ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
பிரதமர் டி.எம். ஜயரத்னவை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை பிரதமராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெரோயின் போதைப் பொருள் கடத்தி வரப்பட்ட கொள்கலன்களை விடுவிக்க சுங்க திணைக்களத்திற்கு உத்தரவிட்டதாக அரசாங்கம் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டே ஜயரத்னவை பதவியில் இருந்து நீக்குவதற்கான காரணம் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் போயா தினத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. போயா தினத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை ராஜபக்ஷ அரசாங்கம் நடத்துவது இதுவே முதல் முறையாகும். …
-
- 1 reply
- 304 views
-
-
கூட்டமைப்பின் தீர்மானத்தைத் தொடர்ந்து உள்ளூர், மேற்குலக அரசியல் போக்கு!-வலம்புரி நாளிதழ் பெரும்பான்மைத் தமிழ்மக்களின் விருப்பத் திற்கமைவாக தமிழத்தேசியக் கூட்டமைப்பு வரும் ஜனாதிபதித்தேர்தலில் “ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவை தமிழ்பேசும் மக்களிடம் கோருவதற்கு” முடிவெடுத்திருந்தது. இம்முடிவைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை எதிர்கொள்ளக் கூடிய வகையில் ராஜபக்ஷ அரசாங்கம் வாக்குறுதிகள், அன்றாடப் பிரச்சினைகளிற்கான அதிரடித் தீர்வுகள் என பல வழிகளில் தமது செயற்பாடுகளை வேகப்படுத்தியது. இது தமிழ்மக்களின் அரசியல் பலமான வாக்குப்பலத்தின் பெறுமதியை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது. அதேவேளை இலங்கையில் ஆட்சி மாற்றத்தை மேற்குலகமும் விரும்புகின்றது என்பதை குறிப்புணர்த்தும்…
-
- 1 reply
- 1.8k views
-
-
இன்னுமோர் ஜனாதிபதி வேட்பாளாரான இலியாஸ் பொன்சேகாவிற்கு ஆதரவு. இன நல்லுறவை பேணல் என்ற நிபந்தனயில் இவர் தனது ஆதரவை நல்கி போட்டியிலிருந்து வாபஸ் வாங்கினார்.இவர் முன்னாள் யாழ் மாவட்ட மு.கா. பாராழுமன்ற உருப்பினராவார். http://www.dailymirror.lk/index.php/news/1084-another-candidate-backs-fonseka.html
-
- 0 replies
- 484 views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதியவர்களை வேலைக்கு நியமித்ததன் காரணமாக வேலை இழந்த பதினேழு பேரும் இன்று வெள்ளிக் கிழமை மீண்டும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை பல்கலைக்கழக வாசலில் ஆரம்பித்துள்ளார்கள். உண்ணாவிரதம் இடம் பெற்ற வேலையில் குறிப்பிட்ட உண்ணாவிரத்ததை நிறுத்தக்கோரி கோப்பாய் பொலிசாரும் மற்றும் தொழில் திணைக்கள அலுவலர்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் குறிப்பிட்ட ஊழியர்களுக்க வேலை வாய்ப்பு வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறி பல்கலைக்கழக பதிவாளர்களினால் எழுத்து மூலம் 21.10 2013 ல் கடிதம் வழங்கிய போதிலும் இது வரையும் எந்த வகையான முன்னேற்றகரமான செயல்பா…
-
- 0 replies
- 280 views
-
-
பல அதிகாரிகள் கைதினை அடுத்து இராணுவ உயர் பதவிகளில் மாற்றம்:- இராணுவப் பேச்சாளராக பிரசாத் சமரசிங்க நியமணம். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் இராணுவ உயர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் ஆதரவான செயற்பட்ட இராணுவ அதிகாரிகளின் பதவிகளே இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அம்பாறை இராணுவப் பயிற்சி மையத்தின் பொறுப்பதிகாரியான பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிவலன உள்ளிட்ட அதிகாரிகள் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறி 3 ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், 2 கேணல்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ம…
-
- 1 reply
- 844 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் - துணைவேந்தர் பேச்சுவார்த்தை யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலை மூடி மாணவர்கள் முடக்கல் போராட்டத்தை இன்று காலை முன்னெடுத்துள்ள நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.ஸ்ரீ சற்குணராஜா மாணவா்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இன்று காலை முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலை மூடி மாணவா்கள் முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த பல மாதங்களாக செயழிழந்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தை அங்கீகரிக்குமாறு கோரியும் இன்று காலை தொடக்கம் பிரதான நுழைவாயிலை மூடியும் மாணவா்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் பல்கலைகழக ஊழியா்கள், ஆசிரியா்கள், உள்நுழைய முடியாத நிலையேற்பட்டிருக்கின்றது…
-
- 1 reply
- 442 views
