Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான தமரா குணநாயகம் என்பவர் ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். . 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, இந்த விடயம் குறித்து முறைப்பாடு செய்வதற்கு ஜெனீவா செல்லும்போது. அங்கு சென்ற அவர் தமரா குணநாயகத்துடனேயே தங்கி இருந்து தனது பணிகளை மேற்கொள்வாராம். . கியூபாவிலுள்ள சிறிய இலங்கைத் தூதரகத்தில் சிறிலங்கா தூதுவராகத் தற்போது கடமையாற்றி வரும் தமரா குணநாயகம் தற்போது மிக முக்கியத்துவமிக்க தூதுவர் பதவிக்கு ஜனாதிபதி மஹிந்தவால் நியமிக்கப்பட்டுள்ளதனை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. . இவர் 1970 ஆம் ஆண்டுகளின் போது இலங்கையில் செயற்பட…

    • 2 replies
    • 987 views
  2. நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக இன்று சாய்ந்தமருது மக்களால் அமைச்சரின் கொடும்பாவியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நியமனத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் சிபாரிசு செய்துள்ளமையை ஆட்சேபித்தே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி தொடர்பிலான விவகாரம் பரபரப்பாகியுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் ஹாபிஸ் நபீர் ஹஹமரை முதலமைச்சர் வேட்பாளராக சிபார்சு செய்துள்ளது. இதனை எதிர்த்து சாய்ந்தமருது மக்கள் இன்று ஜும்மா தொழுகையின் பின் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ஹாபிஸ் நபீர் ஹஹமரை சி…

    • 2 replies
    • 485 views
  3. யாழில் “தமிழர் நாகரிக மையம்”எனும் அமைப்பு உருவாக்கப்படவுள்ளது தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்வியலில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் கலாசாரங்கள் என்பன அருகி வருகின்றன. தமிழர்களின் புராதன அடையாளங்களை, போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர்கள் அழித்தனர். இவர்களுக்கு இணையாக, இலங்கை அரசாங்கமும், தமிழர்களின் புராதன அடையாளங்களை அன்று தொட்டு இன்று வரை அழித்து வருகிறது. எனவே, தமது எதிர்காலச் சந்ததியினருக்கு, இவற்றை எடுத்துக் கூறும் வகையில் “மரபுரிமை மையம்” மற்றும் “தமிழர் நாகரிக மையம்” எனும் தொனிப்பொருள்களிலான கருத்திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். இந்தக் கருத்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு, எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவு…

  4. இலங்கையின் கொலைக்களம் இந்திய ஊடகங்களில் வெளியாகவுள்ளது : 03 ஜூலை 2011 டில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் நெருக்கடிகளையும் மீறி.. இலங்கையின் கொலைக்களம் இந்திய ஊடகங்களில் வெளியாகவுள்ளது : 2009- ல் வடக்குப் பகுதி தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போரின் போது பாரிய போர்க்குற்றங்களைப் புரிந்ததாக இலங்கை இராணுவத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான காணொளி ஆதாரங்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் சேனல் 4 இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. உலகெங்கிலும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த ஆவணப்படம் தற்போது இந்திய ஆங்கில ஊடகமான ஹெட்லைன்ஸ் டுடே விலும் இம்மாதம் 7,8,9 தேதிகளில் ஒளிபரப்பப் போவதாக அறிவித்துள்ளது அ…

    • 4 replies
    • 865 views
  5. அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை கோரி இன்றுடன் 2000 நாட்கள் பூர்த்தியாகின்றன. கடந்த யுத்தகாலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை கோரி வடகிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்கள் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது இரத்த உறவுகளை கோரி இன்றுடன் 2000 நாட்கள் பூர்த்தியை தொடர்ந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தலமையில் இன்று (09) காலை இடம் பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பகுதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இடம் பெற்றதுடன் பிரதான வீதி வழியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு திருக்கோவில் மணிகூண்டு கோபுரத்தினை வந்தடைத்ததுடன்…

  6. இலங்கைத்தமிழர்கள் தொடர்பில் தமிழ் நாட்டு மக்கள் உணர்ச்சியுடன் செயற்படுகின்றார்கள். தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம். அவர்களின் உணர்வுகள் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் உணர்ச்சியற்றிருக்க முடியாது என இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் கூறியுள்ளார். . இலங்கை, மாலைதீவு நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் குழுவொன்றை புதுடில்லியில் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு கூறினார். . இலங்கையில் நடைபெறும் விடயங்கள் குறித்து தமிழ் நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்களும் அவ்வப்போது கரிசனைகளை வெளிப்படுத்துவதாக நிருபமா ராவ் கூறினார். அங்கு தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு கவலையளிக்கும் ஏதேன…

