ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142808 topics in this forum
-
படக்குறிப்பு, வலிகள் நிறைந்த யுத்த காலத்தின் கடைசி நாட்களில் இந்த கஞ்சி தான் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்தது. கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக, இலங்கை 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் பரவலாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் மத்தியில் என்றுமே மறக்க முடியாத நாளாக மே 18ஆம் தேதி வரலாற்றில் பதிவாகியுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி யுத்தம் முடிவடைந்த நிலையில், யுத்தத்தின் கடைசி நாட்களில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக ஆண்டுதோறும் மே 18 தினம் அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமடைந்த சந்தர்ப்பத்தில் அந்த …
-
- 1 reply
- 275 views
- 1 follower
-
-
தாண்டிக்குளம் பரிஸ்ரர், அவரது இரு மகன், மற்றும் இரு உதவியாளர்களை காணவில்லை தாண்டிக்குள் கிறீஸ்தவ தேவாலயத்தை சேர்ந்த கிறீஸ்தவ பாதிரியார் விக்ரர் போல் ஜோகராஐ (அகவை 51), அவரது இரு மகன்கள் மற்றும்இரு உதவியாளர்கள் சமய நிகழ்வு ஒன்றுக்காக பெப்ரவரி 28ம் திகதி தொடரூந்து மூலம் சென்றதாகவும் பின் மறுநாள் தொலைபேசி மூலம் 1ம் திகதி உறிவினர் வீட்டில் இருந்து தொடர்பு கொண்டதாகவும் அதன்பின் அவர்களின் தொடர்பு இல்லை என செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதன்போது காணாமல் போனவர்கள் 22 அகவையுடைய யோகராஐ டானியல், 19 அகவையுடைய யோகராஐ டேவிட் மற்றும் 20 அகவையுடைய உதவியாளர் ஜோசெப் சுகந்திராஐ என தெரியவந்துள்ளது. http://www.pathivu.com/ind…
-
- 0 replies
- 587 views
-
-
ஊக்கமருந்து சோதனையில் சிந்தன விதானகே தோல்வி பொதுநலவாய விளையாட்டு விழாவில் பளுதூக்குதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இலங்கை வீரரான வீசிந்தன விதானகே தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் சித்தியடையத் தவறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெறும் ஆசிய பளுதூக்குதல் போட்டியின்போது சிந்தன விதானகேயிடம் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் வெற்றி பெறவில்லை. சிந்தன விதானகேயிடம் வழக்கமான சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக விளையாட்டுத்துறை மருத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. பொதுநலவாய போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்ற இலங்கை குத்;துச்சண்டைவீரரான மஞ்சு வன்னியாரச்சி ஏற்கெனவே ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றதால் அவரின் தங்…
-
- 1 reply
- 732 views
-
-
புலிகளுடனான யுத்தவெற்றியை சித்தரிக்கும் படங்கள் கொழும்பில் அதிநவீன திரைகளில் காண்பிக்கப்படுகிறது: 01 ஜனவரி 2015 இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கடும் எதிர்ப்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- விடுதலைப் புலிகளுடனான யுத்தவெற்றியை சித்தரிக்கும் படங்கள் கொழும்பின் பல பகுதிகளில் அதிநவீன திரைகளில் காண்பிக்கப்படுவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரச்சார பிரிவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல்ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட அதிநவீன டிஜிட்டல் திரைகளை இந்த படங்களை காண்பிப்பதற்காக பயன்படுத்துகின்றனர், அந்…
-
- 3 replies
- 677 views
-
-
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றை நிகழ்த்தினார் ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக தாம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை தேர்தல் பிரசாரப் பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாக மைத்திரிபால சிறிசேன கூறினார். எனினும் தமது தேர்தல் பிரசார பணிகளுக்கு எதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் செயற்பட்டு தேர்தல் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கூறினார். தாம் வெற்றியீட்டினால் நாடு பிளவுபடும் என சு…