-
-
இலங்கையில் மூன்று வெளிநாட்டவர்கள் சடலங்களாக மீட்பு! [Tuesday, 2014-01-07 07:54:27] மலேஷியா, ரஷ்யா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொம்பனித்தெரு, ஹபரண மற்றும் ஹபராதுவ ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களிலேயே மூன்று வெளிநாட்டு பிரஜைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் ஒருவர் ஹோட்டல் அறையிலிருந்தும் மற்றவர் நீச்சல் தடாகத்திலிருந்துமே சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பு , கொம்பனித்தெருவிலுள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றின் நீர் தடாகத்தில் இருந்து மலேஷிய நாட்டு பிரஜை ஒரு…
-
- 0 replies
- 544 views
-
-
விக்னேஸ்வரா கல்லூரிக்கு வந்த இந்திய விமானப் படையின் ஓய்வு பெற்ற அதிகாரி Share இந்திய விமானப் படையின் ஓய்வு பெற்ற கமாண்டர் ரஞ்சன் காந்தி இன்று கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரிக்கு வருகை தந்தார். 1929 ஆம் ஆண்டு முதல் 1942 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் இவரது பேரன் அச்சுதன்பிள்ளை அதிபராகக் கடமையாற்றினார் என்றும், அதன் நினைவாக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. இலங்கை விமானப் படையினர் ஊடாக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. பாடசாலை வளாகத்தையும், கற்றல் செயற்பாடுகளையும் பா…
-
- 9 replies
- 744 views
-
-
உக்ரைனில்... அதிகரித்து வரும், வன்முறைகள் குறித்து இலங்கை கவலை! உக்ரைனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு, அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும் விரோதங்களை உடனடியாக நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திரம் மற்றும் நேர்மையான உரையாடல் மூலம் நெருக்கடியைத் தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினதும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தையும் இலங்கை வலியுறுத்தியுள்ளது. https://athavannews.com/2022/1269…
-
- 2 replies
- 269 views
-
-
நா.உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் பொதுசன ஐக்கிய முன்னணியில்.. தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் பொதுத் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார். சனாதிபதி மகிந்தராஜபக்ஷ தலைமையிலான அரசின் ஊடாகத்தான் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திகளையும் மக்களுடைய தேவைகளையும் நிவர்த்தி செய்ய முடியும், எனவேதான் ஆளும் கட்சியில் இணைந்துதான் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறினார். இன்று செவ்வாய் வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட இடம்பெயர்ந்த மாணவர்களுக்கான புதியவகுப்பறைகளை தொடங்கிவைக்கும் வைபவத்திலும் திரு கனகரட்ணம் கலந்து கொண்டார். இந்த வைபவத்தின் பின்னர…
-
- 1 reply
- 1.3k views
-
-
தனது இனத்தின் விடிவிற்காக தன்னை மெழுகாய் உருக்கி மரணத்தைத் தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல். திலீபனின் நினைவுதினம் அவரது நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இவ்வஞ்சலி நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், இதற்கு எதிர்ப் பக்கத்தில் நிதி நிறுவனமொன்று இந்நிகழ்வைக் குழப்பும் வகையில் பெரும் சத்தத்தில் ஒலிபெருக்கியில் பாடலை ஒலிபரப்பிக்கொண்டிருந்தது. இந்நிதி நிறுவனத்தின் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்னோல்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர் என்பதுடன், இந்நிதி நிறுவனத்தின் செயற்பாடு தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்த…
-
- 2 replies
- 577 views
-
-
இலங்கை அகதிகளின் பேச்சாளர் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் இந்தோனேஷியாவின் மெரேக் துறைமுகத்தில் உள்ள படகில் உள்ள இலங்கை அகதிகளின் பேச்சாளர் அலெக்ஸ் இந்தோனேஷிய அதிகாரிகளினால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 244 இலங்கை அகதிகளின் பேச்சாளராக முன்வந்த அவர் தமது கப்பலை சுற்றி ரோந்து வரும் படகுகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டு வந்தார்.இதனால்தான் அவர் இந்தோனேஷிய அதிகாரிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது . அவர் படகில் இருந்து தப்பிசென்றுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. எனினும் படகை சுற்றிலும் பாரிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரால் தப்பிச்செல்வதற்கு ஏதுவான சூழ்நிலை …
-
- 4 replies
- 763 views
-
-
வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்பது உட்பட ஆறு அம்ச கோரிக்கையை முன் வைத்து அனைத்து அடக்கு முறைகளுக்கும் எதிரான அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா கடந்த 16ஆம் திகதி முதல் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. யாழ். மாவட்ட செயலகம் முன்பதாக இடம்பெற்ற இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களுமான சிவாஜிலிங்கம் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் இணைந்து மென்பானம் வழங்கி முடித்து வைத்தனர். மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபருடன் நடாத்திய பேச்சுக்களை அடுத்து அதற்கான கால அவகாசமொன்றினை மேலதிக…
-
- 1 reply
- 307 views
-
-
கேள்விக்குறியாகும் அரசமைப்பு முயற்சி புதிய அரசமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுவிடலாம் என்று தலைகீழாய் நின்று பார்க்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதனாலேயே எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு முன்னர் அரசமைப்புத் தொடர்பான கருத்துக் கணிப்பையே நடத்தவேண்டும் என்று அது அரசிடம் வலியுறுத்துகிறது. தேர்தல் ஒன்றை நடத்தி, அதில் தற்போதைய அரசுக்குப் பின்னடைவுகள் ஏற்பட்டால் அது புதிய அரசமைப்பு முயற்சிகளையும் அதற்கூடான தீர்வையும் பெரிதும் பாதிக்கும், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகப்பட்டபாடுகள் எல்லாம் வீணாகிவிடும் என்கிற பய…
-
- 0 replies
- 271 views
-
-
எரிபொருள் கொள்வனவின் போது... இடம்பெறும் உயிரிழப்புக்கள் : இராணுவத்தை நிறுத்தியது அரசாங்கம் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படாததால், அனைத்து பகுதிகளிலும் மக்களும் தொடர்ந்து வரிசையில் இன்றும் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. இதுவரை எரிபொருள் வரிசையில் நின்று மூன்று பேரும் தகராறு ஏற்பட்டதால் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதை கண்காணிப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திற்கும் இரு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார். https://athavan…
-
- 1 reply
- 158 views
-
-
கொழும்பு காவல் நிலையங்களில் தமிழில் புகார் செய்ய ஏற்பாடு இலங்கைத் தலைநகர் கொழும்பின் காவல் நிலையங்களில் பொதுமக்கள் முதல் தடவையாக தமிழில் புகார் தெரிவிக்க வழிவகை செய்யும் விசேடப் பிரிவுகள் அமைக்கப்பட்டுளன. சாதாரணமாக தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு இலங்கைப் பிரஜை கொழும்பு காவல் நிலையம் ஒன்றில் புகார் தெரிவிக்கவோ வாக்குமூலம் வழங்கவோ வேண்டுமானால் அவர் சிங்களம் தெரிந்தவர் ஒருவரைக் கூட்டிக்கொண்டுபோய் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டும் என்ற நிலைதான் இத்தனைக் காலமும் இருந்துவந்தது. இலங்கை பொலிஸார் பெரும்பாலும் சிங்களம் மட்டும் அறிந்தவர்களாகவே இருந்துவருகின்றனர் என்பது இதன் காரணம். தாங்கள் சொல்வதைக் கொண்டு எழுதப்பட்ட ஆவணத்தில் என்ன இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்…
-
- 8 replies
- 832 views
-
-
புதிய அரசாங்கத்தில்.... அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை, குறைவாகவே இருக்கும்? தற்போதுள்ள அமைச்சரவை பதவி விலகவுள்ளதாகவும், புதிய இடைக்கால அரசாங்கம் விரைவில் பதவியேற்கவுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மாத்திரமே புதிய அரசாங்கம் பயணிக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2022/1274622
-
- 2 replies
- 369 views
-
-
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி அடித்து உடைக்கப்பட்டதை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பொ.ஐங்கரநேசனும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியை சேர்ந்த கஜேந்திரனும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சொல்லப்படும் இரா. சம்பந்தன் அவர்கள் இதுவரை இதுபற்றி எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை. தமிழீழ தேசிய தலைவரின் தந்தை சாவடைந்தபோதும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி அறிக்கை வெளியிட்டபோதும் சம்பந்தன் அவர்கள் அதுபற்றி அறிக்கை எதனையும் வெளியிடாததுடன் தலைவரின் தந்தையாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்று திட்டமிட்டபடி தனது கட்சி கூட்டத்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. …
-
- 19 replies
- 1.8k views
-
-
