ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143568 topics in this forum
-
பிணைமுறி மோசடி – மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கைது மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் சமரசிறி உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது பர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://athavannews.com/பிணைமுறி-மோசடி-சமரசிறி-உ/
-
- 0 replies
- 306 views
-
-
இலங்கை மக்களின் இறுதிக்காலத்திலும் வங்கிகளில் வைப்பு தொகைகளை மட்டுப்படுத்திவிட்டு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேலதிகமாக வட்டி வருமானம் கிடைத்தால் அதற்கு வரி செலுத்த வேண்டுமென கேட்பது கேவலமான விடயமாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார். இலங்கையில் சிரேஷ்ட பிரஜைகள் அவர்களின் ஓய்வூதியம் மற்றும் சேமலாபா நிதியை வங்கியில் வைப்பு செய்துவிட்டு அதிலிருந்து வரும் வட்டி வருமானத்தை வைத்து வாழ்பவர்கள் அதிகம் எனவும் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், இலங்கையில் தமது இறுதி காலத்தில் சிரே…
-
-
- 34 replies
- 2.6k views
- 1 follower
-
-
அவசர நோயாளர்களை மன்னார் மருத்துவமனைக்கு உயிலங்குளம் ஊடாக நோயாளர் காவு வாகனத்தில் எடுத்துச் செல்வதற்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிறிலங்கா இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 709 views
-
-
April 1, 2019 மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட வர்த்தக முறைமையான பிரமிட் வர்த்தக முறைமையை ஒத்த வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்குடன் யாழில் திறக்கப்பட்டு உள்ள அலுவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி யாழ்.உதவி காவல்துறை அத்தியட்சகரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறித்த வர்த்தக நடவடிக்கைக்காக யாழ் நகரில் புதிதாக அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பில் ‘ காவல்துறை மா அதிபரிடம் சொல்லுங்கள்’ எனும் திட்டத்தின் ஊடாக யாழில் வசிக்கும் நபர் ஒருவர் காவல்துறைமா அதிபரின் கவனத்திற்கு அந்த விடயத்தை கொண்டு சென்றார். …
-
- 0 replies
- 416 views
-
-
புலிகளை தோற்கடித்தவர்கள் குருநாகல் பிள்ளைகளே July 20, 20151:10 am நாட்டிலுள்ள சகல பகுதிகளுக்கும் நாளாந்தம் சடலங்கள் செல்லும் யுகத்தை தாமே முடிவுக்குக் கொண்டுவந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில் ஐ.ம.சு.முவின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் கல்கமுவ பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். கல்கமுவ பொல்பிட்டிகம, யாப்பகூவ, இரியால, வாரியபொல, பண்டுவஸ்நுவர, பெல்காவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அன்று யுத்தம் இருந்த காலத்தில் இந்தக் குருநாகல் மாவட்ட பிள்ளைகள்தான் அதிகமாக யுத்தத்துக்குப் போனார்கள்…
-
- 1 reply
- 753 views
-
-
அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய்திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது Posted on May 9, 2024 by தென்னவள் 3 0 தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு மாதர் சங்க தலைவி சு.கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார். வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் புதன்கிழமை (8) இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் மகாவலி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்களவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது. கொக்குதொடுவாயில் 3 கிராமங்கள் ஆறு கிராம சேவ…
-
- 0 replies
- 564 views
-
-
குடாநாட்டில் பரவிவரும் புதுவித காய்ச்சல் வீரகேசரி நாளேடு யாழ் குடாநாட்டில் தற்பொழுது ஒரு வித காய்ச்சல் பரவி வருவதனால் மக்கள் பெரிதும் பீதியடைந்துள்ளனர். குறிப்பிட்ட சில பகுதிகளில் பீடித்து வரும் இக்காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையிலும் சிலர் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாடச
-
- 0 replies
- 1k views
-
-
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் படங்களை குழந்தையின் நிர்வாணப் படத்துடன் ஒன்றிணைத்து முகநூலில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவன் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளான். ஐந்து லட்சம் ரூபா இரண்டு சரீர பிணையில் மாணவனை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பெல்பிட்டிய நேற்று (23) உத்தரவிட்டார். குற்றப் புலனாய்வுப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் (மாணவன்) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அம்பலாங்கொட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட உயர் தரத்தில் பயின்றுவரும் மாணவனே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வேறு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்களைப் பய…
-
- 0 replies
- 421 views
-
-