-
- 34 replies
- 2.1k views
-
-
ஈழத்தின் வரலாற்றுப் புகழ்வாய்ந்த யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாக் காலத்தில் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்றையதினம் ஒரு லட்சத்துக்கு அண்மித்த பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியப் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதுதவிர வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த மக்களும் அதிகளவில் கலந்துகொண்டுள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து அதிகளவான மக்கள் வந்துபோவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 25 நாட்களைக் கொண்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கடந்த 16ஆம் நாள் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமானது. எதிர்…
-
- 0 replies
- 1.7k views
-
-
Published By: VISHNU 05 JUN, 2023 | 02:24 PM வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (ரி.ஐ.டி) திங்கட்கிழமை (05) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவரையே புதன்கிழமை 07 ஆம் திகதி காலை 9 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பிரிவு 01 இன் மூ…
-
- 4 replies
- 615 views
- 1 follower
-
-
முகமாலையில் எறிகணைத் தாக்குதலில் படைச்சிப்பாய் பலி. ஒருவர் காயம். யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்கப் பகுதிகளிலிருந்து சிறிலங்காப் படையினர் நேற்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி எறிகணைவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலுக்குப் பதில் தாக்குதலை விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போது ஒரு சிறிலங்காப் படைச்சிப்பாய் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://sankathi.org/
-
- 3 replies
- 1.9k views
-
-
சணல்4 வீடியோ உண்மையானது அல்ல அது போலியானது என கொழும்பில் இருந்து அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்க ஜெனிவாவில் வேறுவிதமாக அரசாங்க பிரதி நிதிகள் அறிக்கை வாசித்தனர். அங்கேயும் இரு அணியாக செயற்பட்ட குழுக்களிடையே வித்தியாசமான அறிக்கையால் சலசலப்பு ஏற்பட்டது. இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிஙக தனது அறிக்கையில் சனல்4 பொய்யானது அதனை விசாரிக்குவோ அதுபற்றி கதைக்கவோ அரசாங்கம் விரும்பவில்லை என கூறினார். ஆனால் பின்னர் உரையாற்றிய இலங்கை சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் அறிக்கை வாசிக்கும் போது சனல் 4 வீடியோ தெளிவின்மையினால் அது தொடர்பில் முழுமையான மதிப்பீடு செய்யாமல் விலக்கி வைக்கப்பட்டது என அறிக்கை சமர்ப்பித்தார். இரண்டுமே திட்டமிட்டுத்தான் வாசிக்கப்பட்டதா என்று கூட தோன்றுகின்றது…
-
- 4 replies
- 1.7k views
-
-
“மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்றால் விக்கியின் தலைமையின் கீழ் சந்தோசமாகச் செயற்பட நாங்கள் தயார்”..... எம்.ஏ.சுமந்திரன் “தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தலைமைப் பாத்திரத்தில் தவறிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்பவர், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க முடியாது. அதற்குச் சாத்தியமில்லை. ஆனால், தானே விரும்புகின்ற தனது நான்காவது தெரிவின்படி, கட்சி அரசியலைவிட்டு விலகி — இங்கே இருக்கின்ற அரசியல் கட்சிகளையும், வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து — தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வினைப் பெறும் முயற்சியின் ஒட்டுமொத்தமான தலைமை பாகத்தை வகிக்கும் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்க அவர் முன்வருவாரானா…
