Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எழிலன் எங்கே ? ; இராணுவம் பதில்கூற வேண்டும் என்கின்றார் சம்பந்தன் எழிலன் சரணடைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தாலோ அல்லது கைது செய்திருந்தாலோ அவருக்கு என்ன நடந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரான எழிலனை நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றம் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். எனவே எழிலனுக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டியது இராணுவத்தின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். …

  2. வாகரை நோக்கி சிறீலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப் பட்டுள்ளது. இன்று காலை 8 மணியளவில் கஜுவத்தை இராணுவ முகாம், மாங்கேணி இராணுவ முகாமிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகரை நோக்கி கனரக ஆயுதங்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் சகிதம் பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சியை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். படையினரின் முன்னேற்ற முயற்சிக்கு ஈடுகொடுத்த விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலைத் தொடுத்து படையினரை விரட்டியடித்துள்ளனர். விடுதலைப் புலிகளிள் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறீலங்காப் படையினர் தமது நிலைகளிலிருந்துது 500 மீற்றர் தூரம் பின்வாக்கி சூனியப் பிரதேசத்தினுள் சென்றுள்ளனர் என விடுதலைப் புலிகளின் இர…

  3. தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் கவலைக்கிடமான நிலையில்! சுய நினைவை முற்றாக இழந்து விட்டார்: [Friday, 2011-02-04 16:19:30] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எமது இணையத்தளத்துக்குத் தகவல் தருகையில், பார்வதி அம்மாளின் நிலைமை மோசமடைநதுள்ளதாக அவருக்குச் சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள் தன்னிடம் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து பார்வதி அம்மாளின் உறவினர்களுக்கு நான் தகவல் அனுப்பியுள்ளேன். சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தற்ப…

    • 4 replies
    • 1.2k views
  4. சிறிலங்கா – இந்திய இராணுவத் தளபதிகள் சந்தித்துப் பேச்சு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், இன்று காலை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் நேற்று பிற்பகல் தனி விமானத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன், மேஜர் ஜெனரல் பிரிதி சிங், பிரிகேடியர் முகேஸ் அகர்வால், உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழுவினரும் சிறிலங்கா வந்துள்ளனர். இன்று காலை சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்கு சென்ற இந்திய இராணுவத் தளபதிக்கு, சிறிலங்கா படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டத…

  5. ஜனாதிபதி மாளிகையில் இருந்து பெறுமதியான 39 ஓவியங்கள் காணாமல் போயுள்ளன ! போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் பிரவேசித்த பின்னர் அங்கிருந்த 39 மர மற்றும் கேன்வாஸ் ஓவியங்கள் காணாமல் போயுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மாளிகையின் 209 ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் பாதுகாப்பிற்காக தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் குழுவொன்று அரண்மனைக்கு சென்று தற்போது அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் (இரசாயனப் பாது…

  6. மூடிய அறையில் ரவிராஜ் படுகொலை விசாரணை சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் ரவிராஜின் மரணம் தொடர்பான விசாரணைகளை மூடிய அறைக்குள் நடத்துவதற்கு கொழும்பு மேல திக நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்தது. குற்றப் புலனாய்வுப் பொலிஸார் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த முடிவுக்கு நீதிமன்றம் வந்தது. இந்த விசாரணைகளுக்குப் பத்திரிகை யாளர்களையும் அனுமதிக்கக் கூடாது எனக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கோரியமையை அடுத்து, விசாரணை பற்றிய செய் தியைச் சேகரிக்கப் பத்திரிகையாளர்களுக் கும் தடை விதிக்கப்பட்டது. நேற்றுக் கொழும்பு மேலதிக நீதிவான் எம்.வை. மொஹமட் இஸ்ஸடீன் முன்னிலை யில் பகிரங்க நீதிமன்றத்துக்குப் பதிலாக நீதிவானின் அறையில் இந்த மரண விசா …

