ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
நெடுந்தீவில் 25 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது! adminJuly 1, 2024 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 தமிழக கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (01.07.24) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையே அவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் 4 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைதான கடற்தொழிலாளர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2…
-
- 0 replies
- 188 views
-
-
யுத்த ஆய்வாளர் நிலவன் எழுதியது விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மீதான சிறிலங்கா விமானப்படையினரின் வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தமிழர்களை புதியதொரு அச்சமும், கவலையும் பிடித்துக்கொண்டுள்ளது. வெளியே பேசிக்கொள்ளவும் விரும்பாமல், அதேவேளை அதனை ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாமல் புலம் பெயர் நாடுகளிலுள்ள பல தேசியப்பற்றாளர்கள் தடுமாறிக்கொண்டு இருக்கின்றார்கள். என்னுடன் உரையாடுகின்ற பல அன்பர்கள் தமது இந்தப் புதிய கவலையை பல வடிவங்களிலும் வெளியிட்டும் வருகின்றார்கள். அவர்களது அந்த அச்சத்தை மேலும் அதிகரிப்பது போன்று, மேலும் பல செய்திகளும் அறிக்கைகளும் பல்வேறு தளங்களில் இருந்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. …
-
- 45 replies
- 6.3k views
-
-
யாழ்.வணிகர் கழகத்தினால் பாடசாலை இடைவிலகிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு யாழ்.பிரதேச செயலக ரீதியாக வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை இடைவிலகிய இடைவிலகும் ஆபத்தினை எதிர்நோக்கிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்.பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான கற்றல் உபரணங்களையும் வழங்கி வைத்தார். வறுமைக்கோட்டிற்குட்பட்ட 500 மாணவர்களுக்கான கற்றல் உகரணங்களை யாழ்.வணிகர் கழகம் அன்பளிப்பாக வழங்குகின்றது.இதன் பெறுமதி 10லட்சம் ரூபாவாகும். இதேவேளை வருடாவருடம் வணிகர் கழகம் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அ…
-
- 0 replies
- 402 views
-
-
Published By: DIGITAL DESK 7 12 JUL, 2024 | 11:51 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து விதமான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதுடன் , குறிப்பாக ஓ பாசிட்டிவ் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுடைவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு நேரில் வந்து, இரத்த தானம் வழங்கி உயிர் காக்கும் உன்னத பணிக்கு உதவுமாறு யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினர் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/188277
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
மத்தல விமான நிலையத்தில் நெல்லைக் களஞ்சியப்படுத்த எதிர்ப்பு- பாரஊர்திகளை மறித்து போராட்டம்SEP 02, 2015by கி.தவசீலன்in செய்திகள் மத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் களஞ்சியசாலையை நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, மத்தல விமான நிலைய களஞ்சியத்தில் சேமிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மத்தல விமான நிலையத்தின் களஞ்சியசாலைகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவற்றை நெல்லைச் சேமித்து வைக்கப் பயன்படுத்த, விமான சேவைகள் நிறுவனத்தினால் நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் தொகுதி நெல்லை ஏற்றிய பாரஊர்திகள் மத்தல விமான நிலையத்துக்குச…
-
- 0 replies
- 445 views
-
-
நாடு திரும்பாமல் நீதிமன்ற உத்தரவை மீறினார் கோட்டாபய! முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கபூரிலிருந்து நாடு திரும்பாமல் நீதிமன்றம் விதித்த உத்தரவை மீறியுள்ளார். கோட்டாபய வெளிநாடு செல்வதற்கு கடந்த 24ஆம் திகதி முதல் ஜுன் 2ஆம் திகதி வரை கொழும்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் அவருக்கு எதிரான விசாரணை நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றபோது நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதன்போது கோட்டாபயவின் சட்டத்தரணி இவ்விடயம் குறித்து தெரிவித்துள்ளதாவது, “சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்ற கோட்டபாய இன்னும் நாடு திரும்பவில்லை. அவருக்கு மேலும் சில மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளமையினால், வெளிநாட்டு பயண அனுமதியை…
