Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மத்திய கிழக்கு நாடான டோகா கட்டாறில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறிலங்கன் விமான மூலம் இலங்கைக்கு சென்ற யாழ்ப்பாணம் சுண்ணாகத்தைச் சேர்ந்த 28 வயதான ரட்னம் மயூரன் என்பவர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 4ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எமது ஜீரிஎன் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்தள்ளார். இவர் கடந்த 6 வருடங்களாக கட்டாறில் வேலை செய்து விட்டு இலங்கை திரும்பிய வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பல பேர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்லும் வேளைகளில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவதாக ஜீரிஎன் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் கொலண்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்று பதிவுத்திருமணம் செய்துவிட்டு மீண்டும் கொல…

    • 1 reply
    • 1.1k views
  2. வன்னிப் போரில் குறைந்தது 30,000 ஈழத்தமிழர்கள் பலியாகியிருப்பதாக, திருமலை புல்மோட்டையில் செயலாற்றிய இந்தியப் படை மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘த ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’ நாளேட்டிற்கு கருத்துரைத்திருக்கும் பெயர்குறிப்பிடப்படாத இந்தியப் படை மருத்துவர், இறுதிப் போரின் பொழுது நாள்தோறும் நூற்றுக்கணக்கான காயக்காரர்களுக்கு தாங்கள் சிகிச்சையளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சிகிச்சையளிக்கப்பட்ட காயக்காரர்களில் 80 விழுக்காடானோர் தமது குடும்பத்தில் ஒருவரை அல்லது தமக்குத் தெரிந்த குடும்பத்தில் ஒருவரை இழந்தவர்களாகவே காணப்பட்டதாகவும் இவர் தெரிவித்துள்ளார். போர் நிறைவடைந்த பின்னர் 40,000 காயக்காரர்களுக்கு இந்திய மருத்துவர…

  3. எம்மைச் சுற்றியுள்ள உலகம் தற்போது கணணிமையப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் எமது மாணவர்களுக்கு கணணி தொடர்பான அறிவென்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கின்றது. ஓரளவு வசதியுடைய குறைந்த சதவீதமான மாணவர்களே தனியார் கல்வி நிலையங்களுக்குச் சென்று கணனிக் கல்வியினை கற்கின்றனர். போரினாலும் பொருளாதாரதினாலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கணனிக் கல்வி என்பது சாத்தியமான விடயமாக இதுவரையில் இருக்கவில்லை. தற்போது இதனை நிவர்த்தி செய்வதற்க்கு சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு முன்வந்துள்ளது. திட்ட விபரம் மாணவர்களுக்கு இலவசமாக கணணி கல்வியினை, இணையப் பயன்பாட்டினை வழங்குதல். எண்ணிக்கை 100 கணனிகள் இடம் யாழ் பல்கலைக்கழகம் அருகில் ( இடம் ஏற்க்கனவே தெரிவு செய்யப்பட்டு …

  4. நாங்கள் நாளையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது மாற்றின ஊடகங்கள் எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட நேற்றைய கொடூரத்தைப்பற்றிய தேடல்களில் இறங்கியுள்ளது. அனைத்துலக அமைப்புக்களும், சனல் 4 தொலைக்காட்சியும் சொல்லக்கூடிய அளவிற்கு எமது பிரச்சினைகளில் அக்கறை காட்டி அரசுக்கெதிரான ஆவணங்களை சேகரித்துக்கொண்டிருக்கையில் நாம் எமக்குள் முட்டி மோதிக்கொண்டிருப்பது எந்தவகையில் பொருந்தும் என்பதை சகல தமிழ் தேசிய வாதிகளும், தமிழின உணர்வாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும் . தேசியம் பேசிய படியே தேசியத்திற்க்கு எதிராக நாமே எமது தலையில் இனியும் மண் அள்ளி்ப் போட முடியாது. தாயகப் போரில் நாம் அடைந்த பின்னடைவின் பின்னும் நாம் இன்னும் திருந்தவில்லை என்ற சோக செய்தியை ஓராண்டின் பின்னும் அழ…

  5. யுத்தக் குற்ற விசாரணை: ஐ.தே.க. எதிர்க்கிறது இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசனை பெறு வதற்கு சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாய கத்தால் அமைக்கப்பட்டுகின்றமையை பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கின்றது என்று அக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஆனால், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் ஏன் இவ்வாறானதொரு நிபு ணர்கள் குழுவை நியமிக்க முயற்சி எடுத்துள்ளார் என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அவதானம் செலுத்தியுள் ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து மேலும் அவர் கூறியவை வருமாறு ஐக்கிய நாடுகள் சபை எமது உள் நாட்டு விவகாரங்களில்…

