ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143235 topics in this forum
-
கொழும்பு சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பாக உடனடி விசாரணைகளை நடத்துமாறு விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை ‐ ஜீரிஎன் செய்தியாளர் 25 July 10 06:24 pm (BST) கொழும்பு சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பாக உடனடி விசாரணைகளை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கோரியுள்ளார். இதேவேளை அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல தமிழ் அரசியல் கைதிகளும் விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும் இன்றிரவு இவர் யாழ்ப்பாணத்தில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார் என ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். பூசா மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலைகளில் 765 தமிழ் ஆண் அரசியல் கைதிகள் எதுவித விசாரணைகளுமின்றி வருடக் கணக்காக தடுத…
-
- 0 replies
- 400 views
-
-
லண்டனில் இயங்கிவரும் மிடில் செக்ஸ் தமிழ் விளையாட்டுக் கழகம்(MTSSC) இலங்கை விமானசேவையான ஏர் லங்காவுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை வரும் செப்டெம்பர் மாதம் நடாத்தவுள்ளதாக அறியப்படுகிறது. குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள பல பாடசாலை முன்னாள் மாணவர்கள் இது தொடர்பாக பல சந்திப்புகளை நடாத்தி இருக்கின்றனர். சிலர் சிங்களவனோடு விளையாடக் கூடாது என்றும் சிலர் விளையாடலாம் என்றும் தமது கருத்துக்களைக் கூறியுள்ளனர். விளையாட இருக்கும், அல்லது விளையாட விரும்பும் துடுப்பாட்ட வீரர்களே ஒரு கணம் இதை வாசியுங்கள்! சர்வதேசரீதியாக பல அவப்பெயர்களைச் சம்பாதித்துள்ள இலங்கை அரசு தனது உண்மையான முகத்தை மறைக்கவே இவ்வாறன விளையாட்டுப் போட்டிகளையும், விழாக்களையும் நடாத்தி வருகின்றது என்ற உண…
-
- 6 replies
- 1k views
-
-
தமிழினப் படுகொலைக்கு காரணமானவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் ‐ அசின் இனி தமிழ் படங்களில் நடிக்க முடியாது‐ 25 July 10 12:35 pm (BST) இலங்கையில் தமிழ் இன படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.என்றும் இலங்கை சென்ற அசின் இனி தமிழ் படங்களில் நடிக்க முடியாது என்றும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது ராதாரவி பேசியதாவது:‐ இலங்கைக்கு நடிகர்‐ நடிகைகள் செல்லக்கூடாது என்று திரைப்பட சங்கங்கள் முடிவு செய்து அறிவித்துள்ளன. அதை மீறி அசின் இலங்கை சென்றிருக்கிறார். அவர் கேரளாவை சேர்ந்தவர். எல்லோருக்கும் இன உணர்வு வேண்டும். அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு…
-
- 2 replies
- 1.7k views
-
-
வவுனியா பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலையில் மருத்துவம் பெற்று வரும் 60பேருக்கான அன்றாட தேவைகளான தேயிலை,சீனி,சவர்க்காரம்,சம்போ,டெற்றோல்,பற்பசை,பிறஸ்,பால்மாவகைகள் போன்றவற்றுக்கான உதவிகளை நேசக்கரம் வேண்டி நிற்கிறது. ஒரு நோயாளிக்கு இலங்கைரூபா 2000ரூபா பணம் தேவைப்படுகிறது. இந்த உதவியை 6மாதங்களுக்குச் செய்வதற்கு நேசக்கரம் திட்டமிட்டுள்ளது. உதவும் மனம் படைத்த உறவுகளிடம் இவ்வுதவியைக் கோருகிறோம். யுத்தத்தினால் காயமுற்று நரம்புகள் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழும் இடுப்புக்கு கீழும் உணர்வற்றுப் போயுள்ள இவர்கள் படுக்கையிலும் சுழல்கதிரைகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் வாழப்போகும் மீதி நாட்களிலாவது மகிழ்ச்சியாக வாழ இவர்களுக்கு நேசக்கரம் கொடுங்கள் உறவுகளே...? தமது அன்றாட த…
