Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித தீர்மானங்களையும் இதுவரை எடுக்கவில்லை என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அனைத்து வேட்பாளர்களுடனும் பேசிய பின்பே அதுதொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - குமுழமுனைப் பகுதியில், இன்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தாய்வுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சுமந்திரனிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்ளவிக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாம் பங்கொடுக்கின்ற நிழ்வுகளில், அமைச்சர்க…

    • 0 replies
    • 229 views
  2. மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைமைக் காரியாலயத்திற்கு இன்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்மேளன காரியாலயத்தின் பிரதான கதவுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதுடன் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. வீதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காகச் சென்ற இராணுவத்தினரே தீயை அணைத்துள்ளதாக காத்தான்குடி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காகவும், தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பிலும் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி லால் பெரேராவின் தலைமையில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் ச…

  3. விமர்சனங்களுக்கு நடுவே விசாரணை நடத்தும் 'காணாமல்போனோர் ஆணைக்குழு' இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் வடக்கு மாகாணத்தில் விசாரணைகளை நடத்திவருகின்றது. இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் நம்பிக்கை அளிக்கவில்லை என்று கூறி, அதன் அமர்வுகளை புறக்கணிக்குமாறு காணாமல்போனவர்களை கண்டறியும் குழுக்களின் பிரதிநிதிகள் கோரியிருந்தனர். எனினும், யாழ் மாவட்டத்தில் நடைபெறுகின்ற அந்தக் குழுவின் விசாரணைகளில் பலர் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் மாவட்டத்திலிருந்து கிடைத்த 2500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு, மூன்றாவது நாளாக இன்று ஞாயிறன்று பருத்தித்துறையில் விசாரணை…

  4. போட்டிக் களத்தில் உள்ள 35 வேட்பாளர்கள் – விலகிய 6 பேர் விபரங்கள் Oct 07, 2019by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவின் எட்டாவது அதிபர் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுப்பணம் செலுத்திய ஆறு வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களில், ஆறு பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவில்லை. சமல் ராஜபக்ச குமார் வெல்கம, சிறிதுங்க ஜயசூரிய ஜயந்த லியனகே, மஹிபால ஹேரத் பஷீர் சேகு தாவூத் ஆகியோரே …

    • 3 replies
    • 803 views
  5. காலை 6.00 மணிக்கு முன்னதாக வீதிகளி உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும் படி அமைச்சர் சம்பிக்க உத்தரவு 3/25/2008 11:37:24 AM வீரகேசரி இணையம் - சூழல் பாதுகாப்பு அமைச்சர், சம்பிக்க ரணவக்க காலை 6.00 முன்னதாக வீதிகளில் போட்டிருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மாநகரசபை,நகரசபை மற்றும் உள்ளூர் அதிகார சபை அதிகாரிகளை கேட்டுள்ளார். இது குறித்து அமைச்சருக்கு பொதுமக்களால் கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்பைடையிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. நொடிந்து போயுள்ள வடக்கின் விவசாயத்தை எம்மால் தூக்கி நிறுத்த முடியவில்லை: பொ.ஐங்கரநேசன் FRIDAY, 18 DECEMBER 2015 03:35 வடக்கு மாகாண சபை தோற்றம் இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், நீண்ட மோதல்களினால் நொடிந்து போயுள்ள வடக்கின் விவசாயத்தை தூக்கி நிறுத்த முடியவில்லை என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். “சொந்த நிலத்தில் இருந்து பிடுங்கி எறியப்பட்ட எமது விவசாயிகள் தினக் கூலிகளாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்க, அவர்களது விளைநிலங்களில் இராணுவம் விளையாட்டு அரங்குகளையும் உல்லாச விடுதியையும் அமைத்திருக்கிறது. இது மஹிந்தவின் மாளிகை என்று ஊடகங்களை அழைத்துச் சென்று உலகுக்குக் காட்டிய நல்லாட்சியின் புதிய ஜனாதிபதியும் அவற்றை …

  7. Published By: DIGITAL DESK 3 31 DEC, 2024 | 01:01 PM (எம்.மனோசித்ரா) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல பாடசாலைகளிலும் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இம்மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை (31) அறிக்கையொன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரச பாடசாலைகளின் புதிய தரம் ஒன்று மாணவர்களுக்கு ஜனவரி 30 ஆம் திகதி வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. இதேவேளை விடுமுறையின் பின்னர் நாளை வியாழக்கிழமை மீள பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. சகல பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின்…

  8. இலங்கைக்கான 3 நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் கலாநிதி ஏமி சீரைட், மனித நேய உதவி, இயற்கை அனர்த்தங்களில் உதவுதல், மற்றும் வெளிநாட்டு அமைதிகாக்கும் செயற்பாடுகளில் அதிகரித்த பங்கேற்பு என்பவற்றில் இலங்கை பாதுகாப்புப் படையினர் வகிக்கக் கூடிய எதிர்கால வகிபாகம் குறித்து ஆராய்ந்ததாக, அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாதுகாப்பு துறை மறுசீரமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் செயற்பாடுகளுக்கு பயிற்சியளித்தல் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தி…

