ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படுவதில் எதிர்பாராத பல சிக்கல்களை எதிர் கொள்வதாக தமிழகத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தமிழீழ விடுதலையின் தேவையினையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றதற்கான காரணிகளையும் அழுத்தம் திருத்தமாக வெள்ளித் திரையில் பதிவு செய்துள்ளது. இந்தப் படத்தின் முக்கிய பாத்திரமான சிறுமி புனிதவதியின் துன்பம் நிறைந்த வாழ்வு நமது சொந்தங்கள் தமிழீழத்தில் இந்த வினாடிவரை அனுபவித்து வரும் அல்லல்களைப் பிரதிபலிக்கிறது. தமிழீழத்தில் சிங்கள வெறியர்கள் நடத்திய படுகொலைகள், பாலியல் வன்முறைகள், பாடசாலைகள் மீதான விமானத் bதாக்குதல்கள், தமிழ் இளைஞாகளின் கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி, நி…
-
- 1 reply
- 1.2k views
-
-
கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தினில் இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி பிரேரிக்கப்பட்டுள்ள போதும் எந்தவகையான சமஸ்டி தீர்வென முடிவாகவில்லையென தெரிவித்துள்ளார் சுமந்திரன். சுமந்திரனின் முகநூல் சந்திப்பென நடத்தப்பட்ட நிகழ்விற்கு வாகனங்களினில் ஏற்றிவரப்பட்ட இளைஞர்கள் ஒருபகுதியினர் கலந்து கொண்ட நிகழ்வாக அது அமைந்திருந்தது.நிகழ்வினில் ஊடகவியலாளர்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையினில் சுமந்திரனிடம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றினில் எந்த வகை சமஸ்டி சாத்தியம் என்று கேட்கப்பட்டிருந்தது.அதற்கு பதிலளித்த சுமந்திரன் சர்வதேசத்தின் அழுத்தங்கள் ஏற்பட அப்பொழுது பேரம்பேச்சு ஆரம்பமாகும். அப்போதுதான் என்னவகையான சமஸ்டி என்பது பற்றி கூறமுடியும் என்றார். ஆனால், சமஸ்டிக்கான அடிப்படை ப…
-
- 0 replies
- 1k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான 700 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் 14 கோடி ரூபா பணம் தொடர்பில் பிரதான விசாரணையாளர்களான சி.ஐ.டி.யினர் அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந் நிலையில் அவற்றை முடக்கி, அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை சிறப்பு சி.ஐ.டி. குழு ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதில் 14 கோடி ரூபா பணத்தில் ஒரு தொகுதியை சி.ஐ.டி. மீட்டுள்ளதுடன் ஏனைய பணம் வங்கிக்கணக்குகளில் உள்ளமை கண்டுபிட…
-
- 1 reply
- 608 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2015, 10:45.26 AM GMT ] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்தவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அனுர பிரியதர்ஷன யாப்பாவும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கட்சி திருத்தச்சட்டத்திற்கமையவே அவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சின் பொதுச்செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளராக பேராசிரியர் விஷ்வா வர்ணபால நியமிக்கப்பட்டு…
-
- 4 replies
- 941 views
-
-
மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது, வழக்கு எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை அடுத்த மாதம் 31 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அகழ்வுப்பணிகள் தொடர்பில் ஆலோசனை வழங்கும் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்தார். அது தொடர்பிலான அனைத்து சோதனைகளும் நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அகழ்வின் போது மீட்கப்பட்ட மனித எலும்புகள் தவிர்ந்த ஏனைய பொருட்களை நீதிமன்ற அனுமதியின் ப…
-
- 0 replies
- 372 views
-
-
22 JUN, 2024 | 12:27 PM பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்த 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் ஆணையாளர்…
-
- 1 reply
- 171 views
- 1 follower
-
-
சிறிலங்கா இராணுவத்துக்கு இந்திய அரசு ஆயுத உதவிகளை வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகத்தின் சேலத்தில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் இன்று பொதுமக்களிடம் கையெழுத்து சேகரித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
மது தான் வாழ்க்கை என்று அலையும் அப்பாக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தி பற்ரி சற்ரேனும் சிந்தியுங்கள்...... உங்களின் இந்த சிறு தனத்தால் சின்னாபின்னமாகி போகும் உங்கள் சிறுவர்களின் வாழ்வை பற்ரி சிந்தியுங்கள்...