-
- 10 replies
- 1.7k views
-
-
இலங்கையின் கீழ்த்தரமான அரசியல்: அமெரிக்கா எச்சரிக்கை வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, யூன் 5, 2011 இலங்கை அரசாங்கத்தினால், போர் வெற்றிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பாதுகாப்புத்துறை கருத்தரங்கில் அமெரிக்க தூததரக அதிகாரி பங்குபற்றியதாக சிங்கள அரசு பிரச்சாரம் செய்திருந்தது. அமெரிக்கா சார்பில் கலந்துகொண்டவர்கள் என சில கருத்துக்களையும் சிங்கள அரசு பரப்பியது. ஆனால் இத்தைகைய சிங்கள அரசின் பரப்புரையினை அமெரிக்கா முற்றாக மறுத்துள்ளதுடன் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் போர்க்குற்றம் விசாரிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையின் சிபார்சுகளிற்கும் தாம் முழுமையான ஆதரவில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளது. உண…
-
- 5 replies
- 1.4k views
-
-
சுவிஸிலிருந்து தாயகம் திரும்பியவர் மீது பொலிஸார் தாக்குதல்! சுவிஸ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய ஒருவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத் தாக்கப்பட்டுள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஒருவர் தனது பரம்பரை சொத்தை மீட்பதற்கு நாட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் உடுவில் மகளிர் கல்லூரிக்கு அண்மையிலுள்ள பல கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்குச் சொந்தக்காரரான மொறிஸ் அருணாசலம் பிரகாஷ் என்பவர், தனது பரம்பரை சொத்தை மீட்க தாயகம் திரும்பியுள்ளார். அது தொடர்பான ஆவணங்களை உடுவில் பிரதேச சபையில் சமர்ப்பித்து அவற்றுக்கான உரிமத்தையும் கோரியுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்பது தொடர்பில் உ…
-
- 0 replies
- 443 views
-
-
சிறிலங்கா அரசின் கூற்றை கேலிசெய்யும் விமர்சகர்கள். - பண்டார வன்னியன் Tuesday, 27 March 2007 09:56 கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் வான்படை விமானங்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசதரப்பு கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் கோழைத்தனமான செயல் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. வானூர்திகள் மீது தாக்குதல் நடத்த புலிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இராணுவ விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கையிலையே இது ஒரு கேலிக்குரிய பேச்சு எனத்தெரிவித்தனர். சிறிலங்கா அரசபடைகள் தொடச்சியாக ம…
-
- 5 replies
- 2.1k views
-
-
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளார். காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட உள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணப் பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் விரைவில் பேச உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 12ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். எனினும், இந்த ச…
-
- 1 reply
- 317 views
-
-
ஊரடங்கு அமுலும் இராணுவ அடக்குமுறையும் - பண்டார வன்னியன் Thursday, 05 April 2007 11:10 யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான ஒரேயொரு தரைவழிப் பாதையான ஏ9 பாதையை திட்டமிட்டு மூடி திறந்த வெளிச்சிறைச்சாலையாக குடாநாட்டை வைத்திருக்கும் சிறிலங்காப் படைகளால் மக்கள் படும் துன்பங்கள் சொல்லிள் அடங்காதவை. வெள்ளைவான் கடத்தல்கள்,படுகொலைகள் என யாழ.;குடாநாட்டு மக்கள் பாரிய மனித அவலத்தில் சிக்கி தவிக்கின்றனர். இராணுவ நலன்களுக்காக அடிக்கடி ஊரடங்கு நேரத்தை மாற்றும் பலாலி சிறிலங்கா படைத்தள அதிகாரிகள் மக்களை சிறைக்கைதிகளை விட மிக மோசமாக மனித நேயமற்று நடாத்துவதாக யாழ்.குடா நாட்டு மக்கள் விசனமடைந்துள்ளனர். இதே போன்றே கடற்றொழிலாளர்களை குறிப்பிட்ட நேரம் குறிப்பிட்ட துரம் கடலுக்க…
