ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143546 topics in this forum
-
காணாமல் போன உறவுகளைத் தேடி அவர்களது உறவினர்கள் தீச் சட்டி ஏந்தி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். காணாமல் போன உறவுகளைத் தேடி அவர்களது உறவினர்கள் தீச் சட்டி ஏந்தி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய இவ்வார்ப்பாட்ட ஊர்வலம் ஜிந்துப்பிட்டி வரை சென்றது. இதன்போது காணாமல் போன உறவுகளைத் தேடித்தரும்படி மீள வலியுறுத்தி காணாமல் போனோரின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் தீச் சட்டியை ஏந்தி தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தி இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். http://www.virakesar...al.php?vid=1881
-
- 1 reply
- 520 views
-
-
திரிபோஷா கிடைக்குமா? கிடைக்காதா? திரிபோஷா உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டுள்ள திரிபோஷாவை உடனடியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை ஜா-எல திரிபோஷா தொழிற்சாலையின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார். எனினும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு திரிபோஷா விநியோகம் முறையாக நடைபெறுவதில்லை என அரச குடும்ப நல சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். சில சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு கடந்த பெப்பிரவரி மாதத்தின் பின்னர் திரிபோஷா இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். எனினும் திரிபோஷாவிற்கு விநியோகத்திற்கு காணப்பட்ட கேள்வி அறிவிப்பு தொடர்பில் காணப்பட்ட பிரச்சினை காரணமாக திரிபோ…
-
- 0 replies
- 491 views
-
-
போராளிகளின் மரணத்திற்கு காரணமாகும் புற்றுநோயை திட்டமிட்டு உருவாக்க முடியுமா? – அருஷ் sri 3 days ago கட்டுரை 28 Views விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய முன்னாள் போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர். இதுவரையிலும் ஏறத்தாள 100 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர். இவர்களில் விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல் தலைவர் தமிழினி மற்றும் இனந்தெரியாத நோயினால் இறந்த தமிழரசன் ரோகினி ஆகியோர…
-
- 0 replies
- 443 views
-
-
வன்னி மக்களின் அவலம் தொடர்பில் திச்சினோ மாநில மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு மெழுகுவர்த்திப் பேரணி நவம்பர் பதினான்காம் திகதி இரவு பெலின்சோனாவில் நடைபெற்றது. S.O.S. அமைப்பின் அனுசரணையுடன் சுவிஸ் தமிழர் பேரவை ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் S.O.S. அமைப்பின் திச்சினோ மாநில பணிப்பாளர் அருட் தந்தை fra Martino Dotta சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார். படங்கள், மேலதிக செய்திகள் உள்ளே........ http://www.tamilseythi.com/tamilar/Bellinz...2008-11-18.html
-
- 0 replies
- 697 views
-
-
நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் வினாக்களுக்கு பதிலளிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்க வேண்டும்� என பிரதான எதிர்க்கட்சியின் கொறடா ஜோன் அமரதுங்க கூறினார். பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய போதே ஜோன் அமரதுங்க எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "அங்கு அவர் மேலும் கூறியதாவது: ஸ்ரீ ஜயவர்தனபுறக்கோட்டையை நவீனமயமாக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. முன்னாள் ஜனாதிபதி ஜயவர்தனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கோட்டை அபிவிருத்தித் திட்டத்தை இப்போது பாதுகாப்பு செயலாளர் பூரணமாக்கி வருகின்றார். இது பாராட்டுக்குரிய விடயமாகும். நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் வினா…
-
- 0 replies
- 285 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுமாறு அழுத்தம் கொடுத்த மன்மோகன் சிங் [ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2008, 01:02 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தேவையான அரசியல் தீர்வுத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசு பேச்சுகளை நடத்த வேண்டும் என மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கான தீர்வுத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாரில்லை எனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் பேச்ச…
-
- 0 replies
- 774 views
-
-