  7. ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள தீர்மானம், தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6 மாதத்துக்கு, அதாவது செப்டம்பர் 2015 வரை ஒத்திவைப்பதற்கான ஐநா மனித உரிமைகள் ஆணையர் பரிந்துரைக்கு மனித உரிமைக் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் புதிய அரசு இந்த விஷயத்தில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்துவதாக உறுதியளித்து , விசா…

    • 4 replies
    • 498 views
  8. நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை October 28, 2018 பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதன் மூலம் நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசியக் முன்னணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை உறுதிப்படுத்தி; ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் பிரதமர் பதவியில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளையும் முற்கொண்டு வருகின்றனர். இந் நிலையில் பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதற்கா…

  9. இலங்கை எதிர்வரும் வருடங்களில் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் மேத்திக்கா விதானகே எச்சரித்துள்ளார். அரசாங்கம் இதனை எதிர்கொள்வதற்கான திட்டமொன்றை முன்னெடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காலநிலை மாற்றமே குடிநீர்தட்டுப்பாட்டிற்கான முக்கிய காரணமாக காணப்படும் என அவர்தெரிவித்துள்ளார். இலங்கையின் மழைவீழ்ச்சி காலங்களில் ஏற்கனவே மாற்றங்கள் தென்படத்தொடங்கிவிட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார். வழமையாக வருடாந்தம் இலங்கையில் 2500 மில்லிலீற்றர் மழை பெய்யும் மே முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியே அதிகளவு மழைக்காலம் என தெரிவித்துள்ள அவர் காலநிலை மாற்றம் காரணமாக மேமா…

  10. ஆயுதம் தாங்கிய குழு பல்கலைக்குள் புகுந்து நடத்திய அத்துமீறலுக்குக் கண்டனம் இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்கக் கோரிக்கை கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆயு தந் தாங்கிய குழு ஒன்று யாழ். பல்லைக் கழக வளாகத்திற்குள் புகுந்து ஊழியர்களை மிரட்டியதை பதில் துணைவேந்தரும் பீடாதிபதிகளும் கண்டித்துள்ளனர். அமரத்துவம் அடைந்த மாணவர் களின் புகைப்படங்களைச் சேதப்படுத்தி யமை சக மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டும் மனிதநேயமற்ற செயற்பாடா கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ள னர். பல்கலைக்கழகச் செயற்பாடுகளுக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய இத்தகைய செயல்களைத் தவிர்க்குமாறு பீடாதிபதி கள் சகல தரப்புகளிடமும் கோரியுள்ளனர். இது சம்பந்தமாக நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது கடந்த சனிக்கிழமை அதிக…

  11. யாழ் தீவகத்தில் தபால்மூல வாக்களிப்பில் தில்லுமுல்லு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 15 ஜூலை 2011 யாழ் தீவகத்தில் தபால்மூல வாக்களிப்பில் தில்லுமுல்லு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தபால்மூல வாக்களிப்புகள் 2 தினங்கள் யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் தீவகப் பகுதிகளில் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அரச அதிகாரிகள் மட்டத்தில் இதனை மறைத்து விட முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீவகப் பகுதிகளின் கட்டுப்பாடு தொடர்ந்தும் ஈபிடிபியிடமும் கடற்படையிடமுமே இருக்கின்றது. இந்த நிலையில் யாழ்க் குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து கணிசமான ஆசிரியர்கள் தீ…

  12. புதுக்குடியிருப்பில் மிக்-27 யுத்த விமானங்கள் 20 குண்டுகளை வீசின சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான மூன்று மிக் - 27 ரக யுத்தவிமானங்கள் கைவேலி புதுக்குடியிருப்பு பகுதி மீது மிலேச்சத்தனமான வான்வழித்தாக்குதல்களை கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்தன. இவை காலை 7.30 மணிக்கும் பின்னர் காலை 11.20 மணிக்குமாக இருதடைவைகள் 12 விமானக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தன. இரு மிக் - 27 ரக விமானங்கள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மேலும் 8 குண்டுகளை வீசியுள்ளதாகவும் தெரியவருகிறது. இத் தாக்குதலில் ஐந்து வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை இக்குண்டுத் தாக்குதலால் 500ற்கு மேற்பட்ட மாணவர்கள் கைவேலி கணேசா வித்தியாலய மாணவர்களும் பதற்றமடைந்து பதுக்கு குழ…

