Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்ட வேண்டும் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரான சி.வே விக்னேஸ்வரன் தெரிவித்தார். முஸ்லிம் கட்சிகளை தொடர்ந்து நம்பியிருக்காது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் கல்முனை மேயரும் செனட்டருமான மசுர் மௌலானவின் அகவை என்பது நிறைவு விழா கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் தலைமையுரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அதற்கான கொள்கை திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும். இதன் மூலம் பெறவேண்டியவற்றை இலகுவாக பெறமுடியும். இ…

  2. வெளிநாடுகளில் புகலிடம் கோருவோரின் குடியுரிமையை நீக்குகிறது சிறிலங்கா வெளிநாடுகளில் அடைக்கலம் கோருவோரின் குடியுரிமையை நீக்கும் புதிய சட்டம் ஒன்றை சிறிலங்கா கொண்டு வரவுள்ளது. இந்தத் தகவலை சிறிலங்காவின் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். புதிய சட்டத்தின் படி, வெளிநாடுகளில் புகலிடம் கோரியோர், சிறிலங்காவில் இரட்டைக் குடியுரிமைபெற விண்ணப்பிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் இரட்டைக் கு…

  3. மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிடவுள்ள 140 பக்கங்களைக் கொண்ட அறிக்கை பிப் 22, 2013 தமிழ் பெண்கள் மீதான சிறீலங்கா அரசபடைகளின் பாலியல் கொடுமைகளை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கையொன்றை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிடவுள்ளது. 140 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை வரும் 25ஆம் நாள் வெளியிடப்படவுள்ளதாக, நியுயோர்க்கைத் தளமாக கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டவர்கள் மீது சிறீலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுகள், பாலியல் துன்புறுத்தல்கள், மூன்றாந்தர சித்தரவதைகள் குறித்து இந்த அறிக்கை விபரிக்கவுள்ளது. “நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்” – தமிழர்களுக்கு எதிரான ச…

  4. புலிகள் ஜெனீவாவை ஆக்கிரமித்து விட்டார்கள்: ரோகான் குணரட்ண ! Feb 20, 2013 அன்று பிரசுரிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஜெனீவாவை ஆக்கிரமித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார் ரோகான் குணரட்ண. சிங்கப்பூரில் இருந்து இயங்கிவரும் கற்கை மையத்தின் தலைவரும், மகிந்தரின் ஆலோசகருமான ரோகான் குணரட்ண , விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் ஜெனிவாவை முற்றுகையிட்டு விட்டதாகவும், அதற்கான கடுமையான பரப்புரைகளில் அவர்கள் இறங்கிவிட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரவையும், அதன் உப அமைப்பும், நாடு கடந்த அரசும் மற்றும், மக்களவையும் இணைந்து பாரிய பரப்புரைகளை இலங்கைக்கு எதிராக ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு அங்கமாகவே , தேசிய தல…

    • 21 replies
    • 1.2k views
  5. பாலச்சந்திரன் கொலை குறித்து இப்போதைக்கு கருத்து கூற முடியாது!- பான் கீ மூன் [Friday, 2013-02-22 07:28:04] இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன ஒரு உண்மையான மற்றும் விரிவான தேசிய செயல்முறை மூலம் இடம்பெற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐநா அலுவலகத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி இவ்வாறு கூறியுள்ளார். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் குறித்து வெளியான வீடியோ, படங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் இங்கு கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மார்டின் நெசர்க்கி, 'நாங்கள் அந்த வீடியோ, படங்களை பார்த்தோம். அது தொடர்பான அறிக்கையும் எமக்கு கிடைத்து…

  6. தமிழகம் வந்த சிங்கள எம்.பிக்கு எதிர்ப்பு - தாக்குதல் ( 29 படங்கள் ) சிங்கள எம்பி கருணா ரத்னா ஜெயசூர்யா தமிழகம் வந்தார். சீர்காழி அருகே உள்ள திருக்கடையூரில் ஆலய தரிசனம் செய்ய வந்தார். அங்கேயே அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இதையடுத்து அவர், மனைவி மற்றும் உறவினருடன் திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலில் தங்கியிருக்கிறார். இந்த ஓட்டலையும் முற்றுகையிட்டு தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர் வந்த கார் மீதும் தாக்குதல் நடத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். படங்கள் : ஜே.டி.ஆர். நன்றி: http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=92646

