Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 16 SEP, 2023 | 08:42 PM தியாகி திலீபன் சாகவில்லை, அவர் கொலை செய்யப்பட்டார். இந்தியாவின் அகிம்சையும் இலங்கை தேசத்தின் சிங்கள பௌத்தமும் அவரை கொலை செய்துள்ளது. எனவே குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டின் முன் நிறுத்தி தண்டிக்கப்படும் வரையும் இந்த தேச இலச்சிய அரசியல் வெல்லும் வரையும் சாட்சியாக நாங்கள் போராடுவோம். எமது போராட்டம் தொடரும் என மனித உரிமை செயற்பாட்டாளரான வணபிதா மா. சக்திவேல் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலையிட்டு பொத்துவில் இருந்து யாழ் நோக்கிய தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை பொத்துவில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது வண…

  2. உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிலும் நீதிமன்றங்களிலும் சரணடைந்தோர் தொடர்பான விபரங்கள் சிறிலங்காப் படைப்புலனாய்வாளர்களுக்குக் கிடைத்திருப்பதால் தமக்கு படையினரால் உயிர்அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக சரணடைந்தோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக யாழ்செய்திகள் தெரிவிக்கின்றன. உயிருக்கு அஞ்சி நீதிமன்றத்தின் உத்தரவிற்கிணங்க யாழ்சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பல இளைஞர்கள் குறித்தும் அவர்கள் பின்னணி குறித்தும் சிறிலங்காப் படைப்புலனாய்வாளர்களின் பிhவு ஒன்று விசாரணைகளில் ஈடுபட்டுஇருப்பதுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் உறவினர்களிடமும் படைப்புலனாய்வாளர்கள் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது http://www.sankathi.net/in…

  3. கல்வி மட்டம் குறைவடைந்துள்ளமைக்கு வட மாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் – சரா புவனேந்திரன் வடமாகாணம் கல்வி மட்டத்தில் 9வது மாகாணமாக விளங்குவதற்கு வடமாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் நேற்று(சனிக்கிழமை) யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அந்த கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கல்வித் தரத்தில் வடமாகாணம் 9வது இடத்திலும், கிழக்கு மாகாணம் 8வது இடத்திலும் இருக்கின்றது. வடகிழக்கு …

    • 2 replies
    • 1.9k views
  4. தென் இந்தியா என்று அழைக்க படும் தமிழ் நாடு, கேரளம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா பிரதேசம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பேசப்படும் மொழிகளியே திராவிட மொழிகள் என்று மொழியாளர்கள் அழைக்கிறார்கள். திராவிட என்ற சொல்லே தமிழில் இருந்தே வந்தது என்று சில மொழியாளர்கள் சொல்கிறார்கள். தமிழ் என்ற சொல்லே பின் காலங்களில் Demila, Dramida, Dravida என்று மருவியது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இந்த மொழிகளை தவிர பேச்சு வழக்கில் மட்டும் இருக்கும் மற்ற முக்கிய மொழி துளு. துளு பேச்சாளர்கள் கர்நாடகாவில் உள்ள மங்களூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் வசிக்கிறார்கள். சரி இந்த மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்ன?. கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு பேசுபவர்களால் எப்படி தமிழை வி…

  5. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மீண்டும் பகிடிவதை தமிழ் மாணவன் மயங்கி விழுந்தார் சனிக்கிழமை 2 யூன் 2007யோகராஜன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட தமிழ் மாணவர்கள் சிலர் புதிய தமிழ் மாணவர்கள் சிலர் மீது மேற்கொண்டு வரும் பகிடிவதை வன்முறையால் முகாமைத்துவ பீட புதிய மாணவன் ஒருவர் மயக்கமடைந்ததுடன் அவரது வாயில் இருந்து இரத்தம் வழிந்தோடியுள்ளது. இவரது இந்த நிலைமையைக் கண்ட பெரும்பான்மை இன மாணவர்கள் அவரை பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டுள்ளார