பொதுமக்களின் பணத்தில் மூன்று சொகுசு வாகனம் வாங்கிய யாழ். மாநகர மேயர்.. [Wednesday, 2012-12-12 08:39:33] யாழ். மாநகர சபையின் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, தனது கணவரால் இடித்து சேதமாக்கப்பட்ட தனது சொகுசு வாகனச் செலவிற்காக யாழ். மாநகர சபையிடமிருந்து 40 லட்சம் ரூபா பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. மாநகர சபை மேயரின் வாகனம் இரண்டுதடவைகள் விபத்திற்குள்ளாகின. இதில் முதலாவது தடவை மேயரின் கணவர், தனது தனிப்பட்ட தேவைக்காக வாகனத்தைக் கொண்டு சென்றபோது விபத்திற்குள்ளாகியது. இதன்போது வாகனம் மீள்பாவனைக்கு உதவாததாக மாறியது. இதனால் காப்புறுதி நிறுவனம் 55 லட்சம் ரூபாபணத்தை வழங்கியது. மாநகர சபையிலிருந்து 9 லட்சம் ரூபா மக்களின் வரிப் பணம் பெறப்பட்டுள்ளது. இப் புதியவ…
-
- 3 replies
- 550 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை ஆட்சியிலிருந்து மக்களால் விரட்டப்பட்டவர்கள் தூண்டியிருக்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம்சாட்டினார். கடந்த சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து இன்று யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்ட அவர், இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் முற்போக்கான மாற்றங்களை தடுக்க முயற்சிக்கும் தரப்பினர் இருக்கலாம். குறிப்பாக நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் உள்ளிட்ட முக்கியமான விடயங்களை தடுப்பதற்காகேவே …
-
- 0 replies
- 397 views
-
-
ஊடகவியலாளர் தரிஷாவின் லப்டொப்பை சிஐடி கைப்பற்றியது தனது வீட்டுக்கு இரண்டு தடவைகள் வருகைதந்த சிஐடியினர் ஆணைப்பத்திரம் இன்றி தனது லப்டொப்பை கைப்பற்ற முயன்ற நிலையில், கடந்த 9ம் திகதி ஆணைப்பத்திரத்துடன் வந்த சிஐடியினர் தனது லப்டொப்பை கைப்பற்றி சென்றனர் என்று சன்டே ஒப்சேவர் முன்னாள் ஆசிரியர் தரிஷா பஸ்ரியன் தெரிவித்துள்ளார். 2019 நவம்பரில் சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டமை தொடர்பான குற்றவியல் விசாரணையுடன் பல மாதங்களாக தரிஷா பஸ்டியனின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை தொடர்பாக, குற்றப் புலனாய்வு பிரிவினர் தனது கூட்டாளிகள் மற்றும் சகாக்களிடம் தனது மின்னணு சாதனங்கள் குறித்து குறிப்பாக கேள்வி எழுப்பியுள்ளதாக தரிஷா கூறினார். மேலும், …
-
- 1 reply
- 446 views
-
-
27-11-2008 மாவீரர் நாளை முன்னிட்டு பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் உடுமலைப்பேட்டை நகராட்சி பத்மசிரீ திருமண மண்டபத்தில் "எரிகிறது தமிழீழம்! நெருப்பின் நடுவில் தமிழினம்! என்கிற தலைப்பில் ஈழ நிலைமைகளை விளக்கி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். http://www.tamilseythi.com/
-
- 0 replies
- 1k views
-
-
யாழ். வடமராட்சி - வல்வெட்டித்துறைப் பகுதியில் நேற்று மாலை முன்னாள் போராளிகள் இருவர் கறுத்த நிற வானில் கைத்துப்பாக்கிகளுடன் வந்த இராணுவப் புலனாய்வாளர்களினால் கடத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை குறித்த இரு முன்னாள் போராளிகளும் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிக்கு முன்னால் உரையாடிக்கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரின் பிடிக்குள் அகப்பட்டு அரசின் புனர்வாழ்வு பெற்று 6 மாதங்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டனர் என்றும், இருவரும் உறவினர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த சண்முகம் நகுலன் (வயது - 26), கோவிந்தன் சுதர்ஷன் (வயது - 28) ஆகிய இருவருமே க…
-
- 2 replies
- 766 views
-
-
அரச அல்லது உள்ளுர் தனியார் நிறுவனங்களுடன் எவ்விதத் தொடர்புகளையும் கொண்டிராடிமல் சர்வதேச நாடுகளின் நிதி உதவியுடன் சிறிலங்காவில் செயற்பட்டு வரும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க மஹிந்த அரசு தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.இது தொடர்பில் கோத்தா உரிய கட்டளைகளை வழங்கியுள்ளாராம். . குறித்த அரசார்பற்ற நிறுவனத்தின் தலைவர் ஆடம்பர வாகனம், ஆடம்பரமான வீடு மற்றும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ளார். இவர் வருடத்தில் 15 க்கும் மேற்பட்ட தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன என திவய்ன வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளது. 2002 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் இந்த …
-
- 2 replies
- 504 views
-
-
ஜனநாயகத்தின் பெயரால் ஸ்திரமாகும் சர்வாதிகாரம் [21 டிசம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 10:10 மு.ப இலங்கை] பாரதத்தின் ‘நியூ இந்தியன் எக்ஸ்பிறஸ்’ பத்திரி கைக்கு பேட்டியளித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிளிநொச்சியைச் சுற்றித் தற்போது நடைபெற்றுவரும் யுத்தம் குறித்தும் குறிப்பிட்டிருக் கின்றார். "கிளிநொச்சி வீழ்ச்சி இராணுவ வெற்றி என்பதை விட ஜனநாயக உரிமைகளை மீள ஏற்படுத்துவதற்கான ஆரம்பமாக அமையும்" - என்று வியாக்கியானம் அளித் திருக்கின்றார் அவர். தமிழர் தாயகத்தின் மையப் பிரதேசம் சிங்களப் படைகளின் - சிங்களத் தலைமையின் - கைகளில் வீழ்ச் சியுறுவது ஜனநாயக உரிமைகளை மீள நிலைநாட்டு வதற்கான ஆரம்பம் என்று இலங்கை அரசத் தலைவர் குறிப்பிடுகின்றார். அவர் கூறும் ஜனநாயகம் எ…