  7. ஊடகங்களை சாடிய ஜனாதிபதி சிவலிங்கம் சிவகுமாரன் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இரா­ணு­வத்தின் தியா­கங்­களை நல்­லாட்சி அர­சாங்கம் மறந்­த­தில்லை.தற்­போ­தைய அர­சாங்கம் இரா­ணு­வத்­தி­ன­ருக்­கா­கவும் அவர்களின் குடும்­பத்­தி­ன­ருக்­கா­கவும் பல்­வேறு நலன்­புரி திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது ஆனால் அரச ஊட­கங்­களும் சில தனியார் ஊட­கங்­களும் அவை குறித்து பேசு­வ­தில்லை செய்­தி­களை வெளியி­டு­வ­தில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற மைதா­னத்தில் நேற்று இடம்­பெற்ற இரா­ணுவ வெற்றி தின நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரை­யாற்­றும்­போது கடந்த அர­சாங்கம் ஒரு வாரத்தை மாத்­தி­ரமே இரா­ணுவ வெற்­றிக்­காக பிர­க­ட­னப்­ப­டுத்­தி…

  8. துணை இராணுவக்குழுவின் குற்றச்சாட்டை முன்னாள் இயக்குநர் மறுத்தார் [புதன்கிழமை, 6 டிசெம்பர் 2006, 19:17 ஈழம்] [கொழும்பு நிருபர்] நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு 6 அடி தொலைக்காட்சியை வழங்கினார் என்று துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த கருணாவின் குற்றச்சாட்டை சிறிலங்கா விமான நிலையம் மற்றும் விமான சேவைகளுக்கான முன்னாள் இயக்குநர் காமினி அபயரட்ன மறுத்துள்ளார். கொழும்பு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகளின் தலைவருக்கு தொலைக்காட்சி கொடுக்கப்பட்டது காமினி அபயரத்னவுக்குத் தெரிவும் என்று கருணா தெரிவித்திருந்தார். இத்தகைய சம்பவம் நடக்கவில்லை என்று கூறிய காமினி, விடுதலைப் புலிகளின் பாதுகாப்பான பய…

    • 0 replies
    • 962 views
  9. அமெரிக்க செனட்டின் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நால்வர் சிறிலங்காவில் ஆய்வு அமெரிக்கா செனட் சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது. செனட் சபையின் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் நால்வரே சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். இவர்கள் சிறிலங்கா அரசாங்க பிரதிநிதிகளுடன், முக்கிய பேச்சுக்களை நடத்துவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவடைந்து வரும் நிலையில், அமெரிக்க செனட்டின் பாதுகாப்புக் குழுவைச் நேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொழும்பு வந்துள்ளனர். http://www.puthinappalakai.net/2018/05/27/news/31091

  10. மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது : ஜி.எல் பீரிஸ் ! kugenJanuary 17, 2023 மக்களாணை இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக நாட்டு மக்களின் அரசியல் நிலைப்பாட்டை சர்வதேசம் அறிந்து கொள்ளும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று (16) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உள்ள…

    • 4 replies
    • 497 views
  11. வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 25, 2011 திருகோணமலையில் சூழலை மாசுகொள்ள செய்யும் பாரிய கைத்தொழில் பேட்டையொன்றை உருவாக்குவதற்கு சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கையில் தற்பொழுது அதிகரித்திருக்கும் வெளிநாட்டு முதலீடுகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் அனைத்து உட்கட்டுமான வசதிகளுடன் கூடிய வலயமொன்றைத் திருகோணமலையில் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ரம்புக்வெல குறிப்பிட்டார். சம்பூரில் தமிழர்களின் காணிகளை சுவீகரித்த சிங்கள அரசு அதனை இந்தியா, பிரேசில், அவுஸ்ரேலிய கம்பனிகளுக்கு மில்லியன் கணக்கான டொலர்களுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. ஆனால் இந்த காணிகளின் உரிமையாளர்களான தமிழர்கள் கொட்டில்களில் அகதி…

  12. படையினரிடம் சரணடைந்தோரின், பெயர் விபரங்களை வெளியிடத் தயார்… இறுதிக்கட்ட யுத்தத்தில் படையினரிடம் சரணடைந்தோரின் விபரங்களை வெளியிட தயாரென காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள், முல்லைத்தீவில் இன்று (02.06.17) இடம்பெற்றன. இவற்றை புறக்கணித்து மக்கள் போராடியதோடு, சரணடைந்தோரின் பெயர்ப்பட்டியலை வெளியிடுமாறும் அதன் பின்னர் தாம் சாட்சியப்பதிவிற்கு ஒத்துழைப்பதாகவும் கோரியிருந்தனர். அதற்கு பதிலளித்த சாலிய பீரிஸ், படையினரிடம் சரணடைந்தோரின் விபரங்களை வெளியிடுமாறு எழுத்து மூலம் தம்மிடம் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில், அவற்றை வெளியிடத் தயார் எனக் கூ…