-
- 0 replies
- 845 views
-
-
இராஜதந்திர மரபை மீறினார் ரணில் JAN 27, 2015 | 5:08by கார்வண்ணன்in செய்திகள் இராஜதந்திர மரபுகளை மீறி, கொழும்பில் நேற்று நடந்த இந்தியாவின் குடியரசு நாள் வரவேற்பு விழாவில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். சிறிலங்காவின் அமைச்சர்களே பிரதம விருந்தினர்களாக, இந்த நிகழ்வில் பங்கேற்பது வழக்கமாகும். ஆனால், அந்த மரபை மீறி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய குடியரசு நாள் வரவேற்பு நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார். இந்த வரவேற்பு விழாவில், கொழும்பின் உயர்மட்டப் பிரமுகர்கள் பங்கேற்றனர். 26 அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ,மற்றும் இந்திய, சிறிலங்கா நிறுவனங்களின் ம…
-
- 1 reply
- 933 views
-
-
ஒரு பக்கம் தொல்லியல் திணைக்களம், மறுபக்கம் வனவளத் திணைக்களம்- முல்லைத்தீவில் மக்களுக்குச் சொந்தமான 100 ஏக்கர் காணி அபகரிப்பு! October 2, 2018 குளோபல் தமிழ் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தால் காணி அபகரிக்கப்படும் நிலமை தொடர்வதாகவும் பொதுமக்களு்ககுச் சொந்தமான 100 ஏக்கரை் நிலப் பகுதி அபகரிக்கப்பட்டு, எல்லையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, செம்மலை புளியமுனைப் பகுதியில் பொதுமக்களின் தோட்டக் காணிகள் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 311 views
-
-
Posted by சோபிதா on 23/06/2011 in செய்தி சார்க் நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமென சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் பாத்திமத் தியானா சயீட் வலியுறுத்தியுள்ளார். நேற்று பின்னேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் வைத்துச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கை தற்போது ஒரு நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. அதிலிருந்து வெளிவர சார்க் அமைப்பின் ஏனைய நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.ஏனெனில் சார்க் அமைப்பின் வளர்ச்சிக்கு கடந்த காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏராளம் பங்களிப்பை வழங்கியுள்ளார். http://www.eelampress.com/2011/06/27659/
-
- 2 replies
- 926 views
-
-
இடம்பெயர்ந்து, 20 ஆண்டுகளுக்கு மேலாக வவுனியா சிதம்பரபுரம் முகாமில் உதவிகளின்றி வாழ்ந்துவருகின்ற குடும்பங்களை அதே இடத்தில் காணிகள் வழங்கி குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார். யுத்தங்காரணமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழகம் சென்று, பின்னர் 1995 ஆம் ஆண்டு இலங்கையில் மீளக்குடியேற்றுவதற்காக அழைத்துவரப்பட்ட ஆயிரக்கணக்கான இடமபெயர்ந்த குடும்பங்கள் வவுனியா சிதம்பரபுரம் சிறப்பு அகதிமுகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இவர்களை தற்காலிகமாக இந்த முகாமில் தங்க வைத்திருந்தது. எனினும், திட்டமிட்டபடி 6 மாத காலத்துக்குள் அந்தக் குடும்பங்களை மீள்கு…
-
- 0 replies
- 455 views
-
-
” உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால் தீர்வு கிடைக்குமா’ – நாமலிடம் சிறிதரன் கேள்வி! “ உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால், இணைந்த வடக்கு, கிழக்கில் அரசியல் தீர்வை வழங்க தயாரா? தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியுமா” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உரையாற்றினார். இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச “ தமிழ் மக்களுக்கு 2015 இல் வழங்கிய வாக்க…
-
- 2 replies
- 532 views
-
-
இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் கூறுவதெல்லாம் பொய் - தமிழக மலேசிய உண்மையைக் கண்டறியும் குழு:- 27 ஜூன் 2011 விசேட செய்தியாளர் அருள் எழிலன்:- இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம் நடந்த போருக்குப் பிறகு தமிழ் மக்களின் நிலை குறித்த உண்மை நிலை அறிய மலேசியாவில் இருந்து ஒருவரும், தமிழ்நாட்டில் இருந்து நான்கு பேரும் ஆகிய ஐந்து பேர் கொண்ட உண்மை அறியும் குழு கடந்த 25.05.2011 அன்று இலங்கை சென்றது. அக்குழுவில் இடம்பெற்றுள்ள பர்னாட் பாத்திமா, பத்மாவதி, சண்முக பிரியா, இருதய ராஜ், தென்பாண்டியன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18, 19ம் தேதி நடந்த போருக்குப் பின் தமிழ் மக்களின் சமூக அரசியல், பொருளாதார, பண்பாட்டுச…
-
- 0 replies
- 406 views
-
-
சரணடைந்தோர் கொலை; விசாரிக்க மூன் இணக்கம்; ஐ.நா. வெளியேறியது குறித்தும் ஆராயப்படும் Sunday, July 3, 2011, 9:13 உலகம், சிறீலங்கா வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது, போராளிகளைச் சரண் அடைவதற்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய உறுதி மொழிக்கு முரணாக அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு வழங்கிய பரிந்துரைக்கு இணங்க விசாரணை நடத்தப் படும். ஐ.நா.பொதுச் செயலாளர் பான்கீமூன் இதற்கு இணக்கம் தெரிவித் திருப்பதாக அவரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இன்னர் சிற்றி பிறஸ் ஊடகத்துக்குத் தெரிவித்தார். அத்தோடு கிளிநொச்சியில் இருந்து ஐ.நா.வின் அமைப்புகள் வெளியேறியது குறித்தும் விசாரிக்கப்படும் என்றும் பொதுச் செயலாளர் அறிவித்தார் எனவும் த…
-
- 2 replies
- 430 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று இணுவிலில் மௌனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.அரசியல் சுயநலன்களுக்காக எல்லை மீள் நிர்ணயத்தின்போது இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைத்து தொன்மைமிகு இணுவில் துண்டுபோடும் கைங்கரியம் இணுவிலில் உள்ள சில புத்திஜிவிகளால் திரைமறைவில் செயற்பட்டுவருவதாக இணுவில் கிராம மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பில் ஆராயும் மக்கள் ஒன்றுகூடல் ஒன்று நேற்று இணுவில் சிவகாமி அம்மன் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இணுவிலைத் துண்டாடும் குறித்த முயற்சிக்கு எதிர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
[Thursday, 2011-07-07 11:03:53] எதிர்வரும் யூலை 09 ஆம் நாள் தென் சூடான் குடியரசு என்ற ஒரு புதிய நாடு பிறக்கவுள்ளது. இலடச்சக்கணக்கான தென் சூடானிய மக்கள் அதன் பிறப்பைக் கொண்டாட இருக்கிறார்கள். தென் சூடானின் தலைநகரம் யுபா (Juba) விழாக் கோலம் பூண்டுள்ளது. தென் சூடான் அடக்குமுறைக்கு எதிராகப் பல ஆண்டுகள் போராடி வந்துள்ளது. ஆபிரிக்காவின் எண்ணெய் வளமிக்க நாடான சூடானுக்கு 1956 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. 1989 ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து ஒமர் அல் பக்ஷீர் ஆட்சியைப் பிடித்தார். இஸ்லாமிய சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தார். இதற்கு தென்பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இனக் கலவரம் வெடித்தது. வடக்கில் அரபு முஸ்லிம்களும், தெற்கில் பழ…
-
- 6 replies
- 836 views
-
-
கடந்த அரசாங்கத்தின் போது அறுகம்பே மற்றும் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட சொகுசு ஜனாதிபதி மாளிகைகள் இரண்டும் ஹோட்டல்களாக மாற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாளிகைகள் இரண்டும் ஜனாதிபதி செயலக நிதியத்திலிருந்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவற்றை நிர்மாணிப்பதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவற்றை நிர்மாணிப்பதற்காக 90 பில்லியன் ரூபாவுக்கு அதிகமாக தொகை செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/139922#sthash.BSx7J8Mv.dpuf
-
- 0 replies
- 249 views
-