ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
தமிழர் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துரைக்க தமிழ் பொதுவேட்பாளர் களமிறங்குவது அவசியம் : கஜேந்திரகுமார் களமிறங்கினால் அவருக்கே வாக்களிப்பேன் என்கிறார் சி.வி.விக்கினேஸ்வரன் 29 DEC, 2023 | 08:40 PM (நா.தனுஜா) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதைப்போன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலம் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறுவதை உறுதிப்படுத்தமுடியாது. அத்தேர்தல் பகிஷ்கரிப்பு வெற்றியடைவதையும் உறுதிப்படுத்தமுடியாது. ஆனால் தமிழர்களின் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துரைப்பதற்கும், சிங்கள வேட்பாளருக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெறாமல் தடுப்பதற்கும் மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்ற தமிழ் பொதுவேட்ப…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
78 நாட்டு பிரஜைகளுக்கு இணையம் ஊடாக வீசா - ஒன் அரைவல் வீசா ரத்து:- 19 செப்டம்பர் 2011 பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் தீர்மானம் 78 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இணையம் ஊடாக வீசா வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 28ம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான வீசா விண்ணப்பங்களை இணையம் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் குறித்த நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஒன் அரைவல் வீசா முறைமை ரத்தாவதாகக் குறிப்பிடப்படுகிறது. மாலைதீவு மற்றும…
-
- 1 reply
- 1.2k views
-
-
Published By: VISHNU 11 JAN, 2024 | 03:29 PM யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட 24 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் நுணாவில் பகுதியில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது 129 இடங்கள் டெங்கு பரவுவதற்கு ஏதுவான இடங்களாக இனம் காணப்பட்ட நிலையில், 24 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டது. ஏனையவர்களுக்கு துப்பரவு செய்தவற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரியில் 24 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை | Virakesari.lk
-
- 0 replies
- 193 views
-
-
கனடாவிற்கு கப்பல் மூலம் சென்றவர்களுள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் காணப்படுவதாக கனடா அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமெரிக்க தீவரவாத தடுப்பு பிரிவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களின் முன்பு ஓஷியன் லேடி கப்பல் மூலம் கனடாவுக்குச் சென்ற 76 இலங்கையர்களின் கைவிரல் அடையாளங்கள் அமெரிக்க பாதுகாப்பு துறையினரால் பரிசோதிக்கப்பட்ட போதே இந்த இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர். தகவல் கோர்ப்பின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்த போது இந்த இருவரும் அடையாளம் காணப்பட்டதாக அமெரிக்க தீவரவாத தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜோன் கோஹன் தெரிவித்துள்ளார். மேலும், கனேடிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் ஒட்டாவாவில் உள்ள அமெரிக…
-
- 0 replies
- 941 views
-
-
காணிகளை மக்களுக்கு விடுவிக்கும் புதிய அறிவிப்பினால் 4 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும் என்கிறது தனியார் நிறுவனம் இலங்கையின் கிழக்கே சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள காணியொன்றை தனியார் நிறுவனம் ஒன்றின் தொழிற்சாலைக்காக வழங்குவதற்கு கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தொழிற்சாலையை அமைக்கவிருந்த ஸ்ரீலங்கா கேட்வே இண்டஸ்ட்ரீஸ் தனியார் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை ஆராய்ந்தபோதே நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் 2012-ம் ஆண்டு தமக்கு தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை வழ…
-
- 0 replies
- 556 views
-
-
