Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூகிள் சேவையை தமிழில் பெற உங்கள் வாக்கை தமிழ் மொழிக்காக அளியுங்கள். இங்கே அழுத்தவும் Need Virtual Keyboard .

    • 1 reply
    • 843 views
  2. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு அவுஸ்ரேலியா ஆதரவு வழங்க வேண்டும் என்று, அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப்பிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவுஸ்ரேலிய நாடாளுமன்றக் கட்டடத்தில், அந்த நாடு வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப்பை சந்தித்து, இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். அத்துடன், அவுஸ்ரேலியாவின் பிரதான கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து, ஆதரவு கோரியுள்ளார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள எம்.ஏ.சுமந்திரன், “சிறிலங்காவில் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் ஏற்படவில்லை, பரந்தளவிலான பிரச்சினைகளுக்குப் பதி…

  3. வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் ஸ்ரீபவன்? வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வார இறுதி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடமாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நிலவி வரும் கருத்து முரண்பாடுகள் காரணமாக, அடுத்த தேர்தலில் ஸ்ரீபவனை களமிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. …

    • 6 replies
    • 848 views
  4. சர்வகட்சி அரசாங்கத்தை... அமைப்பது தொடர்பான, யோசனைகளை... முன்வைக்குமாறு அறிவிப்பு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான யோசனைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எட்டப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அதனடிப்படையில், உரிய முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றவுடன் அனைத்துக் கட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார். https://athav…

  5. யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிரங்க கடிதம்- தவறான வழிகாட்டலின் தீரமானம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களே வணக்கம்- உங்கள் போராட்டங்களுக்கு முதலில் மதிப்பளிக்கின்றோம். கடந்த வருடம் 20-10-2016 அன்று பொலிஸாரால் உங்கள் சக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாளை வெள்ளிக்கிழமை ஒரு வருடம். உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா? சரி- விடயத்திற்கு வருவோம். முன்னொரு காலத்தில் சரியான நெறிப்படுத்தல், வழிகாட்டல் போன்ற பண்புகளுடன் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் நகர்வுகளை முன்நகர்த்திச் சென்ற பல்கலைக்கழக மாணவ சமூகம், இன்று தடம்மாறி நிற்பது ஏனோ? இலங்கைத் தேசிய இயக்கத்தின் பிளவுடன் 1920இல் ஆரம்பித்த இன முரண்பாட்டை 1970 களுக்கு பின்னரான காலத்தில் அ…

  6. புதுக்குடியிருப்பில் இரு சகோதரர்கள் பொலிசாரால் கைது! – புகைப்படத்தைக் காட்டி பிடித்துச் சென்றனர். [Monday, 2014-03-17 08:08:46] News Service புதுக்குடியிருப்புப் பகுதியில் சகோதரர்கள் இருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். டிரக்டர் சாரதியான ஜோசப் கலாதரன் (வயது - 35), அவரது தம்பியான ஜோசப் சுதாகரன் (வயது - 31) ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மதிய உணவுக்காக இவர்கள் வீட்டுக்கு வந்திருந்த போது அங்கு திடீரென்று வந்த பொலிஸார் புகைப்படம் ஒன்றை கலாதரனுக்குக் காண்பித்து அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த நிலையில் தனது சகோதரனை பொலிஸார் விசாரணைக்கென அழைத்துச் சென்றபோது அவரது தம்பி அதனை புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் அவரும் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்…

    • 2 replies
    • 484 views
  7. மெய்ப்பாதுகாவலரின் வீட்டை மீண்டும் தேடிச் சென்ற நீதிபதி! கடந்த ஜூலை மாதம் யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த, யாழ் மேல் நீதிமன்றத்தின் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரது தொண்ணூறாம் ஆண்டு நினைவுச் சடங்குகள் மற்றும் பௌத்தமத அனுட்டானங்கள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் குறித்த நினைவுச் சடங்கில் கலந்துகொள்வதற்காக நீதிபதி இளஞ்செழியன் மீண்டும் குறித்த மெய்ப்பாதுகாவலர் வீட்டைத் தேடிச் சென்றமை அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரியவருகிறது. பௌத்த பிக்குகள் தலைமையில் நடைபெற்ற நினைவுச் சடங்கில் குறித்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்…