-
- 3 replies
- 1.7k views
-
-
தேசியப்பட்டியல் விவகாரம்: ஜேவிபிக்குள்ளேயும் இழுபறி – அந்தனி ஜீவாவுக்கு வாய்ப்புக் கிட்டுமா?AUG 20, 2015 | 1:25by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களை பெற்றுள்ள ஜேவிபிக்குள்ளேயும், அந்த ஆசனங்களுக்கான நியமனங்களை செய்வது தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஜேவிபியால் சமர்ப்பிக்கப்பட்ட 29 பேர் கொண்ட தேசியப்பட்டியல் வேட்பாளர்களில் கட்சிக்கு வெளியே உள்ள புலமையாளர்களே இடம்பெற்றிருந்தனர். எனினும், அவர்களில் இருவரை தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக நியமிப்பது தொடர்பாக ஜேவிபி தலைமை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கட்சிக்கு வெளியில் உள்ளவர்களை நியமித்தால் அவர்கள் கட்சியின் நலனைப் பாதுகாப்பார்கள் என்று நம்பமுடியாது என ஜேவ…
-
- 0 replies
- 378 views
-
-
சிறிலங்காவின் ஆளும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடத்தப்படும் அபாய நிலை உள்ளதால் இது தொடர்பில் அனைத்துலக சமூகம் தலையிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 881 views
-
-
அடுத்தவாரம் ஆரம்பமாகிறது இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கு! [Thursday 2015-08-27 07:00] இந்த வருடத்துக்கான பாதுகாப்பு கருத்தரங்கு எதிர்வரும் செப்டம்பர் 1ம், 2ம் திகதிகளில் நடைபெறும் என்று இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் கருத்தரங்கு-2015 எனும் தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் உள்ளிட்ட சுமார் 350 பேர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு கலதாரி ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கின் அங்குரார்ப்பண உரையை ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய், பாதுகாப்புச் செயலாளர் பஸ்நாயக்க, இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர். இந்த ஆண்டுக்கான…
-
- 0 replies
- 266 views
-
-
(நா.தனுஜா) இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய ஓர் அரசாங்கத் தலைவராக மைத்திரிபால சிறிசேனவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு ஏமாற்றுக்காரராகத் தன்னைச் சித்தரித்துக் கொண்டுள்ள ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் இத்தோடு முடிவடைந்துவிட்டது. இனிவரும் காலங்களில் அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக் கூட மக்கள் தெரிவு செய்ய மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததையும், தமிழ் அரசியல் கைதிகளை விட…
-
- 5 replies
- 719 views
-
-
பாகிஸ்தானை விட இலங்கையிலேயே அதிகளவில் மனித உரிமை மீறல்கள் 30.11.2007 / நிருபர் குளக்கோட்டன் பாகிஸ்தானை விட அதிகளவிலான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெறுவதனால் இதனை பொதுநலவாய அமைப்பு கவனத்தில் எடுக்க வேண்டுமென கம்பஹா மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரஸ்தாபிக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகளை பயங்கரவாதியென அரசாங்கம் முத்திரை குத்துவதுடன் ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றதெனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்மகாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 983 views
-
-
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இலங்கை செல்கிறார்..அதை தடுக்கும் பொருட்டு இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்கியும், தமிழர்கள் நாம் அவர் அங்கு செல்வதை விரும்பவில்லை என்பதையும் விளக்கியும் அமெரிக்க உலகத் தமிழ் அமைப்பு அப்துல் கலாம் அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. அதே போல் இணைய மனுவும் ( online petition) உருவாக்கி இருக்கிறது. அதில் அனைவரும் கையெழுத்திடுமாறு நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதில் சொடுக்கி உங்கள் கையெழுத்துக்களை பதிவு செய்யுங்கள் https://www.change.org/petitions/dr-kalam-cautioned-on-srilanka-visit http://www.eeladhesa...ndex.php?option
-
- 6 replies
