ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
கிளாலி படைமுகாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஒருவர் பலியானார். இருவர் காயமடைந்தனர். இவ்வெடிப்புச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கிளாலி படை முகாமைச் சேர்ந்த எச்.பி.யு. வீரசிங்க (வயது 28) என்பவரே சம்பவத்தில் மரணமானவர் ஆவார்.இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சாவகச்சேரி பதில் நீதவான் செ. கணபதிப்பிள்ளை சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவத்தில் காயமடைந்த இரண்டு படையினரும் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tamilwin.com
-
- 0 replies
- 783 views
-
-
தமிழர்களை அவுஸ்திரேலிய சிறையிலாவது வாழ விடுங்கள் - MIA (மாதங்கி) ஜன 7, 2013 பிரபல றப்பர் (றப் பாடகி) மயா என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் தமிழ் ஏதிலிகளுக்காக குரல் கொடுத்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் பிறந்து, லண்டனில் சிறு அகவை முதல் வாழ்ந்துவரும் மயா, இள அகவையில் எதிர்நீச்சல்போடும் வல்லமை படைத்தவர் என பிரித்தானியாவின் கார்டியன் பத்திரிகை வர்ணித்திருந்தது. தமிழ் மக்களிற்காகவும், தமிழ் மக்களின் போராட்டத்திற்காகவும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவரும் மயா, தற்பொழுது அவுஸ்திரேலியா அரசாங்கம் தமிழ் மக்களை அந்த நாட்டில் வாழ ஏதிலித் தஞ்சம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவுஸ்திரேலியாவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அங்கு சென்றுள்ள மயா, உள்ளுர் பத…
-
- 0 replies
- 453 views
-
-
விடுதலை புலிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார்- நடேசன் வீரகேசரி இணையம் 12/31/2008 1:57:12 PM - விடுதலை புலிகள் சமாதான பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளதாக விடுதலை புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். அசோசியேட் பிரஸ்ஸிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "நமது மண்ணினையும் , மக்களையும் பாதுகாப்பதற்கு பல முறியடிப்பு தாக்குதல்களையும், போர் வியூகங்களையும் விடுதலை புலிகள் இயக்கம் மேற்கொண்டுள்ளது.நேரமும். இடமும் சரியாக வரும் போது நாம் இழந்த மண்ணினை மீளப்பெறுவோம்"என பா. நாடேசன் அவ் நேர்காணலில் தெரிவித்துள்ளார். "விடுதலை புலிகள் அமைப்பு புதிய சாமாதாப் பேச்சுவார்த்தைக்கு தாயாரக உள்ளது.எனினும் அரசாங்கம் இராணுவ நடவடிக்…
-
- 5 replies
- 2.3k views
-
-
சவுதி அரேபிய சிறைச்சாலைகளில் இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் மரண தண்டனையை எதிர்கொள்ளக் கூடிய அபாயம் உள்ளதாக ரஞ்சன் நாமநாயக்க பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அவர்கள் மீது இப்போது மதரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது ரிசானாவைப் போலவே மரண தண்டனைக்கு வழி வகுக்கக் கூடும் என அவர்கள் பெற்றோர்கள் அஞ்சுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க கூறுகிறார். புத்தர் சிலையை வைத்து தொழுதார் என்று ஒருவரும், பைபிளை வைத்திருந்தாக மற்றொருவரும் சவுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரத்தை ஃபேஸ் புக்கில் பெற்றதான குற்றச்சாட்டில் மற்றொருவரும், மந்திரம் ஓதி மண…
-
- 0 replies
- 507 views
-
-
நீதித்துறை தொடர்பான தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்காக இருக்கின்ற ஒரேயொரு வழி இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதேயாகும். அதற்காக உங்கள் தலைமையை வழங்குகள். என்று சட்டத்தரணிகளிடம் எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சித்தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்தை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து வந்த உள்நாட்டு பத்திரிக்கைகளும் நீதித்துறை விவகாரத்திற்கு பொறுப்பு கூறவேண்டும். நீதித்துறை நெருக்கடிபற்றி ஒரு பத்திரிகையேனும் ஆசிரியர் தலையங்கத்தை …