  6. பாகிஸ்தானிய இரு கடற்படை கப்பல்கள் கொழும்புக்கு நல்லெண்ண விஜயம்! [Wednesday, 2011-08-10 11:27:46] பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்தன. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பி.என்.எஸ். ஷம்ர் மற்றும் பி.என்.எஸ்.நாஸர் ஆகிய இரண்டு கப்பல்களையும் கடற்படை சம்பிரதாய முறைப்படி இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். சீனாவில் நடைபெற்ற �புரூனே கடற்படைத் தொகுதி மீளாய்வு-2011� நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு நாடு திம்பும் வழியிலேயே அதன் நடவடிக்கைத் தளபதி கொமடோர் முஹம்மத் அம்ஜாத் தலைமையில் இக்கப்பல்கள் இலங்கை வந்துள்ளன. இவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என கடற்படை பேச்சாளர் கொமாண்டர…

  7. ரணில்- மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இணையத்தளத்தில் மஹிந்த மற்றும் ரணில் ஆகிய இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்று முன்தினம் (புதன்கிழமை) நாடாளுமன்ற இணையத்தளத்தில் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறைப்பாடொன்றை செய்திருந்தனர். அதில் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் நாடாளுமன்ற இணையத்தளத்தில் பிரதம…

  8. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனக்கு 200 கோடி ரூபாவை இலஞ்சமாக வழங்குவதற்கு முயற்சித்தார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். கம்பளை நகர சபையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தகவலுக்கு மேல் தகவல் வந்து கொண்டிருந்தது. 200 கோடி ரூபா பணம் தருகின்றேன், கொழும்பில் வசிப்பதற்கும் காணி தருகின்றேன், ஜெனரல் அதிகாரத்தை மீண்டும் தருகின்றேன், பாதுகாப்பு வழங்குகின்றேன், மனைவிக்கும் வேலை பெற்றுக்கொடுக்கிறேன், பிள்ளைகளுக்கும் அவசியமானதைச் செய்து தருகிறேன் எனத் தகவல் வந்துகொண்டே இருந்தது.…

  9. இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கோத்தபாய ராஜபக்ஸவை பாதுகாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளார் : ரணில் குற்றச்சாட்டு. இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவை பாதுகாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளார். அவர் செஞ்சிலுவை சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின

  10. [sunday, 2011-08-21 17:49:51] சிறிலங்கா அரசினது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பௌத்தபிக்குகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கேம்பிரிட்ஜ் பிளேஸில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்திற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 200 பௌத்த பிக்குகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பினரால் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு வர…

  11. கண்­ணி­வெடி அகற்றும் நிறு­வ­னங்­க­ளுக்கும் மீள்­கு­டி­யேற்றம், புனர்­நிர்­மாணம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்­சுக்­கு­மி­டை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் நேற்று கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. இது­வரை காலமும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சின் கீழ் இயங்­கி­வந்த கண்­ணி­வெடி அகற்றும் நிறு­வ­னங்கள் தற்­போது புதிய அமைச்­ச­ர­வையின் விசேட தீர்­மா­னத்தின் அமை­வாக மீள்­கு­டி­யேற்றம், புனர்­நிர்­மாணம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சின் கீழ் இயங்­கு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­க­மை­வாக மீள்­கு­டி­யேற்றம், புனர்­நிர்­மாணம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சின் செய­லாளர் திரு­மதி ரஞ்­ஜினி நட­ரா­ஜ­பிள்ளை “தி கலோ ரஸ்ட்” தலைவர் டமியன் ஒப்ரின் மற்றும் ப…

    • 0 replies
    • 408 views
  12. வடக்கு இளையோருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் adminNovember 15, 2023 வடமாகாண இளையோருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டும் தீபாவளி தினைத்தினை முன்னிட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பொது தேவைகள் தொடர்பில் முன் வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்போம். இளையோர்களுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறேன். சமூக முன்னேற்றத்திற்கு இளைஞர் சங்கங்களின் பங்களிப்புக்கள் அவசி…