- 1.4k views
-
-
ஒற்றையாட்சியில் அதிகாரப் பகிர்வு இல்லை சமஸ்டியே இறுதி தீர்வு : சுமந்திரன் எம்.பி ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில் இதற்கு மேலும் அதிகாரங்களைப் பகிர முடியாததன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி முறையிலான தீர்வினை வழியுறுத்துவதாகவும், இதுவே தமது உறுதியான நிலைப்பாடு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். அத்துடன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா விசாரணை அறிக்கை வெளிவந்தவுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். எட்டாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று நடைபெற்ற போது, அதில் பங்கேற…
-
- 2 replies
- 1k views
-
-
உயிரிழந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயாருக்கு தமிழ் விருட்சம் அமைப்பினரால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயாரான திருமதி சுப்பிரமணியம் சின்னம்மாவிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிரந்தர வீடு அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைக்கான நிதி வழங்குமாறு கிளிநொச்சியிலுள்ள சமூக ஆர்வலர் ஒருவரின் ஊடாக வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பன் தலைவர் எஸ். சந்திரகுமாருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்று வவுனியாவிலுள்ள தமிழ் விருட்சம் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து கல் மணல், பெற்றுக்கொள்வதற்கு ஒரு தொகை நிதி உதவி வழங்கி வைக்கப்பட்…
-
- 0 replies
- 426 views
-
-
சந்தேகத்திற்கிடமான பொதியால் பீப்பிள்ஸ் பார்க்கில் பதற்றம் வீரகேசரி இணையம் கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள பீப்பல்ஸ் பார்க் கட்டட தொகுதியில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதியால் அங்கு இன்று காலை பெரும் பற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் இராணுவ தலைமையகத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, இராணுவ குண்டுச் செயலிழக்க வைக்கும் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதியை சோதனைக்குட்படுத்தினர். அதிலிருந்து இரண்டு வெற்று மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டதாக டாம் வீதி பொலிஸார் தெரிவித்தனர்.
-
- 0 replies
- 1.2k views
-
-
பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றிரவு அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.பருத்தித்துறை சக்கோட்டையைச் சேர்ந்த இருதயநாதர் மேரி டிலக்சனா (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அல்வாய் வடக்கு றோ.க.த.க. வில் கல்வி பயிலும் இந்த மாணவியின் சடலம் நேற்று இரவு அவரது வீட்டுக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்கோட்டை பழைய வேதக் கோயிலடிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இருந்தே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.மாணவி தன…
-
- 2 replies
- 1k views
-
-
31 JUL, 2024 | 05:27 PM புத்தளம் பிரதேசத்தில் இணைய வழி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 44 ஆண்களும் 09 பெண்களும் அடங்குவர். சந்தேக நபர்கள் புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து 98 கையடக்கத் தொலைபேசிகள், 44 கணினிகள் மற்றும் பல சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 1 reply
- 305 views
- 1 follower
-
-
மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதால் இலங்கை தோல்வியடைகிறது – நஸீர் அஹமட்! In இலங்கை June 18, 2019 9:33 am GMT 0 Comments 1247 by : Dhackshala மனங்களை வெல்லாது மதத்தை முன்னுரிமைப்படுத்தி வருவதால் தோல்வி அடைந்த நாடாக இலங்கை மாறி வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். அத்தோடு, நாட்டில் அதிகாரபூர்வமற்ற அதிகாரிகளாக பேரின மதவாதிகள் செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார். நாட்டின் சமகால நிலைமைகள் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில மேலும் தெரிவிக்கையில், “கடந்த 30 வருட காலமாக இடம்பெ…