-
- 5 replies
- 1.8k views
-
-
பிரபாகரனே என் தலைவர் -டாக்டர் பி. இராமசாமி உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரனே என் தலைவர். இதில் எந்த மாற்றமும் கிடையாது. என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி திட்டவட்டமாகக் கூறினார். இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலை செய்ததில் உறுதுணையாக இருந்தவர்கள்.இந்திய அரசாங்கமுமஇ தமிழ்நாட்டு அரசாங்கமும் தான் இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது என்று அவர் சொன்னார். இலங்கை நாட்டு அதிபர் இராஜபக்சே இந்தியாவிற்கு துணிச்சலாக வருவதற்கு இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டு அரசாங்கமும் கொடுத்த ஆதரவினால் அந்த இன படுகொலையாளி இந்தியாவிற்க்கு துணிச்சலாக வருகிறார் இலங்கை தமிழர்களை அநியாயமாக படுகொலை செய்ய உதவியாக இருந்த இந்தியாவை குறை சொன்ன எனக்கு தடை விதித்தாலு…
-
- 6 replies
- 1.2k views
-
-
மனிதப் படுகொலைகள் தான், சிங்களப் பேரினவாதத்தின் மொழி. பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்தும், பின் ரி-56 துப்பாக்கியால் சுட்டும் கொன்றதாக லங்கா இணையம் இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தையும் வெளியிட்டுள்ளது. குற்றங்கள் இங்கு மேல் இருந்து நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று குற்றங்களை மூடிமறைக்க, பாசிச சட்டங்களை மக்கள் மேல் ஏவுகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை மறுதலிக்கின்றது. தொடர்ந்து குற்றத்தை மூடிமறைக்க படுகொலைகளைச் செய்கின்றது, கடத்துகின்றது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலைக் குற்றத்தை, யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைக்கான ஆசிரியர் சங்க அறிக்கை முன்பு உறுதி செய்தது. இ…
-
- 43 replies
- 5.3k views
-
-
முத்தையாவும் முகம்மது அலியும் 25 July 10 01:52 am (BST) விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்படும்பொழுது விளையாட்டு வீரர்களும் குரல் கொடுக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் முகமது அலி. என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப் போகவேண்டும்” என தான் சார்ந்திருந்த தேசத்தை எதிர்த்து குரல் எழுப்பியது ஒரு அரசியல்வாதியோ, போராளியோ அல்ல!! புகழின் உச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர் கிளேஸியஸ் எக்ஸ் என்றழைக்கப்பட்ட முகமது அலி. என்னுடைய சொந்த மக்களே இங்கு அடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் கிடக்கும…
-
- 8 replies
- 1.7k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 25, ஜூலை 2010 (18:54 IST) தமிழர் பகுதிகளை சிஙகள மாகாணமாக்க ராஜபக்சே முயற்சி இலஙகையில் தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதிகளில், சுமார் 4 இலட்சம் இலங்கை ராணுவக் குடும்பங்களை குடியேற்றி, தமிழ் மாகாணப் பகுதிகளை சிங்கள மாகாணமாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது பற்றி இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக இலஙகைத் தமிழ் இணைய தளங்களில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில் தெரியவந்துள்ளது. அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள படி, இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பிர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில், “இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதாகவும் அதற்காகவே நல்லிணக்க குழுவொன்றினை அமைத்துள…