    • 2 replies
    • 1.4k views
  6. அண்மையில் அமெரிக்காவில் இருந்து செயற்படும் ஒரு மனித உரிமை அமைப்பின் உறுப்பினர் ஒருவரை சந்தித்து கதைக்கும் போது ... இப்போது என்ன நடைபெறுகிறது என்றதற்கு ... காசுப்பிரட்சனைதான். சில வலுமிக்க சட்டத்தரணிகளை வைத்திருந்து செயற்பட மாதா மாதம் ஏராளமான பணம் தேவை!! முன்பு செய்தவருக்கு கொடுத்ததே மாதம் $25000, அதையும் தொடர முடியாத அளவிற்கு பணப்பிரட்சனை. பல செனட்டர்கள் உட்பட பலருடன் அணுக வேண்டுமாயினும் தேவை பணம்! சமாளிக்க இயலாமல் உள்ளதாக கூறினார். .. இங்கு யாழிலோ சாந்தியும்/சாத்திரியும் ... அங்கு அவலப்படுபவர்களுக்காக நேசக்கரமாக கல்லில் நாருரிக்கும் வேலையில். செய்ய ஆயிரம் இருந்தும் பணம்! ஆனால் விடாமுயற்சியுடன் தொடர்கிறார்கள்... இன்று எம்முன் உள்ள இரு பாரிய பொறுப்புகள் .. 1) அ…

  7. ‘‘கண்மூடித்தனமான தாக்குதல்களை நிறுத்துங்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வைத் தேடுங்கள்.’’ இஸ்ரேலுக்கு சிங்கள அரசு அறிவுரை!!! By: அதியமான் காசாவில் முற்றுகைக்குள் ஆளாகியிருக்கும் பலஸ்தீன மக்களுக்கு மனிதநேய வழங்கல்களை எடுத்துச் சென்ற கடற்கலம் மீது இஸ்ரேலிய படைகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு சிங்கள அரசு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சு, பலஸ்தீன மக்களுக்கு மனிதநேய வழங்கல்களை எடுத்துச் சென்ற கடற்கலம் மீது இஸ்ரேலிய படைகள் நிகழ்த்திய கண்மூடித்தனமான தாக்குதல் தங்களின் அரசாங்கத்திற்கும், நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த கவலையை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதல்களை நிகழ…

  8. மிகக்குறைந்த சம்பளத்திற்கு, முன்னாள் போராளிகளிடம் வேலை வாங்கும் சிங்கள தொழில் அமைப்புக்கள்! புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் 1500 பேருக்கு விரைவில் நிரந்தர தொழில் வாய்ப்பு வழங்கும் பொருட்டு அரசாங்கத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக ட்ரைஸ்டார் ஆடைத் தொழிற்சாலையின் தலைவர் தேசமான்ய கலாநிதி குமார் தேவபுர தெரிவித்திருக்கின்றார். இதன் முதற்கட்டமாக 150 பேருக்கு இன்று நியமனம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறு நியமனம் பெறும் யுவதிகளுக்கு தங்குமிட வசதி, உணவு உட்பட பல வசதிகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் ஒவ்வொரு யுவதிகளுக்கும் இரண்டாயிரத்து ஐநூறு ரூபா சம்பளமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ட்றை ஸ்டார் ஆடைத்த…

    • 6 replies
    • 1.7k views
  9. இலண்டனில் இருந்து விடுமுறையில் கொழும்பு சென்ற ஈழத்தமிழர் ஒருவர் கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் வைத்து சிறீலங்கா காவல்துறைப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேற்கு இலண்டன் வெம்பிளிப் பகுதியைச் சேர்ந்த இவர், அண்மையில் பிரித்தானியாவில் நிரந்தர வதிவிட உரிமை பெற்றுக் கொழும்பு சென்றிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது. இதனிடையே, மேற்குலக தேசங்களில் இருந்து விடுமுறையில் கொழும்புக்கு வருகை தரும் தமிழர்களை, கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கடும் கண்காணிப்பிற்கும், விசாரணைக்கும் உட்படுத்துவதற்கான கட்டளையை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறீலங்கா பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ச பிறப்பித்திருப்பதாக தகவல…

    • 17 replies
    • 2.3k views
  10. http://yarl.com/articles/files/100601_kamala.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா

    • 8 replies
    • 1k views
  11. புலிக்கொடி இனியும் தேவைதானா?: தெய்வீகன் “தமிழ்மக்களுக்கான விடுதலைப்போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் புலிக்கொடியை இவ்வளவு காலமும் தாங்கிய தமிழினம், பயங்கரவாத அமைப்பாக பன்னாட்டு சமூகத்தினால் தடைசெய்யப்பட்ட அந்த அமைப்பின் கொடியை தாங்கியதால் சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டுவிட்டது. அந்த கொடியினை களைந்துவிட்டு தமிழ்மக்களின் உரிமைகளையும் நலன்களையும் ஒரு மக்கள் சமூகமாக சென்று சர்வதேச சமூகத்திடம் இறைஞ்சினால் – அல்லது பேரம் பேசினால் – தமிழ்மக்களுடைய விடுதலையை பெற்றுவிடலாம்” - இவ்வாறான ஒரு எழுதப்படாத கோட்பாடு கடந்த மே 19 ஆம் திகதிக்கு முன்னர் புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தின் ஒரு பகுதியினரின் மத்தியில் காணப்பட்டது. அந்த எழுதாத தத்துவத்தை த…

    • 51 replies
    • 5.1k views
  12. ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்றது மலேசியா மலேசியாவில் உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழர்களை காப்பாற்ற பல்வேறு உலக தமிழ் அமைப்புகளுக்கும், நக்கீரன் மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, ஐ.நா.வின் அகதிகளுக்கான அதிகாரிகளை சந்தித்து, ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார். உள்துறை அமைச்சகத்திடமும் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார். அதேபோல மாற்று செயல் அணி அமைப்பைச் சேர்ந்த கலைவாணர் முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்த ஈழத்தமிழர்களை நேரில் சந்திக்க பலமுறை முயற்சித்தும், அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு திங்கள்கிழமை மலேசிய பிரதமர் அலுவலகத்துக்கு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் அவல நிலைகளை பேக்ஸ் மூலமாக செய்திகளாக அனுப்பினார். தொடர்ந்து மலே…

    • 3 replies
    • 1.8k views
  13. பேச்சு வார்த்தை ஒன்றிற்கு தயாராகுமாறு கூட்டமைப்பிற்கு இந்தியா தகவல் அனுப்பியுள்ளது. மஹிந்த 8 ஆம் திகதி தீர்வு பொதியுடன் டில்லி செல்கின்றார். மஹிந்தவின் பொதியினை வைத்து பேச்சுவார்த்தை நடக்கலாம் என கூறப்படுகின்றது.அதே வேளை கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே தமது தீர்வு யோசனைகள் அமையும் என்று கூறியுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்பு தேர்தலில் வெற்றிபெறும் தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சுகளை நடத்துவேன் என்று ஜனாதிபதி அறிவித்திருந்த போதும் இதுவரை கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை. என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இப்படியான நிலையிலேயே மஹிந்தவின் புதுடில்லி விஜயம் இடம்பெறுகிறது. மஹிந்தவின் இந்த புதுடில்லி விஜயத்தின் பின்பு பேச்சுக்கான ச…

    • 6 replies
    • 1.7k views
  14. கிளி நொசியில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து சடலங்கள் வரி புலி சீருடையுடனும் சில காணப்பட்டன ஆகையால் இவை போராளிகளினுடைதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த உடல்கள் காயப்பட்ட நிலையில் கொலப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. முள்ளிவாய்க்காலில் நூற்றுக்கணக்கான காயப்பட்ட போராளிகளை படையினர் பிடித்துக்கொண்டுவந்து கிளினொச்சி, நெடுங்கேணி ஆகிய பகுதிகளில் முகாம்களில் வைத்திருந்ததாக தப்பி வந்த பொதுமக்கள் கூறி இருந்தனர். ஆகவே இந்த போராளிகளை கொன்ற பின்னர் ஆங்காங்கே கிணறுகள் மல கூடங்களில் போட்டு இருக்கலாம் என ஐய்யப்படுகின்றனர் மக்கள். மேலதிக செய்திகள்: கிளிநொச்சி நகரில், கணேசபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்ட மலசலக்கூட குழியில் இருந்து நேற்று ஐந்து…

  15. தமிழர்களை கூடுதலாக அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலைகளுக்கு போதிய மருத்துவ வசதிகளோ நோய் தடுப்பு நடவடிக்கைகளோ இல்லாமையினால் அங்கு காச நோய் வேகமாக பரவி வருகின்றது. வெலிக்கடை சிறையில் மட்டும் இதுவரை 70 பேருக்கு காச நோய் தொற்றியுள்ளது. வெலிக்கடை மட்டுமன்றி நாடு பூராகவுமுள்ள சிறைச்சாலைகளிலுள்ள சிறைக்கைதிகள் மற்றும் குற்றச்சாட்டின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் ஆகியோரின் மத்தியில் காசநோய் வெகு விரைவாக பரவிவருகின்றதாக கூறப்படுகின்றது. வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் காணப்படுகின்றனர்.இந்த சிறைச்சாலைகளில் அண்மையில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் அதிகமாக சிறை வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அண்மையில் …