  13. புதன் 20-12-2006 23:07 மணி தமிழீழம் [முகிலன்] கல்முனையில் அலுவகலகம் மீது தாக்குதல்: கருணா ஒட்டுக் குழு உறுப்பினர் பலி கல்முனையில் சிறீலங்கா இராணுவத்தினருடன் இயங்கும் கருணா குழுவின் கல்முனை அலுவலகம் உந்துகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியது. இதன்போது ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இத்தாக்குதலானது நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

  14. வெள்ளிக்கிழமை, மார்ச் 4, 2011 கடந்த 15 வருடமாக இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த சுபாஷ் விடுதி இன்று அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்.குடா நாட்டில் கடந்த 15 வருடமாக சிங்கலபப்டையின் 51ஆவது படைப்பிரிவு, சுபாஷ் விடுதியில் இதுவரை காலமும் கட்டுப்பாட்டில் வைத்திருந்து அதனை தமிழர்களின் சித்திரவதை கூடமாக செயற்படுத்தி வந்துள்ளது. இப்போ பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அதனை இராணுவம் ஒப்படைப்பதாக கூறி இன்று அதனை ஒப்படைத்துள்ளது. இதுவரை காலமும் சுபாஷ் விடுதியில் தங்கியிருந்த இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவினர் இன்று முதல் கோப்பாய் நகரின் புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கோப்பாய் முகாமும் தமிழ் மக்களின் சொந்த நிலமே இந்த முகாமை சீன அரசாங்கம் அம…

  15. தமிழ் மக்கள் தமிழீழ கோரிக்கையை முன் வைக்கவில்லை அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றையே கோருகின்றனர்:- பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்- அரசியல் தீர்வுத் திட்டமொன்றையே தமிழ் மக்கள் கோரி நிற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் தமிழீழ கோரிக்கையை முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்கள் கூட தனித் தமிழீழமொன்றை கோரி நிற்கவில்லை எனவும், அர்த்தமுள்ள அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்றே கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண…

  16. க. அகரன் கொள்கை என்ற பெயரில் இந்தியாவுக்கு விசுவாசமாக நின்று இனத்தை விற்பதே தமிழ் கட்சிகளுக்கு இடையேயான போட்டி என்று தெரிவித்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரெலோ புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியன இந்தியாவின் முகவர்கள் என்றும் விமர்சித்தார். அனைவராலும் இன்று பேசப்படும் 13 ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் இருக்கின்ற ஓர் கட்டமைப்பு. ஒற்றையாட்சி என்பது சிங்கள பௌத்த ஆட்சி. வேறு எவருக்கும் அங்கு அதிகாரம் இல்லை. அதனாலேயே தமிழ் பெருந்தலைவர்கள் நீண்டகாலமாக இதனை நிராகரித்து வந்திருக்கின்றார்கள். விடுதலைபுலிகள் கூட அதனை ஏற்றுகொள்ளவில்லை என்றார். வவுனியாவுக்கு இன்று (02) விஜயம்செய்த அவர் தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் கலந்துகொண்டுவிட்டு கருத்து …

    • 3 replies
    • 732 views
  17. தமிழ் ஆயுதக் குழுக்கள் எவற்றிடமும் ஆயுதங்கள் இல்லை என்றால் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் படையினருக்கு எதிரானவையாகவே இருக்கும் : அமைச்சர் விமல் வீரவன்ஸவின் கருத்துக்கு சரவணபவன் எம்.பி. சபையில் சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீதான தாக்குதல் தொடர்பில் முறையற்ற கருத்தைத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு சபையில் வைத்தே முறையான சாட்டையடி வழங்கினார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன். நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதைப் பொலிஸ் மா அதிபர் ஆதாரத்துடன் தெரிவிக்கும் போது அமைச்சருக்கு மட்டும் அது எப்படி சோடிக்கப்பட்ட வித்தையாகத் தெரிந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ""உண்மை ஒன்…

    • 0 replies
    • 731 views
  18. போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரின் விடுதலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரை உடனே மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். மத்திய அரசு தூதரக மட்டத்தில் பேச்சுக்களை நடத்தி வருவதுடன் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் விவகாரம் பற்றி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவ…