  13. இலங்கையில் தொடரும் வன்முறைகளால் பிரிட்டனுக்கு நேரடியான பாதிப்பு இலங்கை அரசாங்கம் மீது பிரிட்டன் எவ்வித நிர்ப்பந்தத்தையும் பிரயோகிக்கவில்லை. ஆனால் உலகமயமாக்கலின் கீழ் எந்தவொரு நாடும் தனியான தீவாக இயங்க முடியாது என இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் டொமினிக் சில்கொட் தெரிவித்தார்.இலங்கையில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் வன்முறைகளால் பிரிட்டனுக்கு நேரடியான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகவே நாம் இலங்கையின் சமாதான முயற்சிகளில் அக்கறை காட்டுகின்றோம் என்றும் சில்கொட் கூறினார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் பிரிட்டனின் செயற்பாடுகள் என்ற தலைப்பில் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே டொமினிக் சில்…

    • 1 reply
    • 1.3k views
  14. உண்மையா Deep Fake ’கா உலகம்தான் சொல்லணும்

  15. அச்சுறுத்தல்: கொழும்பிலிருந்து ஐ.நா.அதிகாரி வெளியேறினார் [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 15:15 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக நிதிப் பிரிவு திட்ட அதிகாரி வாசுகி மகேந்திரனுக்கு பணம் அறவிடும் கும்பல் அச்சுறுத்தல் விடுத்ததால் அவர் சிறிலங்காவிலிருந்து குடும்பத்தினருடன் வெளியேறி உள்ளார். சிறிலங்காவிலிருந்து தான் வெளியேறுவதற்கு முன்பாக கடத்தல்கள் தொடர்பான மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், மேலக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனிடம் அவர் முறைப்பாடு செய்துள்ளார். வாசுகி மற்றும் அவரது கணவர் மகேந்திரன் இருவரும் ஹவ்லொக் வீதியில் வசித்து வந்தனர். நேற்று மு…

  16. ஐயா! யாழ்ப்பாணத்தில் என்ன நடக்குது பொழுது சாய்ந்தால் மர்ம மனிதனின் பயம். விடிந்தால்; மர்ம மனிதன், பெண் கடத்தல், சிறுமியைக் காணவில்லை இப்படியான திகில் சம்பவங்கள். ஐயா! யாழ்ப்பாணத்தில் இப்போது என்ன தான் நடக்கின்றது எனத் தெரியாமல் உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பயப்பீதியில் உறைந்து போயிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெளனமாக இருக்கின்றார்கள். இதை நாம் கூறினால் கூட்டமைப்புக்கு எதிர் என்று சொல்வார்கள். ஐயா! யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற சம்பவங்களை ஆராய்ந்து பார்க்கும் போது அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் எண்ணத்துடன் சம்பந்தப்பட்டதென்று கூறமுடியாது. அப்படியானால் இவை ஏன்? என்று தீர ஆராய்ந்தால், உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்க…

  17. திருகோணமலையில் இடம்பெற்றுவரும் கிழக்கு மாகாண கலாசார விளையாட்டுப் போட்டியிலிருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நால்வர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இந்த விளையாட்டுப்போட்டி நடைபெறும் திடலில் தனிசிங்கள மொழியில் பதாதைகள் வைக்கப்பட்டுள்ளதுடன் தேசியகீதமும் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்பட்டுள்ளது இதனை கண்டித்தே அந்த நால்வரும் வெளியேறியுள்ளனர். கிழக்கு மாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான சித்திரை விளையாட்டுப் போட்டி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகியது. இதில் அதிதிகளாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, உட்பட மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞ…

    • 1 reply
    • 421 views
  18. “ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ஒருமித்த நாடு என்றே புதிய அரசமைப்பு வரைவுக்கான இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் இறுதி அரசியலமைப்பிலும் அவ்வாறே இடம்பெறும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதிமொழியை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ‘அரசமைப்பில் ஏக்கிய ராஜ்ஜிய என்ற சொல் மூன்று மொழிகளிலும் இருக்கும் என்றும் தமிழில் ஒருமித்த நாடு என்ற பதத்தை இணைக்கும் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் சபை முதல்வருமான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று கருத்து தெரிவித்த…

  19. இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பு! இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்களினாலேயே இது கையளிக்கப்பட்டது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை இமயமலைப் பிரகடனம் உள்ளடக்கியுள்ளது. இந்த பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் இது தொடர்பாக மூன்று நிகாயக்களின் தலைமைத் தேரர்களுடன் கலந்துரையாடுவதாகவும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தே…