    • 0 replies
    • 493 views
  16. இனிமையும் சந்தோசங்களும் நிறைந்திருந்த குடும்பத்தின் சந்தோசங்களைக் காலம் பிய்த்தெறிந்தது போட இந்த 28வயது இளைஞனின் வாழ்வும் சந்தோசங்களும் கருக்கப்பட்டு கனவுகளும் சிதைந்து போனது. கல்வியில் சிறந்த பிள்ளைகளின் எதிர்காலம் மீது நம்பிக்கை வைத்திருந்த பெற்றோரின் நம்பிக்கையில் விழுந்த பேரிடியாய்ப்போனது. அக்காவைக்காக்க தம்பியும் தம்பியை தங்கையை காக்க அண்ணன்களுமென வீட்டுக்கொருவரை களங்கள் உள்ளிழுத்துக் கொண்டது. யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த இந்த இளைஞனும் தனது தங்கையையும் முட்டு நோயாளனான தனது தம்பியையும் காப்பாற்றப் போராளியானான். காலத்தின் கட்டளையை ஏற்றுத் தானாகவே களங்ளில் காவலிருந்தான். மரணம் காலடிவரை வந்து வந்து செல்ல சாவின் பயமும் இனி வாழ்வில்லையென்ற நினைப…

    • 0 replies
    • 1.2k views
  17. கிளிநொச்சி கணேசபுர பகுதியில் மலசலக்கூடக் குழியில் மனித சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அண்மையில் உள்ள காணியில் இருக்கும் மலசலக்கூடக் குழியை துப்பரவு செய்யும் போதே சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் சில பொலித்தீன் பைகளில் கட்டபட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் காணியின் உரிமையாளர் பொலிஸாருக்கு குறித்த சம்பவத்தை அறிவித்த பின்னர் நீதவான் உட்பட பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதோடு குறித்தப் பகுதியில் இன்னும் பல சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. வீரகேசரி

  18. கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுப் பகுதிக்கு அருகில் உள்ள சாந்தபுரம் என்ற குடியேற்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்த மக்கள் கடந்த ஒரு மாதகாலமாக குறித்த பாடசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். இரண்டு நாட்களில் தம்மை தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படும் என்று அழைத்து வரப்பட்ட நிலையில் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் வகுப்பறைகளில் கடந்த ஒரு மாத காலமாக தாம் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். சாந்தபுரத்தை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாற்றுவதற்காகவே மக்களின் மீள்குடியேற்றம் தடைப்ப…

  19. Save Tamils Movement has launched a global petition demanding the change of IIFA 2010 venue from Colombo. Only 5 days left for us to act. When we get more than 1000 signatures, we will use it to mount pressure on Bollywood actors. Request you to act fast and sign the petition (will take just 2 mins)and pass it on to friends through all possible means (Facebook, Twitter, blog, websites, fwd mails). http://save-tamils.org/sign-petition.html

  20. சரத் பொன்சேகாவின் மகள் கடிதம் ஒன்றை ஹிலாரி கிளின்ரனிடம் அளித்துள்ளார் [ திங்கட்கிழமை, 31 மே 2010, 09:13 GMT ] [ கி.வேணி ] சிறிலங்கா முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மகள் அப்சரா பொன்சேகா அமெரிக்க இராஜாங்க துறை செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கான கடிதம் ஒன்றை அவரின் உதவி தலைமை அதிகாரியிடம் கையளித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறிலங்க வெளியுறவு அமைச்சர் பீரிஸ் ஹிலாரி கிளின்ரனை சந்தித்து பேசவிருந்த சில நிமிடங்களுக்கு முன் அப்சரா இந்த கடிதத்தை அளித்தது முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்சரா பொன்சேகாவும் சிறிலங்கா மனித உரிமைகள் அமைப்பு ஒன்றினை சார்ந்த மேலும் மூன்று சிறிலங்காவினை சேர்ந்தவர்களும் இதில் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, …

    • 0 replies
    • 1.3k views
  21. ராமநாதபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹசன்அலி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் கார் உட்பட பொருட்கள் திருட்டு போனது. குற்றத்தில் ஈடுபட்டதாக வீரா என்பவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் ஏசுவடியான் என்பவர் கோர்டில் சரணடைந்தார். திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ., சார்பில் அறிக்கை ஒன்று ராமநாதபுரம் நிருபர்களுக்கு அனுப்பபட்டது. அவ்வறிக்கையில், ‘’எனது வீட்டில் களவு போன பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு உதவிய துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் வாசனுக்கும், எப்.3 போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கும் நன்றி. டெலிபோன் மூலம் என்னை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.