ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசாங்கம் பயங்கரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் தேர்தலில் போட்டியிட அனுமதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தயா மாஸ்டர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவார் என வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தயா மாஸ்டர் ஓர் பயங்கரவாதத் தலைவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதிகளையும், குற்றவாளிகளையும் அரசாங்கம் தம் பக்கம் இணைத்துக் கொண்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிரான குற்றச் சாட்…
-
- 1 reply
- 543 views
-
-
ஒரு போர்க்குற்றவாளி என கோட்டபாய நிரூப்பித்துவிட்டார் – அனந்தி சசிதரன் 57 Views தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனைப் பற்றி, கோட்டாபய ராஜபக்ஷ கூறியமை தொடர்பில், வட மாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக செயலாளருமான அனந்தி சசிதரன், தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு தனது கருத்தை பிபிசி தமிழிடம் தெரிவிக்கையில், “எவ்வளவு மன வக்கிரமுடையவராக இருந்திருந்தால், இவ்வாறான ஒரு செய்தியை சிங்கள மக்கள் மத்தியில் – இனவாதத்தைப் பரப்பும் நோக்கில் அவர் கூறியிருப்பார் என்று புரிகிறது. உண்மையில் தேசியத் தலைவர் பிரபாகரனை இவர் கொன்றிருந்தால், இந்திய அரசுக்கு ஏன் இவர் மரண சான்றிதழை வழங்கவில்லை என்கிற கேள்வியை நாங்கள் முன்வை…
-
- 1 reply
- 628 views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - இலங்கை அரசுக்கு ராஜதந்திர ரீதியில் கொடுக்க வேண்டிய அழுத்தங்களை இப்போதுதான் இந்திய அரசு கொடுக்கத் தொடங்கியிருப்பதாக கருதுகிறோம். ஆனால் இலங்கை அரசு இத்தகைய அழுத்தங்களுக்கு செவிமடுப்பதாக தெரி யவில்லை. எனவே இலங்கை அரசுக்கு நன்றாக விளங்கக் கூடிய வகையில் அழுத்தங்களை கொடுக்கும் பாணியை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கருதுகிறோம். இலங்கை அரசு செவிசாய்க்காவிட்டால் இந்திய அரசு அடுத்த கட்டமாக எத்தகைய நடவடிக் கையை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். என தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். டில்லி சென்று இந்திய வெளியுறவுச் செய லாளர் சிவ்சங்கர் மேனன் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர்…
-
- 4 replies
- 992 views
-
-
ஸ்ரீகாந்தா ஓர் புலி உளவாளி முடியை வளர்த்துக்கொண்டு சிரட்டையுடன் புறக்கோட்டைக்கு சென்றால் நன்றாக பிச்சை எடுக்கலாம் ‐ பாராளுமன்றில் அமைச்சர்கள் காடைத்தனம் ‐ உரை ஹன்சாட்டில் இருந்து நீக்கம்: அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திலுள்ள புதமாத்தளன் பகுதியை நோக்கி படையினர் மேற்கொண்ட தாக்குதல்களால் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தெரிவித்த கருத்தை வாபஸ் பெறவேண்டும் எனவும் இல்லாவிடின் அவரை வெளியே துரத்துவோம் என்றும் ஆளுந்தரப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் நேற்று நாடாளுமன்றில் கூட்டாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் 10 நிமிடங்களுக்கு மேலாக சபையில் பெரிதும் அமளி துமளி ஏற்பட்டது. ஆளும் க…
-
- 0 replies
- 872 views
-
-
ஜி.எஸ்.பி சலுகை அடுத்தவாரம் கிடைக்கும்: ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்தின் வழங்கப்பட்ட, இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை, அடுத்த வாரமளவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/189271/ஜ-எஸ-ப-சல-க-அட-த-தவ-ரம-க-ட-க-க-ம-ஜன-த-பத-#sthash.32tMAxBn.dpuf
-
- 1 reply
- 306 views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து கடந்தமாதம் 26 ஆம் திகதி சத்திரசிகிச்சைக்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயிருந்தார். கடந்த 11 ஆம்திகதி வைத்தியசாலை ஊழியரான புஞ்சிபண்டார என்பவரால் இவர்வெளியே அழைத்துச் செல்லப்பட்டபொழுது வைத்தியசாலை வாசலில் வெள்ளை வானில் நின்றவர்களால் இவர் கடத்திச்செல்லப்பட்டதாக மருதானை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது. அதன்பின் 11 நாட்களுக்குப் பின்னர் கண்கள் கட்டப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் ஜா-எலவில் மீட்கப்பட்டுள்ளார். கரவெட்டி நெல்லியடியைச் சேர்ந்த 28 வயதான முருகதாஸ் பிரசாத் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல்போய் அடி காயங்களுடன் மீட்கப்பட்டவரா…