    • 0 replies
    • 721 views
  13. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், நாடாளுமன்றம் நாளை கூட்டப்படும் என்று ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, நாளை 14ஆம் நாள், நாடாளுமன்றத்தைக் கூட்டும் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் வெளியிட்டிருந்தார். அதற்குப் பின்னரே, நாடாளுமன்றக் கலைப்பு அரசிதழ் அறிவிப்பு அவரால் வெளியிடப்பட்டது. இந்த அரசிதழ் அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருப்பதால், முன்னைய அரசிதழ் அறிவிப்புக்கு அமைய நாடாளுமன்றம் நாளை கூட்டப்பட வேண்டும். நாளை திட்டமிட்டபடி நாடாளுமன்றம் கூடும் என்று தேக வட்டாரங்கள் தெரிவித்துள்ள போதும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளி…

  14. 16 SEP, 2023 | 08:42 PM தியாகி திலீபன் சாகவில்லை, அவர் கொலை செய்யப்பட்டார். இந்தியாவின் அகிம்சையும் இலங்கை தேசத்தின் சிங்கள பௌத்தமும் அவரை கொலை செய்துள்ளது. எனவே குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டின் முன் நிறுத்தி தண்டிக்கப்படும் வரையும் இந்த தேச இலச்சிய அரசியல் வெல்லும் வரையும் சாட்சியாக நாங்கள் போராடுவோம். எமது போராட்டம் தொடரும் என மனித உரிமை செயற்பாட்டாளரான வணபிதா மா. சக்திவேல் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலையிட்டு பொத்துவில் இருந்து யாழ் நோக்கிய தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை பொத்துவில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது வண…

  15. உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிலும் நீதிமன்றங்களிலும் சரணடைந்தோர் தொடர்பான விபரங்கள் சிறிலங்காப் படைப்புலனாய்வாளர்களுக்குக் கிடைத்திருப்பதால் தமக்கு படையினரால் உயிர்அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக சரணடைந்தோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக யாழ்செய்திகள் தெரிவிக்கின்றன. உயிருக்கு அஞ்சி நீதிமன்றத்தின் உத்தரவிற்கிணங்க யாழ்சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பல இளைஞர்கள் குறித்தும் அவர்கள் பின்னணி குறித்தும் சிறிலங்காப் படைப்புலனாய்வாளர்களின் பிhவு ஒன்று விசாரணைகளில் ஈடுபட்டுஇருப்பதுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் உறவினர்களிடமும் படைப்புலனாய்வாளர்கள் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது http://www.sankathi.net/in…

  16. கல்வி மட்டம் குறைவடைந்துள்ளமைக்கு வட மாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் – சரா புவனேந்திரன் வடமாகாணம் கல்வி மட்டத்தில் 9வது மாகாணமாக விளங்குவதற்கு வடமாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் நேற்று(சனிக்கிழமை) யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அந்த கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கல்வித் தரத்தில் வடமாகாணம் 9வது இடத்திலும், கிழக்கு மாகாணம் 8வது இடத்திலும் இருக்கின்றது. வடகிழக்கு …

    • 2 replies
    • 1.9k views
  17. தென் இந்தியா என்று அழைக்க படும் தமிழ் நாடு, கேரளம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா பிரதேசம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பேசப்படும் மொழிகளியே திராவிட மொழிகள் என்று மொழியாளர்கள் அழைக்கிறார்கள். திராவிட என்ற சொல்லே தமிழில் இருந்தே வந்தது என்று சில மொழியாளர்கள் சொல்கிறார்கள். தமிழ் என்ற சொல்லே பின் காலங்களில் Demila, Dramida, Dravida என்று மருவியது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இந்த மொழிகளை தவிர பேச்சு வழக்கில் மட்டும் இருக்கும் மற்ற முக்கிய மொழி துளு. துளு பேச்சாளர்கள் கர்நாடகாவில் உள்ள மங்களூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் வசிக்கிறார்கள். சரி இந்த மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்ன?. கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு பேசுபவர்களால் எப்படி தமிழை வி…

