ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் 3,065 இலங்கையர்கள்! புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்படவுள்ள சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது. இந்த வகையில், உலகின் பல நாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 14 இலட்சத்து 45,549 பேரின் பட்டியலை புதிய அமெரிக்க நிர்வாகம் தயாரித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஆதரிக்காத நாடுகளின் பட்டியலும் வழங்கப்பட்டுள்ள நிலைய…
-
-
- 8 replies
- 641 views
- 1 follower
-
-
அமெரிக்காவிலிருந்து வந்த “குஷ்” போதைப்பொருள் அமெரிக்காவில் இருந்து சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களுடன் விமான தபாலில் அனுப்பப்பட்ட பொதியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சுமார் 2 கோடி பெறுமதியான குறித்த போதைப்பொருள் பொதியை பெறுவதற்காக வருகைத்தந்திருந்த நபரை சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதான நபர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என குறிப்பிட்டனர். குறித்த பொதியில் குஷ் ரக போதைப்பொருள் 1.367 கிலோகிராம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/அமரககவலரநத-வநத-கஷ-பதபபள/175-309598
-
- 0 replies
- 564 views
-
-
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களில் சிறிலங்காவின் நெருங்கிய நண்பர்களாக சிலர் உள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர் Heath Shuler, D-Waynesville இவர் சில தினங்களுக்கு முன்னர் சிறிலங்காவிற்கு சென்றிருந்தார். இதுதான் முதற் தடவை அல்ல இவருக்கு, கடந்த இரு வருடங்களுக்குள் இரண்டு தடவை சென்றுள்ளார்.இவருடன் வேறும் இரு காங்கிரஸ் உறுப்பினர்கள் (Congressman Jack Kingston, (R-Ga.) and Congressman Ben Chandler, (D-Ky)சென்றிருந்தனர். இவர்களுக்கான பயண செலவுகள் அடங்கலாக ஒரு ஆடம்பர செலவுப்பொதிகளை சிறிலங்காவே வழங்கியுள்ளது. இந்த முறையும் முழுச்செலவுகளையும் சிறிலங்காவே வழங்கியுள்ளது.. இந்த முறை இன்னும் விசேடம் என்னவென்றால் இவர்களுடன் அமெரிக்காவில் வதியும் சிங்கள நண்பர்களும் ஏன் அமெரிக்…
-
- 4 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் முத்திரைகளை வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில் இயங்கி வரும் இரண்டு விடுதலைப்புலி அமைப்புக்களினால் இந்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளது என்று திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடுத்திருந்த மனோகரன் என்பவரின் மகனின் உருவப்படத்தை உள்ளடக்கிய முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. டமில்ஸ் எகேய்ன்ஸ்ட் ஜெனோசயிட் (Tamils Against Genocide) மற்றும் டமில்ஸ் போர் ஒபாமா (Tamils For Obama) ஆகிய அமைப்புக்களே இவ்வாறு முத்திரை வெளியிட்டுள்ளன. இந்த அஞ்சல் முத்திரைக்கு அமெரிக்க தபால் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, டமில்ஸ் எகேய்ன்ஸ்ட் ஜெனோசயிட் (Tamils Against Genocide) என்ற அமைப…
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=2][size=4]'சண்டி' சூறாவளியால் பாரிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.வின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 'சண்டி' சூறாவளி காரணமாக நியூயோர்க் உட்பட பல மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என்று தகவல் திணைக்களம் குறிப்பிட்டது.[/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...1-08-22-53.html[/size][/size]
-
- 2 replies
- 453 views
-
-
அமெரிக்காவிலுள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் (நா.தனுஜா) உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுக்கு நீதிகோரி, நேற்று நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமெரிக்கவாழ் இலங்கைப்பிரஜைகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச்சபைக்கூட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் தலைநகர் நியூயோர்க்கில் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமான நிலையில், பொதுச்சபை அமர்வின் இரண்டாம் நாளான நேற்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உலகத்தலைவர்கள் முன்நிலையில் உரையாற்றினார். இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற…
-
- 10 replies
- 1k views
-
-
அமெரிக்காவிலுள்ள, கோட்டாவின் மகனின்... வீட்டுக்கு, முன்பாகவும் ஆர்ப்பாட்டம்! அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியேயும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இலங்கையர்கள் சிலரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது அவரது தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2022/1274851