-
- 0 replies
- 1k views
-
-
பதுளையில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பதுளை மேல் நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை இன்றைய தினம் பிறப்பித்துள்ளார். 2014ஆம் ஆண்டு கண்டக்கெட்டிய பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவரின் கொலை வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/statements/01/131089?ref=home
-
- 2 replies
- 421 views
-
-
புனானையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ! 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதி By கிருசாயிதன் பொலன்னறுவை - மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதியில் இன்று (29) தனியார் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று (29) காலை 6.30 மணிக்கு புனானைப் பிரதேசத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது வேக கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பேருந்…
-
- 0 replies
- 443 views
-
-
துரோகக் குற்றச்சாற்றும் பழியும் மறுக்க முடியாத உண்மையாகிவிடும் என்பதால் கருணாநிதி திடீரென்று அண்ணா சதுக்கத்தில் உண்ணாவிரதம் எனும் மோசடி நாடகத்தை நடத்தியுள்ளார் என்று குற்றம்சாற்றியுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, கல்லறைக்குள் இருக்கும் அறிஞர் அண்ணா கருணாநிதியின் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்று கூறியுள்ளார். ஊஐகஉ இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் எச்சரித்ததாலும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கண்டித்ததாலும் கிழக்கு தைமூரிலும் கொசோவாவிலும் தலையிட்டதைப்போல இலங்கையிலும் சர்வதேச நாடு…
-
- 0 replies
- 955 views
-
-
யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் டாக்டர் ஜெர்கன் மொர்ஹார்டிற்கு யாழ் கட்டளைத் தளபதியினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜேர்மன் தூதுவர் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி, புனர்வாழ்வு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் யுத்தத்தின் பின்னர் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளில் படையினர் பாரியளவு பங்களிப்பு வழங்க…
-
- 0 replies
- 195 views
-
-
நெல்லை: நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின் தனி ஈழம் அமைப்பதே தங்கள் கூட்டணியின் முதல் வேலை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெல்லையில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுகூட்டத்தில் அதிமுக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ஈழத்தமிழர் பிரச்சனையில கருணாநிதியும், சிதம்பரமும் பேசி வைத்துக் கொண்டு நாடகம் நடத்தியுள்ளனர். இலங்கை பிரச்சனையில் கருணாநிதி மனித சங்கிலி உள்பட அவராக எதுவும் செய்யவில்லை. எல்லாம் நான் சொல்லி செய்ததுதான். இலங்கையில் போரை நிறுத்த போனை எடுத்து கருணாநிதி சோனியாவிடம் பேசினாலே போதும். போரை நிறுத்தவிட்டால் கூட்டணியை விட்டு சென்று விடுவேன் என்று கூறியிருக்கலாமே, இப்போதும் சொல்லலாமே, இப்போது போர் நின்று விட்டது…
-
- 0 replies
- 1.1k views
-
-
மனநலம் பாதிப்படைந்ததாகக் கூறப்படும் தாயொருவரால் அவரது மூன்று பெண் பிள்ளைகளும் கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது குழந்தைகளை கிணற்றில் வீசிய மேற்படி தாய், பின்னர் தானும் கிணற்றில் குதித்துள்ள போதும் அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாண்டிக்குளம் பாடசாலை வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகுரல் கேட்பதை அடுத்து அயலவர்கள் இன்று காலை ஓடிச்சென்று அவ்வீட்டின் கிணற்றை பார்த்தபோது தாயொருவர் மூன்று பிள்ளைகளை கிணற்றில் போட்டுவிட்டு தானும் கிணற்றில் வீழ்ந்து கிடந்ததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அயலவர்கள் உடனடியாக தாயாரை மீட்டெடுத்துள்ளனர். எனினும் வி. லதுர…