    • 9 replies
    • 1.2k views
  7. பிரபாகரனை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயற்சிக்கப்படவில்லை – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 21 பெப்ரவரி 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயற்சி;க்கப்படவில்லை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.2009ம் ஆண்டு மே மாதம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை யுத்த வலயத்திலிருந்து பாதுகாப்பாக வெறியேற்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைப் பொறுப்பாளர் யாவீஸ் கியோவானோனி தெரிவித்துள்ளார்.இவ்வாறான காரியங்களில் ஈடுபடுவது தமது பணியல்ல என அவர் சுட்டிக்காட…

  8. கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினரான பிரியந்த பத்திரன தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண சபைத் தலைவர் ஆரியவதி கலப்பதியின் புதல்வாரன சுசந்த கலப்பதியினால் பிரியந்த பத்திரன தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்;த நிலையிலேயே இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு தரப்பினரும் உப்புவெளி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர் http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59372-2013-02-22-04-05-50.html

    • 0 replies
    • 310 views
  9. இலங்கைக்கு ஹலால் ஒரு புற்று நோயாகும். உலமா சபை ஹலால் ஊடாக சாதாரண முஸ்லிம்களின் உரிமைகளை மீறிச்செயற்படுவது மாத்திரமின்றி அடிப்படைவாத பயங்கரவாதத்தையும் பரப்புகின்றது. எனவே இதனை இல்லாதொழிக்க வேண்டியது கட்டாயமென்று பொதுபல சேனா வலியுறுத்தியுள்ளது. மக்கா சென்று நாடு திரும்பும் முஸ்லிம்கள் சவூதியினால் அடிப்படைவாதத்தையும் இலங்கையில் பரப்புகின்றனர். முழு உடம்பையும் கறுப்பு போர்வையில் மூடிக்கொண்டு செல்ல இலங்கை ஒன்றுமே பாலைவனம் அல்ல என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில், உலமா சபை ஹலால் சான்றிதழ் மூலம் நாட்டில் பயங்கரவாதத…

    • 2 replies
    • 518 views
  10. By M.D.Lucias 2013-02-21 16:43:10 லங்கா ஈ நியூஸ் இணையத் தளத்தின் செய்தியாளரும் கேலிச் சித்திரம் வரைபவரும் பத்தியெழுத்தாளருமான பிரகீத் எக்நெலிகொட காணாமற்போய் ஆயிரத்து 124 நாட்கள் நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு கடிதம் ஒன்றை பிரகீத் எக்நெலிகொட மனைவி சந்தியா எழுதியுள்ளார். இக்கடிதத்தை கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. தூதரகத்தில், பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி சந்தியா ஒப்படைத்தார். அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, படப்பிடிப்பு: ஜே. சுஜீவகுமார் 'எனது கணவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி காணாமல் போயிருந்தார். சரத் பொன்சேகா மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் போட்டியிட்ட ஜனாதிபதித் தே…

    • 2 replies
    • 264 views
  11. அனைத்துலக சட்டமீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரியும், சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மன்னார் ஆயர் மற்றும் வடக்கு,கிழக்கை சேர்ந்த 132 கிறிஸ்தவ குருமார் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. “அரசியல்தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் குறித்த விவகாரங்களைக் கையாளும் ஆணையாளரை நியமித்தல், சிறிலங்கா இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள், இறந்தவர்கள், காணாமற்போனவர்களை நினைவுகூருதல் என்பன உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான பரிந்துரைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதுடன், மீறப்படுகி…

    • 12 replies
    • 896 views
  12. இந்தியா பிரபல்யமான நாடு இலங்கையோ சிறியத்தீவு இந்த இருநாடுகளுக்கும் இடையில் தீ மூட்டுவதற்கு சிலர் முயற்சிகின்றனர் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாரளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர்கள எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். முன்னதாக கேள்விகளை எழுப்பிய ஊடகவியலாளர்கள், இந்திய மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர்களின் மீன் பிடி உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமன்…

  13. "உலகத் தமிழர்கள் இலங்கை மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்" ==================== ஒன்றரைக் கோடி சிங்களவர்களைக் கொண்ட இலங்கை பத்துக்கோடி தமிழர்களைப் பின்புலமாகக் கொண்ட ஈழத் தமிழர்கள் மீது நடாத்திய இன அழிப்பு யுத்தத்தின் ஆதாரங்களாக இதுவரை எத்தனையோ பதிவுகளும், ஒளிப்படங்களும், புகைப்படங்களும் வெளிவந்திருந்த போதும், அவை அனைத்தும் யுத்த களம் சார்ந்த காட்சிகளாகவே பலராலும் நோக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனல் 4 தொலைக்காட்சியும், இன்டிப்பென்டன்ற் பத்திரிகையும் வெளியிட்ட இரு புகைப்படங்களும், ஏற்கனவே வெளிவந்திருந்த ஒரு புகைப்படமும் சிங்கள தேசத்தின் உச்சக் கொடுரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் கொதித்துப் …

