Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரித்தானிய அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட தமிழ்ச் செயற்பாட்டாளரான அருணாசலம் கிறிஸ்சாந்தகுமார் (வயது 50) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  2. பேச்சை நிறுத்துவது உடன்பாட்டு மீறல்தெரிவுக்குழு தொடர்பான கூட்டமைப்பின் முடிவில் மாற்றமில்லை என்கிறார் சுமந்திரன் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குப் பெயர்களைக் கூட்டமைப்பு தரும்வரை தீர்வுப் பேச்சுகளைத் தொடர்வதில்லையென்று அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிர்ச்சியும், கவலையும் வெளியிட்டுள்ளது. "இப்படியான உறுதியான தீர்மானமொன்றை அமைச்சரவை எடுத்திருக்குமாயின், தீர்வுப் பேச்சுகளைத் தொடர்வதற்கு அரசானது தமிழ்க் கூட்டமைப்புடன் செய்துகொண்ட உடன்பாட்டையே மீறும் செயல்" அதுவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலு…

  3. இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை May 27, 2019 கிளிநொச்சி இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பூநகரிப்பிரதே செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் 26 வருடங்களின் பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் மீள்குடியேறினர். கடற்தொழிலை வாழ்வாதாரமாகக்கொண்டு மீள்குடியேறியுள்ள மக்கள் தமக்கு ஆரம்பத்தில் கொட்டில்களை அமைப்பதற்கு கிடுகுகள் மாத்திரமே வழங்கப்பட்டன. அவற்றை வைத்து தற்காலிக கொட்டகைகளை அமைத்ததாகவும் தற்போது இந்தக்கொட்டில்கள் சேதமடைந்;துள்ளன எனவும் தெரிவித்துள்ளனர். தமது சொந்த நிலத…

  4. 1500 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்! பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு உடன்படிக்கையை மீள கைச்சாத்திட பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் தெரிவித்தார் அடிப்படை சம்பளமாக 1350 ரூபாவுடன் 1500 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் அத்துடன் 1700 ரூபா சம்பளத்திற்கான அழுத்தத்தை பிரயோகித்ததை அடுத்தே, 1500 ரூபா சம்பள அதிகரிப்புக்கான இணக்கப்பாட்டிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் வந்துள்ளதாகவும் இலங்கை தொ…

  5. யாழில், பாரிய குண்டிலிருந்து உயிர் தப்பிய ஊழியர்கள்... வலி. வடக்கு காங்கேசன்துறையில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களால் பாரிய குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக நேற்று புதன்கிழமை மேடை அமைப்பதற்கு மண்வெட்டிய போது நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையிலேயே இந்தக் குண்டு மீட்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பலாலியிலுள்ள இராணுவ படைத் தலைமையகத்திற்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரின் பொறியியல் பிரிவினர் உடனடியாகக் குறிப்பி;ட்ட இடத்திற்கு விரைந்து குண்டை வெடிக்காத நிலையில் மிகவும் அவதானமாக மீட்டுள்ளனர். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியம் உயர் பாதுகாப்பு வலயத்தி…

  6. கருணா பிரிந்த பின் கூறுவது அனைத்தும் சரியா? ஒஸ்லோவில் நடந்தது உண்மையா? கருணாவின் பிரிவால் வெளிவரும் உண்மைகள்..... கருணா பிரிந்ததற்கு பல காரணங்கள் கூறலாம்? அவை அனைத்தும் சரியானவையா? கருணாவின் அடுத்த இலக்கு என்ன? வடக்கு முதல்வரின் கூற்று சரியா? தமிழரசுக் கட்சி மற்றும் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்ச்சியில் விபரிக்கிறார் கனடாவில் வசித்து வரும் மூத்த அரியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம். http://www.tamilwin.com/show-RUmtyJSYSVjt4A.html

  7. ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவுக்கு தோள் கொடுக்கின்ற மாலைதீவின் அரசுத் தலைவர் மொகமெட் நஷீத்தின் பதவி துறப்பு, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜக்சவுக்கு, பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா அரசுத் தலைவரின் நெருங்கிய நண்பராக இருக்கின்ற மொகமெட் நஷீத், மகிந்தவின் அழைப்பின் பேரில் பல தடவை சிறிலங்காவுக்கு பயணம் சென்றுள்ளதோடு, ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவின் நிலைப்பாட்டினை நியாப்படுத்தியுள்ளவர் என இந்தியாவின் PTI செய்திச் சேவை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. http://zeenews.india.com/news/south-asia/lanka-says-ouster-of-maldivian-president-internal_757290.html தொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர…

