ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக ஓர் தவறான தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. ஆனால் இலங்கையில் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ள பழ.நெடுமாறன், தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக கருணாநிதி திட்டமிட்டு நடத்திய இந்த நாடகத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் கருணாநிதி உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியதால்தான் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்பது போன்ற ஓர் தவறான தோற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்ட முயற்சி நடைபெற்று வருகிறது. உலக …
-
- 0 replies
- 1.1k views
-
-
தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று கொண்டாடும் உன்னத விழாவாகும்.இந்நிகழ்வானது இவ்வருடம் ஜனவரிமாதம் 14ஆம் திகதி அமைவதாக ஜோதிடம் கணிக்கின்றது. இத் திருநாளை தாம் இவ்வுலகில் நலமுடன் வாழ உதவி செய்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது. இவ்விழா சங்க காலத்தில் வேளாண்மைக்கு வேண்டிய மழை நீரையும், சூரிய ஒளியையும், காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்…
-
- 9 replies
- 3.1k views
-
-
அடக்குமுறை அரசு, போராட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களை தள்ளுகிறது – மனோ கணேசன் 22 Views தமிழ் பேசும் இலங்கையர்களின் தேசிய இருப்பை அழித்தொழிக்கும், ஒடுக்குமுறை ராஜபக்ச அரசு, தமிழ் மொழியை பேசுகின்ற, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை கடைபிடிக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை ஜனநாயக போராட்டங்களை நோக்கி தள்ளி விட்டுள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது, நடப்பு ராஜபக்ச அரசின் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற என்ற கூச்சல…
-
- 0 replies
- 453 views
-
-
ஆரம்பம் முதலே 2006ம் ஆண்டில் இருந்து சிறீலங்கா அரசு யுத்தத்துக்கான முஸ்தீபுகளில் ஈடுபடுவதற்கு இந்தியாவே காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தன. அதற்கு முன்னரும் பின்னரும் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டதில் இந்தியாவின் பங்களிப்புக்கள் பற்றிப் பேசப்பட்டு வந்தன. ஆனால் இப்போதுதான் உண்மை வெளிவருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தமிழீழத்தை விட்டு தப்பிக்கவில்லை என்றும் அவர் நீர்மூழ்கி மூலமோ அல்லது வேறு வழியிலோ தப்பிக்க முனைந்திருப்பின் இந்திய ரடார்களும் உளவு விமானங்களும் அவற்றை இனங்கண்டிருக்கும் என்று இந்திய கடற்படையும் கரையோரக் காவற்படையும் தெரிவித்திருக்கின்றன. விடுதலைப்புலிகளின் நடமாட்டங்களை தொடர்ந்து கண்காணித்து சிறீலங்காவுடன் கூட்டுச் சேர்ந்து ஆ…
-
- 3 replies
- 2.1k views
-
-
அதிகாரங்களை இல்லாதொழித்தல் என்ற வாதம் பரவலாக ஓங்கி நிற்கின்ற நிலையில், சிறுபான்மை சமூகத்தினரை அடிமைகளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாங்கு வெளிப்பட்டிருக்கிறது என்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதங்கம் வெளியிட்டுள்ளது. கிழக்கு இராணுவப் பல்கலைக்கழகம் அமையவிருப்பதாக கசிந்துள்ள தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும்போதே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி எம்.பி. இதனைத் தெரிவித்தார். அத்துடன் கிழக்கில் மக்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்துவருவதாகவும் ஹசன் அலி எம்.பி தெரிவித்தார். இதுகுறித்து கருத்துரைத்த ஹசன் அலி எம்.பி, கிழக்கில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவப் பல்கலைக்கழகம் அமையவிருப்பதாக தகவல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக எதனையும் கூறமுட…
-
- 2 replies
- 373 views
-
-
சர்வதேச உளவுப்பிரிவுகள் நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முனைகின்றன – குணவங்ச தேரர் 19 Views சர்வதேச உளவுப்பிரிவுகள் நாட்டுக்குள் செயற்படுகின்றன என்றும், தேசிய சக்திகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்சதேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:- “தேசிய சக்திகள் இணைந்துதான் இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவந்தன. எனவே, மக்கள், அரசு மற்றும் தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்காக மேற்படி சக்திகள் தொடர்ந்தும் செயற்படும். எனவே, தேசிய அமைப்புக்களுக்குள்ளும் பல பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்ப…
-
- 0 replies
- 334 views
-
-
