ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
ஆக 19, 2010 / பகுதி: செய்தி / தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் நாடு திரும்புவதற்கு ஜக்கிய நாடுகள் சபை நடவடிக்கை தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் நாடு திரும்புவதற்கு ஜக்கிய நாடுகள் சபை உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காப்படையினரின் போர் நடவடிக்கை காரணமாக கடந்த இரு தசப்தங்களாக சொந்த வாழ்விடங்களில் வாழமுடியாத நிலையில் கடல்வழியாக தமிழகத்திற்கு சென்று அகதிகள் முகாமில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கி வாழ்கின்றார்கள். இவர்கள் நாடு திருப்புவதற்கு அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பணியில் ஜக்கிய நாடுகளின் சென்னையில் உள்ள உயர்அலுவலகம் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. pathivu
-
- 0 replies
- 682 views
-
-
அவுஸ்திரெலியாவில் சிங்களவர்கள் பசுமை நிறக்கட்சிக்கு வாக்களிக்கவேண்டாம் என்று மின்னஞ்சல் தெரிந்தவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பசுமை நிறக்கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்று சொன்னதற்குக் காரணம் வன்னி அவலம் நடைபெற்றபோது தமிழர்களுக்காக பசுமை நிறக்கட்சி ஆதரவு தெரிவித்தவிடயம்தான். வன்னி அவலம் நடைபெற்ற போது தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த பசுமை நிறக்கட்சிக்கு தமிழர்கள் வாக்களிக்கவேண்டும். சிங்களவர்கள் ஏன் பசுமை நிறக்கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்று சொல்வதற்கான காரணங்கள் IMPORTANT REQUEST TO SRI LANKAN AUSTRALIANS LIVING IN AUSTRALIA, IN PARTICULAR TO THOSE WHO ARE ELIGIBLE TO VOTE (WE BELIEVE NUMBERING NEARLY 100,000), IN THE AUSTRALIAN GENERAL ELE…
-
- 0 replies
- 665 views
-
-
இலங்கை, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் வித்தியாஜோதி Philip Rayvatha Wijewardene அவர்கள் சுகவீனம் காரணமாக நேற்று இயற்கை எய்தினார்.
-
- 0 replies
- 645 views
-
-
புத்தர் சாவிக்கொத்து-இருவருக்கு சிறை இலங்கையில் புத்தரின் உருவம் பொறித்த சாவிகொத்துகளை விற்றதன் மூலம் புத்த மதத்தை அவமரியாதை செய்து விட்டதாக கூறி இரண்டு பேருக்கு நீதிபதி ஒருவர் சிறை தண்டனை விதித்துள்ளார். அபுபக்கர் கலாம் மற்றும் துவான் ரஜாப்தீன் என்ற இந்த இருவரும் பொலிஸாரால் நகரத்தின் மையப்பகுதியான பெட்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை விசாரித்த கொழும்பு தலைமை நீதிபதி, தண்டனை சட்டத்தின் ஒரு பிரிவின் அடிப்படையில் மதத்துக்கு புனிதமான பொருளை இவர்கள் அவமரியாதை செய்து விட்டார்கள் என்று கூறி ஒராண்டுக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளார். இந்த தண்டனை இரண்டு ஆண்டு காலத்திற்கு பின்னர் தான் அமலுக்கு வரும். இவ்வாறான தீர்ப்புகள் இலங்கையில் அபூர்வம் தான். ஆன…
-
- 1 reply
- 765 views
-
-
தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி 26வது நாளாக மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் இன்று காலை சுவிற்சர்லாந்தின் எல்லைக்குள் காலடி வைத்திருக்கின்றார். சுவிஸ் எல்லையை அண்டிய La Cure என்ற இடத்தில் இருந்து இன்று காலை தனது நடை பயணத்தைத் தொடர்ந்த சிவந்தன், சுவிஸ் எல்லைக்குள் நுழைந்து ஜெனீவா நோக்கி நடந்து வருகின்றார். அவர் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 44 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது. நேற்று 9 மணித்தியாலங்களில் 20 கிலோமீற்றர் நடந்திருந்த சிவந்தனுடன் இன்று சுவிற்சர்லாந்தில் இருந்து சென்ற இருவர் உட்பட 12 பேர் இணைந்து நடந்து செல்லுகின்றனர். இவர்கள் நடந்து செல்லும் வழிகளில் தமிழ் மக்களின் நிலை மற்றும் கோரிக…
-
- 0 replies
- 624 views
-
-
