ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142854 topics in this forum
-
அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஆவணப்படமொன்று ஐரோப்பிய பாராளுமன்றில் திரையிடப்பட்டுள்ளது. 'இறுதிக் கட்டம்' என இந்த ஆவணப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பிலான தகவல்களின் அடிப்படையில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தில் பங்கேற்ற பெண் தற்கொலைதாரி ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. பிரசஸ்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றில் முதல் தடவையாக இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் நட்பு குழுவினால் இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்களின் சொல்லப்படாத துரயங்களே இந்த ஆவணப்படு…
-
- 0 replies
- 455 views
-
-
அரசாங்கத்தினால் சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டதாக கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையர் தெரிவிப்பு அவுஸ்திரேலிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகள் தாங்கள் அரசாங்கத்தினால் சித்திரவை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் பொருளாதார நோக்கங்களுக்காகவே அவுஸ்திரேலியாவிற்குள் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுவதை அவர்கள் நிராகரித்துள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 82 இலங்கையர்களில் ஒருவரான சஞ்சே செல்வநைனா கடந்த வருடம் ஜனவரி மாதம் இலங்கை இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனது நண்பர்கள் ஐவர் எனது கண்ணுக்கு முன்னால் சுடப்பட்…
-
- 1 reply
- 979 views
-
-
அரசாங்கத்தினால் பதில் வழங்க முடியாமல்போன, 50 வினாக்களுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் விசேட நாடாளுமன்ற தினமாக எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தினால் பதில் வழங்க முடியாமல்போன 50 வினாக்களுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்குவதற்காக இந்த விசேட நாடாளுமன்ற தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1246118
-
- 0 replies
- 252 views
-
-
அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள ஐந்து வருட அபிவிருத்தி திட்ட வரைவுகளின் பின்னர் பொருளாதாரம் பிரகாசமடையும் (பா.ருத்ரகுமார்) தற்போது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியானது சூரிய ஒளி மந்த நிலையில் ஒளிர்வது போலிருந்தாலும் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள ஐந்து வருட அபிவிருத்தி திட்ட வரைவுகளின் பின்னர் அந்த சூரிய வெளிச்சத்தை பிரகாசமாக்கிக்கொள்ள முடியும் என மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். புதிதாக நியமனம் பெற்றுள்ள மத்திய வங்கி ஆளுனரை கௌரவிக்கும் முகமாகவும் இலங்கையின் பங்குச்சந்தை பரிவர்த்தனையின் புதிய பரினாமங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் உலக வர்த்தக மையத்தில் இன்று (28) இடம்பெற்றது. …
-
- 0 replies
- 154 views
-
-
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசாங்கத்தினால் அதன் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிப்படுவதாக இவ்விரு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்றில் அதிருப்தி வெளியிட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளரான சுசில் பிரமேஜயந்தவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை பெற்றோலிய வளத்துறை அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே இந்த அதிருப்தியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரமேஜயந்தவிடம் வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும…
-
- 1 reply
- 752 views
-
-
அரசாங்கத்தினால் முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிக்கப்படுவதாக முறைப்பாடு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசாங்கத்தினால் அதன் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிப்படுவதாக இவ்விரு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்றில் அதிருப்தி வெளியிட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளரான சுசில் பிரமேஜயந்தவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை பெற்றோலிய வளத்துறை அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே இந்த அதிருப்தியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் பெற்றோலிய வளத்துறை அமைச்ச…
-
- 6 replies
- 811 views
-
-