போர் நடைபெறும் பகுதிக்குள் சிக்குண்டிருப்பது ஒருவித வேதனை. எறிகணைகள் மற்றும் ஆயுதங்களின் தாக்குதலில் அகப்பட்டு எப்போது உயிர் பிரியுமோ என்ற மரண பயம் வினாடிக்கு வினாடி மக்கள் மனங்களைக் கொன்று கொண்டிருப்பது அந்த வகை வேதனை. ஆனால் உயிரைத் தக்க வைத்து விட்டோம், அது பறிக்கப்படும் ஆபத்து 90 முதல் 95 வீதம் நீங்கிவிட்டது என்ற ஆறுதலுடன் நலன்புரி நிலையங்களுக்குப் போய்ச் சேர்ந்த பின்னர் படும் வேதனை இன்னொரு விதம். எதுவுமற்ற ஏதிலிகளாக, உடுத்த உடையுடன் முல்லைத்தீவுப் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி வந்த மக்கள்வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் அடைபட்டிருக்கும் மக்கள்படும் துன்ப துயரங்கள் நீண்ட நிரல் வரிசைப்படுத்தக் கூடியவை. இங்கே வந்து இத்துணை வடிவங்களில் அல்லற்பட்டு ஆற் றாது வி…
-
- 0 replies
- 897 views
-
-
தம்புள்ளை: ஒரே நாளில் காலி செய்யச் சொல்வதாக மக்கள் புகார் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 மே, 2013 - 15:08 ஜிஎம் பௌத்த வரலாற்று சிறப்புமிக்க தம்புள்ளை புண்ணிய பூமி பிரதேசத்தில் பாதெனிய பிரதேசம் அமைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர் இலங்கையில் தம்புள்ளை நகருக்கு அருகிலுள்ள பாதெனிய நகரில் பௌத்த புனிதப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் வாழ்பவர்கள், மாற்றுக் காணியோ அல்லது நஷ்ட ஈடோ வாங்கிக்கொண்டு அப்பிரதேசங்களில் இருந்து காலிசெய்ய வேண்டும் என்ற ஒரு உடன்பாடு சில காலம் முன்பு எட்டப்பட்டிருந்தது. இக்குடும்பங்களை திங்களன்று அழைத்துப் பேசிய மாதளை மாவட்ட அரசாங்க அதிபர், மாற்றுக் காணியோ நஷ்ட ஈடோ கேட்காமல் உடனடியாக இடத்தை விட்டு அகலவேண்டும் என்று தெரிவித்ததாக ஒரு சில …
-
- 4 replies
- 741 views
-
-
மக்கள் குடியிருப்பில் தொலைத் தொடர்பு கோபுரம்- மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு 18 Views உக்குளாங்குளம் மக்கள் குயிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு கோபுரத்தை அங்கிருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்புபட்ட அதிகாரிகளை விசாரணைகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் தொலைத் தொடர்பு கோபுரம் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நகரசபைய…
-
- 0 replies
- 746 views
-
-
“The situation in Vanni has reached colossal proportions and what is happening there is unprecedented human carnage. At this juncture we are ready to anything that is necessary to save the Tamil people trapped in the unrelenting war that is waged on them. We heed the call by the US President and are prepared to take measures that will spare the life of our people,” said Selvarasa Pathmanathan, the LTTE’s head of International Relations, in a statement issued Saturday. LTTE takes heed to Obama's call: Pathmanathan
-
- 0 replies
- 1.1k views
-
-
1983 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக போர்க் குற்ற மீறல்கள் இடம்பெற்றன என்பதை சிறிலங்காவில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் மறுத்தே வந்துள்ளன. பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து சிறுபான்மை தமிழ் மக்கள் பாரபட்சப்படுத்தப்படும் சம்பவமானது கொலனித்துவ காலத்திலிருந்து இடம்பெற்று வருகிறது. அதாவது இலங்கை பிரித்தானியாவின் கொலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த போது தமிழ் மக்களுக்குச் சார்பான தரப்பினருக்கு பிரித்தானியாவால் நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டன. சிறிலங்கா சுதந்திரமடைந்த பின்னர், சிங்கள மொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் கல்வி, தொழில் வாய்ப்புக்கள் போன்றவற்றைப் பெற்றுக் …
-
- 0 replies
- 355 views
-
-
மக்களை நீங்கள் கொல்லவில்லை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்கள்
-
- 3 replies
- 655 views
-
-
24/05/2009, 13:14 [சுடர்நிலா] “சரணடைதலுக்காக பேசுமாறு புலிகள் என்னிடம் கோரினார்கள்” சன்டே ரைம்ஸ், மேரி கொல்வின் “அது ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு ஆனால் மணித்தியாலங்களுக்குள் இறக்கக்கப்போகும் ஒருவரின் அழைப்புமாதிரி அது இருக்கவில்லை. அரசியல் துறைப் பொறுப்பாளர், பாலசிங்கம் நடேசன், திரும்புவதற்கு ஒரு இடமும் இருக்கவில்லைபோலும்.” ஏன சன்டே ரைம்ஸ் செய்தியில் இன்று மேரி கொல்வின், நடேசன் மற்றும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களின் கடைசி மணித்தியாலங்களுக்குள் அவர்களோடு தான் வைத்திருந்த தொடர்பை விபரமாகக் கூறியுள்ளார். “நாங்கள் எமது ஆயதங்களைக் கீழே போடுகிறோம்”, செய்மதித் தொலைபேசியில் சிறிலங்காவின் வடகிழக்குப்பகுதியில், கடைசியாக புலிகள…