  19. கற்பிட்டியில் கரையொதுங்கிய 14 பைலட் திமிங்கலங்கள் ! கடலோர நகரமான புத்தளம் கற்பிட்டியில் கரையொதிங்கிய 14 பைலட் திமிங்கலங்களைக் காப்பாற்றும் பாரிய மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதில் மூன்று திமிங்கலங்கள் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எஞ்சிய 11 திமிங்கலங்களை மீட்பதற்கான முயற்சிகள் இலங்கை கடற்படை, பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2023/1323884

    • 2 replies
    • 588 views
  20. சாந்தி சிறீஸ்கந்தராசா, துரைரட்ணசிங்கம் பதவி விலகுகிறார்கள்! June 24, 2018 தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் துரைரட்ணசிங்கம் ஆகியோரிடமிருந்து பதவி விலகல் கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார். கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்திற்கு இந்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தை, பங்காளிகளிகளுடன் பகிராமல், தான் தோன்றித்தனமாகவும்- இயற்கைநீதிக்கு எதிராகவும்- தமிழரசுக்கட்சி தன்னிடம் வைத்திருந்தது. ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளை பங்காளி கட்சிகள் அதிகம் எதிர்க்காமல், ஓரளவு விட்டுக்கொடுப்புடன் நடந்தது கட்சிக்கு வாய்ப்பாக இருந்தது. …

  21. 1200 மில்லியன் ரூபாவுக்கு மங்கள சமரவீரவை விலைக்கு வாங்குகிறது அரசாங்கம்! [Wednesday 2014-11-12 09:00] ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், இதுதொடர்பாக அரசாங்கத் தரப்பிற்கும் மங்கள சமரவீரவிற்கும் இடையில் சிங்கப்பூரில் இரகசிய பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளும் கட்சியில் இணைத்து கொள்வதற்காக மங்கள சமரவீரவிற்கு அரசாங்கம் 1200 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியதாக சிங்கப்பூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தவொரு நிலைமையின் கீழும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயார் என மங்கள சமரவீர அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறியதொரு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டாலும் இணைந்து கொள்ள முடியும் என குறிப்…

  22. நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம். (படங்கள் இணைப்பு) தஞ்சைமாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர்கட்சியினரின் தீவிரமான பிரச்சாரத்தினால் விறுவிறுப்பும், பரபரப்பும் கூடியுள்ளது. தேர்தல்அறிவிக்கப்பட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர்களில்ஒருவரான அ. தமிழ்ச்செல்வன் சுயேட்சை வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவருடைய வேட்புமனுவும்ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில் கடந்த 30-03-2011 அன்று காலை 10 மணி அளவில் கட்சியின்மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் என்ற திலீபன் தலைமையில் பாபநாசம்அண்ணாசிலை அருகில் இருந்து தாயக விடுதலைப்போரில் வித…

    • 0 replies
    • 1.5k views
  23. கடற்படையின் தேவைக்காக மாதகலில் காணி சுவீகரிப்புக்காக நிலஅளவை செய்ய வந்த அதிகாரிகளை எதிர்த்து மக்களும் அரசியல்வாதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலதிக செய்திகள் விரைவில்..... http://www.pathivu.com/news/35411/57//d,article_full.aspx

  24. அக்கராயனை ஆண்ட ஈழக் குறுநில மன்னன் அக்கிராசனுக்கு பிரமிப்பான சிலை : ஈழத்தில் 13ஆம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்த அக்கிராசன் என்ற குறுநில மன்னனுக்கு இன்று சிலை திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியிலேயே இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. அக்கிராசன் மன்னன் கிளிநொச்சியின் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்துள்ளதுடன் அக்கராயன் குளத்தையும் கட்டுவித்துள்ளார். இவரது பெயரால் அழைக்கப்பட்ட இந்தப் பிரதேசம் அக்கிராசன் என்பது மருவி அக்கராயன் என காலப்போக்கில் அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்க…

  25. தம்மை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைமையே மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கான போசனம் வழங்கல் நிகழ்வில் ஜனாதிபதி இந்தக்கருத்தை வெளியிட்டார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சி தெரிவு செய்துள்ளது. இது ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தின் பொது வேட்பாளராக போட்டியிடுவது போன்றதே, மைத்திரிபால சிறிசேன எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதும். இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேன, 2010ல் சரத் பொன்சேகா சென்ற நிலைமை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.