பெரும் செலவுகளுடன் சிறிலங்கா வான்படை நவீன மயம்: ஜேன்ஸ் பாதுகாப்பு சஞ்சிகை [ஞாயிற்றுக்கிழமை, 5 ஓகஸ்ட் 2007, 09:55 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா வான்படையினர் 7 பில்லியன் ரூபாய்களை தமது கொள்வனவுகளுக்காக இந்த வருடத்தின் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் செலவிட உள்ளனர் என ஜேன்ஸ் பாதுகாப்பு வர சஞ்சிகை இந்த வாரம் தெரிவித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது. அந்த சஞ்சிகையின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவரான றொபேட் கர்நியோல் ஆகஸ்ட் மாத முதல் பதிப்பிற்கு எழுதியதாவது: சிறிலங்கா வான்படை ஜூலை முதல் டிசம்பர் வரையிலான தமது கொள்வனவுகளுக்கு 7,779.4 மில்லியன் ரூபாய்களை (69.6 மில்லியன் டொலர்) எதிர்பார்க்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை குறித்த நிபுணர் ஜிம் மெக்டொனால்ட், வெள்ளை மாளிகையிடம் வலியுறுத்தியுள்ளார். ஜிம் மெக்டொனால்ட் சர்வதேச மன்னிப்புச் சபையின் அமெரிக்க அலுவலகத்தில் கடயைமாற்றி வருகின்றார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டுமெனக் கோரி மகஜர் ஒன்றையும் அவர் வெள்ளை மாளிகையில் சமர்ப்பித்துள்ளார். இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படையினர் மேற்கொண்…
-
- 0 replies
- 752 views
-
-
47 இராணுவத்தினரைப் போர்குற்றவாளிகளாக பட்டியலிட்டுள்ளதாம் ஐ.நா அறிக்கை! [saturday 2015-05-23 20:00] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநா விசாரணை அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிநத ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட இராணுவத்தினர் 47 குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இவ்வறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் இலங்கை தொடர்பாக இடம்பெறுகின்ற விசாரணையின் உத்தியோகபூர்வ அறிக்கை இதுவரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்…
-
- 0 replies
- 703 views
-
-
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய செய்தி சேனலான WION க்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, “….இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் நாடு அனுமதிக்காது” என்று குறிப்பிட்டார். WION நிருபர்: இந்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் ? ஜனாதிபதி ரணில்: நான் மீண்டும் வருவதற்கு நான் போட்டியிட வேண்டும். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை முதல் கடமையாகக் கொண்டுள்ளேன்…
-
- 1 reply
- 238 views
- 1 follower
-
-
கடந்த மாதம் அவசர காலச் சட்டத்தின் கீழ் இருந்த ஐந்து விதிமுறைகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டன. இதனை எதிர்த்துத் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். நேற்றுமுன்தினம் அந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் அதனை நிராகரித்தனர். குறித்த விதிமுறைகள் நிர்வாகத்திற்கோ அல்லது நிறைவேற்று அதிகாரத் திற்கோ உட்பட்டவை அல்லவென பிரதி சொலி சிட்டர் ஜெனரல் சவேந்திர பெர்னான்டோ தெரி வித்ததை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் மனுவை நிராகரித்தனர். இவ்வாறு தமது மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் முறையிட உள்ளது. தமது தரப்பு வாதத்தைச் சொல்வதற்கு …
-
- 3 replies
- 1.2k views
-
-
சமாதானக் குழுவினரால் தமிழ்மொழி புறக்கணிப்பு [28 - August - 2007] நாவலப்பிட்டி நகரில் இயங்கும் சமாதானக் குழுவினரிடம் பல தரப்பட்டவர்கள் சென்று தங்களது பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வரும் வேளை அங்கு வழங்கப்படுகின்ற விண்ணப்பங்கள், - ஆவணங்கள் தனிச் சிங்கள மொழியிலுள்ளதால் மொழி புரியாத மலையக தோட்ட மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். இது சம்பந்தமாக நீதி மறுசீரமைப்பு அமைச்சு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கம்பளை கல்விக் காரியாலயத்தில் மலையக தமிழ் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் "சுற்று நிருபங்கள்" தனிச் சிங்கள மொழியில் அனுப்பப்படுவதாகவும் அதிபர், ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். தினக்குர…
-
- 0 replies
- 1k views
-
-