அபு அலா- அரசாங்கம் அடுத்தடுத்து முஸ்லிம்களை புறக்கணித்து வருகின்ற போதிலும் அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து கவனம் செலுத்தாது மௌனமாக இருப்பது முஸ்லிம் சமுகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் முஸ்லிம்கள் புறக்கணிப்பு விடயத்தில் தற்போது உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம் பேசுபொருளாகியுள்ளது. சிரேஸ்டத்துவ அடிப்படையில் முன்னிலையிலிருந்த ஒருவரை விடுத்து புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டு…
-
- 0 replies
- 126 views
-
-
அரசாங்கத்தினால் வழங்கப்படும் முச்சக்கர வண்டிகளை தனிப்பட்ட விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் – உதய ஹேமந்த அரசாங்கத்தினால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முச்சக்கர வண்டிகளை தனிப்பட்ட விடயங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதய ஹேமந்த கேட்டுக்கொண்டார். இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முச்சக்கர வண்டிகளை திருகோணமலை காவல் துறை பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், முச்சக்கரவண்டிகள் அனைத்தும் கிராமப் பகுதி காவல்துறை நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாரிய வாகனங…
-
- 0 replies
- 281 views
-
-
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணததினாலும் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடுமையாக பாதிப்படைந்திருந்தனர். இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தினால் எமது கிராமத்திற்கு படகுகள் மூலம் அனுப்பி வைத்த உலர் உணவுப்பொருட்கள் முழுமையாக வந்தடையாததன் காரணத்தினால் அவற்றை பகிர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதனால் அவற்றை திருப்பி அனுப்பி வைத்ததாகவும் குஞ்சுக்குளம் பங்குத்தந்தை லக்டன் டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 'முசலி பிரதேசத்திற்கு 35 படகுகள் மூலம் உலர் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் போது மன்னார் மாவட்டத்தினால் எமக்கு தெரிவிக்கப…
-
- 4 replies
- 666 views
-
-
அரசாங்கத்தினுடைய முகம் மாற்றம் அடைந்துள்ளது! “அரசாங்கத்தினுடைய முகம் தற்போது மாற்றமடைந்துள்ளது” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவல்யனுக்கும் தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் நேற்று இரவு (12) இடம்பெற்றது.| இச் சந்திப்பில் பிரித்தானிய அமைச்சருடன் அந்த நாட்டு இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அன்ரூ பற்றிக் கலந்து கொண்டிருந்ததுடன் தமிழ் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இச்சந்திப்பின் …
-
- 1 reply
- 544 views
-
-
அரசாங்கத்தினுள் கொடுப்பதை பெற்றுக்கொண்டு வாய்மூடி இருக்க முடியாது.! (ஆர்.யசி) கொழும்பு மாநகர சபையில் " ஒருங்கிணைந்த முற்போக்கு கூட்டணியாக" களமிறங்குகின்றது தமிழர் முற்போக்குக் கூட்டணி. ஐக்கிய தேசியக் கட்சியுடன் முரண்பாடுகள் இல்லை, எனினும் கட்சிக்குள் உள்ள ஒரு சிலருடனே முரண்பாடுகள். தனித்து களமிறங்க இதுவே காரணம் என்கிறார் அமைச்சர் மனோ கணேசன். அரசாங்கத்தின் பங்காளிகள் என்பதற்காக சலுகைகளை பெற்று வாயை மூடி இருக்க முடியாது, தமிழர்களின் உரிமை எமக்கு முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார். தமிழர் முற்போக்கு கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் மகாவலி கேந்திர மையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மனோ கணேசன் இதனை த…
-
- 0 replies
- 283 views
-
-
அரசாங்கத்தினை கவிழ்க்க முயற்சித்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் கடந்த ஜூலை மாதம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியமையை அடுத்து, பாராளுமன்றத்தை பலவந்தமாக ஆக்கிரமித்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை தடுப்பதன் மூலம் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க சில அரசியல்வாதிகள் முயன்றதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டு குறித்து பொலிஸாரின் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் விசாரணைகளின் வாயிலாக கிடைக்கப்பெற்ற சில தகவல்களின் அடிப்படையிலேயே அண்மையில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் …
-
- 0 replies
- 111 views
-
-
சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் காணிபயன்பாடுகள் தொடர்பான சுற்றறிக்கை என்ற பெயரில் தமிழர் நிலங்களை அபகரிக்கும் சிங்களத்தின் திட்டத்தினை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. . கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை கிளை இது தொடர்பில் அரசாங்கத்தின் செயலை வரவேற்பதாக கூறியுள்ளதுடன் வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்கள், உலகம் பூராகவும் இருக்கும் 165,000 தமிழர்களும் இது விடயத்தில் கவனம் எடுத்து ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவித்துள்ளது. . வடக்கு கிழக்கில் அண்ணளவாக 50 விழுக்காடு மக்கள் போரினால் இடம்பெயர்ந்து வெளி நாடுகளில் வாழ்கின்றார்கள். இந்த சூழலில் அவர்கள் தொடர்பான ( வாக்குரிமை மற்றும் நில உரிமை தொடர்பில்) சட்டங்கள் போட்டு தீர்மானம் எடுப்பது தவறான ஓர் விடயம். பாவிக்கப்படாமல் இருக்கும் த…
-
- 0 replies
- 834 views
-
-
(நா.தனுஜா) அரசாங்கத்தின் அடக்குமுறைகளால் அதிருப்தியடைந்த தமிழ்மக்களின் உணர்வு ரீதியான வெளிப்பாடே பொத்துவில் - பொலிகண்டி வரையான பேரணியாகும். எனினும் இனவாதத்தை அடிப்படையாகக்கொண்டு அரசியல் செய்யும் சரத் வீரசேகர போன்றவர்கள், பேரணியில் கலந்துகொண்டவர்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாமல் அவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்று பேசுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்று, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: …
-
- 1 reply
- 434 views
- 1 follower
-
-
அரசாங்கத்தின் அடிவருடிகளாக தமிழ் அரசியல்வாதிகள் ஈடுபட்டுவருவது வேதனைக்குரியது - விக்கினேஷ்வரன் ஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளைகளாக என்றென்றும் இருக்க விரும்புகின்ற சிலரின் அப்பட்டமான கீழ்த்தரமான நடவடிக்கைகளாலேயே சிங்கள ஆட்சியாளர்கள் எம்மீது குதிரை விடப் பார்க்கின்றார்கள் என வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் தெரிவித்தார். இதேவேளை, தமிழ் அரசியல்வாதிகளும் அலுவலர்களும் சுயமாகச் சிந்திக்கத் திராணியற்றவர்களாக அரசாங்கத்தின் அடிவருடிகளாக அவர்களைத் திருப்திப்படுத்துகின்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டு வருவது வேதனைக்குரியது எனவும் அவர் தெரிவித்தார். காரைநகர் பிரதேச சபையின் கசூரினா சுற்றுலா மையத்தில் முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்த…
-
- 0 replies
- 398 views
-
-
அரசாங்கத்தின் அண்மைய அபிவிருத்தித் திட்டங்களை கேள்வியெழுப்புமுகமாகவும் கண்டிக்குமுகமாகவும் நேற்று கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள், மீனவர்கள், தொழிற்சங்கங்கள் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன. போர் முடிவடைந்ததன் பின்னர் மக்களின் நல்வாழ்வு அவர்களுடைய முன்னேற்றம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தாம் மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அரசாங்கம் அபிவிருத்தியின் பெயரால் மேற்கொண்டு வரும் பல திட்டங்கள் அந்த மக்களுக்கு நன்மை பயப்பதற்குப் பதிலாக அந்த மக்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குப் பதிலாக கெடுதல்களை விளைவிப்பனவாக அவர்களை தமது வாழ்விடங்களிலிருந்தும் பாரம்பரிய தொழில்களிலிருந…
-
- 0 replies
- 472 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஸ நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படாலாம் என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் பெனான்டோபுள்ளே வகித்த இந்தப் அமைச்சுப் பொறுப்புற்கு ஏற்கனவே விருப்பமாய் இருந்த பசில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையைப் பயன்படுத்தி அதனைத் தனதாக்கலாம் எனத் தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7893.html
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை - அதிர்ச்சியில் நாட்டு மக்கள் இலங்கையில் வருடாந்த வருமானம் 1.2 மில்லியன் ரூபாவை மீறும் ஒவ்வொரு நபரிடமிருந்தும் வருமான வரி அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ள ஒவ்வொரு நபரும் வருமான வரிக்கு உட்பட்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட திட்டமிடப்பட்டு வருகின்றது. வருமான வரி புதிய தீர்மானத்திற்கமைய, வருடாந்த வருமானம் 1.2 மில்லியனில் இருந்து 06 மில்லியன் ரூபா வரை வர…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
அரசாங்கத்தின் அனுசரணையில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் நில அபகரிப்பு: சுமந்திரன் குற்றச்சாட்டு அரச நிறுவனங்கள் மற்றும் அரச அதிகாரிகளின் அனுசரணையில் நில அபகரிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பணிமனையில் நேற்று (24.10.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்தும் மக்கள் இங்கே வருகை தந்து தங்களுடைய பல பிரச்சினைகளை எமக்கு தெரியப்படுத்தி இருக்கின்றார்கள். இதில் பிரதானமான பிரச்சினையாக நில அபகரிப்பு தொடர்பிலேயே பல …
