ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142848 topics in this forum
-
தமிழ் மக்கள் தமிழீழ கோரிக்கையை முன் வைக்கவில்லை அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றையே கோருகின்றனர்:- பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்- அரசியல் தீர்வுத் திட்டமொன்றையே தமிழ் மக்கள் கோரி நிற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் தமிழீழ கோரிக்கையை முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்கள் கூட தனித் தமிழீழமொன்றை கோரி நிற்கவில்லை எனவும், அர்த்தமுள்ள அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்றே கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண…
-
- 8 replies
- 710 views
-
-
க. அகரன் கொள்கை என்ற பெயரில் இந்தியாவுக்கு விசுவாசமாக நின்று இனத்தை விற்பதே தமிழ் கட்சிகளுக்கு இடையேயான போட்டி என்று தெரிவித்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரெலோ புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியன இந்தியாவின் முகவர்கள் என்றும் விமர்சித்தார். அனைவராலும் இன்று பேசப்படும் 13 ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் இருக்கின்ற ஓர் கட்டமைப்பு. ஒற்றையாட்சி என்பது சிங்கள பௌத்த ஆட்சி. வேறு எவருக்கும் அங்கு அதிகாரம் இல்லை. அதனாலேயே தமிழ் பெருந்தலைவர்கள் நீண்டகாலமாக இதனை நிராகரித்து வந்திருக்கின்றார்கள். விடுதலைபுலிகள் கூட அதனை ஏற்றுகொள்ளவில்லை என்றார். வவுனியாவுக்கு இன்று (02) விஜயம்செய்த அவர் தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் கலந்துகொண்டுவிட்டு கருத்து …
-
- 3 replies
- 725 views
-
-
தமிழ் ஆயுதக் குழுக்கள் எவற்றிடமும் ஆயுதங்கள் இல்லை என்றால் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் படையினருக்கு எதிரானவையாகவே இருக்கும் : அமைச்சர் விமல் வீரவன்ஸவின் கருத்துக்கு சரவணபவன் எம்.பி. சபையில் சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீதான தாக்குதல் தொடர்பில் முறையற்ற கருத்தைத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு சபையில் வைத்தே முறையான சாட்டையடி வழங்கினார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன். நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதைப் பொலிஸ் மா அதிபர் ஆதாரத்துடன் தெரிவிக்கும் போது அமைச்சருக்கு மட்டும் அது எப்படி சோடிக்கப்பட்ட வித்தையாகத் தெரிந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ""உண்மை ஒன்…
-
- 0 replies
- 728 views
-
-
போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரின் விடுதலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரை உடனே மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். மத்திய அரசு தூதரக மட்டத்தில் பேச்சுக்களை நடத்தி வருவதுடன் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் விவகாரம் பற்றி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவ…
-
- 0 replies
- 270 views
-
-
கற்பிட்டியில் கரையொதுங்கிய 14 பைலட் திமிங்கலங்கள் ! கடலோர நகரமான புத்தளம் கற்பிட்டியில் கரையொதிங்கிய 14 பைலட் திமிங்கலங்களைக் காப்பாற்றும் பாரிய மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதில் மூன்று திமிங்கலங்கள் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எஞ்சிய 11 திமிங்கலங்களை மீட்பதற்கான முயற்சிகள் இலங்கை கடற்படை, பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2023/1323884
-
- 2 replies
- 575 views
-
-
சாந்தி சிறீஸ்கந்தராசா, துரைரட்ணசிங்கம் பதவி விலகுகிறார்கள்! June 24, 2018 தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் துரைரட்ணசிங்கம் ஆகியோரிடமிருந்து பதவி விலகல் கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார். கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்திற்கு இந்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தை, பங்காளிகளிகளுடன் பகிராமல், தான் தோன்றித்தனமாகவும்- இயற்கைநீதிக்கு எதிராகவும்- தமிழரசுக்கட்சி தன்னிடம் வைத்திருந்தது. ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளை பங்காளி கட்சிகள் அதிகம் எதிர்க்காமல், ஓரளவு விட்டுக்கொடுப்புடன் நடந்தது கட்சிக்கு வாய்ப்பாக இருந்தது. …
-
- 0 replies
- 249 views
-
-