சமீபத்தில்தான் இந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது. இது 2007 ஆண்டு எழுதப்பட்ட ஆய்வு கட்டுரை. இதில் இந்த இனபடுகொலையை எவ்வாறு எனென்ன நாடுகள் திட்டமிட்டுள்ளது என்று அப்போதே விவரமாக எழுதி இருக்கிறார் இதன் ஆசிரியர் தியாகராஜா. இந்த இனபடுகொலைக்கு இவர்கள் கொடுத்துள்ள பெயர் "ப்ராஜெக்ட் பீக்கன்" (Project Beacon) http://puligal.blogspot.com/2010/05/what-is-project-beacon-timely-reminder.html
-
- 0 replies
- 942 views
-
-
பிரிட்டனில் இருந்து நாடு திரும்பிய யாழ். இளைஞன் விமான நிலையத்தில் கைது! புதன், 18 ஆகஸ்ட் 2010 09:00 பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் நேற்று திரும்பி வந்த தமிழ் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவநேசன் ( வயது 30) என்பவரே கைது செய்யப்பட்டவர் ஆவார். இவர் சுமார் 12 வருடங்களுக்கு முன் அரசியல் தஞ்சம் கோரி பிரிட்டனுக்கு சென்றிருந்தார். ஆயினும் இவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகள் இவரை நாடு கடத்துகின்றமைக்காக கடந்த ஒரு வருடத்துக்கு முன் கைது செய்து தொடர்ச்சியாக தடுத்து வைத்திருந்தனர். இலங்…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாருடைய எலும்புக்கூடுகள்? தீபச்செல்வன் திகதி: 18.08.2010, மலக்குழிகளிலிருந்து தீர்க்கப்பட்ட எலும்புக்கூடுகள் மூடிகளின் மேலால் வெளித்தள்ளுவதை முதலில் குழந்தைகளே பார்த்தனர் இவை உயிர் பிரிந்தலையும் யாருடைய எலும்புக்கூடுகள்? சடலங்களுடன் கட்டிப் அடக்கம் செய்யப்பட்ட பலகைத்துண்டுகளிலும் படிக்க முடியாத குறிப்புக்கள் இருக்கின்றன சடலங்களுடன் மீட்கப்பட்ட பனை மட்டைகளில் ஒலி பிரிந்த வார்த்தைகள் ஒட்டியிருக்கின்றன அடக்கி மலக்குழிகளில் தள்ளப்பட்ட பொலித்தீன் பைகளின் மூலைகளில் அடங்கியிருக்கும் உயிரை தேடும் தாய்மார்கள் வந்திருக்கின்றனர். கழுத்தில் கட்டப்பட்டிருந்த சயனைட் குப்பிகளில் இறுதி வார்த்தைகளை அவர் நிரப்பி விட்டுப் போயிருக்கிறார்கள் கையில் …
-
- 0 replies
- 814 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் சுமார் 300 இற்கும் அதிகமானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் 1990 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இருபது வருடங்களுக்குப் பின் மன்னிப்புக் கோரி உள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரி உள்ளார். அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- ”இது ஒரு தவறுதான். 20 வருடத்துக்கு முன் இடம்பெற்ற இத்தவறுக்காக முஸ்லிம் சகோதரகளிடம் மன்னிபுக் கோருகின்றமையில் எமக்கு எவ்விதமான தயக்கமும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில நடவடிக்கைகள் விளங்கிக் கொள்ள…
-
- 90 replies
- 6.4k views
-
-
Should Canada turn away migrant ships? - Vote "NO" http://www.cp24.com/ For this question time is end ==== Now new poll started. Will you welcome the Tamil migrants (குடியேறுபவர்) to Toronto? Be careful Now vote"YES" http://www.cp24.com/ Muthamizh Chennai
-
- 9 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை பிற்பகல் 14 மணிக்கு யெநீவா ஐக்கியநாடுகள் சபைக்கு முன் முருகதாசன் திடலில் சிவந்தனின் புரட்சிப்பயண நிறைவை முன்னிட்டு ஐரோப்பிய தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து சுவிஸ் ஈழத்தமிழரவை நடாத்தும் பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாணாடு. முள்ளிவாய்காயுக்கு பின்னான தமிழர்களின் அடுத்தகட்டு வீச்சையும் நிலைப்பாட்டையும் உலகிற்கு எடுத்துக்கூறவுள்ள இவ் வரலாற்று மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அணைவரையும் உரிமையுடன் அழைக்கும் ஐரோப்பியத் தமிழ் அமைப்புக்கள் . ஈழ நாதம்
-
- 0 replies
- 568 views
-
-