-
- 6 replies
- 788 views
-
-
அவுஸ்திரேலியாவின் விக்ரோறிய மாநிலத்தில் நாளை தமிழர்களால் 'அடங்காப்பற்று - 01' எனும் பெயரில் எழுச்சிப் பேரணி நடத்தப்படவிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 334 views
-
-
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள விரிவுரைகளை மீண்டும் ஆரம்பிக்க கோரி இன்று பகல் மாணவர்கள் பல்கலைக்கழத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி உரிமைப் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளனன. நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 8 மணிக்கு முன்னதாக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிருவாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் வெளியேற விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த போதிலும் தொடர்ந்தும் மாணவர்கள் நிருவாக கட்டிடத்த…
-
- 0 replies
- 472 views
-
-
தமிழ் மொழியில் பெயர் பலகை வைத்தால் 50 வீதம் வியாபார கழிவு..! யாழ்.மாநகர வர்த்தகர்களுக்கு முதல்வர் அதிரடி அறிவிப்பு.. யாழ்.மாநகரில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கி வர்த்தக நிலையங்களுக்கு பெயர் பலகை வைத்தால் 50 வீதம் வியாபார கழிவு வழங்கப்படும். என யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தொிவித்திருக்கின்றார். குறித்த விடயம் சபையில் பிரேரணையாக முன்வைக்கப்பட்டு ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதன்படி புதிதாக தொடங்கும் வியாபார நிலையம் மற்றும் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் வியாபார நிலையங்களில் தாமாகவே விரும்பி தங்களுடைய விளம்பர பதாகைகளில் தமிழுக்கு முன்னுரிமையளித்தால் 50% வியாபாரக்கழிவு வழங்கப்படுமென சபையினால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு…
-
- 2 replies
- 620 views
-
-
புத்தர் பெருமான் அவதரித்த நாளான வெசாக் நாளினை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமையும், நாளை மறுநாள் சனிக்கிழமையும் சிறிலங்காவில் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளையில், இந்த நாட்களில் தென்பகுதியில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 578 views
-
-
இந்த பொது வேட்பாளர் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு மாத காலத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வார் எனவும் அவர் குறிப்பிட்டார். http://tamilworldtoday.com/?p=12725
-
- 0 replies
- 456 views
-
-
பிள்ளையாரடியில் புத்தர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மேன்முறையீடு செய்ய தீர்மானம் மட்டக்களப்பு நகரில் (வடக்கு பிரதான நுழைவாயில்) பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலை வைப்பதற்கு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக தான் கொழும்பு மேல் நீதிமன்றத்தை நாடப் போவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமன ரத்தன தேரர் தெரிவிக்கின்றார். குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிராக கடந்த புதன்கிழமை அந்தப் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொலிஸார் முன்வைத்த அறிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், அதற்கான வேலைகளுக்கு தடை விதித்தது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அம்பிட்டியே சுமனரத்ன தேரர், ´ஏற்கனவே பிள்…
-
- 1 reply
- 598 views
-
-