  9. தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் தயாராகவே இருப்பதாக அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தனியார் வானொலி ஒன்று வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், தமிழ் முற்போக்குக் கூட்டணிப் பெற்றுக்கொடுப்பதாகத் தெரிவித்துள்ள 15 தீபாவளி முற்பணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சகலருக்கும் வீ…

  10. அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக குற்றஞ் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதேசிய செயட்பட்டளர் கருணாகரன் கந்தசாமி என்பவருக்கு கடூழிய சிறைத் தண்டணை வழங்கப்படும் என அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட தேசிய செயட்பட்டளர் கருணாகரன் கந்தசாமி என்பருக்கு 20 அண்டுகள் சிறைத்தண்டணை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. 55 வயதான இந்நபர் ஆறு வருடங்களிற்கு முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அதிக பட்ச தண்டனை வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இவர் 2000ஆம் ஆண்டு நடுப் பகுதியில் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்ததாக குற்றஞ் சாட்டப்பட்ட…

  11. Published By: VISHNU 27 JAN, 2025 | 08:51 PM வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது; ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். தீவின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியு…

  12. பிரேமதாசா அரசாங்கம் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேச்சுவார்த்தை எனும் போர்வையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை இலக்கு வைத்து, வாய்ப்புப் பார்த்துக்கொண்டு காலத்தை நகர்த்தியது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 693 views
  13. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்சானந் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மாணவர்களுடைய பாதுகாப்பினை உறுதி செய்யக்கோரியும் மேற்கொண்டுவந்து கற்றல் செயற்பாடுகளை பகிஸ்கரிப்பினை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுடைய கற்றல் செயற்பாடுகளைக் கருத்தில் கொண்டும் பல்வேறு ஆர்வலர்களது வேண்டுகோளின் பிரகாரமும் பகிஸ்கரிப்பினை கைவிட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றிரவு அறிவித்துள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக இன்று இரவு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடகக் குறிப்பிலேயே இவ்விடயம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாணவர்கள் பயத்தின் காரணமாக தமது குரல்களை அடக்கி கொண்டு விட்டதாக இவ்விடயத்தினைக் கருதிக் கொள்ளக் கூடாது என்றும், தொட…

  14. தமிழ் மக்கள் பேரவை தயாரிக்கப்போகும் தீர்வுத்திட்ட வரைபை அங்கீகரிக்கப்போவது யார்? அதை அடிப்படையாகக்கொண்டு தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்கப்போவது யார்? தமிழர்களின் உரிமைகளுக்காக – அவர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக நீண்ட காலமாகப் போராடிவரும் வடக்கு, கிழக்குத் தமிழரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறந்தள்ளி பேரவையின் தீர்வு யோசனைகளை அரசோ அல்லது சர்வதேசமோ ஏற்றுக்கொள்ளுமா போன்ற கேள்விகள் எழுகின்றன. ……………………. வடக்கு, கிழக்குத் தமிழர்களின் அரசியல் தளம் இன்று நாளுக்குநாள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய தமிழ் மக்கள் பேரவையின் உதயமே இதற்குக் காரணம். அதன் உதயம் – அதன் செயற்பாடுகள் தமிழர் அரசியல் அரங்கில் பெரும் …

  15. Saturday, 19 April 2008 மன்னாரை நோக்கி நகரும் படையினரும் விடுதலைப் புலிகள் தரப்பும் வவுனியா மற்றும் மன்னார் முன்னரங்குகளில் கடும் மோதல்களில் ஈடுபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரு பகுதியினரும் எறிகணைகளை தொடர்ந்து பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் பரப்பன்கண்டல் மற்றும் அடம்பன் பகுதிகளின் ஊடாக இராணுவம் முன்னேற முயற்சிப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. சேத விபரங்கள் தெரியவில்லை. http://www.ajeevan.ch/

    • 7 replies
    • 2.4k views
  16. 30 வருடங்களுக்குப்பின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சம்பந்தன் சுமார் 30 வருடங்களுக்குப்பின் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார் இரா. சம்பந்தன். புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் த.தே.கூ அமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமாகிய இரா. சம்பந்தன் இணைத்தலமையை ஏற்றுக் கொண்டு எதிர்வரும் 14 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். மேற்படி ஒருங்கிணைப்பு குழுக்களின் இணைத்தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்க…