  14. போர்க் குற்றங்களுக்கான புதிய சான்றுகள் - சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்குமா? [ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 08:47 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காப் படைகளின் கண்மூடித்தனமான தாக்குதலில் தமிழ்ப் பெண்கள் மற்றும் சிறார்கள் படுகொலை செய்யப்பட்டமை, மற்றும் ஏனைய திட்டமிட்ட படுகொலைகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்கப் போதியதாக இல்லையா. இந்நிலையில், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான புதிய சான்றுகளைக் கொண்டாவது சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்குமா? சிறிலங்காவில் இடம்பெற்ற …

  15. பாலச்சந்திரன் கொலையும் தவணை முறை உணர்ச்சியும் : கலாதரன் இன்று எமக்குத் தேவை அடிப்படைவாத அடையாளங்களா அன்றி ராஜபக்ச பாசிசத்தையும், பேரினவாதிகளையும் பலவீனப்படுத்தும் உடனடி நோக்கமா என்ற கேள்விக்குப் பதில் கிடைத்தால் நண்பர்களை சுலபமாக அடையாளம் கண்டுவிடலாம். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டது குறித்த காட்சிகளின் பின்னர், ஜெயலலிதா, கருணாநிதி, சீமான், வை.கோபாலசாமி, ராமதாசு போன்ற அதே முகங்கள் மறுபடி களத்தில் குதித்து நாளை மரணித்துப் போகும் சீசன் வியாபாரத்திற்கு வந்துவிட்டார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்றுமே ஆகிவிடாத உண்ர்ச்சி வயப்படுத்தலுக்கு இவர்கள் அனைவரையும் உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரச பாசிஸ்ட் ராஜபக்சவ…

  16. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். யதாதர்த்தமானதும், தேசிய ரீதியானதுமான பொறிமுறைமை ஒன்றின் மூலம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் குறித்த முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட வேணடுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பிரித்தானியாவின் சனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சி குறித்து பான் கீ மூன் அறிந்து கொண்டுள்ளதாக, அவரது பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், குறித்த வீடியோ காட்சி தொடர்பில் எவ்வித கருத்துக்களும் தற்போதைக்கு வெளியிடப்ப போவதில்லை என அவர் குறப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை யுத்தம் தொடர்பில் இறுதியாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட அறிக்…

  17. அம்பாறை மாவட்டம் சேனாநாயக்க சமுத்திர சரணாலாய பகுதியில் அதிர்வு பிப் 22, 2013 அதிர்வுகளின் போது ஏற்படுகின்ற ஒலி அலைகளை அடையாளம் கண்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிக்கின்றது. சேனாநாயக்க சமுத்திர சரணாலாய பகுதியிலிருந்து இந்த ஒலி அலைகள் எழுவதாக பணியகத்தின் தலைவர் என். பீ். விஜயானந்த குறிப்பிட்டார். வடினாகலயை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வுகளின் போது ஏற்படுகின்ற ஒலி அலைகள் அதற்குரிய மானிகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இயற்கையான நில அதிர்வுகளின்போது எற்படுகின்ற ஒலி அலைகளை மானிகளில் அளவிட முடியாது எனவும் அவர் கூறினார். இதன் காரணமாக இந்த நில அதிர்வுகள் மனித செயற்பாடுகளின் பிரதிபலனாக இருக்கலாம் என்ற சந்தேக…

  18. ஜெனீவா அமர்வுகள் குறித்த அரசாங்கத்தின் திட்டங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்கவுகள் குறித்த உள்நாட்டு வெளிநாட்டு சவால்களை எதிர்நோக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். சகலவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=76500&category=TamilNews&language=tamil

  19. சனல்-4 திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல்: அரசு வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013 00:45 -அழகன் கனகராஜ் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படம் தாங்கிய ஒளிநாடாவை முழுமையாக நிராகரிப்பதாக தெரிவித்த அரசாங்கம் இது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலாகும் என்றும் தெரிவித்துள்ளது. ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாரளருமான கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலேயே இந்த சனல்-4 நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சப…