-
- 4 replies
- 904 views
-
-
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டார். கூட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்றிய சம்பந்தன் இப்போது யாழ்ப்பாணத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது? எதற்காக மக்கள் போராட்டத்திற்கு திட்டமிடுகிறார்கள்? என்ற கேள்வியை பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கேட்டதற்கு சுமந்திரனும் மாவை சேனாதிராசாவும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த பேரணியை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறினர். அதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சுமந்திரன் அது என்ன பொங்குதமிழ் மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த திட்டத்தை ஒருபோதும் எற்றுக்கொள்ளக் கூடாது என்றும்,தற்போத…
-
- 11 replies
- 628 views
-
-
இலங்கை விவகாரத்தில் வகித்த பங்கு நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளதாக நோர்வேயின் முன்னாள் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.1998ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான ஏற்பாட்டாளராக சொல்ஹெய்ம் கடமையாற்றியிருந்தார்.இந்தக் குறிப்பிட்ட காலப்பகுதியில் பல முக்கிய விடயங்களை தாம் கற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.அரசியல் தலைவர்கள், கெரில்லா தலைவர்கள், பயங்கரவாதத் தலைவர்கள் போன்ற அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் சில வேளைகளில் சில தரப்பினர் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள விரும்பாத போதிலும் பேச்சுவார்த்தைகளை கைவிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எரிக் சொல்ஹெய்…
-
- 5 replies
- 679 views
-
-
ஜெனிவாவில் இலங்கைக்கு மரணப் பொறி; தீர்மானிக்கும் சக்தி இந்தியாவின் கைகளில் தமிழருக்குத் தீர்வு வழங்கும் எண்ணம் எதுவும் டில்லியிடம் இல்லை; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு ஜெனிவாவில் எதிர் வரும் மார்ச் மாதம் இடம் பெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைப் சபையின் கூட்டத் தொடர் இலங்கைக்கு மரணப் பொறியாக அமையும் அபாயம் அதிகமாகவே உள்ளது. சர்வதேச நாடுகளின் கடுமையான அழுத்தங்கள் இந்தக் கூட்டத் தொடரின் போது இலங்கை அரசுக்கு எதிராக பிரயோகிக்கப்படும். இதைத் தீர் மானிக்கும் சக்தி இந்தியாவின் கைகளிலேயே உள்ளது என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிடம் இல்லை என் றும் அவை குற்றஞ்சாட்டின. கடந்த ஜெனிவாக் கூட்டத்தில் இலங்கைக்கு…
-
- 2 replies
- 514 views
-
-
பௌத்த விஹாரைகள், சிலைகள் உடைக்கப்படுவதனை தடுக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்கு பௌத்த விஹாரைகள் மற்றும் சிலைகள் உடைக்கப்படுவதனை தடுக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் என்.தர்சன வரதூவகே என்ற சட்டத்தரணி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். பௌத்த சாசனத்தையும், பௌத்த மதத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாங்குளம் பிரதேசத்தில் பௌத்த சிலை உடைக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பௌத்த மத விஹாரைகளுக்கு எதிராக கருத…
-
- 2 replies
- 428 views
-
-
(ஆர்.யசி) செய்யாத போர்க்குற்றத்தை செய்ததாக கூறி இராணுவத்தை தண்டிக்க முயற்சித்த ஆட்சியை வீழ்த்தி இராணுவத்தையும், சிங்கள பெளத்த கொள்கையையும் பாதுகாக்கும் அரசாங்கமொன்ரை உருவாக்கியுள்ளோம். எக்காரணம் கொண்டும் இராணுவத்தை சர்வதேச அரங்கில் தண்டிக்க இடமளிக்க மாட்டோம் என்கிறார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர. போர் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துக்களை முன்வைத்துவரும் சரத் வீரசேகரவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து வியவிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இறுதி யுத்தத்தில் நாம் செய்யாத குற்றமொன்றை செய்ததாக கூறி முன்னைய நல்லாட்சியாளர்கள் ஜெனிவாவில் பொய்யான சாட்சியங்களை கொடுத்தன…