  18. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மீண்டும் பகிடிவதை தமிழ் மாணவன் மயங்கி விழுந்தார் சனிக்கிழமை 2 யூன் 2007யோகராஜன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட தமிழ் மாணவர்கள் சிலர் புதிய தமிழ் மாணவர்கள் சிலர் மீது மேற்கொண்டு வரும் பகிடிவதை வன்முறையால் முகாமைத்துவ பீட புதிய மாணவன் ஒருவர் மயக்கமடைந்ததுடன் அவரது வாயில் இருந்து இரத்தம் வழிந்தோடியுள்ளது. இவரது இந்த நிலைமையைக் கண்ட பெரும்பான்மை இன மாணவர்கள் அவரை பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டுள்ளார

  19. பாகிஸ்தானிய இரு கடற்படை கப்பல்கள் கொழும்புக்கு நல்லெண்ண விஜயம்! [Wednesday, 2011-08-10 11:27:46] பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்தன. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பி.என்.எஸ். ஷம்ர் மற்றும் பி.என்.எஸ்.நாஸர் ஆகிய இரண்டு கப்பல்களையும் கடற்படை சம்பிரதாய முறைப்படி இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். சீனாவில் நடைபெற்ற �புரூனே கடற்படைத் தொகுதி மீளாய்வு-2011� நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு நாடு திம்பும் வழியிலேயே அதன் நடவடிக்கைத் தளபதி கொமடோர் முஹம்மத் அம்ஜாத் தலைமையில் இக்கப்பல்கள் இலங்கை வந்துள்ளன. இவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என கடற்படை பேச்சாளர் கொமாண்டர…

  20. ரணில்- மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இணையத்தளத்தில் மஹிந்த மற்றும் ரணில் ஆகிய இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்று முன்தினம் (புதன்கிழமை) நாடாளுமன்ற இணையத்தளத்தில் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறைப்பாடொன்றை செய்திருந்தனர். அதில் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் நாடாளுமன்ற இணையத்தளத்தில் பிரதம…

  21. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனக்கு 200 கோடி ரூபாவை இலஞ்சமாக வழங்குவதற்கு முயற்சித்தார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். கம்பளை நகர சபையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தகவலுக்கு மேல் தகவல் வந்து கொண்டிருந்தது. 200 கோடி ரூபா பணம் தருகின்றேன், கொழும்பில் வசிப்பதற்கும் காணி தருகின்றேன், ஜெனரல் அதிகாரத்தை மீண்டும் தருகின்றேன், பாதுகாப்பு வழங்குகின்றேன், மனைவிக்கும் வேலை பெற்றுக்கொடுக்கிறேன், பிள்ளைகளுக்கும் அவசியமானதைச் செய்து தருகிறேன் எனத் தகவல் வந்துகொண்டே இருந்தது.…

  22. இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கோத்தபாய ராஜபக்ஸவை பாதுகாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளார் : ரணில் குற்றச்சாட்டு. இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவை பாதுகாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளார். அவர் செஞ்சிலுவை சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின

  23. [sunday, 2011-08-21 17:49:51] சிறிலங்கா அரசினது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பௌத்தபிக்குகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கேம்பிரிட்ஜ் பிளேஸில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்திற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 200 பௌத்த பிக்குகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பினரால் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு வர…

  24. கண்­ணி­வெடி அகற்றும் நிறு­வ­னங்­க­ளுக்கும் மீள்­கு­டி­யேற்றம், புனர்­நிர்­மாணம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்­சுக்­கு­மி­டை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் நேற்று கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. இது­வரை காலமும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சின் கீழ் இயங்­கி­வந்த கண்­ணி­வெடி அகற்றும் நிறு­வ­னங்கள் தற்­போது புதிய அமைச்­ச­ர­வையின் விசேட தீர்­மா­னத்தின் அமை­வாக மீள்­கு­டி­யேற்றம், புனர்­நிர்­மாணம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சின் கீழ் இயங்­கு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­க­மை­வாக மீள்­கு­டி­யேற்றம், புனர்­நிர்­மாணம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சின் செய­லாளர் திரு­மதி ரஞ்­ஜினி நட­ரா­ஜ­பிள்ளை “தி கலோ ரஸ்ட்” தலைவர் டமியன் ஒப்ரின் மற்றும் ப…

    • 0 replies
    • 404 views
  25. வடக்கு இளையோருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் adminNovember 15, 2023 வடமாகாண இளையோருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டும் தீபாவளி தினைத்தினை முன்னிட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பொது தேவைகள் தொடர்பில் முன் வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்போம். இளையோர்களுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறேன். சமூக முன்னேற்றத்திற்கு இளைஞர் சங்கங்களின் பங்களிப்புக்கள் அவசி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.