  8. எவ்வாறான விசாரணையை விரும்புகின்றீர்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் கேட்கக் கூடாது– கலம் மக்ரே:- எவ்வாறான விசாரணைகளை விரும்புகின்றீர்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் கேட்பது நியாயமில்லை என செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூறப்பட்ட விடயங்கள் உறுதியாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையை மட்டுமே கூறி வருவதாகவும் இலங்கை அரசாங்கம் தமது கருத்துக்களை நிராகரிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தாம் வலுவான ஆத…

  9. எனது ஆட்சியில் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்! -அநுர திசாநாயக்க- “நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய வகையிலான புதிய அரசியலமைப்புச் சட்டமொன்று தமது அரசாங்கத்தில் உருவாக்கப்படுமென” தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அக்குறணையில் நேற்றிரவு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் கடந்த கால வரலாற்றில் ஒன்றுக்கொன்று எதிராக அரசாங்கங்களே மாறி மாறி ஆட்சி அமைத்திருந்தன. 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல் பிரசாங்களின் ப…

  10. திருமலை கடற்படைத் தளத்தில் உந்துகணை வெடித்தது: 20 கடற் படையினர் காயம் திருகோணமலை துறைமுகக் கடற்படைத் தளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை டோரா அதிவேகக் பீரங்கி வேக பீரங்கி கடற்படைகலம் ஒன்றில் உந்துகணை ஒன்றைப் பொருத்த முற்பட்டபோது அதுவெடித்துள்ளது. இதன்போது 20 கடற் படையினர் காயமடைந்ததோடு டோராவேக பீரங்கிக் கலமும் சிறுசேதற்கு உள்ளாகியமையும் தெரியவந்துள்ளது. http://www.pathivu.com/

  11. தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட ஈழத்தமிழர் ஒருவர் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று மதியம் தனது துணைவியார், மூன்று பிள்ளைகள் சகிதம் பாங்கொக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையத்தின் செயலகத்திற்கு சென்ற கை.தேவகுமார் (37) என்ற குடும்பத்தவர், தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் வழங்குமாறு கோரி தனது உடலில் எரிபொருளை ஊற்றித் தீமூட்டிக் கொள்ள முற்பட்டுள்ளார். மிகவும் பதற்றமான நிலையில் காணப்பட்ட இவரை அணுகிய ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள், இவரை சாந்தப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றதோடு, பின்னர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இறுதி யுத்தத்தில் தமிழீழத்திலி…

  12. யாழ்ப்பாணத்தில் சமீப நாட்களாக இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளன. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப் கேள்விக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு யாழ்ப்பாணத்தை பெரும் அச்சறத்திற்கு உள்ளாக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து யாழ் கொக்குவில் பகுதியில் இருபது வயது இளைஞன் ஒருவன் பலத்த வாள்வெட்டுக்கு இலக்காகியிருந்தான். வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டு அதிரடிப்படையை கடமையில் ஈடுபடவும் கட்டளை பிறப்பிதிருந்தார். கடந்த சில நாட்களாக சுன்னாகம் பகுதியில் பொலிஸார் மற்றும்…

  13. வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் இன்று (01) காலை முதல் நகரில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடைபாதை வியாபாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், நடைபாதை வியாபாரிகளுக்கு இறுதி எச்சரிக்கை வழங்கும் நடவடிக்கையிலும் இன்று ஈடுபட்டிருந்தனர். நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த மரக்கறிகளை அகற்றியுள்ளதுடன் இனிவரும் காலங்களில் நடைபாதையில் வியாபார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் ஹொறவப்பொத்தான வீதி, இலுப்பையடி, சந்தை சுற்றுவட்ட வீதியில் மக்களின் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படுத்தி நடைபாதையில் சுகாதாரத்திற்கு தீங்கான முறையில் மரக்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை …

  14. [ வியாழக்கிழமை, 01 ஒக்ரோபர் 2015, 12:32.10 PM GMT ] ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அத்தீர்மானத்தில், இலங்கையுடன் இணைந்து விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கொமன்வெல்த் அமைப்பு மற்றும் சர்வதேச நீதிபதிகள் இணைந்த விசாரணை அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. திருத்தங்களின்றி- வாக்கெடுப்பின்றி நிறைவேறியது தீர்மானம் சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேர…

    • 0 replies
    • 475 views
  15. தொடர்ந்தும் அனுர முன்னிலையில்; இரண்டாவது மூன்றாவது விருப்பு வாக்குகளே முடிவை தீர்மானிக்கலாம்; சுகாதார கொள்கை நிறுவகத்தின் புதிய கருத்துக்கணிப்பு Published By: RAJEEBAN 12 SEP, 2024 | 11:27 AM எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு அதிகளவு ஆதரவு தொடர்ந்தும் காணப்படுவதையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவு அதிகரித்து வருவதையும் காண்பிக்கும் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. சுகாதார கொள்கைகள் நிறுவகம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் போது இது தெரியவந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு மக்கள் வாக்களிக்க எண்ணியுள்ளனர் என்பது குறித்து ஆகஸ்ட் மாதம் ஐஎச்பி ம…

  16. மீளமுடியாத பொறிக்குள் சிங்கள தேசம் -வேலவன்- சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்பரவரி 04 ஆம் திகதி ஆட்சியாளர்களால் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவரது வருகைக்கு முன்னர் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கப் போவதாகவும் சிறிலங்கா ஊடகங்கள் கூறுகின்றன. இதற்கெனத் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்குமாறு சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவால் அனைத்துக் கட்சிக் குழுவுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும

    • 1 reply
    • 1.5k views
  17. ஐ.நாவிடமிருந்து வடமாகாண முதலமைச்சர் நேரடியாக நிதி பெற்றுவதற்கு எடுத்த முயற்சி தோல்வி என்பது உண்மையா? ஐக்கிய நாடுகள் அமைப்பிடமிருந்து நேரடியாக நிதியைப் பெற்றுக்கொள்ள வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக கொழும்பில் தகவலகள்; வெளியாகி உள்ளன. வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக இவ்வாறு விக்னேஸ்வரன் நேரடியாக நிதி பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார். வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய மேம்படுத்த உதவி பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அந்த உதவி மத்திய அரசாங்கத்தின் ஊடாகவே வழங்கப்படும் என, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி சுபி நெண்டி முதலமைச்சருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இலங்கை அரசா…

  18. 21 SEP, 2024 | 06:04 AM மட்டக்களப்பு கல்லடி - உப்போடை பேச்சி அம்மன் ஆலயம் வெள்ளிக்கிழமை ( 20 ) இரவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது. கல்லடி உப்போடையில் அமைந்துள்ள சிறப்பு மிக்க பேச்சியம்மன் ஆலையத்தில் வெள்ளிக்கிழமை பூஜை இடம்பெற்ற நிலையில் பூஜைக்காக ஏற்றப்பட்டிருந்த விளக்கு பேச்சி அம்மனின் ஓலை குடிலில் பட்டு தீ பிடித்து எரிந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. தீ பெரும் சுவாலையாக பிரகாசமாக எரியத் தொடங்கியதைaடுத்து, அந்த பகுதி பொதுமக்கள் தீயணைப்பு படையினர் ஒன்றிணைந்து தீயை சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் இருந்தபோதும் கோயில் மூலஸ்தானம் முற்றாக எரிந்து சாம்பலாகியது பேச்சி அம்மனின் சிலை ஆரம்ப காலந்தொட்டு ஓலை…

  19. பொன்னாலை மற்றும் கல்விளான் கிராமங்களில் மதம் பரப்பும் நோக்கத்துடன் சுவிசேசக் கூட்டம் நடத்துவதற்கு முற்பட்ட கிறிஸ்தவ சபை ஒன்றின் உறுப்பினர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. பொன்னாலையில், கிறிஸ்தவ மக்கள் எவரும் வசிக்காத இடத்தில், தனியார் காணி ஒன்றில் இசை நிகழ்வுடன் கூடிய கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெளி இடத்தில் இருந்து பேருந்து ஒன்றிலும் மோட்டார் சைக்கிள்களிலுமாக நூற்றுக்கணக்கானோர் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டனர். இதை அவதானித்து அங்கு சென்ற அவ்வூர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர், யார் அனுமதி வழங்கியது என அப்பகுதி மக்களைக் கேட்டபோது அவர்கள், தாங்களாகவே இவர்கள் வந்து இங்கு கூட்டம் நட…