-
- 4 replies
- 1.1k views
-
-
Army intelligence has received reports of an attempt by an interested foreign country to spirit away LTTE leader Velupillai Prabhakaran now cornered in a jungle hideout somewhere in Mullaitivu, following successful military operations which resulted in the capture all areas, bar a few square kilometers in Mullaitivu, held by the LTTE. A high ranking defence source told The Island yesterday that this particular foreign country, which was closely associated with the LTTE in the past, would try every possible means to prevent Prabhakaran from being captured or killed by the military. "It could be by air, sea or even by using a submarine that this country would attempt t…
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கைக்கு எதிரான சர்வதேச சூழ்ச்சிகளை கண்டுபிடிப்பதில் இவருக்கு நிகர் இவரே! மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான அடுத்த சூழ்ச்சி இடம்பெறும் என ஐநாவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் வருடாந்த கூட்டத்தில் இந்த சூழ்ச்சி செயற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்போது இலங்கை மீது போர் விசாரணை நடாத்த குழுவொன்றை அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்படும் என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் சீர்குலைவை ஏற்படுத்த மேலும் சர்வதேச சூழ்ச்சிகள் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் தொடர்பான பிரச்சினை அதன் ஒரு பிரதிபலன் என…
-
- 1 reply
- 565 views
-
-
ஒழுக்கசீலர்களாக மாற சாரணியம் கைகொடுக்கும் 'சாரணியத்தின் மூலம் மாணவர்கள் கட்டுக்கோப்பானவர்களாக மாறவேண்டும்' என வட மாகாண சபையின் விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சாரணியம் உருவாக்கப்பட்டதன் 100ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற ஜம்போறியின் இறுதி நிகழ்வு வவுனிக்குளத்தில், சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றும்போது இதனைக் கூறிய அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், “சாரணிய இயக்கத்தை உருவாக்கிய பேர்டன் பவுல் கூட ஒரு இராணுவ அதிகாரியாக இருந்து அதன் விளைவாக சாரணியத்தை உருவாக்கி இருக்கின்றார். ஆகவே நீங்கள் கட்டுக்கோப்பானவர்களாக மாறவேண்டும். ஏனெனில் நீங்களும் சிப்பாய…
-
- 0 replies
- 337 views
-
-
ஊடகங்கள் மீதான அச்சுறுத்தலும் வன்னிமக்களின் அவலங்களும் - சி. இதயச்சந்திரன் ஞாயிறு, 18 ஜனவரி 2009, 18:44 மணி தமிழீழம் [] தேசபக்தியைக் கட்டி எழுப்புவதே, ஊடகங்களின் தலையாய கடமையென்கிற புதிய விளக்கமொன்றினை அளித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.இதேவேளை, வன்னி மக்களின் உணர்வுகள் சில வெகுஜன ஸ்தாபனங்கள், தொண்டு நிறுவனங்களின் வாயிலாக வெளிவருகின்றன. தமிழுக்காக உயிரைக் கொடுப்பேன் என அறிக்கை விடும் கலைஞருக்கு, மரணத்தின் வாசலில் நின்று, ஈழத்தமிழர்களின் மனு ஒன்று, கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தால் அனுப்பப்பட்டுள்ளது.தமிழர் புனர்வாழ்வுக் கழக தலைவர் சிவனடியார், இந்திய அரசு, ஒபாமா, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனிற்கு வன்னி மக்களின் அவல வாழ்வு குறித்து க…
-
- 0 replies
- 606 views
-
-