  20. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடைய மகன் பாலச்சந்திரன் அவர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்களை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இப்படங்கள் பாலச்சந்திரன் மோதல் நடைபெற்றபோது இடையில் சிக்கி இறக்கவில்லை என்பதனையும் மாறாக சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னரே சுட்டுக் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதனை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது. பன்னிரண்டு வயதுப் பாலகனான பாலச்சந்திரன் போராளியல்ல அவர் ஒரு பொது மகன் என்பது உலகம் அறிந்த விடயம். கைதியாக உள்ள ஓரு போராளியைக் கொல்வதே சர்வதேச சட்டத்தின் கீழ் ஓரு மோசமான குற்றமாக இருக்கும் நிலையில், தாம் கைது செய்து வைத்திர…

  21. புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்பாக இராணுவப் பதுங்குகுழி போன்று காட்சியளிக்கும் ஓர் இடத்தில் பிஸ்கட் சாப்பிடும் படத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், இலங்கை அரசைத் தண்டிக்கத் தவறிய ஐ.நாவுக்கு தற்போது அதற்கான சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது என்றும் இதை ஐ.நா. சரியாகப்பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பாலச்சந்திரன் குறித்த போர்க்குற்ற ஆதாரம் மட்டுமன்றி இன்னும் அதிர வைக்கும் பல ஆதாரங்கள் தம்மிடம் இருக்கின்றன என்றும் சனல் 4 அதிரடியாக அறிவித்துள்ளது. சனல் 4 ஆவணப்பட இயக்குனர் கல்லும் மெக்ரே, தமிழக தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரிட்டனிலிருந்து வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசை…

  22. இதற்குப் பின்னால் மாயக்கரமொன்று இருப்பதையே காட்டுகிறது… குருடர்கள் தவிர்ந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும், ஒன்றாக இணைத்து பேச வைக்கும் வல்லமை புகைப்படத்திற்கு உண்டு. ஒரு மனிதன் பேசுவதைவிட அவனுடைய உடல் மொழியின் மூலமாக அவன் உள்ளத்தை அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள் உடலியல் மொழி ஆய்வாளர். புகைப்படங்களை ஆதாரமாக வைத்து நடந்துள்ள சம்பவங்களை கண்டறிவது ஒரு கலையாக இருக்கிறது, கிறிஸ்துவின் கடைசி இராப்போசனம் என்ற ஓவியம்தான் இயேசுநாதர் வாழ்வின் கடைசி நேரத்தின் வரலாறாக இருக்கிறது. செல்வன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், சுடப்பட்ட பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கிறீத்துவின் கடைசி இராப்போசனம் போல பாலச்சந்திரனுடைய கடைசி நேரங்களை நமக்கு தெளிவாக …

  23. புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்பாக இராணுவப் பதுங்குகுழி போன்று காட்சியளிக்கும் ஓர் இடத்தில் பிஸ்கட் சாப்பிடும் படத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், இலங்கை அரசைத் தண்டிக்கத் தவறிய ஐ.நாவுக்கு தற்போது அதற்கான சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது என்றும் இதை ஐ.நா. சரியாகப்பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பாலச்சந்திரன் குறித்த போர்க்குற்ற ஆதாரம் மட்டுமன்றி இன்னும் அதிர வைக்கும் பல ஆதாரங்கள் தம்மிடம் இருக்கின்றன என்றும் சனல் 4 அதிரடியாக அறிவித்துள்ளது. சனல் 4 ஆவணப்பட இயக்குனர் கல்லும் மெக்ரே, தமிழக தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரிட்டனிலிருந்து வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்துள்ளார். இலங்…

  24. தோழர் சனார்த்தனம் மறைவு, ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெரிய இழப்பு அறிஞர் அண்ணா அவர்களால் ஈர்க்கப்பட்ட மாணவர் பட்டாளம், இந்தி எதிர்ப்புப் போர்க்களம் கண்டு வெற்றிவாகை சூடி, வீர வரலாறு படைத்த தளபதிகளின் வரிசையில், மாணவர் தலைவராய் விளங்கியவர் தோழர் இரா. சனார்த்தனம். அனைத்துக் கல்லூரி மாணவர்களின் சார்பில் ஜனநாயகப் பாதுகாப்பு மாநாடு நடத்தினார். அன்றைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். ஈழத்தின் தந்தை செல்வா அவர்களோடு நெருங்கிப் பழகியதுடன், அன்னாரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்து ஈழத் தமிழர்களுக்காகப் பல கூட்டங்களை நடத்தினார். உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பை நடத்தி வந்தார். தன் வாழ்நாள் முழுவதும் ஈழத்…

    • 25 replies
    • 1.2k views
  25. எவன் என்று நினைத்தாய் எதைக்கண்டு சிரித்தாய் விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புதுரூபம்

    • 0 replies
    • 719 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.