-
- 1 reply
- 533 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 25, ஜூலை 2010 (17:26 IST) ரத்தம் கொதித்தது;ரத்தக்கண்ணீர் வடிந்தது-சத்யராஜ் நடிகை அசின் இலங்கை சென்றார். இப்போது நடிகர் கருணாஸ் இலங்கை செல்கிறார். இந்திய கலைஞர்கள் இலங்கை செல்லக்கூடாது என்று தமிழுணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இவர்களின் இலங்கை பயணத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். பிரபல கதாநாயகர்கள் நடித்த படங்கள் தோல்வி அடைந்தால், அந்த கதாநாயகனிடம் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி தியேட்டர் அதிபர்கள் கேட்கும் நிலையும் இருக்கிறது. இதற்கு என்ன முடிவு செய்யப்போகிறது நடிகர் சங்கம் என்ற கேள்வி எழுந்தது. பரபரப்பான இந்த சூழ்நிலையில் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்…
-
- 0 replies
- 865 views
-
-
மறக்க முடியுமா என்று ஒரு தொடர் ஜகத் கஸ்பரால் நக்கீரன் இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்ததை அறிவீர்கள். அந்தத் தொடர் எழுதப்பட்டு வந்ததை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள். அந்தத் தொடரைப் படித்தவர்களுக்கு, புலிகள் இயக்கமே, இந்த போலிப் பாதிரி கஸ்பரை நம்பித்தான் இருப்பது போலவும், இந்தக் கஸ்பர் சொன்ன பேச்சை பிரபாகரன் கேட்டிருந்தால், புலிகள் இயக்கம் வீழ்ந்திருக்காது என்பது போலவும் எழுதப் பட்டு வந்தது. இந்தத் தொடர் வெளிவந்த பல நக்கீரன் இதழ்களின் அட்டை படம், இந்த “மறக்க முடியுமா“ தான். இந்த கஸ்பரை இது போல ப்ரமோட் செய்ததில், கர்ம வீரர் காமராஜ் மற்றும் கஸ்பர் இருவருக்கும் மிகுந்த பலன் தரும் விஷயமாக இருந்ததால், ரொம்ப வசதியாகப் போனது. யார் இந்த ஜகத் கஸ்பர் ? இவர் ஒரு ரோமன் க…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழர்களுக்கு நீதி கோரி பன்னாட்டுத் தலைவர்களை நாடு கடந்த தமிழீழ அரசின் நி்ர்வாகிகள் சந்தி்க்கவுள்ளதாக அதன் பொறுப்பாளர் ருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். திகதி: 24.07.2010 // தமிழீழம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழ மக்களுக்கெதிரான இலங்கையின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்த சாட்சியமாக அமைந்த 1983ம் ஆண்டு ஜூலைப் படுகொலை நடைபெற்று 27 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச இயந்திரத்தின் உதவியுடன் நடத்தி முடிக்கப்பட்ட இந்த இனப்படுகொலையின் போது 3,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் மதிப்பிலான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. ெவெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்த…
-
- 1 reply
- 620 views
-
-
ஈழத்தமிழரின் கன்னி முயற்சி - சிங்கள படுகொலை இனவெறியர்கள் ஒவொருவரும் தண்டிக்கப்படவேண்டும் ! http://www.tamilnet.com/art.html?catid=79&artid=32287 வழக்கை தாக்கல் செய்தவர்கள் : -- மக்கள் அவை சுவிற்சர்லாந்து -- மக்கள் அவை நோர்வே -- படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அமைப்பு , ஐக்கிய அமெரிக்கா வழக்கின் சாராம்சம்: ஜெகத் டயஸ் - -- ஒரு போர்குற்றவாளியை செர்மானிய அரசு உப தூதுவராக விட்டது. -- இந்த குற்றவாளி என்ன செர்மனியில் செய்கிறார் ? என்பதும்.