    • 2 replies
    • 626 views
  8. இலங்கைக்கான... அனைத்து, அத்தியாவசியப் பயணங்களையும்... ஒத்திவைக்குமாறு சிங்கப்பூர் அறிவிப்பு! இலங்கையில் மோதல்கள் வெடித்ததையடுத்து, இலங்கைக்கான அனைத்து அத்தியாவசியப் பயணங்களையும் ஒத்திவைக்குமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு சிங்கப்பூர் அறிவுறுத்தியுள்ளது. சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. “இலங்கையில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்கவும், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு பொருளாதார நெருக்கடி ஒரு மாதத்திற்கும் மேலாக அமைதியான ஆ…

  9. சீஷெல்ஸ் நாட்டின் தீவு ஒன்றையே விலைக்கு வாங்கினார் மகிந்த! [saturday, 2014-03-22 17:16:07] சீஷெல்ஸ் நாட்டிலுள்ள தீவு ஒன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விலைக்கு வாங்கியுள்ளதாக சிங்கள இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. சீஷெல்ஸ் நாட்டில் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படாத 100க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அவற்றை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு நபர்களுக்கு நிறுவனங்களுக்கும் வழங்க அந்நாடு தீர்மானித்துள்ளது. அவற்றில் ஒன்றையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த தீவு கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன.இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவுகள், ஆப்பிரிக்க கண்டத்திற்குரிய நாடாகும். …

  10. இந்தியா வந்திருக்கும் டக்ளஸை கைது செய்யக் கோரி வழக்கு திகதி: 09.06.2010 // தமிழீழம் ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகமக்கள் உரிமைக் கழக செயலாளரான வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனு: இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் மந்திரியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இருந்தார். இவர் அலுவல் ரீதியாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு இன்று வர இருக்கிறார். 1986-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டு…

  11. ஜெனிவா தீர்மானத்தை வரவேற்கிறது பிரித்தானிய தமிழர் பேரவை! [Friday, 2014-03-28 08:09:04] இலங்கை மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையர் விசாரிப்பார் என்று இலங்கைக்கு எதிரான ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தில், கூறப்பட்டுள்ள விடயம் வரவேற்கத்தக்கது என்று பிரித்தானிய தமிழர் பேரவை கூறியுள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜெனிவாவில் இருந்து அது குறித்து கருத்து தெரிவித்த பிரித்தானிய தமிழர் பேரவையின் பேச்சாளரான ராஜ் குமார், இறுதி நேரத்தில் பலவிதமான தடைகளைத் தாண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று கூறினார். இந்தியாவில் தற்போது தேர்தல் ஒன்று நடக்கும் நிலையில், அங்கு காபந்து அரசாங்கம் போன்ற ஒன்றே ஆட்சியில் இருப்பதால்தா…

  12. தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள்.... பொலிசாரிடம், பாதுகாப்பு கோரிக்கை. இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று ( ஞாயிற்க்கிழமை ) கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர் . கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள் காட்டி, அச்சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழக்குமாறு கோரியுள்ளார் . மேலும் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமூகமளிக்க முடியாது எனவும் அவர் பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1283268

  13. சிறையில் உள்ள 400 பெண் போராளிகள் தென்பகுதிக்கு ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணி புரியவென நேற்று அழைத்து செல்லபட்டுள்ளனர். வேலைவாய்ப்பிற்காகவே இவர்கள் அழைத்து செல்லப்பட்டதாக வவுனியா படை அதிகாரிகள் தெரிவித்துள்ளபோதும். இந்த விடயங்கள் தொடர்பில் குறித்த 400 பெண் போராளிகளினதும் பெற்றோர்கள் உறவினர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. ஈழநாதம்