கிளிநொச்சி பொது சந்தையில் பாரிய தீ ; தீயை கட்டுபடுத்தும் முயற்சிகள் தீவிரம் (படங்கள் இணைப்பு) கிளிநொச்சி பொது சந்தை தொகுதியில் பாரிய தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேத விபரம் பற்றி சரியாக கணிக்கப்படவில்லை. எனினும் குறித்த தீயினால் 40 இற்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ பரவியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த தீயை அனணப்பதற்காக தீயைணைப்பு வாகனங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் கடை உரிமையாளர்கள் மற்றும் மக்கள் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை குறித்த…
-
- 22 replies
- 1.6k views
- 1 follower
-
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்துக்கு ஆதரவு கோரல்! ஆகஸ்ட் 30ம் திகதியன்று, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு – கிழக்கில் கவனயீர்ப்பு முன்னெடுக்கவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சண்முகம் சரோஜினி தெரிவித்தார். வவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், “வடக்கில், யாழ். பஸ் நிலையத்தில் ஆரம்பமாகும் பேரணி, யாழ். மாவட்டச் செயலகம் வரை சென்று, அங்கு எ ஐ.நாவுக்குக் கையளிப்பதற்கான மகஜரை வழங்கவுள்ளோம். அதேபோன்று கிழக்கில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை சென்று அங்கும் மகஜரொன்று கையள…
-
- 39 replies
- 4.6k views
- 1 follower
-
-
இலங்கையில் போர்... கனடாவில் கலை நிகழ்ச்சி? இக்கட்டில் தவிக்கும் யுவன்! கம்போசிங்கிற்காக பலமுறை கடல் தாண்டிய யுவன், முதன் முதலாக இசைக்கச்சேரி ஒன்றுக்காக கடல் தாண்டுகிறார். ஏப்ரல் 25 ந் தேதி கனடாவில் நடைபெறப் போகும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி யுவன்சங்கர்ராஜாவுடையது. இந்த நிகழ்ச்சி குறித்து பேசுவதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் யுவன். "ஐம்பது பேர் கொண்ட என்னுடைய இசைக்குழுவுடன் கனடா செல்லப் போகிறேன். இந்த இசை நிகழ்ச்சியில் இடம் பெறப்போகும் எல்லா பாடல்களும் நான் இசையமைத்த படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவைதான். முக்கியமான விஷயம் என்னவென்றால், அப்பாவும் (இளையராஜா) ஒரு பாடலை பாடப்போகிறார்! அது என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது. அது சஸ்பென்ஸ் என்றார். யுவனின்…
-
- 57 replies
- 5.1k views
-
-
'தலிபான், அல்கைதா தடை இலங்கை முஸ்லிகளை பாதிக்கும்' : முஸ்லிம் கவுன்ஸில் தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புக்களை தடை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. அந்தச் சந்திப்பிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார அம்சங்கள் குறித்து தவறான கருத்துக்களை வெளியிடுவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ளுமாறு கோரும் வகையில் நடத்தப்பட்ட அந்த செய்தியாளர் சந்திப்புக்கு அந்த கவுன்ஸிலின் தலைவர் என். எம். அமீன் தலைமை தாங்கினார். இப்படியான தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதன் ம…
-
- 16 replies
- 881 views
-
-
மரணதண்டனை வேண்டாம்: துமிந்த மேன்முறையீடு கடந்த 8ஆம் திகதி தனக்கு வழங்கப்பட்ட மரணதண்டனைத் தீர்ப்பை இரத்துச் செய்து, சகல குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மேன்முறையீடு செய்துள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேர், அந்தத் தீர்ப்புக்கெதிராக கடந்த 20 ஆம் திகதி மேன்முறையீடு செய்திருந்தனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமது மேன்முறையீட்…
-
- 0 replies
- 268 views
-
-
அரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்! சிங்களப் பேரினவாதிகளின் கூடாரமாக விளங்கும் சிறிலங்காப் பாராளுமன்றத்தேர்தல் திருவிழா முடிவடைந்துவிட்டது. எதிர்பார்த்தது போலவே பெரும்பான்மை ஆசனங்களை பேரினவாதக் கட்சியான சிறிலங்கா பொதுசனப் பெரமுன பெற்றுள்ளது. இங்கு முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம் என்னவெனில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப்பெற்ற ராஜபக்ச அரசில் அங்கம்வகிப்பவர்கள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் ஆவர். 2009ம் ஆண்டில் இருந்து இன்றுவரை அரசியல் செயற்பாடுகளில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் தமிழ்மக்களுக்குத் தேடிக்கொடுக்காமலேயே பத்து வருடங்களை இணக்க அரசில் செய்து வீணடித்த தமிழ் அரசியல்வாதிகள் இனியும் பாராள…