-
- 8 replies
- 471 views
-
-
-எஸ்.கார்த்திகேசு 'மனித உரிமை மீறல்கள் இலங்கையில் அல்ல அமெரிக்காவிலே நடைபெறுகின்றன. அங்கு அரசுக்கு எதிராக போராடியவர்கள் சித்திரவதை முகாமில் உள்ளனர். இங்கு அரசுக்கு எதிராக போராடியவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்' என புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். திருக்கோவில் பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செவ்வாய்கிழமை (15) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'சில உலக நாடுகளும் அமைப்புக்களும் எமது அரசாங்கத்தையும், நாட்டையும் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி வருகின்றன. இது ஒரு அப்பட்டமான பொய்பிரசாரம். அமெரிக்…
-
- 0 replies
- 221 views
-
-
அமெரிக்காவில் தமிழர்கள் நடத்திய திருக்குறள் போட்டியில் 13 வயது சீதா 320 குறள்கள் ஒப்புவித்து முதல் பரிசு பெற்றார். அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளின் தமிழ் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் டல்லாஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் திருக்குறள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக டெக்சாஸ் மாநில அளவில் விரிவுபடுத்தப்பட்ட போட்டி பெப்ரவரி 9ம் திகதி நடைபெற்றது. இந்த போட்டியில் 2 வயது முதல் 16 வயது நிரம்பிய அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த 200 தமிழ்க் குழந்தைகள் பங்கேற்றனர். 13 வயது சீதா 320 குறள்கள் ஒப்புவித்து முதல் பரிசு பெற்றார், பெரியவர்களுக்கான போட்டியில், பிரபல தயாரிப்பாளர் மற்றும் கதை, திரைக்கதை, பாடலாசிரியர் பஞ்சு அருணாசலத்தின் மகள்…
-
- 4 replies
- 912 views
-
-
அமெரிக்காவில் 6 ஈழத்தமிழர்களுக்கு ஏதிலி உரிமை அமொக்காவில் 6 ஈழத்தமிழர்களுக்கு ஏதிலி உரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த 6 ஏதிலிகளும் வேஜீனியா சிறைச்சாலை ஒன்றில் கடந்த 2008ம் ஆண்டு மாசி மாதம் 18ம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இந்த நிலையில் அவர்களை குறித்த திகதியிலிருந்து வெளியேறுவதற்கு ஏதுவான ஆவணங்களை தயார் செய்யும் வரையில் வசதியான இடம் ஒன்றில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் அவர்கள் ஏதாவது குறித்த பகுதியில் தங்குவதற்கு அனுமதிக்ப்படுவார்கள் என வேஜீனியா அதிகாரிகள் தெரிவிக்கி்ன்றார்கள். http://meenakam.com/?p=15558
-
- 0 replies
- 444 views
-
-
அமெரிக்காவில் 9 பேருடன் விமல் வீரவங்ச நடத்திய ஆர்ப்பாட்டம் Tuesday, May 24, 2011, 9:44உலகம், சிறீலங்கா83 views1 comment 2600ஆவது பௌத்த ஜயந்தியை முன்னிட்டு அமெரிக்காவிற்குச் சென்ற விமல் வீரவங்சவும், ஐ.நா.விற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதியும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான சவேந்திர சில்வாவும் இணைந்து ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர் . இந்த ஆர்ப்பாட்டம் கடந்த 19ஆம் திகதி நியூயோர்க்கில் இடம்பெற்றது. எனினும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க வாழ் இலங்கையர்களில் 9 பேர் மாத்திரமே கலந்துகொண்டுள்ளனர் . ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஏனையோர் தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தார் , உறவினர் எனவும் தெரியவந்துள்ளது. இதனை…
-
- 1 reply
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையில் இருந்து முதன் முறையாக அமெரிக்காவுக்கு அகதியாகச் சென்று குடியேறிய ராஜா ரட்ணம், தமது 75ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை காலமானதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜா ரட்ணம், கடந்த 1953 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமது 19ஆவது வயதில், இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாகச் சென்று குடியேறினார். அமெரிக்காவில் வெளியாகிய முதலாவது இலங்கை செய்தித் தாளையும் கலிபோர்னியா மாநிலத்தில் வைத்து இவர் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
- 4 replies
- 1.2k views
-
-
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட ஈழத்தமிழர் ஒருவர் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று மதியம் தனது துணைவியார், மூன்று பிள்ளைகள் சகிதம் பாங்கொக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையத்தின் செயலகத்திற்கு சென்ற கை.தேவகுமார் (37) என்ற குடும்பத்தவர், தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் வழங்குமாறு கோரி தனது உடலில் எரிபொருளை ஊற்றித் தீமூட்டிக் கொள்ள முற்பட்டுள்ளார். மிகவும் பதற்றமான நிலையில் காணப்பட்ட இவரை அணுகிய ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள், இவரை சாந்தப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றதோடு, பின்னர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இறுதி யுத்தத்தில் தமிழீழத்திலி…