-
- 5 replies
- 953 views
-
-
ஹெய்டியில் இடம்பெற்ற சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு ஐ.நா உத்தரவு! ஹெய்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் படையினர், சிறுவர்கள் மீது மேற்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை உத்தரவிட்டுள்ளது. ஜெனிவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இவ்விவகாரம் குறித்த அறிக்கை சமர்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த விசாரணைக்கான உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெய்டியில் ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்திருந்த சிறிலங்காவின் மூன்று அதிகாரிகள் உட்பட 114 படைத்தரப்பினர் மீது சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறு…
-
- 2 replies
- 1.1k views
-
-
பலாலி, மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தி குறித்து மோடி- ரணில் பேச்சு பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்களின் அபிவிருத்தி மற்றும் ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு பயிற்சி மற்றும் விநியோக ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை நடத்தியுள்ளார். நேற்று முன்தினம் குறுகிய நேரப் பயணமாக சிறிலங்கா வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்று, கொழும்புக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர், கொழும்பில் பேச்சுக்கள் மற்றும் சந்திப்புகளை முடித்துக் கொண்ட இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் …
-
- 0 replies
- 651 views
-
-
01 AUG, 2024 | 12:03 PM திருகோணமலை நகரத்தை அழகுபடுத்தும் விதமாக திருகோணமலை நகராட்சி மன்றத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் புதிதாக டொல்பின் சிலை அமைக்கப்பட்டு நேற்று (31) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. நகராட்சி மன்ற செயலாளர் தே.ஜெயவிஷ்ணுவின் வேண்டுகோளுக்கிணங்க உத்தியோகபூர்வமாக இந்த சிலை திறக்கப்பட்டது. இதன்போது நகராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/189976
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
தேசிய மனித உரிமைகள் நிறுவனத்தின் செயற்திறன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணக்குழுவின் அலுவலகத்தை இலங்கையில் அமைப்பது தொடர்பான விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபையும் சிறிலங்கா அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் கடுமையாக மோதிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 753 views
-
-
எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லி விஜயம்! நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ளார். ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மேற்கத்தேய நாடுகள், இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள இத்தீர்மானம் குறித்து அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டன் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரஸூக்கு கடந்த வெள்ளிக்க…
-
- 8 replies
- 1.6k views
-
-
Published By: DIGITAL DESK 7 12 AUG, 2024 | 05:20 PM வவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியங்குளம் பீகிடியா பாம் கிராம மக்கள் இன்று திங்கட்கிழமை (12) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். செட்டிக்குளம் பீகிடியா பாம் கிராமத்தில் தனி நபரொருவர் சட்டவிரோதமாக குளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது. தனிநபர் ஒருவர் எந்தவித அனுமதியுமின்றி புதிதாக அணைக்கட்டு போடப்பட்டு குளம் அமைப்பதனால் அதற்கு கீழ் வாழுகின்ற 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் குளக்கட்டு உடைப்பெடுக்குமாயின் தமது வீடுகள் வெள்ளநீரில் மூழ்கிவிடும் எனவும் இதனை தடுத்து நிறுத்துமாறு கோரியே ஆ…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: இந்தியாவின் முடிவில் குழப்பம்! ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து இந்தியாவிடம் குழப்பமான தன்மைகள் தெரிவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதற்கு இந்தியா முன்னர் முடிவு செய்திருந்ததாக தெரிய வருகின்றது. ஆனால், ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் கொழும்புக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என்ற உறுதிமொழியை சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா …
-
- 0 replies
- 883 views
-
-
இலங்கை வருகிறார் ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 22ம் திகதி மாலை அவர் இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இலங்கை - ஜேர்மனி தொழில்நுட்பக் கல்லூரியை பார்வையிடுவதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=72751
-
- 0 replies
- 326 views
-
-
விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவி கொடுக்காது - சுமந்திரன் (ஆர்.யசி) அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவி கொடுக்காது. அதேபோல் விக்கினேஸ்வரன் தனது அரசியல் சுயலாபங்களுக்காக எந்தளவு கீழ் மட்டத்தில் வீழ்ந்துள்ளார் என்பது நன்றாக வெளிப்பட்டுவிட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு மாமா வேலை ச…
-
- 0 replies
- 484 views
-
-
புலிகளின் தபால் முத்திரை குறித்து ஜெர்மனி மன்னிப்பு கோரியுள்ளது தமிழிழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தபால்முத்திரைகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் ஜெர்மன் அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. வேண்டுமென்றே தபால் முத்திரை வெளியிடப்படவில்லை என ஜெர்மன்அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான புலிச் சின்னங்கள் தாங்கிய தபால் முத்திரைகள்எதிர்காலத்தில் அச்சிடப்பட மாட்டாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. தபால் முத்திரைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தொடர்பைஅறிந்து கொள்ளாமல் முத்திரைகள் வெளியிடப்பட்டதாக ஜெர்மன் தபால் திணைக்களத்தின் துணைத்தலைவர் டொக்டர் ரெனியர் வென்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை மக்களிடமும், இலங்கை அரசாங்கத்திடம்மன்ன…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்.பல்கலைகழக நிர்வாகத்தை தடுத்து வைத்து பொலிஸ் விசாரணை - யாழ்.பல்கலைகழக நிர்வாகத்தினரை அழைத்து கோப்பாய் பொலிசார் பல மணிநேரம் தடுத்து வைத்து இன்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்.பல்கலைகழக கலைப்பீட சிரேஸ்ட - கனிஸ்ட மாணவர்களுக்கு இடையில் கடந்த 9ம் திகதி ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து 9 ம் திகதியும் 10ம் திகதியும் மாணவர்கள் தமக்கு இடையில் மோதிக்கொண்டனர். 10ம் திகதி மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தின் வெளியில் வீதியில் நின்று தமக்கு இடையில் மோதிக்கொண்டனர். அதனால் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதுடன் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கும் இடையூறு ஏற்பட்டது. அதனை அடுத்து மோதல் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிசார் தெரிவிக்கப…
-
- 0 replies
- 406 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரைக் கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாற, சட்டமா அதிபர் தப்புல டீ. லிவேரா உத்தரவிட்டுள்ளார். பதில் பொலிஸ்மா அதிபருக்கே, சட்டமா அதிபர் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஹேமசிறி-பூஜித்தவை-கைதுசெய்ய-உத்தரவு/150-234817
-
- 1 reply
- 369 views
-
-
Published By: VISHNU 02 SEP, 2024 | 11:27 PM ரொபட் அன்டனி ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கத்துடன் அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் தெரிவித்தார். பிரித்தானியா பல வருடங்களாக அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல்தீர்வு தொடர்பாக வலியுறுத்தி வருகிறது என்றும் சுட்டிக்காட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பிரதான வேட்பாளர்கள் இந்த விடயம் தொடர்பில் தமது கொள்கைகளை வெளியிட்டுள்ளமையையும் எடுத்துக் கூறினார். பாத்பைன்டர் நிறுவனம் வெள்ளிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற…
-
-
- 1 reply
- 291 views
- 1 follower
-
-
பிரித்தானிய நாடாளுமன்றில் இன்று சிறிலங்காவின் மனித உரிமை மீறல் விடயம் தொடர்பில் விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது. பிரித்தானியாவில் தமிழர்களுக்கு ஆதரவான நாடாளுமன்ற உபகுழு இந்த விவாதத்தினை ஆரம்பித்து வைக்கும். இதில் ஜெனீவாவில் எடுக்கப்படவிருக்கும் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்திற்கு வலுச்சேர்க்கப்படும் என அறியமுடிகின்றது. http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 606 views