-
- 0 replies
- 767 views
-
-
டிசம்பர் மாதம் நடுப் பகுதியைக் கடந்து விட்டாலே உலகின் பெரும்பாலான மக்கள் குதூகலத்துடனேயே காணப்படுவார்கள். நமது நாட்டைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் ஒப்பீட்டளவில் மிகச் சிறிய தொகையினராக இருந்த போதும் இங்கும் கிறிஸ்மஸ் பண்டிகை, புதுவருடப் பிறப்பு ஆகியவை நடைபெறும் காலங்களில் இன, மத பேதமின்றி மூவின மக்களும் மகிழ்ச்சியுடன்தான் இருப்பார்கள். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்த போதும் தலைநகர் கொழும்பு உட்பட முக்கிய நகரங்கள் யாவும் விசேடமாக அலங்காரம் செய்யப்படுவதும் பல இடங்களிலும் உடைகள் உட்பட பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுவதும் பாடசாலைச் சிறார்கள் உட்பட பலர் விடுமுறையில் வீடுகளில் தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்க சில காரணங்களாகும். நாட்டில் 25 வருடங்களாக உள்நாட்டு யுத்தம் நடைபெற…
-
- 0 replies
- 576 views
-
-
இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு ஒரு வார கால கொழும்பு சுற்றுலா! [Monday, 2013-01-07 11:00:02] இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 103 தமிழ் யுவதிகள் ஒருவாரத்திற்கு கொழும்புப் பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக இன்று கொழும்புக்கு செல்லவுள்ளனர். எதிர்வரும் 14ம் திகதி வரையான ஒரு வார காலம் கொழும்பில் தங்கியிருந்து தமிழ் யுவதிகள் 8ம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இலங்கை ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பின்னர் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு அழைத்து வருவது இதுவே முதற்தடவையாகும். தமிழ் யுவதி…
-
- 13 replies
- 702 views
-
-
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் அமுலாக்கப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பை வெளியிட்டுள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பிலான சட்டம் நேற்றைய தினம் இலங்கை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமையானது நாட்டை முன்னோக்கி நகர்த்தும் முக்கிய நகர்வுகளில் ஒன்றாக கருதப்பட வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. உண்மையைக் கண்டறிவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் புதிய அலுவலகம் வழியமைக்கும் என தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச்செயலாளர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார். இதேவேளை, காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியின் ஓர் வரலாற்று மைல் கல்லாக கருதப்பட வேண்டுமென இலங்கை…
-
- 0 replies
- 207 views
-
-
வணக்கம் நண்பர்களே... _/\_ இந்த புத்தாண்டு வாழ்த்து அட்டை + அது பற்றிய குறிப்பு இவை இரண்டையும் தயவுசெய்து உங்கள் விலாசக்கோவையிலுள்ள அனைத்து நண்பர்களுக்கும் உடனடியாக அனுப்பவும் / அனுப்பி வைக்கவும். பிறக்கும் இந்த புத்தாண்டில் குறைந்தது 10000 தமிழரையாவது உலகெங்கும் உணர்வால் ஒண்றிணைப்போம். முடிந்தால் எண்ணிக்கையை 100000 ஆக்கலாம். எல்லாம் உங்கள் வேகத்திலேயே உள்ளது. தயவுசெய்து உடனடியாக இதை செயற்படுத்தி உலகத் தமிழரெல்லோரையும் விழிப்படைய வைப்பீர் நேரம் "31ம் திகதி இரவு" "00:00 மணியிலிருந்து 00:02 வரை" (புத்தாண்டு பிறக்கும் அந்த வேளை) உணர்வால் ஒன்றிணைந்ததற்கு நன்றி " தேச உணர்வுள்ள ஒரு நண்பன் "
-
- 1 reply
- 1.5k views
-
-
நிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்பு வகித்த ரூபனை பாராளுமன்றம் அனுப்பி திருமலையை காப்பாற்றுங்கள்: விக்னேஸ்வரன் July 22, 2020 ஒரு நிழல் அரசின் மிக முக்கியமான பதவிகள் பொறுப்புக்களை வகித்து சாதனைகள் பலவற்றை செய்த விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்து திருகோணமலை மாவட்டத்தை காப்பாற்றுமாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் திருகோணமலை மாவட்ட மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கருத்துப் பரப்புரைக் கூட்டம் திருகோணமலை நகரத்தில், 3ம் கட்டையடியில் நேற்று புதன்கிழமை நடைபெ…
-
- 0 replies
- 520 views
-
-