1200 மில்லியன் ரூபாவுக்கு மங்கள சமரவீரவை விலைக்கு வாங்குகிறது அரசாங்கம்! [Wednesday 2014-11-12 09:00] ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், இதுதொடர்பாக அரசாங்கத் தரப்பிற்கும் மங்கள சமரவீரவிற்கும் இடையில் சிங்கப்பூரில் இரகசிய பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளும் கட்சியில் இணைத்து கொள்வதற்காக மங்கள சமரவீரவிற்கு அரசாங்கம் 1200 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியதாக சிங்கப்பூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தவொரு நிலைமையின் கீழும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயார் என மங்கள சமரவீர அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறியதொரு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டாலும் இணைந்து கொள்ள முடியும் என குறிப்…
-
- 1 reply
- 654 views
-
-
நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிறது பாபநாசம். (படங்கள் இணைப்பு) தஞ்சைமாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர்கட்சியினரின் தீவிரமான பிரச்சாரத்தினால் விறுவிறுப்பும், பரபரப்பும் கூடியுள்ளது. தேர்தல்அறிவிக்கப்பட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர்களில்ஒருவரான அ. தமிழ்ச்செல்வன் சுயேட்சை வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவருடைய வேட்புமனுவும்ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில் கடந்த 30-03-2011 அன்று காலை 10 மணி அளவில் கட்சியின்மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் என்ற திலீபன் தலைமையில் பாபநாசம்அண்ணாசிலை அருகில் இருந்து தாயக விடுதலைப்போரில் வித…
-
- 0 replies
- 1.5k views
-
-
கடற்படையின் தேவைக்காக மாதகலில் காணி சுவீகரிப்புக்காக நிலஅளவை செய்ய வந்த அதிகாரிகளை எதிர்த்து மக்களும் அரசியல்வாதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலதிக செய்திகள் விரைவில்..... http://www.pathivu.com/news/35411/57//d,article_full.aspx
-
- 1 reply
- 451 views
-
-
அக்கராயனை ஆண்ட ஈழக் குறுநில மன்னன் அக்கிராசனுக்கு பிரமிப்பான சிலை : ஈழத்தில் 13ஆம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்த அக்கிராசன் என்ற குறுநில மன்னனுக்கு இன்று சிலை திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியிலேயே இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. அக்கிராசன் மன்னன் கிளிநொச்சியின் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்துள்ளதுடன் அக்கராயன் குளத்தையும் கட்டுவித்துள்ளார். இவரது பெயரால் அழைக்கப்பட்ட இந்தப் பிரதேசம் அக்கிராசன் என்பது மருவி அக்கராயன் என காலப்போக்கில் அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்க…
-
- 0 replies
- 631 views
-
-
தம்மை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைமையே மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கான போசனம் வழங்கல் நிகழ்வில் ஜனாதிபதி இந்தக்கருத்தை வெளியிட்டார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சி தெரிவு செய்துள்ளது. இது ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தின் பொது வேட்பாளராக போட்டியிடுவது போன்றதே, மைத்திரிபால சிறிசேன எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதும். இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேன, 2010ல் சரத் பொன்சேகா சென்ற நிலைமை…
-
- 0 replies
- 376 views
-
-
US backs Sri Lanka, urges talks and access for humanitarian agencies [TamilNet, Monday, 29 January 2007, 14:23 GMT] The United States, reiterating its strong support for Sri Lanka's efforts "to combat terror," Monday called on Sri Lankan President Mahinda Rajapakse's government to also forge a power-sharing proposal as the basis for negotiations with the LTTE. Pointing out development can only take place amid peace, U.S. Ambassador to Sri Lanka Robert Blake told a meeting of Sri Lanka's donor community that 'transparency, good governance, and respect for human rights and the rule of law are essential preconditions for economic development and indispensable prerequ…
-
- 0 replies
- 689 views
-
-
வியாழக்கிழமை, ஏப்ரல் 14, 2011 சிங்கள அரசின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கைகள் இன்று சிதறடிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடனேயே ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இதற்கான செயற்பாடுகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் ஈழநாதத்துக்குத் தெரிவித்தார். “இலங்கை அரசாங்கத்துடன் எமது தரப்பினரின் பேச்சுவார்த்தை தொடர்கிறதே தவிர, ஆக்கபூர்வமாக இதுவரை எதுவும் இல்லை” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடந்த வாரம் வெளியான ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.…
