழர்களால் சாதியால் ஒடுக்கப்பட்டுவரும் ஆதித்தமிழர்களான அருந்ததியர்களுக்கான 6 சதவீத உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் கடிதம் எழுதிவைத்துவிட்டு பெரியார் சிந்தனைப்பற்றாளர் தோழர் பழ.நீலவேந்தன் தீக்குளித்து இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார். தமிழ் இனத்தில் சாதியால் தமிழர்களாலேயே ஒடுக்கப்பட்டுவரும் அருந்ததியர் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆதித்தமிழர் பேரவையில் இணைந்து போராடிவந்த தோழர் பழ. நீலவேந்தன் தீக்குளித்து …

    • 4 replies
    • 711 views
  20. வடக்கை ஆண்ட ஆளுநரின் முகத்தை கவலை ஆட்சி செய்கிறதாம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 28 செப்டம்பர் 2013 வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் சி.வி. விக்கினேஸ்வரனை முதல்வராக தேர்ந்தெடுத்த பின்னர் வடக்கு மாகாண ஆளுநருக்கு கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா உத்தியோகபூர்வ கடிதத்தை அனுப்பிவைத்தார். கடிதத்தைப் பார்த்த வடக்கு மாகாண சபை ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திசிறியின் முதகத்தில் கவலை படர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை நாட்களும் வடக்கின் முடிசூடா மன்னனாக இருந்த இடத்திற்கு மக்களால் மக்களால் முடி சூட்டப்பட்ட ராரஜா தெரிவாகி உள்ளதனால் அவரது முடி பறிபோகிறது என ஆளுநர் அலுவலகத்தில் உள்ளவர்கள் தமக்குள் உரையா…

  21. சிறிய நாடான சிறிலங்காவை சில நாடுகள் கொடுமைப்படுத்துவதாக விசனம் வெளியிட்டுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் அவர், “சிறிலங்காவைக் கொடுமைப்படுத்துவதை சில நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இது மிகச் சிறிய நாடு. ஒரு சம்பவம் நடந்தால் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது விரல்கள் நீட்டப்படுகின்றன. ஆனால், அதேபோன்ற சம்பவம் மேற்கு நாடுகளில் நடந்தால், அது கவனிக்கப்படுவதில்லை.” என்றும் தெரிவித்துள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஜெனிவாவில் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். நவநீதம்பிள்ளை எப்போதுமே தங்கள் மீது வருத்தத்துடன் இருப்பவர் எ…

  22. பொறுப்புக்கூறவும், மனிதஉரிமைகள் குறித்த கடப்பாட்டை நிறைவேற்றவும், சிறிலங்கா முன்வர வேண்டும் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் ஒரு பக்க நிகழ்வாக, நேற்று முன்தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் உரையாற்றிய போதே கனேடிய வெளிவிவகார அமைச்சர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்ட கூட்டத்தில் வைத்து, சிறிலங்கா குறித்து உரத்த குரலில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் காட்டமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தை முடித்து வெளியே வந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர், “ சிறிலங்காவின…

    • 2 replies
    • 1.3k views
  23. சிறிலங்காவின் வடக்குப் பகுதியில், இருந்து சிறிலங்கா இராணுவத்தை விலக்கிக் கொள்வதற்கு இந்தியா உதவும் என்றும் இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். "இந்திய அரசாங்கத்தின் நெருக்கடியினால் தான், சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்தியுள்ளது. படைக்குறைப்பின் மூலமே, சிறிலங்காவின் வடக்குப் பகுதியில், அமைதி சாத்தியமாகும். வடக்கு மாகாணத்தின் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரன், சிறிலங்கா இராணுவம் அங்கிருந்து விலக வேண்டும் என்பதை தனது முதல் கோரிக்கையாக முன்வைத்துள்ளார். அதற்கான சூழலை இந்திய அரசாங்கம் உருவாக்கிக் கொடுக்கும். அது ஒன்றே அங்கு அமைதியை திரும்ப வைக்கும். அங்குள்ள தமிழர்களை சமமாகவும் கௌரவமாகவும் நடத்தும்படி சிறிலங…

  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை எதிர்வரும் 02ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. வடமாகாண சபை தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிநாட்டை உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்து சில அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்ற போதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை நீதிமன்றத்தில் ஆஜராகுமர்று நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. http://tamilworldtoday.com/home

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.