-
-
தென்னாபிரிக்கா-கம்போடிய நாடுகளின் அனுபவங்களை இலங்கையின் விசாரணைபொறிமுறைக்கு பயன்படுத்துமாறு கோரிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் உட்பட முக்கிய தலைவர்கள் சிலரிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதமொன்றில் தென்னாபிரிக்கா ,மற்றும் கம்போடியா போன்ற நாடுகளின் அனுபவங்களை இலங்கையின் விசாரணை பொறிமுறைக்கு பயன்படுத்துமாறு இலங்கையின் கல்விமான்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் சமீபகாலத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால்,முழுமையான உள்நாட்டு பொறிமுறை மூலம் நீதியை நிலைநாட்ட முடியாது, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை பெற முடியாது என நாங்கள் கருதுகின்றோம்,மேலும் வெறுமனே சர்வதேசபிரதிந…
-
- 0 replies
- 203 views
-
-
குருணாகலை - ரஸ்னாயக்கபுர பகுதியில் சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பினை பேணியதாக கைது செய்யப்பட்ட மௌலவி மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ககடந்த மே மாதம் முதலாம் திகதி நிகவெரட்டிய ஊழல் தடுப்பு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான மௌலவி தொடர்பான விசாரணைகளை ரஸ்னாயக்கபுர பொலிஸார் மேற்கொண்டு வந்தனர். அதற்கமைய இரு மாத காலமாக சந்தேக நபரை தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இதன் போது சந்தேக நபர் பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் நெறுங்கிய தொடர்பை பேணியுள்ளதாகவும் இஅவரது தலைமையின் கீழ் இயங்கி வந்த பயிற்சி முகாம்களில் சந்தேக நபர் பயிற்சி பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்தள்ளது. …
-
- 0 replies
- 286 views
-
-
விடுதலைப் புலிகளின் விபரீத நோக்கம் தெரியாமால், அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள் பேசி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டும் வருகின்றனர். இப்படி செய்வதால் எதிhகாலத்தில் தமிழகத்திலும் ஒரு 'யாழ்ப்பாணம்'; உருவாகும் ஆபதது உள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழ் அமைப்புகள் இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளன. இலங்கையில் தனி நாடு கோரி போர் செய்து வரும் விடுலைப் புலிகளளுக்கு எதிராக, நடுநிலையான சில அமைக்புகள் உள்ளன. முன்னா தமிழ் ஈழததில் சிங்கள அரசு, தமிழ் நிர்வாகத்தை ஏற்படுத்திய போது, இந்த அமைப்புகள் ஒத்துழைப்பைபு அளித்து வந்துள்ளன. அப்போதெல்லாம் அவர்களை விடுதலைப் புலிகள் கொன்று வந்துள்ளனர். விடுதலைப் புலிகள்; எதிர்ப்பு அமைப்புகள…
-
- 8 replies
- 3.2k views
-
-
இராணுவ விசாரணை நீதிமன்றினால் வாக்குமூலங்கள் பதிவு ஆரம்பம் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறுpத்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் குறிப்புரைகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணை நீதிமன்றமானது அவ்வறிக்கையில் குறித்துரைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்பான தனிநபர்களிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. அக்கறையுடையவர்களை இவ்விசாணை நீதிமன்றுக்கு வந்து சாட்சியமளிக்கும்படி கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தலைமயகத்தின் தற்போதைய தளபதி மேஜர் ஜெனரல் கிருஷாந்த டி சில்வாவின் தலைமையில் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணை மன்றம் கோரியுள்ளளது. அதேசமயம்…
-
- 5 replies
- 696 views
-
-
சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு : நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம் இனந்தெரியாத ரௌவுடிக் கும்பலொன்று பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டிலிருந்தவர்களை தாக்கியமைக் கண்டித்து, யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி, பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இரண்டு தரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டிருந்ததுடன் அவர்களில் ஒரு தரப்பினர், சட்டத்தரணியின் வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலுள்ளவர்களை துன்புறுத்தி, வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியிருந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, யாழ். மாவட்ட சட்டத்தரணிகள், நீதிமன்றங்களுக்கு செல்லாது பணிப்புறக்கணிப்பு போராட…
-
- 0 replies
- 297 views
-