-
- 0 replies
- 799 views
-
-
கடந்த இரண்டு வருடங்களில் 25,000 இராணுவ வீரர்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் -சரத் பொன்சேகா கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25,000 இராணுவத்தினரும் 1,000 பொலிஸாரும் தமது பதவிகளை விட்டு விலகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய அவர், கடந்த வருடத்தில் சுமார் 1,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதவிகளை விட்டு விலகியுள்ளதாவும், இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் 200 பொலிஸார் பதவிகளை விட்டு விலகியுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தவறான செயல்களை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் வெளியேறினர் என்றார். “யுத்த காலத்தில் கூட இவ்வளவு…
-
- 3 replies
- 728 views
- 1 follower
-
-
நாட்டின் சில பகுதிகளில் சுழற்காற்று அபாயம்!! கிழக்கு மாகாணம், மலைநாட்டின் கிழக்குப் பகுதி, காலி, மாத்தறை போன்ற பகுதிகளில் இன்று ரொனேற்றா சுழற்காற்றின் தாக்கம்ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் மாத்தளைப் பகுதியில் ரொனேற்றா சுழற்காற்று வீசியதில் மாத்தளை பஸ் நிலையப் பகுதியும் அதனை அண்டிய பகுதிகளும் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது. -Sudaroli-
-
- 0 replies
- 1.5k views
-
-
சீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மோசடிகள் குறித்து அம்பலப்படுத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கம் சீனவுடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் இதில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாரியளவிலான மோசடிகள் பற்றிய விபரங்களை வெளியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். நம்ப முடியாத அளவிற்கு மோசடிகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபடாத ஒர் தலைவரையே நாடு எதிர்பார்க்கின்றது எனவும், அதற்கு மைத்திரிபால சிறிசேன பொருத்தமானவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleVi…
-
- 3 replies
- 548 views
-
-
இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது! மோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக தென் ஆபிரிக்காவைத் தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பினரால் தயார் செய்யப்பட்ட இரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்த குற்றங்களை இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் மாலி, லெபனான், டாபூர் மற்றும் தென் சூடான் ஆகிய மோதல் வலயங்களில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இருந்தபோதிலும் 2016ம் ஆண்டில் இலங்கையின் சிர…
-
- 0 replies
- 470 views
-
-
(க.கிஷாந்தன்) மனித அபிவிருத்தி, மனித உரிமைக்கான ஆணைக்குழுவின் செயலகத்தினால் இன்று காலை 10 மணியளவில் ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் வீதி நாடகம் ஒன்றையும் அதன் பின் பஸ் தரிப்பிடத்திலிருந்து ஹட்டன் கத்தோலிக்க ஆலயம் வரை பேரணியும் நடைபெற்றது. இதில் மலையக பெருந்தோட்ட மக்களும், நகரவாசிகளும் கலந்து கொண்டனர். இவ் பேரணியில் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக வேலைக்கு செல்லும் தாய்மார்களினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எதிர்காலம், பிள்ளைகளின் கல்வி நிலை, குடும்ப நிலை, எதிர்கால சமுதாயத்தின் நிலை என்பன ஏற்பாடு குழுவினால் விழிப்புணர்வு உரையும், அதற்கான பதாதைகளும் காட்சி படுத்தப்பட்டதுடன் “இனி யாரும் வெளிநாடு போக வேண்டாம்” என்ற கருத்தை கொண்ட துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. இதில் …
-
- 0 replies
- 388 views
-
-
Published By: T. SARANYA 10 APR, 2023 | 09:14 PM (எம்.ஆர்.எம்.வசீம்) சிறைப்படுத்தப்படடும் நபர் எந்தவகையான குற்றத்துக்காக சிறைப்படுத்தப்பட்டாலும் அவரை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அத்துடன் சிறிய குற்றங்களுக்கு ஆளாகுபவர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கு முடியுமான வகையில் சட்டம் அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் சிறைச்சாலை திணைக்களத்துக்குரிய அமைச்சின் விடயபொறுப்பான அமைச்சருக்கு சாட்டப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு அமைய 3வருட காலத்துக்காக நாட்டில் இருக்கும் அனைத்து சிறைச்சாலை நிறுவனங்கள…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