-
- 1 reply
- 476 views
-
-
விசேட செய்தியாளர்)கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவா முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். ஐ.நாவில் தற்போது 33ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பலத்த எதிர்பார்ப்பினை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நிலையில், மிகவும் அமைதியான போக்கு ஐ.நா சபையின் உள்ளகத்தில் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது. இவற்றுக்கு முழுமையான நீதி வெகு விரைவில் கிடைக்க வேண்டும் எனவும், இலங்கையில் இடம்பெற்ற அநீதிக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என்றும் முழக்கமிட்டவாறு ஐ.நா முன்றலில் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். …
-
- 0 replies
- 407 views
-
-
தென்னாசியாவின் "ஆப்பிரிக்க அவலத்தை" உருவாக்கி மூன்று லட்சம் மக்களை பட்டினிச் சாவிற்குள் தள்ளியிருக்கும் சிங்களப் பயங்கரவாத அரசு. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குனர் பனிமனையிலிருந்து வரும் செய்திகளின்படி, பாதுகாப்பு வலயங்களில் மக்களுக்கு சேவைகளைப் புரிந்துவந்த உலக உணவுத்திட்ட மற்றும் ஐ,நா அதிகாரிகளை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு சிங்களப் பயங்கரவாத அரசு ஆணையிட்டிருக்கிறது. பாதுகாப்பு வலயம் என்று அழைக்கப்படும் இப்பகுதிகள் மீது ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்திவரும் மனிதாபிமானமற்ற தொடர் எறிகணைத் தாக்குதல்களால் அங்கு தஞ்சமடைந்திருக்கும் மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் அச்செய்திகள் கூறுகின்றன. குடிப்பதற்குக் கூட நீர்…
-
- 2 replies
- 704 views
-
-
பிரதேச சபையின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு -செல்வநாயகம் கபிலன் அண்மையில் விடுவிக்கப்பட்ட வலி. வடக்கின் பலாலி தெற்கு வயாவிளான் பகுதியில் உள்ள புனித இந்து மயானத்தினை இல்லாது செய்து, மலச்சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைக்கு, அப் பகுதி மக்கள், இன்று சனிக்கிழமை (01) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நான்கு கிராமசேவையாளர் பிரிவுக்கு உரித்தான மேற்படி பூனையன் காடு இந்து மாயனத்தினை அழித்து வலி. வடக்கு பிரதேச சபை மலச்சுத்திகரிப்பு நிலையம் ஒன்றினை அமைத்து வருகின்றது. இதற்காக சடலங்கள் எரிக்கப்பட்ட இடத்தில் கல் அரிந்து அதன் புனிதத் தன்மையினை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அம் மக்கள் தெரிவித்தனர…
-
- 0 replies
- 241 views
-
-
வவுனியா உள்ளிட்ட வன்னிப்பெரு நிலப்பரப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு உள்ளுர் மற்றும் அனைத்துலக ஊடகவியலாளர்கள் சென்று வருவதற்கு அனுமதி அளிக்குமாறு பிரான்ஸ் நாட்டில் இருந்து செயற்படும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 394 views
-
-
திருமலை நீதிமன்றவளாகத்தில் துப்பாக்கி சூடு திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் வான் ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இருவர் படுகாயமடை ந்துள்ளனர்.நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நீதிமன்ற வளாக பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையைச்சேர்ந்த இருவரே படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்து ள்ளது.எனினும் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். …
-
- 0 replies
- 245 views
-