    • 12 replies
    • 1.5k views
  20. நோர்வேயை அழைக்கவேயில்லை - அழைக்கத் தேவையும் இல்லை: சிறிலங்கா அரசாங்கம். இலங்கை அமைதி முயற்சிகளை மீளத் தொடங்க நோர்வேயை சிறிலங்கா அரசாங்கம் அழைக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் நேற்று புதன்கிழமை சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: அமைதி முயற்சிகளை மீளத் தொடங்குமாறு நோர்வேயை சிறிலங்கா அரசாங்கம் அழைக்கவில்லை. நோர்வேயை அழைக்க வேண்டிய தேவை சிறிலங்காவுக்கு தற்போது இல்லை. அமைதி முயற்சிகளைத் தொடங்குமாறு ஜோன் ஹன்சன் பௌயருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியான ஊடகச் செய்திகள் பொய்யானவை. இந்த நாட்டின் பகுதிகளில் இறைமையை தொடர்ந்தும் செலுத்துவதற்கான நடவடிக்கைக…

    • 4 replies
    • 1.8k views
  21. சென்னை, செப். 7- தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவமதிக்கும் வகையில் இலங்கை அரசுடன் இந்தியா மிகப்பெரிய பொருளாதார உடன்பாட்டை செய்துகொண்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன் மீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை அவமதிக்கும் வகையில் இலங்கை அரசுடன் பொருளாதார உடன்பாட்டை இந்தியா செய்து கொண்டுள்ளது. இலங்கை கிழக்கு மாநிலத்தில் திரிகோணமலைக்கு அருகில் உள்ள சம்பூர் என்ற இடத்தில் 3150 கோ…

  22. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டோர், எவ்வித குற்றமும் அற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விடுதலை செய்த பின்னர் கைதுசெய்யப்பட்டோர், சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் என்று தம்மில் பலர் ஆறு முதல் பதினெட்டு வருடங்களுக்கு மேலாக சிறையில் வாழ்க்கையைக் கழித்து வருவதாகவும், இதனால் தமது குடும்பம் பிள்ளைகளின் எதிர்காலம், கல்வி, பாதுகாப்பு, பராமரிப்பு, வாழ்க்கைமுறை எல்லாமே சீரழிந்து கொண்டிருப்பதாகவும், தம்மைப்போன்றே நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையும் மோசமாக உள்ளதாக மனம்வெதும்பியுள்ள அநுராதபுரம் சிறைச்சாலை அரசியல் கைதிகள், கூட்டமைப்பின் தலைவர் ச…

    • 0 replies
    • 657 views
  23. விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான விமானம் திருகோணமலை கடற்பிரதேச பகுதியில் பறந்ததாக ராடார் உறுதிப்படுத்தியதோடு இலங்கை கடற்படையினரும் உறுதி செய்துள்ளனர். பல பொதுமக்களும் இதனை கண்டுள்ளனர். Tiger aircraft flies over Trincomalee! http://www.lankatruth.com/full_story/2007/...20070714_01.htm

  24. லண்டன் முத்துமாரியம்மன் கோவிலை இடிக்கத் துடிக்கும் இலங்கைத் தூதர் அம்சா: தமிழர்கள் கொதிப்பு இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதர் தமிழ்க்கலாசாரத்தை அவமதிப்பதாக அவர் மீது புகார்கள் எழுந்துள்ளன. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இது தமிழ்க்கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. இங்கு தமிழர்கள், ஈழத் தமிழர்கள், இந்துக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலில் ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒரு தூண் உள்ளது. இப்படிபட்ட கோவிலை எப்படியாவது இடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் இலங்கை தூதரக உயர் அதிகாரி அம்சா சதி வேலை செய்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த கோவிலில் பயங்கரவாதத்திற்கு ஆதரவான செயல்கள் நடைபெறுவதாகவும்…

  25. மரணதண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினா கடல் மணலில் சிற்பம் வரையும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திரைத்துறையிலிருந்து நடிகர் சத்யராச் மற்றும் பல தமிழுணர்வாளர்கள் திரண்டிருந்தனர். [show as slideshow] http://www.periyarthalam.com/2011/09/18/stop-hanging-sand-art/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.