உலகெங்கும் பரந்து வாழும் எனது தமிழ் உறவுகளுக்கு எனது அன்பு நிறைந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். தைப்பொங்கல் விழாவை; தமிழ் இந்து மக்கள் மாத்திரமல்ல அண்மைக் காலங்களில தமிழ் கிறீஸ்தவர்களும் தமக்குரிய நன்றி வழிபாடுகளுடன் கொண்டாடி வருகின்றனர். இன்னும் நெருங்கிய காலங்களில் விசேடமாக தாயக தாகத்துடன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள; மத்தியில் இது தமிழ் மரபு விழாவாக கொண்டாடப் படுகிறது. இது தாயக தாகத்துடனும் விடுதலை வேட்கையுடனும் புலத்தில் வாழும் எமது ஈழத் தமிழருக்கு மிகவும் கருத்தும் பொருத்தமும் உந்து சக்தியும் அளிக்கும் விழாவாக இம் மரபு நாளை வரவேற்கிறோம். இறைவன் எம்மை மனிதராக படைத்த பொழுது எமக்கென்று மொழி, நிறம், கலை, கலாச்சாரம், தாயகம், திறமைகள்…
-
- 0 replies
- 530 views
-
-
கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதை தாமதப்படுத்த ஐ.தே.க தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்தமைக்காக கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட பலர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர். பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் கட்சியுடன் இணைந்து நேர்மையாக செயற்படுவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதை ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு தாமதப்படுத்தியுள்ளது. கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளனர். …
-
- 0 replies
- 395 views
-
-
வடக்கில் இன முரண்பாடுகள் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கின் மன்னாரில் இவ்வாறான ஓர் சூழ்நிலை காணப்படுவதாக இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டியன் ரொபிச்சன் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூக மக்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களுக்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குறித்த பிரதேச மக்களின் அபிலாஷைகள் மற்றும் நோக்கங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். கடற்படையினரின் கட்டுப்பாடுகளினால் மீனவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் முஸ்லிம…
-
- 2 replies
- 549 views
-
-
நேற்று மலேசியா கோலாலம்பூர் மெர்தேக்கா சதுக்கத்தில்,பாலஸ்த்தீன மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஆதரவாகவும்,இஸ்ரேல், இலங்கை இராணுவத்தை கண்டித்தும், அவர்களுடைய மூர்க்கத்தனமான போரை எதிர்த்தும், உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த, மெழுவர்த்தி ஏந்தி சுமார் 200 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்று கூடினர்! எனினும் அவர்களை தடுத்து நிறுத்தி கலைக்க முற்பட்டதுடன் தலமை வகித்த 21 பேர்களை மலேசிய காவற்துறையினர் கைதும் செய்துள்ளனர்! http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266
-
- 1 reply
- 980 views
-
-
(நா.தனுஜா) நாட்டின் புகழ்பெற்ற றக்பி விளையாட்டுவீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டு, நீதி கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கையை இழந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து வஸீம் தாஜுதீனின் சகோதரி அயேஷா தாஜுதீன் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார். நல்லாட்சி அரசாங்கம் பதவியிலிருந்த போது வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான மீள் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் புதைக்கப்பட்ட அவரது உடல் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டமை தமது குடும்பத்தாரின் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியதாக அப்பதிவில் குறிப்பிட்டிருக்கும் அயேஷா, எனினும் வஸீம் தாஜுதீனின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில…
-
- 1 reply
- 650 views
-
-
புலிகளின் 5 ஆவது ஓடு பாதை இராணுவத்தினரால் மீட்பு - பாதுகாப்பு அமைச்சகம் [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 08:09.26 AM GMT +05:30 ] விடுதலைப் புலிகளின் 5ஆவது விமான ஓடுபாதையையும் இராணுவத்தினர் மீட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 632ஆவது படையணி இரணைமடுக் குளத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விமான ஓடுபாதையை நேற்று மாலை கைப்பற்றியிருப்பதாகவும், இந்த விமான ஓடுபாதை 50 மீற்றர் அகலமும், 1000 மீற்றர் நீலமும் கொண்டது எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதிக்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த விமான ஓடுபாதையைச் சுற்றி பதுங்கு குழிகளும், பாதுகாப்பு அகழிகளும் வெட்டப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறு…
-
- 10 replies
- 5.5k views
-
-
கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோவில் அமைந்திருக்கும் இந்திய துணைத் தூதரகம் முன்பாக நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 378 views
-