-
- 6 replies
- 1.3k views
-
-
உலகிற்கு அமைதியை போதித்த புத்த பகவானைப் பின்பற்றுவதாக பறைசாற்றிக்கொள்ளும் சிங்கள இனவாத காடையரின் கோரத்தாண்டவத்திற்கு 1983 யூலை மாதத்தில் பலியான தமிழ் உறவுகளின் 27 ஆவது வருட நினைவு நாள் சிட்னியில் paramatta church street Mall இல் இன்று அனுட்டிக்கப்பட்டது. பல நூற்றுக் கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந் நினைவு கூரல் நிகழ்வை பிற்பகல் 3.40மணியளவில் தமிழ் இளையோர் அமைப்பின் நியூசவுத்வேல்ஸ் ஒருங்கிணைப்பாளர் கார்த்தீபன் அருள் அகவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த நிரூத்தன் தொகுத்து வழங்கிய இந் நிகழ்வில் அவுஸ்திரேலியா தமிழர் பேரவை ஊடகப் பிரிவு பணிப்பாளர் சாம்பவி பரிமளநாதன் உரை நிகழ்த்தினார். ”1983 ஆண்டில் 4000ம் தமிழரைக் கொன்ற சிறிலங்காஅரசாங்கம…
-
- 0 replies
- 569 views
-
-
கரும்புலியாய் வாழ்ந்து............, கரும்புலியால் வாழ்ந்து............., கரும்புலிகளோடு வாழ்ந்து............, கரும்புலிகளுக்காக வாழ்ந்து............, இறுதிவரை கரும்புலிகளோடு கலந்திருந்தான். கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக்கனவு நனவாகி சரித்திரத்தின் நாயகனாக வாழ்வான் சாள்ஸ். சொன்னால் முடியாத சரித்திரமாக... "என்னால் முடியும்" கேணல் சார்ள்ஸ் 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப…
-
- 0 replies
- 1.4k views
-
-
. வடக்கில் 4 இலட்சம் பேரை குடியேற்றி சிங்கள மாகாணமாக்க திட்டம்:த.தே.கூ. வடமாகாணத்தைச் சிங்கள மாகாணமாக மாற்றி அங்கு இராணுவத்தினர் உட்பட அவர்களது குடும்பங்களுமாக சுமார் நான்கு இலட்சம் பேரை குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரச காணிகள் மட்டுமின்றி தமிழர்களது காணிகளும் சுவீகரிக்கப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு நாம் அறிக்கை கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் தற்போது தமிழ் மக்களுடனான புரிந்துணர்வுக்கு என்று கூறி நல்லிணக்கக் குழு ஒன்றை அமைத்துள்ளமை கேலிக்குரிய விடயம் ஆகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்ப…
-
- 0 replies
- 595 views
-
-
ஜேர்மணிய அர்சிற்கெதிராக மூன்று ஈழத்தமிழர் அமைப்புக்கள் ஐரோப்பிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் வன்னி இனவழிப்புப் போரில் முக்கிய பங்காற்றியவரும், கொலைக்களங்கள் பலவற்றிற்குப் பொறுப்பாக இருந்தவருமான இலங்கை ராணுவ ஜெனரல் ஜகத் டயஸை ஜேர்மணிக்கான இலங்கைத் தூதுவராக ஏற்றுக்கொண்டதை எதிர்த்து ஜேர்மன் அரசிற்கெதிராக மூன்று புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புக்கள் ஐரோப்பிய ஒன்றிய மனிதவுரிமைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளன. சுவிஸ் ஈழத்தமிழர் கழகம், நோர்வே ஈழத்தமிழர் கழகம், அமெரிக்காவைச் சேர்ந்த இனக்கொலைக்கு எதிரான அமைப்பு ஆகிய மூன்று தமிழ் அமைப்புக்களே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இவர்களின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள ஜேர்மணிய மனிதவுரிமை அமைப்பொன்று, இலங்கை ஜெனரல் ஜ…
-
- 0 replies
- 1k views
-
-
பத்திரிகை சுதந்திரத்தை நிலைநிறுத்தப் போராடியமைக்காக மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் வித்தியாதரனுக்கு சிறப்பு விருது! திகதி: 24.07.2010 // தமிழீழம் கடந்த ஆண்டில் இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரத்தை நிலை நிறுத்தப் போராடியமைக்காக பத்திரிகையாளருக்கான சிறப்பு விருதை "உதயன்', "சுடர்ஒளி' ஆகிய பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரிய ரும், மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர்களுள் ஒருவருமான என். வித்தியாதரன் பெறுகின்றார். இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கைப் பத் திரிகை சம்மேளனம் ஆகியவை இணைந்து நடத்தும் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த பத்திரிகையியல் விருது வழங்கும் நிகழ்விலேயே இந்த விருது வழங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டில் இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரத்தை நிலை நிறுத்துவதற்காக பணியாற்றிய …