    • 10 replies
    • 1.7k views
  20. உடப்பில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை 1/19/2008 6:59:37 PM வீரகேசரி இணையம் - உடப்பு புளிச்சக்குளம் பாலத்தில் வெளிநாட்டு பிரஜாவுரிமையைக் கொண்டிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் இன்று காலை 9.15 மணிக்கு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார். உடப்பு முந்தலைச் சேர்ந்த கதிரேசன் கணேசன் (வயது 38) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உடப்பிலிருந்து தனது சொந்த வாகனத்தில் இவர் தனது மனைவி இரு பிள்ளைகளுடன் முந்தலுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த வாகனம் உடப்பு புளிச்சாக்குள பாலத்தை அடைந்த போது அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாகனத்தை நோக்கி சாரமாறியான துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்…

  21. 06 OCT, 2024 | 07:13 PM எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழரசு கட்சியின் யாழ். மாவட்டத்திற்கான வேட்பாளர்களின் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வா மற்றும் இரும்பு மனிதர் நாகநாதன் ஆகியோரின் பேரனும் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான இளங்கோவன் தேர்தலில் போட்டியிட கட்சியின் தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/195645

  22. வெள்ளி 25-01-2008 18:45 மணி தமிழீழம் [தாயகன்] உதயன் காரியாலயத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்கவும் - அனைத்துலக மன்னிப்புச் சபை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ஊடகவியலாளர்கள், மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை சிறீலங்கா அரசு உறுதிப்படுத்த வேண்டும் என, லண்டனை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. உதயன் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டும் வருவதால், அனைத்துலக மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில் சிறீலங்கா அரசிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. உதயன் காரியாலயத்தில் பணியாற்றும் குறிப்பிட்ட ஒரு பணியாளர் சிறீலங்காப் படையினர், மற்றும் படைப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒ…

    • 1 reply
    • 1.1k views
  23. சனல் 4 தொலைக்காட்சியின் இரண்டாவது ஆவணப்படம் இன்று இரவு வெளிவரவுள்ள நிலையில் அது சிறீலங்கா அரசுக்கு மட்டும் அல்லாமல் வேறு சிலருக்கும் வயிற்றை கலக்க ஆரம்பித்திருக்கிறது. அதில் தேசியத்தலைவர் சம்பந்தமாக ஏதோ வரப்போகிறது என்ற செய்தி கசிந்தவுடனேயே இவர்கள் இருப்புக் கொள்ளாமல் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்திருப்பதுடன் சனல் 4 க்கு துரோகி பட்டம் கொடுக்கவும் தயாராகிவருகிறார்கள். தமிழ் சமூகத்ததை பிளவு படுத்தி போராட்டத்துக்கான வளங்களை அழித்து தேசியத்துக்காக உழைப்பவர் எல்லோருக்கும் துரோகி பட்டங்கொடுத்து விடுதலைப்புலிகளை தொடர்ந்து சர்வதேச சமூகம் பயங்கரவாத பட்டியலில் வைத்திருக்க செய்வதற்காக கொத்துபாயா ஒரு குழுவை களமிறக்கிறான் என்றும் இந்தக்குழுவினர் தாங்கள் தான் உண்மையான தேச பக்கதர்கள்…

    • 2 replies
    • 1.2k views
  24. கண்டி மாவட்டத்தில் கால்பதிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி! In இலங்கை August 2, 2019 2:39 am GMT 0 Comments 1262 by : Benitlas ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாடுகளை கண்டி மாவட்டத்தில் மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கண்டி மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் பிரதேச வாரியாக கட்சி அலுவலகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை(சனிக்கிழமை) நாவலப்பிட்டிய, புஸல்லாவை, பன்விலை, தெல்தோட்டை ஆகிய பகுதிகளில் உப அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், ‘ஜனநாயக மக்கள் முன…

  25. யாழ்பாணம் திருநெல்வேலி சந்திக்கருகே கிளேமோர் தாக்குதல் 1/31/2008 11:42:05 AM வீரகேசரி இணையம் - யாழ்பாணம் திருநெல்வேலி சந்திக்கருகே இன்று காலை கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.