  14. வெளிநாட்டு தலையீடுகள் கடும்போக்குவாத்தை போசிக்குமே தவிர இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் காத்திரமான தீர்வுதுத் திட்டமொன்றை எட்ட முடியும் என்பதனை அரசாங்கம் உறுதியாக நம்புகின்றது. இனத்துவ கடும்போக்குவாதங்கள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். சிங்கள பௌத்த, தமிழ் அல்லது முஸ்லிம் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தேசிய அடையாளங்களுடன் கட்டியெழுப்பப்பட வேண்டியது அவசியமானது. உலகின் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பு ஒன்றை இல்லாதொழித்த நாடு என்ற வகையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவ…

  15. http://www.manithan.net/index.php?subaction=showfull&id=1278046644&archive=&start_from=&ucat=1& நன்றி - மனிதன் இணையம்

  16. இந்த வருடத்தில்... கடனை திருப்பிச் செலுத்த, "5 பில்லியன் டொலர்கள்" வேண்டும் என்கின்றார் ரணில் ! இவ்வருடத்தில் கடன் மீள் செலுத்துகைக்காக அரசாங்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு வெளிநாட்டுக் கையிருப்பை வலுப்படுத்துவதற்காக மேலும் ஒரு பில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வர்த்தக சம்மேளனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டுவரும் கலந்துரையாடல்கள் இம்மாத இறுதியில் முடிவிற்குக் கொண்டுவரப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு நி…

  17. மெல்லத் துளிர் விடும் நம்பிக்கைகளுடன் ஒரு பாடசாலை கடந்த வருடம் இலங்கைத்தீவில் உள்நாட்டு யுத்தம் ஓய்ந்த பின்னர் வன்னி நிலப்பரப்பிலிருந்து இடம்யெர்ந்து முகாம்களில் தங்கியிருந்த மக்கள் ஒரு வருடங்களின் பின்னர் மீண்டும் தங்கள் ஊர்களிற்கு திரும்பத்தொடங்கியுள்ளனர் ; அதனைத்தொடர்ந்து பாடசாலைகளும் குறைந்தளவு மாணவர்களின் வருகைகளுடன் மீளவும் இயங்கத்தொடங்கியுள்ளன.அப்படி மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கும் பாடசாலைகளில் ஒன்றான மன்னார் மாவட்டம் விளாத்திக்குளம் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்கு எமது நேசக்கரம் உதவி அமைப்பினர் நேரில் சென்று பாடசாலை மாணவர்களின் இன்றைய நிலைமை பற்றி கேட்டறிந்துள்ளனர். நிலைமை பற்றி பாடசாலையின் அதிபர் திரு.சிவகுமார் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்…

    • 0 replies
    • 989 views
  18. இலங்கையில் பொதுபலசேனாவினால் மேற்கொள்ளப்படும் அராஜகங்கள் தொடர்பில் பல்வேறு தரப்புக்களின் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான டிலான் பெரோரா மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்கள் காலத்தின் தராசில் மிகவும் வளுவுள்ளதாக காணப்படுகின்றது. முஸ்லிம்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் குரல் கொடுத்தால் அல்லது அறிக்கைவிட்டால் அவர்களை இனவாதிகளாக காண்பித்து அதிலிருந்து தேவையற்ற விடயங்களை தொட்டுக் கொண்டும்,தொங்கிப் பிடித்துக் கொண்டும் பேசும் நபர்கள் ஏராளம். இந்த நிலையில் இலங்கையில் அண்மையக் காலமாக பொதுபலசேனா அமைப்பினரின் அத்துமீறிய அட்டகாசங்களும்,அறுவெறுப்பான பேச்சுக்களும் முஸ்லிம்களை மட்டுமல்லாது பௌத்தர்களையும் தலை குனியச் செய்த…

    • 0 replies
    • 451 views
  19. Please Vote to "Arul Rathi" Please pass it to your network. Thank you To all, I have been partnering with PEER Servants for the last 10 years to improve people's life. Every year they choose 1 best entrepreneur amongst many and give a gift of $ 2000/- to improve their business. There are three finalist this year and by God's Grace one is from Jaffna. Please read the content and vote according to your conscious.Your vote counts....click on the vote online and vote.. http://www.peerservants.org/lydia_voting.php Ray ------------------- Meet the three 2010 Lydia Award semifinalists! Now it's your turn to vote online and send the link to y…