-
- 3 replies
- 689 views
-
-
கொழும்புச் சிறைக் கூடத்தில் தமிழ்க் கைதிகள் மூன்று பேர் காயமுற்றனர்! திகதி: 25.07.2010 // தமிழீழம் கொழும்பு விளக்கமறியல் கைதிகள் சிறைச்சாலையில் சக சிறைக் கைதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று தமிழ்க் கைதிகள் காயமடைந்தனர் என அறிய வந்தது. இச்சம்பவம் குறித்து தெரியவருவ தாவது: நேற்றுமுன்தினம் இரவு ஒரே சிறைக் கூடத்துக்குள் தமிழ்க் கைதிகளுடன் ஏனைய கைதிகளும் ஒன்றாக இருக்க அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக தமிழ்க் கைதிகள் நேற்று சிறைச்சாலை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தனர். இவ்வாறு முறைப்பாடு செய்தததால் ஆத்திரம்கொண்ட சக கைதிகளும் சிறைச்சாலை காவலர்களும் நேர்ந்து நேற்றுக்காலை கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த மூன்று தமிழ்க் கைதிகளையும் தாக்கினராம். இந்தச் சம்பவம் க…
-
- 0 replies
- 515 views
-
-
தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்பட்டு வருகின்ற இந்த நேரத்தில் அதற்கு எதிர்ப்புகூட தெரிவிக்க முடியாத அராஜக ஆட்சி தமிழ்நாட்டில் நடந்துகொண்டு இருக்கிறது. பேச்சு சுதந்திரம் கூட இல்லாமல் தமிழர்களுக்கு ஆதரவாக பேசினாலே இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யும் கையாளாகாத தமிழக,இந்திய அரசுகளுக்கு எதிராக தமிழர்கள் தமிழ்நாட்டிலும் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிகிறது. கருணாநிதி அவர்களே, ஈழத்தில் உள்ள தமிழர்களை மட்டுமல்ல உங்களால் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களையும் காப்பாற்ற முடியாது, ஏனெனில் உங்களுக்கு உங்கள் வீட்டு தமிழர்களின் (பிள்ளைகள்) நலனுக்கு போராடவே நேரம் சரியாக இருக்கிறது. உங்களுக்கு தமிழர்கள் சார்ப…
-
- 0 replies
- 689 views
-
-
மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி-ரணில் இரகசிய உடன்பாடு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-24 06:36:25| யாழ்ப்பாணம்] அரசியல் அமைப்புத்திருத்தம் சம்பந்தமாக ஜனாதிபதிக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கிடையில் நடத்தப்பட்டுவரும் பேச்சு வார்த்தைகளில் இருவரும் மூன்று விடயங்கள் தொடர்பில் இரகசியமான இணக்கப் பாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது. 17ஆவது அரசியல் அமைப்புத்திருத்தம் குறித்து பேசுவதில்லை,ஜெனரல் சரத்தை பொன்சேகாவை விடுதலை செய்வது குறித்து பேசுவதில்லை. மற்றும் இரண்டு கட்சிகளின் உறுப்பினர்கள் கட்சி தாவ இடமளிப்பதில்லை எனவும் இரு தலைவர்களும் இரகசியமான இணக்கத்துக்கு வந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த நெருக்கடி எவ்வித பிரச்சினைகளும் இ…
-
- 0 replies
- 773 views
-
-
தமிழ் மக்களே!அரசியலை பாவப்பட்ட தொழிலாகப் பார்க்காதீர்கள் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-24 07:40:38| யாழ்ப்பாணம்] ஈழத்தமிழ் மக்களுக்கு எப்போது விமோசனம் என்று யாரேனும் கேட்டால் தமிழ் மக்களின் நலனை மட்டும் மையமாகக் கொண்ட தமிழ் அரசியல் தலைமை என்று இந்த மண்ணில் தோற்றம் பெறுகின்றதோ அன்றுதான் அது சாத்தியமாகும் என்று அடித்துக் கூறலாம். எங்கள் தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் நலன் கருதி அரசியலில் இறங்கி இருந்தாலும், சொற்ப காலத்தில் அவர்கள் சுய லாபம் கருதிய பாதையில் பயணிப்பதைக்காண முடிகின்றது. இது தவிர சிலர் தங்களுக்கு அரசியல் புலத்தில் ஏற்படக் கூடிய எதிர்ப்புகளைத் சமாளித்து தங்கள் வருமான ஈட்டல் தொழில்களை கச்சிதமாக செய்து முடிப்பதை மையமாகக் கொண்டு அரசியலில் …