டயகம சிறுமி விவகாரம்: ரிசாத் பதியுதீன் விடுதலை! 3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து ரிசாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறுமியை பணிப்பெண்ணாக கொடுத்ததாக கூறப்படும் முதலாம் சந்தேகநபரான பொன்னையா பண்டாரம், இரண்டாவது சந்தேகநபரான ரிஷாத் பதியுதீனின் மாமனார் என கூறப்படும் அலி இப்ராஹிம் கிதார் மொஹமட் மற்றும் மூன்றாவது சந்தேகநபர் ரிசாத் பதியுதீனின் மனைவியான கிதார் மொஹமட் ஷிஹாப்தீன் ஆயிஷா அவர்கள் மீது இவ்வாறான வழக்கை தாக்கல் செய்திருந்திருந்தனர். அதன்படி சம்பவம் தொடர்பில் ரிசாத் பதியுதீனின் மனைவி, மாம…
-
- 1 reply
- 446 views
-
-
கிழக்கில் அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட தொப்பிக்கல் பகுதியை சிங்கள மயப்படுத்தும் முயற்சிகள் அரசத்தரப்பினால் இரகசியமான முறையில் கனகச்சிதமாக முன்னெடுக்கபட்டு வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தொப்பிகல்லில் 2 ஆயிரம் ஏக்கர் பிரதேசத்தைச் சுற்றிப்பிடித்து வளைத்துப் போட்டு, அங்கு சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை றிறுவி, அதன் மூலம் சிங்களவர்களின் ஆதிக்கத்தை அங்கு வலுப்பெறச் செய்வதற்கு அரச உயர்மட்டத்தினர் திரைமறைவில் சதித்திட்டம் தீட்டி வருகின்றனராம். இந்த வர்த்தக வலயத்தில் உள்ளுர் மற்றும வெளிநாட்டு முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைப்பதற்கான ஊக்குவிப்பு முயற்சியில அரசு தற்போது ஈடுபட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.அங்கு சிங்கள முதலீட்டாளர்களுக்கே அதிக வாய்…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று சான்றுகள் காணப்படுகின்றன – சிறிதரன் 12 டிசம்பர் 2011 இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று சான்றுகள் கணப்படகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். வடக்கின் சில பகுதில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று ரீதியான சான்றுகள் காணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். தொல்பொருள் ஆய்வுகளின் போது இந்த சான்றுகள் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். தேசிய மரபுரிமைகள் அமைச்சு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சான்றுகளை சிங்கள பௌத்தர்களுக்கு உரிமையானது என வெளிக்காட்ட சில தரப்பினர் முயற்…
-
- 9 replies
- 2k views
-
-
“புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்” - ரிஷாட் பதியுதீன் நேற்று (24) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூட்டத்தை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். புனித ஈஸ்டர் தினத்தை கரி நாளாக்கிய இந்த சம்பவத்தை நாங்கள் சிறியதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே போன்று இதனை …
-
- 5 replies
- 2k views
-
-
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவரின் வீட்டின் முன் மலர் வலையம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நுகேகொடையில் உள்ள கெமுனு விஜேரத்தனவின் வீட்டிற்கு முன்பாகவே நேற்றிரவு மலர் வலையம் ஒன்று வைக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து அவர் மீரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்துள்ளார். தனது வீட்டிற்கு அருகில் நேற்றிரவு வாகனத்தில் வந்த சிலர் மலர் வலயத்தை வைத்துவிட்டுச் சென்றதனை அயலிலுள்ள தனது உறவினர்கள் அவதானித்துள்ளனர் எனவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் தன்னிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இந்த நிலையில் முன்வைத்த காலை பின்வைக்கப் போவதல்லை என்றும் திட்டமிட்ட…
-
- 0 replies
- 925 views
-
-
Published By: VISHNU 04 JUN, 2024 | 01:46 AM தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2014-2024 காலப்பகுதியில் நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு 03 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இந்தப் பாலங்கள் ஊடாக இணைக்கப்ப…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ வானொலியான புலிகள் குரல் வானொலி நிலையம் அமைந்திருந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். கிளிநொச்சியில் 155ஆம் கட்டையில் விடுதலைப் புலிகளின் புலிகளின் குரல் வானொலி நிலையம் அமைந்திருந்தது. தற்பொழுது புலிகள் குரல் அமைந்திருந்த இடத்தில் பாரிய இராணுவமுகாம் ஒன்றை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். தமது முகாமிற்கு நடுவில் பெரும் புத்தர் சிலை ஒன்றை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். 2007ஆம் ஆண்டு தமீழழ விடுதலைப் புலிகளின் புலிகளின் குரல் வானொலி நிலையம்மீது இராணுவத்தினர் விமானத் தாக்குதல் நடத்திய பொழுது இசைவிழி செம்பியன் என்ற ஊடகவியலாளர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.புலிகளின் குரல் இருந்த இடத்தில் புத்தர்சிலை …
-
- 0 replies
- 632 views
-
-
ஜனாதிபதி மைத்திரியை ஒரு ஜனநாயகவாதியாக கருதுகின்றேன்: சம்பந்தன் [ சனிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2015, 07:32.29 AM GMT ] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு ஜனநாயகவாதியாக நான் கருதுகின்றேன். அவரது செயற்பாடுகளும் அவ்வாறாகவே அமைந்துள்ளது. அவர் நமது நாட்டில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்து வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். நேற்று இரவு காரைதீவில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால, மகாத்மா காந்தி, மார்டின் ஜோசப்கிங், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களை பின்பற்ற விரும்புவதாக கூறுகின்றார். இந்த தலைவர்…