  20. புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் ஆளுகைக்குள்பட்ட புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் அமைந்துள்ள பொதுச்சந்தைக்குரிய காணியை சிறீலங்கா இராணுவத்தினர் கையகப்படுத்தி உள்ளதாகவும், பொதுமக்களின் பாவனைக்குரிய அக்காணியில் இராணுவத்தினருக்கான நலன்புரி வாணிபத்தை (Srilanka Army Welfare Shop) அமைத்து இராணுவ பராமரிப்புக்கும் பாதுகாப்பு பணிகளுக்கும் செலவிடுவதற்காக பெருந்தொகை பணம் சம்பாதித்து வருவதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் குற்றம் தெரிவிக்கின்றார். இந்த விடையம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பொதுமக்களின் வியாபார நடவடிக்கைகளுக்குரிய பொதுச்சந்தை பயன்பாட்டுக்குரிய காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தி அதில் தமது கடைகளை அமைத்து இலாபம் ஈட்டி வருகின்றனர். இதனால் எம…

    • 0 replies
    • 362 views
  21. பத்தரமுல்லை பகுதி சொகுசு வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற வைபவம் ஒன்று இடம்பெற்ற இடத்துக்கு அருகில் உள்ள சொகுசு வீடொன்றினை சுற்றி வளைத்து ஆயுதங்கள் பலவற்றை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் அவ்வீட்டில் இருந்த பத்தரமுல்ல - தயலங்கம வடக்கைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் சகோதரர்களான 57,49 வயதுகளை உடைய இருவரை கைது செய்த விஷேட அதிரடிப் படையினர் அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கொஸ்வத்தை, காட்சு பல்கலைக்கழகத்தின் வைத்திய இரசாயன கூட அலுவலர்களின் வருடாந்த ஒன்றுகூடலுக்கு பிரதம விருந்…

  22. யாழ் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தினை படம்பிடித்ததாகத் தெரிவித்து ஜேர்மன் நாட்டின் குடியுரிமை பெற்ற அவரது சகோதரரும் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் தெற்கு செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பாஸ்கரன் என்கின்ற நபர் ஜேர்மன் நாட்டில் இருந்து அண்மையில் தாயகம் திரும்பியிருந்தார். அவர் தனது சகோதரனுடன் கோப்பாய் துயிலும் இல்லப் பகுதிக்குச் சென்று வீடியோக் கமெரா மூலம் துயிலும் இல்லத்தை படம் பிடித்திருக்கின்றார். உடனடியாக அங்கு சென்ற இராணுவத்தினர் அவர்கள் இருவரையும் பிடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் நடைபெற்று ஒருவாரம் ஆகியும் இதுவரையில் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும…

    • 2 replies
    • 1.2k views
  23. இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை - பிரித்தானியாவுக்கு ஆர்வமில்லையாம். [saturday, 2014-04-26 09:21:21] இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். பொருளாதாரத் தடை விதிப்பது ஓர் முக்கியமான விடயமன்று. இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அதிகாரம் ஐ.நா மனிதஉரிமைப் பேரவைக்கு கிடையாது. எனது அறிவுக்கு எட்டிய வகையில் எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு கோரவில்லை. இலங்கையுடன் வலுவான பொருளா…

  24. வடக்கில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு வடக்கில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பால் நோய்ப் பிரிவு நிபுணத்துவ மருத்துவர் பிரியந்த படகல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் வட மாகாணத்தில் எட்டு எயிட்ஸ் நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். வட மாகாணத்தில் 50க்கும் மேற்பட்ட எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர் எனவும், இதில் 36 பேர் யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எயிட்ஸ் நோய் தொடர்பில் போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், நோய் பரவுவதனை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டுடன் ஒப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.