-
- 0 replies
- 652 views
-
-
அமெரிக்காவில் அல்-ஹைடாவின் அடுத்த தாக்குதலுக்கு புலிகள் அமைப்பு உதவி [19 - April - 2007] ஒசாமா பின்லேடனின் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்காவில் மேற்கொண்ட இரட்டை கோபுரத் தாக்குதல்களின் பின்னர் அல்-ஹைடா சந்தேக நபர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்குள் போலிக் கடவுச்சீட்டுகளைப் பிரயோகித்து பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக கடவுச்சீட்டுகளைப் பரிசோதனை செய்வதில் பல்வேறு கடுமையானதும் நுணுக்கமானதுமான நடைமுறைகளை அமெரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலம் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்காக முயற்சித்து வருவதாகவும், இதற்காக அமெரிக்காவுக்குள் அமெரிக்க …
-
- 11 replies
- 2.7k views
-
-
அமெரிக்காவில் ஆட்சி மாறினாலும் இலங்கை குறித்த கொள்கை மாறாது-தூதுவர் அதுல் கேஷாப் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படாது என அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் , வெற்றிபெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிபீடம் ஏறியதும், இலங்கை தொடர்பில் தற்போது ஒபாமா தலைமையிலான அரசு கடைப்பிடித்துவரும் வெளிநாட்டுக் கொள்கைகள் மாற்றமடையுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே தூதுவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். அமெரிக்காவைப் பொறுத்தவரை தேசிய வெள…
-
- 2 replies
- 1.1k views
-
-
“ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் இலங்கை குறித்தான அமெரிக்காவின் கொள்கைகளில் எவ்வித மாற்றங்களும் நிகழாது” என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். “எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மிட்ரோம்னி வெற்றி பெற்று ஆட்சிமாற்றம் நிகழ்ந்தால் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுமா? குறிப்பாக, இலங்கை போன்ற நாடுகள் குறித்தான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் நெகிழ்வுத் தன்மை ஏற்படுமா என்றும் ஊடகமொன்று கேள்விகளை எழுப்பியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும்போதே, பாரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படாது. கடந்த காலங்களை எடுத்துப்பார்…
-
- 0 replies
- 729 views
-
-
அமெரிக்காவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்ற எழுச்சிப் பேரணி தமிழீழ தனியரசை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி அமெரிக் வோசிங்டன் நகரில் ஈழத் தமிழர்களால் எழுச்சிப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை மதியம் 12 மணிக்கு கப்பிற்றல் கட்டிட முன்றலில் ஆரம்பித்த பிற்பகல் 3 மணி வரை இடம்பெற்றுள்ளது. இப் பேரணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். புளோரிடா, ஓகையோ, கலிபோர்னியா, போஸ்ரன் போன்ற நகரங்களிலிருந்து அதிகளவு மக்கள் கலந்துகொண்டுள்ளதோடு நியூயேர்சி போன்ற மாநிலங்களிலுந்த வருகைதந்து கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. பேரணியில் மனித உரிமைகள் சட்டவாளர் கரன் பாக்கர், சட்டவாளர் ருத்திரகுமாரன், மருத்துவர் எலின் சண்டெர்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில், உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுடன் ரவி கருணாநாயக்க மூடிய அறைக்குள் பேச்சுக்களை நடத்தியுள்ளார். அதேவேளை, கடந்த வியாழனன்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பொருளாதார அபிவிருத்தி, சக்தி மற்றும் சுற்றாடல் துறைக்கான அடிநிலைச் செயலர் கத்தரின் நொவலியையும், மூடிய அறைக்குள், சந்தித்து நிதி அமைச்சர் பேச்சு நடத்தியுள்ளார். எனினும், இந்தப் பேச்சுக்கள் தொடர்பான விபரங்கள் இரக…
-
- 0 replies
- 564 views
-
-
அமெரிக்காவில் இரண்டு நாளில் 2 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிட்ட மஹிந்த! [ ஞாயிற்றுக்கிழமை, 27 செப்ரெம்பர் 2015, 06:02.28 AM GMT ] முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ச கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக சென்று அமெரிக்காவில் தங்கியிருந்த இரண்டு நாட்களுக்கு மாத்திரம் 2 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. டொலர்களில் செலவிடப்பட்ட இந்த பணம் எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதற்கான சாட்சியம் தற்போது கிடைத்துள்ளது. மஹிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமானவரும், அவரது இணைப்புச் செயலாளராகவும் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய சஜின் வாஸ் குணவர்தன, மஹிந்த ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் செலவாகும் பணத…