-
- 1 reply
- 394 views
-
-
அரசாங்கத்தின் அனுசரணையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன - நாமல் ராஜபக்ஷ 04 Nov, 2025 | 08:26 PM (இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் அனுசரணையுடன் தான் பாதாளக்குழுக்கள் செயற்படுகின்றன. இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுபவர்கள் அனைவரும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பு என்று குறிப்பிடுவது அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நு…
-
- 2 replies
- 245 views
- 2 followers
-
-
அரசாங்கத்தின் அனுசரணையின்றி கடத்தல்கள் மற்றும் அது தொடர்பான படுகொலைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. இதனை ஈ.பி.டி.பி. அலுவலக வளாகத்தில் தோண்டியெடுக்கப்பட்ட சடலம் உறுதி செய்திருப்பதாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான விஜித்த ஹேரத் தெரிவித்தார். கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெ?வித்தார். இது தொடர்பில் விஜித்த ஹேரத் எம்.பி. மேலும் கூறியதாவது: இலங்கையைப் பொறுத்த வரையில் ஜனநாயகம் மரணித்துவிட்டது என்று கூறுவதைவிட கொலை செய்யப்பட்டுவிட்டது என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும். சகல விதத்திலும் மக்கள் துன்பத்தை மாத்திரமே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் கடத்தல் என்ற பிடிக்குள் பெரும்பாலும்…
-
- 0 replies
- 576 views
-
-
அரசாங்கத்தின் அரசியல் துணிகரமே எமது வெற்றிக்கு வழி வகுக்கும் - சாலிய பீரிஸ் காணாமல்போனோர் பற்றி அலுவலகத்தின் மீதான விமர்சனங்கள், வடக்கில் நடைபெற்ற அமர்வுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குறித்த அனுபவங்கள், எதிர்காலச் செயற்பாடுகள், சவால்களை தாண்டி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான செயற்றிட்டங்கள், போராடும் உறவுகள் குறித்த நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அதன் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவித்தாவது, கேள்வி:- வடக்கிற்கு சென்று காணாமல்போனோரின் உறவினர்களை நேரடியாகச் சந்தித்திருந்தீர்கள் அந்த அனுபவத்தினைக் குறிப்பிடுங்கள்? பதில்:- வடக்கு மாகாணத்தில் வவுனியா தவிர்ந்த ஏ…
-
- 0 replies
- 285 views
-
-
வட-கிழக்கு தமிழ் தலைமைகள் தமது அற்பசொற்ப ஆசைகளுக்காக சிறிலங்கா அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாகவும், இதனால் வட-கிழக்கில் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படும் என சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் கபே அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்களின் அற்பசொற்ப எதிர்பார்ப்புக்களுக்காக உள்ளூராட்சிகள் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி திருத்தங்களைக் கொண்டுவந்ததினால் வடக்கு, கிழக்கில் பாரியளவான பாதிப்புக்கள் ஏற்படப்போகின்றன. இதனை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சரிவர புரிந்து வைத்திருந்தார் …
-
- 5 replies
- 497 views
-
-
அரசாங்கத்தின் அழிவிற்கான அழைப்பாணையே வரி அதிகரிப்பு - கபிர் ஹசீம் By DIGITAL DESK 5 13 OCT, 2022 | 07:09 AM (எம்.மனோசித்ரா) வருமான வரியை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் அரசாங்கத்தின் அழிவிற்கான அழைப்பாணையாகவே அமையும். உள்நாட்டு தொழிற்துறையினர் மீது பாரிய வரி சுமையை சுமத்தி , வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரி சலுகையை வழங்குவது நியாயமற்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசீம் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , இது அரசாங்கத்தின் அழிவிற்கான அழை…
-
- 1 reply
- 282 views
- 1 follower
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் கிழக்கில் துணை இராணுவக் குழுக்கள் இயங்குவதாக அனைத்து வகை இன ஒதுக்கல்கள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பின் தலைவர் நிமல்கா பெர்னாண்டோ குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்: கேள்வி: உங்கள் நாட்டில் இன ஒடுக்குமுறை உள்ளதா? பதில்: ஆமாம். இன ரீதியான ஒடுக்குமுறை உள்ளது. சிங்கள தீவிரவாதிகள் அரசாங்கத்தில் இடம்பெற்றுக் கொண்டு தன்னாட்சிக்கும் சனநாயக உரிமைகளுக்காகவும் பல ஆண்டுகளாக போராடுகிற தமிழர் தலைமைப்பீடத்துக்கு எதிராக பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். கேள்வி: ஒட்டுமொத்தமான நிலையை விளக்க முடியுமா? பதில்: ஒரு தோல்வியடைந்த நாடு என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் சிறில…
-
- 0 replies
- 919 views
-