-
- 0 replies
- 592 views
-
-
Jul 24, 2010 / பகுதி: செய்தி / ஈழவன் ருகுணு மாணவன் மரணம்! மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். இராணுவம், பொலிஸ் குவிப்பு ருகுணு பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பதுளை ஆஸ்பத்திரியில் இறந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியது. ஆனால் பொலிஸ் தாக்குதலில் இவர் இறந்ததாக குற்றஞ்சாட்டியுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டது. இதனைக் கண்டித்து மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடத்தப்பட்டது. இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மாத்தறை பொலிஸ் நிலையம் வரையில் ஊர்வலமாகச் சென்ற மாணவர் குழுவினர் மாத்தறை நகர வீதியில் அமர்ந்த நிலையில்…
-
- 1 reply
- 752 views
-
-
கொழும்பு, ஜூலை 23 ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித் துள்ள நிபுணர்குழு, முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படா மலேயே நியமிக்கப்பட்டுள்ளது. பான் கீமூன் அதனைத் தன் னிச்சையாகவே அமைத்துள்ளார். இதுகுறித்து நாம் ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் பல நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். முன்னர் எமது நாட்டுக்கு எமக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியுற்றது உங்களுக்கு ஞாபக மிருக்கலாம்; ஏன் எல்லோருக்குமே ஞாபகமிருக்கும். இவ்வாறு தெரிவித்தார் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத் துறை அமைச் சருமான கெஹலிய ரம்புக்வெல. தகவல் திணைக்களத்தில் அமைச் சரவை முடிவுகளை வெளி யிடும் செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்ற வேளை அமைச்சர் இதனைச் சொன்னார். பாதுகாப்புச்சபை அல்லது மனித உரிமைகள…
-
- 1 reply
- 893 views
-
-
சனிக்கிழமை, 24, ஜூலை 2010 (9:31 IST) இலங்கைக்கு தைரியத்தை கொடுத்தது யார்? வைகோ இலங்கை ராணுவத்தினர் தாக்கி மீனவர் படுகொலையை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்தும் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன், ம.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, இலங்கை ராணுவத்தினர் தாக்கி 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை இறந்துள்ளனர். இதுபோல, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இலங்கை அரசை ஒரு முறை கூட மத்திய அரசு கண்டித்ததில்லை. மீனவர்களுக்கு ஆதரவாக உள்ளது போல, முதல்வர் கருணாநிதி ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார். இலங்கை போரில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த இலங்கை ராணுவத்துக்கு யார் தைரியத்தை கொடுத்தது? இத…
-
- 7 replies
- 1.4k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்தையும், அதன் செயற்பாடுகளையும் ஆதரித்தும் சிறீலங்கா அரசால் தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்ட போர்க்குற்றங்களை விசாரணை செய்யவேண்டும் எனக் கோரியும், ஐ.நா நிபுணர்குழுவை வரவேற்றும் பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் முதற்தடவையாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. இலண்டன் றோஹம்டன் பல்கலைக் கழகத்தின் (Roehampton University), மனித உரிமைகள் பற்றிய குழுää மற்றும் இலண்டன் மெற்றோ பொலிற்ரன் பல்கலைக் கழக (London Metropolitan University) மாணவர் ஒன்றியம் ஆகியன விடுத்துள்ள பகிரங்க அறிக்கைகள் இத்தோடு இணைக்கப் பட்டுள்ளன. சுமார் 34000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மெற்றோ பொலிற்ரன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் 1983 ஜூலை கலவரத்தின் போது இ…
-
- 0 replies
- 792 views
-