-
- 8 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் நிகழ்நிலை விசா வழங்கப்படாமை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வருகைக்கான விசாவைப் பெறுவதற்கு நீண்ட வரிசைகள் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இலங்கைக்குள் நுழைவதற்கான விசா வழங்குவதில் இருந்து VFS Global நிறுவனத்தை நீக்கி, பழைய முறைப்படி விமான நிலையத்தில் விசா வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒன் அரைவல் விசா எனினும், அரசாங்கமும் குடிவரவு திணைக்களமும் பழைய முறைப்படி நிகழ்நிலை விசா வழங்குவதை ஆரம்பிக்காததால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. இந்த நிலையில், இலங்கைக்கு வரும் அனைத்து ச…
-
- 1 reply
- 271 views
- 1 follower
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் 12-ஆம் பதிவு தமிழ்ப் புத்தாண்டு புரிதல் – முன்னோட்டம் நாள்: 17.09.2015 அழகிய இளம் பாடினி ஒருத்தியைக் களிறுகள் வழங்கும் காட்டு வழியில் இசைக் குழுவினருடனும் ஆள் உயர யாழுடனும் நடத்திச் செல்கிறான் பாணர் குழுத் தலைவன் ஒருவன். பேரூர் ஒன்றில் விழாவினை முடித்துக் கொண்டு அங்கே தங்கி ஓய்வெடுக்காமலும் விருந்துணவை ஏற்காமலும் மிகவும் பொறுப்பாக எங்கோ செல்கிறான். வழியில் இன்னொரு பாணன் எதிர்ப்படுகிறான். நல்லவேளை வழியில் என்னைச் சந்தித்தாய். நீ வேறெங்கும் சென்று விடாதே! ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கும் கரிகாலனைச் சென்று பார்! என்று அறிவுரை கூறுகிறான். பீடுகெழு திருவின் பெரும்பெயர் நோன்…
-
- 0 replies
- 626 views
-
-
கல்முனை விவகாரம் போன்று ஏனைய பிரச்சினைகளுக்கும் பிக்குகள் குரல்கொடுக்க வேண்டும் – ஸ்ரீநேசன் கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலய பிரச்சினைக்கு குரல்கொடுத்ததுபோல, தமிழர்களின் ஏனையப் பிரச்சினைகளையும் தீர்க்க பௌத்த மதகுருமார் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “ கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலயக பிரச்சினைக்கு அனைவரும் குரல் கொடுத்தனர். சிறுபான்மை மக்களுக்கு உதவிபுரியும் நோக்கில் பெளத்த மதகுருமாரும் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். சிறுபா…
-
- 0 replies
- 307 views
-
-
புலிகள் கட்டுப்பட்டுப் பகுதியிலருந்து தப்பி வந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 12 பொதுமக்கள் நேற்று முன்தினம் படையினரிம் தஞ்சம் அடைந்துள்ளனர் எனப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்டம், முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மன்னார். பள்ளிமுனைக் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். 12 பேரும் சிறிய படகொன்றின் மூலம் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு மன்னார் பள்ளிமுனைக்கு வந்து கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.??? விரபாகு ஜெயக்குமார் (வயது 45) உதயகுமார் ஜெயலக்ஷசுமி 42) உதயகுமார் தர்சினி (22) உதயகுமார் ஜெயகாந்தன் (வயது 16) வேதநாயகம் ஜெயமார்க்கன் (வயது 32) ஜெயமார்க்கன் சுஜாதா (வயது 31) …
-
- 0 replies
- 1.6k views
-
-
அங்கு வாழும் மக்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இவ்வாறு ஐ.தே.கவின் பா.உ தி. மகேஸ்வரன் நேற்றைய சக்தி டிவியில் நடந்தப்பட்ட 'மின்னல்' நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். மேலும் இதனை மிக விரைவில் நாங்கள் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம். நான் யாழில் நின்ற போது பலரை அடையாளங் காணக் கூடியதாக இருந்தது. அவர்களின் பெயர் விவரங்களை நாடாளுமன்றம் கூடும் போது வெளியிடுவேன். அரசின் அங்கம் வகிக்கின்ற ஒருசில அமைச்ர்களுடைய ஆதரவாளர்கள மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் சமபந்தமாகவும் நாடாளுமன்றில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கவுள்ளேன். இராணுவத்த துணைக் குழுக்களின் அச்சுறுதல்களால் குடாநாட்டில் இருந்து மக்கள், தொழில் அதிபர்கள் எனப் பலர் அங்கிருந…
-
- 0 replies
- 1.1k views
-