  17. (எம்.ஆர்.எம்.வஸீம்) வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்வதற்காக அம்பாந்தோட்டை சுகீ தேசிய பாடசாலைக்கு வந்த வாகனமொன்றில் இருந்து வாக்குச்சீட்டுக்களுக்கு சமமான 58 போலி வாக்குச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதைத்தொடர்ந்து குறித்த வாகன சாரதி கைதுசெய்யப்படுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாவது, அம்பாந்தோட்டை முல்கிரிகல தேர்தல் தொகுதியில் இத்ததெமலிய வாக்களிப்பு நிலையத்துக்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்வதற்கு குறித்த வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரி மற்றும் உதவியாளர் வாக்குப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு குறித்த வேனுக்குள் ஏறியுள்ளனர். இதன்போது வாகன சாரதி ஆசனத்துக்கு அ…

  18. கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல் – அதிபர்கள் மீதான தாக்குதலுக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்! adminFebruary 20, 2025 கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், கல்விச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு எதிராக விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் தொழிற்சங்க செயற்பாடுகளை மேற்கொள்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ. தீபன் திலீபன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை பாடசாலை அதிபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஓய்வு பெற்ற அதிபர் உயிரிழந்துள்ள நிலையில் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குற…

  19. சுவிற்சர்லாந்தில் அனைத்துலக தொழிலாளர் நாள் பேரணி இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகளில் சுவிஸ்கிளையினரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். (படங்கள் இணைப்பு) சுவிற்சர்லாந்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரிடையே உள்ள பதினைத்துக்கும் அதிகமான பொது அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்தப்பேரணியில் கலந்து கொண்டனர். சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் குலம் தலைமையில் இன்று 01.05.2008 காலை 10.30 அளவில் சூரிச் நகரில் பெரிய தபால் நிலையம் முன்பிலிருந்து ஆரம்பமாகிய இப்பேரணியில் சிங்களப்பேரினவாதிகளில் கோர முகத்தை சித்தரிக்கும் உருவம் தாங்கிய ஊர்தி பலரையும் கவர்ந்தது. தமிழீழத் தேசியத்தலைவரின் உருவப்படங்களுடன் தமிழீ…

    • 0 replies
    • 1.4k views
  20. இன்னசிற்றி பிறசுக்கு (Inner City Press) எதிராக ஐக்கிய நாடுகள் சபைக்கு பல்வேறு அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படும் அதேவேளையில், 'தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனத்துக்கு நிதி வழங்கி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் தங்களது பதில் என்ன?' என்று யூன் 07 அன்று சிறிலங்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் இன்னசிற்றி பிறசிடம் கேள்வி எழுப்பியிருந்தார். முரண்பாடுகள் ஏற்படும்போது, சுய பாதுகாப்பை உறுதிப்படுத்தி சீரான, இருதரப்புக்கும் இடையில் மன்னிப்பை வழங்குவதை தனது நோக்கின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ள இன்னசிற்றி பிறஸ், சிறிலங்கா பத்திரிகையாளரால் எ…

  21. புதிய முன்னணிக்கு கோட்டா தலைவர்? கூட்டு எதிரணி உறுப்பினர்கள் குழுவினால் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற புதிய முன்னணிக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த முன்னணியின் தலைமை பொறுப்பை, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வதற்கு மறுக்கும் பட்சத்திலேயே, அப்பதவியை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/163953/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%A9-%…

  22. அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக ப.சத்தியலிங்கம் நியமனம்! நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் நியமனமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய விடயங்களை கையாள்வதற்கான குழு சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்தினவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார் சபாநாயகரை தவிசாளராக கொண்ட குறித்த குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், சட்டத்தரணி ஹர்ஷன நானயக்கார, மருத்துவர் நிஹால் அபேசிங்ஹ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https…

  23. சிறிலங்கா நாடாளுமன்றம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் நேற்றிரவு ஒத்திவைக்கப்பட்டமை தனக்கு இன்று புதன்கிழமை காலை நாடாளுமன்றம் செல்லும் வரை தெரியாது என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 606 views
  24. கிழக்கில் இயங்கிவரும் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவின் பிள்ளையான், கிழக்கு மாகாண முதலமைச்சரானால் அரசில் அங்கம் வகிக்கும் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகுவார்கள் என்று "த மோர்ணிங் லீடர்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 1.4k views
  25. பெரும்பாலான யாழ்ப்பாண மக்களில் ஓடுவது சிங்களவர்களின் இரத்தம் தான் என்று இலங்கை இராணுவத்தின் யாழ்.படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “யாழ்.போதனா மருத்துவமனை இரத்த வங்கிக்கு அதிகளவில் பங்களிப்புச் செய்பவர்கள் படையினரே. ஒவ்வொரு மாதமும் இராணுவம், இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்கிறது. இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு 125 தொடக்கம் 150 லீற்றர் வரையான இரத்தம் படையினரால் வழங்கப்படுகிறது. இப்போது பெரும்பாலான யாழ்ப்பாண மக்களிடம் ஓடுவது சிங்கவர்களின் இரத்தம் தான்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0…

    • 0 replies
    • 361 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.