புதன்கிழமை, ஆகஸ்ட் 18, 2010 ஈழ நாதம் வட பகுதியினை முழுமையாக இலங்கை இராணுவம் கட்டுப்பாடில் கொண்டுவந்த பின்னர் 4673 மனித உரிமை மீறல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணையகம் கூறியுள்ளது. இந்த முறைப்பாடுகள் மனனார், வனுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக ஆணையகம் கூறுகின்றது. மேற்படி முறைப்பாடுகளில் 3000 இற்கு அதிகமானவை காணாமல் போனோர்கள் தொடர்பான முறைப்பாடு ஆகும். போரின் போது சரண்டைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோர் இக்காலப்பகுதியில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டாலர்களான உறவினர்கள் கூறியுள்ளனர். ஈழ நாதம்
-
- 0 replies
- 477 views
-
-
பாடசாலைகளில் சீனமொழியை ஒரு பாடமாக கற்பிக்க சிறிலங்கா அரசு முடிவு திகதி:16.08.2010, சிறிலங்காவில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் விரைவில் சீனமொழி கற்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் சீனாவின் உதவியுடன் நிறுவப்பட்ட துறைமுகத்தில் நீரை நிரப்பும் நிகழ்வில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “கொழும்பு லும்பினி வித்தியாலயத்தில் ஏற்கனவே சீன மொழியைக் கற்பிக்கும் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. சீனாவின் நிதியுதவியுடன் இது மேற்கொள்ளப்படுகிறது. சீன மொழி கற்பிக்கும் திட்டத்தை ஏனைய பாடசாலைகளுக்கும் வ…
-
- 9 replies
- 1.3k views
-
-
இன்று பதக்கம்... நாளை உயிர்? புண்சேகா! கடந்த 1995-ம் ஆண்டு... விடுதலைப் புலிகளின் கையில் இருந்த யாழ்ப்பாணத்தை சிங்கள ராணுவம் வீழ்த்திய நேரம்... 600-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லி சுற்றி வளைக்கிறார் யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரியாக இருந்த அந்தப் புள்ளி. காயங்களோடும் பசியோடும் கதறிய மக்களைக் கொஞ்சம்கூட சட்டை செய்யாமல், ''புதைகுழி தோண்டி இவர்களை உயிரோடு உள்ளே தள்ளுங்கள்!'' என உத்தரவிட்டார் அந்த அதிகாரி. சிங்கள ராணுவத்தின் வீரர்களே அதைச் செய்யத் தயங்க... தன் தலைமையில் அந்த வீரர்களை முடுக்கிவிட்டு அந்தக் கொடூரத்தை அரங்கேற்றினார். கொடூர இனக் கொலையாக உலகையே உலுக்கிய இந்த விவகாரம், இலங்கையிலும் பெரிதாக வெடித்தது. இலங்கை …
-
- 0 replies
- 818 views
-
-
வட பிராந்திய மக்களின் மனங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பில் இன்னமும் ஆதரவு உள்ளது: - கோத்தபாய - திகதி:18.08.2010, வடபகுதி வாழ் மக்கள் மீது அரசாங்கத்துக்கு அதிகபட்சமான சந்தேகம் உண்டு. எனது நிலைப்பாடும் அதுவே. அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களின் மனங்களில் விடு தலைப் புலிகள் தொடர்பில் இன்னமும் அனு தாபம் உள்ளது. வடபகுதியைச் சேர்ந்த மக்கள் மத்தியில் சரண் அடையாத விடுதலைப் புலிகள் இன் னும் எத்தனை பேர் உள்ளனர் என்றோ, அடையாளம் காணப்படாதவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்றோ எமக்குத் தெரியாது. அவர்களில் பலர் பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவாக மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். அவர்களே மிக மோசமானவர்கள். அவர்கள் தொடர்ந்தும் புலிகளுக்கு ஆதரவளிப்பார்…
-
- 0 replies
- 863 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், கனேடிய தமிழ்சமூகமும் அகதிகளுக்காக ஒன்றாக அணிதிரள்கின்றது! திகதி:17.08.2010, தமிழீழ விடுதலைப் போராளிகள் இந்தக் கப்பலில் இருக்கும் பட்சத்தில் ஜக்கிய நாடுகள் சபையின் போராளிகள் பாதுகாப்பு சரத்துக்களின் கீழ் சித்திரவதை மற்றும் வழமைக்குமாறான தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப்பெறும் தகைமையை அவர்கள் கொண்டுள்ளனர். தற்போதைய நிலவரம் பல மாதங்களாக சரக்கு கப்பலில் அடைபட்டு வலிமிகுந்த கடல் பயணத்தினை மேற்கொண்ட தமிழீழத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் பிரிட்டிஸ் கொலம்பியாவினை கடந்த 13ம் திகதி வெள்ளியன்று வந்தடைந்துள்ளனர். வியாழனன்று இரவு கனேடிய அதிகாரிகள் எம்வி-சன்-சீ என்ற அந்தக்கப்பலில் ஏறி 59மீற்றர் நீளமுள்ள அந்தக் கப்பலை விக்ரோரியாவிற்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்து ஒரு வருட