-
- 0 replies
- 495 views
-
-
திங்கட்கிழமை, 26 செப்ரெம்பர் 2011, 00:07 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், அவர் தனது அமெரிக்கப் பயணத் திட்டத்தை மாற்றியமைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன. மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியுயோர்க் நீதிமன்றத்தில் கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்து சிறிலங்கா அதிபர் தனது பயணத்தை இடைநிறுத்தி விட்டு கொழும்பு திரும்புவார் என்று விடுதலைப் புலிகளும், தமிழீழம் அமைக்கும் திட்டத்தை கொண்டிருப்போரும் நம்பியதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. எனினும் சிறிலங்கா அதிபர் த…
-
- 2 replies
- 837 views
-
-
மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றுள்ளார் எனக் கூறப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார் என நாடாளுமன்றில் தகவல் வெளியிட்ட பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, தற்போது அவரை வியட்நாமில் தேடி வருவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் திஸநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாக லலித் திஸாநாயக்க எம்.பி. தமது கேள்வியில், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் யார் என்றும், மேற்கூறப்பட்ட நபருக்கு இலங்கையில் பிரஜாவுரிமை உள்ளதா என்றும், ஆம் எனில், …
-
- 1 reply
- 968 views
-
-
அமெரிக்காவில் இருந்து திரும்பினார் ஜனாதிபதி மகிந்த! [Monday 2014-09-29 17:00] ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் நகருக்கு சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று அதி காலை நாடு திரும்பினார். ஜனாதிபதி உட்பட பிரதிநிதிகளை ஏற்றிய விமானம் இன்று அதிகாலை 5.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திரமோடி உட்பட வெளிநாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். http://www.seithy.com/breifNews.php?newsID=117733&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 388 views
-
-
[size=4]சிறிலங்கா ஜனாதிபதிக்கு விலங்குகளை விலைக்கு வாங்கி வளர்க்கும் புதுமையான நோய் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக அவர் 45 லட்சம் ரூபா செலவிட்டு அமெரிக்காவில் இருந்து பஞ்சவர்ண கிளி இறக்குமதி செய்துள்ளதாகவும் ஜனாதிபதி செல்லும் இடங்களுக்கு இந்த கிளியை எடுத்துச் செல்வதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.[/size] [size=4]கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த தனது கிளியை எடுத்துக் கொண்டு தங்காலைக்கு சென்றிருந்த போது, அந்த கிளி ஜனாதிபதியை விட்டு பறந்து சென்று விட்டதாகவும் பின்னர் அது ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் கடற்படைச் சிப்பாய ஒரவரிடம் சிக்கியதாகவும் - அதனை பிடித்த அந்த சிப்பாய், கிளியே சோறு சாப்பிட்டாய எனக் கேட்…
-
- 1 reply
- 1k views
-
-
அமெரிக்கா சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை கைதுசெய்ய வேண்டும் என கெலஉறுமய போன்ற சிங்கள இனவாதக் கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இலங்கை அரசாங்கத்திற்கு முடியுமென்றால் கூட்டமைப்பு தலைவர்களை கைதுசெய்து பார்கட்டும் அப்படி கைது செய்வார்கள் என்றால் அது தமிழ் மக்களுக்குத்தான் வெற்றியாக இருக்கும் என்கிறார் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன். அமெரிக்காவில் பேச்சுவார்த்தைகளை நிறைவுசெய்து மீண்டும் இலங்கை வரும் கூட்டமைப்பு தலைவர்களை கைதுசெய்யுமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஊடகங்களுக்க கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவ…
-
- 3 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவில் இருந்து... இலங்கைக்கு அனுப்பப்பட்ட, மருந்துகள்... 12 நாட்களாக விமான நிலையத்தில் தேக்கம் ! அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகளை உடனடியாக விடுவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்த பணிப்புரை விடுத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களினால் குறித்த மருந்துகள் மற்றும் உபகரணங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை நாட்டை வந்தடைந்து 12 நாட்கள் கடந்துள்ள போதும், அவற்றை கட்டுநாயக்கவில் இருந்து விடுவிப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையிலே, குறித்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை…
-
- 1 reply
- 282 views
-