யாழ்.மாவட்டத்தில் தங்கியிருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகளின் விபரங்களை இராணுவத்தினர் என தம்மை கூறும் நபர்கள் திரட்டி வருகின்றனர். யாழ் பல்கலைக்கழகத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பல்கலைக்கழகத்தை அண்டியுள்ள தனியார் வீடுகளில் தனியாகவும் குழுக்களாகவும் தங்கியுள்ளனர். இவ்வாறு தங்கியிருக்கும் மாணவிகளின் விபரங்களையே இராணுவத்தினர் எனத் தம்மை இனம் காட்டிக்கொள்ளும் நபர்கள் திரட்டிவருகின்றனர். இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி …
-
- 0 replies
- 417 views
-
-
நம்பிக்கையில்லா பிரேரணை: கையொப்பங்களை பெற ஆரம்பித்தது எதிர்க்கட்சி ! இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கையை எதிர்க்கட்சி முன்னெடுத்துள்ளது. இதேவேளை கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருமாறு விஜித்த ஹேரத் அழைப்பு விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1275862
-
- 0 replies
- 136 views
-
-
திருவிழாவில் காணாமல் போன வாய்பேசாக் குழந்தையாகத் தவித்து நிற்கின்றது ஈழத் தமிழினம். அதிலும் - தேர்தல் திருவிழாவின் நெரிசலுக்குள் சிக்குண்டு விழி பிதுங்கி நிற்கின்றது ஈழத் தமிழ் தேசியம். "தனி நாடு" பற்றிப் பேச முடியாத ஆறாவது சட்டத் திருத்தத்திற்கு கீழ் தான் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியும் என்பது சிறிலங்காவின் அரசியலமைப்பு. இந்த நாடாளுமன்றத்திற்குள் நுழையவும், அந்த அரசியலமைப்புக்குக் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் உரிமைக்காக வாதாடவும் - பேரம் பேசும் வலிமையை ஒன்று திரட்டுவதற்கான ஒரு சனநாயகப் பலமாக உருவாக்கப்பட்டது தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு. இதில் இணைந்திருந்த கட்சிகள் ஓர் ஒழுங்கு முறையாகப் புதுப்பிக்கப்பட்ட அமைப்பு வடிவமும் உள் சனந…
-
- 2 replies
- 1.3k views
-
-
(ஆதவன்) காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணஹமவின் பங்கேற்பின்றி யாழ்ப்பாணத்தில் அந்த ஆணைக்குழுவின் விசாரைணகள் இடம்பெற்று வருகின்றது. கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கில் காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்.மாவட்டத்தில் இன்றுடன் நான்காவது நாளாக தொடந்து இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்த விசாரணைகளின் சாட்சியமளிப்புகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது 10.55 மணியளவில் 17 ஆவது நபரின் விசாரணைகள் முட…
-
- 1 reply
- 345 views
-
-
பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்ப துடிக்கும் பிள்ளைகளும் பிள்ளைகளை விட்டுப்பிரிய மறுக்கும் பெற்றோர்களும் “நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில்” “ஆனால் நான் இருக்க ஒரு இருட்டறை கூட வா இல்லை உன் வீட்டில்” என்பது போல ஒரு மனம் நெகிழும் சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெறுள்ளது. மட்டக்களப்பு பதுளை வீதியில் அமைந்திருக்கும் அயல் கிராமமான கித்துள் கிராமத்தில் பிள்ளைகளை விட்டு பிரிவதற்கு மனம் இல்லாமல் தவிக்கும் பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை இவ்வாறு தெரிவிக்கின்றனர். தங்களது இறுதிக் காலத்திலாவது தாங்கள் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகளுக்கு பக்கத்தில் இருந்து தங்களது இறுதிப் பயணம் அமையவேண்டும் என்று எதிபார்த்து இருக்கும் …
-
- 0 replies
- 218 views
-
-
இலங்கை நெருக்கடி: அதிகாரத்தைப் பெற எனக்கு ஆர்வமில்லை - எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்றைய (ஏப்ரல் 14) இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்) ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளால் தனக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை எனவும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருப்பதாக 'தமிழ் மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று, விசேட அறிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்! இலங்கைத் தீவின் தேர்தல் திருவிழா ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. மகிந்த ராஜபக்ஷ விரும்பியது போல் மூன்றில் இரண்டு பங்கிற்கு நெருக்கமான அளவு ஆசனங்களைப் பெற்றுவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த முறை போலல்லாவிட்டாலும், 12 ஆசனங்களைப் பெற்று தமிழீழ மக்களது முக்கிய அரசியல் சக்தியாக மீண்டும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் மீண்டும் ஒரு முக்கியமான அரசியல் தீர்மானத்திற்குரிய களம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு நீதியானதொரு தீர்வை வழங்க வேண்டும் என்ற சர்வதேச விருப்பங்களை மகிந்த ராஜபக்ஷ வழக்கம்போன்ற காரணத்தைச் சொல…
-
- 29 replies
- 2.1k views
-