-
- 0 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதாவின் வீட்டில் வெட்டுக் காயங்களுடன் ஒருவர் மீட்பு! கணவர் கைது (ஏ.எச்.ஏ.ஹுஸைன்) மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரனின் வீட்டில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நபரொருவர் மேற்படி மட்டக்களப்பு முன்னாள் மேயரின் வீட்டில் வெட்டப்பட்டுக் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு சென்று காயம்பட்ட நபரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இன்று மாலை 4 இடம்பெற்ற இச்சம்பத்தைத் தொடர்ந்து சிவகீதாவின் வீட்ட…
-
- 5 replies
- 565 views
-
-
அடெல் பாலசிங்கத்தை கைது செய்ய இலங்கை அரசு திட்டம் இவ் விடயம் 02. 06. 2009, (செவ்வாய்), தமிழீழ நேரம் 16:07க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவியான அடெல் பாலசிங்கத்தை கைது செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக பிரிட்டனின் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் முக்கிய பிரதேசங்களில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அடெல் பாலசிங்கம் செயற்பட்டதாக புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறுவர் போராளிகளை இணைத்தமை மற்றும் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பணிகளை மேற்கொண்டமை போன்ற பணிகளில் அடெல் பாலசிங்கம் ஈ…
-
- 0 replies
- 1.6k views
-
-
முஸ்லிம் பெண்களின் நிஜாப் ஆடையை தடை செய்யுமாறு பொதுபல சேனா அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம் பெண்களின் கலாச்சார உடையான நிஜாப் ஆடையை தடை செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. அண்மைய சம்பவங்களின் மூலம் முஸ்லிம் பெண்கள் தலையுடன் அணியும் இந்த நிஜாப்பினால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அண்மையில் முஸ்லிம் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் இந்த ஆடையை அணிந்து குற்றச் செயலில் ஈடுபட்டமை அம்பலமாகியிருந்தது. மத ரீதியான விடயம் என்பதனால் பலர் இது குறித்து கேள்வி எழுப்புவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட்ட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கு அறிவிக்க உள்ள…
-
- 6 replies
- 540 views
-
-
புதிய கட்சி உதயம் எஸ்.சசிக்குமார் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் என்னும் கட்சியொன்றினைத் தாம் கடந்த மாதம் 28ஆம் திகதி தொடக்கி வைத்துள்ளதாக, அக்கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராஜா, ஊடகங்களுக்குத் தெரிவித்தார். சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில், நேற்று மதியம் விசேட ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது. கட்சியின் தோற்றம் பற்றிப் பொது மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகத் தாம் இதனை ஏற்பாடு செய்ததாக, கட்சியின் தலைவர் இன்பராஜ் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, "2009ஆம் வருடம், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 12,000க்கும் அதிகமான போராளிகள்…
-
- 0 replies
- 707 views
-
-
"இத்தால்... ஶ்ரீலங்கா சோசலிச ஜனநாயகக் குடியரசின் குடிமக்கள் யாவரும் அறிவது என்னவென்றால், வடமாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் யாவும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்... ஏற்றுக்கொள்ளப்படும்!" மேலும், http://tamilworldtoday.com/?p=22377
-
- 0 replies
- 415 views
-
-
நயினாதீவு விகாரையில் சித்திரை பௌர்ணமி விசேட பூஜை April 27, 2021 நயினாதீவு நாக விகாரையில் சித்திரை பௌர்ணமி விசேட பூஜையும் , மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. மத வழிபாட்டு இடங்களில் 50க்கும் குறைவானவர்களே அனுமதிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தென்னிலங்கையில் இருந்து வந்தவர்களும் குறித்த சித்திரை பௌர்ணமி விசேட பூஜை நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை கடந்த 24ஆம் திகதி நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட வித்தியாயத்திற்கு இரண்டு மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் அ .பத்திநாதன் , வடமாகாண கல்வி அமைச்சின் செய…
-
- 1 reply
- 433 views
-
-