காலம் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு எதிராக தற்போது ஒரு புதிய முனையில் அரசாங்கம் போரைத் தொடுத்துள்ளது. வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும், பாதுகாப்பு என்ற பெயரில் அமைக்கப்படும் பாரிய படைமுகாம்களும், இராணுவக் குடியிருப்புக்களும் தமிழ் மக்களுடைய எதிர்கால இருப்பையே கேள்விக்குறியாக்குவதாக அமைந்திருக்கின்றது. போர் முடிவுக்கு வந்து ஒரு வருடம் சென்றிருக்கும் நிலையிலும், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழர்கள் முன்வைக்கும் நிலையில், புதிதாக உருவாக்கப்படும் இராணுவக் குடியிருப்புக்கள் தமிழ் மக்களுடைய பாரம்பரிய நிலங்களை அபகரிப்பதாகவும், நீண்ட காலத்தில் இனஅழிப்பை ந…
-
- 1 reply
- 905 views
-
-
http://www.yarl.com/files/100817_s.po.mp3
-
- 1 reply
- 1.8k views
-
-
http://www.yarl.com/files/100817_australian_election.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 861 views
-
-
http://www.yarl.com/files/100817_sivanthan.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 564 views
-
-
http://www.yarl.com/files/100817_colombo_reporter.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 1k views
-
-
உயர்தரப் பரீட்சை இடம்பெறும் வேளையில் யாழில் மாபெரும் களியாட்டம், அமைச்சர் தேவாவும் பங்கேற்பு! நாடாளாவிய ரீதியில் க.பொ.த உயர் தரப் பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு மாபெரும் களியாட்ட நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. தமிழ் ஊடகம் ஒன்றின் ஏற்பாட்டில் யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசிர்வாதத்துடன் இசையும், நடனமும் கலந்த பிரமாண்டமான நிகழ்வு மேடையேறியது. சிங்கள-தமிழ் கலைஞர்கள் ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்குபற்றினார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பாடகர்களும் வருகை தந்திருந்தார்கள். சிங்கள நடனப் பெண் கலைஞர்களின் குத்தாட்டம் சூடு கிளப்பியமை குறிப்பிடத்தக…
-
- 6 replies
- 2.6k views
-
-
புலிகளுடன் முரண்படக்கூடாதென்று தீர்மானித்திருந்தோம். பேச்சுவார்த்தைகளை நீண்ட காலத்திற்கு இழுத்து அதன்மூலம் அவர்களின் இராணுவக் கட்டுமானத்தை பலவீனமாக்க முடியுமென்பதால் அவர்களுடன் முரண்படாமலிருப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் விடுதலைப்புலிகள் பிளவுபடுவதற்கும் யுத்த நிறுத்தம் சிறப்பாகப் பயன்பட்டது. புலிகளை விடுமுறையில் சென்று தமது பெற்றோரையும் உறவினர்களையும் சந்திக்க அனுமதித்தமை, அவர்கள் பெண் சிநேகிதிகள், ஆண் சிநேகிதர்களை வைத்திருப்பதற்கும் திருமணம் செய்வதற்கும் அனுமதிப்பதன் மூலம் அவர்களுடைய வலுவான அத்திவாரம் பலவீனமடைந்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்டோர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தனர், மரணங்களை எதிர்நோக்கினர். எனினும் விடுதலைப்புலிகள்…
-
- 6 replies
- 1.6k views
-
-
http://www.yarl.com/files/100817_kalaivaanar_malaysia.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 518 views
-
-
செவ்வாய்க்கிழமை, 17, ஆகஸ்ட் 2010 (8:18 IST) ஈழத்தமிழர்கள் பற்றி இலங்கை ஜெயராஜ் பேச்சு: கண்கலங்கிய ரஜினி சென்னை கம்பன் விழாவில், இலங்கை தமிழர் பற்றிய பேச்சை கேட்டு நடிகர் ரஜினி கண்கலங்கினார். கம்பன் கழகம் சார்பில், 36வது ஆண்டு கம்பன் விழா சென்னை மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இறுதி நாளன்று, கம்பன் புலமை, திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா, பொருளிலா, இன்பத்திலா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தில் பேசிய இலங்கை ஜெயராஜ், நான் தமிழன் ஆனால் அயல்நாட்டுக்காரன். நான் சுதந்திரமானவனா?. ஒருவன், மற்றொருவரை சுதந்திரமாக நடமாடவிடும்போதுதான், சுதந்திரமாக பேச, செயல்பட விடுவதுதான்…
-
- 2 replies
- 1.9k views
-