-
- 1 reply
- 755 views
-
-
குண்டு வெடிப்பில் அமெரிக்கா சதியா?-அதிர்ச்சியில் இலங்கை! இரா. இளையசெல்வன் இலங்கை தொடர்குண்டு வெடிப்பின் பின்னணியில் வெளிநாடுகளின் சதி இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே. அவருடன் அரசியல் ரீதியாக மல்லுக்கட்டும் அதிபர் மைத்ரிபால சிறிசேனவும், "இந்த பயங்கரத்தில் சர்வதேச சதி இருப்பதை உணர முடிகிறது' என அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதிபருக்கும் பிரதமருக்கும் முரண்பாடுகளும் பகையும் அதிகரித்திருக்கும் சூழலில், இருவரும் ஒரே வித…
-
- 2 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை எட்டப் போகிறது. போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் இப்போதும் அவ்வப்போது வந்து அரசாங்கத்தை கலக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. போர் ஒன்றின் போது மனிதஉரிமைகள் மீறப்படுவது ஒன்றும் ஆச்சயமான விடயம் அல்ல. (இது போரின் போதான மனிதஉரிமை மீறல்களை நியாயப்படுத்தும் கருத்தல்ல.) போரின் போது, பொதுமக்கள் கொல்லப்படுவது, இலக்கு வைக்கப்படுவது, கைதுசெய்யப்படுவது, கைதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவது, சட்டத்துக்குப் புறம்பாகக் கொல்லப்படுவது என்று பல்வேறு விதமான போர் தொடர்பான குற்றங்கள் இடம்பெறும். எந்தவொரு போருமே, போர் தொடர்பாக வரையறுக்கப்பட்ட ஐ.நா. விதிறைகளின் அடிப்படையில் நடத்தப்படுவ…
-
- 0 replies
- 847 views
-
-
வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. குளியாப்பிட்டி, ஹெட்டிபொல, மடிகே மற்றும் அனுக்கான உள்ளிட்ட கிராமங்களிலேயே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. நிலைமையினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுவருகின்றனர். நேற்றைய தினம் சிலாபத்தில் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தையடுத்து ஏற்பட்ட முறுகல் நிலையால் நேற்றிரவு குளியாப்பிட்டியவிலுள்ள பள்ளிவாசல்கள்மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டபோதும் இன்றையதினமும் பல முஸ்ல…
-
- 42 replies
- 4.9k views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த சீயோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம் Published By: DIGITAL DESK 3 22 JUN, 2024 | 04:33 PM உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம் செய்துள்ளார். தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார். தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் இதுவரை ஏன் நிறைவடையவில்லை என்பது தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அது குறித்து உடனடியாக ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அ…
-
- 4 replies
- 365 views
- 1 follower
-
-
http://sayanthan.blogspot.com/2007/11/blog-post_12.html
-
- 1 reply
- 1.7k views
-
-
தென்னாபிரிக்காவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவினர் சுமார் 14 ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து தெரிவிக்க்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் உரிமை குறித்த போராட்டம், இலங்கையில் தமிழ் மக்கள் கொண்டுள்ள அரசியல் அந்தஸ்து, இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாக அறிய முடிகிறது. குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் குறித…
-
- 3 replies
- 659 views
-
-
பிக்குகளுக்கு புதிய நாடாளுமன்றில் இடமில்லை! [Thursday 2015-08-20 07:00] நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 150 பௌத்த பிக்குகளில் ஒருவரும் நாடாளுமன்றிற்கு தெரிவாகவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின் போது பல்வேறு கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் ஊடாக சுமார் 150 பௌத்த பிக்குகள் போட்டியிட்டனர். எனினும், நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றுக்கொள்ளும் அளவிற்கான வாக்குகளை எந்தவொரு பௌத்த பிக்குவும் பெற்றுக்கொள்ளவில்லை. பொதுபல சேனா அமைப்பு இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன என்னும் பெயரில் போட்டியிட்டது. குறைந்தபட்சம் பத்து ஆசனங்களை வெற்றிகொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டிருந்தது. எவ்வாறெனினும், மிகவும் சொற்ப அளவிலான வாக்குகளையே நாடு முழுவதிலும் பொதுஜன பெரமுன கட்சி பெற…
-
- 0 replies
- 310 views
-
-
வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வடக்கு மாகான கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 79 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனக் கடிதத்தினை வழங்கி வைத்தார். வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு வழங்கப்பட்ட இந்த நியமனத்தில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர்களாக 57 பேரும், விஞ்ஞான ஆசிரியராக 15 பேரும், விவசாய போதனாசிரியர் பயிற்சித்தரத்தில் 7 பேரும் நியமனத்தைப் பெற்…
-
- 0 replies
- 381 views
-
-
தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு என்பது "தமிழக"த்தில்தான் உள்ளது என்று தமிழீழ ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.5k views
-