வன்னியில் அண்மைக் காலத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய முகாம்களுக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட உள்ளுர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் செல்வதற்கு படைத்தரப்பு தொடர்ந்தும் அனுமதி மறுத்தே வருகின்றது. இதனால் இந்த முகாம்களில் உள்ள சுமார் 1லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொடர்பில், எதுவுமே தெரியாத ஒரு நிலையே நீடிப்பதாக வன்னியிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இரகசியத் தன்மை பேணப்பட வேண்டும் என்ற பெயரில் இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் பாரிய உணவின்மை மற்றும் அடிப்படை வசதியின்மை காரணமாக பெரும் நோய்த் தொற்றல்களையும் கடுமையான பின்னடைவுகளையும் சந்தித்திருப்பதாக அங்குள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் கூறுகின்றன. இந்த மு…
-
- 0 replies
- 833 views
-
-
யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பழவகைகளுக்கு வெளிநாடுகளில் சிறந்த சந்தை வாய்ப்பை எற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரியா நாட்டின் இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கான தூதுவர் ரைமுன்ட் மாஜில் உறுதியளித்துள்ளதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தூதுவர் நேற்று மதியம் மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தைச் சந்தித்து கலந்துரையாடினார். யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி தொடபாகவும் இங்குள்ள நிலமைகள் குறித்து ஆஸ்திரியா நாட்டின் தூதுவர் கேட்டறிந்ததுடன் யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பழவகைகளை வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்து…
-
- 2 replies
- 1.3k views
-
-
நீதியையும் உண்மையையும் வெளிப்படுத்த ஏன் கால அவகாசம்? ஈழத் தமிழ் நிலமே நீதியையும் உண்மையையும் எதிர்பார்த்து இருக்கிறது. போர் முடிவடைந்து 9 ஆண்டுகள் ஆகின்றன. ஒன்பது ஆண்டுகளில் நீதிக்கும் உண்மைக்குமான புள்ளியை இலங்கையை ஆட்சி செய்தவர்கள் துளியேனும் நகரவில்லை. போர் நடந்த கணங்களிலிருந்து ஒன்பது ஆண்டுகளாக ஈழத் தமிழ் மக்கள் தங்களுக்கு நிகழ்த்தப்ட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கமே யுத்தத்த்தை தொடர்ந்தும் மாபெரும் வெற்றிச் சாதனையாக பெருமிதத்தை வெளிப்படுத்துகிறது. அண்மையில் யாழ்ப்பாணம் வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக சில விடயங்களைச் சொல்லியிருக்கிறார். இலங்கை அரசாங்கம் ஒரு விசாரணையை நடத்தினால் அது எப்…
-
- 1 reply
- 441 views
-
-
13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் - கெஹலிய ரம்புக்வெல்ல 22 ஜூலை 2013 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். திட்டமிட்டவாறு அரசாங்கம் 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை செய்யும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் இலங்கை மீது இந்தியா பலவந்தமாக திணித்தது ஒன்றாகும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக ரத்து செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில வகை மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் 13ம் திருத்தச் சட்டத்தை மேலும் அர்த்தமுள்ளதாக மாற…
-
- 0 replies
- 518 views
-
-
தேசிய பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் அடுத்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப் போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிலதினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முகமாக டெலோ அமைப்பினரால் நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதேவேளை இன்று மாலை வவுனியாவின் பல பகுதிகளிலும் இச்சுவரொட்டிகள் ஓட்டப்படுவதை காணக்கூடியதாக இருந்தது.http://goldtamil.com/?p=2734
-
- 0 replies
- 373 views
-
-
16 மாதங்களில் சிறிலங்கா கடற்படை ஈட்டியுள்ள 3 பில்லியன் ரூபா வருமானமாம்? தமிழீழம் கடந்த 16 மாதங்களில் வணிகக் கப்பல்களுக்கு அளித்து வந்த பாதுகாப்புச் சேவையின் மூலம், சிறிலங்கா கடற்படை, 3 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது. காலியில் உள்ள நிலையத்தில் இருந்தே இந்த வருமானம் பெறப்பட்டுள்ளது. சிறிலங்காவை அண்டிய கடற்பரப்பு வழியாகப் பயணம் மேற்கொள்ளும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்புச் சேவைகளை வழங்கியதன் மூலம் இந்த வருமானம் ஈடுடப்பட்டுள்ளது. முன்னர் அவன்ட் கார்ட் நிறுவனத்தினால் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், இந்த பாதுகாப்பு சேவை சிறிலங்கா கடற்படையிடம், கடந்த 2015நொவம்பர் மாத நடுப்பகுதியில் கையளி…
-
- 0 replies
- 191 views
-