அரசியல் பட்டப்படிப்புடன் கோத்தாவின் அரசியல் பிரவேசம் : எதிர்க்கும் முன்னாள் ஜனாதிபதி சீன பல்கலைகழக அரசியல் கற்கைநெறி சிறப்பு பட்டத்துடன், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவின், அரசியல் பிரவேசம் இருக்குமென்றால் அவரது வெற்றி நிச்சயமாகிவிடும். இருப்பினும் அவரது அரசியல் பிரவேசத்தை அவரது சகோதரர் விரும்பவில்லையென முன்னாள் வெளியுறவு தூதுவராக இருந்த கலாநிதி தயான் ஜெயதிலக கருத்து பகிர்ந்துள்ளார். மேலும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் கற்கைநெறி ஒன்றை மேற்கொள்ளவிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 2 replies
- 361 views
-
-
Pathmanathan urges the IC, UN and World Leaders to assert their moral right to stop the suffering of Tamil people We welcome the statement issued by US Secretary of State Hillary Rodham Clinton and UK Foreign Secretary David Miliband calling for immediate suspension of hostilities to provide for the safe passage of the Tamil people trapped in the war zone in Vanni. In particular we are grateful for the statement which calls upon the GOSL to restrain from the use of heavy weaponry against the hapless Tamil civilians and urging the GOSL to allow food and much needed medicine to the so-called "safe zone" in Vanni. In one of my earlier statements dated 10 May 2009, …
-
- 0 replies
- 767 views
-
-
காருண்யத்தினையும், மனிதாபிமானத்தினையும் போதித்த புத்தபெருமானின் போதனைகளை ஏற்றிருக்கும் தேசம் வெசக் தினங்களை அனுட்டித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றது. சோடனைகள், வெளிச்ச அலங்காரங்கள், உணவு தானங்கள் என்று வெசக் தினங்கள் களைக் கட்டியிருந்தன. அமைதியும், கருணையும் வழியும் மனிதாபிமானமும் கொண்ட தேசத்தில் வசித்துக் கொண்டிருப்பதனைப் போன்று மக்கள் வெசக் நாட்களை இனிதே அனுட்டித்து மகிழ்ந்தனர். கூட்டம் கூட்டமாக குடும்ப அங்கத்தவர்கள் சகிதம் வெசக் தொரண எனப்படும் வெளிச்ச அலங்காரங்களைப் பார்த்து சுதந்திரமாக நடந்து திரிந்து உண்டு மகிழ்ந்து கழிந்தன தலைநகர் மக்களின் பொழுதுகள். ஒலிவாங்கிகளில் குத்துப் பாடல்கள் ஒலிக்க நடுவீதிகளில் அர்த்தராத்திரியில் நடனங்கள் தொ…
-
- 18 replies
- 4.7k views
-
-
கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேச மக்கள் இன்று (17.03.2021) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இன்று காலை வட்டக்கச்சி பிரதேசத்திலிருந்து உழவு இயந்திரங்களில் கிளிநொச்சி காக்கா கடைச் சந்திக்கு வருகை தந்த மக்கள், அங்கிருந்து ஏ9 வீதியூடாக மாவட்டச் செயலகத்திற்கு சென்று, மாவட்ட அரச அதிபர் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கான கோரிக்கை மனுவும் கையளிக்கப்பட்டன. கடந்த 10 ஆம் திகதி வட்டக்கச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் மரணமடைந்திருந்தார். மரணமடைந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான 31 வயதுடைய அருளம்பலம் துஸ்யந்தன் கிராமத்தின் நலன்களில் அக்கறையுள்ள, நற்பிரஜை எனவும், சிறந்த விளையாட்டு வீரர் எனவும் தெரிவிக்கும் பொதுமக்கள்…
-
- 0 replies
- 333 views
-
-
சரணடைய முற்பட்ட போராளிகள் மீது துப்பாக்கிச்சூடு: 5போராளிகள் வீரச்சாவு மட்டக்களப்பு மாவட்டத்தில் சரணடைய முற்பட்ட போராளிகள் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவடைந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் உன்னிச்சை பிரதேசத்திலுள்ள மாவிலைஆறு பகுதியில் இன்று(20-05-2009) காலை 06.30 மணியளவில் போராளிகள் மறைந்திருந்த பகுதி ஒன்றை சுற்றிவளைத்த சிறிலங்கா படையினர் நடாத்திய தாக்குதலில் 05 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை தெரிவித்துள்ளது. மக்களின் நலன்களுக்காக துப்பாக்கிகளை மௌனிப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்த பின்னர் சுற்றிவளைத்த நிலையில் படையினரிடம் சரணடைய முற்பட்ட போராளிகள் மீது இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது என்பது இங்கு குறி…
-
- 2 replies
- 3.7k views
-
-
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. வீடியோ http://tamilworldtoday.com/?p=17914
-
- 1 reply
- 816 views
-