டெலோ மூத்த உறுப்பினர் எடுத்த திடீர் முடிவு! டெலோ கட்சியில் இருந்து விலகியுள்ள கட் சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கணேஷ்வேலாயுதம் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கூறியுள்ளார். மேற்படி விடயம் குறித்து யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில், கடந்த 02.08.2018ம் திகதி டெலோ கட்சியில் இருந்து விலகுவதா கட்சியின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தாவிடம் கடிதம்கொடுத்துள்ளேன். டெலோ அமைப்புக்குள் பிளவு என செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் உண்மை அதுவல்ல. நான் மட்டும் விலகி இருக்கிறேன். அதற்கான காரணம் மக்களுடைய அபிவிருத்தி, கல்வ…
-
- 3 replies
- 946 views
-
-
தவறான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறு மக்களை கோரியது எனது தவறு: சமரவீர. ஸ்ரீலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சவை தெரிவு செய்வதற்கு தான் மேற்கொண்ட முயற்சி தவறானது என்பதை தற்போது உணாந்து கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார் மாத்தறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் தவறான ஒருவரை நாட்டின் தலைவதியை தீர்மானிக்கும் பதவிக்கு தெரிவு செய்யுமாறு மக்களை கோரியது தனது தவறு இன்று அதற்கான தண்டனையே தனக்கு கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் தற்போது மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமான இருக்கின்றவர்களும் தனக்கு ஏற்பட்ட நிலை விரைவில் ஏற்படும் என்றம் எனவே அவர்கள் அவதானத்துடன் இருக்க வேண…
-
- 6 replies
- 2.2k views
-
-
May 13, 2011 / பகுதி: செய்தி / இலங்கையர்கள் உள்ளிட்ட 183 பேர் மெக்ஸிகோ பொலிசாரால் கைது! இலங்கையர்கள் உள்ளிட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் 183 பேர் மெக்ஸிகோ சமஷ்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குவாத்தமாலா, எல்செல்வடோர், ஹோண்டுராஸ், நேபாளம், இந்தியா, எகிப்து, மற்றும் இக்குவடோர் ஆகிய நாட்டவர்களுடன் ஐந்து இலங்கையர்களும் சமஷ்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் அனைவரும் அமெரிக்கா நோக்கி பயணமாகியதாக முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட அனைவரையும் மேலதிக விசாரணைகளுக்காக சமஷ்டி பொலிஸார் தேசிய குடியேற்றவாசிகள் நிறுவனத்திடம்…
-
- 0 replies
- 614 views
-
-
இலங்கையுடன் பாதுகாப்பு உறவை ரஸ்யாவும் விஸ்தரிக்கின்றது இலங்கை படையினருக்கு பயிற்சிகளை வழங்கவுள்ள ரஸ்யா இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஸ்யாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கை இதற்கான உடன்பாட்டிற்கு வந்துள்ளது. இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான இலங்கை ரஸ்யா இணைந்த செயற்குழுவின் கீழ் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடாபான விபரங்கள் அமைச்சரவையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் சார்பில் ரஸ்ய அதிகாரிகளை சந்தித்த இலங்கை அதிகாரிகள் இலங்கையின் முப்படையினருக்கும் ரஸ்யா பயிற்சிகளை வழங்கும் என குறிப்பிட்டுள்ளனர். ரஸ்யாவில் உள்ள இ…
-
- 0 replies
- 233 views
-
-
புலிகளிடம் இருந்த ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் தலைவர்களிடம்...! சிங்களவருக்கும் பாதிப்பு...? தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரிடம் இருந்த ஆயுதங்கள் தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இன்பராஜா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவதாவது, 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். அவர்களிடம் இருந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதங்கள் தற்பொழுது எங்குள்ளது என …
-
- 8 replies
- 1.8k views
-
-
கொழும்பு, மார்ச்.6 சேர்பியாவின், கோசோவோ மாகாணத்தை சுதந்திர நாடாகப் பிரகடனம் செய் வதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு அமைதிப்படை ஒன்றை அனுப்பவிரும்புவதாகக் கூறப்படும் தருணத்தில, கொசோவோ குறித்த தகவல் எமது நாட்டுக்கு உடனடியான பயமுறுத்தலாகும். இவ்வாறு அதிர்ச்சியும், ஆத்திரமும் வெளியிட்டிருக்கிறார் ஜே.வி.பியின் தலை வர் சோமவன்ச அமரசிங்கா. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு நீண்ட காரசாரமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார் ஜே.வி.பியின் தலைவர். நன்றி : உதயன்
-
- 1 reply
- 1.1k views
-