ஆனைக்கோட்டை பகுதியில் பஸ் மோதி குடும்பஸ்தர் சாவு யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள ஆனைக்கோட்டை மதவடியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலையில் காக்கைதீவு கடலில் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுவிட்டு அதிகாலை 5.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த வேளையில் பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஆனைக்கோட்டை சாவற்காட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளியான எஸ்.நாதன் (வயது 38) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார். பஸ் மோதியதில் இவர் அருகில் உள்ள மதவினுள் தூக்கி எறியப்பட்டார் எனவும், மோதிய பஸ் அந்த இடத்தில் இருந்து தப்பி ஒடியுள்ளதாகவும் பொதுமக்கள் தெ…
-
- 0 replies
- 430 views
-
-
விண்வெளிக்கு செல்கிறது சிறிலங்காவின் முதல் செய்மதி ராவணா -1 ராவணா-1 என்று பெயரிடப்பட்ட முதலாவது ஆய்வு செய்மதியை சிறிலங்கா வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக, ஆதர் சி கிளார்க் நிறுவகம் தெரிவித்துள்ளது. மிகச் சிறியளவிலான, சதுர வடிவத்தில் அமைந்த இந்த செய்மதியை, ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவகத்தைச் சேர்ந்த இளம் ஆய்வுப் பொறியாளர்களான தரிந்து தயாரத்னவும், துலானி சாமிக்கவும் இணைந்து உருவாக்கியுள்ளனர். 1.1 கிலோ எடையும், 1000 கியூபிக் சென்ரி மீற்றர் அளவும் கொண்ட இந்த செய்மதி, ஜப்பானின் யூஷூ தொழில்நுட்ப நிறுவகத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ராவணா-1 எனப் பெயரிடப்பட்ட இந்த செய்மதி, ஜப்பானின் விண்வ…
-
- 0 replies
- 244 views
-
-
கிண்ணியா, மூதூர் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்விற்கு உடன் தீர்வு காண வேண்டும் ; கிழக்கு ஆளுநர் கிண்ணியா, மூதூர் போன்ற பிரதேசங்களில் இடம்பெற்று வரும் மணல் அகழ்வுப் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பான விஷேட மாநாடு கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றது. ஆளுநர் தனது உரையில் “மிக வறுமையான நிலையிலேயே கிண்ணியாவையும் மூதூரையும் அண்டியுள்ள மக்கள் வாழ்கிறார்கள். மண் அகழும் தொழிலை நம்பி சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன. கடந்த ஒரு மாத காலமாக மண் அகழ்வுத் தொழிலைத் தடை செய்ததையடுத்து…
-
- 0 replies
- 191 views
-
-
மட்டக்களப்பில் 7 வயது சிறுமி - 5 பேரால் துஸ்பிரயோகம்! Vhg மார்ச் 14, 2024 மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட 5 பேரில் 4 சிறுவர்களையும் பிணையில் விடுவித்ததுடன் 18 வயதுயை ஒருவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவை நேற்று (13-03-2024) வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கியுள்ளார். வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் கணவனை இழந்த தாயார் ஒருவர் அவரது 7 வயது சிறுமியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தினமும் வேலைக்கு சென்றுவரும் நிலையில் சிறுமியுடன் அந்தபகுதியைச் சேர்ந்த 11வயது சிறு…
-
- 3 replies
- 627 views
-
-
இந்திய எல்லை அருகே பாக்கு நீரிணையில் படம் பிடித்த சீன அதிகாரிகள் குழு சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழு, தலைமன்னார் இறங்குதுறைப் பகுதி மற்றும், இந்திய எல்லைப் பகுதியில் உள்ள மணல் திட்டுகளைச் சென்று பார்வையிட்டுள்ளனர். சீனத் தூதுவர் செங் ஷியுவான் மற்றும் ஆறு சீன தூதரக அதிகாரிகள் கடந்த 5ஆம், 6ஆம் நாள்களில் வடக்கில் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது, கடந்த 6ஆம், நாள் தலைமன்னாரில் உள்ள வடமேற்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்றிருந்த சீன அதிகாரிகள் குழு, அங்கு சிறிலங்கா கடற்படையினருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். இதன்போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பாக்கு …
-
- 8 replies
- 878 views
-
-
திருகோணமலை மாவட்டம் ஆலங்கேணியில் வெள்ளை வான் குழுவினரால் பிள்ளையார் கோவில் தலைவர் தங்கராசா கௌரிராசா(வயது 40) கடத்தப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 877 views
-
-
தமிழரசுக் கட்சியையும் த.தே.கூட்டமைப்பையும் கலைத்து விடுமாறு ஆனந்தசங்கரி கோரிக்கை [ வியாழக்கிழமை, 02 யூலை 2015, 12:23.18 PM GMT ] எனது புனிதமான கடமையாகக் கருதி தமிழரசுக் கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலைத்து விடுமாறு கேட்டுக் கொள்கினறேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம் வருமாறு:- தமிழ் மக்கள் சார்ந்த சகல நடவடிக்கைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக உரிமை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கே உண்டு. பிரபல சட்டமாமேதைகளான (இராணி அப்புக்காத்து) தந்தை செல்வநாயகம்மும் அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலமும் 1942 களில்…
-
- 7 replies
- 843 views
-
-
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளுக்கு பெருமளவு நிதி செலவு: சாலிய பீரிஸ் மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளுக்காக இதுவரை 1 தசம் ஒரு பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்களை புளோரிடாவிற்கு கொண்டு சென்று காபன் பரிசோதனைகளை நடத்த 1 தசம் 3 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், காபன் பரிசோதனை அறிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு கண்டெடுக்கப்பட்டுள்ள எச்சங்கள் குறித்த இறுதி முடிவை எட…
-
- 1 reply
- 281 views
-
-
இதுவரை காலப்பகுதியிலும் 60,000 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார். இதில் 55000 பேரை சட்ட ரீதியாக இராணுவ சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்தோடு இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள சுமார் 500 இராணுவ உத்தியோகத்தர்கள் பாதாளக் குழுவினருடன் சேர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். கொலை, கொள்ளை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 25 பேர் பற்றிய தகவல்கள் இராணுவத்தினருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தா…
-
- 0 replies
- 680 views
-
-
மகிந்தவும் கைவிட்டதால் சஜின் சுயேட்சையாக போட்டி! [Friday 2015-07-10 07:00] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக தேர்தலில் போட்டியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சஜின்வாஸ் குணவர்தன காலி மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மிக நெருக்கமான நபரான சஜின், ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை முறைகேடான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=135616&categor…
-
- 0 replies
- 305 views
-
-
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 407 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் ஏப்ரல் 21 தாக்குதலின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அ…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் “பாலை” திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகின்றது. இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் …
-
- 14 replies
- 7.7k views
-
-
பதவி விலகாத அரசியல் தலைவர்கள் பலர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி. July 15, 20158:36 am மாகாணசபை உறுப்பினர்களாகவும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாகவும் இருந்து கொண்டே, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால், இம்முறை அதிகளவான மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று மாகாண முதலமைச்சர்கள் தமது பதவியை விட்டு விலகாமலேயே, எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிடுகின்றனர். ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னான்டோ பதுளை மாவட்டத்திலும், மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பகா மாவட்டத்திலும், வடமேல் மாகாண முதல்வர் தயாசிறி ஜெயசேகர குருநாகல மாவட்டத்திலும் போட்டியிடு…
-
- 0 replies
- 352 views
-
-
April 1, 2019 இன்னுமொரு ஜனாதிபதி தேர்தல் வேண்டாம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்துசெய்ய வலியுறுத்தி ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று மாலை பூண்டுலோயா நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சுமார் 100ற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சுலோகங்களை ஏந்தியவாறு, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஜே.வி.பியின் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். (க.கிஷ…
-
- 0 replies
- 272 views
-